“ஹ்ம்ம், இருக்கட்டும். இருக்கட்டும்…” என்ற மோனிகா,
“ஆனாலும் எனக்கு உன் மேல செம்ம கோவம் தான். உன்னை எவ்வளோ தைரியமா நினைச்சேன்? உன் மாமா கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணி விட்டுக்கவும் நீ என் பிள்ளையை விட்டுட்ட இல்ல? இதுக்கு உனக்கு இருக்கு…” என்று மிரட்டிவிட்டு செல்ல,
“ஓகே டா, கொஞ்ச நேரத்துல வந்திரு. எல்லாரும் வெளில உன்னை தேடும் போது நீ இங்க இருந்தா நல்லா இருக்காது பாரு…” என்றாள் மேகா.
“ஸாரிம்மா…” என தாயின் கையை பிடித்துக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“எதுவானாலும் அம்மாக்கிட்ட, அப்பாக்கிட்ட சொல்லனும். இப்படி கிளம்பி போகனும்னு நினைச்சது தப்பு தான். ஆனா இப்ப எல்லாம் சால்வ் ஆகிடும். இனி இப்படி பண்ணாத ஸ்பூர்த்தி…” மேகா சொல்லவும் அமைதியாய் இருந்தாள் ஸ்பூர்த்தி.
“எனக்கு புரியுது என் அண்ணாவோட மனசும், உன் மனசும். ஆனா நாம இதை செஞ்சா இது நடந்திரும்ன்னு நினைக்க கூடாது ஸ்பூர்த்திம்மா. எது நடக்கணுமோ அதுதான் நடக்கும். புரியுதா?…” மேகா பேச பேச மோனிக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“இப்படி இதை பேச உனக்கு இத்தனை வருஷமாகியிருக்கு…” என்று கிண்டல் செய்த மோனிகா,
“உன் அம்மா கதையெல்லாம் வேற. நீயாவது தைரியமா இந்த முடிவுக்கு வந்த. ஆனா வரு…” என்று மோனிகா பேச,
“அண்ணி போதும். வாங்க வாங்க…” என்று இழுத்துக்கொண்டு சென்றாள் மேகா.
அவர்கள் இருவரும் செல்லுகையில் கதவை சாற்றிவிட்டு செல்ல தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள் ஸ்பூர்த்தி.
அஷ்வின் செய்துவைத்ததில் அங்கமெல்லாம் சிவந்திருக்க என்னவோ யாரையும் எதிர்நோக்க முடியாமல் இருந்தவளுக்கு சற்றே ஒரு ஆசுவாசம்.
இப்படி தாயும் அத்தையும் வராமல் இருந்திருந்தால் இன்னமும் இந்த அறைக்குள்ளேயே தான் இருந்திருப்போம் என்பதில் அத்தனை திண்ணம்.
அந்த மேஜையில் தான் அஷ்வினை அடிக்க எடுத்து வைத்த லெட்ஜாரில் ஒரு குட்டு வைத்தவள்,
“இன்னொருதடவை இப்படி கிட்ட வர ட்ரை பண்ணுங்க. அப்பறம் இருக்கு உங்களுக்கு…” என மீண்டும் அழுத்தமாய் இரண்டு முறை குட்டு வைத்தாள்.
அதே நேரம் பல்லவனை நினைத்து மனதிற்குள் கலக்கம். அதிலும் அஷ்வின் மீது தான் கோபம்.
இப்படி கோர்த்துவிட்டுவிட்டு சென்றுவிட்டானே என்று. இதனை தன் தாய்மாமன் எப்படி சமாளித்திருப்பானோ என்று இருந்தது கவலையாய்.
அதற்குள் அந்த அறையின் தொலைபேசி அழைப்பு சப்தமிட இந்த நேரம் இதில் யார் அழைப்பார்கள் என்று எடுத்து காதில் வைத்தவள் பேசும் முன்,
“ஸ்பூர்த்தி…” என்றது அஷ்வின் குரல்.
மீண்டும் மொத்த உயிரணுவும் ஒட்டுமொத்தமாய் ஆர்ப்பரிப்புடன் காதோரம் குடிவர அவனின் குரல் அவளுள் மாயம் புரிந்தது.
பதில் பேசாமல் ரிசீவரை காதிலேயே வைத்திருந்தவள் மூச்சுக்காற்று மற்றும் அதில் மோதி அவனிடத்தில் சென்று நிற்க,
“என்ன பூரிக்குட்டிக்கு இன்னும் மூச்சு வாங்குதா? நான் அப்பவே கிளம்பிட்டேனே?…” என்றான் விஷமமாய்.
“மாமா ஸ்டாப் இட்…” என்றாள் உடனே ஸ்பூர்த்தி.
“மாமா தான் சொல்லு…” என்றவன் ரகசிய சிரிப்பு இவளிடம் அடைக்கலம் புக,
“உன்னால இதை அடாப் பண்ண முடியலைன்னு சொல்லு. சூட்டாகலைன்னு சொல்லாத…”
“மாமா…” ஸ்பூர்த்தி பல்லை கடிக்க,
“உனக்கு டவுட் தானே? நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கிட்டையும் எப்படி இருப்பேன்? இப்படித்தான் முறைப்பா லவுடா பேசுவேனோன்னு ரொம்ப கவலைப்பட்ட. இப்ப என்னன்னா பேசாதீங்கன்னு சொல்ற?…”
“பல்லவன் மாமா பாவம்…” என்று பேச்சை மாற்றினாள்.
“வித்தவுட் யு. ஐம் நத்திங் ஸ்பூர்த்தி. உன்னோட எல்லா தடுமாற்றத்துக்கும், முடிவுக்கும் என்னோட ஒரே பதில்….”
“மாமா…” ஸ்பூர்த்திக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“முடிஞ்சா என் அப்பாக்கிட்ட சொன்னதை என்கிட்டே சொல்ல ட்ரை பண்ணேன். பார்க்கலாம்…” என்று சவாலாய் சொல்லியவன் முன்னால் திமிர்ந்து நிற்க தான் தோன்றியது ஸ்பூர்த்திக்கு.
முடியாதா? என்னால் முடியாதா? சொல்லிவிட்டால் என்ன? என்று நினைத்தவளுக்கு அதனை செயல்படுத்தும் வேகம்.
“சொல்லிட்டா?…”
“கொஞ்ச நேரத்துல நேர்ல வரேன். இதே க்ரிப்போட இரு. நான் வரவும் சொல்லு…” என்று அழைப்பை வைத்துவிட்டான் அஷ்வின்.
ஸ்பூர்த்தி அப்படியே அமர்ந்துவிட்டாள். சொல்லியதை போல அஷ்வினும் அடுத்த கால்மணி நேரத்தில் வந்து சேர்ந்தான்.
மோனிகா அழைக்கவுமே கிளம்பிவிட்டவன் வரும் வழியில் ஸ்பூர்த்தியிடமும் பேச இப்போது மீண்டும் ஒரு விளையாட்டு.
அஷ்வினுக்கு இது பிடித்தது. அவனுக்கு அத்தனை நிச்சயம் தன்னிடம் அந்த வார்த்தைகள் அவளால் சொல்லிவிட முடியாது என்று.
வீம்பிற்கு பேசும் அவனின் உயிரான பெண்ணின் மனதின் ஆழம் அறிந்திருந்தான் அஷ்வின்.
இதோ வந்துவிட்டு ஸ்பூர்த்தி இருந்த கதவை திறந்து உள்ளே வராமல் வாசலில் நிற்க ஸ்பூர்த்தி அமர்ந்தவாக்கிலேயே திரும்பி பார்த்தாள் அவனை.
“சொல்லு ஸ்பூர்த்தி…” என்று தலையசைத்து அவன் கேட்டான்.
அதுவரை உருபோட்டுக்கொண்டிருந்த வார்த்தைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட அதுவும் அவன் மீதான கோபத்தை தான் கூட்டியது.
“உங்க இஷ்டத்துக்கெல்லாம் என்னால சொல்ல முடியாது. அதை மாமாக்கிட்டையே கேட்டுக்கோங்க…” என்றாள் உடனே.
“ஹவ் ஸ்வீட்?…” என்றவன் முகம் சிரிப்பில் மலர சுதாரித்தாள் ஸ்பூர்த்தி.
அவன் உள்ளே வருவான் போலிருக்க சட்டென எழுந்து அறையைவிட்டு வெளியேற வர அவளுக்கு வழிவிட்டு நின்றான் முகம்கொள்ளா புன்னகையுடன்.
அவனை தாண்டிக்கொண்டு வேகமாய் ஹாலுக்கு செல்ல அங்கே வீட்டினர் மொத்தபேரும் இவர்கள் இருவரையும் தான் பார்த்தனர்.
முன்னால் ஸ்பூர்த்தி கையில் அந்த லெட்ஜருடன் வர அவளை தொடர்ந்து ஒருவித சந்தோஷ நடையுடன் அஷ்வின்.
வந்தவள் பார்வை பல்லவனை தான் கவனித்தது. மனதிற்கு பூகம்பம். இன்னும் பல்லவன் முகத்தில் பெரிதாய் தெளிவில்லை.
ஆனால் அமைதியாய் பேசியபடி அமர்ந்திருந்தவன் தன்னையே பார்க்க மனதிற்குள் தவிப்பாய் அலைகள். அருகே வந்துவிட்டவளிடம்,
“என்னம்மா எப்படி இருக்க?…” என்று செல்வம் கேட்க,
“நல்லாயிருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க?…” என்றாள்.
செல்வத்தின் பேச்சில் திசை திரும்பியவள் ஒரு வேகத்தில் யோசிக்காமல் பல்லவன் அருகே அமர்ந்துகொள்ள அஷ்வினும் ‘நான் என் மாமாவோட உக்கார்ந்துக்கறேன்’ என்பதை போல பார்த்தவன் அதிரன் அருகே சென்று அமர்ந்துகொண்டான்.
அமர்ந்ததோடில்லாமல் ஸ்பூர்த்தியை பார்த்தபடி இருந்த சிரிப்போடு அஷ்வின் அதிரனிடம் திரும்ப அருகிருந்த அதிரன் பார்வையில் பக்கென்றானது.
‘அச்சோ மாமா, போச்சு’ என்று மானசீகமாக தலையில் கைவைத்துவிட்டான் அஷ்வின்.