“என் பேத்தியை பார்க்கலாம்ன்னு இருந்தேன். உன் மாமா நாளைக்கு போகலாம்ன்னு சொல்லிட்டார். சரி வரவும் கேட்டுக்கிடுவோம்ன்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன்…” மலர் கூற,
“உங்க பேத்தி அவளே வருவா, பார்க்கலாம். இப்ப போய் படுங்க. முழிச்சிருந்தா எல்லாம் ஆச்சா?…” என்று சொல்லிவிட்டு,
“மாமா சாப்பிட்டீங்க தானே? வேற எதாச்சும் வேணுமா?…” என்று கேட்க,
“இல்லம்மா. நீ போய் ரெஸ்ட் எடு. நான் இவன்கிட்ட பேசிட்டு போறேன்…” என்றார் அமுதினியன்.
“மலரு நீயும் போய் தூங்கு…” என்று சொல்ல அவரும் சென்றுவிட்டனர்.
பல்லவன் இன்னும் எதுவும் பேசவில்லை. வந்ததிலிருந்து அமைதியாகவே இருக்க மகனை என்னவென்று கேட்க அமர்த்திக்கொண்டார்.
“என்ன பார்த்திட்டே நிக்கிற? கிளம்பு. வரேன்…” என்று மோனியிடம் சொல்லி ஹாலில் அமர்ந்துகொண்டான் பல்லவன்.
அமுதினியனை ஒருபார்வை பார்த்த மோனிகா ஒன்றும் பேசாமல் நகர்ந்துவிட மலரும் சென்றுவிட்டார்.
“என்னப்பா? எதுவும் பிரச்சனையா?…” அமுதன் கேட்க,
“ஹ்ம்ம், மனசே சரியில்லப்பா…”
“ஏன்? அதான் பாப்பா அங்க வந்துட்டா தானே? எல்லாம் நல்லவிஷயம்ன்னு தானே பேசிட்டிருந்தீங்க. நான் கூட ஒரு நல்ல நாள் பார்த்துட்டு கல்யாணத்துக்கு தேதி பார்க்கலாம்ன்னு இருந்தேன்…”
“அப்பா…” பல்லவன் ஆற்றாமையுடன் பார்த்தான்.
“என்னப்பா? ஏன் முகமே வாடி இருக்கு?…” என்றவர்,
“ஏன் உனக்கு இதுல விருப்பமில்லையா?…” என நேரடியாகவே கேட்டுவிட்டார்.
எப்படி சொல்வது என தெரியாமல் பல்லவன் அந்த கேள்வியில் தடுமாறி தகப்பனை பார்க்க,
“ஆமா தாத்தா, அப்பாவுக்கு விருப்பமில்லை…” என வந்து நின்றான் அஷ்வின்.
கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்திருக்க பல்லவன் மகனின் திடீர் வருகையிலும், பேச்சிலும் அதிர்ந்து அமர்ந்திருந்தான்.
“தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கப்பா. அப்பான்னாலே அன்பு தான். என்னோட அப்பாவை நான் யாரோடையும் கம்பர் பண்ண மாட்டேன். ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு விதத்துல ஸ்பெஷல்னா பேரன்ட்ஸ் அதைவிட ஸ்பெஷல். எனக்கு அப்படித்தான் ப்பா…”
“ஆனா நான் இப்படி இருக்கறது மட்டும் தப்புன்னு சொல்றியே அஷ்வின்?…”
“நிச்சயமாப்பா. தப்பு தான். நீங்க சுயநலமா யோசிக்கறீங்க. அதை தப்புன்னு சொல்ல வரலை. ஆனா இதுல ஸ்பூர்த்தியை பிரிச்சு பார்க்கறீங்களே. அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு…” அஷ்வின் சொல்லவும் பல்லவன் மௌனமானான்.
“அதி மாமாவுக்கும், அத்தைக்கும் உங்களை தெரியாதுன்னா நினைக்கறீங்க? இல்லை உங்களுக்கு இஷ்டமில்லைன்னு அவங்கட்ட இருந்து மறைக்க முடியும்ன்னு நினைக்கறீங்களா? வாய்ப்பே இல்லை….” என்றான் அஷ்வின் உறுதியாக.
“பிள்ளைங்கன்னு வந்துட்டாலே அப்பாவா எனக்கு என் வாரிசு முக்கியம்ன்னு தான் தோணும். இதுல தப்பில்லைப்பா. அதுக்காக நான் என் தங்கச்சி பொண்ணை விட்டுடமாட்டேன்…”
“வாவ், வாவ். செம்ம ப்பா. ஓகே சொல்லுங்க. வேற எப்படி பார்த்துப்பீங்க உங்க தங்கச்சி பொண்ணை?…” அஷ்வின் ஆச்சர்யம் போல கேட்க,
“அஷ்வின், என்ன கிண்டலா?….” பல்லவன் கோபத்துடன் கேட்க,
“நோ ப்பா, கிண்டல் எல்லாம் இல்லை. நீங்க சொன்னதுக்கு தான் கொஷின் பண்ணேன். எப்படின்னு நானும் தெரிஞ்சுக்கலாமேன்னு…” என்ற மகனிடம் எப்படி பேசமுடியும் என பார்த்த பல்லவன்,
“உன் மாமாவோட பேச்சு சாமர்த்தியம் அப்படியே இருக்குடா உனக்கு…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு பல்லவன்.
“நல்லதை யார்கிட்ட இருந்துவேணாலும் கத்துக்கலாம் ப்பா. இதுவும் என் மாமா சொல்லித்தந்தது தான்…”
அஷ்வின் அதிரனை எங்கேயும் விட்டுவிடமால் பேச அதுவே பல்லவனுக்கு எப்போதும் தோன்றாத ஒரு எண்ணத்தை இந்த நொடி தோற்றுவித்தது.
“என்னைவிட உனக்கு உன் மாமா பெருசா போய்ட்டாங்களா?…” கோபத்துடன் பல்லவன் கேட்க,
“உங்களுக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? அவன்கிட்ட என்ன கேட்டுட்டு இருக்கீங்க?…” என்று மோனிகா கடுப்பாகிவிட்டாள்.
“நீ வாயை மூடு. உன் வேலையை பாரு…” என அவளை அடக்கியவன்,
“எனக்கு மேல உன் மாமன் உனக்கு நல்லது நினைக்க முடியும்னா இந்த கல்யாணத்தை நடத்தாம இருக்க முடியுமா? இல்லை ஸ்பூர்த்தியை இந்த வேலையை விட்டுட்டு வந்து உன்னை மேரேஜ் பண்ணிக்க சொல்ல முடியுமா?…”
“மாமா என்ன சொல்றது? நானே இதுக்கு ஒத்துக்கமாட்டேன். நீங்க மாமா வரை ஏன் போகனும்?…” என்ற அஷ்வின்,
“ஒருவேளை எனக்கு இப்பவும் ஸ்பூர்த்தி மேல அப்படி ஒரு எண்ணம் வராம இருந்தா நிச்சயம் மாமா எனக்காக தான் யோசிப்பார். அதை என்னால உறுதியா சொல்லமுடியும்…” என்றவன் முகத்தில் அதிரனின் மீதான அன்பின் கர்வமே மிளிர்ந்தது.
மோனிகாவுக்கும், அமுதினியனுக்கும் தான் இதில் ஏக வருத்தம். இத்தனை வருடத்தில் இப்படி இந்த மாதிரியான பேச்சுக்கள் என்றுமே வந்ததில்லை.
அதிலும் பல்லவன் மனதில் இந்த விரிசல் குடும்பத்திற்கு நல்லதென்று படவில்லை.
“பல்லவா என்னப்பா நீ? நம்ம பிள்ளைங்கப்பா. நாளைக்கு இதே கேள்வியை ஸ்பூர்த்திட்ட கேட்டாலும் அவ உன்னை விட்டு குடுக்கமாட்டாப்பா. எங்கருந்து பிள்ளைங்களை வேறையா பார்க்க ஆரம்பிச்ச நீ?…” அமுதன் கேட்டுவிட பல்லவன் மௌனமாய் நின்றான்.
“ஸ்பூர்த்தி எப்போ அவ ஆம்பிஷன்னு அந்த படிப்பை செலெக்ட் பண்ணினாளோ அப்ப இருந்தே தான் தாத்தா. அவகிட்ட அவ்வளோ ப்ரைன்வாஷ் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க அப்பா. அந்த படிப்பு வேண்டாம்ன்னு…”
அஷ்வின் அமைதியாக இதனை சொல்ல அமுதனுக்கு இது புது செய்தி. அவருக்கு இது தெரியவில்லை.
“என்ன பல்லவா இது?…” என்ற அமுதன்,
“உன் மகன் அவன் நினைச்சதை செய்யனும்னு சொல்லும் போது உன்னால அதை தடுக்க முடிஞ்சதா? விருப்பம் போல செய்யட்டும்ன்னு விட்ட. இதையே ஸ்பூர்த்தி அவளுக்கு பிடிச்சதை செய்யனும்னா தடுப்பியா நீ?…” கண்டிக்கும் குரலில் அவர் பேச,
“ஏனா எனக்கு ஸ்பூர்த்தியை அஷ்வினுக்கு எடுக்கனும்னு ஒரு ஆசை இருந்துச்சுப்பா. அந்த படிப்பு, அது தொடர்ந்து வேலைன்னு எனக்கு பிடிக்கலை. அதான் பேசினேன். இதுல என்ன தப்பு?…” என்றவன்,
“ஆமா, என் மகனுக்கு ஸ்பூர்த்தி எடுக்க இப்ப இஷ்டமில்லை. போதுமா? தெரிஞ்சிருச்சா?…” என்றான் பல்லவன் சத்தமாகவே.
“அப்பா…” அஷ்வின் குரலுயர்த்த,
“என்னடா அப்பா? அப்பா தான் சொல்றேன். அப்போ ஸ்பூர்த்தியை இந்த இந்த வேலையே ரிசைன் பண்ண சொல்லு. முன்ன நின்னு சந்தோஷமா நானே இந்த கல்யாணத்தை அமோகமா நடத்தி வைக்கறேன்….”
பல்லவன் முடிவாய் சொல்ல அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் பார்க்க அஷ்வினின் முகத்தில் பெரும்வலி.
“இல்லைன்னு சொல்லலை அஷ்வின். ஆனா நமக்கு ஏன் இந்த கஷ்டம்ன்னு கேட்கறேன். அப்படி கஷ்டப்படனுமா? வேலைக்கு போறதுக்கு மட்டுமில்லை. இப்பவும் நமக்கு கஷ்டம் தான்…”