இருவருக்கிடையில் இடையிடாமல் புன்னகையுடன் நிஷா அமர்ந்திருக்க அபி தாயின் கன்னத்திலும் முத்தம் வைத்தான்.
“ஓகே, இப்ப இது போதும். நாம நாளைக்கு பேசலாம். ஸ்கூல் இருக்குல. தூங்கு…” என்றான் மகனிடம்.
“அப்பா அபிக்கு பீவர் வந்தா?…” என மகன் தெளிவாய் கேட்க,
“அபிக்கு எல்லாம் வராது. வந்தா ஹாஸ்பிட்டல் போகலாம். இப்ப தூங்கு. நாளைக்கு நோ லீவ். ஸ்கூலுக்கு லீவ் போடறது குட் ஹேபிட்டா அபி?…” என ஆதித்தன் சற்றே கண்டிப்புடன் கேட்க,
“பேட் ஹேபிட்…” என்றான் குழந்தை.
“அபி அப்பா இதுவரை லீவ் எடுத்ததே இல்லை தானே? இப்ப அப்பாவுக்கு ரெஸ்ட் வேணும். நமக்கு மாதிரி ஸ்கூல் லீவ், வீக்கென்ட் லீவ் எல்லாம் கிடையாதே அப்பாவுக்கு…” என்றாள் நிஷாவும்.
“ஓகே ம்மா…” என மகன் தலையசைக்க,
“படுத்துக்கோ…” என மகனை படுக்க வைத்தவள் ஆதித்தனின் கன்னத்தை தான் பார்த்தாள்.
மனைவியின் பார்வை தன் முகத்தையே வட்டமிட கண்டவன் என்னவென புருவத்தை உயர்த்தினான்.
அபியின் கண்கள் உறக்கத்தில் பாதி சொருகி இருக்க தன் குரலை கிசுகிசுப்பாய் தழைத்துக்கொண்டாள் நிஷாந்தினி.
“கஷாயத்தை குடிங்க. சூடு ஆறிடும்….” என்று சொல்ல,
“அவனை தூங்க வச்சிட்டு வா…” என்றவன் தன் தலைக்கு பின்னால் கையை கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்தான்.
“குடிங்கன்னு சொல்றேன்ல…” என மீண்டும் தலையாட்ட பதில் சொல்லாமல் அமைதியாய் பார்த்தவன் கண்களை மூடும் முன் அவனின் போனில் கவியின் அழைப்பு.
“இந்த நேரத்துல அக்கா கூப்பிடறா…” என சொல்லியபடி போனை எடுத்தவன்,
“என்ன பிரச்சனையோ…” என்று முணுமுணுத்தான்.
“பிரச்சனைன்னா மட்டும் தான் கூப்பிடனுமா? அட்டன் பண்ணி என்னன்னு கேளுங்க. ஒருவேளை அத்தை கூட சொல்லியிருக்கலாம் உங்க காய்ச்சல் பத்தி…” என நமுட்டு சிரிப்பு சிரித்தாள் நிஷாந்தினி.
“கொழுப்புடி. பேசிட்டு வரேன்…” என்றவன் மீண்டும் தானே கவிக்கு அழைத்தான்.
“என்ன ஆதி காய்ச்சல்ன்னு அம்மா சொன்னாங்க?…” என எடுத்ததுமே படபடவென பேச,
“ஏன் இவ்வளோ பதறி பேசற? சாதாரண காய்ச்சல் தானே?…” என்றான் ஆதித்தன் தன் கணீர் குரலை குறைத்துக்கொண்டு.
“அசால்ட்டா சொல்ற நீ. கன்னம் வீங்கி இருக்காமே? என்னன்னு பார்க்க ஹாஸ்பிட்டல் போகமாட்டேன்னு சொல்றியாம். ஏன் இப்படி பன்ற ஆதி?…” என்றாள் கவி.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. விடேன். மாத்திரை போட்டிருக்கேன். நான் தூங்க போறேன். நாளைக்கு பேசறேன்…” என சொல்லி வைத்துவிட்டான்.
‘காய்ச்சலாமே? கன்னத்துல என்ன? சரி, உடம்பை பார்த்துக்கோ ஆதி. டேக் கேர்’ என அனுப்பியிருந்தான் அவன் தனியாக.
“இவங்களை…” என பல்லை கடித்தவன் கோபத்தில் நிஷா ஜெர்க்காகினாள்.
‘என்னவோ புண்ணியத்துக்கு அடிச்சதை, பேசினதை ஈஸியா எடுத்துக்கிட்டார். இப்ப விசாரிக்கறேன்னு இவங்களாம் சேர்ந்து சொரண்டி விட்டு எனக்கு நாலு காட்டு காட்டவிடாம விடமாட்டாங்க போல’ என உள்ளுக்குள் புலம்ப,
“ஆமா, மழை வேற அங்க. அதோட ரொம்ப பயந்துட்டான். அதான் குடுத்தேன். பாதி டோஸ் தான். அதுவும் ஈவ்னிங் லேசா சூடாக ஆரம்பிச்சதேன்னு தான்…”
“இத்தனை கேட்டேனா நான்? ஆமாவா இல்லையான்னா அதுக்கு மட்டும் சொல்லனும்…” என்றதும் ஆமாம் என தலையசைத்தாள்.
இப்படியே இதே மனநிலையுடன் படுத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் வைத்து வாங்கிவிடுவான் என மெல்ல தானுமே மகனருகே படுக்க,
“நீ நைட் ட்ரெஸ் மாத்தலையா?…” என கட்டிலில் இருந்து இறங்கினான் ஆதித்தன்.
“ஹ்ம்ம், இல்ல இந்த சுடிதாரே ஓகே தான்…” என நிஷா சொல்ல,
“வேண்டாம். போய் மாத்திட்டு வா…” என்ற ஆதித்தனின் குரலில் மறுக்க முடியவில்லை.
எழுந்து சென்றவள் உடை மாற்றி வரும் பொழுது கீழே கட்டிலின் அருகில் மெத்தை விரிப்பை போட்டிருந்தவன் இருவருக்குமான தலையணை போர்வை என எல்லாம் தயாராய் வைத்திருந்தான்.
“நினைச்சேன்…” என்றபடி சத்தமில்லாமல் வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
“நானே நினைச்சேன். தூக்கத்துல உங்க கன்னத்துல எங்க கை எதுவும் பட்டுடும். உங்களுக்கு கஷ்டமே, வலிக்குமேன்னு…” என நல்லபிள்ளையாய் நிஷாந்தினி சொல்ல,
“அப்படியா? அவ்வளோ குட் கேர்ளா நீ?…” என கிண்டலாய் கேட்டு,
“நான் ஏன் குடிக்கனும்? எனக்கு காய்ச்சல் இல்லையே….” என்றவன்,
“அந்த கஷாயத்தை நீ தான் குடிக்கற. குடிக்கனும்…” என வம்படியாக தம்ளரில் ஊற்றியவன் அவளிடம் நீட்ட,
“அநியாயம்…” என்றாள் அவள்.
“என்னை அடிச்சு உன் கை கூட தான் தடிச்சு போச்சு. குடிடி…” என்றான் வேண்டுமென்றே.
“எனக்கு புடிக்காது. அதுவும் உங்கம்மா உங்களுக்கு ஸ்பெஷலா போட்டது…”
“அதுவும் உன்னால தானே? அடிக்க தெரிஞ்சதுல. குடி….” என சொல்லிவிட்டு பாலை மொத்தமாய் குடித்து முடித்து தம்ளரை மேலே வைத்துவிட்டு நிஷாந்தினியை பார்த்தான்.
கையில் தம்ளரை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் அதில் ஒரு வாய் கூட பருகவில்லை.
சில நொடி மௌனங்கள் தான் இருவருக்கிடையில். பாவமாய் அவனை நிஷா பார்த்ததும் மெல்லிய புன்னகை ஆதித்தன் முகத்தில்.
“கொண்டா…” என அதனை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு தன்னருகே அழைத்துக்கொண்டான்.
“இப்ப பார்க்கும் போது எப்படி இருந்த தெரியுமா? உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்க நான் கேட்டப்ப என்னை பார்த்தியே, எதுவுமே செய்ய முடியாம, தவிச்சு போய். அப்படி இருந்த…” என்று சொல்ல,
“என்கிட்ட நீங்க கேட்டீங்க. வெறியாகிருவேன் திரும்ப…” என அவனை முறைத்தாள்.
“இல்லையா பின்ன? நீ என்ன வேணும்ன்னு கேட்கும் போதும் கூட நான் கேட்டேனே. அதெல்லாம் கேட்கிறதுல சேர்த்தி இல்லையா நிஷா?…” என்றான் ஆதித்தன்.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. உங்களால எப்ப பாருங்க நான் தவிச்சுட்டே தான் இருக்கேன்…” என அவனின் நெஞ்சில் அழுத்தமாய் குத்தி வைக்க,
“ஸ்ஸ்ஸ் மெல்லடி…” என தன் நெஞ்சை நீவிக்கொண்டவன் மீண்டும் புன்னகைத்து பார்த்தான்.
“ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு. என்னை அழ வச்சுட்டே இருக்கீங்க. எனக்கு உங்களை இப்ப வரை புடிக்கவே இல்லை…” என மீண்டும் லேசாய் நிஷா விசும்ப,
“ஆமாமா, உனக்கு என்னை புடிக்கவே புடிக்காது. எனக்கும் தெரியும்…” என்றான் சன்னமான ரகசிய குரலில் அவளின் அணைப்பை சுட்டி காண்பித்து.
“இது சும்மா, ஜஸ்ட் ஒரு கடமை, நான் உங்களுக்கு வொய்ப் இல்லையா? அதான்…” நிஷா வீம்பு பிடிக்க,
“ரைட், ரைட்…” என அதற்கும் அவன் மசிந்துகொடுக்கவில்லை.
இருவருக்குமே இருவரையும் தெரிந்திருந்ததே. வாய் வார்த்தைகளில், சண்டைகளில் கூட இருவருக்குமான பிடித்தங்களின் அளவுகோல் என்னவென.
குறிப்பிட்ட எல்லையில் நிறுத்திவிட கூடியதல்லவே இருவரின் எண்ணங்களில் விரியும் நேசங்கள்.
என்றுமே பிடித்தங்கள் இவ்வளவு இது என இருவருக்குள்ளும் பகிர்ந்ததில்லை. ஆனால் உணரப்பட்டுக்கொண்டு தான் இருந்தது.
அதிகமாய் சண்டைகளும் வாக்குவாதங்களும் தான் இருவருக்குமிடையே. ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து யோசித்ததில்லை.