ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 17
மாலை மீண்டும் மருத்துவர் வந்து இதயாவை பார்த்துவிட்டு தான் சென்றார்.
காய்ச்சல் நன்றாக குறைந்துவிட்டதாகவும், இனி ஓய்வெடுத்தால் போதுமானது என்றும் சொல்லிவிட்டு செல்ல அவரை அனுப்பிவிட்டு இதயாவிடம் வந்தான் கண்ணன்.
“நாளைக்கே ஆபீஸ் கிளம்பிடாத. இன்னும் ரெண்டு நாள் போகட்டும். மெதுவா வரலாம். ஒன்வீக் லீவ் அப்ளை பண்ணிருக்க தானே? இல்லைன்னா பண்ணிக்கலாம்…” என்று கண்ணன் சொல்ல அவனை ஒருவிதமாய் இதயா தலை சாய்த்து பார்க்கவுமே அவனுக்கு புரிந்து போனது.
“உன்னை வேலையை விட்டா நிக்க சொன்னேன்? இந்த பார்வை எல்லாம் வேண்டாம். நான் உன்னோட நல்லதுக்கு தான சொல்றேன். அதுவும் திங்கள் கிழமைல இருந்து நீ வரத்தான் போற?…” என்று கடுப்புடன் சொல்ல,
“கழுத்து வலிக்குதேன்னு நீங்க பேசறதை பார்த்துட்டே தலை சாய்ச்சேன். நீங்களா ஒன்னு நினைச்சு பேசினா நானா பொறுப்பு?…” என்று இதயா சொல்ல,
“ஓஹ், நானா தான் தப்பா நினைச்சேனா?…” என்று நெற்றியை தட்டிக்கொண்டே அவன் சொல்லவும்,
“தப்பா ஒன்னும் நினைக்கலை. சரியா தான் நினைச்சிருக்கீங்க. ஏன் என்னை வேலையை விட்டுடுன்னு நீங்க சொல்லவே இல்லையா என்ன? அப்போ நான் அப்படி நினைக்கிறதுல என்ன தப்பு? இதுல டவுட் வேற?…”
இதயா முதலில் அப்படி சொல்லிவிட்டு உடனே அடுத்து அப்படியே மாற்றி பேசவுமே ‘என்னடா இது?’ என்று கண்ணனுக்கு தலை சுற்றியது.
“இப்ப நீ என்ன சொல்ல வர? முதல்ல சரியா பேசு…” என்றான் அவன்.
“தப்பா ஒன்னும் சொல்லலைன்னா அப்போ நீங்க நினைச்சது சரி தானே?…” என்றாள் அவனிடத்தில் வேண்டுமென்றே.
“ப்ச், உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது போடி…” என்று கோபத்துடன் அந்த அறையை விட்டு சென்றவன் சென்ற வேகத்தில் மீண்டும் வந்தான்.
“தப்புதான். உன்னை வேலையை விட்டுட்டு வான்னு சண்டை போட்டது தப்பு தான். என்னை என்ன செய்ய சொல்ற? நீ என் கூடவே இருக்கனும்னு தோணுச்சு. அது தப்பா?…”
“எதுவுமே சால்வ் ஆகாம கூட மட்டும் இருன்னு சொன்னா அது தப்பில்லையா?…” என்றாள் மெதுவாய்.
“கண்டிப்பா தப்பில்லை. இதை எல்லாம் சால்வ் பன்றேன்னு கிளம்பினா அதை மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியும். அதை விட அது இன்னும் பெருசாகவும் செய்யும். இனிமே நான் எப்படி இருக்கேன்றதை பாரு…” என சொல்ல இதயா மௌனமாகிவிட்டாள் இனி என்ன பேச? என்பதை போல.
“என்னோட நீ நார்த்ல வந்து இருக்கனும்னா உன்னோட ஜாப்பை ரிசைன் பண்ணினா தானே முடியும்? என்னால இந்த லீவ் நேரத்துல வந்து குடும்பம் பண்ண எல்லாம் முடியாது….” என்று வேகமாய் சொல்லியவன் அவள் முகம் மாறுவதையும் பொருட்படுத்தாமல்,
“ட்ரெயினிங்ல பல்லை கடிச்சுட்டு பொறுத்துட்டு இருந்துட்டேன். அப்ப நீயும் சமாதானம் ஆக ஒரு டைம். ஆனா அதுக்கு மேல உன்னை விட்டு இருக்க முடியலை. ஜாப் அலார்ட் ஆனது நார்த்ல. உன்னால ஜாப் ரிசைன் பண்ணிட்டு வர முடியும். பாசிபிள் தானே? ஆனா நீயும் வரமாட்டேன்னு மல்லுக்கு நிக்கற? நான் என்ன பண்ணுவேன்? கோவம் எனக்கு…”
“கோவம் வந்தா என்ன வேணா சொல்லுவீங்களா?…”
“ஆமா சொல்லுவேன். என்னன்ற? உன்கிட்ட சொல்லாம யார்க்கிட்ட சொல்லுவேன். உன்னளவு நான் சட்டுன்னு பீலிங்க்ஸ எக்ஸ்ப்ரஸ் பன்ற ஆள் இல்லை. ஏன் உனக்கு தெரியாதா என்னை?…” என்று கேட்க,
“ஏன் தெரியாம? அப்படியே ஒண்ணுமே பேச தெரியாதவர் தான்? சும்மா ரீல் சுத்தாதீங்க. மேரெஜ் பிக்ஸ் பண்ணின நாள்ல இருந்து எனக்கு தெரியாதா உங்களை பத்தி. பேச தெரியாதாம். எக்ஸ்ப்ரஸ் பண்ண தெரியாதாம்…”
அவனிடம் சொல்லி உதட்டை சுழித்து அவனை வெறுப்பேற்ற ஒரு நொடி சிந்தை தடுமாறி அவளில் நிலைத்தான்.
“இதயா…” என்றவனின் அழைப்பே மாறியிருக்க அதில் அவளின் பார்வையுமே மாறியது.
‘இதென்ன இப்படி கூப்பிடறான்?’ என்று அவள் புருவம் உயர்த்தி பார்க்கவும் சுதாரித்த கண்ணன் சட்டென தலையை கோதியவனாக அங்கிருந்து அகன்றுவிட ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தாள் இதயா.
அரைமணி நேரம் பிடித்தது இருவரும் அதிலிருந்து வெளியே வர. இரவு உணவு நேரம் நெருங்க அவளே எழுந்து வெளியே வந்தாள்.
கண்ணனை பார்வை கண்ணனை தேட அவன் அலுவலக அறையில் சுழல் நாற்காலியில் கண்ணை மூடி அமர்ந்தபடி சுழன்றுகொண்டு இருந்தான்.
அரைநொடிக்கும் குறைவான பார்வையை செலுத்தியவள் கிட்சனை நோக்கி செல்ல அந்த கொலுசு சத்தத்தில் மெல்ல கண் திறந்தவன் தானும் உடன் எழுந்து சென்றான்.
“ரைஸ் மட்டும் வச்சா போதும். ரசம், பச்சடி ரெண்டும் இருக்குது…” என்று அவளின் பின்னே வந்தவன் சொல்ல ஒன்றும் பேசாமல் இதயா அரிசியை அளக்க,
“ப்ச், பேசினா பதிலுக்கு எதாச்சும் சொல்லேன். இப்படி தனியா பேசறதுக்கா?…” என்றதும் அவனை திரும்பி அவள் பார்க்க,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. எதுவும் பேசிற கூடாது. இது என்ன வாட்ஸ் ஆப்பா? பார்த்தும் பதில் சொல்லாம இருக்க?…” என்றான் இன்னும் குறையாத கோபத்துடன்.
என்னவும் பேசிக்கொள் என்பதை போல அவள் நிற்க சில நொடி அங்கே நின்றவன் பின் வெளியேறிவிட்டான்.
சாப்பாட்டு நேரமும் மௌனமாகவே கடந்து போக இதயாவும் தான் இருந்த அறைக்கு சென்ற படுத்துவிட கண்ணனுக்கு தான் தனியே அவளை விடுவதா இல்லை தானும் உடன் இருப்பதா என்று குழப்பமாகி போனது.
பின் ஒருமனதாய் அவன் அவளறைக்கு வர இதயா இன்னும் விழித்து தான் இருந்தாள்.
“இன்னும் தூங்கலையா நீ?…” என்றான்.
பேசவேண்டுமே? அவனால் அவளிடம் பேசாமலும் இருக்கமுடியவில்லை. அதே நேரம் பதில் வரவில்லை என்றாலும் அத்தனை கோபம் பொங்கியது.
“இல்லை பகல்ல தூங்கிட்டேன். அதான் தூக்கம் வரலை…”
“ஓஹ் ஓகே, நான் தூங்கறேன். எனக்கு தூக்கம் வருது…” என்று சொல்லி சட்டென அவளருகே வர இதயா பார்க்க,
“ஏதாச்சும் சொல்லேன்? வா வராதன்னு ஏதாச்சும் சொல்லு இதயா…” என்றான் அவன்.
“நான் எப்படி சொல்ல? இது உங்க வீடு. உங்க போஸ்ட்டிங்க்கு கிடைச்ச கெஸ்ட்ஹவுஸ். இங்க நீங்க எங்க வேணா இருக்கலாம். இங்கயும் கூட. நானும் உங்க வொய்ப்…” என்று வரிசையாய் சொல்ல,
“போதும். இதுக்கு என்னை நீ வெளில போடான்னு சொல்லிருக்கலாம்…” என்றான் கண்ணன்.
அவன் எதிர்பார்ப்பு என்னவென்று அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் அப்படி ஒரு மௌனம்.
ஒரே நாளில் அவள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனும் எண்ணவில்லை. ஆனாலும் அவள் மீது ஆசை கொண்ட மனது அப்படி செய்துவிடவேண்டுமென ஆசை கொண்டது.
“நான் எதுவும் சொல்லலைன்னாலும் இப்படி பேசறீங்க? நான் நார்மலா தான பேசறேன்…” என்று வேறு அவனை வெறுப்பேற்ற,
“உன் நார்மல் பேச்சு எனக்கு தெரியாதா?…” என்றான் இப்போது அவன்.
இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்திருந்தே வேண்டுமென்றே வாரிக்கொண்டு இருந்தார்கள் வேண்டாவெறுப்பாய்.
“என்னோட நார்மல் பேச்சு என்னைக்கோ மாறிடுச்சு…”
“எல்லாம் மாறிட்டே இருந்தா தான் வாழ்க்கை. சும்மா ஒரு இடத்துலயே நின்னுட்டு இருந்தா பிடிவாதம்…” என்றவன் அங்கிருந்தால் மேலும் ஏதாவது சொல்லிவிடுவோம் என்று அவன் வெளியேற இருந்தவன்,
“நைட்ல திடீர்ன்னு திரும்ப பீவர் வந்தா?…” என்று சொல்லி முதல் நாள் போல அங்கிருந்த சேரில் அமர்ந்துகொள்ள,
“இதுக்கு போகமாட்டேன்னு சொல்லிருந்திருக்கலாம்…” என்றாள் அவளும் நக்கலாய்.
அவனின் இந்த அல்லாட்டத்தில் உள்ளுக்குள் சிரிப்பு வேற பொங்கி வர பல்லை கடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தாள்.
“ஆமா, போகமாட்டேன். அதான் சொன்னியே நீ என்னோட வொய்ப்ன்னு. ஏன் போகனும்?…” என கேட்டு இப்போது அவளருகே வந்து அமர்ந்துகொண்டவன்,
“இதுக்கு மேல பேசி என்னை சீண்டாத இதயா…” என்று சொல்லிவிட்டு படுத்தும்விட மனம் அதிர பார்த்தாள்.
இந்த நெருக்கம் எந்தவகையிலும் அவளை சமாதானம் செய்ய போவதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் அவளை தீண்டியது.
‘இந்த பிடிவாதம் இவனுக்கு ஏன் முன்பே இல்லாமல் போனது?’ என அவனுக்கு சாதகமாக யோசிக்க இருந்த மனதை இழுத்து பிடித்தாள்.
“இவன் டெவில்ன்றதுல தப்பே இல்லை. விடமாட்றான்…” என்று முணங்க சீரான சுவாசத்துடன் கண்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பாதி இரவு வரை கொஞ்சம் கூட உறக்கமின்றி விழித்திருந்தவள் விடியலின் அருகில் தான் உறங்கவே ஆரம்பித்தாள்.
நல்ல தூக்கத்தில் ஜில்லென்ற ஒரு கரம் நெற்றியில் அழுத்தமாக படிய அதை விலக்குவதற்குள் கன்னம், கழுத்து என்று தொட்டு பார்ப்பது புரிந்தது.
கண்ணை மெல்லமாய் திறந்தவள் சிமிட்டி விழித்து பார்க்க எதிரே கண்ணன் அலுவலகம் செல்ல தயாராகி நின்றான்.
“குட்மார்னிங்…” என்று புன்னகைக்க,
“விடிஞ்சிருச்சா?…” என கேட்டு அமர்ந்தாள்.
“ஹ்ம்ம், பார்த்தா தெரியலை? நான் கிளம்பிட்டேன். டைம் ஆகிருச்சு. வெளில வந்தா புது மெயிடை உனக்கு இன்ட்ரோ பண்ணிட்டு கிளம்புவேன்…” என சொல்ல,
“ஓஹ், நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றாள் இதயா.
“ப்ச், பீவர் இல்லை இப்போ. ஆனாலும் கண்ணெல்லாம் இவ்வளவு சிவந்திருக்குது. நைட் சரியா தூங்கலையோ?…” என கேட்டான்.
அவளை பேச வைக்கவும், பதில் வாங்கவும் அவன் மேற்கொள்ளும் முயர்ச்சி அப்பட்டமாகவே புரிந்தது.
கண்ணன் நடந்துகொள்வது என்னவோ இடைப்பட்ட வருடங்கள் எதுவுமில்லாததை போலவும், சகஜாமான தம்பதிகள் போலவுமே இருக்க இதயாவால் தான் அதை முழுமையாக ஏற்கமுடியவில்லை.
“ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிருக்காங்க. வா சேர்ந்து சாப்பிடலாம்…” என அழைத்தான்.
“நீங்க சாப்பிடுங்க. எனக்கு பசி இல்லை…” என்றவள் சோர்வுடன் மீண்டும் படுக்கையில் சாய,
“முதல்ல எழுந்து சாப்ட்டு டேப்லெட் போட்டுட்டு வந்து தூங்கு. நீ எழுந்துப்பன்னு வெய்ட் பண்ணேன். எனக்கு பசிக்குது. லேட் ஆகுது. எழுந்து வா…” என்றான் பிடிவாதமாக.
“ப்ச், நீங்க என்ன சொல்லிட்டு இப்ப என்ன பன்றீங்க? ஏன் என்னை எப்பவும் புஷ் பண்ணிட்டே இருக்கீங்க?…” என்றாள் எரிச்சலுடன்.
அதில் அவளின் குரல் சற்று பலமாய் கேட்க வேகமாய் அறை கதவை சாற்றியவன்,
“மெதுவா பேசு இதயா. இங்க சர்வன்ட் எல்லாம் இருக்காங்க. நம்மோட சண்டை நமக்குள்ள. தனியா எவ்வளவு வெங்காயம்னாலும் உரிக்க ரெடி. சந்தோஷமா வேடிக்கை பாரு. இப்படி யார் முன்னடியாச்சும் பேசி வச்ச…” என்று சொல்ல,
“நீங்க ஏன் பேச வைக்கிறீங்க? அதான் வரலைன்னு சொல்றேன்ல…” என்றவளை ஒரு நொடி தான் அமைதியாய் பார்த்தான்.
“நீ சொல்ற பேச்சு கேட்கமாட்டன்னு மறந்து போச்சு எனக்கு…” என்றவன் அவளை கையில் தூக்கிக்கொண்டு பாத்ரூம் செல்ல,
“இறக்கிவிடுங்க. விடுங்கன்னு சொல்றேன்ல. எனக்கு குளிக்க வேண்டாம்…” என்று சொல்ல,
“உன்னை யாரு இப்போ குளிக்க சொன்னா? முதல்ல பேஸ் வாஷ் பண்ணி, ப்ரெஷ் பண்ணிட்டு வா. போதும். சாப்பிட்டு வந்து மாத்திரை போட்டு தூங்கு. குளிக்கிறதும் குளிக்காததும் உன் இஷ்டம். அதுல நான் தலையிடமாட்டேன்…” என்று சொல்லியவன் லேசாய் சிரித்தும் விட,
“ஆபீஸ் கிளம்பிடீங்கன்னு பார்க்கறேன். இல்லைன்னா…”
“இல்லைன்னா?…”
“ப்ச், போங்க வெளில…” என்று பாத்ரூம் கதவை சாற்ற,
“ஐஞ்சு நிமிஷத்துல வர நீ…” என சத்தமாக சொல்லிவிட்டே அவன் செல்ல தலையில் கை வைத்து நின்றாள்.
இங்கே தான் வரும் போது இருந்த மனநிலை என்ன? இப்போது இவன் என்னை இருக்க வைக்கும் மனநிலை என்ன? நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது.
எதையும் மறக்கவும் முடியாது, இயல்பாக இருக்கவும் முடியாது தனக்குள் ஒரு அல்லாட்டம் அவளுக்கு.
வாழ்கையின் போக்கில் போய்விடலாம் என்ற நினைப்பை அடித்தளமாக்கி தான் இங்கே அவள் வந்தது. ஆனால் அது அத்தனை சுலபமாக தெரியவில்லை.
கண்ணனின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அன்றைய நாள் தான் நியாபகம் வந்தது.
‘கலெக்டர் ஆகவும் அதிகாரம் தூள் பறக்குது. அன்னைக்கு பறக்கவிட்டுருக்க வேண்டியது தான?’ என நினைத்தவள் எங்கே மீண்டும் வந்துவிடுவானோ என்று வேகவேகமாய் தயாராகி சுடிதாருக்கு மாறிவிட்டு வெளியே வந்தாள்.
“வாங்கம்மா…” என்ற தனத்தின் வரவேற்பில் அவள் கண்ணனை பார்க்க,
“இவங்க தான் தனம். புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறாங்க. உனக்கு என்ன தேவையோ கேட்டுக்கோ…” என்ற கண்ணன்,
“தனம் இனி இங்க நீங்க என்னென்ன செய்யனும்ன்றதை எல்லாம் என் வொய்ப் உங்களுக்கு சொல்லுவாங்க. பார்த்துக்கோங்க. கவனமா இருங்க…” என்று அத்தனையையும் உடனே இதயாவின் மேல் ஏற்ற அவள் திகைத்து பார்த்தாள்.
ஆனால் அங்கே வைத்து ஒன்றும் பேசமுடியாதே? சாப்பிட்டு முடித்து அவனின் பின்னே வந்தாள்.
அவனோ பெரிதாய் ஆரம்பிக்கும் முன் ஓடிவிடவேண்டும் என வேகவேகமாய் அவன் வாசலுக்கு செல்ல இதயா விடாமல் தொடர்ந்து வந்து காருக்கு செல்லும் முன் பிடித்துவிட்டாள்.
“என்ன நினைச்சுட்டு இப்படி பன்றீங்க? இங்க நான் என்ன சூப்பர்வைசரா? எல்லாம் நான் மெய்டேய்ன் பண்ண, இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்க?…” என்று அவனின் கை சட்டையை பிடித்து நிறுத்தி கேட்க இனி தப்பிக்க முடியாதென நின்றவன்,
“என்ன பன்ற இதயா? எல்லாரும் பார்க்கறாங்க…” என சுட்டிக்காட்டினான்.
“யாரும் பார்க்கட்டும் எனக்கென்ன?…” என்று இதயாவும் சொல்ல,