அதிரன் தான் மகளை இதனை சொல்லி அழைக்கிறேன் என்றதற்கும் அஷ்வின் மறுத்துவிட்டான்.
“அதென்ன அவ்வளோ அடமென்ட்? நாமளா போக சொன்னோம்? அவளே வரட்டும். கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டும். நானும் இன்னும் நல்லா ஸ்ட்ராங்காகிக்கறேன்…” என்று சொல்லிவிட்டவனை மீற முடியவில்லை.
இரண்டு வருடங்கள் பொறுத்தவன் இவள் என்ன இன்னும் இப்படி இருக்கிறாள் என்று மேகாவின் பிறந்தநாளை வைத்து மேகமலை வரவழைத்து தன்னையும் ஒப்புவித்து பேசியிருக்க இத்தனைக்கு பிறகும் மீண்டும் அவள் அவசரப்பட்டு எடுத்த முடிவில் முற்றிலும் நிதானமிழந்திருந்தான்.
அந்த கோபம் எல்லாம் மீண்டும் ஒருமுறை இன்று பார்த்துவிட்டவளுக்கு உள்ளுக்குள் லேசாய் நடுக்கம்.
அவன் பார்வையும், நின்ற விதமும், உடல்மொழியும் ஸ்பூர்த்திக்கு அஷ்வின் இத்தனை நாள் நடித்து மறைத்து ஏமாற்றிவிட்டதை பின் செல்ல வைத்து அவனின் கோபம் ஏன் என்ற கேள்வியை முன் வைத்தது.
“சொல்லுங்க எக்ஸ் பாரஸ்ட் ஆபீஸர் மேம்…” என்ற நக்கலில் இன்னும் அதிர்ந்தாள் ஸ்பூர்த்தி.
“மாமா…”
“என்ன சொல்றதுன்னு தெரியலையா? உனக்கு வாழ்க்கையும், உன் வேலையும் ஒண்ணா போய்டுச்சுல?…” என்றவன் கோபம் அவளை சுட்டு பொசுக்கியது.
“ஜஸ்ட் லைக் தட், ஜாப் வேண்டாம்ன்னா தூக்கி போடுவ. நான் வேண்டாம்ன்னாலும் கூட…”
“நான் எங்க உங்களை தூக்கி போட்டேன்? நீங்க தான் ஏமாத்திருக்கீங்க. இத்தனை நாள் நான் பட்ட வேதனைகளை பார்த்து ரசிச்சிருக்கீங்க. ஹவ் க்ரூயல்?…” என்றாள் கொஞ்சமும் சளைக்காது.
“ரசிச்சேனா? என்னை நீ தான் கொஞ்ச கொஞ்சமா கொன்னுட்டு இருந்த. அதுக்கு இந்த குடும்பமும் ஆமாம் சாமி. இவ்வளவு செஞ்சுட்டு இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போறேன்னு நிக்கிற திரும்ப. உன்னை என்ன பண்ணலாம்?…”
“அப்போ நான் கிளம்பறேன்னு தான் நீங்க உங்களை வெளிப்படுத்தியிருக்கீங்க. இல்லைன்னா…”
“இல்லன்னா உன் மரமண்டைக்கு என்னைக்கு புரியுதோ, உன் உரிமையை நீ சொல்லுவியோ அன்னைக்கு வரைக்கும் இப்படி தான் ஜடமா இருந்திருப்பேன்…”
கோபமான வார்த்தைகள் தான். அதன் பிரயோகமும் அவன் சொல்லிய ஜடம் என்ற வார்த்தையும் ஸ்பூர்த்தியை கூறு போட்டது.
“எங்களோட கஷ்டம் பார்த்தும் கூட உங்களுக்கு சொல்ல தோணலையா? அத்தனை பேரும் உங்களுக்காக எவ்வளோ போராடிட்டிருந்தோம்?…”
“யார், எல்லாரும் எனக்காக? ஹ்ம்ம், இல்லைன்னு சொல்லலை. ஆனா என்னையும் சேர்த்து போராட வச்சிட்டீங்களே?…” என்றவனால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை.
மெதுவாய் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துகொண்டான். கால்கள் எல்லாம் வலியெடுக்க மெல்ல அதனை எடுத்து கட்டிலில் வைத்து நீட்டிக்கொண்டான்.
“வலிக்குதா மாமா?…” என ஸ்பூர்த்தி வர,
“தொலைச்சிடுவேன் ராஸ்கல். அங்கயே நில்லு…” என்று அதட்டினான்.
“தப்பு உங்க மேலையும் பிஃப்டி பர்சன்ட் இருக்கு…” என்று கோபமாய் ஸ்பூர்த்தி சொல்ல,
“இருந்தா? நீ பண்ணினது இல்லைன்னு ஆகிடுமா?…” என்றதும் ஸ்பூர்த்தி மௌனமாக அஷ்வின் அமைதியாய் இருந்தான் சில நொடிகள்.
“இங்க வா, உட்கார்…” என அவளை எதிரே அமர சொல்ல,
“இங்கயே நிக்கறேன். சொல்லுங்க…”
“திரும்பவும் அடம் பன்ற நீ. வான்னு சொன்னேன்…” என அதட்ட அவன் காட்டிய இடத்தில் வந்து அமர்ந்ததும் அவளை விழியகலாமல் பார்த்தான்.
“ஒருவேளை எனக்கு எதுவுமே ஞாபகமில்லாம போயிருந்தா என்ன பண்ணிருப்ப ஸ்பூர்த்தி?…” என்றதும் அவள் திகைத்து பார்க்க,
“தெரிஞ்சுக்கனும். சொல்லு…”
“அதெல்லாம் ஆகாது. கண்டிப்பா ஞாபகம் வந்திடும்ன்னு நம்பிக்கை இருந்துச்சு. அப்படியே இருந்தாலும் உங்களுக்கு உடம்பு சரியாகவும் நிச்சயம் சொல்லியிருப்பேன்….”
“என்னன்னு?…”
“நமக்கு கல்யாணமாகிடுச்சுன்னு…”
“அப்போ இப்போ ஏன் சொல்லலை? சொன்னா ஐயோ இவளை கல்யாணம் பண்ணிட்டோமான்னு ஷாக்ல எனக்கு ஏதாவது ஆகியிருக்குமா என்ன?…” என்றான்.
கிண்டலாக கேட்கிறானா? கோபமா? என பிரித்தறியமுடியாத பாவனையில் அவன் கேட்க ஸ்பூர்த்தி தான் விழித்தாள்.
“சொல்லு ஸ்பூர்த்தி, பேசு…” என்று அதட்ட,
“டாக்டர் தான் சொன்னாங்க…”
“ஏன் உனக்கு அறிவில்லையா? டாக்டர் சொன்னா? கொஞ்சம் கூடவா எனக்கு உன்னை உணர்த்தனும்னு தோணலை?…”
“நீங்க எனக்கு கல்யாணமாகிடுச்சான்னு கேட்டதும் என்ன சொல்லன்னு தெரியாம…” என்றவள்,
“இந்த ஆக்சிடன்ட் என்னோட ஜாப்னால உண்டான ஆக்சிடன்ட். அதுவேற என்னால தான் உங்களுக்கு இப்படியாகிடுச்சுன்னு ஒரு குற்றவுணர்ச்சியை குடுத்திருச்சு. அதான் சொல்ல முடியலை. ஆனா கண்டிப்பா சொல்லியிருப்பேன் நான். அப்படியெல்லாம் உங்களை விட்டுத்தர முடியாது…”
வீராப்பாய் விசும்பிக்கொண்டே அவள் பேச கேட்டவன் முகத்தில் லேசாய் இளக்கம்.
“ஆனா நீங்க, எல்லாம் ஞாபகம் இருந்தும், இத்தனை நாள் எல்லாத்தையும் கவனிச்சிட்டு எதுவுமே சொல்லாம இருந்திருக்கீங்க…”
“நீ கண்டுபிடிக்கலைன்னா அது என் தப்பில்லை ஸ்பூர்த்தி…” என்றவன்,
“ஏன் உனக்கு என்னோட பார்வை கூடவா புரியலை? இல்லை ஹாஸ்பிட்டல்ல வச்சு உன்னை பாட சொன்ன அன்னைக்கு கூடவா உனக்கு தோணலை?…” என கேட்க திகைத்து பார்த்தாள்.
“ஆமா, ஏன்?…” அவனிடமே கேட்க,
“என்னை கேட்டா?…”
“நீங்க தானே என்னை பார்த்து கல்யாணமாகிடுச்சான்னு கேட்டீங்க? அதான் அங்க ஸ்லிப்பாகிட்டேன். எனக்கு பயம், எங்க புருஷன் யாரு என்னன்னு கேட்டுடுவீங்களோன்னு. அதுவே டென்ஷன்ல என்னை வேற யோசிக்க விடலை. இன்னொன்னு இனி என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வர கூடாதுன்னு….”
“விட்டுட்டு போகனும்னு கூட தான் முடிவு பண்ணின…”
“ஏன் மாமா புரிஞ்சுக்காம பேசறீங்க? நான் எப்போ சொன்னேன்?…”
“உன் மாமாக்கிட்ட சொன்ன தானே? அதை என்கிட்டையுமே சொன்னியே. நான் தூங்கறேன்னு நினைச்சிட்டு…” என்றதும் இன்னுமே அதிர்ச்சி.
“மாமா அன்னைக்கே…”
“ம்ஹூம், அன்னைக்கே இல்லை. ஆனா பாதி நினைவு திரும்பினதும் உன்கிட்ட கல்யாணமாகிருச்சான்னு கேட்டது உண்மை தான். எனக்கு தெரியலை. என்ன, எப்ப நடந்துச்சுன்னு. யாரும் சொல்லவுமில்லை…”
“எதாச்சும் கேட்டா எல்லாம் சரியாகட்டும், கேட்காத கேட்காதன்னே சொன்னாங்க. நானும் கேட்கலை. கேட்டாலும் எதுவும் உண்மை வருமான்னு தெரியலை. அதான் அப்படியே இருந்துட்டேன். ஆனா நான் கேட்காமலே எல்லாம் தெரியவந்தது உன் மூலமா…”
“நான் தூங்கறேன்னு நினைச்சு நீ எல்லாமே சொன்ன. எல்லாமே ஷேர் பண்ணிக்கிட்ட. என்னோட நியாபகங்கள் திரும்ப அது ஒருவகையில பெரிய உதவியா இருந்தது….” என்றதும் நம்பமுடியாமல் பார்த்திருந்தாள்.
“கஷ்டப்பட்டேன், வேதனைப்பட்டேன்னு இவ்வளோ பேசறியே? எனக்கு மட்டும் எந்த கஷ்டமும் இல்லையா ஸ்பூர்த்தி?…” என்றவன்,
“மயக்கத்துல இருக்கேன்னு நினைச்சு என்ன பண்ணின நீ என்னை?…” என்று கேட்கவும் அவள் முகம் சிவந்துபோனது.
“கல்யாணமாகிடுச்சான்னு கேட்டதும் உன் முகத்துல அத்தனை வேதனை. என்கிட்டே என்னவோ சொல்ல நினைக்கிற. ஆனா என்னால எதையுமே கேட்டுக்க முடியலை. மயக்கம் தான். ஆனா என்னவோ மனசுக்குள்ள ஒரு தவிப்பு…”
“உன்னோட கண்ணீரும், பரிதவிப்பும் அவ்வளவு ஆழமா என்னை பாதிச்சது. அதுவே என் மூளையை உறங்க விடலை. யோசிச்சிட்டே இருந்தேன். திடீர்ன்னு உன்னோட வாசம். கண்ணை திறக்க முடியலை…”
“பக்கத்துல நீ தான் வரன்னு உணர முடிஞ்சது. உன்னோட அழுகை சத்தம். உன் பேச்சு குரல். உடனே எந்திச்சு என்னன்னு கேட்க அத்தனை துடிச்சேன். என்னோட உடம்பு ஒத்துழைக்கலை. உனக்கு என்னவோன்னு மனசு அடிச்சுக்கிச்சு…”
“ஆனா அடுத்து நீ பண்ணின பார்த்தியா? நான் உணர்ந்தது என்னால நம்ப முடியலை. அந்த நிமிஷம் உனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு என் மூளை எடுத்து குடுத்தாலும் உன்னை விலக்கி தள்ள என்னால முடியலை…”
“என்னோட அதிர்ச்சிக்கு மேல உன்னோட அந்த முத்தம் இன்னும் இன்னும் வேணும்னு என் மனசு பட்டபாடு. விட்டுட்டு விலகிடாதன்னு நான் தவிச்ச தவிப்பு. எல்லாத்துக்கும் மேல இதுக்கு என்ன அர்த்தம்ன்னு யோசிச்சு நான் எவ்வளோ போராடியிருப்பேன்…”
“இதெல்லாம் உனக்கு கஷ்டமா இல்லை என்ன ஸ்பூர்த்தி? உன்னோட நெருக்கமும், பார்வையும், கண்ணீரும் எனக்கு உணர்த்துச்சு என்னோட உன் வாழ்க்கை தொடங்கிருச்சுன்னு. ஆனா எப்போ எப்படின்னு யார் சொல்ல?…” என உருக்கமாய் அவன் கேட்க கேட்க உடைந்து போனவளை தன் மடிமீது தாங்கிக்கொண்டான் அஷ்வின்.
“இதுதான் நடந்திருக்குன்னு சொல்லவும் யாருமில்லை. உன்னை யோசிச்சவங்க என்னை புரியாம போய்ட்டாங்களேன்னு வருத்தம். ஏன் என்கிட்டே சொன்னா நான் மறுத்துடுவேனா? இல்லை உன்னை என்ன சொல்லிடுவேன்?…”
“எனக்கு புரியவே இல்லை. இங்க எனக்கான ஞாபகங்கள் என்னை சேர்ந்த பிறகும் உன்னோட விலகல் என்னை ரொம்பவே பாதிச்சது. எத்தனை சொல்லியும் உனக்கு புரியவே செய்யாதா? அப்ப எனக்கு கஷ்டம்ன்னா வேண்டாம்ன்னு போய்டுவியான்னு அவ்வளவு கோபம்…”
“நான் சொல்லியும் இப்படி பன்றியேன்னு ஆத்திரம். சரி நீயா சொல்லட்டும்ன்னு நான் நினைச்சு பேசினா அப்பவும் உன்னால என்னை புரிஞ்சுக்க முடியலை. என்னை பார்த்தா தானே உனக்கு புரியும்…”
“நீ தான் நான் தூங்கும் போது மட்டும் தானே என்னோட பக்கத்துல வருவ. மனசு விட்டு பேசுவ. ஆனா அதுக்காகவே பலநாள் தூக்கத்தை விட்டு உனக்காக வெய்ட் பண்ணுவேன். அசையாம உன் பேச்சை கேட்டுட்டு இருப்பேன். ஹப்பா இப்ப நினைச்சாலும் நரகம்…” என்றவன்,
“இவ்வளோக்கு பின்னாலையும் இன்னைக்கு கிளம்ப போறேன்னு நிக்கிற? உன்னை என்னதான் பன்றது ஸ்பூர்த்தி?…” என்று கேட்க அத்தனை நாள் அமிழ்த்தியிருந்த பாரமெல்லாம் சந்தோஷாமாய், கண்ணீராய், கேவலாய் என்று உணர்வு சிதறல்களாய் வெடித்து உடைய அவளின் தலையை வருடினான்.
“எவ்வளோ நேரம் அழுவ? செம்ம டெண்ஷனாகுது. திரும்ப நினைவு போய் மயங்கிருவேன் இதுலையே. அப்பறம் தூக்கத்துல தான் கிஸ் பண்ணனும் நீ…” என்றான் கிண்டலாய்.
“உங்களை அடிக்கனும்னு அவ்வளவு ஆத்திரம் வருது மாமா. உடம்பு சரியாகட்டும், அப்பறம் வச்சுக்கறேன்…” என்று அவன் மேல் தனது கோபத்தை மென்மையான அடிகளுடன் காண்பிக்க,