அன்றைய தலைப்பு செய்தியாக மிக பரபரப்பான செய்தி டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து. முன்னாள் அமைச்சர் வேதநாயகம் உட்பட சிலர் விபத்தில் உயிர்பலி.
சிறையினுள் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
தீவிபத்து மின்சார கசிவினால் உண்டானதா இல்லை சதி செயலா, வேறு காரணங்களா என காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தொடர்பில் இருங்கள் என்று செய்தியறிக்கை அங்கே வாசிக்கப்பட்டுக்கொண்டும் கூடுதலாக சிறைசாலையிலிருந்து வெளியே செய்தி தொடர்பாளர்கள் பேசிக்கொண்டும் இருந்தனர்.
ஸ்பூர்த்தி இமைக்க மறந்து அதனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் நினைத்ததொன்று. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று.
இப்படி நடக்கும் என நினைக்கவே இல்லை. ஆனால் இதழோரம் ஒரு இகழ்ச்சி புன்னகை ஒட்டிக்கொண்டது.
எந்த தீயினால் ஸ்பூர்த்தியின் பார்வை வட்டத்திற்குள் வேதநாயகம் வந்தாரோ இன்று அதே தீயினால் அவரின் வாழ்வும் முடிந்துபோனது.
நிச்சயம் இதன் பின்னணி பெரிது தான். இனி அவர்களுக்குள் அடித்துக்கொள்ளத்தான் போகிறார்கள்.
வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவளிடம் அதனைப்பற்றி அதிரன் கேட்க,
“யோசிக்காம முடிவு பண்ணலைப்பா. ரொம்ப தெளிவா தான் முடிவெடுத்தேன். ஜாப்ல இருந்து வேற என்ன பண்ணிட்டேன்? பார்க்கலாம் அடுத்து என்னன்னு ஒரு யோசனை இருக்கு…” என்று சொல்ல அதிரன் அமைதியாகிவிட்டான்.
“அஷ்வினுக்கு என்ன பதில் சொல்லுவ நீ?…” என்ற மேகாவிடமும் அதே பதில் தான்.
“முதல்ல என்னோட மாமாவுக்கு நினைவு வரட்டும். அன்னைக்கு சமாளிக்கலாம். நான் சொன்னா மாமா புரிஞ்சுப்பாங்க…” என்றவளுக்குள்ளும் அத்தனை நடுக்கம்.
எத்தனை சொல்லி இந்த படிப்பும், வேலையையும் அவன் பார்த்தான். பின்வாங்ககூடாது என்று அவ்வளவு அறிவுரை.
இப்போது தன்னுடைய செயல் பின்வாங்கியதை போலல்லவா அமைந்துவிட்டது என்று தோன்றியதென்னவோ ஒரு நொடி தான்.
“இல்லை, நான் பின்வாங்கவில்லை. இப்போது தான் முன்பைவிட அவர்கள் முன் பலத்துடன் நிற்கிறேன்…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
அஷ்வின் இப்போது மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட கீழறையில் தான் அவன் இருந்தான்.
ஒருவித தனிமையுடன் அவன் வாழ ஸ்பூர்த்தியும் அங்கே தான் தன்னிருப்பை இருத்தினாள்.
“இங்க ஏன் நீ இருக்க? வீட்டுக்கு போகலையா?…” என அங்கே வந்து ஒருவாரமானதும் அவனிடமிருந்து அம்பென தைத்தது கேள்வி.
“இங்க என்ன வேற ஆளே இல்லையா? அம்மா மட்டும் என்ன பன்றாங்க? நேரத்துக்கு இந்த டேப்லெட் எடுத்து போட்டுக்க முடியாதா என்னால? கிளம்பு முதல்ல…” என இரக்கமற்று விரட்டத்தான் செய்தான் அஷ்வின்.
“டேய், நான் தான் ஸ்பூர்த்தி இருந்தா எனக்கும் ஆறுதலா இருக்கட்டும்ன்னு சொல்லிருக்கேன். உனக்கென்ன?…” என மோனிகா கேட்டுவிட,
“ம்மா, அவளுக்கு வேலை இல்லையா? அதை பார்க்க போக வேண்டாமா?…” பதிலுக்கு அவன் பேசும் பொழுதே ஸ்பூர்த்தி மோனிகாவை அழைத்துக்கொண்டு வந்துவிடுவாள்.
எங்கே திருமணமாகிவிட்டது, கணவன் வீட்டிற்கு செல்லவில்லையா என கேட்டுவிடுவானோ என அத்தனை துடிப்பு.
வார்த்தைக்கு கூட வேறு எவரையும் சொல்ல முடியவில்லை அவளுக்கு. மற்றவர்களுக்கு அப்படியே.
பொய்யாய் கூட ஒருவனை அரூபமாய் கொண்டுவர அங்கே யாருக்கும் விருப்பமில்லை.
அஷ்வின் கேட்காதவரை சந்தோஷம். ஆனால் கேட்டுவிடும் எந்தவித வாய்ப்பையும் தர கூடாதென்று நினைக்க அந்த சோதனையை அவன் தரவே இல்லை.
வீட்டிற்கு வந்து மூன்று வாரங்களாகிற்று. உண்ண, உறங்க, எதையாவது இசைத்து பார்க்க, பழைய பாடல்களை கேட்க என்று இருந்தான்.
அவனுக்கான அத்தனை வேலைகளிலும் ஸ்பூர்த்தி தன்னை தானே இணைத்துக்கொள்ள சலனமற்று பார்ப்பான், முறைப்பானே தவிர வேறு எந்தவித பிரதிபலிப்பும் இல்லை.
“டாக்டர் தான் யோசிக்க கூடாதுன்னா இவனும் செவனேன்னு இருக்கானே? கொஞ்சமாச்சும் யோசிச்சா தானே ஞாபகம் வரும்…” என மோனிகா புலம்பினாலும் மகன் தலைவலி என்று லேசாய் முகம் சுருக்கிவிட்டால் போதும்.
அத்தனை பதறிவிடுவாள். போதும் இந்தளவிற்கு அவனுக்கு ஞாபகம் இருப்பதே போதும் என்று தான் வருவாள்.
அன்றும் காலை உணவு தயாராக பூவம்மாவும் இங்கேயே வேலைக்கு என்று வீட்டோடு வந்துவிட வேலைக்கு நடுவே காபியுடன் ஸ்பூர்த்தி டிவியில் இருந்தாள்.
“இதென்னம்மா? இப்படி நடந்திருக்கு?…” பல்லவனால் நம்பவே முடியவில்லை.
“இப்ப வந்திடறேன் மாமா…” என ஸ்பூர்த்தி எழுந்து அறைக்குள் நுழைய சேம்பியும் அவளுடனே சென்றது.
விபத்திற்கு பின் அஷ்வினை தேடி அத்தனை வாடிவிட்டது சேம்பி. சாப்பாடே இறங்க மறுத்து அதற்கும் முடியாமல் சென்று அதனை தனியாய் கவனிக்கும் பொறுப்பு நந்தனதுவானது.
இப்போது அஷ்வின் வீட்டிற்கு வந்த பின் அவனறையிலேயே தான் இருப்பு. அதனை பார்த்ததும் அஷ்வின் என்ன செய்வான் என நினைக்க,
“ஹவ் ஸ்வீட்?…” என்று அவனை தடவிக்கொடுத்து கொஞ்ச ஸ்பூர்த்திக்கு ஒரு நொடி பற்றிக்கொண்டு வந்தது.
“ரெஸ்ட் எடுங்க மாமா. பெட்டோட இருக்க கூடாது நீங்க…” என்று வெடுக்கென்று சேம்பியை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.
“அவங்களுக்கு தான் ஞாபகமில்லை. சொல்றாங்க. நீ என்னடி குழையுற? உன்னை நான் இவ்வளோ நாளா பார்த்துக்கிட்டேனே? அதெல்லாம் தெரியுதா?…” என்று கேட்டவளுக்கு முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
அதுவரை அவளின் முன் அமர்ந்து அவள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த சேம்பி ஸ்பூர்த்தி கண்ணில் நீர் வரவும் மெதுவாய் அவளின் காலை சுரண்டி அவள் மடியில் விழுந்து உருண்டு கொஞ்சியது.
“ஸாரிடா பொண்ணுக்குட்டி…” என்றவள் முகத்தினை நாவால் ஈரம் செய்து ஆறுதல் படுத்த அதன் பின்னர் அவளுடனே செல்லும், அஷ்வினை பார்க்கும் வந்துவிடும்.
அவளிருக்கும் வரை அந்த அறையில் அமர்ந்திருந்து வேடிக்கை. அஷ்வின் ஏதேனும் கேட்டால் சப்தமெழுப்பி பதில்.
இது ஸ்பூர்த்தியே எதிர்பார்க்காதது. இத்தனை புரிந்துகொள்ளுமா என்று ஆச்சர்யப்பட்டுபோனாள்.
அப்போதும் அவளுடனே குடுகுடுவென்று ஓடிவந்து கட்டிலில் ஏற்றிவிடும் படி காலை போட்டு நிற்க,
“உன்னோட லேடர் இங்க வைக்கலையா நான்…” என கட்டிலுக்கருகே குஷன் டைப் படிக்கட்டை கொண்டுவந்து போட தாவி ஏறி வந்தமர்ந்துகொண்டது அவளருகே.
கதவை பூட்டிவிட்டு வந்தவள் தனது மொபைலை எடுத்து லக்ஷ்மணனுக்கு அழைத்தாள்.
“வாட்ஸ் கோயிங் ஆன் லக்ஷ்மணன்?…” என்றதும்,
“மேம், நாங்களே எதிர்பார்க்கலை…”
“என்ன இப்டி சொல்றீங்க? ஒரு எக்ஸ் மினிஸ்டர் இருக்கற இடம் இந்தளவுக்கு பாதுகாப்பில்லாம இருக்குமா?…”
“பர்ப்பஸா பண்ண நினைக்கும் போது பாதுகாப்பு எல்லாமே எப்படி மேம் எடுபடும்?…”
“ஹ்ம்ம்…” என்றவள்,
“தியாகராஜன் ஸார் ப்ரீயானதும் பேசலாம்…” என்று சொல்லிவிட்டு மற்ற விவரங்களை கேட்டுவிட்டு வைத்துவிட்டாள்.
சற்று நேரத்தில் அவருமே அழைக்க விஷயம் தெளிவாய் தெரியவந்தது. கணித்த ஒன்று தான்.
“இந்த கேஸ்ல இருந்து காப்பாத்த சொல்லி பிரஷர் போட்டிருக்கார். நாளாக நாளாக இவருக்கு நம்பிக்கை இல்லாம போக தான் மட்டும் தண்டனை அனுபவிக்கிறதா? வெளில எடுக்கலைன்னா சம்பந்தப்பட்ட எல்லாரையும் பத்தி சொல்லி அப்ரூவராக போறேன்ற மிரட்டல் வேதநாயகத்துக்கிட்ட இருந்து போயிருக்கு…”
“புலி வாலை பிடிச்ச கதை தான். இனி விட்டுவைக்க முடியாது, உயிரோட விட்டா பிரச்சனையாகும்ன்னு உள்ளயே வச்சு முடிச்சிருக்காங்க. பேருக்கு ஃபயர் ஆக்ஸிடன்ட். ஆனா பக்கா மர்டர். கிளீன் ஸ்கெட்ச்…”
தியாகராஜன் சொல்லிய விவரங்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டவள் கமிஷனரை பற்றி பேச,
“ப்ராசஸ் போய்ட்டிருக்கு ஸ்பூர்த்தி. சீக்கிரம் அவருக்கும் நோட்டீஸ் போய்டும். அதோட வேதநாயகம் உள்ள இருந்து கான்டேக்ட் பண்ணினவங்க லிஸ்ட்ல கமிஷ்னரும் இருக்கார்…”
“இந்த கேஸ்ல அவருமே இன்வால்வாகி இருக்கலாம் ஸார்….” என ஸ்பூர்த்தி சொல்ல,
“எனக்குமே அந்த டவுட் இருக்கு. அவரோட நாலேஜ் இல்லாம இத்தனை பெருசா நடக்க வாய்ப்பில்லை. ஒரு எக்ஸ் மினிஸ்டரயே உள்ள வச்சு மர்டர் பன்ற தைரியம் இருக்குன்னா சும்மா கிடையாதே?…” தியாகராஜன் ஒப்புக்கொண்டார்.
“நீங்க கேட்ட டீட்டெய்ல்ஸ் இன்னும் டூ திரீ டேய்ஸ்ல கலெக்ட் பண்ண பார்க்கறேன் ஸார். கண்டிப்பா கிடைச்சிடும். நெக்ஸ்ட் கமிஷனர் தான்…” லக்ஷ்மணனும் சொல்ல,
“ஓகே, அது கிடைக்கவும் அடுத்து என்ன மூவ்ன்னு பேசிக்கலாம்…” என்ற தியாகராஜன்,