அடுத்த நாள் காலையில் மாமியாரும், மருமகளும் அடுப்படிற்குள் நின்றுக் கொண்டு இருந்தனர்.
“கண்ணு! வதக்கி வச்சதை எடுத்து மிக்ஸியில் போட்டு, தாளிச்சு வை”
“சரிம்மா!” என்ற மீரா, “அம்மா! நான் காலேஜ்க்கு படிக்கப் போறதால உங்களுக்கு எதும் வருத்தம் இல்லையே!” எனக் கேட்டாள்.
“எனக்கு என்ன வருத்தம் வரப்போவுது கண்ணு! நீ ஆசையா படிக்கப் போற போயிட்டு வா, சுந்தர் சொன்னான் நீ நல்ல மார்க் வாங்கியிருக்கனு, எனக்கு அத பத்தி எல்லாம் தெரியாது, எம் புள்ளைங்க கிட் பரீட்சை எழுதினீயா பாஸ் ஆனீயானு கேப்பேன். பாஸ் ஆயிட்டா ஏதாச்சும் பலகாரம் செஞ்சுக் குடுப்பேன்…” எனச் சிரித்தார்.
மீராவும் சிரித்தப்படி”அப்ப எனக்கு ஸ்வீட் செஞ்சி தரவே இல்லம்மா” எனக் கேட்டாள்.
“அதுக்கு என்னா செஞ்சா போது” என்ற பிரேமா, உடனே ரவையை எடுத்து அளந்து எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்தார்.
“அச்சச்சோ! நான் சும்மா கேட்டேன்மா”
“பரவாயில்ல கண்ணு!”
மீராவின் ஃபோன் ரிங் ஆக, அதை எடுத்து திரையை நோக்கினாள்.
“மாமி கூப்புடுறாங்கம்மா!”
“ஜனனி புள்ளயா, நீ போய் பேசிட்டு வா நான் பாத்துகிறேன்” என்றார் மாமியார்.
“சரிம்மா!” என வீட்டின் பின் வாசல் வழியாக சென்றாள்.
அங்கு தோட்டத்தில் அமர்வதற்காக இருந்த ஒரு கல்லில் அமர்ந்தவள், ஃபோனை அடென்ட் பண்ணி”ஹலோ! மாமி சொல்லுங்க, நல்லா இருக்கீங்களா.?” எனக் கேட்டாள்.
“நான் தான் ஜனனி, உன் மாமா வைய்ப், என்னைய ஞாபகம் வச்சு இருக்கீயா?” என நக்கலாக கேட்க, “மாமி!” எனச் சிணுங்கினாள் மீரா.
“பின்ன என்ன மீரா, புருசன் வீடு போனதும் ஒரு ஃபோன் கூட இல்ல”
“அதுவா!” என சௌந்தருக்கு அடிப்பட்டதைக் கூறினாள்.
“ஏய் என்னடி சொல்ற.? எப்போ, எப்டி.?”
“அது…” என முதல் இரவு அன்று நடந்ததை கூறிட, மீரா”அதுக்கு தான் சொல்றது, நல்ல நாள் அதுமா, அதுவும் கல்யாணம் ஆன அன்னைக்கே யாராச்சும் வெளியில போவாங்களா.?” என ஜனனி திட்டினாள்.
“மாமி!” என அவளை அமைதியானாள்.
“என்னமோ போ, சரி சொல்லு! இப்ப எப்டி இருக்கார்.?”
“ம்ம்ம்! ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க”
“சாயங்காலம் போல நானும், மாமாவும் பாக்க வரோம்”
“அம்மாவையும் கூட்டிட்டு வாங்க மாமி”
“சரி! அம்மாக்கு பேசினீயா.?”
“இல்ல! நான் யாருக்குமே பேசல, நேத்து புது இடம், புது வீடு, புது மனுசங்கனு நாள் போனதே தெரில மாமி, அம்மாக்கு கூப்புடுறேன். அம்மா, அப்பா, சேரா, மாமா, குட்டி எல்லாரும் எப்டி இருக்காங்க”
“அது எப்டி அம்மாக்கு கூட கூப்புட மறக்கும் மீரா, நேத்து முழுசும் அத்தாச்சி ஒரே புலம்பல், நீ எப்டி இருக்கீயோ என்னமோனு, உனக்கு கூப்புடவும் பயம் வேற, நீ எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கனு தெரியாம எப்டி கூப்புட முடியும்.”
“இல்ல மாமி!” எனத் தடுமாறியவளிடம், “யாரு என்ன சொன்னாலும், எப்டி சண்டைப் போட்டுகிட்டாலும் நீ அம்மா கிட்ட பேசுறத மட்டும் மறந்துடாத, சொல்லிட்டேன்.”
“சரி மாமி!” என அமைதியானாள்.
“அப்புறம் சொல்லு, அங்க எப்டி போகுது.?”
“ம்ம்ம்!” என்றவளுக்கு சட்டென்று அது நினைவு வர, “மாமி! நான் காலேஜ் போக இங்க பர்மிசன் கொடுத்துட்டாங்க” என மகிழ்ச்சியாக கூறினாள்.
“ஏய்! என்ன சொல்ற மீரா, நிஜமாவா!”
“ஆமா மாமி! நிஜமா தான், என் வீட்டுகாரர் தான் மாமா கிட்ட பர்மிசன் வாங்கினார், அவருக்கு கால் சரியானதும் போக சொல்லிட்டாங்க”
“எப்டி மீரா, அதிசயமா இருக்கு”
“ம்ம்ம்!”
“அன்னைக்கு முடியாதுனு சொன்ன மாப்புள்ள இப்ப எப்டி ஒத்துக்கிட்டார், ஒரு வேளை உன் மேல விருப்பம் வந்துட்டோ” எனக் கிண்டல் அடித்தாள் ஜனனி.
‘ஆமா! விருப்பம் வந்துட்டாலும், அதான் அவரு இன்னும் எக்ஸ் ஞாபகம் விடாம வச்சு இருக்காரே’ என எண்ணியவள்,
“அப்டி எல்லாம் ஒன்னுமில்ல மாமி, கல்யாணத்தப்ப என்னைய ரூமுக்குள்ள அழைச்சுட்டுப் போய் இத தான் பேசினாரு, படிக்க வைக்கிறேன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோனு, அதான்” என நடந்ததில் பாதியை கூறிச் சமாளித்தாள்.
“ஓ! எப்டியோ கல்யாணமும் முடிஞ்சுட்டு, நீயும் படிக்கப் போற, அது வரைக்கும் சந்தோஷமா இருக்கு, நீயும், மாப்பிள்ளையும் ஹேப்பியா வாழுங்க அது போதும்”
“ம்ம்ம்!”
“நான் ஃபோனை வைக்கிறேன்”
“சரி மாமி! அம்மா கிட்ட பேசுறேன்… அப்பா!” என இழுத்தாள்.
“ரெண்டுப் பேர் கிட்டயும் பேசு, என்ன ஆனாலும் அவங்க பெத்தவங்க, உன் புகுந்த வீட்டில் என்ன வேணாலும் பேசலாம், நீ விட்டுக் குடுக்க கூடாது, ரெண்டுப் பக்கமும் சமாளிச்சு தான் ஆகனும். சித்தப்பா பத்தி உனக்குத் தெரியாதா, அவரு பேச்சே அப்டி தான். நீ ஃபோன் பண்ணி பேசு.”
“சரி மாமி!” என ஃபோனை வைத்தாள்.
மீரா யோசனையுடன் அம்மா பைரவிக்கு அழைக்க, அவருடன் கண்ணீர் மல்க பேசி முடித்தாள்.
“சாரிம்மா! இனிமே டெய்லியும் கூப்புடுறேன்” என அவரை சமாதானம் செய்து, சௌந்தர் விபத்து பற்றியும் கூறி, மாலை மாமா, மாமியுடன் வரக் கூறினாள்.
அடுத்து வீரனாருக்கு அழைக்க, அவர் ஃபோனை எடுக்கவில்லை. தன்னை மதிக்காமல் தன் பேச்சு கேட்காமல் மகள் கழுத்தை நீட்டிவிட்டாள் என்ற கோபம் அவருக்கு இன்னும் இருந்தது.
ஆனால் சௌந்தர் அவர் பார்த்த மாப்பிள்ளை என்பதையும் அவர் கவனத்தில் மறக்கவில்லை, யாராக இருந்தால் என்ன நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் வரவேண்டியது தானே என வீம்பு பிடித்தார்.
மீரா தந்தைக்கு முயற்சி செய்துப் பார்த்து விட்டு, கண்ணீர் வடிய துடைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தாள்.
பிரேமா”ஜனனி என்ன சொன்னுச்சு.?” எனக் கேட்டார்.
மீரா பதிலின்றி நிற்க, அவரைத் திரும்பி பார்த்தவர், அவளின் கலங்கிய கண்களைக் கண்டு”கண்ணு! என்ன ஆச்சு.?” என விசாரித்தார்.
“அம்மா பேசினாங்க, ஆனா அப்பா ஃபோன் எடுக்கவே இல்லம்மா, அதான் கஷ்டமா இருக்கு, உங்க மகன் அவர் பார்த்த மாப்பிள்ளை தானே, என்னமோ நான் லவ் பண்ணி ஓடிவந்த மாதிரி நடந்துகிறாரு.” என வருத்தமாக கூறினாள்.
“கண்ணு! இந்த ஆம்பளைங்களுக்கே முன் கோபம் தான் அதிகம் வரும், அதும் உன் அப்பா, என் புருசன் எல்லாம் அதிகபடியானவங்க, அவங்களை எல்லாம் கண்டுக்காத, இந்த வீட்டுல உனக்காக நான் இருக்கேன், சுந்தர் இருக்கான் சரியா.”
“உங்கப்புள்ளய கணக்குலயே சேக்கலம்மா.?”
“அவனும் உனக்காக யோசிப்பான், நீ வேணா பாரு அது நடக்காம போயிடாது. பாத்தீயா உன்னைய படிக்க வைக்க அவன் தானே கேட்டான். என் புள்ள தங்கம், என்ன ஒன்னு கோபகாரன், எல்லாம் மாறும்” என மருமகளை தேற்றுவதாக தன்னையும் தேற்றிக் கொண்டார்.
மீரா மனதில்’அவரு எதுக்காக காலேஜ் அனுப்புறாருனு தெரியாம நீங்க வேற…’ என எண்ணி இதழ்களைச் சுளித்தாள்.
“கண்ணு! கேக்குறேனு தப்பா நெனக்காத, நேத்து அங்க சொன்னீயே அதே மாதிரி இந்த வீட்டு வாரிசை படிக்கப் போனாலும் பெத்து தருவீயா.?” என ஆசையாக கேட்டார்.
மதிய உணவின் போது விருமாவிடம் மீரா வீட்டில் இருந்து ஆள்கள் வருவதைப் பற்றி பிரேமா கூறினார்.
அவருக்கு வீரனார் வராதவரை சரி எனத் தலையை ஆட்டிச் சென்றார்.
சௌந்தரிடம் மீராவையே மதிய உணவைக் கொடுத்துவிட்டு விருந்தாளி வருவதைப் பற்றி சொல்ல சொன்னார் மாமியார்.
அவளோ அறைக்குள் செல்ல, அவன் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான். சாப்பாட்டை எடுத்து வைத்தவள், அவன் ஃபோனை வைத்ததும் விசயத்தை மெல்லக் கூறினாள்.
“உன் வீட்டு ஆளுங்களை பாக்க உனக்கு இது ஒரு சாக்கு. அதான் வரச் சொன்னீயா.?” என நக்கலாக கேட்டான்.
“ம்ம்ம்! எனக்கு பாக்கனுமுனு தோணுனா நான் நேரா போய் பாத்துட்டு வருவேன்.”
“ஓ! அதுக்கு நான் பர்மிசன் தரனும்.”
“என் அப்பா, அம்மா பாக்க உங்க பர்மிசன் எதுக்கு.?”
“ம்ம்ம்! இப்ப நீ பொண்டாட்டி ஆகிட்ட, அதனால அந்த பர்மிசன் வாங்கனும் முட்டைகோஸ். எப்டி படிக்கப் போக பர்மிசன் வாங்கினீயோ அப்டி” என்றான் அழுத்தமாக.
மீரா அமைதியாக இருந்தாள்.
“என்ன பதிலையே காணும்?”
“அதான் சொல்லிட்டீங்கள நான் உங்க அடிமைனு, புரிஞ்சுட்டு”
“புரிஞ்சா சரி!”
“நான் உங்கப் பொண்டாட்டினா, நீங்க என் புருசன் தானே, சோ! நீங்களும் என் அடிமை தான், இனிமே உங்க அம்மா, அப்பா கிட்ட பேச என் கிட்ட பர்மிசன் வாங்கிட்டுப் பேசுங்க” என்றாள் அதே அழுத்ததுடன்.
“ஏய்! என்ன திமிரா.?”
“அப்ப உங்களுக்கும் திமிரா முட்டைகோஸ் புருசா.?”
“நான் ஆம்பள!”
“நான் பொம்பள!”
“நீ தான் என் வீட்டுல வந்து இருக்க, நான் ஒன்னும் உன் வீட்டுல போய் இல்ல”
“ம்ம்ம்! உங்க வீட்டுல வந்து நான் இருந்தாலும், நான் பொம்பளைனு அப்பப்ப சொல்லிக்க மாட்டேன். ஆனா நீங்க ஏன் நான் ஆம்பளைனு சொல்லிக்குறீங்க.? பாத்தாலே தெரியுறீங்களே!”
“என்ன நக்கலாக.?”
“தெரிஞ்சா சரி!”
“நீ ரொம்ப வாய் பேசுற, கன்ட்ரோல் பண்ணு”
“நீங்க தான் என்னய பேச வைக்கிறீங்க. என் அப்பா, அம்மாவ போய் பாக்க பர்மிசன் கேக்க சொன்னது யாரு.? இப்ப நான் ரொம்ப பேசுறனா, நல்லா இருக்கே உங்க நியாயம்.”
“அதான் உன் அப்பன் உன்னைய ஏத்துக்கலயே, இப்ப என்னதுக்கு உருகுற.?”
“அவரு ஏத்துக்கலனு யாரு சொன்னா.”
“நான் தான் பாத்தனே, காலையில நீ கீழ பேசிட்டு இருந்தத, அம்மா கிட்ட கண்ணீர் வடிச்ச, அப்பாக்கு ஃபோன் கிடைக்கவே இல்லனு கண்ணீர் துடைக்க துடைக்க ஒழுகினுச்சு” எனச் சிரித்தான்.
மீராவின் கண்கள் கலங்க, மனதில் ‘சாடிஸ்ட்!’ என சௌந்தரை திட்ட தான் முடிந்தது.
சட்டென்று”என் வீட்டுல இருந்து வரும் போது இப்டி எதும் சாடிஸ்டா பேசி வைக்காதீங்க” என்றாள்.
சௌந்தரின் கோபம் எகிறிட…
“ஹேய்! யாரு சாடிஸ்ட்… உன் அப்பா தான் சாடிஸ்ட்… அப்புறம் நீ…” என நிறுத்தினான்.
“ஏன் நிறுத்துட்டீங்க.? சொல்லுங்க நான் சாடிஸ்டா.? நான் ஒன்னும் உங்க குடும்பத்துல இருக்க யாரையும் மனசு நோகுற மாதிரி பேசவே இல்ல, ஏன் உங்களை கூட நானா எதுவும் பேசல, நீங்க பேசுறதுக்குப் பதில் சொல்றேன் அவ்ளோ தான், அதுக்கு பேரு சாடிஸ்ட்னா, அப்டியே இருந்துட்டுப் போறேன். ஆனா ஒன்னு என் வீட்டுல இருந்து வரவங்க கிட்ட நீங்க சரியா பேசனும், இல்லைனா அதுக்கான ரிப்லெக்சன் நான் இந்த வீட்டுல காட்டுவேன், உங்க அம்மா, அப்பா, தம்பி அப்புறம்…”
“அப்புறம்…” எனப் புருவத்தைச் சுளித்தான்.
“ம்ம்ம்! உங்க எக்ஸ் கிட்ட…”
“அவள ஏன் இடையில் இழுக்குற.?”
“ஓ! அவங்க நம்ம இடையில் இல்லைனு இன்னுமா நீங்க நம்பிட்டு இருக்கீங்க.? சோ சாரி! மிஸ்டர் முட்டைகோஸ் புருசனே மொதல உங்க மனசாட்சியை கிட்ட பேசுங்க, அப்புறம் என் ஃபீலிங்க்ஸோட விளையாடலாம்.” எனக் கூறிவிட்டு அவள் வேலையைத் தொடர்ந்தாள்.
“அர்ச்சு நம்ம இடையில் இருந்தாலும் இப்டி எல்லாம் பேச மாட்டா, ஆனா நீ மகா கேவலமா பேசுற, என் கிட்ட ஒரு மாதிரியும், என் குடும்பத்துக் கிட்ட வேற மாதிரியும் நடிக்குற, பாப்போம் எவ்ளோ நாளுனு. உன் குடும்பத்த நானா வரச் சொன்னேன், என்னதுக்கு அதுங்க எல்லாம் வருதுங்க, ட்ராமா குடும்பம்” எனக் கோபமாக கூறினான்.
“யாரு ட்ராமா குடும்பம்.? என் குடும்பமா, நீங்க தான் ரொம்ப பேசுறீங்க, நான் இங்க உள்ளவங்கள மதிக்குறேன். அவங்களை ஏதாச்சும் சொல்ல வச்சுடாதீங்க” என அவன் முன் வந்து கைவிரல் நீட்டிப் பேசினாள்.
“ஏய்! என்ன கை எல்லாம் நீளுது” என அவளின் கைவிரலைப் பிடித்தவன், மடக்க மீரா வலியில்”ஆ!” எனச் சத்தமாக கத்தினாள்.
அதற்கு முன் வரை இருவருமே மெல்ல தான் பேசினர்.
பிரேமாவிற்கு மீராவின் குரல் கேட்க, “கண்ணு! என்ன சத்தம், கீழ விழுந்திட்டீயா.?” எனக் கேட்டார்.
வலியில் வாயில் கைவைத்தவள், “இல்லம்மா! ஒன்னுமில்ல” என்றாள்.
சௌந்தர் கைவிரலை விடாமல் மேலும் சுழற்றிட, வலியில் அவள் கண்கள் கலங்கியது.
“இன்னொரு தரம் என் முன்னாடி இப்டி கையை நீட்டிப் பேசின, அவ்ளோ தான்” என விரலை விடுவித்தான்.
வலியை அடக்கி, கோபம் மொத்தமும் ஏறிட நின்றவள், சட்டென்று அவனின் அடிப்பட்ட காலைப் பிடித்து நகர்த்திவிட்டாள்.
“வலிக்குதா! இப்டி தான் எனக்கும் வலிக்குது, இந்த மாதிரி வயலென்டா அடிக்குறது எல்லாம் என் கிட்ட வேணாம், நானும் அடிப்பேன். என்னைய என் அப்பா, அம்மாவே அடிச்சது இல்ல, என் அப்பாவே மொத மொதலா அக்கா ஒடிப்போனப்ப கோபத்துல கை வச்சார். அதைப் பொறுத்துகிட்டேன் ஏனா அது என் அக்கா பண்ண தப்பு, அதோட தாக்கம் அப்பாவோட கோபமுனு. ஆனா அவரு என்னைய தங்கமா தாங்கி இருக்கார். ஆனா நீங்க யாரு இப்டி எல்லாம் வலியைக் கொடுக்க.?
புருசனா! ஒரு வேளை என் மேல அன்பு இருந்து சரியான காரணத்துக்காக அடிச்சா வாங்கிருப்பேன். இது.? ச்சே! உங்கள எல்லாம் அவங்க எப்டி தான் மகனா பெத்தாங்களோ, அப்டி ஒரு அம்மாக்கு இப்டி ஒரு புள்ள, அப்டி ஒரு தம்பிக்கு இப்டி ஒரு அண்ணன். அப்டி ஒரு அப்பாக்கு, எஸ்! உங்கப்பாக்கு தப்பாம பொறந்து இருக்கீங்க” என முகத்தைச் சுளித்தாள்.
“அப்பா பத்தி பேசாத!”
“ஓ! அப்ப என் குடும்பம் மட்டும் தகரமா! எனக்கு பொக்கிஷம் தான்”
சௌந்தர் கோபத்தில் பெட்டை ஓங்கி குத்தினான். பலகை மாதிரி ஏதோ கீழ் கிடக்க, அதை எடுத்து அவன் கையின் கீழ் வைத்தவள், “இதுல அடிங்க, அப்ப தான் கை ஸ்டாங்கா ஆகும். சும்மா மெத்தையில் குத்தி டேமெஜ் பண்ணிட்டு, மனசிலாயோ!” எனக் கழுத்தை நொடித்துவிட்டு சென்றாள்.
சௌந்தர் யாருடா இவள்.? என்பது போல் அவளை நோக்கினான்.
மாலை வேளை…
மீராவின் வீட்டில் இருந்து வீரனாரை தவிர மற்றவர்கள் சௌந்தரை காண வந்து இருந்தார்கள்.