கடல் காற்று அவனின் சிகையை மொத்தமாய் கலைத்து விளையாட அவற்றை கோதியபடி வாகனம் நோக்கி சென்றான் ஆரோன் ரிஷபன்.
கோவாவுக்கு வந்து நான்கு நாட்களாகிவிட்டது. அவர்களின் கம்பெனி விஷயமாக வந்திருந்தவன் ஸ்டீபனுக்கு சிறு ஓய்வை கொடுத்திருந்தான்.
மற்றவற்றை விட இந்த மாதிரியான விஷயங்கள் அவனுக்கு பிடித்தமானவை என்பதால் தானாகவே வந்து எடுத்து செய்வதுண்டு.
புதிதாய் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதனால் அதற்கான தேர்வில் இருந்து எல்லாம் ஆரோன் ரிஷபனே.
வேலைகள் எத்தனை இருந்தாலும் அந்த கண்ணீர் முகம் மட்டும் அவ்வப்போது மின்னி மறைந்துகொண்டிருந்தது அவனுள்.
நிச்சயம் அன்று சௌபர்ணிகா அவளின் உணர்வுகளை அவன் பார்த்துவிட கூடாதென்பதில் எத்தனை கவனம் எடுத்தாள் என்பதை கண்டுகொண்டவன் மனதினுள் ஏன் என்னும் கேள்விகள்.
ஒருபக்கம் கனலாய் காய்பவள் விழிகளில் அன்றைக்கு தான் உணர்ந்ததன் அர்த்தம் எதுவாக இருக்கும் என முழுமையாய் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை அவனால்.
நேரடியாகவே தன்னிடம் விருப்பம் தெரிவிக்கும் பெண்களை மட்டுமே அவன் கடந்து வந்திருக்க அவள் பிடித்தம் எங்கே தன்னிடம் கவனம் பெற்றுவிடுமோ என்ற அவள் பதட்டம் அவனுக்கு சுவாரஸியத்தை தந்திருந்தது.
“இன்ட்ரெஸ்ட்டிங்…” என்றான் இப்போதும் சிறு புன்னகையுடன்.
“ரெசார்ட் வந்துட்டோம் பாஸ்…” என உஷா சொல்ல,
“ஓகே, என்ஜாய் ப்யூட்டி. போற இடமெல்லாம் புருஷன், குழந்தைன்னு நல்லா என்ஜாய் பன்ற. பேச்சிலர் பாவம் எல்லாம் சும்மாவே விடாது…” என்று சிரித்துக்கொண்டே சொல்லியவன் தன்னுடைய குடிலை நோக்கி சென்றான்.
முன்பக்கம் நுழைவு வாயிலும், பெரிய ஹால், அதனை ஒட்டி குளியலறை என்றிருந்தாலும், அடுத்ததாய் படுக்கையறை அதற்க்கு பின்னிருந்த பால்கனியும், அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கடற்கரையும்.
“ஹ்ம்ம்…” என்றான் ஆழ்ந்த பெருமூச்சுடன் அங்கே நுழைந்ததும்.
குடிப்பதற்கு ப்ளாக் டீ சொல்லியவன் லேசாய் ஒரு குளியலை போட்டுவிட்டு பால்கனி இருக்கையில் வந்தமர்ந்தான்.
வானம் லேசாய் மஞ்சளையும், செஞ்சாந்தையும் குழைத்து கதிர்களை வீசியபடி இருந்தது.
மிதமான அலைகடலும் அதன் மேல் ஒளிர்ந்த ஒளி கற்றைகளும் அவனின் ரசனை பக்கத்தை உயிர்ப்பிக்க கேமராவை எடுத்து அதில் சேமிக்க ஆரம்பித்தான். சில நொடிகள் சென்றிருக்கும்.
“பாஸ், பாஸ்…” என்ற உஷாவின் சத்தத்தில் திரும்பி பார்த்தான்.
தனக்கு இரண்டு குடில்களுக்கு அடுத்து தான் அவள் தங்கியிருப்பது. பின்பக்கத்திலிருந்தே கையில் மேக்புக்குடன் ஓடி வந்தாள்.
“என்ன உஷா, இவ்வளோ வேகம்?…” என அவன் புருவம் சுருங்க கேட்க,
“இங்க பாருங்க…” என்று அதில் ஆரோனின் வலைதள பக்கத்தை காண்பித்தாள்.
“மதிய வெயில்ல நின்னதுல உனக்கு என்னவோ ஆகிடுச்சு போல? உன் புருஷன் என்னை கேட்க போறான்…” என்று கிண்டலாய் சொல்லி ஆரோன் சிரிக்க,
“இப்ப உங்களுக்கு என்ன ஆகுதுன்னு பார்க்கறேன் நானும்…” என்ற உஷா தான் எடுத்து வைத்ததை காண்பித்தாள்.
அவள் பக்கம் மௌனம். அந்த புன்னகையும், பேச்சுமே சௌபர்ணிகாவின் திடத்தை சோதிப்பதாய் இருந்தது.
“எதுக்கு கால் பண்ணுனீங்க?…” என்றாள் அவனிடம்.
“வேற எதுக்கு? ஏன் என்னை ஃபாலோ பண்ணிட்டு திரும்ப அன்ஃபாலோ பண்ணுனீங்க? அதுவும் அவ்வளோ ஹார்ட்ஸ் குடுத்திருந்தீங்க…”
“ப்ச், இது ஒரு பிரச்சனையா? தெரியாம கை பட்டிடுச்சு. அதான் எல்லாம் எடுத்துட்டேன்…” என்றாள் படபடவென்று அவனிடம்.
“ஆனா எனக்கு பிரச்சனையாச்சே? குடுத்ததை இப்படியா என் பர்மிஷன் இல்லாம எடுப்பீங்க?…” என்றான் அவளோடு பேசுவதற்காகவே.
“ப்ச், அதான் தெரியாம ஆகிடுச்சுன்னு சொன்னேனே?…”
“தெரியாம தான் அத்தனை பிக்சர்ஸ்க்கு லைக் பண்ணுணீங்களா ஹாட் ப்யூட்டி?…” என்று நமுட்டு சிரிப்புடன்,
“ஆமா, தெரியாம தான். இப்போ என்ன?…” என்றாள் வெடுக்கென்று.
“என்னாச்சு சௌபர்ணிகா, உங்க வாய்ஸ்ல பழைய ஸ்ட்ரெந்த் இல்லையே? உடம்பு எதுவும் சரியில்லையா?…” என்றான் விளையாட்டை கைவிட்டு அக்கறையுடன்.
திடீரென அப்படி கேட்பான் என நினைக்காதவளுக்கு அந்த தன்மை நெஞ்சை இறகாய் வருடுவதை போலிருந்தது.
“ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம் அப்படின்னா? இஃப் யூ டோன்ட் மைன்ட். நான் தெரிஞ்சுக்கலாமா?…” என்றான் அவளிடம்.
அவனாக இத்தனை தூரம் யாரிடமும் நெருங்கி கேட்டதில்லை. ஆனால் சௌபர்ணிகாவை அப்படி அந்த இடத்தில் தள்ளி வைக்க முடியாமல் மீண்டும் மனக்கண்ணில் கலங்கிய முகம் தான் அவனை இம்சித்தது.
“வேண்டாம்…” என்றாள் சட்டென்று.
“ஓஹ்…” என்றவனுக்கு வேறு என்ன பேச என்று யோசனையாக,
“வேற எதுவும் இல்லையே? வச்சிடட்டுமா?…” என்று அவனிடம் அவள் கேட்ட விதம்.
“என்கிட்ட ஏதாவது சொல்லனுமா சௌபர்ணிகா?…” என கேட்டான் ஆரோன் ரிஷபன் மென்மையாய்.
அவன் கேட்டதும், கேட்ட விதமும் சபர்மதியை ஞாபகப்படுத்தியது சௌபர்ணிகாவிற்கு.
அவளின் தாய் மட்டுமே தன் முகம் கண்டு, மனதறிந்து, குரல் கேட்டு இப்படி கேட்பது.
இன்று ஆரோன் ரிஷபனிடம் இதனை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவன் அழைத்ததும், பேசியதும், இப்போது கேட்பதும் என்று நிலைகுலைய செய்ய,
“ரிஷபன்…” என்றாள் மீண்டும் மெல்லிய குரலில்.
அதில் ஏகத்திற்கும் நடுக்கம் நிரம்பி ஓட கேட்டவனுக்கும் அதனை பிரித்தறிய முடிந்தது.
“ஹ்ம்ம், ரிஷபன் தான் ப்யூட்டி…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
‘ப்யூட்டி’ இந்த வார்த்தை எத்தனைபேரிடம் அவன் சொல்லி தானே அன்று தன் கடையில் வைத்து பார்த்தோம் என அவள் புத்தி எட்டி எடுத்து தர தலையில் கைவைத்துக்கொண்டாள் சௌபர்ணிகா.
அவள் இணைப்பில் இருக்கிறாளா இல்லையா என்ற சந்தேகத்துடன் அவன் மீண்டும் அவளை அப்படியே அழைக்க,
“நீங்க யார்? நான் உங்ககிட்ட சொல்ல என்ன இருக்கு? ஒரு விஷயமும் இல்லை. எதுவுமே இல்லை. எனக்கு இனிமே கால் பன்றது வேண்டாம். இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்…” என வேகமாய் அவள் சொல்லி ஓய்ந்து போனை வைக்க அப்போதும் ஆரோன் ரிஷபன் முகத்தில் வாடாத புன்னகை தான்.
தனது மொபைலை பார்த்தவன் அதனை நெற்றியில் வைத்து தட்டிக்கொண்டான்.
“ஹாட் ஹாட் தான். சில் பண்ண டைம் எடுக்கும் போல?…” என சொல்லி புன்னகைத்துக்கொண்டவன்,
“கோபப்பட்டு பேசறதா நினைச்சு, குழந்தையா அழுது எனக்கு கிளியர் பண்ணிட்டியே ப்யூட்டி…” என்று தலையை ஒற்றை கையால் கோதியவன் எழுந்து கடற்கரை பக்கம் சென்று நின்றான்.
அந்த நிமிடம் முதற்கொண்டு புத்தம் புதிதாய் ஒரு உணர்வு அவனை பந்தாட துவங்கியது.
அன்றைக்கு சௌபர்ணிகா தன்னை பார்த்ததன் பார்வைக்கான அர்த்தம் இன்று முழுதாய் விளங்கியது.
“பிடிச்சா வந்து ப்ரப்போஸ் பண்ணாம இதென்ன அழறது? ஸ்டுப்பிட் கேர்ள்…” என தலையசைத்து சிரித்தவன் புன்னகை இன்னுமே பெரிதாகும் போலிருந்தது.
சத்தமாய் சிரித்து சந்தோஷம் கொள்ளவேண்டி மனது ஆர்ப்பாட்டம் புரிய சுற்றி இருக்கும் இருப்பிடம் உணர்ந்து மேலிதழை உள்பக்கமாய் இழுத்து கடித்துக்கொண்டான் மீசையுடன்.
“ஓஃஹ், ஊஃப், இட்ஸ் பெய்னிங்….” என தன் நெஞ்சை நீவியவன் கண்களிலும் சந்தோஷ கண்ணீர். (techfundingnews.com)
“ரிஷபனா நான் உனக்கு? எதுவும் இல்லையா? என்னம்மா நீங்க இப்படி பன்றீங்களேம்மா?…” என தேன் புன்னகையுடன் சொல்லிக்கொண்டான்.
பாதங்கள் கடலலையில் நனைய சௌபர்ணிகா அவனுக்கு உணர்த்தி சென்ற ஒன்றில் சிறுக சிறுக கரைந்து கொண்டிருந்தான் ஆரோன் ரிஷபன்.