“மச்சான், ஒரு பொறுப்பான அண்ணன்னா என்ன பண்ணனும்?…” என்று கேட்க,
“என்னது என்ன பண்ணனும்?…” என்றான் இஷாந்த் புரியாமல்.
“பண்ணுவியா மாட்டியா மேன்? அதை சொல்லு…”
“சரி என்ன பண்ணனும்? பண்ணிடலாம்…” என்றவன் இன்னொருபுறம் கணக்குவழக்கையும் பார்க்க,
“பெருசா என்ன கேட்டுட போறேன். ரெண்டுநாள் உன் தங்கச்சிக்கு லீவ்….”
“என்ன?…” இஷாந்த் திகைக்க,
“நான் கேட்காமலே இதை நீ செய்வன்னு தெரியும். இருந்தாலும் எனக்குன்னு ஒரு கடமை இருக்குல. உன்கிட்ட தெரியப்படுத்தனுமே? அதான் சொல்லிட்டேன். டேக் சார்ஜ்…” என்று சொல்லியவன் விசிலடித்தபடி போனை தூக்கி சௌபர்ணிகா மடியில் போட்டுவிட்டு,
“ஹேய் குட்டீஸ் டாடி வந்துட்டேன்…” என்ற கூச்சலுடன் பிள்ளைகளோடு சேர்ந்து அலையில் விளையாட ஆரம்பித்தான் ஆரோன் ரிஷபன்.
“ரிஷி…” என்று சிரித்தபடி அவனின் சந்தோஷத்தை கண்களால் உள்வாங்கிக்கொண்டு போனை காதில் வைத்தவள்,
“ண்ணா ப்ரீயா இருந்தா பீச் ரெசார்ட்க்கு அண்ணி, குட்டீஸ் கூட வாயேன்…” என்று அழைக்க,
“ரெண்டுபேருக்கும் எப்படி தெரியுது என்னை பார்த்தா? உன் புருஷன் பாதிநாள் உன்னை கூட்டிட்டு நாடு நாடா, ஊர் ஊரா சுத்தறது. இங்க வந்தா கூட இருக்கறதுல பாதி நேரம் ஸ்டூடியோ போகனும், மிச்ச நாள் ஹைதராபாத் போயிடனும். இப்ப ரிஸார்ட்…”
“ஓகே, நீ வரலைன்னு சொன்னதா அண்ணிக்கு மெசேஜ் பண்ணிடறேன்…”
“உன் புருஷன் கூட சேர்ந்து நீ முழு ஆரோனா மாறிட்டு வர சௌபி…” என்ற இஷாந்தின் பேச்சில் அடக்கமாட்டாமல் சௌபர்ணிகா சிரிக்க அதில் இஷாந்தின் முகத்திலும் சந்தோஷம்.
“ஓகே இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு வரேன். அதுக்குள்ள அம்மாவும் வந்திருவாங்க…” என்றவன்,
“நான் வரது சரி. உன் குட்டீஸ்ட்ட சொல்லி வை. என் பசங்களை வம்பிழுக்காம. உன் பிள்ளைங்க ரெண்டும் அப்பாவை மாதிரி. இன்னும் எப்படித்தான் நீ சமாளிக்க போறியோ?…” என்றான் இஷாந்த்.
“இதை உன் மருமகட்ட சொல்றேன். நீ அவளை வந்து எப்படி சமாளிக்கிறதுன்னு பார்த்துக்கோ. அப்பறம் என்னை பத்தி கவலைப்படலாம்…” என்று சௌபர்ணிகா சிரிக்க,
“அடேய் அராஜகமா பன்றீங்க புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து. நாளைக்கு வந்து பேசிக்கறேன். நீ போய் பாரு….” என்றவன்,
“அப்பறம் ஆரோன் சத்தத்துல நல்லா பிள்ளைங்க ஆட்டம்ன்னு தெரியுது. ஆத்மிக்கு மறந்திடாம சிரப் குடுத்திரு. பீவர் வச்சிடாம. பார்த்துக்கோடா. டேக் கேர்…” என்று அழைப்பை துண்டித்தான் இஷாந்த்.
போனை வைத்துவிட்டு கணவன் பிள்ளைகளை பார்க்க மூவரும் ஆர்ப்பாட்டத்தில் இருந்தனர்.
கடலலையில் மொத்தமாய் நனைந்துவிட்டிருக்க இன்னும் நிறுத்தாமல் மூச்சுவாங்க விளையாடினார்கள்.
“பாஸ், எல்லாம் ஓவர்…” என்று உஷா வர,
“ஓஹ், கிளம்பிட்டாங்களா?…” என்றான் முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடி.
“ஆமா பாஸ். நாளைக்கு வில்லாக்குள்ள போட்ட செட்டிங்ல ஸ்டில்ஸ் மட்டும் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க. முடிச்சிட்டா கட்அவுட், பிளக்ஸ் போர்ட்க்கு அனுப்பிடலாம்…” என்றவள் பேசிவிட்டு கிளம்பிவிட இவர்கள் நால்வரும் குடும்பமாய் ரிஸார்ட் வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்கள் காட்டேஜின் பின்புறத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் கடல் இருக்க மீண்டும் அங்கே செல்ல துடித்த பிள்ளைகளை அதட்டினாள் சௌபர்ணிகா.
“விளையாண்டது போதும். நாளைக்கு மிச்சம் வைங்க. முதல்ல ஹாட் வாட்டர்ல போய் குளிங்க…” என்று கண்டிப்புடன் சொல்ல பிள்ளைகள் இருவரும் ஆரோனை பார்க்க,
“நான்லாம் குட் பாய் ப்பா. மம்மி சொன்னா உடனே கேட்டுப்பேன்….” என்றவன் தான் குளியலறை நுழைய,
“நானும் நானும்…” என்று பிள்ளைகளும் நுழைய அங்கொரு ஆட்டம் பாட்டம்.
மூவரும் குளித்து உடைமாற்றி இரவு உணவிற்கு வரும்முன் அத்தனை பாடாகி போனது சௌபர்ணிகாவிற்கு.
அதன் பின் இருவீட்டு பெரியவர்களுக்கும் பேசி, கதைகள் எல்லாம் சொல்லி என சோர்வில் படுத்து உறங்கியும்விட சௌபர்ணிகாவிற்கு அப்போது தான் மூச்சே விடமுடிந்தது.
“சில்க் ப்யூட்டி…” என்றவன் மயக்கத்துடன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க,
“உதை விழும். இப்படியா ஆட்டம் போடுவீங்க? அப்படியே உங்களை மாதிரி ரெண்டும் அறுந்தவாலுங்க தான்…” என்றாள் சௌபர்ணிகா.
“இருந்துட்டு போகட்டும். இந்த உலகத்துக்கு ஒரு சௌபர்ணிகா போதும். சமாளிக்கிறதுக்குள்ள ரிஷபன் பாவம்….” என்றவன் வாயில் சட்டென்று அடித்தவள் முதுகில் மொத்த,
“இப்பவரை இம்சை பன்றடி நீ…” என்றவன் அவளோடு கீழே விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புரள,
“ரிஷி…” என்றாள் திமிறலுடன்.
“இன்னும் ஹஸ்கி வாய்ஸ்ல, சின்னதா வெட்கத்தோட, கொஞ்சமா கூச்சத்தோட, என் தலைமுடியை வலிக்க பிடிச்சிழுத்து, என் முகத்தோட முட்டி, சிணுங்கலோட அழகா ஒரு சிரிப்பு. மயக்கிடற நீ…” என்றான் காதலும், மயக்கமுமாய்.
“அழகன்டா நீ. எப்படி போனாலும் கேட் போட்டு உன் பக்கம் இழுத்திடறது…” என்றாள் சிலிர்த்து சில்லாகித்து.
“கேட் போடாமலே நீ என்னை இழுக்கற மாதிரியா? ஆனாலும் உன் சமத்து எனக்கில்லை. அந்த சூட்சமம் தெரியாத அப்பாவி பிள்ளையாவே ஆராம்மா வளர்த்துட்டாங்க…” என்று கிண்டலாய் சொல்லியவன் கன்னம் குழிய புன்னகைக்க,
“லக்கி ஃபெல்லோ இவன்…” என்றான் தன் கன்னத்தை தொட்டு பார்த்து.
“டாடி…” என்று அதற்குள் மகள் உறக்கத்தில் சிணுங்க,
“பிபி, இப்படி வா…” என்றவன் சௌபர்ணிகாவை படுக்கையினோரம் விடுத்து மகளருகில் அரவணைப்பானவன் இன்னொரு கையினால் மகனையும் வருட பார்வைகள் மனைவியிடத்தில்.
“ஸோ வாட்?…” என்றாள் அவன் விழிகளின் பொருளுணர்ந்து.
“நீங்க பிள்ளைங்களை பாருங்க ரிஷி. நான் உங்களை பார்த்துப்பேன்…” என்றவள் அவன் முதுகோடு அணைத்து இரு கைகளையும் கோர்த்து, அவனின் மேல் மாலையாய் தன்னை சூடிக்கொண்டாள் சௌபர்ணிகா.
அவர்களுக்குள் அகப்பட்டு கிடக்கும் காதலின் அழகுகள் ஸ்வப்பனங்களில் கூட கலந்தாடியது.
இருவரின் நீர்க்காத இளைப்பாறுதல்கள் நெஞ்சோடு உறவாட, அவர்களின் உறவியல் ஊடலில் தேடி கூடலில் நனைந்து நேசக்கவிதை புனைந்தது.
அழகில் கலந்தாடியது உணர்வுகள் மட்டுமின்றி உரிமைகளும், உறவுகளும் கூடவே.