“ப்ச், அஷ்வின் பேச்சு எல்லாம் இப்ப ஸ்பூர்த்தியை கஷ்டப்படுத்தற மாதிரியே இருக்கு. உன்கிட்ட சொன்னா நீ வருத்தப்படுவன்னு தான் சொல்லலை. ஸ்பூர்த்தி பாவம்…” என்ற மோனிகா,
“அவன் நினைக்கிறதும் தப்புன்னு சொல்ல முடியலை. நமக்கு தான் நடந்தது தெரியும். அஷ்வினுக்கு தெரியாதே? அவன் வேற மாதிரி யோசிக்கிறான். கல்யாணமான பொண்ணை இப்படி பார்த்துக்கறதுக்காக கூட வச்சிருக்கோம், அது அவ லைஃப்ல பிரச்சனையா வந்திட கூடாதேன்னு….”
“இவளும் போக சொல்லியும் பிடிவாதமா போகாம இருக்காளேன்னு அவனுக்கு கோவம். அதான் இப்படி பேசிட்டே இருக்கான்…” என்று சொல்லி முடிக்க,
“சரி இங்கயே நின்னுட்டு இருந்தா? நான் போய் கூப்பிடறேன்…” என சுபத்ரா சொல்லும் பொழுதே அமுதனும், பல்லவனும் வந்துவிட்டனர்.
“கோவிலுக்கு போய்ட்டு வந்தா உட்காரனும். அதைவிட்டுட்டு நடுவீட்டுல நின்னுட்டே இருக்கீங்க?…” என உள்ளே வந்ததும் பல்லவன் சொல்ல,
“இப்பதான் நாங்களே உள்ள வந்தோம்…” என்றார் மலர்.
“ட்ரைவர் கார் பார்க் பன்றதை பார்த்துட்டு தான் நானும் சொல்றேன். உக்கார்ந்து பேசுங்கம்மா. வாசல்ல நின்னு எல்லாரும் கூடி இருக்கறதை பார்க்கறப்போ என்னமோன்னு ஒருநிமிஷம் பதறிட்டேன்…” என்று அமர்ந்தான்.
“பிரசாதம் எடுத்துக்கோங்கண்ணா, ப்பா நீங்களும்…” என மேகா நீட்டவும் வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டனர்.
“அஷ்வினுக்கு குடுத்தாச்சா?…” அமுதன் கேட்க,
“அதை தான் நாங்க பேசிட்டிருந்தோம்…” மலர் சொல்ல நந்தனும் வந்துவிட்டான் அதிரனை அழைத்துக்கொண்டு.
கோவிலுக்கு செல்லும் பொழுதே மேகா அவனுக்கு அழைத்து ஸ்பூர்த்தி சொல்லியதை சொல்லியிருக்க அதற்கு மேல் அங்கே வேலை ஓடவில்லை அதிரனுக்கு.
தேவராஜின் உடல்நிலை சற்று சரியில்லை என்பதாலும், அஷ்வின் ஒப்புக்கொண்ட படங்களின் வேலைகள் இருந்ததாலும் அவற்றை அதிரன் பார்க்கவேண்டியதானது.
உடன் நந்தனை வைத்துக்கொண்டு சமாளித்தபடி இருக்க ஸ்பூர்த்தி வருத்தப்பட்டு வீட்டிற்கு வருகிறேன் என சொல்லியதை கேட்டதிலிருந்து வேறு எதிலும் மனம் செல்லவில்லை. கிளம்பி வந்துவிட்டான்.
“என்ன இன்னைக்கு எல்லாரும் ஒண்ணா அடுத்தடுத்து வரோம்…” பல்லவன் அதிரனை பார்த்ததும் கேட்க,
“சும்மா தான். ஏன் வர கூடாதா?…” அதிரன் சிரித்தபடி கேட்டுவிட்டு மேகாவை பார்த்து புருவம் உயர்த்தினான்.
அவளின் பார்வை மூடியிருந்த அறையை காண்பித்து அவனிடம் மீள அதிரனும் அங்கே பார்த்துவிட்டு,
“என்ன மேகா?…” என்றான்.
“இல்லை ஸ்பூர்த்தி கிளம்பனும்னு சொன்னா….” என்று அவள் அனைவரையும் வைத்துக்கொண்டு என்ன பேச என தெரியாமல் இதனை கூறினாள்.
“அப்போ சொல்லியிருந்தா இப்ப வரனுமா? வரும் போது பார்த்துக்கலாம்…” என்று சொல்லி,
“வாங்கத்தை நாம தனியா போய் டின்னர் சாப்பிடுவோம். இவங்கலாம் டீயே குடிக்கட்டும்…” என மோனிகாவை அழைத்துக்கொண்டு செல்ல அவ்விடம் கலகலப்பாய் இருந்தாலும் அனைவரின் பார்வையும் மூடியிருந்த அறையையே பார்க்கவும் திரும்பவுமாய் இருந்தது.
“நான் கூப்பிடட்டுமா?…” அதிரன் பார்வையில் மலர் கேட்டுவிட,
“வேண்டாம், பரவாயில்லை. வரட்டும்…” என தடுத்துவிட்டான்.
“பிரசாதம் குடுக்கனும் அதி…” சுபத்ரா சொல்ல,
“வரவும் குடுங்க ம்மா, அவ்வளோ தானே?…” என்று சொல்லிவிட்டான்.
அதற்கு மேல் எங்கே அழைக்க? நேரம் செல்ல செல்ல கதவு திறக்கும் வழி தான் இல்லை.
இத்தனை நேரத்திற்கு அனைவரும் வந்திருக்கும் சத்தம் கேட்காமல் இருக்காது. அதுவும் அஷ்வின் கவனிக்காமல் இருக்கவே மாட்டான்.
இன்று என்ன என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அதிரன் சொன்னதற்கு மேல் அருகே செல்லாமல் இருக்க,
“இப்ப என்ன? நான் திறக்க வைக்கறேன் பாருங்க…” என்ற நந்து சேம்பியை அழைத்துக்கொண்டு வந்து கதவில் லேசாய் தட்ட அதுவும் மெல்ல அவனை போலவே தட்டியது.
“சோம்பேறி, நல்லா தான் சத்தமா தட்டேன். நான் தூங்கினா மட்டும் டம்மு டம்முன்னு தட்ட தெரியுது…” என்று அதை அதட்டியவன்,
“இன்னும் கொஞ்சம் சத்தமா…” என்று தட்டி காண்பிக்க அவனை முறைத்த சேம்பி அங்கேயே குறுக்காய் படுத்துவிட்டது.
நந்துவையும் தட்டவிடாமல் அவன் பேசியதற்கு பதிலுக்கு கோபத்தை காண்பிக்க தலையை மட்டும் உயர்த்தி உறும,
“இதுக்கொண்ணும் குறைச்சலில்லை….” என்று அதன் தலையில் தட்டிவிட்டு எழுந்துகொண்டான் நந்து.
“வேலைக்காகாது, அப்பா, என்ன பண்ண? ஒருவேளை தூங்கிட்டாங்களோ?…” என்றான் நந்து அதிரனிடம்.
“நீங்க கால் பண்ணுங்களேன்….” என்றாள் மேகா.
எல்லாம் ஞாபகம் இருந்திருந்தால் அழைக்கவேண்டும் என்ற அவசியமே இருந்திருக்காது.
இப்போது என்ன என தெரியாமல், அதிலும் அஷ்வின் என்னவோ கோபத்தில் இருப்பதை போலிருக்க அழைக்க சொல்லிவிட்டாள்.
“மேகா…”
“ப்ளீஸ் அதி, கூப்பிடுங்க….” என மற்றவர்களுக்கு கேட்காமல் கெஞ்சும் குரலில் கூற தலையசைத்து அஷ்வின் எண்ணிற்கு அழைத்தான் அதிரன்.
“சொல்லுங்க மாமா, வந்து ரொம்ப நேரமாச்சா?…” என கேட்கவும் அதிரனின் முகத்தில் சிரிப்பு.
“ஸ்பூர்த்தி எங்க சேம்ப்?…” என்றான்.
“பனிஷ்மென்ட், இங்க தான் உட்கார வச்சிருக்கேன்…”
“சேம்ப்…”
“எனக்கும் சேர்த்து தான் மாமா. அதான் நானும் அவ கூடவே உக்கார்ந்திருக்கேன்…” என்றவனிடம் வேறு எப்படி கேட்க?
“உனக்காக தான் வெய்ட்டிங் சேம்ப்…”
“எதுக்காம்? இவ தான் கிளம்பனும்னு சொன்னான்னா நீங்களும் கூட்டிட்டு போக வந்திருவீங்களா?…” அஷ்வின் கேட்க கேட்க அதிரனுக்கு தான் புரிந்துகொண்டதில் அத்தனை மகிழ்ச்சி.
அவன் முகத்தில் தெரிந்த அளவற்ற புன்னகையை கண்டு அத்தனைபேரும் என்னவென பார்த்தனர் புரியாமல்.
“சேம்ப்…” என நெகிழ்ச்சியாக அழைத்த அதிரன்,
“இப்ப நான் ஸ்பூர்த்தியை கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன்னு உனக்கு சொல்லவே இல்லையே?…”
“உங்க மேகம் சொல்லிருப்பாங்க. இது கூட தெரியாதா? அதான் அவ்வளோ வொர்க்லையும் உடனே கிளம்பி வந்திருக்கீங்க?…” என கிண்டலாக அஷ்வின் சொல்ல,
“டேய் என்னடா நீ?…” என சிரித்தான் அதிரன் அடக்கமாட்டாமல்.
“சரி கதவை திற, யாரும் கூட்டிட்டு போகலை…”
“நான் விடமாட்டேனே. ஆனா லேடீஸ் எல்லாம் இதுல ஒன்னு. சொல்லி வைங்க…”
“கோவமா இருக்கியா சேம்ப்?…” அவனின் பேச்சில் அதிரன் இன்னும் சிரித்தபடியே பேச,
“பயங்கரமா கோவம். உங்க மேல கூட கொஞ்சம்…”
“கதவை திற சேம்ப்…”
“அப்பா…” ஸ்பூர்த்தி குரல் கேட்க,
“மூச், எனக்கு தானே கூப்பிட்டாங்க. எதாச்சும் பேசு, பேசிக்கறேன்…” என்று அஷ்வின் அதட்ட,
“என்ன விளையாட்டு இது? முதல்ல டோர் ஓபன் பண்ணு. நான் உன்னை பார்க்கனும்…” என்றதில் அஷ்வின் மௌனமாகி பின்,
“ஓகே…” என சொல்லிவிட்டு போனை வைத்தவன்,
“போய் டோர் ஓபன் பண்ணு…” என்றான் அவளிடம்.
“அராஜகம் பன்றீங்க மாமா நீங்க…” என்று முறைத்துக்கொண்டு இறங்கி சென்று கதவை திறந்தாள்.
அத்தனைபேரும் வேகமாய் உள்ளே வர அவர்கள் முகத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி.
“அஷ்வின் மாமா சொன்னது நிஜமா?…” என பல்லவன் உருகி போய் கேட்க தலையசைத்தான்.
எத்தனை கோபத்தில் அவன் இருந்தானோ அவை எல்லாம் அவர்களில் சந்தோஷத்தில் பனியாய் கரைந்து போனது.
முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ என்னும் எண்ணம் வலுப்பெற ஒருவிதமாய் உணர்வுக்குவியலாய் மாறி போனான் அஷ்வின்.
அத்தனைபேரின் முகத்திலும் புன்னகையும், கண்ணீரும். அவனால் அவர்கள் கேட்பதற்கு வாய் திறந்தும் பதில் சொல்லமுடியவில்லை.
எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையுடன் தலையசைக்க அதுநாள்வரை தைரியமாய் வளைய வந்த மோனிகாவின் அழுகை சத்தம் வீட்டை நிறைத்தது.
அத்தனை நாட்கள் என் மகன் வந்துவிடுவான், எல்லாம் சரியாகும் என்று மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லியவள் சேர்த்துவைத்த பாரமெல்லாம் கண்ணீராய் கரைந்து போக மகனை அணைத்துக்கொண்டு அப்படி ஒரு அழுகை.
“ம்மா, ப்ளீஸ் அழாதீங்க. நான் சொல்லாம விட்டதுக்கு என்னை திட்டுவீங்க, அடிப்பீங்கன்னு பார்த்தா இப்படி அழறீங்க?…” என கிண்டலடித்தான்.
“அடிக்கனும் தான் உன்னை. காயமெல்லாம் ஆறட்டும். முழுசா குணமாகி வா பேசிக்கறேன்..” என்று அழுதுகொண்டே மகனை திட்டவும் செய்தவள்,
“உனக்கும் உங்கப்பாவுக்கு இதே வேலையா போச்சு. எங்களை எல்லாம் யோசிக்கிறதே இல்லை…” என்று விசும்ப பல்லவன் மோனிகாவை ஆறுதலாய் அணைத்து நின்றான்.
“இப்பவும் என் அத்தை ஸ்கோர் பன்றாங்க பாருங்க. கிடைச்ச கேப்பை எல்லாம் என் மாமாவை வச்சு தான் ஃபில் பன்றாங்க…” என்று நந்தன் சொல்ல அத்தனைபேர் முகத்திலும் புன்னகை ஒளிர்ந்தது.
இதில் இவர்களின் கும்பலில் கீழே காலுக்குள் சுற்றி வந்த சேம்பி ‘வழியை விடுங்கடா’ என்று அங்குமிங்கும் ஓடி நடுவில் வந்து நின்று ஒவ்வொருவரையும் பார்த்து பாய்ந்து பாய்ந்து கத்தியது.
‘நான் வந்துட்டேன், என்னடா பன்றீங்க எல்லாரும் கும்பலா? நான் வேண்டாமா?’ என்று கேட்பதை போலிருந்தது அதன் செயல்.
“இவ வேற கால நேரமில்லாம கொந்தளிப்பா. இப்ப என்ன சேம்பி உனக்கு?…” என்று அதை வம்பிழுத்த நந்தனை துரத்திக்கொண்டு சேம்பி செல்ல அனைவருமே அதில் திசை திரும்பினர்.
சிறிது நேரம் இருந்து அஷ்வினிடம் பேசிவிட்டு மற்றவர்கள் வெளியேற அதிரன் புன்னகையுடன் அவனெதிரே அமர்ந்தான்.
“சோ ஸார் என் முகத்தை கூட சரியா பார்க்காமல் இருந்தது இதுக்கு தான். ரைட்…” அதிரன் கேட்க,
“நீங்க கண்டுபிடிச்சிருவீங்க மாமா, அதான்….” என்றவன் ஸ்பூர்த்தி பார்த்து முறைத்தவன்,
“எனக்கு இதை ஸ்பூர்த்தி தான் முதல்ல சொல்லனும்னு ஒரு ஆசை. எனக்கும் அவக்கிட்ட தான் இதை முதல்ல தெரியப்படுத்தனும்னு தோணுச்சு. ஆனா அத்தையை விட இவ மோசம். இப்படி இருக்கா?…” என்றான்.
“என்கிட்டையே என் பொண்ணை கம்ப்ளைன்ட் பன்ற சேம்ப் நீ?…”
“என் மாமாக்கிட்ட தானே என் வொய்ப் பத்தி கம்ப்ளைன்ட் பன்றேன். தப்பில்லை. முடிஞ்சா உங்க பொண்ணை சொல்லி வைங்க…” என்று கண்சிமிட்டினான் அஷ்வின்.
“நீ பண்ணினதுக்கு நான் தான் கேட்கனும்…” அஷ்வின் இன்னும் முறைக்க,
“ஜாப் விஷயமா சேம்ப்?…” அதிரன் கேட்டதும் இல்லை என தலையசைத்தான்.
“அவ ப்ளானோட தான் ரிசைன் பண்ணிருக்கா. நெக்ஸ்ட் என்னன்னும் மேடம் பக்கா ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்காங்க…” என அஷ்வின் சொல்ல அதிரன் மகளை பார்த்தான்.
“அதை இன்னொரு நாள் ரிலாக்ஸா பேசனும் மாமா. செய்ய கூடியது தான். ஆனா கொஞ்சம் பார்த்து பண்ணனும்…” என்றதும்,
“பேச்சை மாத்திட்டாங்க பாருங்களேன். அப்பா கேளுங்க நீங்க…” ஸ்பூர்த்தி அதிரனுக்கு எடுத்து கொடுத்தாள்.
“நீ சேம்ப் கூட சண்டை போட்டயா ஸ்பூர்த்திப்பா?…” என்று அதிரன் திருப்பி தலைசாய்த்து கேட்டான்.
“ஹ்ம்ம், எங்க?…” என்று சலித்தவள்,
“சரி, நான் வெளில இருக்கேன். நீங்க பேசிட்டிருங்க…” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் அஷ்வினை பார்க்க அவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
“என்னடா போகலையா?…” அதிரன் மகள் அறையின் வாசலில் அருகே நிற்பதை கண்டு கேட்க,
“என்னை இந்த ரூம் விட்டு வெளில போகவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க மாமா. இதையாச்சும் கேளுங்கப்பா…” என்று சிணுங்கலுடன் ஸ்பூர்த்தி சொல்ல அதிரன் தலையசைத்து சிரித்துவிட்டான்.
“அப்ப கேட்டுக்கோ ஸ்பூர்த்திப்பா…” அதிரனும் அவளை போலவே சொல்லி காண்பிக்க,
“உங்ககிட்ட சொன்னது என் தப்பு தான். என் தப்பு தான்…” என்றவள் அஷ்வினை பார்க்க,