“ஓஹ், இந்த முடிவு வேறையா உனக்கு? நீயா நினைச்சா பிடிக்குதுன்னு சொல்லுவ. நீயா இப்ப வேண்டாம்ன்னு, ம்ஹூம், வேண்டாம்ன்னா சொன்ன? வேற வரன் பாருங்கன்னு சொல்ற? அப்ப அஷ்வின்…” என்ற மோனிகா,
“ம்மா, கொஞ்சம் பொறுங்க…” என்று முன்னே வந்தான் அஷ்வின்.
அதிரன் யாரையும் பார்க்கவில்லை. மனதில் மகளின் எதிர்காலத்தை நினைத்து தள்ளாட்டம் துவங்கியிருக்க தன் முகமே மனைவி, மக்களின் தைரியத்தை குலைத்துவிடும் என்று முயன்று தன்னை இறுக்கமாய் வைத்துக்கொள்ள முயன்றான்.
விழிகள் கலங்கும் போல் இருந்தது. மேகாவின் கைகளை பிடித்திருந்தவன் விரல்கள் அவள் கரங்களுக்குள் லேசாய் அசைந்துகொண்டிருந்தது நடுக்கத்துடன்.
“நான் ஸ்பூர்த்திட்ட தனியா பேசனும்…” என்று அவளருகே வந்தான் அஷ்வின்.
“இல்லை வேண்டாம்…” அதுவரை பல்லை கடித்தபடி யாருக்கும் பதில் சொல்லமுடியாதென்று நின்றிருந்தவள் இப்போது வாய் திறக்க,
“அதை நீ சொல்ல கூடாது ஸ்பூர்த்தி…” என்ற அஷ்வின்,
“ஜஸ்ட் டூ மினிட்ஸ். பேசிட்டு நான் போய்டறேன்…” என்றான்.
அஷ்வினின் பார்வை அதிரனையும் தொட்டு மீண்டது. இப்போது மாமனின் மனநிலை என்னவென்று தெரியாதளவிற்கு சிறுபிள்ளை அல்லவே.
மனது வலித்தது. அதுவும் சேர்த்து ஸ்பூர்த்தி மேல் கோபத்தை பலமடங்கு கூட்ட அவளின் கையை பிடித்தவன்,
“வா…” என்று அருகிருந்த அலுவலக அறைக்குள் அழைத்து சென்றான்.
கதவை அடைக்கவெல்லாம் இல்லை. ஆனால் அறையின் கடைசி மூளைக்கு கூட்டி சென்றுவிட்டான்.
“மாமா கை வலிக்குது விடுங்க…” என்று அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.
“ஷ், உன்னோட மட்டும் தான் பேசனும்னு வந்தேன். எல்லார் முன்னாடியும் பேசனும்ன்னா எனக்கு நோ அப்ஜெக்ஷன்…” அமைதியாய் அல்லாது எரிமலையை உள்ளடக்கிய விதமாய் அவன் விழிகள் பளபளக்க,
“ஓகே, அங்க ஹாலுக்கு வந்தே பேசுங்க…”
“சூர்…” அஷ்வின் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது.
அவன் பார்வையும், சிரிப்பும் ஸ்பூர்த்திக்கு அபாயமணியை ஒலிக்க செய்ய மிரண்டு பார்த்தாள்.
“மாமா…” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“குட், இப்படித்தான், இந்த சத்தம். இந்த டெசிபல் ஓகே…” என்றவன் விரல்கள் அவள் முகத்தை அழுத்தமாய் பற்றி இருந்தது.
“இருக்கட்டும். எல்லாருக்கும் தெரியட்டும்ன்னு தானே வரன் பார்க்க சொல்லியிருக்க?…” என்றவன்,
“உன்கிட்ட என்ன சொன்னேன்?…”
“எப்போ? எனக்கு தெரியலை?…”
“மேகமலையில் வச்சு என்ன சொன்னேன்…” என்றதுமே ஸ்பூர்த்திக்கு அவன் தன்னிடம் பேசியதும் பேசியவிதமும் ஞாபகம் வர மனதை முயன்று கட்டிபோட்டாள்.
“எனக்கு தெரியாது. ஞாபகமில்லை…”
“யூ…” என்று அவளை இன்னும் அழுத்தமாய் பிடித்தான்.
“என்னை கோபப்படுத்தாத ஸ்பூர்த்தி. என்னைப்பத்தி தெரிஞ்சும் நீ அப்பாட்ட இப்படி பேசியிருக்க. நான் ரொம்ப கண்ட்ரோலா உன்கிட்ட பேசிட்டிருக்கேன்…”
“மாமா தள்ளி நின்னு பேசுங்க…” என அவனின் கையை எடுத்துவிட பலம் கொண்டமட்டும் முயல முடியவில்லை.
“உன்கிட்ட சொல்லும் போதே என் வொய்ப்ன்னு சொன்னேனா இல்லையா? அன்னைக்கு அவ்வளோ பேசிட்டு இப்ப என்ன பண்ணி வச்சிருக்க…” என்றதும்,
“நான் எதுக்கும் சம்மதம் சொல்லலை. உங்க ப்ரப்போசல்க்கு நான் ஓகே பண்ணவும் இல்லை. நீங்க என்கிட்டே சொன்னீங்க. அவ்வளோ தான்…” ஸ்பூர்த்தியும் அவனை போலவே பதில் தர,
“வாவ்…” என்றான் அவளின் முறைப்பில்.
“நான் கிளம்பனும் மாமா…”
“போகலாம் போகலாம். பேசலாம்ன்னு தானே வந்தேன். பேசவே விடாம இப்டி பன்ற?…” என்றவனின் பார்வையை சுத்தமாய் ஸ்பூர்த்தியால் இலகுவாய் கடக்க முடியவில்லை.
“நான் போறேன்…” எங்கே தான் நினைத்ததை போல செய்துவிடுவானோ என பயந்து விலக,
“ஸ்பூர்த்தி நில்லு…”
“ம்ஹூம், எதுவானாலும் வெளில வச்சு பேசுங்க…”
“வெளில எல்லாரும் இருக்காங்கன்னு தான் இங்க பேச வந்திருக்கேன். என்னை பேசவிடு…”
“முடியாது. நீங்க ஹால்ல வச்சு பேசுங்க. இல்லையா எல்லார் முன்னாடியும் இந்த ரூம் வாசல்ல வச்சு பேசுங்க. இப்படி வேண்டாம்…” என தடுமாற்றத்துடன் அவள் சொல்ல மெல்லிய புன்னகை அஷ்வினிடம்.
“ஏன் இங்க என்னோட தனியா இருக்க என்ன பயம்?…” என கேட்க,
“உங்ககிட்ட நான் ஏன் பயப்படனும்?…” என்றாள் வீம்பாய்.
“அப்பறம் ஏன் உன் கழுத்தெல்லாம் வியர்த்திருக்காம்?…” என்றவன்,
“என்கிட்ட என்ன கேட்ட? என்னை பார்த்தா பொண்ணா தெரியலையா? இல்லை கல்யாணம்ன்னு வரப்போ என் ஞாபகம் வரலையா? ரைட்…” என்றவன் முகத்தை கலவரமாய் பார்த்தாள்.
“தெரியாம கேட்டுட்டேன். அது ஒரு வேகத்துல….”
“என்னை பேசவிடு ஸ்பூர்த்தி, இல்லைன்னா நான் நினைக்கிறதை செஞ்சிருவேன். என்னை ப்ரவோக் பண்ணாத…”
“இனிமே கேட்கமாட்டேன். இதை பத்தி நாம பேசறது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்…” அப்போதும் ஸ்பூர்த்தி அவசரமாய் சொல்ல,
“ஓஹ், இஸ் இட்? ஓகே இதோட…”
“எதுவும் வேண்டாம். போறேன்…” என்று அவனை தள்ளிக்கொண்டு விலகியவளிடம் தான் நினைத்ததை நிகழ்த்திவிட்டான் அஷ்வின்.
நொடிநேர திணறலுக்கு பின் அவனின் இதழ்வசத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்ப்பின்றி விழி மூடினாள் ஸ்பூர்த்தி.
மெல்ல அவளிடமிருந்து விடுபட்டவன் முகத்தில் அதுவரை இருந்த பரிதவிப்பு, கோபம், அலைப்புருதல் எல்லாம் வடிய துவங்கியது.
“ஹர்ட் பண்ணிட்டேனா?…” தன் விரல் கொண்டு அவளிதழை வருடியவன்,
“உனக்கு இப்பவும், எப்பவும் நான் மட்டும் தான். செம்ம கோவத்துல வந்தேன். பேச்சோட கிளம்பிருவோம்ன்னு நினைச்சேன். ஆனா ஐ கான்ட். இனி இதுக்கு மேல எதாச்சும் இந்த விஷயத்துல நீ பண்ணின என்னை இன்னும் வேறமாதிரி பார்ப்ப…” என்றான்.
ஸ்பூர்த்தி ஒன்றும் பேசாமல் அவனை இன்னும் திகைப்பு மீளாமல் விழிவிரித்து பார்க்க,
“ஹைய்யோ என்ன இப்படி பார்க்கற பூரிக்குட்டி?…” என்று அவள் கன்னம் பற்றியவன் தன்னோடு அணைத்தான்.
அணைப்போ, தொடுகையோ எதுவும் அவளிடம் இல்லை. லேசாய் மேனி நெகிழ்ந்திருக்க இறுக்கம் தளர்ந்து நின்றிருந்தாள் பெண்.
“இப்ப என் மாமாவை வேற எப்படி நான் பார்ப்பேன்?…” என்று வேறு லேசாய் வெட்க புலம்பலுடன் சொல்ல,
“ஓகே கொஞ்சம் இந்த ஷாக்ல இருந்து வெளில வா…” என்ற அஷ்வின் மீண்டும் அவளை நெருங்க வர அருகில் அலமாரியில் இருந்த பெரிய லெட்ஜரை எடுத்துக்கொண்டாள் கையில்.
“அதான் குடுத்துட்டேனே? ஹவ் ஸ்வீட்…” என்று சொல்லியவன்,
“உன் கண்ணை தாண்டி பார்க்கறதுல எனக்கு எந்த கஷ்டமுமில்லை…” என்றுவிட்டு சிரிப்புடன் வெளியேறியவன் அங்கே கையை பிசைந்தபடி நின்றிருந்தவர்களை கவனித்துவிட்டு அதிரனை கவனமாய் தவிர்த்தவன்,
“தாத்தா, அப்பா ரொம்ப பீல் பண்ணிட்டார். இப்பவே உங்களை எல்லாம் பார்த்துட்டு அப்படியே எனக்கும் ஸ்பூர்த்திக்கும் மேரேஜ் எப்ப வச்சுக்கலாம்ன்னு கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தார். பெரியவங்க நீங்களே பேசிக்கோங்க….” என சொல்ல பல்லவன் வாய் பிளந்தான்.
“இப்ப நான் கிளம்பறேன், ம்மா, கால் பண்ணி என்ன டேட்ன்னு சொல்லிருங்க…” என்ற அஷ்வின்,
“மாமா பை…” என்று கிளம்பிவிட்டான்.
“அஷ்வின் மாமா…” என நந்தன் பின்னால் வர,
“இவன் வேற?…” என வேகமாய் வாசலை தாண்டிவிட்டான் அஷ்வின்.
அத்தனைபேரும் விலகாத அதிர்ச்சியுடன் அப்படியே பார்வையை பல்லவன் பக்கம் திருப்ப திசையறியாத பிள்ளை போல பல்லவன் திருதிருவென்று விழித்தபடி இருந்தான்.