“அச்சோ! ஏங்க கத்துறீங்க.? நான் தான்! நான் தான்!” என அவன் வாயில் கைவைத்து மூடினாள்.
“ம்ம்உகும்!” என முறைத்து, அவள் கையை நகர்த்திவிட்டவன்,
“ஏய்! அறிவிருக்கா.? நானே வலியில முனகிட்டு இருக்கேன், இப்டி கிட்ட வந்து உன் மூஞ்சியைக் காட்டுறீயே, பயமா இருக்காதா.?” எனத் திட்டினான்.
“பயமா! என் மூஞ்சியைப் பாத்தா பயமா இருக்கா!” எனக் கேட்டு தன் முகத்தை தடவியவள், “இந்த மூஞ்சி பாத்து எத்தன லவ் லெட்டர் வந்திருக்குத் தெரியுமா.? இத பாத்து பயமா இருக்குனு சொல்றீங்க!” என முகத்தைச் சுளித்தாள்.
அவனோ வலி எடுக்க”நானே வலியில இருக்கேன், உனக்கு நக்கலா இருக்கா.?” என முறைத்தான் அவன்.
“என்னது நக்கலா.?”
“ஆமா!” எனக் கூறி, கைகளால் கால் மீது தடவிக் கொண்டான்.
“ஹலோ! உண்மையாவே லவ் லெட்டர் வந்துச்சு, அதும் இந்த மூஞ்சிக்காக…” என அதை நிரூபிக்கும் வகையில் வாதாடினாள்.
அவளை நேருக்கு நேர் பார்த்தவன், “இப்ப அதுக்கு என்ன.?” எனக் கேட்டான்.
“இப்ப சொல்லுங்க, என் மூஞ்ச பாத்தா பயமா இருக்கா.?”
“ம்ம்ம்! இங்க பாரு, எனக்கு கால் வலி உயிர் போகுது, அப்ப போய் நான் கண்ணைத் தொறக்குறப்ப இவ்ளோ கிட்ட உலக அழகியே வந்தாலும் பயமா தான் இருக்கும்” என இதழைச் சுளித்தான்.
“தேங்க்ஸ்!” எனச் சிரித்தாள்.
“லூசா நீ! நான் என்ன சொல்றேன். நீ தேங்க்ஸ்னு சொல்ற.”
“என்னைய உலக அழகி கூட கம்பேர் பண்ணிட்டீங்கள அதுக்கு தான் தேங்க்ஸ்!”
“கடவுளே! இந்தக் கொடுமை எல்லாம் எனக்கு தேவையா.? சரியான பைத்தியத்துக்கு கிட்ட மாட்டிவிட்டீயே” எனப் புலம்பினான்.
“பைத்தியமா!”
“பின்ன இல்லையா, ஏய்! பேசாம தூங்கு, எனக்கு ஏற்கனவே வலி உயிர் போகுது.”
“என்ன பண்றது, அப்படி தான் வலிக்கும், எனக்கும் ஒரு தடவை கை ப்ராக்ஜர் ஆச்சு, ஸ்கூட்டியில் இருந்து விழுந்துட்டேன். ஒன்னும் பண்ண முடியாது, கண்ணை மூடிட்டு நீங்களும் பேசாம, சாரி! முனகாம தூங்குங்க, எனக்கும் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுது” என மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள் மீரா.
“ஏய்! நான் வலியில் முனகுறேன், அது உனக்கு டிஸ்டர்ப்பா.? இன்னைக்கு மட்டும் நான் நல்லா வந்திருந்தேன், நீ தொலைஞ்சிருப்ப! இந்த முதல் இரவு உனக்கு நரகமா இருந்திருக்கும் தப்பிச்சுட்ட” என ஒற்றை கையை ஓங்கி மெத்தையில் அடித்தான்.
“அதான் நடக்கலையே! கடவுள் எனக்காக ஹெல்ப் பண்றார் போல, கடவுள் இருக்காரு மீரா!” என தனக்கே கூறுபவள் போல் சத்தமாகவே கூறினாள்.
சௌந்தர்”இதுக்கு எல்லாம் சேத்து நீ அனுபவிப்ப, அப்ப கடவுள் இருக்காரானு பாத்துக்கோ” என வலியில் பற்களைக் கடித்தான்.
மீரா நித்திரையில் அசந்திட, சௌந்தர் அவ்ளோ வலியிலும் அவனை அறியாமல் தூங்கினான்.
காலைப்பொழுது…
விடிந்தும் நித்திரையில் இருந்த மீராவின் ஃபோன் அடித்தது.
அவளோ அது காதில் விழாமல் தூங்கினாள்.
ஆனால் சௌந்தரின் தூக்கம் கெட, முழித்தவன் சத்தம் எங்கிருந்து வருகிறது எனப் புரியாமல் தேடினான்.
பிறகு விழிகள் ஓரிடத்தில் நின்றிட, “இது என் ஃபோன் இல்லையே, ஓ! இந்த முட்டைகோஸ் ஃபோனா” எனக் கடுப்பானவன்,
“ஏய்! ஃபோன் அடிக்குது பாரு” என அவளை வார்த்தைகளால் எழுப்பினான்.
ஆனால் அவளோ கும்பகர்ணிக்கு தங்கச்சியாக மாறி இருந்தாள், முந்தைய நாள் நடந்த நிகழ்வுகளில் மனமும், உடலும் அசதியாகிட நித்திரை மிகுதியாகியிருந்தது.
ஃபோன் மீராவிற்கு அந்தப் பக்கம் தான் இருந்தது, சௌந்தர் டென்சனாகிட ஃபோன் ரிங் நின்றது.
“ஹப்பாடா!” என அவன் அமைதியான நேரம் மறுபடியும் ஃபோன் அடிக்கத் தொடங்கியது.
இந்த முறை கடுப்பாகிய சௌந்தர்”ஏய்! முட்டைகோஸ், இங்க பாருடி!” என அவளை அழைத்தான்.
ம்ம்ம்! வாய்ப்பே இல்லாமல் தூங்கினாள்…
அவள் பக்கம் மெல்ல நகர, அப்பொழுது மறந்திருந்த வலி மீண்டும் தொடங்கியது போல் தோன்றியது.
ஆனாலும் மெல்ல இடுப்பை மட்டும் நகர்த்தி, “ஏய்!” என அவள் தோளை தட்டினான்.
“ம்ம்ம்!” என்றாள் மெல்ல.
“உன் ஃபோன் அடிக்குதுப் பாரு”
“அடிக்கட்டும்! அதுக்கு என்ன.?” எனப் புலம்பியவாறே தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
“ம்ம்ம்! இப்ப மட்டும் என் கால் நல்லா இருந்துச்சு, உன்னையும் உன் ஃபோனையும் தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன்” எனக் கோபத்தில் கத்தினான்.
“ஏங்க! கால் வலிக்குதனா பொறுத்துகிட்டு தான் ஆகனும். அதுக்காக காலையில் ஏன் கத்துறீங்க.?” என மெல்ல எழுந்தமர்ந்தாள் மீரா.
“மீரா! உன் ஃபோன் அடிக்குது” எனப் பொறுமையாக பற்களைக் கடித்தப் படி கூறினான்.
“ஓ!” என அதை எடுத்துப் பார்த்தவள், திரையில் பிரேமா பெயர் ‘அத்தம்மா!’ என வர “அத்தம்மா!” என அதை அட்டென்ட் செய்தாள்.
“சொல்லுங்கம்மா!”
“கண்ணு! எழுந்திரிச்சு வரீயா.? மணி எட்டு ஆகப்போது, உன் மாமா வேற நீ எழுந்திரிக்கலையானு கேட்டார், நீ காலையில எழுந்திரிச்சு வந்துட்டு மறுபடியும் ரூமுக்குப் போயிருக்கனு சொல்லிட்டேன்” எனச் சிரித்தார்.
“ஓ! தேங்க்ஸ்மா, இதோ பத்து நிமிசத்துல குளிச்சுட்டு வந்துடுறேன்” என்றாள்.
“சரிம்மா! தம்பி தூங்கட்டும், மாத்திரை போட்டுருப்பான்ல அசதியா இருக்கும். நீ வா”
“அவரு எழுந்திரிச்சாச்சு, பேசுறீங்களா இருங்க” என ஃபோனை நீட்டினாள்.
“நான் என்ன ஃபாரின்லயா இருக்கேன்” என ஃபோனை வாங்கியவன்,
“சொல்லுங்கம்மா!” என்றான்.
“உன்னைய தொந்தரவு செய்ய வேணானு தான் கண்ணுக்கு கூப்புட்டேன். கால் வலி எப்டிய்யா இருக்கு,”
“ம்ம்ம்! அதுக்கு நீங்க என்னைய கூப்புட்டு இருக்கலாம். உங்கக் கண்ணுக்கு இடியே விழுந்தாலும் கேக்காது போல, வைங்க!” என ஃபோனை வைத்தான்.
மீரா அவனைக் கண்டுக் கொள்ளாமல் தன் ஆடையை எடுத்துக் கொண்டு பாத் ரூமிற்குள் சென்றாள்.
அடுத்த பதினைந்தாவது நிமிடம் வெளியில் வந்தவள், இளமஞ்சள் நிறப் புடவையில் மெரூன் பிளவுஸ் போட்டு தலையில் டவல் கட்டியிருந்தாள்.
கண்ணாடி முன் நின்றவள் தலைமுடியை உதறுகிறேன் என துவட்டிவிட, அதன் தண்ணீர் சௌந்தர் மேல் தெளித்தது.
“அம்மா தாயே! தயவுச் செஞ்சு வெளியில் போ! என் ப்ரஷரை ஏத்திடாம” என முறைத்தான்.
“ம்ம்ம்! போறேன், போறேன்” என வெளியில் சென்றவள், சட்டென்று உள்ளே நுழைந்து”ஆமா! நீங்க ரெஸ்ட் ரூம் போகனுமா.?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! மனுசனா காலையில் எழுந்திரிச்சா அதுக்கு போகனும். இது என்ன கேள்வி.? போய் சுந்தரை வரச்சொல்லு. அப்படியே என் ஃபோனை சார்ஜரில் போட்டுப் போ” என்றான்.
“ம்ம்ம்! ஒரு ஹெல்புக்கு கேட்டா, அடுத்தடுத்து வேலைச் சொல்றீங்க. ஏதோ போனா போதுனு செய்றேன். இப்பவாது புரியுதா என் சேவை தேவைனு.” என ஃபோனை சார்ஜரில் மாட்டியவள் வெளியேறினாள்.
அரை மணி நேரம் ஆகியிருக்கும், பிரேமா”கண்ணு! தம்பிக்கு டீ கொண்டுப் போறீயா.?” எனக் கேட்கவும் தான் அவன் சொன்னது நினைவே வந்தது.
‘ஆத்தாடி!’ என்றவள், “அம்மா! சுந்தர் எங்க.?’ எனக் கேட்டாள்.
“சுந்தர் காலையிலே வாக்கிங் போவான், இன்னும் வரல போலம்மா”
“ஓ! சரி, சரி இங்க குடுங்க டீயை” என அதை வாங்கிக் கொண்டு அவசரமாக மாடியை நோக்கி வேகமாக சென்றாள்.
“என்ன இந்தப் பொண்ணு இவ்ளோ வேகமா போது…” எனச் செல்லும் மருமகளையே பார்த்துக் கொண்டு வந்த விருமா, “என்ன உன் மருமக தலதெறிக்க போயிட்டு இருக்கு, என்னவாம்.?” என மனைவியிடம் விசாரித்தார்.
“ம்ம்ம்! தம்பிக்கு டீ எடுத்துட்டுப் போவுது”
“ஆமா! நைட் எத்தன மணிக்கு வந்தான்” எனக் கேட்க, அப்பொழுது தான் நினைவு வந்தது பிரேமாவிற்கு,
“ஏங்க! புள்ளைக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுங்க…” எனப் வருந்திக் கொண்டே கூறினார்.
“கூறுக்கெட்டவளே! இத சொல்ல மறப்பீயா.? இப்ப எப்டி இருக்கான்.?” என அவரை வசவுப் பாடிவிட்டு, மாடியை நோக்கி நடந்தார்.
“நானுமே ராத்திரி பாத்தது தான், இருங்க! இப்ப போ வேணாம், கொஞ்சம் நேரம் கழிச்சுப் போகலாம், அங்க இன்னும் ரூம் சுத்தம் பண்ணனும்” என்றார்.
“ம்ம்ம்! ஏன் இன்னுமா விடியல, அறையை சுத்தம் பண்ண.?” என முறைத்தார்.
“இல்லங்க! தம்பி தூங்கிட்டு இருப்பானு நான் தான் நேரமாகட்டுமுனு சொன்னேன், மருந்து சாப்புட்டுத் தூங்குவான்ல தொந்தரவா இருக்குமே” என எதையோ கூறிச் சமாளித்தார்.
“சரி! சரி!” என உறுமிவிட்டு நகர்ந்தார்.
“கடவுளே! யாரை சமாளிக்குறது, மொதல சுத்தம் பண்ண சொல்லனும், கண்ணு! வரட்டும்” என மறுபடியும் அடுப்படிற்குள் நுழைந்தார்.
*
‘அச்சச்சோ! நல்லா மாட்டினேன், என்ன நடக்கப் போகுதோ!’ எனப் பயந்தவாறே மீரா மாடி ஏறினாள்.
மனதில் பயம் பந்தாட, ஆழ்ந்த மூச்சினை இழுத்துக் கொண்டு அறைக்குள் செல்ல, அங்கு சுந்தர் நின்றபடி இருந்தான்.
‘கடவுளே! ரொம்ப தேங்க்ஸ்’ என இழுத்த மூச்சினை மெல்ல வெளியிட்டாள்.
“ஹாய் அண்ணி! குட் மார்னிங்”
“குட் மார்னிங் சுந்தர்! நீங்க வாக்கிங் போய் இருக்…” என அவள் கேட்டு முடிக்கவில்லை.
“ஆமா அண்ணி! வாக்கிங் போக தான் கிளம்பினேன், அப்புறம் அண்ணன் ஞாபகம் வரவும், பாத்துட்டுப் போகலாமுனு இங்க வந்தா, நல்லதா போச்சு” எனச் சிரித்தான்.
“ஏன் என்ன ஆச்சு.?” என சௌந்தரைப் பார்த்தப் படியே கேட்டாள்.
“பாத் ரூம் போக, முதல் தடவை அடி எடுத்து வைக்கிற குழந்தை மாதிரி நின்னுட்டு இருந்தார். இட்ஸ் ஓகே! டீ கொண்டு வந்தீங்களா! குடுங்க, நான் வாக்கிங் போறேன்.”
“என்னடா இவ்ளோ லேட்டா போற.?”
“இன்னைக்கு லீவ் தானே, சோ! ரிலாக்ஸா போறேன்” எனக் கூறிவிட்டு வெளியேறினான்.
“ம்ம்ம்! நல்லா நடிக்கிற, அது எப்டி சரியா யூஸ் பண்ணி பழிவாங்குற, ப்பா! நீ டேலண்ட் தான்மா, போ! உன்னைய பாத்தாலே டென்சன் ஆகுது” என்றான்.
“இல்லங்க…”
“ப்ளீஸ்! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, தயவுச் செஞ்சு வெளியில போ”
மீராவிற்கு அவனின் கோபம் புரிய, தானும் மடத்தனமா இருந்துவிட்டோம் என உணர்வில் ஏற, டீ டம்பளரை அவன் அருகே வைத்துவிட்டு வெளியெறினாள்.
அவளோ சோகமாக கிச்சனுக்குள் செல்ல, மாமியார் ஒரு துடைப்பம் கொடுத்து, அறையை சுத்தம் பண்ணிவிட்டு வருமாறு கூறினார்.
“சீக்கிரம் பெருக்கிட்டு வா கண்ணு, உன் மாமா வேற தம்பியைப் பாக்கனும்னு நிக்கிறார்.”
“ம்ம்ம்!” என மீண்டும் மாடி ஏறினாள்.
‘மறுபடியுமா! கடவுளே காப்பாத்துற மாதிரி காப்பாத்தி மறுபடியும் மாட்டி விடுறீயே, அய்யோ! அந்த முட்டைகோஸ் புருசன் கத்துவானே’ எனப் புலம்பிய படி நடந்தாள்.
அறைக்குள் துடைப்பத்துடன் நுழைந்தவனைக் கண்டவன்”என்னைய நிம்மதியா இருக்க விட மாட்டீயா.? இப்ப தானே சொன்னேன், உன்னைய பாத்தாலே டென்சன் ஆகுதுனு” எனக் கத்தினான்.
அவசரமாக சென்று அறைக் கதவை மூடியவள், “இப்ப ஏன் கத்துறீங்க.? எனக்கு ஒன்னும் உங்க முன்னாடி வந்து நின்னு உங்க பிபி பல்ஸ் ஏத்தனுமுனு வேண்டுதல் இல்லை, மாமா உங்களைப் பாக்க இங்க வரப்போறாருனு, உங்கம்மா இந்த அலங்காரத்தைச் சுத்தம் பண்ண சொன்னாங்க, அதான் வந்தேன். எல்லாம் என் நேரம்!” என அறையைச் சுத்தம் பண்ண தொடங்கியவள்,
“எனக்கு மட்டும் ஆசையா என்ன.? புடிக்காத புருசன் முன்னாடி வந்து நின்னு பல்லைக் காட்ட, ஏதோ மறந்துட்டேன் உடனே ஆக்டிங், பழிவாங்குறேனு ஸ்டோரி மேக் பண்றாரு, நல்லா கதை எழுதுவாரு போல, அதுக்கு நான் தான் ஹீரோயினா கிடைச்சனா, உகும்க்ம்!” எனப் புலம்பியவாறு அனைத்தையும் எடுத்து கீழே போட்டுப் பெருக்கினாள்.
“ஏய்! வாயை மூடிட்டு கூட்டிப் பெருக்கு, கடவுளே! ஒரு நைட்டே தாங்கலையே, நான் பேசாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருப்பேன், அந்த ரெண்டுப் பரதேசிகளும் தான் வீட்டுக்குப் போயிடுவோம், கல்யாணம் ஆன அன்னைக்கே ஹாஸ்பிடலில் தங்கினா அண்ணிக்கு கெட்டபெயர் அவரைகாய்க்கு கெட்டப்பெயருனு வசனம் பேசி கூட்டிட்டு வந்தானுங்க. இப்ப உன் ஆக்டிங் லெவெலை என்னால டாலரேட் பண்ண முடியல, இதுல வேற இந்தம்மாவை ஹீரோயினா போட்டுக் கதை எழுதுறோமாம்.” எனக் கத்திவிட்டு, காதில் ஹெட் ஃபோனை எடுத்து மாட்டிக் கொண்டான்.
“ம்ம்ம்!” என பேச தொடங்கியவள், “வேணாம்! இப்ப பேசினா வேஸ்ட், எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ணுவானே” என கூட்டி முடித்து பின் வெளியேறினாள்.