ஸ்டூடியோவின் வெளியே பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நின்றுகொண்டிருக்க போனில் பேசிக்கொண்டிருந்த அஷ்வினின் முகம் கடுத்தது.
“ஹ்ம்ம், உள்ள வந்துட்டாங்க மாமா…” என்றான் அதிரனிடம்.
“ஓகே டேக் கேர் சேம்ப். நான் வீட்ல தான் இருக்கேன். இங்கயும் வந்தாச்சு. பார்த்துக்கறேன்…” அதிரன் சொல்ல,
“மாமா அப்பா…”
“ஹ்ம்ம், கடையில, வீட்டுல எல்லா இடத்திலையுமே ரெய்ட். பண்ணட்டும். நீ வொர்ரி பண்ணிக்காத சேம்ப்…” என்று தைரியம் சொல்ல அதற்குள் உள்ளே வந்துவிட்டனர்.
அதிரன் தேவராஜ் சம்பந்தப்பட்ட அனைத்து இடத்திலும் வருமானவரித்துறையினர் திடீரென்று சோதனை என கிளம்பி வந்திருந்தனர்.
அது பல்லவன் வீட்டிலும், பாத்திர கடையிலும் என்று சேர்ந்தே தொடர்ந்தது. ப்ளாஷ் ந்யூஸ் சுட சுட ஒளிபரப்பாகியது.
பாடகரும், முன்னணி நடிகருமான அதிரன் தேவராஜ் இல்லத்தில் வருமானவரித்துறையின திடீர் சோதனை.
அதே நேரத்தில் பிரபல இசையமைப்பாளர் அஷ்வின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
குறிப்பிட்டு இவர்கள் இல்லத்திலும், ஸ்டூடியோவிலும் ரெய்ட் நடத்த திட்டமிட்டதன் பின் காரணிகள் எதுவாக இருக்க கூடும்?
இப்படியாக செய்திகள் வந்தவண்ணம் இருக்க ஸ்பூர்த்தி அத்தனையும் வேடிக்கை பார்த்தபடி இறுக்கமாய் நின்றாள்.
அஷ்வினுக்கு அங்கிருந்து எங்கும் செல்லமுடியவில்லை. அவனின் அலைபேசியும் கூட பறிக்கப்பட்டிருக்க பல்லவனும், அமுதனும் என்ன செய்கிறார்களோ என்று பதட்டமாக இருந்தது.
வருமானவரி சோதனை என்பது கேள்விப்பட்ட ஒன்று என்றாலும் இதுவரை அப்படியான நிகழ்வு எதுவும் தன்னுடைய வீட்டில் நடந்ததில்லை.
இதுவே முதன்முறை. பல்லவனை நினைக்க மனதிற்குள் பெரும் சூறாவளி. எப்படி இதனை கையாள போகிறாரோ என்று அச்சமாக இருந்தது.
அந்த உணர்வு அவனின் முகத்தில் நொடிபொழுதேனும் வந்து செல்ல ஸ்பூர்த்தியும் கவனித்துவிட்டு அமைதியாக நின்றாள்.
எந்தவித குளறுபடிகளும் இன்றி கணக்குகள் எல்லாம் நேர்பட இருந்தாலும் அந்த நேரத்திற்கான பதட்டம் என்பது நிச்சயம் இருக்கும் தானே? பல்லவனும் அதற்கு விதிவிலக்கில்லை.
அதிலும் எத்தனை கேள்விகள் கேட்பார்களோ? திடீரென கிளம்பி வந்ததன் நோக்கத்தின் பின்னணியில் யாரேனும் இருக்க கூடும் என அஷ்வின் நினைக்க ஸ்பூர்த்திக்கு அது வேதநாயகம் என்று புரிந்திருந்தது.
தைரியமாக நின்றிருந்தாள் ஸ்பூர்த்தி. எப்படியும் எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் தான் செல்ல போகின்றார்கள்.
எதற்கு பயப்படவேண்டும் என்று அவளுக்கு கொஞ்சமும் அச்சமில்லை இதனைக்கொண்டு.
வந்திருந்த அனைவருமே கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடாத குறை தான்.
அது அவர்கள் பணியாக இருந்தாலும் என்னவோ எதற்கோ முடுக்கிவிடப்பட்ட விதமாய் இன்னும் தீவிரத்துடன் தேடிக்கொண்டிருக்கவும் தான் ஸ்பூர்த்தி இதழ்களில் இளக்கார புன்னகை.
“இந்த வெட் ஆனியன்க்கு இன்னுமா செல்வாக்கு இருக்கு? தப்பாச்சே?…” என சத்தமின்றி வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“வாட்? கம் அகைன்…” என அவளருகே இருந்த அஷ்வின் என்னவென்று கேட்க,
“இவங்க டூயிங் டூ குட் மாமா. அதான் பாராட்டினேன்…” என்று நக்கலாக சொல்ல அதுவரை டென்ஷனில் இருந்தவனுக்கு சற்றே ஆசுவாசமாய் இருந்தது.
“ஆனாலும் ரொம்ப ஸ்ட்ராங் நீ…” என சொல்லியவன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.
“அங்க பல்லவன் மாமா சமாளிச்சிருவாங்களா?…” என்று கேட்க மீண்டும் அஷ்வின் முகம் மாறியது.
“ஒன்னும் இல்லை, இதெல்லாம் பழகிடும்…” என அதற்கும் ஸ்பூர்த்தி சொல்ல,
“ஷட் அப் ஸ்பூர்த்தி…” என்றான் அஷ்வின்.
“எப்படியும் ஒன்னும் கிடைக்க போறதில்லை. இவங்க விழுந்து விழுந்து தேடறாங்க…”
“ஸ்பூர்த்தி…”
“எங்கப்பா நிஜத்துலயும் ஹீரோவா இருக்கறவர் மாமா. உங்களுக்கு தெரியாததா? சின்ன விஷயத்துல கூட மத்தவங்களுக்கு தவறான உதாரணமா இருந்திட கூடாதுன்னு இருக்கறவர். இவங்க தேடினா கிடைச்சிடுமா?…” என்றாள் ஸ்பூர்த்தி கர்வத்துடன்.
அதை கண்ட அஷ்வினுக்கும் அது புரிந்தாலும் அவனால் இலகுவாய் எடுத்துக்கொள்ளமுடியவில்லை.
அந்த நிமிடம் தந்தைக்கு துணையாக அங்கே இருந்திருக்கவேண்டும் என நினைத்தான்.
ஆனால் இப்படி இங்கே மாட்டிக்கொள்ள நேரிடும் என தெரியாமல் போனது. அங்கிருந்து செல்லவும் முடியாது.
சோதனை முடிந்து கிளம்பி செல்லும் முன் அவனிடம் கையெழுத்து கேட்க கடுப்புடன் போட்டு முடித்தவன் வேலையை முடித்துவிட்டு வேகமாய் ஸ்பூர்த்தியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
மோனிகாவிற்கு அழைத்து பல்லவன் எங்கே என அங்கு நடந்த நிகழ்வை எல்லாம் கேட்டு தெரிந்துகொண்டவன் வீட்டிற்கு செல்ல அங்கே பல்லவன் இடிந்து போனதை போல் அமர்ந்திருந்தான்.
“அப்பா…” அஷ்வினின் அழைப்பில் கூட நிமிராதவன் எழுந்து உள்ளே சென்று கதவை படாரென்று அடைத்துவிட்டான்.
“ம்மா, என்ன?…” மோனியிடம் பேச,
“அப்பா கொஞ்சம் பதட்டமாகிட்டான் ப்பா. அதுவும் உன் தாத்தா மட்டும் கடையில இருக்க இவனால சட்டுன்னு போகவும் முடியலை. போனையும் பிடுங்கி வச்சுட்டானுங்க. அத்தனை கேள்வி கேட்கறானுங்க…” மலர் சொல்ல,
“அத்தை நீங்க சும்மா இருங்க. ஏற்கனவே என்னன்னு புரியலை. திடீர்ன்னு இப்படி ஒரு விஷயம். முதல்தடவை இப்படி நடந்ததால பதறிட்டார்…” மோனிகா மலரை சமாதானம் செய்தாள்.
“முதல் தடவையா? அப்ப இன்னும் வருவாங்களா? இதுவரைக்கும் இப்படியெல்லாம் நடந்ததிலையே?…” என மலர் அடுத்ததாய் புலம்ப ஆரம்பிக்க,
“அச்சோ அத்தை. கொஞ்சம் பேசாம இருங்க. பாருங்க ஸ்பூர்த்தி வந்திருக்கா…” என்றதும் தான் பேத்தியை கவனித்தார்.
“வாடா குட்டிம்மா. இப்பத்தான் இந்த பாட்டியை பார்க்க வரமுடிஞ்சதா? பார்த்தியா என்ன எல்லாம் நடக்குதுன்னு?…” என அவளிடம் பேச ஆரம்பிக்க,
“பாட்டி…” என அஷ்வினின் சத்தம் கூட எடுபடவில்லை.
“விடு அஷ்வின், அவங்க பயந்துட்டாங்க. அதான் பேசிட்டிருக்காங்க. ஸ்பூர்த்தி பார்த்துப்பா. நீ வா…” என பல்லவன் சென்று மறைந்த கதவை தட்டினார்கள்.
பல்லவன் வெகுநேரம் சென்றே கதவை திறக்க கண்ணெல்லாம் ரத்தமாய் சிவந்து போய் இருந்தது.
“என்னங்க…” என்ற மோனியை கண்டுகொள்ளாமல் அவன் உள்ளே செல்ல,
“நான் பேசிக்கறேன் ம்மா…” என அவரின் பின்னே அஷ்வின் சென்றான்.
“ஏன், அதி மாமா பேஸ் பண்ணாததா? திடீர்ன்னு எதாச்சும் பால்ஸ் நியூஸ் போயிருக்கும். வந்தவங்களே அப்படித்தான் சொல்லிட்டு போனாங்க…”
“பால்ஸ் நியூஸ்ன்னு சொன்னா சரியா போச்சா? இதுவரைக்கும் மரியாதையா தான் வெளில பேர் வந்திட்டு இருந்துச்சு. இப்ப நம்மளை பார்க்கிறவங்க பார்வை நம்மகிட்ட நல்லவிதமா இருந்தாலும் பின்னால வேற மாதிரி இருக்கும் அஷ்வின்…”
“நீங்களா பேசறீங்க? அப்படிப்பட்ட பார்வைக்கு நாம ஏன் முக்கியத்துவம் தரனும் ப்பா?…” அஷ்வினுக்கு தகப்பனிடம் எப்படி சொல்லி புரியவைக்க என்று தெரியவில்லை.
“இப்பவுமே என்ன பேச்சு ஓடும்? இவங்க கவர்மெண்டை ஏச்சு சம்பாத்தியம் பண்ணியிருக்காங்கன்னு தானே சொல்லுவாங்க…”
“அப்பா, என்ன இது கற்பனை? இதெல்லாம் நாம யோசிச்சா?…”
“என்னடா? என்ன பேசற? இப்படி யோசிக்காம? நாம என்னதான் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இதெல்லாம் அப்படித்தான். என்னை மாத்த முடியாது….” என பிடிவாதமாய் பேசினான் பல்லவன்.
பல்லவனால் நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை வருடமும் தொழிலில் வாங்கியிருந்த பெயருக்கு சிறு கரும்புள்ளி சேர்ந்துவிட்டதை போல இருந்தது.
“அப்பா இது யாரோ வேணும்னே பண்ணினது. இதுக்காக போய்…” அஷ்வின் சொல்ல,
கோபத்தில் பேசி கெஞ்சலில் கொண்டுவந்து மகனிடம் மன்றாடி நின்றான் பல்லவன்.
“அப்பா ப்ளீஸ்…” என சொல்ல அதிரனிடமிருந்து அழைப்பு.
“மாமா தான் கூப்பிடறாங்க…” என அஷ்வின் சொல்ல பல்லவன் முகத்தை திருப்பிக்கொண்டான்.
இந்த விஷயத்தை கொண்டு எங்கே இரு குடும்பத்திற்குள்ளும் விரிசல் வந்துவிடுமோ என ஒருபக்கம் பயமாக இருந்தாலும் மகன் என்று வருகையில் எதுவும் பெரிதில்லை என்று தோன்றியது பல்லவனுக்கு.
மகன் இருந்தால் தானே குடும்பம், உறவுகள், நிம்மதி, சந்தோஷம் எல்லாம். அவனின் மனநிம்மதி குலைந்தால் இவை எல்லாம் இருந்து என்ன பயன் என்ற தோன்றியது.
“ஓகே மாமா, வாங்க…” என்று சொல்லிவிட்டு வைத்தவன்,
“அத்தையும் மாமாவும் வராங்களாம் இங்க…” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் பல்லவன் கட்டிலில் சாய்ந்துகொண்டான். அமுதினியனும் வேலையை முடித்துவிட்டு கிளம்பி வந்துகொண்டிருப்பதாய் சொல்ல எதற்கும் பதிலில்லை.
“அப்பா வெளில வாங்க, ஸ்பூர்த்தி வந்திருக்கா…” என அஷ்வின் அழைக்க,
“வரேன், நீ போ…”
“அப்பா…”
“போ அஷ்வின்…” என்றதும் அதற்கு மேல் பல்லவனை வற்புறுத்தவில்லை அஷ்வின்.
வெளியில் வர ஹாலில் யாருமில்லை. ஸ்பூர்த்தி மலரின் அறையில் இருப்பாள் போலும் என்று அங்கே செல்ல அங்குமில்லை.
கிட்சனில் சிரிப்பு சத்தம் கேட்க அங்கு சென்றான். மோனிகா காபி கலக்க டைனிங் டேபிளில் அமர்ந்து மலருடன் பேசிக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
“பேசியாச்சா? பாட்டி முகத்துல இப்பதான் சந்தோஷமே…” என்று மலர் அருகே வந்தமர்ந்தான்.
“என் பேத்தி வந்தாலே போதுமே. எனக்கு சந்தோசம் தான். என்ன ஒன்னு திமுதிமுன்னு ஆளுங்க வரவும் பிரஷர் கூடிருச்சு. அங்க உன் தாத்தா என்ன பன்றாரோ?…” என்றார் மலர்.
“வந்திட்டிருக்காங்க பாட்டி. ட்ரைவர்கிட்ட பேசிட்டேன்…” என்ற அஷ்வின்,
“நீ ரிசீவ் பண்ணிடு. நான் கிளம்பறேன். அர்ஜன்ட்…” பல்லவன் நிற்கவே இல்லை.
“சரி இந்த டீயாவது குடிங்க…” மோனிகா பின்னால் போக,
“நீயே குடி. எனக்கு வேண்டாம்…” என்று சொல்வது இங்கே கிட்சனுக்கே கேட்டது.
“நைட்ல தலைவலி பிடிச்சுவிடு, காபி தான்னு கேளுங்க பேசிக்கறேன். இப்ப இந்த டீயை குடிக்கலை. இது இங்கயே தான் இருக்கும்…” என கடுப்புடன் டீ கப்பை அங்கேயே வைத்துவிட்டு மோனிகா நிற்க,
“தலையெழுத்து…”என்று வந்து அங்கிருந்த டீயை அப்படியே சூட்டுடன் வாயில் ஊற்ற சுட்டுவிட்டது.
“ஆ…” என பல்லவன் அலறலில் ஸ்பூர்த்தியும், அஷ்வினும் ஓடினார்கள்.
“இவ்வளோ சூடா இருக்கு?…” அதே சூட்டுடன் பல்லவன் கேட்க,
“எப்பவும் குடிக்கிற சூடு தான். நீங்க இப்படி மொத்தமா குடிப்பீங்கன்னா நான் நினைச்சேன்?…” மோனிகாவும் சரிக்கு சரி பேச,
“உன்னை…” என்றவன் அஷ்வின், ஸ்பூர்த்தி வருகையில் அந்த டீயை வேகமாய் குடித்துவிட்டு கிளம்பினான்.
“என்னாச்சு த்தை?…” என ஸ்பூர்த்தி கேட்க,
“உன் மாமாவுக்கு வாய் வெந்துருச்சு…” என்றாள் மோனிகா.
“டேய் நான் சாதாரணமா தான் பேசறேன். உங்களுக்கு கிண்டலா தெரிஞ்சா நான் என்ன பண்ண? நிஜமாவே சூடா குடிச்சுட்டு உங்கப்பாவுக்கு வாய் வெந்துருச்சு. குறைச்சு பேசனும். நிதானம் வேணும். கால்ல சுடுதண்ணியை ஊத்தினமாதிரி குதிச்சா?…”
அப்போதும் மோனிகா எப்போதும் போலவே பேச ஸ்பூர்த்தி முகமே வாடிவிட்டது.
“அஷ்வின் உள்ள போ…” என அவனை அனுப்பிய மோனிகா,
“என்னடா ஸ்பூர்த்தி? ஏன் டல்லாகிட்ட? உன் மாமா எங்க போனாலும் கடைசில இங்கதான் வரனும்…” என சொல்லிக்கொண்டே திரும்ப ஸ்பூர்த்தியும் தலையசைத்தபடி மீண்டும் உள்ளே செல்ல போனவள் கீழிருந்த கார்பெட் தடுக்கி கீழே விழுந்தாள்.
“ஸ்பூர்த்தி பார்த்துடா…” என மோனிகா பிடிக்கும் முன்,