நெய்யும் இடத்திற்கு சென்றவள் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு யாரோ ஒருவருக்கு செய்கிறோம் என உருபோட்டபடி புடவை நிறங்களை தேர்வு செய்துகொண்டாள்.
வரைய ஆரம்பித்தவளுக்கு முதலில் அவள் விழிகளுக்குள் தெரிந்தது தனக்காக தன் திருமணத்திற்கு என்று ஆசையாய் வரைந்து வைத்திருந்த அந்த வரைபடம் தான்.
ஆரோன் ரிஷபனை சந்தித்த பிறகு ஒரு ஆர்வத்தில், ஆசையில் செய்துவைத்து யாரின் கண்ணிலும் படாமல் வைத்துக்கொண்ட ஓவியம் அது.
துக்கம் தொண்டையை அடைத்தது. முயன்று விழுங்கிக்கொண்டவள் மனதை ஒருநிலைப்படுத்தி வரைய முற்பட நேரம் சென்றதே தவிர வைத்த புள்ளியை தாண்டி ஒரு வளைவை கூட இழுக்க முடியவில்லை.
“கமான், கமான் சௌபி…” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் வரைய ஆரம்பிக்க அனைத்து முயற்சியும் தோல்வி தான்.
சுயநல மனது அவள் கைவிரல்களை கட்டி போட்டு இன்னொருத்திக்கு அவனை விட்டுத்தரமுடியாதென சண்டித்தனம் செய்தது.
“ஓஹ் காட்…” என தலையை பிடித்துக்கொண்டவள் மனது ஒரு நிலையில் நிற்கவில்லை.
அதற்குமேல் அங்கிருக்கமுடியாமல் வெளியே வந்தவள் ஆரோன் ரிஷபனின் ஸ்டூடியோ நோக்கி காரை கிளப்ப சொல்லி அவனுக்கும் தான் வருவதாக செய்தி அனுப்பிவைத்தாள்.
“வாங்க வேதாளம். இனி நீ முருங்கமரம் எல்லாம் ஏறவேண்டாம்…” என்று விஷமமாய் சொல்லிக்கொண்டவன் அவளின் வருகைக்காக காத்திருந்தான்.
பிரதான சாலையில் முகப்பில் இரண்டடுக்கு கட்டிடத்தில் வீற்றிருந்தது அந்த அழகு நிலையம்.
முதன்முறை அவனின் இடம் நோக்கி அவள் வருகிறாள். அவனை தேடி வருகிறாள். மேலிருந்து கீழே அவளின் வருகையை பார்த்தவன்,
“உஷா…” என்றழைத்து,
“நான் டெரஸ் கார்டன்ல இருக்கேன். மேம் வந்தா அங்க அனுப்பிவிடு. அப்படியே ஜில்லுன்னு ஜூஸ்…” என்று சொல்லி துள்ளலுடன் செல்ல,
“எந்த மேம் வந்தாலுமா?…” என்றாள் உஷா கிண்டலுடன்.
“வாட்?…” என ஆரோன் திகைக்க,
“இல்ல பாஸ், இன்னும் பிப்டீன்மினிட்ஸ்ல மிஸ் சென்னை வராங்க. ஏற்கனவே அப்பாயின்மென்ட் குடுத்திருந்தீங்களே?…” என்றதும்,
“ஷிட்…” என்றான் தலையை பிடித்தபடி.
“நீ என்னவோ சொல்லி சமாளி. இப்ப பிரபஞ்ச ப்யூட்டியை மட்டும் மாடிக்கு அனுப்பு…” என்று சொல்லிவிட்டு அரக்கபரக்க அவன் மாடியேற உஷா பதில் சொல்லும் முன் கண்ணை விட்டு மறைந்திருந்தான் அவன்.
“இப்ப என்ன நான் சொல்றது?…” என தலையில் கை வைக்காத குறையாய் உஷா திரும்ப பதறிவிட்டாள்.
அவள் மீது மோதுவதை போல வந்துநின்ற நின்ற சௌபர்ணிகாவை பார்த்தவள் மூச்சடைத்து,
“பாஸ் மாடில…” என்று கை காண்பித்தாள்.
“மாடின்னா வழி எங்க?…” அவளுக்கு அத்தனை எரிச்சல்.
“வாங்க மேம்…” என்று உஷா கூட்டிச்சென்று காண்பித்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
மாடிக்கு வந்த சௌபர்ணிகா அங்கே மொட்டைபாடி தோட்டத்தின் நடுவில் மாட்டியிருந்த ஊஞ்சலில் சாய்ந்திருந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.
“வெல்கம் பிபி. என்ன ஒரு சர்ப்ரைஸ்?…” என அலட்டிக்கொள்ளாமல் அவன் அவளை வரவேற்க சௌபர்ணிகா சுற்றி வளைக்கவே இல்லை.
“பொண்ணு பார்க்காங்களா?…” என்றாள் அவனிடம்.
“எனக்கு தானே? ஆமா. பாட்டி கூட டிஸைன் பண்ண சொல்லி உன்கிட்ட தான் சொல்லியிருக்காங்களாம். தெரியாதமாதிரி கேட்கிறயே?…” என்றவன்,
“வாட் எ கிரேட் மொமென்ட். எக்ஸ் கிட்டயே ப்யூச்சர்க்கு சேரி டிசைன் பண்ண சொல்ற லக் யாருக்கு கிடைக்கும்…” என்று சொல்லி புன்னகைக்க பற்றிக்கொண்டு வந்தது சௌபர்ணிகாவிற்கு.
“விளையாடாதீங்க ரிஷபன்….” என்று சொல்லியவள் குரல் நடுங்கியது.
“இது என் வாழ்க்கை. இதுல நான் ஏன் விளையாட போறேன்? உனக்கு பிடிக்கலை. என்னை அலையவிட்ட. நான் வேண்டாம்ன்னு துரத்திட்ட. அப்பறம் என்ன? எனக்குன்னு ஒரு லைப் இருக்கே? லவ் பெயிலியர்னா தாடி வளர்த்துட்டு உன்னையே நினைச்சிட்டு இருப்பாங்களா?…” என்றவன் அவள் மன பூட்டிற்கு வெடி வைத்தான்.
“ரிஷபன்…” என்றவள் கோபம் இன்னும் கூடியது.
“ஆமா எனக்கு பொண்ணு பார்த்தாச்சு. சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்க போறேன். வேற என்ன தெரிஞ்சுக்கனும்? …” என்றவன்,
“சொல்ல போனா கல்யாண ஆசையை விதைச்சதே நீ தானே? நீ மாட்டேன்னா என்னால இந்த வாழ்க்கையை வாழாம இருக்கமுடியாது. என்னோட எதிர்காலத்தை உன் பிடிவாதத்துக்காக ஸ்பாயில் பண்ணிக்கமுடியாது….” என்று சொல்ல சொல்ல அவள் கட்டுக்கள் உடைய ஆரம்பித்தது.
“பொண்ணோட போட்டோஸ் இருக்கு. நீ பார்க்கறியா பிபி? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு விதம். அந்த சிரிப்பு இருக்கே?…” என்றவன் நீட்டிய கவரை ஆவேசத்துடன் பிடுங்கியவள் அதை வெறிகொண்டு சுக்குநூறாக கிழித்தெறிந்தாள்.
“ஹேய் சௌபர்ணிகா…” என ஆரோன் ரிஷபன் தடுக்கும்முன்,
“கல்யாணம் பண்ணிக்கனுமா? அதையும் என்கிட்டையே சொல்லுவியா?…” என்று விசிறியடித்தவள் அவனை நெருங்கி சட்டையை பிடித்துவிட்டாள்.
“ஏன்டா என்னை படுத்தற? உன்னை யார் என் வாழ்க்கைக்குள்ள வர சொன்னா? எல்லாமே அவ்வளோ ஈஸியா போச்சுல்ல. எங்க பண்ணிக்கோ பாப்போம்…” என சௌபர்ணிகா அனைத்தும் மறந்து அவனை இழுத்து தன் வேகத்தை அவனிதழ்களில் காண்பிக்க மெய்மறந்து அவள் கைகளுக்குள் அடங்கி நின்றான் ஆரோன் ரிஷபன்.
வலிகள் இத்தனை சுகங்களை தரும் என்று அவன் உணர்ந்த தருணம். அவள் தந்த காயங்கள் இவ்வுலகையே மறக்க செய்தது.
எங்கே தான் அசைந்தால் கூட தன்னை விட்டுவிட்டு சுயம்பெற்று விலகிவிடுவாளோ என அவளை அள்ளி அணைக்க துடித்த கைகளை இறுக்கிக்கொண்டவன் அவளில் லயித்து போனான்.
மூச்சுவாங்க அவனை விட்டு விலகியவள் தன் இதழ்களை புறங்கையால் துடைத்துவிட்டு குறையாத ஆத்திரத்துடன் அவனை பார்க்க,
“ஹ்ம்ம், நாட் பேட்…” என்றான் கள்ளச்சிரிப்புடன் கண் சிமிட்டி.
தன்னுடைய கோபம், தான் செய்த செயல் என எதையுமே பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் அவன் சொல்லிய விதத்தில் இன்னுமே ஜிவுஜிவுத்தவள்,
“யூ…” என அவன் கழுத்தை பிடிக்க வந்தாள்.
“ஒரே ஒரு டவுட் பிபி, கேட்டுக்கறேன்…” என்றவன்,
“பொண்ணு செலெக்ட் பண்ணியாச்சுன்னு சொன்னதுக்கே கிஸ் பண்ணிட்ட. அதுவும் இங்க…” என தன்னிதழ்களை காண்பித்து,
“ப்ச், சிவந்து போச்சு, பாவம்…” என கண்ணடித்தவன் அவள் பொறுமை கரைவதை கண்டு,
“அடிக்காம கேட்கனும். சப்போஸ் பொண்ணை நிச்சயம் பண்ணிட்டு இன்விடேஷனோட வந்தா கோபத்துல அதுக்கும் மேல போவியோ? ஐ மீன் என்னை…” என்றவனை சரமாரியாக வார்த்தைகளை உதிர்க்க விடாமல் அடி வெளுத்துவிட்டாள் சௌபர்ணிகா.
“ஹேய் அடம் அப்படி எதாச்சும் ஐடியா இருந்தா முன்னாடியே சொல்லு, லைசன்ஸோடவே மிங்கிளாகிருவோம்…” என்று சொல்லி சொல்லி சிரிக்க,
“என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி இருக்கா? போடா…” என்றவளின் இரு கைகளையும் பிடித்து நிறுத்தியவன்,
“ஹன்ட்ரட் பர்சென்ட் நீ பைத்தியமே தான். அதான் உன் மேல நானும் கிறுக்கா இருக்கேன் போல. புரிஞ்சுக்கோம்மா…” என்றவன்,
“இதோ நீ கிழிச்சு போட்டியே இந்த போட்டோஸ்ல எந்த பொண்ணும் இல்லை. எல்லாம் என்னோட போட்டோஸ் தான். ஒவ்வொரு நிமிஷமும் என்னை வேண்டாம்ன்னு என் மனசை கிழிச்ச மாதிரியே உன் கையால இதையும் சுக்குநூறா கிழிச்சிட்ட. இன்னைக்கு போட்டோ. நாளைக்கு…” என்று கேட்டவனின் சட்டையை பிடித்து குலுக்கியவள் அழுகை எல்லை மீறியது.
ஓவென்ற சத்தத்துடன் அவள் கத்தி அழ அவளின் நிலை தாங்காதவன் விழிகளும் கலங்கியது.
“ப்ச், அப்படியெல்லாம் அவ்வளோ ஈஸியா உன்னை விட்டுடுவேனா? சும்மா நீ என்னை முறைச்சு பார்த்ததுக்கே நான் பிளாட். இப்ப கிஸ் வேற பண்ணிட்ட. விடமுடியாதுடா என்னால…” என்றவன் அணைப்பு இறுக ஆரம்பிக்க, அதில் சுதாரித்து அவனை விட்டு விலகி நின்றாள் கண்ணை துடைத்துக்கொண்டு.
“அப்போ பொண்ணு, பாட்டி, சேரி…”
“புருடா கேர் ஆஃப் பொன்னரசி. ரொம்ப வருத்தம்ன்னா நீயே எனக்கொரு பொண்ணை பார்த்து குடேன். உனக்காக வேணும்னா கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து உன் பேரையே வச்சிடறேன். டீல்…” என்றதும் சௌபர்ணிகா முறைக்க,
“டெவில் இஸ் பேக்….” என்று அதற்குமே அவன் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
“நான் கிளம்பறேன்…”
“போலாமே? வா நானே ட்ராப் பன்றேன்…”
“கார்ல தான் வந்தேன்…”
“ப்ச், ட்ரைவர் வந்தார் தானே? அவர் எடுத்துட்டு வருவார்…” என்றான் இலகுவாய்.
“ரிஷி…”
“ஹ்ம்ம்…”
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்று சொல்ல,
“என்னை நீ ஸ்வாஹா பண்ணிட்டு தான் மூணு முடிச்சின்னு என் தலையில எழுதியிருந்தா யாரால மாத்த முடியும்? விதி…” என்று சொல்லி இன்னும் அவன் அடக்கமாட்டாமல் சிரிக்க,
“பிராடு பிராடு…” என்று அவன் நெஞ்சில் அத்தனை அடி அடித்தவள் முகம் தெளிந்து சிவந்திருந்தது.