உண்டு முடிக்கும் வரை வேறு பேச்சுக்கள் தான். அதுவும் நந்தன் இயக்கவிருக்கும் படத்தின் பேச்சுக்கள்.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்தவன் இதுவரை பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிஇருந்தான்.
இப்போது தனியாய் ஒரு படத்தை இயக்கவிருக்க அதன் பேச்சுக்கள் அத்தனை குதூகலமாய் சென்றுகொண்டிருந்தது.
ஆர்வமாய் கேட்டபடி பல்லவனும், மோனியும் இருக்க இதை ஏற்கனவே கேட்டிருந்த அதிரனும் மேகாவும் அமைதியாய் சாப்பிட்டனர்.
“இன்னும் ஒரு தோசை வைங்கம்மா…” என ஸ்பூர்த்தி மேகாவிடம் கேட்க,
“உன் பக்கத்துல தானே இருக்கு?…” என்றான் அஷ்வின் அவளிடம்.
“அஷு…” மோனிகா கண்டிப்பாய் பார்க்க,
“ப்ச், ம்மா, அத்தையும் தானே சாப்பிடறாங்க…” என அவளை போலவே சலித்துக்கொண்டான் அஷ்வின்.
“ஓகே, நானே வச்சுப்பேன்…” என்று பரிமாற வந்த மேகாவை தடுத்து வைத்துக்கொண்டவள் அதனை உண்டுவிட்டு எழுந்துகொண்டாள்.
“ஸ்பூர்த்தி உடனே தூங்காத. ஒரு டேப்லெட் போடு. கீழே விழுந்திருக்க, காயம் கிளீன் பண்ணினாலும் பெய்ன் இருக்கும். நைட் மழை வர மாதிரி இருக்கு. டேப்லேட் எடுத்துக்கறது பெட்டர்…” என்ற அஷ்வின்,
“நானே எடுத்துட்டு வரேன். ஹால்ல வெய்ட் பண்ணு…” என்று தன்னுடைய அறைக்கு சென்றான்.
“இவன் என்ன இப்படி இருக்கான் மோனி?…” பல்லவன் கேட்க,
“எல்லாம் அப்பாவோட காத்து. எவ்வளவு மந்திரிச்சாலும் போறதில்லை…” மோனி கிண்டல் பேச,
“அண்ணி, சும்மா ஏன் அண்ணனை டென்ஷனாக்கறீங்க?…” என்ற மேகா,
“அஷ்வின் சொன்னது கரெக்ட் தானே? ஸ்பூர்த்திக்கே தெரியும் இது கரெக்ட்ன்னு…” என அஷ்வினுக்கு தான் பரிந்துகொண்டு வந்தாள்.
“பார்த்துக்கோ உன் பிள்ளைக்கு என்னைக்காச்சும் இப்படி சப்போர்ட் செஞ்சிருக்கியா?…” பல்லவன் மோனியை வாரிவிட,
“பிள்ளைன்றதுக்காக, புருஷன்றதுக்காக எல்லாத்துக்கும் கண்ணை மூடிட்டு சப்போர்ட் பண்ணனுமா? நான் மாட்டேன்…” பளிச்சென்று மோனிகா சொல்ல அதிரன் சிரித்துவிட்டான்.
“இப்ப ஏன் புருஷன்னு என்னை சொல்ற நீ?…” பல்லவன் உடனே சண்டைக்கு கிளம்ப,
“அடடா, அண்ணா, அண்ணி சும்மா இருந்தாலும் நீங்க விடமாட்டீங்க. கால் வலின்னு சொன்னீங்க தானே? சாப்பிட்டீங்கல. போய் தூங்குங்க…” என்றாள் மேகா அண்ணனிடம்.
“வரு…” பல்லவன் பேச வர,
“ஓகே, குட்நைட்…” என எழுந்துகொண்டான் அதிரன்.
“அதுக்குள்ளையுமா? நானும் போறேன்…” என பல்லவனும் எழுந்துகொண்டான்.
அதிரன் இருக்கிறான் என்றாவது மோனிகா கொஞ்சமேனும் பார்ப்பாள். இல்லை என்றால் அதற்குமேல் பேச்சுக்கள் வரும் என எழுந்துகொண்டான்.
“மாமா, இன்னைக்கு என் கூட ஸ்டே பன்றீங்களா?…” நந்தன் கிண்டலாய் கேட்க,
“பேசாம பாத்திரக்கடையை பார்த்துட்டு இருந்திருக்கனும். வந்தேன்ல, என்னை சொல்லனும்…” என புலம்பியபடி பல்லவன் செல்ல,
“அத்தை ஆனாலும் நீங்க மாமாவை இவ்வளோ ஓட்ட கூடாது…” என்று மோனியிடம் சொல்ல பேசிவிட்டு அவர்கள் எழுந்து சென்றனர்.
“எங்க ஸ்பூர்த்தி?…” என கையில் பாலுடன் ஹாலுக்கு வந்த மேகா மகளை தேட,
“அப்போ கூப்பிட்டேன். ஏன் வரலை? ரெஸ்பான்ஸ் பண்ணனும் தானே? ஏன் நான் கூப்பிட்டா வரமாட்டியா?…” மீண்டும் மீண்டும் அதையே கேட்க,
“இல்லை அப்போ வேற யோசனைல இருந்தேன்…” என்றாள்.
மனது திக்கென்று இருந்தது. அதிலும் அஷ்வின் இத்தனை முறை தன்னிடம் பேச நினைப்பதும் ஏன் என்று வேறு விதமாய் யோசித்தாள்.
ஒருவேளை அவனின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழும்பியிருக்குமோ? இல்லை தனக்கு திருமணம் என்று பேச இருக்கிறார்களோ?
இப்படித்தான் தோன்றியது ஸ்பூர்த்திக்கு. அஷ்வின் வகையில், அவனின் பார்வை, பேச்சில் என அவன் மனது மாறியிருக்கும் என துளியளவேணும் எண்ணம் வரவில்லை ஸ்பூர்த்திக்கு.
மீண்டும் மீண்டும் அவனின் அன்றைய பார்வையும், அதிர்வும் மனதை கிடுகிடுக்க செய்தது.
இப்போது இவனின் பேச்சும், அதிரனின் பேச்சும் என்று ஒன்றுக்கொண்டு சேர்ந்துகொள்ள அப்படித்தானோ என தோன்றியது.
“ஸ்பூர்த்தி…” என்றவன் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க இருவருக்குமிடையே இருந்த இரண்டு சேர்களில் ஒன்று குறைந்திருந்தது.
அவளிடம் சற்று நெருங்கியிருந்தான் அஷ்வின். அதில் திடுக்கிட்டவள் மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
‘உனக்கு கல்யாணமா? என்னவோ செய்துகொள். என்னிடம் அதைப்பற்றி பேசாதே. என்னை இதில் கொண்டுவராதே’ என கத்தவேண்டும் போலிருந்தது.
“ஸ்பூர்த்தி…” அஷ்வின் மென்மையான அழைப்பில்,
“ஹாங், சொல்லுங்க மாமா…” என்றாள்.
“என்னாச்சு? நீ ஓகே தானே?…” என்றான் கனிவுடன்.
“ஹ்ம்ம், ஓகே ஓகே…” என்றவளுக்கு அவனிடம் சொல்ல முடியுமா?
நீ இல்லை என்றாலும் அதனையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ள தன் தகப்பன் சொல்லியதாய்.
தொண்டை எல்லாம் வறண்டுவிட்டது. கலங்கிய மனதை, அதட்டி அடக்கியவள் கவனமாய் அது கண்களை எட்டாமல் பார்த்துக்கொண்டாள்.
அவனின் முன்னால் அவனில்லை என்பதற்கு இன்னொருமுறை கண்ணீர் சிந்த துளியும் விருப்பமில்லை.
ஆனால் பிறந்ததிலிருந்து அவளை பார்த்திருந்தவனுக்கு இது கூட புரியாமல் போய்விடுமா?
அதுவும் இப்போதைய அஷ்வினின் மனநிலை ஸ்பூர்த்தியை மட்டுமே அவதானித்திருக்க இதுவும் அவனிடம் தப்பாமல் பதிந்தது.
“வேற எதுவுமில்லையே? ஏதாவது பேசனுமா? கேட்கனுமாடா?…” தான் பேச வந்ததை மறந்து அவளை அறிந்துகொள்ள முயன்றான்.
“ம்ஹூம், எதுவுமில்லை…”
“சூர்…” என்றான் அப்போதும் நம்பாமல்.
“சூர் மாமா…” உறுதியாய்.
இதற்கு மேல் இந்த விஷயத்தை பேசவும், அதுவும் குறிப்பாய் அஷ்வினிடம் பேச கூட விருப்பமில்லை.
இரண்டு வருடம் முன்பே அவர்களிடமிருந்து சென்றபொழுதே இதனை இப்படியே விட்டுவிடும்படி வீட்டில் அனைவரிடமும் உறுதியாய் சொல்லியிருக்க மீண்டும் அந்த உறுதியை தனக்கு வேலியாக்கிக்கொண்டாள்.
“ஓகே, அப்போ நான் பேசலாம் தானே?…” அஷ்வின் கேட்கவும்,
“உங்க வாழ்க்கை, உங்க விருப்பம் மாமா. அதை என்கூட டிஸ்கஸ் பண்ண எதுவுமில்லை. நான் பேச தயாராவும் இல்லை…” நேரடியாய் அவனை பார்த்து சொல்லமுடியவில்லை என்றாலும் குரலில் அத்தனை ஸ்திரம்.
“நான் நம்ம வாழ்க்கையை பத்தி பேசலாம்ன்னு வந்தேன்…” என்றான் அஷ்வின் கொஞ்சமும் அசராமல்.
ஸ்பூர்த்திக்கு அஷ்வின் சொல்லியதில் பளிச்சென்று மின்னல் வெட்ட அப்போதும் அது தான் புரிந்துகொண்ட அர்த்தமா? இல்லை வேறு எதுவுமா? என தெரியாமல் திகைத்து பார்க்க,
“ஐ மீன் இட்…” என்றான் அவன் அவளிடத்தில்.
“இது எப்படி பாசிபிள்?…” இதை தான் கேட்க தோன்றியது அவளுக்கு.
சுத்தமாய் நம்ப முடியவில்லை. சந்தோஷப்பட கூட முடியவில்லை. எப்படி? இது சாத்தியமே இல்லை என்று மனது அடித்து கூறியது.
“நீ சொன்னது தான். நான் இப்படித்தான் இருப்பேன்னு நீயா நினைச்சிட்டிருந்தா நான் ஒன்னும் பண்ண முடியாது ஸ்பூர்த்தி…”
அதுவரை அடங்கியிருந்த மழை மீண்டும் ச்சோவென்று பலமாய் அடித்து பெய்தது. ஸ்பூர்த்தியின் மனநிலையை போல. அஷ்வினின் மனதை போல.
“என் கண்ணை தவிர…” என்றவளுக்கு மேலும் பேச முடியவில்லை.
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள அஷ்வினை பதட்டமும், பரிதவிப்புமாய் பார்த்தாள்.
அவன் விளையாடவில்லை. யாரின் வற்புறுத்தலுக்கும் அடங்காதவன். நிஜமாய் தனக்காக நினைக்கிறானா?
எதுவும் புரியமுடியாமல் முழுதாய் அனுபவிக்க முடியாத இரு உணர்வு நெஞ்சை பிழிந்தது.
“புரியுது ஸ்பூர்த்தி, அன்னைக்கு என்னோட தாட் அப்படித்தான் இருந்துச்சு. நீ கேட்கவும் அவ்வளோ ஷாக் கூட. ஆனா நான் அந்த ஆங்கிள்ல யோசிச்சதே இல்லையா? அதான் அப்படி நடந்துக்கிட்டேன்…”
“இப்ப எனக்கு தோணுது. உன்கிட்ட என் பார்வை மாறுபடுது ஸ்பூர்த்தி. பார்க்கலாம்…” என்றான் இலகுவாய்.
“பார்க்கலாம்ன்னா?…” ஸ்பூர்த்தி சற்றே கடுப்பில் கேட்க,
“உன் கண்ணை தாண்டி பார்க்கலாம்ன்னு தோணுது வித் யூர் பர்மிஷன்….” என்று சன்னமாய் சிரித்தபடி சொல்லியவன் குரலில் அத்தனை உல்லாசம்.
“நோ…” என்றாள் உடனே.
“இனி நோக்கு வேல்யூ இல்லை…” என அஷ்வினும் உடனே.
இதென்ன பேச்சு? இவன் இதெல்லாம், இப்படியெல்லாம் பேச கூடுமா? ஒருவேளை இப்படி அவனையே நினைத்துக்கொண்டிருப்பதால் கனவோ?
கண்ணை கசக்கிக்கொண்டு, கையை கிள்ளி பார்த்து, சேரை நகர்த்தி, அஷ்வின் முன்னால் கைகளை ஆட்டி காண்பித்து என்று பல கலாட்டாக்கள் செய்தாள் அவ்விடத்தில்.