“எக் நெஸ்ட்…” என்று அதனை பார்த்துவிட்டு ஸ்பூர்த்தி பார்த்தவன் விழிகள் சுருங்க மீண்டும் அவள் முகத்தை பார்த்தான்.
“ஸ்பூர்த்தி இது என்ன?…” என அரை உறக்கத்தில் இருந்தவளிடம் எழுப்பி கேட்க,
“என்ன மாமா?…”
“அதான் எக் நெஸ்ட்? உன் ட்ராலில இருந்தது…”
“உங்களுக்கே தெரிஞ்சிருக்கே? ஏன் கேட்கறீங்க? லீவ் மீ…”
“ப்ச், சொல்லுடி. என்னன்னு. எப்ப வாங்கின?…” விடாமல் அவளை எழுப்பி கேட்க,
“டெல்லி ஏர்போர்ட்ல தான் வாங்கினேன். சப்போஸ் பாப்பா வந்தா இதை உங்களுக்கு சர்ப்ரைஸா குடுக்கலாம்ன்னு வாங்கி வச்சேன். அதை அங்கையே வச்சிருங்க. கிப்ட் பண்ணும் போது பார்ப்பீங்களாம்…” என்று சொல்ல அஷ்வின் முகத்தில் அப்பட்டமாய் வெட்க புன்னகை.
“ஸ்பூர்த்திம்மா…” என்று அவளோடு முகம் புதைத்து கொஞ்சியவன்,
“அறிவே தான். தெரியாமலே வாங்கிருக்கா. இதை கவனிக்கலை போல?…” என்றவன் அந்த எக் நெஸ்ட்டில் அழுத்தமாய் முத்தம் பதித்தவன் அவளின் இதழில் புதிய,
“ஹ்ம்ம்…” என்று அவனை விலக்க முயன்றாள்.
“ஸ்வீட் தான் பூரிக்குட்டி…” என்றவன் முத்தங்கள் முற்று பெறாமல் தொடர முற்றிலும் உறக்கம் கலைந்து அவனுள் தொலைந்துபோனாள்.
அத்தனை பூரிப்பும், சந்தோஷமும் அஷ்வினிடத்தில். ஏன் என்றே தெரியாமல் அவனோடு உடன்பட்டவள் இன்னுமின்னும் அவனுள் கரைய அவளை விட்டு அணுவளவும் விலகவில்லை அஷ்வின்.
வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சியாய் தரும் என உறவுகளை கொண்டு உணர்ந்திருந்தவன் இத்தனை இனிமையை தரும் என்று மனைவியை கொண்டு உணர்ந்திருந்தான்.
“உங்களை போய் ரொம்ப நல்லவர். வல்லவர், கண்ணியம், கட்டுப்பாடுன்னு நினைச்சுட்டேன் மாமா…” வழக்கம் போல் அப்பாவியாய் ஸ்பூர்த்தி அவனிடம் கேட்க அஷ்வின் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“உனக்கு தான் டவுட். அதான் மாமா கிளியர் பண்ணிட்டே இருக்கேன். நீ ரொம்ப கவலைப்பட்டியே, பொண்டாட்டிக்கிட்ட எப்படி இருப்பேனோன்னு. தெரிஞ்சுக்கிட்ட தானே?…” என அவனும் வழக்கமான பல்லவியை பாட,
“தூங்கட்டா?…” என்றாள் ஸ்பூர்த்தி.
“ஹ்ம்ம் தூங்குடா…” என்றான்.
உறங்குமவளை விழியகலாது பார்த்தவன் அதற்கு மேல் பொறுக்காமல் அதிரனுக்கு அழைக்க,
“சொல்லு சேம்ப்…” என்றான்.
“மாமா, மாமா…” என்று திணறியவனின் குரலில்,
“என்னாச்சு? உடம்பு எதுவும் முடியலையா சேம்ப்? கிளம்பினப்போ நல்லா இருந்தியே?…” என்றான் அதிரன்.
“இப்பவும் நல்லா தான் இருக்கேன்…” என்றவனின் காரணமில்லா சிரிப்பு அதிரனுக்கு யோசனையை தர,
“மாமா, முதல்ல போய் என்னன்னு பார்த்துடுவோம். இவளுக்கு தெரியலை போல? ஆனா எனக்கு டவுட்…”
“ஓகே, மேகாக்கிட்ட சொல்லி பேச சொல்றேன். அவங்க ப்ரீனா வீட்டுக்கு…”
“ம்ஹூம், ஹாஸ்பிட்டல் போகலாம். அங்க வச்சு செக்கப் பண்ணிடுவோம்…” என்று சொல்லியவன் சற்று நேரத்தில் மேகாவிடம் பேசி மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான் ஸ்பூர்த்தியுடன்.
“நான் நோட் பண்ணவே இல்லை மாமா?…” செல்லும் வழியில் அவன் கையை பற்றியபடி ஸ்பூர்த்தி கவலையும், தவிப்புமாய் சொல்ல,
“ஓகே டா. சும்மா தான். இல்லைன்னாலும் ஒரு நார்மல் செக்கப் மாதிரி தான். ஒன்னும் நினைக்காத…” என்றவன் முகத்திலும் அவ்வளவு எதிர்பார்ப்பு.
மருத்துவமனை செல்ல அங்கே அதிரனும், மேகாவும் காத்திருந்தனர். ஸ்பூர்த்தியை பார்க்கவும் மேகா அணைத்துக்கொள்ள அதிரன் புன்சிரிப்புடன் மகளை பார்த்திருந்தான்.
இந்த நொடி மகளை கரு தாங்கி நின்ற மனைவியை பரவசமாய் பார்த்த தினம் கண்முன் வர இப்போது மகளே ஒரு கருவை தாங்கியிருக்கும் அழகிய தருணம்.
“ஸ்பூர்த்தி ரொம்ப டென்ஷனா இருக்கா மாமா…” என்று அஷ்வின் சொல்ல,
“முதல்ல நீ ஒழுங்கா ப்ரீத் பண்ணு மேன்…” என்று அஷ்வினை அமைதிப்படுத்தினான்.
“ப்பா சிரிக்காதீங்க…” என வெட்கத்துடன் ஸ்பூர்த்தி சொல்ல,
“டேய் ஸ்பூர்த்திப்பா, சும்மா தான். வா, வா…” என்று சொல்லவும் அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“வாங்க முதல்ல டாக்டரை பார்த்திருவோம்…” மேகா உள்ளே செல்ல மற்றவர்களும் பின் தொடர நினைத்தவையே தான்.
“என் சேம்ப்க்கு ஒரு லிட்டில் சேம்ப். திரும்பவும் நான் கூப்பிட ஒரு லிட்டில் சேம்ப்…” என்று அஷ்வினை கட்டிக்கொண்டு கொண்டாடிவிட்டான் அதிரன்.
“ப்பா…” என ஸ்பூர்த்தி முறைக்க,
“ஓகே, பொண்ணுனாலும் ஹேப்பிடா ஸ்பூர்த்தி…” என்று மகளை கொஞ்ச,
“எந்த குழந்தையா இருந்தா என்ன? நல்லபடியா பிறக்கட்டும். அதுவரைக்கும் அலையாம வீட்டுல இரு நீ. ட்ரஸ்ட் வேலையை அப்பா, அஷ்வின் பார்த்துப்பாங்க…” என்ற மேகா டாக்டரிடம் கேட்டுவிட்டு கிளம்பினார்கள்.
“எல்லாருக்கும் நாளைக்கு சொல்லலாம். நேரமாகிருச்சு. இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்…” என்று மேகா சொல்லிவிட்டு,
“எங்களோட இரு நீ. அங்க தனியா என்னடா பண்ணுவ?…” என்றாள்.
“ம்மா…” என அஷ்வினையும், அதிரனையும், மேகாவையும் மாறிமாறி பார்க்க,
“சேம்ப் கூடவே கிளம்பட்டும் ஸ்பூர்த்தி. நாம நாளைக்கு போகலாம்…” என்றான் அதிரன்.
அவர்கள் இருவரும் வந்ததை போலவே கிளம்பி வீடு வந்திருக்க வந்ததுமே அந்த பரிசை எடுத்தாள் ஸ்பூர்த்தி.
“இதை வாங்கும் போது நான் நினைக்கவே இல்லை மாமா. நிறைய திங்க்ஸ் இருந்தது. ஆனா எனக்கு இதுதான் அட்ராக்ட் பண்ணுச்சு. உடனே எடுத்துட்டேன்…” என்றாள் கண்கள் லேசாய் கசிய.
அவ்வளவு சந்தோஷம். தன் வயிற்றை வருடிக்கொடுத்தவள் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வலைகள் ஓடியது.
“மாமா, என்னை கட்டிக்கோங்களேன்…” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“தெரியலை. பிள்ளையை நல்லா வளர்க்கனும். என்ன குழந்தை பிறக்கும்னு எல்லாம் யோசிக்கலை. ஆனா உங்களை மாதிரி இருக்கனும்…” என்று அவனின் கன்னம் கிள்ளி சொல்ல,
“மாமா மாதிரி சொல்லுவன்னு நினைச்சேனே…” என்றான் அஷ்வின் மனதை மறையாமல்.
“எங்கம்மா என்னை சுமக்கறப்போ பிள்ளைங்க அப்பா மாதிரி இருக்கனும்னு நினைச்சிருப்பாங்க. நான் உங்களை மாதிரி இருக்கனும்னு நினைக்கறேன். இதுல என்ன இருக்கு?…” என்றவள்,
“அதோட எனக்கு கண்டிப்பா உங்களை மாதிரி தான் வேணும். உங்களோட ஆட்டிட்யூட், நம்மளை பார்த்து வளர்ந்து வரவங்க நல்லவிதமா வரனும்னு நினைக்கிற உங்க குணம் இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்….”
“ஸ்பூர்த்தி ஏன் உன்னை மாதிரி இருந்தா?…” என்றதும் அவனிடமிருந்து விலகி எதிரே அமர்ந்தாள்.
“சத்தியமா வேண்டாம். எந்த சூழ்நிலையையும் சந்தோஷமா வச்சிக்கற ஒரு குணாதிசயம் என்கிட்டே கிடையவே கிடையாது. வேணும்னா வேணும். இல்லைன்னா அப்படியே என் இஷ்டப்படி இருக்கனும்ன்ற குணம் வேண்டாம்ன்னு தோணுது…”
“ஸ்பூர்த்தி…”
“நிஜமா மாமா. என்னால உங்க கூட மட்டும் தான் வாழமுடியும்ன்னு ஒரு கான்பிடன்ட். அதுல மறைமுகமா ஒரு சுயநலம். என்னை நீங்க மட்டும் தான் நல்லா பார்த்துக்க முடியும்ன்னு. உங்ககிட்ட தான் நான் பத்திரமா, சந்தோஷமா இருக்கேன்னு ஒரு நம்பிக்கை…”
“இதுல என்னோட சந்தோஷத்தை நான் ரொம்பவே நினைச்சேன். ஆனா நீங்க அப்படி இல்லை. நான் இல்லைனாலும் யாரை கல்யாணம் பண்ணியிருந்தாலும் நீங்க உங்க வாழ்க்கையை அழகா வாழ்ந்திருப்பீங்க…”
“அடி வாங்குவ நீ…” என்று அவளின் கன்னத்தை கிள்ள,
“உண்மையை தான் சொன்னேன். எங்க அடிங்க?…” என்று இன்னொரு கன்னத்தை வாகாய் காண்பித்தாள்.
“உனக்கு தூக்கம் வந்திருச்சு. உளற ஆரம்பிச்சிட்ட…” என்ற அஷ்வின்,
“இது உளறலா? நிறைய தடவை யோசிச்சிருக்கேன் உங்ககிட்ட என் விருப்பம் சொல்றதுக்கு முன்னாடி. உங்களுக்கு நான் சரியா வருவேனா? பொருத்தமா இல்லையான்னு. ஆனா அப்பவும் இல்லை இல்லை மாமா மட்டும் தான் எனக்குன்னு ஒரு அடமன்ட்…”
“அவ்வளோ கோவம் வரும் எனக்கே என் மேல. உங்களுக்கு வேண்டாம்னாலும் உங்க நினைப்போட தான் இருக்கனும்னு. பல்லவன் மாமாக்கிட்ட வரன் பாருங்கன்னு சொன்னதுக்கப்பறம் நான் பட்டபாடு…”
“ப்ச், இப்ப இதை எல்லாம் நினைச்சு எமோஷனலாக கூடாது. தூங்கு…” என்று மடியில் படுக்கவைத்து தட்டி கொடுக்க,
“சும்மா, உங்களை பயங்காட்ட. எப்ப பார்த்தாலும் என்னை மிரட்டுவீங்களே? எங்க இப்ப அதட்டுங்க பார்ப்போம்…” என புருவமுயர்த்தி சிரித்தவள் முகத்தை இரு கைகளுக்குள்ளும் தாங்கியவன்,
“டாக்டர் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்க சொல்லியிருக்காங்க. இல்லைன்னா எப்படி அதட்டறேன்னு மட்டும் பாரு…” என்றவன் இதழ்கள் மென்மையாய் அவளை வருட அவள் விழிகள் தாமாய் மூடிக்கொண்டது.
“எழுதப்பட்டதை யாராலும் மாத்தமுடியாது ஸ்பூர்த்தி. இதுதான் விதி. உன்னோட விதி நான். உன்னோடு நான். உன்னுடைய நான். பிறக்கும் போதே தீர்மானிச்சிருக்காங்க இதுதான்னு. எப்படி மாறும்? சொல்லு…” என்று கொஞ்சியவன்,
“என்ன எனக்கு முதல்லையே ஒரு ஸ்பார்க் வராம உன்னை சுத்தாம, துரத்தாம விட்டுட்டேன்னு தான் வருத்தம்.,…” என்றவன் உடல் சிரிப்பில் குலுங்க,
“அதான் இந்த ஒருவருஷமா சுத்தியாச்சே?…” என்றவள்,
“இது என்ன பீல்?…” என்றாள் அவனின் கையை எடுத்து தன் வயிற்றில் பதித்து கண்களை மூடி ரசித்து.
“மாமா, பேபி வளரும் போது நாம எப்படி பாட? பேபிக்கு வளர வளர எல்லாம், எல்லாமே கேட்கும்…” என கண்சிமிட்டி கேட்கவும்,
“டேய் ஸ்பூர்த்தி, என்னடா இப்படி கேட்கற?…” என முகம் கொள்ளா புன்னகையுடன் அவளின் தலை கோதினான்.
“சொல்லுங்க சொல்லுங்க…” என கிண்டலாய் ஸ்பூர்த்தி கேட்க,
“அதெல்லாம் சத்தமில்லாம பாட மாமாவுக்கு தெரியும்டா. ரொம்ப யோசிக்காத…” என்று நெற்றியோடு முட்டினான்.
இதயங்கள் இணைந்துகொள்ள, கண்கள் கொஞ்சிக்கொள்ள, கைகள் மாலையாக, இதழ்களில் பெருஞ்சிதறலாய் புன்னகை முத்துக்கள்.
அவன் ஸ்வரம். அவள் அரண். ஸ்வரங்களின் அரண் அவளாக, அவளின் அரண் அவனானான். அவள் இசைப்பில் ஸ்வரமானான்.
இசை கொஞ்சியது. ஸ்வரம் தூறலானது. கச்சேரி இனித்தது. காதல் வெள்ளம் கானமழையென நேச துஞ்சிய நெஞ்சத்தை நனைத்தது.