“பொதுவா நீ டிபார்ட்மென்ட்ல இல்லாத ஆளு. உன்னோட இதை எல்லாம் டிஸ்கஸ் பண்ண கூடாது. ஆனா என்ன பண்ண? சில விஷயங்களை சட்டத்துக்கு புறம்பா தானே செய்யவேண்டியதிருக்கு அந்த சட்டத்தையே காப்பாத்த…” என பெருமூச்சு விட்டார்.
“இப்பவும் எனக்கு வருத்தம் மேம், நீங்க ரிஸைன் பண்ணினது…” லக்ஷ்மணன் சொல்ல,
“எனக்கு வருத்தமே இல்லை லக்ஷ்மணன். பார்க்கலாம் அடுத்து என்னன்னு…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
அதற்குள் அவள் மடியில் தலைவைத்து சேம்பி உறங்கி போயிருந்தது. அதனை புன்னகையுடன் பார்த்தவள்,
“சோம்பேறி பொண்ணுக்குட்டி…” என்று தடவிவிட்டு எழ தானும் எழுந்து வந்தது.
கதவை திறந்து வெளியே வரவுமே மோனிகா அவளை தேடி வந்துவிட்டாள் அங்கே.
“உன்னை தான் கேட்டேன். இங்க இருக்கன்னு மாமா சொன்னாங்க…”
“என்ன த்தை?…”தனது மொபைலை அங்கே வைத்துவிட்டு கேட்க,
“ஓகே…” என தோளை குலுக்கிக்கொண்டவன் அவளுக்கு இடத்தை சொல்ல முதல்முறை கேட்பதை போல கேட்டுக்கொண்டாள்.
அவள் செல்லவும் நடந்துகொண்டிருந்தவன் வந்து ஓரிடத்தில் அமர்ந்து கண்ணை மூடினான்.
“ஸ்பூர்த்தி எங்கடா?…” மோனிகா கேட்க,
“மாடிக்கு போறேன் த்தை. பென் ட்ரைவ் வேணுமாம் உங்க பிள்ளைக்கு. கேட்டாங்க…”
“சரி போய்ட்டு வா. லன்ச் ரெடியாகிருச்சு. எப்போ சாப்பிறானோன்னு கேட்டு குடுக்கலாம். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று மோனிகா சென்றுவிட ஸ்பூர்த்தி மாடிக்கு சென்றாள்.
அவனுடன் அந்த அறையில் இருந்தது. அதன் பின் அங்கே போவதை வெகுவாய் குறைத்துக்கொண்டவள் வெகு நாட்களுக்கு பின் அன்று தான் அறைக்குள் நுழைந்தாள்.
அவன் சொல்லிய கப்போர்டில் உள்ளிருந்த பென்ட்ரைவை எடுத்துக்கொண்டு அந்த டைரி போன்ற நோட்பேடையும் எடுத்துக்கொண்டாள்.
“இங்க வச்சு தானே அந்த போட்டோஸ் எல்லாம் கிழிச்ச. எவ்வளோ கோவம் அன்னைக்கு உனக்கு?…” அஷ்வின் அவளுடன் கூடியிருந்த பொழுதுகளில் அங்கு வைத்து கேட்டிருந்தது மனக்கண்ணில் பிம்பமாய் உருவெடுத்தது.
அங்கேயே நெஞ்சமெல்லாம் அடைக்க அமர்ந்துகொண்டவள் கீழே அவன் காத்திருப்பான் என்ற எண்ணமெல்லாம் மறந்து போனாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ மோனிகா அழைக்கும் குரலில் வெளியே வந்தாள்.
“என்ன ரூம்லயே தூங்கிட்டியா?…” என கேட்க,
“ஹாங், இல்லத்தை. சும்மா பார்த்திட்டிருந்தேன்…”
“உன்னை காணுமேன்னு வந்தேன்….”
“ஓஹ், மாமா கேட்டாங்களா?…”
“அவன் ஒன்னும் கூப்பிடலையே? சரி நீ வா. சாப்பிடலாம்…” என்றதும் தான் அவ்வளவு நேரம் இருந்ததே உணர்ந்தாள்.
“ரொம்ப நேரம் பண்ணிட்டேனே?…” என்று அஷ்வின் கேட்டதை எடுத்துக்கொண்டு கதவை சாற்றிவிட்டு கீழிறங்க,
“எதுக்கு இவ்வளவு பதட்டம் உனக்கு? நீ இன்னும் சாப்பிடலைன்னு தான் தேடி வந்தேன்…”
“மாமா சாப்பிட்டாச்சா?…”
“அஷ்வின் இப்பதான் ஜூஸ் கேட்டான்னு போட்டு குடுத்தேன். சாப்பிட டைம் எடுக்கும்ன்னு சொன்னான்…”
“அத்தை என்ன நீங்க? டேப்லேட்ஸ் எடுக்கனுமே? ஏன் இப்ப ஜூஸ் குடுத்தீங்க?…”
“நான் என்ன செய்ய? வேணும்னு சொன்னான். குடுத்துட்டேன்…” என்ற மலர்,
“ஈவ்னிங் பூஜை இருக்கு ஸ்பூர்த்தி. முடிச்சிட்டு நான் கோவிலுக்கு போறேன் இன்னைக்கு. நீ வரியா?…”
“வேண்டாம். நீங்க போய்ட்டு வாங்க. பாட்டியால மாமாவை தனியா பார்த்துக்க முடியாது. வேணும்னா பாட்டியை கூட்டிட்டு போங்க…” என்று சொல்லிவிட்டு நேராக அஷ்வின் அறைக்குள் நுழைந்தாள்.
ஏன் இத்தனை தாமதம் என கேட்பான் என நினைக்க அப்படி எதுவும் கேட்கவில்லை.
அவனிடம் தான் கொண்டு வந்ததை நீட்ட அவள் முகத்தை தான் அளவெடுத்தான் அஷ்வின்.
“அங்க தேடிட்டிருந்தேன் மாமா. கால் பண்ணலாம்ன்னு நினைச்சேன். அப்பறம் இதை கூட தேடமுடியாதான்னு தேடி எடுத்துட்டு வந்தேன்…”
“ஓஹ்…” அஷ்வின் வேறெதுவும் கேட்கவில்லை.
“அப்படியே ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணேன்…”
“ஓகே, அதை அங்க வச்சிடு…” என்று சொல்லிவிட்டு விரல்களை கோர்த்துக்கொண்டு வேறெங்கோ பார்த்திருந்தான் அஷ்வின்.
“சாப்பிடலையா நீங்க?…” ஸ்பூர்த்தி கேட்க,
“நீ போய் சாப்பிட்டு வா. எனக்கு டைமாகட்டும்…”
“மாமா, என்னதிது? இப்பவே எவ்வளவு நேரம்? முதல்ல கொஞ்சமாவது சாப்பிட்டு மாத்திரை போடுங்க. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்…” என்று நகர்ந்தாள்.
தன்னிடமும் அவன் மறுப்பான் என நினைக்க, ஒன்றும் சொல்லாத ஒரு பார்வை தான் அவனிடம்.
என்னவோ அவள் முகத்தையே அத்தனை முறை பார்த்திருந்தான். விழிகள் கலங்கி முகமெல்லாம் சோர்ந்திருந்தது ஸ்பூர்த்திக்கு.
அது அப்படியே தெரிய அதற்கும் கேள்வி எழுப்பாமல் பார்த்தவன் முகத்தில் அத்தனை கடுமை.
ஓடியே வந்துவிட்டாள் அதனை பார்த்து. வேகமாய் வந்தவள் மோனிகாவை மோதி நிற்க,
“போலீஸ் கண்ணு. என்னத்துக்கு இம்புட்டு வேகம்? மெல்ல வரத்தான?…” என பூவம்மா சொல்ல,
“அதெல்லாம் இல்லை. வந்த வேகத்துல இடிச்சுட்டேன்…” என்ற ஸ்பூர்த்தி,
“அத்தை அஷ்வின் மாமாக்கு சாப்பாடு…” என கேட்க,
“இப்ப தானே வேண்டாம்ன்னு சொன்னான்…”
“என்கிட்டே சொல்லலை. எடுத்து வைங்க. குடுக்கலாம்…” என்றவள் அவனுக்கு எடுத்துவைத்துவிட்டு முகமெல்லாம் ஒருவிதமாய் இருக்க,
“நீங்க கொண்டுபோங்க த்தை. நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்…” என அனுப்ப மோனிகா உணவை எடுத்து சென்றாள்.
தாய் மட்டும் வருவதை கவனித்த அஷ்வின் சாப்பிடுவதற்கு எதுவாய் நிமிர்ந்து அமர்ந்தான்.
“ஸ்பூர்த்தி எங்க ம்மா?…” என கேட்கவும்,
“முகம் கழுவிட்டு வரேன்னு சொன்னா அஷ்வின். வருவா….”
“நீங்க சாப்பிட்டாச்சா?…”
“இனிமே தான், ஸ்பூர்த்தியோட சாப்பிடனும்….”
“அப்பா, தாத்தா, பாட்டி?…”
“எல்லாருக்கும் குடுத்துட்டேன் அஷ்வின். கடைக்கு சாப்பாடு அனுப்பிட்டேன் அப்பவே…” மோனிகா மகன் கேட்க கேட்க பதில் சொல்லியபடி அவனுக்கு பரிமாற்ற,