“அவ சொன்னா, என்னனு கேட்க மாட்டீங்களா? கட்டின புருஷன் இப்படி இருக்கேன். வரேன்னு சொல்ற பொண்ணுக்கிட்ட என்ன சொல்லனும்? நீங்க கோவிலுக்கு போய் பொங்கல் வாங்கிட்டு வரேன். சாப்பிட்டு சேர்ந்து போவோம்ன்னு சொல்றீங்க…”
அஷ்வின் குற்றம் சொல்லவும் இருவருமே பக்கென்று சிரித்துவிட்டனர். கோபம் போல அவன் பேச பேச அஷ்வினின் தலையை கோதிவிட்ட அதிரன்,
“போதும்டா, எவ்வளோ கோவம் வருது. இதை நீ என்னனு இவ்வளோ நாள் கன்ட்ரோல் பண்ணி வச்சிருந்த?…” என்றவன்,
“கொஞ்சம் பிஸியாகிட்டேன். இல்லைன்னா உன்னை கரெக்ட்டா கவனிச்சிருப்பேன்…” என்று தன் தலையில் லேசாய் தட்டிக்கொண்டான்.
“சாப்பிட கூப்பிட வந்தா சண்டை போடற நீ? இரு பேசிக்கறேன்…” என்ற மேகா,
“நீங்க வாங்க. அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்று அதிரனை அழைக்க,
“இங்க கொண்டுவாயேன் மேகா. அஷ்வினோட சாப்பிடறேன். ரொம்ப நாளாச்சு…” தொண்டை கரகரத்து போய் அவன் சொல்லவும் இருவரின் கையும் பிணைந்துகொண்டது.
“சரி நான் எடுத்துட்டு வரேன்…” என மேகா திரும்ப அங்கே ஸ்பூர்த்தி உணவை எடுத்து வந்திருந்தாள்.
“அஷ்வினுக்கு டின்னர் வந்தாச்சு…” என மேகா சொல்ல,
“ம்ஹூம், அப்பாவுக்கும் மாமாவுக்கும். அப்படியே எனக்கும்…” என்ற ஸ்பூர்த்தி,
“ம்மா, நீங்க போய் சாப்பிடுங்க…” என்று அங்கேயே பிளேட்டை வைத்துவிட்டு தானும் அமர,
“நான்…” என நந்தன் வந்துவிட்டான் அவர்களுடன்.
“அப்ப நானும்…” பல்லவனும் சேர்ந்துகொள்ள பெரியவர்கள் வெளியில் உணவை முடிக்க மோனிகா, மேகா இருவரும் தங்களுக்கும் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்துவிட்டனர்.
வீடியோகாலில் தேவராஜுக்கு அழைத்து பேசிவிட்டு உண்டு முடித்து அரட்டையடித்து என நேரம் சென்றதே தெரியவில்லை.
வெகுநேரம் கழித்து தான் கிளம்ப வேண்டும் என்று தோன்ற அதிரனும், மேகாவும் சுபத்ராவை அழைத்துக்கொண்டு கிளம்ப,
“நீ போகலையா?…” என்றான் அஷ்வின் வேண்டுமென்றே.
“தூங்கி எழுந்து நாளைக்கு கிளம்பிருவேன். கண்டிப்பா…” ஸ்பூர்த்தியும் பல்லை கடித்துக்கொண்டு சொல்ல நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்தான் அஷ்வின்.
அவர்கள் கிளம்பவும் மற்றவர்களும் அவரவர் அறைக்கு செல்ல ஸ்பூர்த்தியும் வேண்டுமென்றே அஷ்வினுக்கு இரவு வணக்கத்தை சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற பார்க்க அஷ்வின் தடுக்கவில்லை.
சரிந்து படுத்திருந்தவன் பார்வை அவளைவிட்டு அருகிருந்த நோட்பேடில் பதிய அதனை எடுத்துவைத்துக்கொள்ளவும் தடுப்பான் என்று பார்த்தவள் இன்னும் கடுப்பாகி போனாள்.
“இந்தாங்க மாமா, நீங்க எழுதும் போதே விரல் எதுவும் வலிக்கலைன்னு புரிஞ்சிருச்சு. எழுதுங்க…”
“அப்ப நீ?…”
“நான் அந்த ரூம்க்கு போறேன்…”
“ஓகே…” என்று வாங்கிக்கொள்ள,
“அவ்வளோ ஆட்டிட்யூட் உங்களுக்கு. ஏன் இருன்னு சொன்னா என்னவாம்? இருக்கமாட்டேனா? போறேன்னு அத்தனைதடவை சொல்றேன். தடுக்கவே மாட்டேன்றீங்க. அவ்வளோ தானா நான்…” என அவனின் ஷோல்டரில் அடிக்க,
“நானா போன்னு சொன்னே. எப்பவாச்சும் சொல்லிருப்பேனா? ஆவுனா பெட்டியை கட்டறது நீ தானே? சும்மா சும்மா உன்னை நான் ஏன் போகாதன்னு சொல்லனும். உனக்கே தெரியாதா என்னோட இருக்கனுமா கூடாதான்னு. அவ்வளோ ஒன்னும் நீ சின்ன பிள்ளை இல்லையே?…”
ஸ்பூர்த்தியை சொல்லியவன் பார்வை அவள் மேனியில் சகட்டுமேனிக்கு பரவி திரிந்ததில் முகத்தை மூடிக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“பார்க்கறது நான். என் கண்ணை மூடாம என்ன பன்ற பூரிக்குட்டி?…” அவளை அத்தனை வம்பிழுத்தான் அஷ்வின்.
“நான் அந்த ரூம்க்கே போறேன்…” என்று அவள் சென்றுவிட எப்படியும் வருவாள் என்று காத்திருக்க ஸ்பூர்த்தி வரவில்லை.
“ரொம்பதான் பன்றடா நீ…” என தன்னையே கடிந்துகொண்டவன் ஸ்பூர்த்தியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“குட்நைட் மாமா…” எடுத்ததும் அவள் சொல்ல,
“ரூம்க்கு வாங்க மிஸஸ்.அஷ்வின்…” என்று அழைத்ததும் ஸ்பூர்த்திக்கு ஜிவ்வென்றது.
“ம்ஹூம், மாட்டேன்…” இருந்தாலும் ஒரு வீம்பு.
இன்று ஒருநாளேனும் அவனை தவிக்கவிடவேண்டும் என்று நினைத்து அவனிடம் மறுக்க,
“ஓகே, நோட்பேட் எடுத்துக்கோ, இங்க இருந்தே லிரிக்ஸ் சொல்றேன். எழுதிக்கோ…” என்றவனின் கிசுகிசுப்பான குரலில் வந்த வார்த்தைகள் அவளை துள்ளி எழ செய்தது.
“ஸ்டாப், ஸ்டாப் மாமா, என்ன இது பாட்டு?…” என்று பதறிபோய் அவனின் அறைக்கே வந்துவிட்டாள் ஸ்பூர்த்தி.
“வா வா. உக்கார். பார்த்து சொல்லும் போது இன்னும் பெஸ்ட் லைன்ஸ் கிடைக்கும்…” என்றான் அவளை பார்வையால் அளந்து.
“பிச்சுட்டேன் உங்களை. இப்ப இருக்கறதென? பேச்சென்ன? மாமா ரொம்ப ரொம்ப மோசம்…” என்று அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளியவளை ஒற்றை கையால் வளைத்து தன்னருகே அமர்த்திக்கொண்டான்.
“ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு சாங் போடலாம்ன்னு சொன்னேன்ல. அதுக்கு தான் இது. ஏன்? என்ன நல்லாயில்லை? அர்த்தத்தோட சொல்லனும்….” என்றவன் கைகள் அவளின் இடையில் அலைய,
“மாமா இன்னும் உடம்பு சரியாகலை…” என்று நெளிந்தாள் ஸ்பூர்த்தி.
“இப்படி உன்னை பக்கத்துல கொண்டுவர எவ்வளோ போரட்டம்? என்னலாம் படுத்திட்ட நீ?…” என்றவன் அவள் கன்னத்தை வலிக்க கடித்துவிட்டு,
“ஒழுங்கா சாப்பிடு. கன்னம் லேசா வத்தி போச்சு. எப்பவும் பூரிக்குட்டி பூரிக்குட்டியா தான் இருக்கனும்…” என்றவன் உணர்வுகள் ஆர்ப்பரிக்க அவளின் பின்னந்தலையில் கூந்தலில் தன் விரல் கோர்த்து அழுத்தம் கூட்டினான்.
“ஸ்பூர்த்திம்மா, ஹவ் ஸ்வீட் நீ கேளேன்? திரும்ப, அன்னைக்கு மாதிரி. அதுல ஒரு மேஜிக் இருந்துச்சுடா…” என்றவனின் பிதற்றல்கள் எல்லை மீற அவன் கைகளுக்குள் துவண்டுபோயிருந்தாள் ஸ்பூர்த்தி.
“பேசுடி, தூங்கும் போது மட்டும் அவ்வளோ பேசுவ. ஆசையா, காதலா, தவிப்பா என்னை நிம்மதியா கண்ணை மூடி இருக்கவிட்டியா நீ? இப்ப பேசு. கேட்கனும். கேட்டுட்டே இருக்கனும்….”
“சொல்லு, புதுசா எதுவும் கேட்கலை. இத்தனை நாள் நான் கண்மூடி இருக்கும் போது சொன்னதெல்லாம் இப்பவும் சொல்லு. அதுக்கு என்னோட பதில் என்னவா இருக்கும்ன்னு நீ தெரிஞ்சுக்கனுமே? கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்….”
“அந்த நொடி என்னோட பார்வை என்னவா இருந்ததுன்னு நீ பார்க்க வேண்டாமா? ஆனா நான் பார்க்கனும். நான் சொல்லும் போது நீ என்ன பன்றன்னு நான் கண்டிப்பா பார்க்கனும். இதோ இப்ப இருக்கியே அதுமாதிரி உன் மனசை உன் முகம் பார்த்து படிக்கனும்…”
அஷ்வினின் பேச்சுக்கள் இன்னும் நீண்டுகொண்டே இருக்க அவனின் மனது அலைகடலென பொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவள் அவனுக்கு வார்த்தைகளின்றி உணர்த்தினாள்.
பேச்சற்ற மௌனம், விடுபடாத இருவிழியின் நெருக்கம். அவர்களுள் மட்டுமே சுழலும் அந்த சப்தங்கள்.
அந்த ரீங்காரத்தின் விளைவு கேசத்தில் கோர்த்த விரல்கள் காட்டிய மென்வலியில், இதழ் பூட்டின் இனிமையான காயத்தில், சந்தோஷத்தில் விழிநீர் வைரமாய் மினுமினு சிந்தியது.
கட்டியிருந்த காதல் நுண்ணுணர்வுகள் கரையும் துளிகளோடு துணை சேர அவனிதழ்கள் சிமிழாக தன்னுள் வாங்கிக்கொண்டான் அஷ்வின்.