“பர்ஸ்ட் அண்ணா மேல மிஸ்டேக் இல்லன்னு சொல்லட்டும் அவங்க…” என ஆதர்ஷினி அதிகாரமாய் சொல்ல,
“அப்படியே அப்பா…” என ஆதித்தனை நிஷாந்தினி பார்க்க,
“என்னப்பா?…” என்றான் மகளிடம் ஆதித்தன்.
“ஹலோ ஸார்…” என அவர்கள் வகுப்பு ஆசிரியையும் வந்துவிட்டார்.
“உள்ள வாங்க…” என்று முதல்வர் அறைக்குள் நுழைய பிள்ளைகளும் உடன் வந்தனர்.
“உட்காருங்க ஸார், என்ன விஷயம்ன்னு சொன்னாங்களா உங்க பசங்க?…” என முதல்வர் கேட்க,
“அதை சொல்லாம தானே வர சொன்னீங்க. நீங்க சொல்லுங்க…” என்றான் ஆதித்தன்.
‘கிழிஞ்சது’ என நிஷாந்தினி ஆதித்தனின் கையை லேசாய் சுரண்ட அதை தட்டிவிட்டான் அவன்.
“உங்க பொண்ணு, உங்க பையன் கிளாஸ் பசங்களை அடிச்சிருக்கா….” என ஆதர்ஷினியை பார்த்து சொல்ல,
“ஏன் அடிச்சேன்னு கேளுங்க ப்பா…” என்றாள் மகள்.
“தர்ஷி மூச்…” என மகளை கண்டிப்பாய் அதட்டியவன்,
“சொல்லுங்க…” என்றான் முதல்வரிடம்.
“பசங்களுக்குள்ள சண்டை. உங்க பொண்ணு உங்க மகனை அடிக்கிறதை பார்த்து அந்த பசங்களை அடிச்சு மண்ணை அள்ளி முகத்துல வீசிட்டா. கொஞ்சம் கண்டிச்சு வைங்க…” என்று அவர் சொல்ல,
“என் பையனை அந்த பசங்க ஏன் அடிச்சாங்க?…” என்றான் ஆதித்தன்.
“அவங்க அடிக்கலை. அபராஜிதன் தான் அடிச்சிருக்கான். திரும்ப அவங்க அடிக்கவும் உங்க பொண்ணு அடிக்கிறா? வாட் இஸ் திஸ்?…” என்றவரின் கேள்வியில் ஆதித்தன் அபியை பார்க்க,
“நோ ப்பா. நான் முதல்ல அடிக்கலை. நான் அடிக்கவுமே இல்லை. என்னை அடிக்கும் போது நான் கை தான் ஓங்கினேன். அதுக்குள்ளே தர்ஷி வந்துட்டா….” என அபராஜிதன் சொல்ல,
“எஸ், அண்ணா கரெக்ட். நான் தான் அடிச்சேன்…” என்றாள் ஆதர்ஷினி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு.
“ஒரு செகெண்ட் கிளாஸ் பொண்ணு பெரிய க்ளாஸ் பசங்களை அடிக்கிறா. நாங்க கேட்டா நீங்க கேமராவை பாருங்கன்னு சொல்றா. எங்களையே ரூல் பன்றா…” என முதல்வர் சொல்ல,
“ப்பா, அண்ணா அடிக்கலைன்னு சொன்னதை ஸார் கேட்கலை. அதான் பாக்க சொன்னேன்….” என சொல்ல,
“தர்ஷி, ஹார்ஷா சொல்லலாமா? அண்ணாவை அடிச்சா நீ இங்க வந்து தான் சொல்லனும். நீ அடிக்கக்கூடாது. நான் பேசறேன். நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க…” என சொல்லியவன்,
“இல்ல, அவங்க கூட இருந்த பசங்க அபி அடிச்சான்னு சொன்னாங்க…” என முதல்வர் சொல்ல வகுப்பாசிரியையும் திரும்பி பார்த்தான் ஆதித்தன்.
“இதென்ன ஸார்? முதல்ல என்ன நடந்ததுன்னு ரெண்டு பக்கமும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. பசங்க சொன்னா நம்பிடுவீங்களா? விசாரிக்க வேண்டாமா?…” என்றவன்,
“வகுப்புல பசங்களுக்குள்ள சண்டை வரது சகஜம் தான். அதுக்காக ஒருதலைபட்சமா முடிவு பண்ண கூடாது. என் பொண்ணு அடிச்சது தப்பு தான். நான் கண்டிச்சு வைக்கறேன்…” என்று சொல்லி கிளம்பினான்.
வெளியே வந்தவன் மகளிடமும் அப்படி செய்ய கூடாதென சொல்லி புரிய வைக்க கேட்டுக்கொண்டாள் மகள்.
“பார்த்துக்கோ அபி…” என மகனிடம் சொல்லியவன்,
“எங்க அடிபட்டுச்சு? வலிக்குதா?…” என கேட்டான் தன் தோள் அளவுக்கு வந்துவிட்ட மகனின் தோளில் கை போட்து.
“இல்லப்பா, இப்ப ஓகே…” என்றான் அபி.
“ப்பா அண்ணாவ நான் பாத்துக்கறேன்….” என ஆதர்ஷினி சொல்லியவிதத்தில் அனைவருமே சிரித்துவிட,
“ஓகே, போய் சாப்பிடுங்க முதல்ல. இனிமே இப்படி வார்னிங் நோட்டீஸ் வந்து, நாங்க இங்க ஸாரி கேக்க வர அளவுக்கு வச்சுக்க கூடாது. புரியுதா?…” என்றவனின் பேச்சில் பிள்ளைகள் தலையாட்ட இருவரின் கன்னத்தையும் கட்டியவன் அவர்களை வகுப்புக்கு செல்ல கூறி வெளியே வந்தான்.
“யாரோ என்னவோ பார்க்க போறேன்னு கூட வந்தாங்களே?…” என நிஷாவிடம் கேட்டுக்கொண்டே பைக்கில் சாவியை பொறுத்த,
“எங்க பேச? பார்க்க தான் முடிஞ்சது. உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு பேசிட்டாலும் கழுதையில…” என நிஷாந்தினி சொல்ல,
“ஒருநாள் அதுமேல உன்னை உக்கார வைக்கல இருடி…” என்று வண்டியை கிளப்பினான் ஆதித்தன்.
வீடு வந்த நிஷாந்தினி சசிகலாவிடம் அத்தனையும் ஒப்பித்துக்கொண்டிருந்தாள் உண்டு முடிக்கும் வரை.
“அப்பப்பா உங்க பேத்தி இருக்காளே? வரட்டும் இன்னைக்கு. ஒரு ஆதித்தனையே இங்க சமாளிக்க முடியலை. அவ பொம்பளை ஆதித்தன் த்தை. இப்பவே தட்டி வைக்கறேன்…” என சொல்லி மாய்ந்து போக ஆதித்தன் முகத்தில் கர்வமாய் புன்னகை.
“பாருங்க சிரிக்கிறதை? எல்லா ஸ்கூல்லையும் நான் சொல்லி வைக்கறேன்னு வருவாங்கன்னு பார்த்தா, இவர் என் பிள்ளைங்க மேல தப்பு இருக்காதுன்னு தான் ஆரம்பிக்கறதே?…” என புலம்பிக்கொண்டிருக்க சசிகலா எப்போது எழுந்து சென்றார் என்றே தெரியவில்லை.
“தனியா யார் கூட பேசிட்டிருக்க?…” என்று கையை கழுவிவிட்டு வந்தவன் நிஷாவை பார்த்தான்.
“அத்தை எங்க?…” என திரும்பி பார்த்து எழுந்தவளை தூக்கி தோளில் போட போக,
“ஹால்ல வச்சு பிச்சுட்டேன்…” என்றவள் துள்ளிக்கொண்டு அவன் விரட்ட மாடிக்கு ஓடினாள்.
“இப்ப பேசு, என்ன சொன்ன? அப்பாவை மாதிரியா? அப்ப உன்னை மாதிரி இன்னொன்னு பெத்துக்கலாமா?…” என்று அறைக்கு வந்து மனைவியை அள்ளிக்கொண்டவன் கேட்க,
“எதுக்கு வலிக்கலையா வலிக்கலையான்னு கேட்டுட்டே இருக்கவா? வேணும்னா நீங்க சுமக்க வேண்டியது தானே? ஒன்னென்ன, பத்து பெத்துக்கலாம்….” என தன் கைகளால் அவனின் கழுத்தில் பூவாரம் சூட,
“இப்பவும் சுமந்துட்டு தானே இருக்கேன். பத்து மாசம் மட்டுமா? மாசக்கணக்கா இல்லை. வருஷக்கணக்கா…” என சொல்ல,
“ஒண்ணுமே தெரியலையே…” என கை கொண்டு அவனின் வயிற்றை லேசாய் வருட,
“நிஷா இன்னும் ஒன்னே ஒன்னு. உனக்கேன் ஒரு குறை? உன்னை மாதிரி பெத்துக்கலாம்…” என சொல்ல,
“மாட்டேன். மாட்டேன். போதும் சாமி…”
“அதை நீ ஏன் சொல்ற?…” என்றவன் தன் போனை எடுத்து அவள் பேசியதை ஒலிக்கவிட,
“என்னை வேண்டி விரும்பி பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு…” என்று விஷம சிரிப்புடன் சொல்லியவனை தன்னிடமிருந்து தள்ளி விட்டு,
“பர்ஸ்ட் டைம் அப்படி அசந்து மறந்து தலையாட்டின நிஷா இப்ப இல்லை. தொலைச்சிடுவேன் பார்த்துக்கோங்க….” என அவனை எச்சரித்தவள் கண்களில் மின்னல் தெறிக்க ஆதித்தனின் உணர்வுகள் ஆர்ப்பரித்து அவளில் கலந்தது.
“சக்ஸஸ்….” என்று சன்னமாய் விசிலடித்து சிரித்தவன்,
“என்ன இப்பலாம் நீ கடிக்கும் போது லைட்டா வலிக்குது…” என்றவனை போட்டு தலையணையால் மொத்தி எடுத்துவிட்டாள் நிஷாந்தினி.
“வயசாகுதுல. வலிக்கட்டும்…” என சொல்லி சொல்லி அடிக்க ஆதித்தன் முகமெல்லாம் புன்னகை.
“ஓடி போய்ருங்க. நினைச்சதை சாதிக்கிறதுல மன்னன். இப்ப ஆடிட்டர் வந்திருவார். என்ன பண்ணி வச்சிருக்கீங்க? நான் எப்படி போக?…” என்று சிணுங்க,
“நீ ரெஸ்ட் எடு. நான் போய் பார்த்துக்கறேன். மூணு நாள் பசங்களுக்கு ஸ்கூல் லீவ். ப்ரைவேட் பால்ஸ் போவோம். எல்லாம் ரெடியா எடுத்து வை. நான் சீக்கிரம் வந்திடறேன்…” என சொல்லியவன் அவள் மறுக்கும் முன் இதழ்களை நனைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
“கொஞ்சமாச்சும் என் பேச்சை கேட்கறாரா?…” என முறைத்தவள் முகமெல்லாம் புன்னகை ஸ்ருங்காரம் பூசியது.
மெல்ல கண்களை மூடியவள் கைகள் கணவன் கழற்றி போட்டிருந்த சட்டையை நெஞ்சோடு இழுத்துக்கொண்டது.
எப்படி ஆரம்பித்த வாழ்க்கை இத்தனை அழகாய், ஆத்மார்த்தமாய், ஆனந்தமாய் நகர்ந்துகொண்டிருந்தது.
ஆதித்தனின் வாழ்க்கை நிஷாந்தினியுடன் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருக்க சீண்டலும், சிலிர்ப்புமாய் அவர்களின் உறவாடல்.
அவன் வாழ்வின் மறுபெயர் அவள். அவளின் ஆதர்சனம் அவன். விதையென அவள். வேரென அவன்.
உறவுகள் சூழ் உலகில் உயிர்ப்புகள் அளப்பரியாததாய். அள்ள அள்ள குறையாததாய். சுவைக்க தேவிட்டாததாய்.
சந்தோஷ ஆர்ப்பாட்டமும், உற்சவத்தின் ஆர்ப்பரிப்பும் பிள்ளைகளென பூங்கொத்து தர, கணவனவன் கையகத்தின் மையத்தில் மனைவியாய் வீற்றிருந்தாள் என்றும் அவனின் மணிமகுடமாய்.