“தப்புன்னு இப்பவும் சொல்லலைடா. ஆனா உன்கிட்ட நான் எதிர்பார்க்கலையே?…”
“ஏன்? நான் உங்களை நினைக்க கூடாதா?…” என்றவளை காயப்படுத்தாமல் பேசவேண்டுமே என மூச்சை இழுத்துபிடித்தான்.
இனி இவள் தான் என்றான பிறகு இனி இப்படித்தான் தங்கள் வாழ்க்கை போகும் என்றாலும் அவளை விடுவதாய் இல்லை அஷ்வின்.
“உங்க பேரன்ட்ஸ், என்னோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க தானே?…”
“எல்லாம் சரிடா…” என்ற அஷ்வினை கையமர்த்தி நிறுத்தியவள்,
“என்னை நீங்க லவ் பன்றீங்களா மாமா?…” என்றாள் நேரடியாக இப்போது.
“ஸ்பூர்த்தி…”
“பொய் சொல்லமாட்டீங்கன்னு நம்பறேன்….” என்று அவனை பார்த்து கேட்க திகைப்பு மாறி முகத்தில் சிறு குறும்பு அஷ்வினிடம்.
“லவ் பன்றேனா என்னன்னு தெரியலை. ஆனா வேற யாரையும் லவ் பண்ண தோணாது. வொய்ப் அப்டின்ற பொசிஷன்ல நீ எப்பவோ வந்துட்ட எனக்குள்ள. இதுவும் ஒருவகையில லவ் தானே?…” என்றவன் பேச்சில் ஸ்பூர்த்தி தான் பேச்சற்று பார்த்தாள்.
“நீ எதிர்பார்க்கிற மாதிரி நான் இருப்பேனான்னு தெரியலை. ஆனா ஒரு நல்ல ஹஸ்பன்டா நான் இருப்பேன். அதை நம்ம சேர்ந்து லைஃப் லீட் பன்றப்ப தெரிஞ்சுப்ப…” என உறுதியாய் சொல்லியவன் கைகளுக்குள் அவள் விரல்களில் லேசாய் அசைவுகள்.
“உன்னை பிடிக்கும்டா ஸ்பூர்த்தி. கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபிள். பார்த்துக்கலாம். இப்போதானே ப்ரப்போஸ் பண்ணியிருக்கேன்…” என்று இருக்கையில் பின்னால் சாய்ந்துகொண்டு பேச,
“அதுக்கு பேர் ப்ரப்போஸ் இல்லை…”
“நீயும் தான் அப்படி கேட்கலை என்கிட்டே. நான் அதை ப்ரப்போசலா எடுத்துக்கலையா?…”
“அது வேற மாமா. ஆனா நான் கேட்டதால தானே உங்களுக்கு இந்த தாட் வந்துச்சு. இல்லைன்னா?…”
“இல்லைன்னா?…”
“இந்த ரெண்டுவருஷத்துக்குள்ள உங்களுக்கு கல்யாணமே பண்ணியிருப்பாங்க அத்தையும், மாமாவும்…” என்று சொல்ல வாய்விட்டு சிரித்தான் அஷ்வின்.
“சோ ஸ்வீட்…” எப்போதும் அவனின் புன்னகையை கண்டால் மனதிற்குள் சொல்லிக்கொள்பவள் இன்று சத்தமாக சொல்லிவிட,
“கம் அகைன்…” என்றான் அவளருகே குனிந்தமர்ந்து.
“அத்தை ஸ்மைல் கூட உங்க ஸ்மைல் மாதிரியே தான் இருக்கும்…”
“இன்னும் ஞாபகமிருக்கா?…” என புருவமுயர்த்தி அவள் கேட்டவிதத்தில் காதை பிடித்து திருகியவன்,
“அப்பவே என்ன பேச்சு உனக்கு?…” என்றவன்,
“ஓகே, சொல்லு எந்தவிதத்துல என்னை கட்டிக்கிட்டா கஷ்டம்ன்னு சொன்ன?…” என்றான்.
“மாமா விடுங்க…” ஸ்பூர்த்தி எழுந்துகொள்ள பார்க்க,
“ம்ஹூம், சொல்லிட்டு போ…”
“மாட்டேன்…”
“சொல்லுன்றேன்ல. இப்ப பேசலாம். அதை பத்தின பேச்சு பேசற வயசு வந்திருச்சு…”
“என்ன?…”
“கல்யாணம் பண்ணிக்க போறோம். கல்யாணம் பத்தி பேசலாம் தானே? அதான் கேட்டேன். நீ என்ன நினைச்ச?…” என்றான் கண்சிமிட்டி.
“மை காட். நான் போறேன்….” என ஸ்பூர்த்தி அவனிடமிருந்து எழுந்துகொள்ள சிரிப்புடன் பார்த்திருந்தான்.
அவளை தடுக்கவெல்லாம் இல்லை. ஸ்பூர்த்தி எழுந்துகொள்ளவும் அவளின் வேகத்தையும், அதில் ஒட்டியிருந்த வெட்கத்தையும் உள்ளூர ரசித்தபடி பார்த்திருந்தான்.
“குட்நைட் சொல்ல மாட்டியா ஸ்பூர்த்தி?…” என்றான் எழுந்து நடந்து சென்றவளை பார்த்து.
“ஸாரி மாமா…” என்று அவள் சொல்லும் முன்,
“அந்த வெட்ஆனியன் எல்லாம் இவனுக்கு எதுக்குன்னு நினைச்சியா?…” என்று கேட்க மெல்லிய அதிர்வுடன் பார்த்தவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும்?…”
“தெரியும். பாலிஷ்டா பேசினா தப்பில்லையோ?…” என்றான் சற்றே முறைத்துக்கொண்டு.
“ப்ச், அந்த மினிஸ்டர் டென்ஷன் பண்ணிட்டார் அன்னைக்கு. வேற என்ன சொல்ல?…”
“அதுக்குன்னு மினிஸ்டர்ட்ட இப்படி சொல்லுவியா?…” என்று எழுந்துவந்தான் அவளருகே.
“நான் அவரை ஒன்னும் சொல்லலையே?…”
“ஸ்பூர்த்தி…”
“நிஜமா மாமா, அவரை நான் சொல்லலை. என்கிட்டே பொண்ணாச்சேன்னு பார்க்கறேன்னார். அந்த மிஸ்டர் கன்செர்ன் வெட்ஆனியனை நானே பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்கன்னு மட்டும் தான் சொன்னேன்…”
பாவம் போல சொன்னாலும் கண்களில் ஏக சிரிப்புடனும், அப்படித்தான் சொல்வேன் என்னும் பிடிவாதமும் அவளிடத்தில்.
“நினைச்சதை பேசுவேன்ற, அதானே?…”
“தப்பில்லையே மாமா?…” என்று சொல்லியவளை நினைத்து மெல்லிய கவலை அவனுக்கு.
“டேக் ரெஸ்ட் ஸ்பூர்த்தி…” என்று அவளின் தலையை லேசாய் வருட,
“சீக்கிரம்ன்னா உடனேன்னு இல்லை. ஆனா சீக்கிரம்…” என்று சொல்ல ஸ்பூர்த்தி தான் திணறி போனாள்.
இரண்டு வருடம் தனியாய் தவித்து உருகி அவனை நினைத்திருக்க இவன் திருமணம் என்ற உடனே சம்மதிக்க வேண்டுமோ?
மனது இருதலைகொள்ளி எறும்பாய் தவித்தது. பதில் சொல்லாமல் அவள் விழிக்க,
“குட்நைட் ஸ்பூர்த்தி. போய் தூங்கு…” என்று தனது மொபைலை எடுத்துக்கொண்டான்.
“இதுக்கு தான் வர சொன்னீங்களா?…” ஸ்பூர்த்தி கோபமாய் கேட்க,
“இப்போதைக்கு இது தான்…” என்றவன் அவளை செல்லுமாறு தலையசைத்தான்.
“குட்நைட் வாபஸ், நைட்டெல்லாம் முழிச்சிருங்க. தூக்கமே வர கூடாது. இனி கல்யாணம் வரை நீங்க தூங்கவே கூடாது…” என்று அவள் சொல்லிவிட்டு வேகமாய் சென்றுவிட,
“என்னைக்கு நீ என்கிட்டே கல்யாணம் பண்ணிக்க பேசினயோ அன்னில இருந்தே என் தூக்கம் போச்சுடா ஸ்பூர்த்திம்மா. உனக்கு தான் புரியலை…” என சொல்லிக்கொண்டவன் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
பார்வைகள் அலைபேசியின் மீது ஊற அதில் வந்த செய்தியில் புருவம் சுருக்கினான்.
உடனே அந்த நேரம் என்றும் பாராமல் எண்ணிற்கு அழைக்க அழைப்பு எடுக்கப்பட்டது.
“சொல்லு லக்ஷ்மணன்…” என்ற அஷ்வினின் குரலில்,
“ண்ணா, நீங்க இப்ப கூப்பிடுவீங்கன்னு நினைக்கலை. காலையில பார்த்துட்டு கூப்பிடுவீங்கன்னு தான் நினைச்சேன்…”
“எனி ப்ராப்ளம்…”
“கிட்டத்தட்ட. இந்த விஷயம் மீடியாவால பெருசாகிடுச்சு. இப்ப பசங்க மேல கேஸ் ஸ்ட்ராங்கா பைல் பண்ணினதால ஜாமீனும் கிடைக்காதுன்னு சொன்னதுல வேதநாயகம் இங்க வெறிபிடிச்ச மாதிரி இருக்கார்…”
“சோ?…”
“மேடமை பார்த்துக்கோங்க. சும்மா இல்லாம எவிடன்ஸ் எல்லாம் மீடியால ஸ்ப்ரெட் பண்ணி கேஸை இன்னும் ஸ்ட்ராங் பண்ணிவிட்டுட்டாங்க. ஏற்கனவே பாரஸ்ட் ஃபயர் ப்ளஸ் இந்த கேஸ்ன்னு சீரியஸா போக ஆரம்பிச்சிருச்சு…”
“ஸ்பூர்த்தியை நான் பார்த்துக்கறேன். நீ பத்திரம்…”
“ஓகே ண்ணா…” என்று லஷ்மணன் வைத்துவிட அஷ்வின் முகம் யோசனையானது.
மறுநாள் இதனை குறித்து அதிரனிடம் பேசிவிட்டு உடனே சென்னை கிளம்பவேண்டும் என்று முடிவெடுத்தான் அஷ்வின்.
அவளுடனே சென்றான், அவளோடு மட்டுமே இருந்தான். அடுத்து அவனின் நாட்கள் அவளுடனே கழிந்தது.