ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 7
இதயா கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே கண்ணனும் கிளம்பி வீட்டிற்கு சென்றான். ருக்மணி சொல்லியே தான் அனுப்பியிருந்தார் நல்ல நேரத்திற்கு எல்லோரும் செல்ல வேண்டும் என்று. இனியாவது நல்லதே நடக்கட்டும் என.
அவன் வீட்டிற்கு வந்து கிளம்பியதுமே தம்பியை அளவிட்டபடி இருந்தவள் அவனும் தங்களுடன் வருவதை போல இருக்க,
“நீ எங்க வர?…” என்றாள் கண்ணனின் முன்னால் வந்து நின்று.
“இதயாவை கூப்பிட…” என அவனும் எரிச்சலுடன் பதில் சொல்ல,
“அவங்க வீட்டுக்கு போய் பேசத்தான் இத்தனை பேர் இருக்கோமே? அப்பறம் நீ எதுக்கு? நீ இப்படி இறங்கி போனா அங்க உன்னை மதிப்பாங்களா?….” என சத்தம் போட,
“நான் பேச போகலை. இதயாவை கூப்பிட போறேன்…” கடுமையுடன் பதில் வந்தது அவனிடம் இருந்து.
“சரி, இருக்கட்டும். ஆனா நீ போய் கூப்பிடாத. நாங்க போய் சொல்லிட்டு வரோம். அவங்களையே கொண்டு வந்து விட சொல்லி. அவ அவங்க வீட்டாளுங்களோட வரட்டும்…” என்று அவனிடம் சொல்ல,
“ம்மா…” என்று கத்தினான் கண்ணன்.
“என்னாச்சுப்பா?…” என ருக்மணி மட்டுமல்லாது சிவசுந்தரம், நிஷா, வேலவன் என மொத்தமாய் வந்துவிட உத்ரா முகம் மாறியது கணவனை கண்டு.
“ம்மா நீங்க எல்லாரும் இங்க இருங்க. நானும் அப்பாவும் மட்டும் போய் பேசி இதயாவை அழைச்சுட்டு வரோம்…” என அவன் சொல்ல,
“ஏன்? என்னாச்சு கண்ணா?…” என்றார் சிவசுந்தரம்.
“அக்காவுக்கு அங்க வர இஷ்டம் இல்லையாம். நானும் போக கூடாதாம். இதயாவா இங்க வரட்டும்னு சொல்றாங்க. அதான் எதுக்கு எல்லாரையும் கட்டாயப்படுத்திட்டு…” என்று கண்ணன் சொல்ல உத்ரா அதிர்ந்து பார்க்க,
“ம்ஹூம், இது சரிப்பட்டு வராது. நீங்க எல்லாரும் கண்ணனை கூட்டிட்டு கிளம்புங்க. நான் இவளை ஊருக்கு பஸ் ஏத்தி அனுப்பிட்டு அந்த புள்ளை வீட்டுக்கு வந்து இவ சார்பா நான் பேசறேன்…” என்று வேலவன் சொல்லவும்,
“இல்ல இல்ல. அதெல்லாம் இல்ல. நான் வரேன். அங்க போய் கண்ணன் இறங்கி போகனுமேன்னு தான்…”
“வாயை மூடிட்டு வரதுன்னா வா. கிளம்பும் போது கரைச்சல் பண்ணின?…” என்ற வேலவன் கண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்று நின்றான்.
இதயா வீட்டை விட்டு போன அன்றோடு கண்ணனின் பேச்சு வேலவன், உத்ராவிடம் முற்றிலும் நின்றது. ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும் நிஷாவை வைத்து தான் பேசிக்கொள்வார்கள்.
உத்ரா தான் விடாமல் அவனை நச்சரித்துக்கொண்டே இருப்பாள். போன் எடுக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் போன் செய்து அவனை இழுத்து பிடிக்கவே பார்ப்பாள்.
அத்தகைய நேரங்களில் அவன் ஓரிரண்டு பதிலுடன் பேச்சை முடித்துக்கொள்வான்.
இப்போதுமே கண்ணன் தந்தையை மட்டுமே வர சொல்லி சொல்ல அதை அறிந்த வேலவன் பிரச்சனைக்கு ஆரம்பப்புள்ளியே உத்ராவாக இருக்கும் போது அந்த காயத்தின் வடுவிற்கு மருந்திடவில்லை என்றாலும் மன்னிப்பையாவது அவள் கேட்கட்டும் என்று உடன் புறப்பட்டு வந்துவிட்டான்.
ஒருவழியாய் உத்ராவின் வாயை அடைத்து கிளம்பி இதயாவின் வீட்டிற்கு வந்து நிற்க அங்கே அதற்கு மேல் யசோதா அவளிடம் போராடிக்கொண்டு நின்றார்.
“வேற நல்ல புடவையா கட்டிக்கோ பூவி. இதென்ன இத்தனை சிம்பிளா ஒரு காட்டன் சேரி?…”
“இல்லை இதுவே போதும்…” என்றுவிட்டாள் அவள்.
“பூ வைக்கலையா? உன் ரூம்ல வச்சேனே?…”
“தலை கனமா இருக்குது. பூ வச்சா இன்னும் முடியாம போய்டும்…”
“சரி இதுக்கு ரெண்டு நகையாச்சும் போட்டுக்கோ. இன்னும் கழுத்துல அந்த ஒத்தை தாலி சங்கிலியோட நிக்கிற? கூட ரெண்டை போட்டா தான நல்லா இருக்கும்?…”
“கழுத்தெல்லாம் நேத்துல இருந்து வலி. எதுவும் வேண்டாம்…”
இப்படி ஒவ்வொன்றிற்கும் அவள் மறுத்து நிற்க மஞ்சுவோ மகள் அய்யாசாமியின் காலை பற்றிக்கொண்டு ‘போய்விடுகிறேன்’ என்று சொல்லியதிலேயே கலங்கி போனார்.
அதனாலேயே மகளை அவள் போக்கில் இருக்கட்டும் என்று யசோதாவிடம் சொல்லிவிட்டார்.
“எல்லாம் சரி, உன் இஷ்டப்படி இப்படியே நில்லு. ஆனா பேசனும்னு சொல்றதை பார்த்து பேசு. அவ்வளோ தான். புகுந்த வீடுனா சிலபல சிக்கல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் சமாளிச்சு எப்படி வாழறோம்ன்றதுல தான் இருக்குது நம்ம புத்திசாலித்தனம்…”
“ஆனாலும் ம்மா, உங்களுக்கு ஒரு அப்பிராணி நாத்தனார் கிடைச்சதால எல்லா பேச்சும் பேசுவீங்க. உங்களுக்கு அந்த வீட்டு மூத்த மக மாதிரி எங்கத்தையும் இருந்திருந்தா இந்த வாய் வேற வாய் தான் இல்லையா?…” என்றாள் தீப்தி.
“உன்னை தான் தேடிட்டு இருந்தேன். அவங்க வந்துட்டு கிளம்பற வரைக்கும் நீ வாயே திறக்க கூடாது…” என்று மகளை மிரட்டியவர்,
“அப்பறம் அடிச்சேன் வச்சேன்னு இவன் என்கிட்டே வந்து நிக்க கூடாது…” என நவீனையும் பார்த்து அதட்டியபடி சொல்லியவர்,
“அவங்க வந்தா நல்லா சிரிக்காட்டியும் கொஞ்சம் சிரிச்ச முகமா இரு. வந்தவங்களை சாப்பிட சொல்லி நீ தான் சொல்லனும். இன்னும் இது இப்படியே போகற உறவு இல்லை. அதனால முகத்தை காட்டாம நல்லவிதமா நடந்துக்கோ…”
இப்படி மொத்த பொறுப்பையும் தன் மேல் ஏற்றிக்கொண்டு பம்பரமாய் சுற்றி வந்தார் யசோதா.
அய்யாசாமி, மஞ்சு, சுதாகரன் மூவருமே எதுவும் பேசவில்லை. களையின்றி எதையோ இழந்ததை போன்ற முகத்துடன் ஓரிடத்தில் புகை படிந்த ஓவியமாய் அமர்ந்திருந்தவளையே பார்த்துக்கொண்டு இருக்க வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே சென்றனர்.
ஏற்கனவே அக்கம்பக்கத்தினர் கண்ணபிரான் வந்து சென்ற பொழுது யார் என்ன என்று கேட்டு தவிர்க்க முடியாமல் மருமகன் என்று சொல்லியிருக்க இப்போதும் வெளியே எட்டி எட்டி பார்த்தபடி இருந்தார்கள்.
வாசலுக்கே சென்று அவர்களை பெரியவர்கள் வரவேற்க வீட்டினுள் நுழையும் பொழுதே அங்கே ஓரத்தில் சிறு மேஜையின் அருகே அமர்ந்திருந்த பூவிதயாவை கண்டுகொண்டது கண்ணனின் விழிகள்.
அவன் எதிர்பார்த்து வந்தது அதிகபட்சம் தான் வரும் போது கோபத்தில் தன்னை பார்வையால் எரித்துவிடுவாள் என நினைத்து.
ஆனால் அப்படி எதுவுமின்றி வெறுமையான விழிகளுடன் அமர்ந்திருந்தவளது தோற்றம் ஒரு நிராதரவான தோற்றம். பார்த்ததுமே மனம் பதைபதைக்க துணுக்குற்று நின்றான்.
‘என்னோடு வருவது அத்தனை கஷ்டமா இதயா உனக்கு?’ என மனதிற்குள்ளேயே அவளிடம் மன்றாடினான்.
“இங்கயே நின்னு பார்த்துட்டு இருந்தா எப்படி? உள்ள போ…” என்ற உத்ராவின் குரலில் தான் உணர்வு திரும்பியது இதயாவிற்கு.
உட்சபட்ச கோபத்துடன் விழிகள் கனலை கக்க பதிலுக்கு உத்ராவும் முறைக்க முயல,
“என்ன பார்வையெல்லாம் மாறுது? பேசாம போய் உட்கார்…” என்ற வேலவனின் அதட்டலில் அமைதியாக சென்று அமர்ந்தாள் அவள்.
“தீப்தி தண்ணி கொண்டு வாம்மா எல்லாருக்கும்…” என யசோதா சொல்ல,
“இப்ப உடம்புக்கு பரவாயில்லைங்களா சம்பந்தி?…” என்று சிவசுந்தரம் அய்யாசாமியின் கையை பிடித்து கேட்டார்.
அதற்குள் தண்ணீரை கொண்டு வந்த தீப்தி அவர்களுக்கு கொடுத்துவிட்டு தள்ளி நின்றுகொண்டாள்.
“இருக்கேங்க, இப்ப பரவாயில்லை…” என்று நலிந்த குரலில் அவரும் சொல்ல மருகி போனார் சிவசுந்தரம்.
“சம்பந்தின்னு சொல்லுங்க சம்பந்தி. உங்க வாயால அதை கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு?…” என்று தானாகவே கேட்க அய்யாசாமி திகைத்து போய் பார்த்தார்.
திருமணத்தை நிறுத்துகிறேன் என்று போனில் பேசிய அன்று சொல்லியது சம்பந்தி என்று.
அதன் பின்னர் இருவருமே அப்படி அழைத்துக்கொல்லாமல் போக இன்றோ உறவை வளர்க்க முன்வந்தார் சிவசுந்தரம்.
இன்னும் ஒரு தயக்கத்துடனே அய்யாசாமி அமைதியாக இருக்க ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றவர்,
“எல்லாரும் மன்னிக்கனும். புத்திகெட்டு போய் கேட்பார் பேச்சை கேட்டு நானும் தப்பு தப்பா முடிவு பண்ணிட்டேன். இப்ப எல்லாத்துக்கும் வருத்தப்பட்டு வந்திருக்கேன். இதுவும் கூட சுயநலம் தான். என் புள்ளைக்காகன்னும் சொல்லிக்கலாம்…” என்று நிற்க,
“அட என்னங்க சம்பந்தி இது? எல்லாருக்கும் முன்ன கை கூப்பிட்டு…” என்று அவரின் கையை பிடித்து இறக்கினார் அய்யாசாமி.
“இல்லைங்க, தப்பு என் பேர்லையும் இருக்குதே. பேராசை, ஒரு மனுஷ தன்மையே இல்லாம நடந்துக்கிட்டது. எது சரி, எது தப்புன்னு யோசிக்காத பக்குவமில்லாம நடந்துக்கிட்டேன். நான் மன்னிப்பு கேட்கறது சரிதானே?…”
“எல்லாம் ஏதோ கெட்ட நேரம்னு நினைச்சுக்குவோம். அவ்வளோ தானே?…” என்று அவரை சமாதானம் செய்த அய்யாசாமியை பார்த்த இதயாவின் பார்வை கண்ணனை தொட்டு மீள,
“இதயா…” என்றழைத்தான் அவன்.
“சொல்லுங்க…” என அவனின் முன்னால் பொம்மை போல வந்து அவள் நிற்க,
“அம்மாடி, முதல்ல உன்கிட்ட நான் நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்ம்மா. எங்களை நம்பி எங்க வீட்டுக்கு வந்த பொண்ணு உன்னை கண்ணீரோட அனுப்பிட்டோம்…” என சொல்ல,
“என்னை யாரும் அனுப்பலை. நானா அங்க வந்தேன். நானா தான் கிளம்பினேன்…” என்றாள் இதயா.
“சரிம்மா, அதுக்கு நாங்க தானே காரணம். இப்ப உங்க வாழ்க்கையை சரி பண்ணி குடுக்கற கடமையும், பொறுப்பும் எங்களுக்கும் இருக்குதும்மா. போனது போகட்டும். எல்லாம் மறந்துட்டு ஒரு நல்ல வாழ்க்கையை ஆரம்பிங்க ரெண்டு பேரும்…” என சிவசுந்தரம் சொல்ல,
“ஆமாம்மா பூவி. நீ திரும்பவும் எங்க வீட்டுக்கு வரனும். அது உன்னோட வீடும்மா. உனக்கு எல்லா உரிமையும் இருக்குது…”
“அது என் வீடா? எப்போ இருந்து அது என் வீடு?…” என்றாள் சற்று இகழ்ச்சியுடன்.
“என்னம்மா இப்படி சொல்ற? எனக்கு இருக்கறது ஒரே புள்ளை. எனக்கப்பறம் அது உங்களுக்கு தானே? என் மருமக நீ, அப்போ அது உன் வீடு தானே?…”
“இல்லை, இல்லவே இல்லை. எப்பவும் அது என் வீடாகவே முடியாது. இப்பவும் ஊர்ல இருக்கற எல்லாரும் கேட்டதால தான வந்திருக்கீங்க. இல்லைன்னா உங்க மகன் நான் வேண்டாம்னு சொன்னா வந்திருக்க மாட்டீங்க…” என்று உறுதியாக அவள் சொல்ல,
“பூவி, என்ன பேசற நீ?…” என யசோதா அவளின் தோளை தட்டி பார்க்க மஞ்சுவும், அய்யாசாமியும் பதட்டத்துடன் பார்த்தனர்.
“அதான் என்னை அனுப்பனும்னு முடிவு பண்ணிட்டீங்களே? நானும் போறேன்னு சொல்லிட்டேனே? ஆனா நான் இன்னொரு நாள் திரும்ப அப்படி வர கூடாதுல. அதான் பேசறேன். அப்போ வந்தப்போ நேரா அம்மா, அப்பா, மாமா, அத்தை எல்லாரும் இருந்தீங்கன்னு உங்களை தேடி வந்தேன். ஆனா…” என்றவள் பெற்றோரை பார்த்துக்கொண்டே,
“இன்னொருதடவை அந்த வீட்டை விட்டு வெளியே வந்தா உங்க யார்க்கிட்டயும் வரமாட்டேன். ஏனா இப்போ எனக்குன்னு யாருமே இல்லைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு…” என்று சொல்ல,
“பூவிக்கா…” என்று நவீனும்,
“அண்ணி, நான் இல்லையா உனக்கு?…” என தீப்தியும் வந்து அவளருகே நின்றுகொண்டனர். ஒரு விரக்தி சிரிப்புடன் அவர்களை பார்த்தவள்,
“நீங்க இருப்பீங்க? இன்னொருதடவை எதையும் தாங்கிக்க நான் இருக்கனுமே? ஏற்கனவே நான் எடுத்த முடிவுன்னு சொல்லி சொல்லியே என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியாச்சு…” என்று சொல்ல கண்ணனின் விழிகள் கலங்கியது.
தொண்டை அடைக்க மனைவியின் பேச்சை ஜீரணிக்க முடியாமல் அவன் அமர்ந்திருக்க ருக்மணிக்கு மகனை பார்க்க பாவமாய் இருந்தது.
“இல்லம்மா, இத்தனை கஷ்டத்தோட நீ வர வேண்டாம். நீங்க ரெண்டு பேருமே அங்க வர வேண்டாம்…” என்ற சிவசுந்தரம்,
“நீ இங்க என் பையனோட சேர்ந்து வாழ்ந்தா போதும்மா. அது எங்கையா இருந்தா என்ன? நாங்க அப்பப்போ வந்து பார்த்துக்கறோம்…” என்றவர்,
“என்ன ருக்கு நான் சொல்றது சரிதான?…” என்றவரின் குரல் அத்தனை தளர்வுடன் இருந்தது.
“சரிதாங்க. அவங்க சந்தோஷமா இருக்கட்டும்…” என்றார் ருக்மணியும்.
அத்தனை பேருமே அங்கே நடந்த சண்டையை கொண்டு அந்த வீட்டிற்கு இதயா செல்ல மறுப்பதாக நினைக்க அவளின் மறுப்பின் ஆழம் என்னவென்று அறிந்திருந்த ஒரே ஜீவன் ருக்மணி மட்டுமே.
மருமகளை இறைஞ்சும் பார்வையுடன் பார்வையாலேயே மன்னிப்பை யாசித்துக்கொண்டு இருந்தார் அவர்.
அதுவே இதயாவை குத்தியது. அன்றும் அவர் இப்படி மகளுக்காக தானே கெஞ்சுதலுடன் நின்றார். அவர் நினைத்திருந்தால் அன்று இதயா அடித்ததற்கான காரணத்தை சொல்லியிருக்கலாமே?
தனக்கு தான் அன்றைய அதிர்ச்சியும், கண்ணனின் அமைதியும் நிலைகுலைய செய்ததென்றால் அவருக்கு என்ன? அவர் சொல்லியிருக்கலாமே நடந்ததை? நினைக்க நினைக்க இன்னுமே இரும்பாய் மாறினாள்.
“அப்ப இதான் உன் நினைப்பா? அதானே பார்த்தேன்?…” என்று அனைவரையும் நக்கலாக பார்த்த உத்ரா,
“பார்த்தீங்களா எப்படி பேசறான்னு?, இவளை போய் சமாதானம் செஞ்சு கூப்பிட வந்திட்டீங்க….” என சொல்லி,
“குடும்பன்னா அப்படி இப்படி தான் இருக்கும். கொஞ்சமும் பொண்ணா மருமகளா வந்தவளுக்கு பொறுமைன்னு ஒன்னு வேண்டாமா? அனுசரிச்சு போனா தான குடும்பம் நல்லா இருக்கும்…” என்று எழுந்து வந்து இதயாவின் முன்னே நின்றுவிட,
“உத்ரா…” என்று வேலவன் கடுமையாக அழைக்க,
“இருங்க பேசிட்டு வந்திடறேன். பேசி தான் தீர்க்கனும். வாழ வர பொண்ணுக்கு புத்தி சொல்லனும்ல. அப்ப தான அவளுக்கும் புரியும்…” என சொல்லி இதயாவை பார்க்க,
“குடும்பத்தை அனுசரிச்சு சகிப்பு தன்மையோட போறது வேற. எதை சகிக்கனும், எதை பொறுக்கனும்னு எனக்கும் புத்தி இருக்குது…” என்ற இதயா,