“என்னடாம்மா சேரி எல்லாம்? அதுவும் காலையிலையே?…” என்று காதோரம் குறுகுறுப்பை மூட்ட,
“இப்படித்தான் கேட்பீங்களா? நான் பார்த்ததும் கேட்பீங்கன்னு நினைச்சேன். இல்லவே இல்லை. ஏன் கேட்கலை?…” என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
“ப்ச், இப்ப என்ன உனக்கு? எப்ப கேட்டா என்ன? அதான் கேட்டுட்டேனே? கொஞ்ச நேரம் சும்மாயிருக்கமாட்ட….” என்று அஷ்வின் கோபத்துடன் சத்தமாய் சொல்ல அசைவற்று போனாள்.
ஸ்பூர்த்தியின் அதிர்ச்சியில் அஷ்வினின் முகம் சிரிப்பில் மூழ்க திகைத்தவள் விழிகளில் முத்தமிட்டான்.
“என்ன பயந்துட்டியா ஸ்பூர்த்தி?…” என்று கேட்கவும் தான் அவளுக்கு தெளிவே வந்தது.
அதற்குள் விழிகள் லேசாய் கலங்கிவிட்டிருந்தது. திடீரென அவன் திட்டியதை போலிருக்கவும் தன்னைப்போல வார்த்தைகளை மறந்து போனாள்.
“கோவமில்லையா?…” என அவன் முகத்தை கவனித்து கேட்க,
“இல்லைடா, சும்மா விளையாட்டுக்கு…” என்று சொல்லவும் அதுவரை அவன் கைகளுக்குள் இருந்தவள் தள்ளிக்கொண்டு எழுந்துவர முற்பட அவனிடம் முடியவில்லை.
வலிமையான கரங்கள் மொத்தமாய் சிறையிட்டிருக்க அவற்றை விடுவித்து வரமுடியாமல் அப்படியே தலையணையில் சாய்ந்துவிட்டாள்.
“ஒருநிமிஷம் என்னாச்சோன்னு பயந்துட்டேன். இப்படியா என்னை படுத்துவீங்க? போங்க மாமா…” என்று முகம் திருப்பிக்கொள்ள,
“அடடா, எனக்கு அப்படியே நீயும் பயந்து நடுங்கி, நான் தான் பார்த்தேனே?…”
“என்ன பார்த்தீங்க? எங்க சொல்லுங்க….”
“நேத்து…” என்று கண்சிமிட்டியவன்,
“எங்க பயந்த நீ, எனக்கு தான் பயம். உன்னை ஹர்ட் பண்ணிடுவேனோன்னு….”
“அச்சோ மாமா, பேசாதீங்க. பேசாதீங்க…” என்று நாணத்துடன் சொல்ல,
“கேளு, நீ தானே கேட்ட….” என்று அவளிடம் வம்பிழுத்தவன்,
“சொல்லு, என்ன இப்ப அதுவும் இந்த நேரமே சேரி கட்டி அசைத்தற? பின்ன வெளில வாங்கன்னு வேற கூப்பிடற?…” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து.
“என்ன ஸ்பூர்த்தி ஹஸ்பன்ட் மாதிரி இருக்கேனா? உனக்கு அதுல நிறைய டவுட் இருந்துச்சே. வொய்ப்ன்னு வரப்போ இந்த மாமா சிடுமூஞ்சியாவே இருப்பேனோன்னு…” என்று அவளை பேசவிடாமல் தன் போக்கில் தான் சென்றுகொண்டிருந்தான்.
அவன் முத்த கோலத்தில் வார்த்தைகளின்றி கண்மூடி திளைத்திருந்தவள் பேச்சுக்களுக்கு விடுப்பு கொடுத்திருந்தாளே?
ஸ்பூர்த்தி, பூரிக்குட்டி என்று அவளின் பெயரை ஸ்வரம் போல அவன் உச்சரிக்க அவனின் இசைவுக்கேற்ப அஷ்வின் கைகளில் ஸ்வரம் தான் மீட்டினாள் ஸ்பூர்த்தி.
கன்னங்கள் கன்றி போக மென்மைகள் மெல்ல மெல்ல தன் வலிமையிழக்க மீண்டும் அஷ்வினின் ஆளுமை.
ஒருபக்கமாய் சயனித்திருந்தவளை தட்டி எழுப்பியவன் நீட்டிய காபியின் வாசத்தின் கண் திறந்தாள் ஸ்பூர்த்தி.
“குட்மார்னிங் மாமா…” என்று சொல்ல அஷ்வினுக்கு சிரிப்பு தான் வந்தது.
“குட் ஆஃப்டர் நூன் ஸ்பூர்த்தி…” என்று எதிரே அமர்ந்தான்.
“என்ன?…” என்று நேரத்தை பார்த்தவள் அது பதினோன்றை காட்ட திகைத்து போனாள்.
“அப்ப நான் எழுந்து, குளிச்சு, சேரி மாத்தி உங்களை எழுப்பி. எல்லாம் கனவா?…” என்று ஒரு நொடி உறக்க கலக்கத்தில் குழம்பியே விட்டாள். அடக்கமாட்டாமல் சிரித்த அஷ்வின்,
“யார் சொன்னா கனவுன்னு? திரும்ப உன்னை தூங்க வச்சிட்டேன்…” என்று அவன் சிரிக்க,
“இவ்வளோ நேரம் தூங்கிட்டேனா?…”
“ஹ்ம்ம், காபி குடி…” என்று அவளருகே அமர்ந்தான்.
“பிரஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வரட்டா?…” என்றவள்,
“சூடாறிடுமே?…” என காபியை வாங்கிக்கொண்டாள்.
“ஹ்ம்ம், அம்மா காபி ஒரு டேஸ்ட்னா பாட்டியோட காபி இன்னொரு டேஸ்ட். சுபா பாட்டி கூட சொல்லுவாங்க. மலர் மாதிரி காபி போடனும்னு…” என்று சில்லாகித்து குடித்தவள்,