ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 5
ஒரு வழியாக பேசி முடித்து அவர்கள் கிளம்ப மதியம் ஆனது. மதிய உணவை சாப்பிட்டு செல்லுமாறு யசோதா சொல்ல கண்ணன் மறுத்துவிட்டான்.
காலை சாப்பிடும் போது கூட அவள் வெறுமனே பரிமாறி செல்ல அவனுக்கு உணவே இறங்கவில்லை.
கிளம்பும் நேரம் அனைவரும் வெளியே வந்து நிற்க இதயா உள்ளே சென்றுவிட்டாள் ருக்மணி, நிஷாந்தியிடம் சொல்லிவிட்டு.
“இதயா எங்க?…” என்று அவளை காணாது வாசலில் தேடினான் அவன்.
“அண்ணா, அண்ணி உள்ள இருக்கா…” என்றாள் தீப்தி.
“சரிம்மா,…” என்று புன்னகைத்தவன்,
“நான் போய் பார்த்து சொல்லிட்டு வரேன்…” என உள்ளே செல்ல அவனின் பின்னே வந்தான் நவீன். அவனை கண்டதும் நின்றவன்,
“உங்கக்காவை இப்பவே தூக்கிட்டு போற மாதிரி கூடவே வர? பேசிட்டு வருவேன். நில்லு…” என்று பல்லை கடித்தபடி கண்ணன் சொல்ல,
“இது எங்க வீடு. நான் எங்கக்கா கூட தான் இருப்பேன்…” என நவீனும் முறுக்கிக்கொண்டு நிற்க,
“சென்னையில ஒரு நல்ல ஜாப் கிடைச்சிருக்குது போல? கங்க்ராட்ஸ்…” என்றான் சம்பந்தமின்றிய வாழ்த்துடன்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் ஆக போகுது. இன்னைக்கு தான் தெரியுதோ?…” என நவீன் கேட்க,
“உனக்கும் உங்கக்காவுக்கும் அந்த நிமிஷம் என்னன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்க தெரியாதா? உன்னை இன்னைக்கு தான பார்க்கிறேன். அப்போ இப்ப தான சொல்ல முடியும்…” என கண்ணனும் பேச,
“போன் அப்படின்னு ஒன்னு இருக்குது. அதே மாதிரி நீங்க என்ன வெளிநாட்டுலையா இருந்தீங்க? இதே இந்தியா தானே? வரனும்னு தோணினா வந்திருக்கலாம். பார்க்கனும்னு நினைச்சா பார்த்திருக்கலாம். சாக்கு சொல்லிட்டு இப்போதான், இன்னைக்கு தான்னு நின்னுட்டு…”
அச்சு அசல் இதயா பேசியதை போலவே அவனும் பேச நவீனின் மேல் கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது கண்ணனுக்கு.
“ஹ்ம்ம் நல்லா பேசற நீ. கொஞ்சம் அக்கா புருஷன்னும் பார்க்கலாம்…”
“அக்கா புருஷன் அக்காவை பார்க்காதப்போ நான் பார்க்கனுமா என்ன?…”
“அடேய் கொஞ்சமும் அத்தான்னு யோசிக்கமாட்டியா?…” என கண்ணன் சிரித்துக்கொண்டே கேட்க,
“உங்களால எப்படி இப்படி சிரிச்சு பேச முடியுது? இவ்வளவு ஈஸியா இருக்க முடியுது? ஆனா என்னோட அக்கா சிரிச்சு சந்தோஷமா இருந்து ரொம்ப வருஷம் ஆச்சு…” என்றான் ஆதங்கத்துடன்.
“நவீன்…”
“ப்ச், உங்க கூட பேசினா கோவமா வருது. எப்படியும் எல்லாரும் அக்காவை உங்களோட அனுப்ப போறாங்க. ஆனா அவ கண்டிப்பா சந்தொஷமா வர மாட்டா. இங்கையாச்சும் அவ கொஞ்சம் நிம்மதியா இருந்தா. உங்க கூட வந்தா…”
“நவீத்தான்…” என தீப்தி அதட்டலுடன் வர,
“விடும்மா பேசட்டும்…” என்றான் கண்ணன்.
“நீங்க போங்க அண்ணா. நான் பேசிக்கறேன்…” என்று அவள் சொல்ல,
“என்ன திடீர்ன்னு காத்து அந்த பக்கம் அடிக்குது?…” என்று தீப்தியை நவீன் முறைக்க,
“அதான் சொல்லிட்டியே காத்துன்னு. அது எப்போ எந்த பக்கம் அடிக்கும்னு யாருக்கும் தெரியாது. யார் கண்டா உன் காத்து கூட நாளைக்கு கண்ணண்ணா பக்கம் அடிச்சாலும் அடிக்கும்…” என்று கிண்டல் பேச,
“தீப், எரிச்சலை கிளப்பாத…” என்றான் சுள்ளென்று.
“இப்ப ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க? நான் இதயாட்ட சொல்லிட்டு கிளம்பறேன்…” என நகர்ந்தான் கண்ணன்.
“உனக்கு கிறுக்கு நவீத்தான். இப்படி முறைச்சுட்டு நீ பேசினா நாளைக்கு அவங்களே சமாதானம் ஆனா உன் மூஞ்சியை எங்க வச்சுப்ப?…”
“இதுதான் பூவிக்கா பக்கம் நிக்கறதா தீப்?…”
“அண்ணி பக்கம் நிக்கரதுன்னா நாமளும் எதிர்த்து பேசறதுன்னு இல்லை. பேசலாம் அதுவும் அர்த்தமா இருக்கனும். நாளைக்கே உறவுகள் ஒண்ணானா இப்படி சில பேச்சுக்கள் உறுத்தாம இருக்கற விதமா பேசனும்…”
“இப்போ நான் அப்படி என்ன பேசிட்டேன்…”
“இதுவரைக்கும் பேசலை. ஆனா நீ ரொம்ப டென்ஷன் ஆகிட்ட. எங்க பேசிடுவியோன்னு தான் வந்தேன்…”
“ப்ச்…” என சலித்து அங்கேயே அமர்ந்துகொண்டான்.
“நவீத்தான். சும்மா எல்லாத்துக்கும் இப்போ மூக்கை விடைக்காத. ப்ரீயா விடு. என்னதான் பன்றாங்கன்னு பார்ப்போம்…” என்றாள் அவனை தேற்றும் விதமாக.
வாசலில் இருந்தபடி இங்கே இவர்களை நிஷாந்தி கவனித்தவள் திரும்பிக்கொண்டாள்.
கண்ணன் இதயாவின் அறைக்குள் நுழைந்தவள் அங்கே அவள் படுத்திருப்பதை கண்டு அருகே சென்று அவளின் தோள் தொட்டு,
“இதயா…” என்று அழைத்ததுமே படக்கென திரும்பியவள் வேகமாய் எழுந்தமர்ந்தாள்.
“நாங்க கிளம்பிட்டோம்…” என்றதும் தலையை மட்டும் அசைக்க,
“ஆனா திரும்ப உன்னை கூட்டிட்டு போக வருவோம்…” என்றான் கண்ணன்.
“நான் பேச வேண்டிய எல்லாமே பேசி முடிச்சுட்டேன். திரும்ப திரும்ப நீங்க சொன்னதையே சொல்லாதீங்க…” என்றாள் எரிச்சல் மிகுதியில்.
“நீ முடிச்சுட்ட. ஆனா நான் இனிமே தான் ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன்…” என சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்க்க,
“பை ஹார்ட்பீட்…” என்று அவளின் கன்னத்தை தட்ட,
“போங்க அங்கிட்டு…” என்று அவனின் கையை தட்டிவிட்டாள்.
“நாளைக்கு ஆபீஸ் வருவ தானே?…”
“வேலை பார்க்கறேன்ல. வந்து தான் ஆகனும்…”
“ஓகே, அன்னைக்கு மாதிரி சீக்கிரமே வா…” என்று சொல்ல அவன் சொல்லிய பொருளில் அவள் முறைக்க,
“சிங்கிள் மீனிங் தான்….” என்றான் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன்.
“நினைப்பை பாரு. போங்க…” என்று எழுந்து விறுவிறுவென வெளியே வந்தாள் அவனை தாண்டிக்கொண்டு.
“இதயா…” என்று வந்தவன் அங்கே இதயாவின் இரு புறமும் நவீனும் தீப்தியும் நிற்க,
“நல்லா இருக்குடா இந்த போஸ்….” என்று கேலி பேசியபடியே மூவருக்கும் கையை அசைத்துவிட்டு வெளியேறினான்.
“இவர் நிஜமாவே கலெக்ட்டர் தானா? ஏன் பூவிக்கா உன் ஆபீஸ்ல எப்படி இருப்பாரு?…” என்றான் சந்தேகத்துடன் நவீன்.
“ரொம்ப முக்கியம். எனக்கு தலை வலிக்குது நவீ…” என்று தலையை பிடித்தபடி அமர வீட்டினர் அனைவரும் உள்ளே வருவதை பார்த்தான்.
“பூவிக்கா அப்படியே எந்திச்சு உள்ள போய் படுத்திரு. உன்னை தான் பார்க்க வராங்க…” என்று சொல்லி அவள் சுதாரிக்கும் முன்னர் அனைவருமே அவளை சூழ்ந்து அமர்ந்துகொண்டாலும் அவளை தவிர்த்து அவர்களாக பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் இதயாவை பற்றி தான்.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் மெல்ல எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். அவளை யாம் தொந்தரவும் செய்யவில்லை. நவீன் முதலிலேயே சொல்லிவிட்டான் இதயாவிற்கு தலை வலி என்று.
இப்போதைக்கு அவளிடம் பேசவேண்டாம் என யசோதா சொல்லிவிட யாரும் பேச்சுக்கொடுக்கவும் இல்லை.
கண்ணன் தனக்கு கொடுப்பட்டிருக்கும் ஹெஸ்ட்ஹவுஸ்க்கு வந்தவன் தாயையும் தங்கையையும் இறக்கிவிட்டுவிட்டு வெளியே கிளம்ப பார்த்தான்.
“இன்னைக்கும் எங்கப்பா போற? வீட்டுல இரு. உன்கிட்டயும் பேசனும்…” என்று ருக்மணி சொல்லவும் ஒரு பெருமூச்சுடன் அவனுமே இறங்கி உள்ளே வந்தன.
“முதல்ல சாப்பிடுங்கம்மா. அப்பறமா பேசுவோம்…” என்று உடை மாற்றி வந்தான்.
அவர்களும் ஒரு அறைக்கு சென்று முகம் கழுவி உடை மாற்றி வர மௌனமாகவே நகர்ந்தது அந்த நேரம்.
“சொல்லுங்கம்மா…” என்று ருக்மணியின் எதிரே வந்து அமர்ந்தான்.
“அண்ணா, அண்ணி என்ன சொன்னாங்க? எங்கட்ட கூட சரியா பேசலை. உன்கிட்ட இங்க வரதை பத்தி எதாச்சும் சொன்னாங்களா?…” என நிஷா கேட்க,
“இல்லம்மா, அப்படி எதுவும் சொல்லலை…” என்றான் பட்டுக்கொள்ளாமல்.
“சரி நீ என்ன செய்யலாம்னு இருக்க?…” என்றார் ருக்மணி.
“ஹ்ம்ம், நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். பார்ப்போம்…” என்றவன்,
“இன்னுமா அக்கா போன் பண்ணலை?…” என கேட்டான்.
“நீ வேறப்பா. நல்லவேளையா நிஷாக்குட்டி போய் மாப்பிள்ளைட்ட சொல்ல போய் பேசாம இருந்தா உன் அக்கா…” என்று சொல்ல,
“ஆமாண்ணா, அப்பாக்கிட்ட நீ பேசினதா அப்பா அம்மாட்ட சொல்லும் போது அக்கா வந்து ஆடிட்டா. அங்க எதுக்கு போறீங்க? என்ன அவசியம்ன்னு சொன்னதுக்கு நீ கூப்பிட்டதா அப்ப சொல்றாரு. அப்ப நானும் கிளம்பறேன்னு நிக்கறா…” என்றவள் அன்று நடந்ததை விளக்கினாள் நிஷா.
வெகு மாதங்களுக்கு பின்னால் சிவசுந்தரத்தின் எண்ணிற்கு அழைத்திருந்தான் கண்ணன். மகனின் எண்ணை பார்த்ததுமே ஒரு நிமிடம் அவருக்கு புரியவில்லை.
“கண்ணா…” என்று எடுத்ததும் அழைக்க,
“எப்படி இருக்கீங்கப்பா?…” என்றவனின் விசாரிப்பில் நெகிழ்ந்து போனார்.
“நான் நல்லா இருக்கேன்ப்பா. நீ எப்படி இருக்க? திருச்சில சேர்ந்துட்டதா மாப்பிள்ளை சொன்னார். எல்லாம் சவுகரியம் தானே?…” என கேட்க அவர் பேசியதை எல்லாம் விட்டவன்,
“இங்க அம்மாவை ஒரு ரெண்டு மூணு நாள் அனுப்பி வைங்கப்பா. எனக்கு ஹெல்ப் தேவைப்படுது…” என்று தனக்கு தேவையானதை சொல்லவுமே இன்னுமே அவனின் கோபம் குறையாமல் இருப்பதை கவனத்தில் கொண்டவர்,
“அப்படியாப்பா. ஹ்ம்ம். சரி அனுப்பி வைக்கறேன்…” என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசுவானா என லைனிலேயே இருக்க,
“கிளம்பும் போது சொல்லுங்க. இப்போ வைக்கறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட சிவசுந்தரம் மனதோ அடித்துக்கொண்டது.
‘ஒரு வார்த்தை தன்னை வா என்று அழைக்கவில்லையே?’ என நினைத்தவர் ஒரு பெருமூச்சுடன் அமர்ந்திருக்க உத்ரா வந்துவிட்டாள்.
“அப்பா, வசூலுக்கு போகலையா? உக்கார்ந்துட்டீங்க?…” என்று வரவுமே அவரின் சிவந்திருந்த கண்களை பார்த்துவிட்டு,
“என்னாச்சுப்பா? என்ன கண்ணெல்லாம் சிவந்து கலங்கி இருக்குது?…”
“ஹாங், ஒண்ணுமில்லம்மா. சரி உங்கம்மாவை கூப்பிடு…” என்று சொல்லவும்,
“என்னவாம் இப்ப? என்னன்னு என்கிட்டே சொல்ல மாட்டீங்களா? இந்த வீட்டுக்கு மூத்த மக நானு. என்னை தாண்டி தான எல்லாம் இப்ப நடக்குது…” என்று பொறும அதற்குள் நிஷாவும் ருக்மணியும் வெளியே வந்தனர்.
அதே நேரம் உத்ராவின் கணவனான வேலவனும் உள்ளே வர அவனை பார்த்ததும் எழுந்துவிட்டாள் உத்ரா.
“என்னங்க, சீக்கிரம் வந்துட்டீங்க? கடையில யார் இருக்கா?…” என்றாள்.
அவன் அங்கே ஒரு ஜெராக்ஸ், ப்ரவுஸிங் செண்டர் வைத்து நடத்திக்கொண்டு இருந்தான்.
“சும்மா தான் வந்தேன். நீ என்ன இங்க இருக்க?…” என்று அவன் வந்து அமர்ந்துகொள்ள,
“வேலை முடிஞ்சது. பாப்பா ட்யூஷன் போய்ட்டா. அதான் இங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்க வந்தேன்…” என்றாள் உத்ரா.
“ஓஹ்…” என்றவன் அங்கேயே அமர்ந்திருக்க நிஷாந்தி தந்தை பக்கம் பார்த்து,
“அப்பா அம்மாவை கூப்பிட்டீங்களா? சத்தம் கேட்டுச்சு கூப்பிட்ட மாதிரி…” என்று சொல்ல,
“ஆமாப்பா, அண்ணே உன் அம்மாவை ரெண்டு நாள் வந்து இருந்துட்டு போக சொல்லிருக்கான். அதான் சொல்ல…” என்று அவர் முழுதாய் முடிக்கவில்லை உத்ரா ஆரம்பித்துவிட்டாள்.
“நினைச்சேன். அவன் அங்க போனதும் இதை தான் செய்வான்னு நினைச்சேன். இப்ப அம்மாவை எதுக்கு கூப்பிடறான்னு நினைக்கறீங்க? அந்த ராங்கிக்காரி அங்க தான இருக்கா? அதான் பேசி கூப்பிடலாம்ன்னு தான்…” என்று ஆட ஆரம்பிக்க,
“அதெல்லாம் இல்லம்மா. அவனுக்கு அங்க வீட்டுல என்ன செய்யனும்னு தெரியலைல. அதன் அவன் அம்மா வந்தா உதவியா இருக்கும்னு நினைக்கான் போல…” என்று மகனுக்கு சாதகமாக பேச,
“அப்பா அப்போ நானும் கூட போறேன். உதவி தான? நான் செய்யறேன் போயி. இவ்வளவு தான?…” என்றுவிட்டாள் உத்ரா.
“நீ அங்க போனா புள்ளைய யாரு பாப்பாங்களாம்? அதுவும் நான் இங்க இருக்கும் போதே என்கிட்டே கேட்காம உன் இஷ்டத்துக்கு போறேன்னு பேசற?…” என்றுவிட்டான் வேலவன்.
“என்னங்க நீங்க பேசறீங்க? அங்க போனா அவளை சமாதானம் செய்யனும்னு தான் அம்மாவை கூப்பிடறான். அவளுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா புருஷன், அவன் வீடுன்னு அனுசரிச்சு இருக்கனும்னு இல்லாம தனியா போயி இருக்கா. அப்படி அவளை நாம தாங்கி கூப்பிடனுமா?…” என சொல்லியவள்,
“நான் இல்லன்னா என்ன? அதான் நிஷா இருக்காள்ல? உங்களுக்கு சமைச்சு குடுத்துடுவா. பாப்பாவை அவ பார்த்துப்பா…” என சொல்லவுமே,
“ஓஓஹோ…” என்று அவன் எழுந்து நிற்க அவன் நின்ற விதமே சரியில்லாமல் இருந்தது மற்றவர்களுக்கு.
“உன் புள்ளைய பெத்தவ உனக்கே அக்கறை இல்ல. அவள பார்க்க சொல்ற? ஆமா நீ என்ன குடும்பத்தோட ஒத்து வாழ்ந்துட்ட? எங்க வீட்டோட அனுசரிச்சு நீ எத்தனை நாள் இருந்தியாம்?…” என்று அவன் கேட்கவுமே உத்ராவிற்கு தூக்கிவாரி போட்டது.
என்றாவது ஒருநாள் தான் வேலவன் இப்படி எல்லாம் பேசுவது. அன்று அப்படி ஒருநாளாக அமைந்துவிட உத்ரா திருதிருவென்று விழித்தாள்.
“ஒரு நல்ல அக்காவா இருந்தா உங்கம்மாவை அனுப்பிட்டு, உங்கப்பாவையும் உன் தங்கச்சியையும் நீ பார்த்துக்கறேன்னு சொல்லனும். அதை விட்டுட்டு எங்க அவங்க சேர்ந்துருவாங்களோன்னு கிளம்பற பாரு. உன் புத்தி இருக்கே…” என்று சொல்ல,
“அவங்க சேர கூடாதுன்னா நான் சொல்றேன். அவ திமிரெடுத்து என் தம்பியை பின்னால சுத்த விட பார்க்கறா…”
“என்ன தப்பு? அவங்க புருஷன் பொண்டாட்டி என்னவும் செய்யட்டும். உனக்கென்ன அதை பத்தி? நீ போக கூடாது. அப்படி கிளம்பின நான் வீட்டை காலி பண்ணிட்டு புள்ளைய கூட்டிட்டு எங்கம்மா வீட்டுக்கு போய்டுவேன்…” என்று சொல்லவும்,