மீராவின் அழுத்தமான வார்த்தைகளின் தாக்குதலில் அவளைத் திரும்பி பார்த்த சௌந்தர், நொடிப் பொழுதே அதிர்ச்சியாய் நோக்கினான்.
பிறகு”என்ன மிரட்டுறீயா.?”
“ச்சே! ச்சே! உண்மையை, அதுவும் நடைமுறையை சொன்னேங்க”
“என்ன நடைமுறை.?”
“இல்ல! எக்ஸ் எப்பவும் எக்ஸ் தானு…” என இழுத்தாள்.
“ஓ! ரொம்ப வெவரமா பேசுறேனு நெனப்பா, அர்ச்சு எக்ஸ் தான், அதுக்காக நீ எப்பவும் நிரந்தரமா இருந்துட முடியாது, எப்படி வேணாலும் மாறலாம்.”
“அது மாறும் போது பாப்போம், நமக்கு இன்னைக்கு தான் கல்யாணமே ஆகியிருக்கு, இந்த நொடியில் இருந்து நம்ம பிரிய லீகலா முடிவு எடுத்தாலும், நான் உங்க எக்ஸ் வைய்பா மாற நிறையவே டைம் இருக்கு. ஏனா! அப்படி இப்படி ஒரு வருசம் ஆகனும், அதுக்கு அப்புறம் நீங்க என் கிட்ட கெஞ்சி, மிஞ்சி, ஃபைட் எல்லாம் பண்ணி டைவர்ஸ் வாங்க எப்படியும் வருசம் ஓடிட்டே இருக்கும்.
பட்! அப்படி டைவர்ஸ் ஆனாலும் ஐ ஆம் யுவர் ஃபர்ஸ்ட் அன்ட் எக்ஸ் வைய்ப். அதே உங்க அர்ச்சு இப்ப ஜஸ்ட் எக்ஸ் லவ்வர், ம்ம்ம்! லவ்வரா.? அப்படியும் சொல்ல முடியாது, சரி! வச்சுகோங்க எக்ஸ் லவ்வர், ஃபியூச்சரில் செகண்ட் வைய்ப். புரியுதா.?” என நக்கலாக பார்த்தாள்.
“ஹேய்! ஹேய்!” என அவள் அருகே கொலைவெறியுடன் பாய்ந்தான், ஆனால் முடியவில்லை”ஆ!” என வலியில் கத்தினான்.
இந்த மனசிலாயோ! என்ற சொல் அவள் கல்லூரியில் தோழிகளிடையே கிண்டலடிக்கும் வார்த்தையாகும், ஏதோ ஒரு ஆர்வத்தில் சௌந்தரிடம் கூறிவிட்டாள். பிறகே அதை உணர, “சாரி! ப்ரண்ட்ஸ் கிட்ட பேசுற வோர்டு இது, தப்பா எடுத்துகாதீங்க” என்றாள்.
“நீ, ஒன்னுமே தெரியாத பொண்ணு மாதிரி பாவமா முகத்தை வச்சு இருக்க, ஆனா திமிரு, உன் அப்பன் மாதிரியே திமிருப் புடிச்சவனு இப்ப தான் தெரியுது. பாவம்! என் அம்மாக்கு அது தெரியல, அவங்க கிட்ட நீ நடிக்குற, அப்புறம் என் தம்பி அவன் கிட்டயும் சிரிச்சிப் பேசி ஏமாத்துற, ஆனா என் கிட்ட அது நடக்காது, மைன்ட் இட்.” என உறுமினான்.
“நான் ஒன்னும் நடிக்கல, உங்கக் கண்ணுக்கு அப்படி தெரியுது, நீங்க தான் நடிச்சு ஏமாத்துனீங்க.”
“யாருடி, யாரு ஏமாத்துனா.?” என சௌந்தர் மீண்டும் எகிறிட்டு வந்தான். ஆனால் வலியில்”ஷ்ஷ்ஷ்! ஆ!” என கத்தி விட்டு, “நான் யாரையும் ஏமாத்தினது இல்ல” என்றான்.
“ஆமா! என் கிட்ட உன்னைய படிக்க வைக்கிறேனு சொல்லி தானே தாலி கட்டுனீங்க, ஆனா! அதுக்கு அப்புறம் நீங்க சொன்னது என்ன.?” என மனம் ஆதங்கத்தில் குமுறிட, வேறு வழியின்றி முகத்தை மட்டுமே சுளித்தாள்.
“ஓ! அப்படி வரீயா நீ, இங்கப் பாரு நீ தான் என்னைய ஏமாத்தின, உன் அப்பன் எழுந்திரினு சொன்னதும் நீ எந்திரிச்ச, ஆனா மொத நாள் ஃபோன்ல நீங்க என்ன சொன்னாலும் கேப்பேனு டயலாக் அடிச்ச, நான் கூட ஒரு நொடி நீ நல்லவனு நெனச்சேன், ஆனாலும் நீ பாம்புனு அடுத்த நாளே தெரிஞ்சுட்டு.”
“ஏங்க! நிஜமா அந்த நேரத்தில் எனக்கு எதுவுமே புரியல, அப்பா கைப்புடிச்சு எழுப்பியதும் எழுந்திரிச்சுட்டேன், அப்படிம் உங்க அம்மா வந்து கேக்கும் போது, என் மனசு அவங்களை மட்டும் தான் யோசிச்சது”
“சும்மா நடிக்காத, அப்புறம் ஏன்டி! படிக்க வைக்கிறேனு சொன்னதும் எப்படி நம்புறதுனு கேரண்டி எல்லாம் கேட்ட.?”
“அது…” எனத் தடுமாறினாள் மீரா.
“பாத்தீயா! என்ன ஒரு வில்லதனம், அப்படியே உன் அப்பனுக்கு தப்பாம பொறந்து இருக்க” என அவளை சீண்டினான்.
“சும்மா என் அப்பா பத்தியே பேசாதீங்க, மொத நாள் படிக்க வைக்க மாட்டேனு தெளிவா சொல்லிட்டு, அடுத்த நாள் படிக்க வைக்கிறேனு சொன்னா, நான் எதை நம்புவேன்.? உங்களுக்கு வேணா படிக்க வைக்கிறேனு சொன்னது என் கழுத்தில் தாலி கட்டனுமுனு ஒரு வீம்புக்கா இருக்கலாம். ஆனா எனக்குப் படிப்பு ரொம்ப உயிரான விசயம்.
அதான் அதை உறுதிப்படுத்திகிட்டேன். அதுல என்ன தப்பு இருக்கு. நீங்க என் லவ்வரா.? இல்ல முறைப்பையனா.? இல்ல தாலி கட்டிய காவிய புருசனா.? நான் உடனே தலை ஆட்டிட்டு பலியாடு மாதிரி பின்னாடியே வர.” என முறைத்தாள்.
“ஏய்! யாருடி நீ பைத்தியமா.? நானும், அவளும் விடிய விடிய பேசியிருக்கோம், இந்தா இந்த பெட்ல படுத்துகிட்டு தான் பேசுவேன். பொண்ணு பாத்ததில் இருந்து முழுசா ஒரு நாள் கூட விடாம நாங்க பேசியிருக்கோம், காதலுனா வருச கணக்கா காதலிக்கனுமா.? நாங்க உரிமையா காதலிச்சோம், அது கல்யாணம் பண்ணிக்கப் போற உரிமை.
ஆமா! அவளுக்கு கல்யாணமாகி போயிட்டா, அதுக்காக நான் மாறி ஆகனுமா.?” என்றான்.
“மீரா!” எனக் கத்தினான். பெண் பார்த்த நாளில் இருந்த மீரா என்னவோ பயத்துடன் தான் காட்சியளித்தாள், ஆனால் கழுத்தில் தாலி ஏறியதும் ஏதோ தைரியம் மிகுந்தது போல் அவனுடன் வார்த்தைக்கு வார்த்தைப் போர் செய்தாள்.
அது மீராவிற்கே ஆச்சரியமான ஒன்று தான், அவன் முன் பேசவே பயந்தது போல் பேசுபவள் இப்பொழுது பேச்சில் மல்லுக் கட்டினாள். அவன் முன்னால் பேச தெரியாமல் இல்லை, வீரனார் மேல் உள்ள பயம்.
“உஷ்ஷ்ஷ்! கீழே இருக்கவங்களுக்கு கேக்க போகுது, ஏன் கத்துறீங்க.? உங்கக் காதல் காவியமாவே இருக்கட்டும், அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு. இன்னும் நீங்க இப்டி பேசினா பைத்… அப்டி தான் சொல்லுவாங்க!” என முகத்தைச் சுளித்தாள்.
“மீரா! உனக்கு என் மனசுப் புரியல, நான் விரும்பின பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டுனு என்னால மனச மாத்த முடியாது. ஒன்ஸ் மனசுல ஃபிக்ஸ் பண்ணினவ, அவ வேணா மாத்திக்கிட்டுப் போயிட்டா, பட்! ஐ கான்ட்” என மனதின் வலி வெளிப்பட கூறினாள்.
அவனின் குரலில் ஏதோ வித்தியாசம் தெரிய அது ஏனோ மீராவிற்கு வேறு உணர்வைக் கொடுத்தது.
‘அர்ச்சனா உண்மையிலே இவரை மிஸ் பண்ணிட்டாங்க!’ என எண்ணினாள்.
“இங்கப் பாரு மீரா! நான் உன் கிட்ட எதையும் மறைச்சுக் கல்யாணம் பண்ணல, அர்ச்சனா பத்தி சொல்லிட்டேன். நீ என் மனசுகுள்ள வர முடியாதுனும் தெளிவா சொல்லிட்டேன். எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாண மேடைக்கு வந்த,
மனச கட்டுப்படுத்தி கல்யாண மேடை வந்தும் என்னால நார்மலா இருக்க முடியல, இன்னொருத்திக்கு தாலி கட்ட போறேனு நெனச்சு புழுங்கிட்டு இருந்தேன். ஆனா மேடையில் நடந்த கலவரத்தில், நான் கூட சந்தோஷபட்டேன் கல்யாணம் நிக்க போதுனு, ஆனா உன் அப்பா ரொம்ப பேசிட்டார். என்னையும் என் அப்பாவையும் பேசினதுக்கு அந்தாளுக்கு பதிலடியா இந்தக் கல்யாணம் நடந்தே ஆகனுமுனு நெனச்சு தான் உனக்குத் தாலி கட்டினேன். ஆனா!” என நிறுத்தினான்.
“ஆமா தானே! சரி, நீங்க என்ன சொன்னீங்க.? மனசுல அவ தான் இருப்பா, ஆனா உன் கூட வாழுறேன், குழந்தைகளுனு குடும்பமா இருப்போமுனு சொன்னீங்கள, அப்புறம் என்ன.? அப்படியே வாழுங்க, எனக்குப் பிரச்சனையில்ல. என் மனசுலயும் காதல், கத்தரிகாய் இல்லை, பாவம்! உங்கம்மா, குடும்பம், என் குடும்பம் இவங்களுக்காக வாழுவோம்” என்றாள்.
“மணமேடைக்கு வந்து தாலி கட்டவே முடியலனு சொல்றேன், இதுல குழந்தைங்களா.?”
“அப்டினா! நான் உங்களை விட்டுப் போகனுமா.? இல்ல, இப்டியே நீங்க அர்ச்சுவை மனசுல நெனச்சுட்டும், நான் என்னையும், படிப்பையும் நெனச்சுட்டும் காலம் பூரா வாழுறதானு கேக்குறேன்.”
“நான் பிளாங்கா இருக்கேன்.” எனத் தடுமாற்றங்களை நிறைத்துக் கூறினான்.
“இப்டி எல்லாம் சொன்னா எப்டி சௌந்தர் சார்.? இப்டியா அப்டியா சொல்லுங்க. எனக்கு ரெண்டுக்கும் ஓகே தான். பட்! கண்டிசன்ஸ் இருக்கு.”
“புரியல!”
“ஓகே! புரியுற மாதிரி சொல்றேன். ஃபர்ஸ்ட், ஒரே வீட்டில் இருக்கலாமுனா நீங்க என்னைய தொடாம இருக்க முடியாது, ஏனா இன்னும் கொஞ்ச மாசம் போயிட்டா புள்ள எங்கனு என்னைய தான் நச்சரிப்பாங்க. சோ! ஒரே வீடுனா நமக்குள்ள தாம்பத்யம் வேணும், அது விருப்பமே இல்லைனாலும் சரி.
செகண்ட், நான் தனியா போகனுமுனா, யா ஓகே! போறேன், டைவர்ஸ் பண்ணிக்கலாம். பட்! நான் படிக்கனும், நீங்க தான் படிக்க வைக்கனும். அதுக்கு ஓகேனா, டைவர்ஸ் ப்ராஸெஸ் போற வரைக்கும் இங்கயே இருந்துப் படிக்கிறேன், யாருக்கும் தெரிய வேணாம், எப்டியும் லேட் ஆகும். அப்பவும் குழந்தைப் பத்தி கேப்பாங்க அதுக்கு நீங்க தான் பொறுப்பு, ஆன்சர் தெம். ஃபைனலா நான் சைன் போட்டு போயிடுறேன், தட்ஸ் ஆல், மனசிலாயோ!” என முடித்தாள்.
சௌந்தர் அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு”நீ ரொம்ப க்ளெவரா தான் பேசுற, ஆனா உன்னோட இந்த கண்டிசன்ஸ் எல்லாம் என் வீட்டுல, என் அப்பா கிட்ட வேலைக்கு ஆகாது, அவர பொறுத்தவரை நீ தான் என் பொண்டாட்டி, அதுல மாற்றம் இல்ல, நான் அதை மாத்தவும் முடியாது.
அதாவது அவங்க முன்னாடி இந்த டைவர்ஸ் பேச்சுக்கே வேலையில்ல, ஆனா ஒரு விசயம் நானும் உன்ன பொண்ணுப் பாக்க வந்ததுல இருந்து தாலி கட்டுற வரையிலும் நீ புடியா நிக்கிற ஒரே விசயம் படிக்கனும், படிக்கனும்…
நான் தான் உன்னைய படிக்க வைக்கனும், அப்படினு விதி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்! படிக்க வச்சு தொலையுறேன். அதுவும் என்னோட சுயநலத்துக்குனு வச்சுக்கோ, ஏனா! அட்லீஸ்ட் நீ படிக்கிற வரை குழந்தை விசயத்தை தள்ளிப் போடலாமே, எனக்கு இப்பதைக்கு அத பத்தி யோசிக்க கூட முடியாது.
சோ! நீ படிக்க ரெடியாகு, அப்பா கிட்ட பேசி தொலையுறேன். தயவுச் செஞ்சு என்னைய தொல்லைப் பண்ணாத. என்ன மனசிலாயோ!” என்றான் நக்கலாக.
“நிஜமா சொல்றீங்களா.? அப்ப நோ டைவர்ஸ், போனஸா படிக்கவும் வைக்கிறீங்க. அய்யோ! கேக்கவே சந்தோஷமா இருக்கே, இப்ப தான் மனசிலாயி!” எனச் சிரித்தாள்.
“எப்படியோ, நீ நெனச்சத சாதிக்கப் போற” என சலிப்பாக கூறினான்.
“ச்சே! ச்சே! அப்படியில்லங்க, ஏதோ ஒரு வீம்புல உங்கக் கூட பதிலுக்குப் பதில் பேசிட்டேன்.”
“இவ்ளோ போல்டா என் கிட்ட பேசுற நீ, ஏன் உன் அப்பா கிட்ட பேச வேண்டியது தானே.?”
“அப்ப, அப்பா இருந்த நெலமயில இப்டி எல்லாம் என்னால பேச முடியல”
“ஆனா பேச தெரியும்!”
“ம்ம்ம்! நான் என்ன ஊமையா.? அப்ப உங்கக் கூட இப்டி பேசி இருந்தா என் அப்பாவே நாலு போட்டு இருப்பாருல.”
“ஊமைனு நான் தப்பா நெனச்சுட்டேன்.”
“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” எனப் படுப்பதற்காக ஆயுத்தமானாள்.
சௌந்தர் அப்படியே தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடினான்.
சட்டென்று அவன் பக்கம் திரும்பிய மீரா, “அப்புறம் என்னத்துக்கு அந்தப் பொண்ண கல்யாணம் பண்ண போற மாதிரியே பேசுனீங்க.?” எனக் கேட்டாள்.
“நான் எப்ப அப்படி சொன்னேன்” எனக் கண்களை திறவாமலே கேட்டான்.
“ம்ம்ம்! நீங்க தாங்க சொன்னீங்க ராணியாட்டம் வாழ வச்சு இருப்பேனு”
“என் பேச்சைக் கேட்டு என் கூட வந்திருந்தா ராணியாட்டம் வாழ வச்சு இருந்திருப்பேனு சொன்னேன். உன் கற்பனைக்கு எல்லாம் நான் ஆளில்லை” எனக் கண்களைத் திறந்துக் கூறியவன், மீண்டும் கண்களை மூடிக் கொண்டு,
“மனசுல அவள வச்சுக்கோங்க, பொண்டாட்டி நான் தான்… படிக்க வைங்க டைவர்ஸ் தரேனு பேரம் பேசினவ இவ, என்னமோ நான் பேசின மாதிரி பிளேட்டை மாத்தி போடுறா” எனக் கூறி, இதழைச் சுளித்தப்படி இறங்கி தலையணையில் படுத்தான்.
“ஆ!” என்ற முனகல் சத்தம் கேட்க, மீரா “நான் வேணா ஹெல்ப் பண்ணவா.?” எனக் கேட்டாள்.
“அய்யோ! வேணாம் மேடம், நீங்க படுத்துக் கனவு காணுங்க, படிச்சு மேதை ஆகுற மாதிரி, அப்படியே உங்கப்பனை நாலு வெலுக்குற மாதிரி” எனக் கிண்டல் செய்தவன், “பொண்ண பெத்து விட்டு இருக்கான் பாரு, சரியான முட்டைகோஸா! உரிக்க உரிக்க வர மாதிரி, பேச பேச விட மாட்டுறா” எனப் புலம்பியவாறு, “இதுல இந்த அலங்காரம் வேற” எனக் கையை நீட்ட, அதில் பட்ட பூ மாலையை தூக்கி எறிந்தான்.
மீரா உள்ளுக்குள் சிரித்தப்படி “முட்டைகோஸ் தான் பந்தியில் நின்னு இழுத்துக் குடுக்குமுனு சொல்வாங்க, சோ! என் சேவை எப்பவும் தேவை சௌந்தர் சார், மனசிலாயோ!” எனக் கூறிவிட்டு மறுபக்கம் திரும்பிக் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளைத் திரும்பி முறைத்தவன், “ஏய்! ஏதோ நான் போனா போதுனு, காம் ஆகியிருக்கேன். கடுப்பாக்காம தூங்கிடு, உன் சேவையும் வேணாம், தேவையும் இல்ல, உன்னோட வேலையைப் பாரு போதும்”
“என் சேவை இந்த இருபது நாள்கள் தங்களுக்கு தேவை, முட்டைகோஸ் புருசா! ஓகே, குட் நைட்” என அவனிடம் இருந்து சற்றே தள்ளி கை படாத அளவு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
சௌந்தர் கோபம் வந்தாலும் பேச முடியாமல் கண்களை மூடினான்.