“குட், இவங்களை மாதிரி இவங்க அப்படி எல்லாம் இல்லை. கேரிங் பெர்சனாலிட்டி எல்லாருக்குள்ளையும் இருக்கும். என்னை பார்த்தே நீ வளரும் போது உன்னையறியாம சில விஷயங்கள் உனக்குள்ள ஊடுருவும். இது நேச்சர்….”
“ப்பா…” ஸ்பூர்த்தி சிரிக்க,
“எஸ் ப்பா, அவன் உங்களுக்கு முன்னாடியே என்னை பார்த்தவன். என்னை பிடிச்சவன். அப்படி இருக்கறதுல ஆச்சர்யமில்லை. அப்படி இருந்தாலும் அவனுக்கான இயற்கையான குணங்கள் மாறாது…”
“அது என்னவோ உண்மை. எவ்வளோ கோவம் வருது…” என்று சொல்ல,
“ஓகே, நீ போய் தூங்கு…”
“ஏன்ப்பா விரட்டறீங்க? கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கேனே?…”
“சரி இரு…” என்று சொல்லவும் ஸ்பூர்த்தியும் தனக்கு செய்த அலங்காரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க கேட்டபடி அதிரனும் அமர்ந்திருந்தான்.
“சாப்பிட வரலையா நீங்க?…” என மேகா வந்துவிட,
“உட்கார் மேகா. ஸ்பூர்த்தி பேசிட்டிருக்கா…” என்று சொல்ல,
“டைம் என்ன? தூங்க வேண்டாமா?…” என அடுத்ததாய் அதட்டல் மேகாவிடம்.
“ம்மா, நான் தான் அப்பாவோட பேசிட்டிருந்தேன். இப்ப என்ன?…” ஸ்பூர்த்தி முறைக்க,
“என்னவா? அப்பா கச்சேரி, ட்ராவல் முடிச்சு கிளம்பி வந்திருக்காங்க. ரெஸ்ட் வேணுமே?…” என்றதும் தான் ஸ்பூர்த்திக்குமே நியாபகம் வந்தது.
“ஆமா, நானே மறந்துட்டேன்…” என்றவள்,
“ஓகே அப்பா வாங்க சாப்பிடுவோம்…” என அழைத்து சென்று உண்டுமுடித்து மாடிக்கு சென்றுவிட அதிரன் முகத்தில் யோசனை.
“என்னங்க, ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க? முகமே சரியில்லையே?…” என கேட்கவும் மென்மையாய் புன்னகைத்தவன்,
“நத்திங் டா மேகா. தூங்கி எழுந்தா சரியாகிடும்…” என்று அவளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்து செல்ல மேகாவிற்கு என்னவோ என்றானது.
அதிரன் சொல்லவில்லை என்றாலும் என்னவாக இருக்கும் என்று மேகாவிற்குள் சிறு தவிப்பு.
முடிந்தளவு எந்தவித சஞ்சலங்கலும் இன்றி திருமணம் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.
ஏற்கனவே தனது பெரியப்பா பரமசிவம் இந்த திருமண ஏற்பாட்டிலும் பிரச்சனை செய்திருந்தார்.
இந்த திருமணம் பற்றி செல்வத்தின் மூலம் விஷயம் கேள்விப்பட்டு இதனை நேரில் சொல்ல வந்த அமுதனிடமும், பல்லவனிடமும் எகிறியிருந்தார்.
“மகனுக்கு லவ்வுன்னு எவளையோ கட்டி வச்ச. போகுதுன்னு பார்த்தா மகளையும் எவனோ பார்த்தான்னு கேட்டான்னு நடிகனுக்கு கட்டி குடுத்த. சரி உன் பேரனுக்காச்சும் நம்ம சொந்தத்துல பொண்ணை பார்த்து சொந்தம் விட்டு போகாம முடிச்சு வைப்பன்னு நினச்சா இப்பவும் அந்த குடும்பத்துள்ள தான் போய் விழற…”
“சும்மாவே இவன் மகன் நம்ம பக்க மனுஷங்களோட ஒட்டவே மாட்டான். அவனும் அவங்க பக்கம் பாட்டு, கச்சேரின்னு ஆட்டம் போட்டு தொழில்ன்னு அதுக்குள்ள விழுந்துட்டான். இப்ப அந்த குடும்பத்து பொண்ணயும் கட்டி மொத்தமா அவங்க பக்கமே போய்டுங்க…”
“பணம் அம்புட்டு ஆட்டி வைக்குதா உன்னை? இப்படி போய் அங்கயே சம்பந்தம் பண்ணன்னு. அப்ப சொந்தம்ன்னு வேண்டாம் இல்லையா?…” என்று முன்பே பேசிவிட்டார்.
“என்னவோ கெட்டு ஒழிங்க. எனக்கு இஷ்டமில்லை. நான் வரமாட்டேன். வீட்டுல பிள்ளைங்க வந்தா அவங்க இஷ்டம். இந்த கன்றாவியை பார்க்க எனக்கென்ன தலையெழுத்தா?…” என்று சொல்லிவிட்டிருந்தார்.
“எங்களுக்கும் உங்களை கூப்பிடனும்னு ஒரு அவசியமும் இல்லை. உங்க புத்தி தெரிஞ்சு தான் சொன்னேன் வேண்டாம்ன்னு. செல்வம் பெரியப்பா தான் மூத்தவர், மரியாதை அது இதுன்னு கூட்டிட்டு வந்துட்டார். நீங்க வராம இருந்தா ரொம்ப நல்லது…” என்று பல்லவனும் பேசிவிட்டான்.
“பல்லவா பொறுமையா இருப்பா…” என்ற செல்வம்,
“நான் தான் சொன்னேன்ல, இப்படி பேச கூடாதுன்னு. ஏன் ண்ணே இப்படி பன்றீங்க?…” என செல்வம் கேட்க,
“அண்ணே, வாங்க போகலாம். இத்தனை வருஷம் கழிச்சாச்சும் இவர் மனசு மாறியிருக்கும்ன்னு பார்த்தா அதுவுமில்லை. என் தப்பு தான். என் பிள்ளையை கூட்டிட்டு வந்து இந்த அவமானம் தேவை தான்…” என்று அமுதினியன் சொல்லிவிட்டு பரமசிவத்திடம் பேச கூட இல்லை.
“எல்லாரும் சேர்ந்து என் சொத்தை பிடுங்கிட்டு பிச்சாத்து காச குடுத்து ஏமாத்தி வீட்டை பிடுங்கியாச்சு. அதுக்கே நல்லா இருப்பீங்களா? இப்ப இந்த கஷ்டம் எல்லாம் உங்களால….” என பரமசிவம் தூற்றிக்கொண்டே இருந்தார்.
“நாய் வாலை நிமிர்த்த முடியாது. வாங்கப்பா போகலாம்…” என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் பல்லவன்.
அதனை மலரின் மூலம் மேகா அறிந்திருந்தாள். அவர்களிடம் எந்தவித நல்லதையும் எதிர்பார்க்க முடியாதென்று தனக்குமே தெரியுமே?
இப்போது கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருந்தாலும் அதில் என்னவோ குறைவதை போலவே இருந்தது அதிரன், மற்றும் அஷ்வின் முகத்தை பார்க்கையில்.
எதுவாக இருந்தாலும் எந்தவித இடைஞ்சலும் இன்றி, மனதில் சந்தோஷத்தோடு இந்த திருமணம் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.
ஒரு வாரம் என்றிருந்த திருமணம் ஸ்பூர்த்தியும் வந்துவிட்டதில் கடகடவென்று நாட்கள் ஓடி இதோ விடிந்தால் திருமணம் என்று வந்து நின்றது.
அன்று காலையிலிருந்து மண்டபம் வந்ததிலிருந்தே பரபரப்பு. நெருங்கிய உறவுகள் மட்டுமே. அதுவும் மிக சொற்பமே அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒருவாரம் கழித்து வரவேற்பு என்று முடிவு செய்திருக்க திருமணத்தன்று கோவில்களில் ஸ்பூர்த்தி, அஷ்வின் பெயரில் பூஜைகளுக்கும் சொல்லிவைத்தாகிற்று.
அவற்றையும் பொறுப்பாய் செல்வத்திடமே ஒப்படைத்திருக்க அவர் ஏற்பாடுகளை கவனித்துவிட்டார்.
இரவு உணவும் சிறப்பாக முடிந்து விருந்தினர்கள் அனைவரும் உறங்க சென்றாகிவிட்டது.
தன் அறையில் படுத்திருந்த ஸ்பூர்த்திக்கு உறக்கம் வராமல் தன் விரலில் அஷ்வின் அணிவித்த மோதிரத்தை பார்த்தபடியே படுத்திருந்தாள்.
இதழ்களில் உறைந்திருந்த புன்னகை அவள் மனதின் ஆர்ப்பரித்து சந்தோஷத்தை சொல்லியது.
என்னவோ சத்தமாய் சிரிக்கவேண்டும் என்னும் ஒரு பேராசை அவளை பிடித்து தள்ளியது.
அறையில் யாருமின்றி அவள் மட்டுமே. பொத்தி வைத்திருந்த நேசம் மொட்டுவிட்ட நேரமும் சரி, அதனை வெளிப்படுத்திய நேரமும் சரி அவளுக்கு உவப்பானதாய் இல்லை.
இல்லை, இல்லை. இதற்கு வாய்ப்பில்லை என்று அவள் நினைத்து தனித்திருக்க அவளுக்கெனவே அவள் வாழ்க்கையாய் தன் வாழ்க்கையை வாழ அவன் காத்திருந்ததை எதிர்பார்க்கவே இல்லை.
நம்பாமல், நம்ப முடியாமல், நம்புவதற்கு ஏதுவான முன்னனுபவங்கள் ஏதுமின்றி தடுமாறி இருந்தவளின் மனது அவனை உணர்ந்தும் ஏற்க முடியாத சூழல் என்று அவளை காலம் பந்தாடியது உறவை கொண்டு.
எல்லாம் முடிந்தது. இனி சந்தோஷம் மட்டுமே நிச்சயம். அஷ்வினை நினைக்க உள்ளுக்குள் குறுகுறுப்பு.
“இனி மாமாவை எப்படி சமாளிக்க போறோம்?…” என்று நினைத்தவள் அப்போதே அவனை பார்க்கவேண்டும் என்று தோன்ற அதனை அப்படியே அடக்கி வைத்தாள்.
ஆசைகொண்ட மனது அடங்குவேனா என்றது. அந்த அறைக்குள் இருக்கமுடியவில்லை.
கண்ணாடியின் முன்னிருந்த மேஜையில் மறுநாளைக்கான உடைகள், நகைகள் என்றிருக்க பார்த்தவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
சந்தோஷத்தில் நெஞ்சை பிசைய கண்ணீர் வேறு கண்ணிலிருந்து காரணமின்றி உருண்டுகொண்டிருந்தது.
“அச்சோ, என்ன நான் அழறேனா?…” என கண்ணை துடைத்துக்கொண்டாள்.
தனியாக ஓய்வெடுக்கட்டும் என்று யாரும் உடன் இருக்காமல் சென்றிருக்க இப்போது அந்த தனிமையே அவளின் அதீத சந்தோஷத்தை வைத்து உயிரை தின்றது.
மூச்சு முட்டுவதை போலிருக்க அதற்கு மேல் அறையில் அடைந்திருக்க முடியாமல் வெளியேறி மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள்.
குளிர்ந்த காற்று முகத்தில் அறைந்ததும் நட்சத்திர கூட்டங்களோடு மின்னிய வானத்தை நிமிர்ந்து பார்த்தவள் லேசாய் ஓஓ என்று கூச்சலிட்டாள்.
அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை. மீண்டும் கண்ணீர். கையிலிருந்த மோதிரத்திற்கு அழுத்தமாய் கண்ணீருடன் ஒரு முத்தம் வைக்க,
“எனக்கே குடுத்த மாதிரியா ஸ்பூர்த்தி?…” என்றவனின் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப அங்கே அஷ்வின்.
“மாமா…” என திகைத்தவளை நோக்கி புன்னகையுடன் வந்தான்.
“இங்க என்ன பன்ற ஸ்பூர்த்தி? அதுவும் இந்த நேரம் கல்யாண பொண்ணு?…” என அவளின் முகம் பார்த்து லேசாய் குனிந்து கேட்க,