ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 18
மறுநாள் கண்ணன் அலுவலகம் கிளம்பி சென்ற பின்னர் தனது உடமைகள் எல்லாம் அப்படியே இருக்க கண்டாள்.
எத்தனை நாள் தான் எடுத்து வைக்காமல் இருப்பது என நினைத்தவள் ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
நேரம் அப்படியே செல்ல மதிய உணவு நேரத்தில் நளினியிடம் இருந்து போன் வந்தது இதயாவிற்கு.
“சொல்லுங்க நளினிக்கா எப்படி இருக்கீங்க?…” என்று பேச,
“அதை நாங்க கேட்கனும். நீ எப்படி இருக்க? இப்போ உடம்புக்கு பரவாயில்லையா?…” என்று கேட்கவும் இதயாவிற்கு எதுவும் புரியவில்லை.
“எனக்கா? எனக்கு என்ன? நல்லா இருக்கேனே…”
“அது இன்னைக்கு, நேத்து உனக்கு பீவர் தானே?…” என்றதும்,
“உங்களுக்கு எப்படி தெரியும் நளினிக்கா?…” என்றாள்.
“அகிலன் சொன்னார். எங்களுக்கு தெரியும். எல்லாம் தெரியும். உனக்கென்ன ஆச்சு பூவி? எப்பவும் பேசறதை கப்புன்னு புடிச்சு பதில் சொல்லுவ? இப்போ என்ன?…”
“நளினிக்கா…” என்றவளுக்கு அப்போதுதான் விளங்கியது.
இந்த நேரம் அலுவலகம் மொத்தமும் தெரிந்திருக்கும். இதை எப்படி மறந்தேன்? என தலையில் தட்டிக்கொண்டாள்.
“என்ன பூவி லைன்ல இருக்கியா?…” என கேட்க,
“இருக்கேன்க்கா. சொல்லுங்க…” என்றவளுக்கு வேறு வார்த்தைகள் இல்லை.
“உன்னை பார்க்க வீட்டுக்கு வரலாம்ன்னு இருக்கோம். வரலாம் தானே?…”
“அச்சோ என்ன பேச்சு இது? தாராளமா வரலாம். எப்போ வேணா வரலாம். வாங்கக்கா…” என்றாள்.
“ஓகே, ஈவ்னிங் கிளம்பும் போது கன்பார்ம் பன்றேன். இன்னைக்கேன்னு சொல்ல முடியாது. கிளம்பறதா இருந்தா சொல்றேன். இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு வருவோம்..”
“ஓகே, நளினிக்கா. வாங்க. கால் பண்ணுங்க…” என்று சொல்லி வைத்தவளுக்கு ஆயாசமாய் இருந்தாலும் மிருணாவை நினைத்து லேசாய் புன்னகை.
இந்த திருமண விஷயம் தெரிந்து அவளின் முகம் எப்படி மாறி இருக்கும் என எண்ணி பார்த்தவளுக்கு மேலும் புன்னகை விரிந்தது.
அதற்குள் யசோதா அழைத்துவிட வீட்டினர் பேச என நேரம் செல்ல அன்றென பார்த்து கண்ணனும் நேரமே வீடு வந்திருக்க நளினி போன் செய்ததையே மறந்துவிட்டிருந்தாள்.
அடுத்தடுத்த வேலைகளில் உண்டான சோர்வில் அதை தானும் மறந்து கண்ணனிடமும் சொல்ல மறந்து போக மாலை அவன் வந்த பொழுது இந்த பேச்சுக்கள் இல்லை.
அவன் வந்ததும் நேராம தன்னுடைய வேலையில் மூழ்கிவிட இதயாவும் ‘என்னவாகிற்று எதுவும் பேசாமல் இருக்கிறான்?’ என்ற பார்வையுடன் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
பொழுது போகாமல் டிவி பார்த்துக்கொண்டு அவள் இருக்க தனம் வந்து டீயை கொடுத்துவிட்டு,
“அய்யாவுக்கு நீங்க குடுங்கம்மா…” என்று தர,
“நீங்களே குடுங்கக்கா. எதுக்கு என்கிட்டே கேட்டுட்டு?…” என்றாள்.
“இல்ல, இல்ல. நீங்க குடுங்க. வேலைக்கு வர அன்னைக்கே நிறைய சொன்னாரு எனக்கு சொன்ன வேலைகளை மட்டும் தான பார்க்கனும்னு…” என்று சொல்ல ஒரு பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டாள்.
“நீங்க போங்க…” என்று சொல்லிவிட்டு அவனிருக்கும் அறைக்கு கதவை தட்டிவிட்டு வந்தவள்,
“டீ…” என்று வைத்துவிட்டு திரும்ப,
“ஹ்ம்ம்…” என்றவன் கைகளை மேலே தூக்கி முறுக்கியபடி,
“நீ குடிக்கலை?…” என்று கேட்டு அதை எடுத்துக்கொண்டான்.
“என் ரூம்ல இருக்குது. போய் குடிக்கனும்…” என சொல்லி நகர்ந்ததும் கண்ணனும் ஒன்றும் பேசாமல் குடித்து முடிக்க வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் இருந்து போன்.
“ஸார், மேடமோட ப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க. ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. மேடம் தான் வர சொன்னாங்களாம்…” என சொல்ல கேட்டுக்கொண்டே திரையில் வாசலில் மிருணாவும், நளினியும் நிற்பதை பார்த்தவன்,
“ஹ்ம்ம், உள்ளே அனுப்பிவைங்க…” என்று சொல்லி போனை வைத்தான். நேராக இதயாவை தேடி வந்தவன் முறைத்துக்கொண்டே அவளிடத்தில்,
“உன் ப்ரெண்ட்ஸ் வராங்கன்னா சொல்லமாட்டியா நீ? வாசல்ல செக்யூரிட்டி ஸ்டாப் பன்றான். முதல்லையே இன்பார்ம் பண்ணிருந்தா இப்படி கேட்டுட்டு உள்ளே அனுப்பியிருக்க வேண்டாம் தானே?…” என கேட்க,
“அச்சோ, நான் மறந்துட்டேன். கிளம்பும் போது ஞாபகப்படுத்தறேன்னு சொன்னாங்க. அதனால எனக்கும் மறந்து போச்சு…” என்றாள்.
“நல்லா மறந்த. இது அவங்களுக்கு எவ்வளவு எம்பேரிஸிங்கா இருக்கும்?…” என்றவன்,
“ஓகே போய் ட்ரெஸ் மாத்திக்கோ, நான் அவங்களை ஹால்ல வெய்ட் பண்ண சொல்றேன்…”
“ஏன்? இந்த ட்ரெஸ்க்கு என்ன?…” என்று தன்னை குனிந்து பார்த்தாள்.
ஒரு டி ஷர்ட்டும், ட்ராக்கும் போட்டிருந்தவள் தலை கலைந்து முகமெல்லாம் களையின்றி சோர்வாக இருப்பதை காட்டியது.
“இந்த ட்ரெஸ்ஸும் நல்லா இல்ல. நீயும் நல்லா இல்ல…”
“என்ன ஒரே அதிகாரமா இருக்குது? வரவங்க என்னோட ப்ரெண்ட்ஸ். என்னை இதுக்கு முன்னாடியும் என்னை இப்படி பார்த்திருக்காங்க…” என்று அவள் வேண்டமென்றே முரண்டிக்கொண்டு நிற்க,
“இப்போ நீ என்னோட வொய்ப். போய் மாத்திக்கோ. இல்லைன்னா நான் மாத்திவிடுவேன். எனக்கொண்ணும் கஷ்டமில்லை…” என்றான் கதவில் சாய்ந்து.
“பர்னிச்சர் மேல கை வச்ச மொத டெட்பாடி நீ தான்…” என்னும் வடிவேலுவின் சத்தம் கேட்டு உடனே கண்ணனின் முகம் மாற இதயா அதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும் தேவையா உனக்கு என்பதை போல பார்த்தாள்.
தனது லேப்டாப்பில் நகைச்சுவை காட்சிகளை போட்டுவிட்டு பார்த்தபடி இருந்தவள் கண்ணன் வந்து கதவை தட்டவும் அப்படியே எழுந்து வந்துவிட்டாள்.
“இப்போ இந்த காமெடி தேவையா?…” என்று பல்லை கடித்தவன்,
“போய் ட்ரெஸ் மாத்திட்டு வா. அவங்க வந்தாச்சு…”
“ப்ச், தள்ளுங்க…” என கதவை திறக்க போக,
“உள்ள போன்னா, என் பேச்சை கேட்க மாட்ட இல்ல…” என அவளை உள்ளே தள்ளி தானும் வந்து கதவை சாற்ற போக,
“எனக்கு மாத்திக்க தெரியும். போங்க சாமி. சும்மா சும்மா இதான் சாக்குன்னு…” என்றவளின் கோப பேச்சில் கண்ணன் சிரித்துவிட்டான்.
“கரெக்ட்டா சொன்ன. இதான் சாக்குன்னு. நிஜமாவே சாக்கு தான். அன்னைக்கு கவனிக்கலை. நீ இருந்த நிலை. என்னவோன்னு பதட்டம். இன்னைக்கு ட்ரை பண்ணலாம்ன்னு தான்…” என்று உல்லாச புன்னகையுடன் அவன் சொல்ல,
“பிராடு, டெவில். நீங்கலாம்…” என்று அவனின் நெஞ்சில் அடித்தவள் இன்னும் அவன் சிரிக்க கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
உரிமையான அந்த நெருக்கமும், தொடுகையும் கண்ணனுக்கு உற்சாகம் தர முகமெல்லாம் புன்னகை விரிந்து பரவியிருந்தது.
காலிங் பெல் சத்தத்தில் தனம் வெளியே வந்தவர் கண்ணனை பார்க்க அவனும் அதே சிரிப்புடன்,
“இதயா ப்ரெண்ட்ஸ் தான். உட்கார வைங்க. நானும் வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அலுவலக அறைக்குள் சென்றான்.
அதற்குள் தனம் சென்று கதவை திறக்க நளினியும், மிருணாவும் உள்ளே வந்தார்கள்.
“வாங்க, உட்காருங்கம்மா. இப்ப அம்மா வந்திருவாங்க…” என்று சொல்லிய தனம்,
“அம்மாவோட ப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னாங்க. உங்களுக்கு குடிக்க எடுத்துட்டு வரேன்…” என தனம் உள்ளே சென்றுவிட,
“பார்த்தீங்களா நளினிக்கா. இந்த பொண்ணு நம்மளை வாசல்ல கூட வந்து கூப்பிடலை. இதுக்குத்தான வரமாட்டேன்னு சொன்னேன்…” என மிருணா கடுப்படித்தாள்.
“சும்மா இரேன் மிருணா. நாம வரும் போது போன் பன்றேன்னு பூவிட்ட சொல்லியிருந்தேன். உன்னை கூட்டிட்டு வர அவசரத்துல போன் பண்ணலை. வீட்டுக்கிட்ட வந்தாச்சும் கூப்பிடலாம்ன்னா சார்ஜ் போச்சு. இது எல்லாம் ஒரு விஷயமா?…” என்று இலகுவாக சொல்ல,
“என்னவோ எனக்கு பிடிக்கலை. நீங்க சொன்னதால தான் வந்தேன்….”
“என்ன மிருணா இது?…”
“பின்ன என்ன நளினிக்கா? இப்படி இப்படின்னு சொல்லியிருந்தா நாம வந்திருக்க மாட்டோமா? திடுதிப்புன்னு ஒன்னுமன்னா பழகின நம்மட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கா…” என இன்னும் குறையாத கோபத்துடன் சொல்ல,
“ப்ச், அதுக்கு அவளை அப்படியே விடனுமா? என்ன சூழ்நிலையோ என்னவோ? நாம பொத்தாம்பொதுவா நினைக்க கூடாது. நீ சின்ன பிள்ளை. கல்யாணம் ஆனா புரியும்…”
“ஒன்னும் தேவை இல்லை. போங்க போங்க…” என்று மிருணா சொல்லும் போதே இதயா வந்துவிட்டாள்.
அவசரமாக சுடிதாருக்கு மாறி இருந்தவள் தலையை சீவி கொண்டையாக சுற்றி இருந்தாள். கழுவிய முகத்தில் நீர்த்திவலைகள் இன்னும் அங்கொன்றும் இங்குகொன்றுமாய் படிந்திருக்க காதோர முடியும் நீர் சொட்ட நெளிந்திருன்தது.
“வாங்க நளினிக்கா, வா மிருணா. ட்ரெஸ் சேஞ்ச் பன்றதுல லேட் ஆகிடுச்சு. என்ன சாப்பிடறீங்க?…” என கேட்க,
“நீ எப்படி இருக்க? ஆள் மெலிஞ்ச மாதிரி இருக்கியே? என்னாச்சு? ரொம்ப முடியலையா?…” என நளினி நலம் விசாரித்துக்கொண்டு இருந்தாள்.
“ஹ்ம்ம், இப்போ நல்லா இருக்கேன் நளினிக்கா. காய்ச்சல் விட்டுடுச்சு…” என்ற இதயா,
“மிருணா என்ன ஒண்ணுமே பேசாம முறைச்சுட்டு இருக்க?…” என கேட்க,
“அக்கா, இவளை பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க. என் கல்யாணத்துக்கு இவளை கூப்பிடவே மாட்டேன்….”
“நான் என்ன பண்ணேன்?…” என இதயா அவளின் கையை பிடிக்க,
“என்ன பண்ணலை? நீ ஏன் உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடல. அதான் கோவம்…”
“எப்போ? மூணு வருஷம் முன்ன நடந்த கல்யாணத்துக்கா?…” என்று இதயா கேட்கவும் தான் இருவருக்குமே அவளின் வழக்கமான உடையும், எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் அந்த செயினுமே இப்பொது இருப்பதை கவனித்தார்கள்.
புதிதாய் திருமணம் ஆன பெண்ணுக்குரிய எந்த லட்சணங்களும் இன்றி சாதாரணமாக அவளை முன்பு அவள் வீட்டில் எப்படி பார்த்தார்களோ அப்படியே இருக்க குழம்பி போயினர்.
“மூணு வருஷம் முன்னாடியா?…” என மிருணா வாயை பிளக்க, நளினி இதயாவின் முகத்தை ஆராய்ந்தாள்.
“ஹ்ம்ம், ஆமா. மூணு வருஷம் ஆச்சு…” என்று இதயா ஆமோதிக்க,
“அடிப்பாவி, அப்போ நான் மிஸ்டர் க்ரஷ் பார்த்து வழிஞ்சது, வர்ணிச்சது எல்லாத்தியும் கேட்டு ரசிச்சிட்டு இருந்தியா நீ?…” என்று சொல்லவும் கண்ணன் கதவை திறந்துகொண்டு வாவும் சரியாய் இருக்க மீண்டும் மிருணா ஒரு நொடி அசந்து போனாள்.
எப்போதும் பார்மல் உடையிலேயே அவனை பார்த்து மெய்மறப்பவள் இன்று இலகுவான டிஷர்ட், ட்ராக்கில் பார்த்து இன்னுமே ஆழந்து பார்க்க,
“ஹாய்…” என்ற புன்னகையோடு வந்து அமர்ந்துகொண்டான் கண்ணன்.
“இதயா, இங்க வா…” என தன்னருகே சோபாவை தட்டி காண்பித்து அழைக்க அவனை முறைக்க முடியாமல் பார்த்தவள்,
“இல்லை…” என மறுக்கும் முன்,
“ப்ச், வா இங்க…” என்று அழுத்தமாய் சொல்லவும் எழுந்து அவனருகே அமர்ந்தாள்.
“மிருணா…” என இன்னும் அவள் அந்த நிலையிலேயே இருப்பதை கண்டு நளினி கிள்ளிவைக்க,
“நளினிக்கா…” என கையை தடவிக்கொண்டவள்,
“ஸாரி பூவி. இப்பவும் சைட்டிட்டேன்…” என்று உளறி வைக்க நளினி தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.
“மிருணா…” என மீண்டும் நளினி கிள்ள,
“வலிக்குது நளினிக்கா…” என மீண்டும் கையை தடவிக்கொண்டவள்,
“கங்க்ராட்ஸ்…” என்றாள் பொதுவாய் இருவருக்குமாக.
“தேங்க்ஸ்…” என்றான் கண்ணன்.
அதற்குள் தனமும் சிற்றுண்டியோடு வந்து நால்வருக்குமே எடுத்து தனி தனியே வைக்கவும்,
“எடுத்துக்கோங்க…” என்றான் கண்ணன்.
அவன் என்னவோ சாதாரணமாக இருக்க மிருணா, நளினிக்கு தான் சங்கடமாய் இருந்தது. இலகுவாய் பேசிவிடமுடியாதபடிக்கு அவன் இருக்க இருவும் அமைதியாய் இருந்தனர்.
“வரும் போது பேசிட்டு இருந்தீங்க? இப்போ என்ன சைலன்ட்?…”
“இல்லை ஸார், சும்மா தான் பேசிட்டு இருந்தோம். பூவிக்கு பீவர்ன்னு அகிலன் ஸார் சொன்னார். அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்….”
“அதனால என்ன? நார்மலா இருங்க. இது ஆபீஸ் இல்லை. வீடு…” என சொல்லியவன்,
“எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகிடுச்சு. அதை சொல்லலைன்னு கோவம் வேற போல?…” என மிருனாவை பார்க்க அவளுக்கு தொண்டையில் டீ சிக்கிகொண்டது போல முழித்தாள்.
“சத்தியமா இல்ல ஸார். நான் கோபப்படற ஆளே இல்ல. சும்மா தமாசு தமாசு…” என்று சொல்லவும் இதயாவிற்கு அவளின் படபடப்பில் அப்படி ஒரு சிரிப்பு.
“ஹ்ம்ம், பார்த்தேன்…” என அவன் தலையசைத்து சொல்லியதே அவன் கவனித்திருக்கிறான் என விளக்க,
“அப்ப நான் கிளம்பறேன் பூவி…” என மிருணா சொல்லவும் இதயா இன்னுமே சிரித்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு? பேசாம இரு. டின்னர் சாப்பிட்டு போகலாம். இங்க வரேன்னு வீட்டுல சொல்லிட்டு தான வந்திருப்ப?…” என கேட்டுக்கொண்டே மிருணாவின் அருகே வந்து அமர்ந்துகொண்டாள்.
“ஹ்ம்ம் சொல்லிட்டேன் தான்…” என மிருணாவும் சொல்ல,
“அடிப்பாவி, என்கிட்டே வேண்டா வெறுப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்த. வரதுக்கு முன்னடி இந்த வேலையை எப்போ பார்த்த?…” என நளினியும் கேட்க,
“அது மனசு கேட்கலை. அதான் அப்படி சொன்னேன். ஆனாலும் இவ மேல கோவம் கோவம் தான். இப்பவும் கோவம் தான்…” என படபடவென சொல்லியவள் இப்போது பார்வை கண்ணனிடம் செல்ல,
“போய்ருச்சு. போய்ருச்சு, கோவம் போய்ருச்சு…” என உடனே பேச்சை மாற்ற,
“உளறாத மிருணா…” என நளினி அவளை இடித்தாள்.
“ஓகே ஓகே, ஒன்னும் பிரச்சனை இல்லை. இடஹ்ய சொல்லாததுக்கான ரீசன் நான் தான். கல்யாணம் ஆன நாலாவது நாளே ட்ரெய்னிங் போய்ட்டேன் நான். அடுத்து உடனே நார்த்ல போஸ்ட்டிங். இதயாவுக்கு ஜாப் ரிசைன் பன்றதுல விருப்பம் இல்லை….”
“அதான் கொஞ்சம் நாள் இப்படியே லைப் லீட் பண்ணிட்டு இருந்தோம். இங்க திருச்சி வரவும் கூட இதயா பேரன்ட்ஸ் துணையா இருந்தாங்க. இப்போ இங்க நான் வரவும் அவங்க கிளம்பியாச்சு…” என கதையாய் சரளமாக சொல்ல ‘அடப்பாவி’ என பார்த்தாள் அவள்.
“ஆபீஸ்ல சொல்லாததுக்கு ரீசன் யாரும் கேட்கலையா இருக்கும். அதான் அவளும் சொல்லாம இருந்திருக்கலாம். இப்போ க்ளியரா…” என கண்ணன் கேட்க தலையாட்டுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
“ஓகே, நீங்க பேசிட்டு இருங்க…” என எழுந்து சென்றுவிட மிருணா கோபமாக முறைத்தபடி இதயாவிடம் திரும்பினாள்.
“ஒரு வார்த்தை, இன்னாரு என் புருஷன், பேசாதன்னு சொல்லிருந்தா உன்கிட்டயே நான் உளறிருக்க மாட்டேன்ல. மனசாட்சியே இல்லடி உனக்கு…” என்று பொறும,
“சரி விடு. இப்போ என்ன? தெரியாம தானே பேசின?…” என்று இதயா சொல்ல,
“தெரிஞ்சு மட்டும்? கொஞ்சம் முன்னாடி பார்த்தோமே நீ சாரை அப்படி பார்த்தான்னு?…” என நளினி கிண்டல் பேச,
“அது வந்து ஒரு ப்லோவ்ல வந்திருச்சு. மறந்திருங்க…” என்று தலையசைக்க இருவருமாய் அவளை போட்டு மொத்தினார்கள்.
“ஓகே ஓகே, இப்போ என்ன ஏதோ பழக்க தோஷத்துல சைட்டி அதை சொல்லவும் செஞ்சுட்டேன்…” என்ற மிருணா,
“பூவி, அவர் அதை கேட்ச் பண்ணிருப்பாரா?…”
“ரொம்ப கவலை தான்…” என்று நளினியும் தாவும் கோரசாக சொல்ல அங்கே மிருணாவை வைத்து இருவரும் கலாய்த்து பேச பதில் பேசமுடியாமல் திணறினாள் மிருணா.
ஒரு மணி நேரம் செல்ல இருவருமே கிளம்புவதாக சொல்லவும் இதயாவிற்கு அனுப்ப மனதே இல்லை. ஆனாலும் சரி என்று விடைகொடுத்தாள்.
தோழிகள் கிளம்பவும், தனமும் கிளம்புவதாக சொல்ல இரவு உணவெல்லாம் எடுத்து வைத்துவிட்டதாகவும் சொல்லி கிளம்பிவிட்டார். வீடே வெறிச்சோடி போக கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தவளை தேடி வந்தான் கண்ணன்.
“என்ன ப்ரெண்ட்ஸ் போகவும் முகம் ப்யூஸ் போயிருச்சு?…” என கிண்டலாக கேட்க,
“வேற என்ன பண்ண? ப்யூஸ் போன பல்ப் தான் வேணும்னு நீங்க அடம்பிடிக்கிறீங்களே?…”
“அந்த பல்ப்பை எப்படி யூஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும். சோ பிடிவடஹம் பிடிக்கிறதுல தப்பில்லை…” என்றவன் பேச்சில் லேசாய் முகம் சிவந்தவள்,
“உங்ககிட்ட மனுஷி பேசுவாளா?…” என சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக,
“இதயா நில்லு…” என நிறுத்தியவன்,
“எப்போ பூவிதயா அய்யாசாமி பூவிதயா கண்ணபிரானா மாற போறா?…” என்று கேட்டான்.
“அதான் என்னவோ பியூஸ் போனாலும் பரவாயில்லை, எனக்கு எல்லாம் தெரியும்ன்னு சொன்னீங்க. இப்போ என்கிட்டே கேட்டா என்ன அர்த்தம்?…” என நக்கலாக கேட்க,
“அறிவே, நான் கேட்டது அதை இல்லை. உன்னோட சர்ட்டிபிகேட்ல…” என்று சொல்லவும் இதயாவின் முகம் மாற,
“நீ என்ன நினைச்ச?…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“நினைக்க இங்க ஒண்ணுமில்லை…”
“ஆஹான், பார்த்தா அப்படி தெரியலையே?…” என இன்னும் நக்கலுடன் அவன் பேச பேச,
“இன்னும் சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்கவருக்காக எல்லாம் மாத்த முடியாது…”
ஓஹ், நீ அப்படி வரியா?…” என்றபடி அவளை நெருங்கி அவன் நிற்பதுவே எதையோ பேச போகிறான் என்று உணர்த்த அங்கிருந்து நகர முயன்றவளை ஒரு கையாள வளைத்து நிறுத்தினான்.
“பதில் வாங்காம போறது தப்பும்மா…” என்று அவளின் நெற்றியில் முட்டியவன்,
“இப்போ வரைக்கும் நான் சிங்கிள் தானே? உன்னோட மிங்கிள் ஆகலையே. அதான் ஸ்டேட்டஸ் சிங்கிள். இப்போவே மிங்கிள் ஆகிடு. ஸ்டேட்டஸ்ல மேரீட்ன்னு மாத்திடறேன்…” என்று சொல்லி கண்ணடிக்க அவனின் வாயில் பட்டென்று அடித்தாள் இதயா.
“அப்படி மாத்தனும்னு அவசியமே இல்லை…”
“அப்போ புகையாத…”
“நினைப்பு வேறையாக்கும்? போயா…” என்று அவனை தள்ள,
“நினைப்பு தானே? அது எக்கச்சக்கமா இருக்குது. கேட்டுக்க, தெரிஞ்சுக்க நீ விரும்பலையே. என்ன பண்ணலாம்?…” என்றவனின் பேச்சுக்கள் இன்னும் அதே விதத்தில் நீண்டுகொண்டே செல்ல அதில் தன்னையும் அவன் பேசவைத்து பதில் வாங்குவதை உணர்ந்தவள் விழிவிரித்து நின்றாள்.
“ஹார்ட்பீட்…” என்றபடி அவளின் முகத்தை தன் கையில் தாங்கிக்கொண்டவனின் அருகாமையை நொடிக்கும் குறைவான நேரத்தில் அப்புறப்படுத்தியவள் அங்கிருந்து செல்ல கண்ணன் தான் வலையென சூழ்ந்த உணர்வுகளில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறி போனான்.