“வீட்டுக்கு வந்த மருமகளை வச்சு குடும்பம் நடத்த சொல்லாம, படிக்க அனுப்ப போறாரா அந்தாளு, சரியான மானகெட்டவனுங்க அப்பனும், புள்ளையும்” எனக் குதித்துக் கொண்டு இருந்தார் வீரனார்.
“ஏங்க! உங்களுக்கு என்ன வந்துச்சு, மீரா நம்ம பெத்த பொண்ணா இருந்தாலும், இப்ப அவங்க வீட்டு மருமக, அவங்க விருப்பம்” எனக் கணவரை பைரவி முறைத்தார்.
“ஆமா! நாளைக்கு என் கிட்டயும் கேப்பானுங்க, என்னய்யா உன் பொண்ணு கட்டிக் கொடுத்தும் படிக்க போயிட்டு இருக்குனு, வழியில்லாதவன் வீட்டுலயா பொண்ணுக் கொடுத்தனு…”
ஜனனிக்கு கோபம் வர”சித்தப்பா!” என ஏதோ ஆரம்பிக்க, அசோக்”ஜனனி! ஆதி தூங்குறான் பாரு, கெளம்பு வீட்டுக்குபப் போகலாம். அக்கா நீயும் போய் படு, மாமா! நாளைக்கு நம்ம சீக்கிரமா அந்த மாவட்ட ப்ரீ மீட்டிங் போகனும், போய் படுங்க” என அந்தக் கூட்டத்தை களைத்து விட்டான்.
“ஆமா! ஆமா! மறந்துட்டேன் பாரு” என வீரனார் எழுந்து அறைக்குள் சென்றார்.
“ஏங்க! நான் ஏதாச்சும் நல்லா கேட்டு இருப்பேன், அதுக்குள்ள என் வாயை அடக்கிட்டீங்க, எப்படி பேசுறார் பாருங்க இவரும் படிக்க அனுப்ப மாட்டார், அனுப்புறவங்களையும் குறை சொல்வார்.” என ஜனனி கடுப்புடன் கூறினார்.
“ஆமாடா! வர வர உன் மாமா கூட இருக்குறது ஏதோ கீழ்பாக்காத்துல இருக்க மாதிரி தோணுது, மனுசனா இந்தாளு, இவருக்கு மீரா வீட்டுக் குடும்பமே பரவாயில்ல, அன்பான மாமியார், ஆதரவான கொழுந்தன், அவ மாமனாரும் இவரு அளவுக்கு இல்ல, அப்புறம் மாப்பிள்ளை, அவரும் நல்லவரு தான்…” என இதழ்களைச் சுளித்து சலித்தார்.
“அக்கா! மாமா பத்தி புதுசா தெரிஞ்ச மாதிரி பேசுற, விடு”
“என்னமோ போ! இவரு கூட நீ இருக்கதால தான் ஓடிட்டு இருக்கு, இல்லைனா எவனும் மதிக்க மாட்டான், சரி நீங்க கிளம்புங்க.” என பைரவியும் உள்ளே நகர்ந்தார்.
“வாங்க! எப்டியோ மீரா இங்க இருந்து தப்பிச்சுட்டா” என ஜனனி முன்னே நடந்தாள்.
*
இரவு அனைவரும் தூங்குவதற்காக சென்றிட, சுந்தர் வேலையை முடித்து திரும்பி சௌந்தரை வந்துப் பார்த்து விட்டே சென்றான்.
சௌந்தர் அறைக்குள் லேப் டாப்பில் எதையோ ஆராய்ந்துக் கொண்டு இருக்க, பத்து மணிக்கு மேல் அடுப்பு வேலைகளை முடித்துக் கொண்டு உள்ளுக்குள் நுழைந்த மீரா சிறிது நேரம் கழித்து, படுப்பதற்கு ஆயுத்தமாக, “எனக்கு டவுன்லோட் பண்ணனும், இங்க உள்ள வைபை பாஸ்வோர்டு சொல்ல முடியுமா.?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! தெரியாது”
“ஓ! நீங்க வைபை யூஸ் பண்ணலையா.?”
“யூஸ் பண்றேன்”
“அப்ப தெரியாதுனு சொல்றீங்க.?”
“சுந்தருக்கு தான் தெரியும், நான் இதை எல்லாம் மைண்டில் வச்சுக்கிறது இல்ல, வீட்டுக்குள்ள வந்ததும் கனெக்ட் ஆகிடும்”
“ம்ம்ம்! இப்ப எப்டி சுந்தர் கிட்ட போய் கேக்குறது” என தனக்கு தானே பேசிக் கொண்டள்.
அவளைத் திரும்பி பார்க்காமல், அவள் பேசியது காதில் விழ”அப்டி என்ன அவசரமா டவுன்லோட் பண்ணனும்” என லேப்டாப் திரையைப் பார்த்தவாறே கேட்டான்.
“இல்ல! ப்ரண்ட்ஸ் கிட்ட இதுவரை எடுத்த சிலபஸ் மெட்ரியல்ஸ் அனுப்ப சொன்னேன், அதான்…”
“ம்ம்ம்! இவ்ளோ ஃபாஸ்டா படிப்பாளி ரெடி ஆகுறீங்க, அதான் டைம் இருக்கே நீ ஒன்னும் நாளைக்கே காலேஜ் போகபோறதில்ல முட்டகோஸ்” என்றான் நக்கலாக.
“தெரியும்! இப்ப சும்மா தானே இருக்கேன், என்னனு பாக்கலாமேனு தான் கேட்டேன்.” என அவளும் உதடுகளைச் சுளித்து நெளித்தாள்.
அவன் அவளைத் திரும்பி பார்க்கவில்லை என்றாலும், அதை உணர முடிந்தது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், திரும்பி அவளை நோக்கினான், மீரா படுத்து இருந்தாலும் கண்களை மூடாமல் காட்சியளிக்க, “sr0103” எனக் கூறினான்.
சட்டென்று எழுந்து அமர்ந்தவள், “தெரியாதுனு சொன்னீங்க!” என ஒரு மாதிரி லுக் விட்டாள்.
“நீ கேட்டதும் எப்டி உடனே சொல்ல முடியும், அதும் பாஸ்வோர்டை”
“ஆமா! உங்க வீட்டு கஜானா பாஸ்வோர்டை சொல்லப் போறீங்க பாருங்க, ரொம்ப தான் சீன் போடுறீங்க. ஆஃப்ட்ரால் வைபை பாஸ்வோர்டு, அதை கூட நம்பி சொல்ல தோணல” எனக் கொஞ்சம் கடுப்பும், எரிச்சலும் ஆனாள்.
“அது என்ன ஆஃப்ட்ரால் வைபை பாஸ்வோர்டு, எல்லாமே முக்கியம் தான், நேத்து வந்த உனக்கு எல்லாத்தையும் உடனே சொல்லிட முடியுமா.? நம்பிக்கை வரனும்ல” எனப் புருவத்தை உயர்த்தி இரிடேட் பண்ணினான்.
“இப்ப நம்பிக்கை வந்துட்டா”
“ஃபுல்லா வரல, பட்! ஸ்டெடிஸ்குனு கேட்டதால ஏதோ கொஞ்சம் ஓகேனு தோணுச்சு சொன்னேன், பாஸ்வோர்ட் போட்டுக்கோ”
“அப்டி ஓன்னும் தேவையில்ல, நான் என் மாமா கிட்ட சொல்லி, எல்லாத்தையும் மெட்டிரியல்ஸா வாங்கிப் படிச்சுகிறேன், என் கிட்ட ஃபோன், நெட் எல்லாம் இருக்கு, எனக்கு செய்ய என் அப்பா வீட்டு ஆளுங்க இருக்காங்க” என்றாள் ரோஷமாக.
“ஓ! அப்படியா.? அப்ப இந்த காலேஜ் பீஸ், மத்த மத்தது எல்லாம் உங்க கொப்பாவே பாத்துப்பாரா.?”
மீரா அமைதியாகிட…
“சொல்லு முட்டகோஸ்!”
மீரா பட்டென்று அவன் எதிர்பக்கம் திரும்பி முதுகினைக் காட்டிப் படுத்துக் கொண்டள்.
நேரமாக அறையின் விளக்கினை அணைத்திட யோசித்தவன், மெல்ல திரும்பி மீராவை நோக்கினான்.
‘தூங்கிட்டாளோ! எப்டி இப்ப ஆஃப் பண்றது.?’ என மெல்ல எழுந்திட முயற்சித்தான்.
ஆனால் சப்போர்ட் இல்லாமல் தடுமாறியது, சுந்தர், இல்லை என்றால் பிரேமா சப்போர்ட் செய்வார்.
“ஏய் முட்டகோஸ்!” என அழைத்தான்.
மீரா தூங்கவில்லை, ஆனாலும் கண்டுக் கொள்ளாமல் படுத்து இருந்தாள். ஆனால் நொடிப்பொழுதுகள் தான். அவன் பக்கம் திரும்பாமல் வேகமாக எழுந்துச் சென்று அறை விளக்கினை அமர்த்திவிட்டு, அறையின் இரவு விளக்கை போட்டவாறு வந்துப் படுத்துக் கொண்டாள்.
‘ஓ! முழிச்சுட்டு தான் இருந்தாளா!’ என மீண்டும் சாய்ந்து நன்குப் படுத்தான்.
இருவருமே தூங்கவில்லை என்பது இருவருக்குமே தெரிந்த ஒன்றாகும்.
சௌந்தருக்கு அந்த நேரம் பார்த்து அவசரமாக பாத் ரூம் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
‘ச்சே!’ என நொந்தவன், நீண்ட நேரமாக, கட்டுப்படுத்த முடியாமல், எழுந்தமர்ந்தான்.
அருகில் படுத்திருந்தவளிடம் உதவிக் கேட்க மனம் ஒத்துழைக்காததால் தானாக எழ முயற்சித்தான்.
இரவைக் கடந்த வேளையில் அம்மா, தம்பியை அழைக்கவும் தோன்றவில்லை.
அடிப்பட்ட காலினைத் தரையில் மெல்ல ஊன்ற அது மிகுந்த வலியைக் கொடுத்தது. மனதைக் கட்டுப்படுத்தி மீண்டும் தரையில் அழுத்தி எழுந்திட வலி அதிகாமிட”ஆ!” எனக் கத்தினான்.
பட்டென்று எழுந்தமர்ந்த மீரா “என்னாச்சு.?” எனக் கேட்டாள்.
“ஒன்னுமில்ல!”
“ஒன்னுமில்லனா, என்னத்துக்கு இந்த நடுராத்திரியில் எழுந்திரிச்சு நின்னு ஒடைஞ்சு காலுல டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க.? அது உங்க இஷ்டம், நீங்க கத்துறது எனக்கு டிஸ்டர்ப் ஆகுது” என வெடுக்கென்று கூறினாள்.
‘”என்னது டான்ஸ் ஆடுறனா, என்னைய கடுப்பேத்தாம போடி!” என வலியில் மேலும் கத்தினான்.
“எனக்கு இது தேவையா!” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
சௌந்தர் வலியைத் தாங்கியவாறு எழுந்து கட்டிலைப் பிடித்துக் கொண்டே பாத் ரூம் நோக்கி மெல்ல நடந்தான்.
கட்டிலின் பிடி முடிய, அதற்கு பிறகு சப்போர்ட் இல்லாமல் நடக்க முடியவில்லை, அதனை மீறி நடந்தால் வலி ஏற்படும்…
அப்படியே கண்களை மூடி நின்றான், அவனின் கையைப் பிடித்த உணர்வு வர, விழித்துத் திரும்ப மீரா தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.
அவனை முறைத்தவாறு, பிடித்து அவள் நடக்க அவனும் சேர்ந்து நடந்தான்.
உள்ளுக்குள் சென்று விட்ட பின் மீரா வெளியில் வந்து நின்றாள்.
அவன் வெளியில் வரும் அரவரம் கேட்டு, மீண்டும் அவனைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
சற்று முன் அவசரத்தில் செல்ல, அவளின் நெருக்கத்தை உணரவில்லை.
தற்பொழுது அவளை ஓரக்கண்ணால் நோக்கிட, நைட்டி அணிந்துக் கொண்டு தலையில் வாடாத மல்லிகைப் பூ மணம் வந்திட அருகே புது மனைவியின் பொலிவுடன் நின்றாள்.
அந்த மணம் வீசிட மனம் ஏனோ சஞ்சலத்தில் ஊஞ்சாலாடியது.
தன்னை உணர்வுகளில் இருந்து மீட்டவன், “நைட் தூங்கும் போது கூட, இந்த பூ எல்லாம் வச்சுட்டு தான் தூங்குவீயா.?” எனக் கடுப்பாக கேட்டான்.
“ஏன்! உங்களுக்கு என்ன பிரச்சனை.? வைக்குற நான்ல அதபத்தி யோசிக்கனும், ரொம்ப கஷ்டமா இருந்தா உங்க அம்மா கிட்ட போய் சொல்லுங்க, இனிமே பூ வாங்கி குடுத்து என்னைய வச்சுக்க சொல்லி கம்பெல் பண்ணாதீங்கனு” என அவளும் கடுப்புடன் கூறினாள்.
“எனிவே! தேங்க்ஸ், ஹெல்ப் பண்ணதுக்கு” எனக் கட்டிலில் அமர்ந்தான்.
“நான் ஒன்னும் உங்களை மாதிரி இல்ல, நம்பிக்கை வந்தா தான் ஹெல்ப் பண்ணுவேனு சொல்ல, இது எல்லாம் அடிப்படை உதவி, செய்ய மனசு இருந்தா போதும்” என அவனிடம் இருந்து விலகினாள்.
“ரொம்ப பேசாத முட்டகோஸ், எனக்கு மனசு இல்லனு சொல்றீயா.?”
“அத வேற தனியா சொல்லி நான் கஷ்டப்படுத்த மாட்டேன்.” என இதழ்களைச் சுளித்தாள்.
“ஓகேங்க! நல்ல மனசுகாரவங்களே, ரொம்ப தேங்க்ஸ்.”
“ம்உகும்!” எனக் கட்டிலை சுற்றி வந்து படுத்துக் கொண்டாள்.
அவள் வேகமாக வந்த படுத்த வேகத்தில் அவள் முடிகளும், வைத்திருந்த பூவும் அவன் தோள் மீது விழுந்தது.
‘படுத்துறா!’ என எண்ணியவன், அதை விலக்கி விட்டான்.
ஆனால் விலக்கினாலும் அவளிடம் இருந்து வாசம் வீசியது, அவளுக்கே உரிய வாசமாக அவனால் உணர முடிந்தது.
*
நாள்கள் நகர்ந்திட, ஒரு மாதம் கழித்தே சௌந்தர் ஆரோக்கியமாக நடக்கத் தொடங்கிருந்தான்.
அதுவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வாக்குவாதங்களும், உரையாடல்களும், முகத்திருப்பங்களுடன் தான் சென்றது.
ஆனால் மீரா அவனின் தேவைகளைச் செய்ய தவறாமல் மனைவியாக உதவிப் புரிந்தாள், அதே நேரம் அவனின் வாதத்திற்கு எதிர்வாதம் கொடுக்காமல் விட மாட்டாள்.
ஏறக்குறைய சௌந்தருக்கும் அது பழகியது.
சௌந்தர் தனியாக பழைய மாதிரி நடந்திட அன்று ஆஃபிஸ் போக எண்ணியிருந்தான், அன்று தான் மீராவும் முதல் நாளாக கல்லூரிக்குச் செல்லும் தினமாக அமைந்தது.
விருமாவின் உத்தரவுப் படி சௌந்தர் தான் அவளை கல்லூரியில் விட்டுக் கூட்டிக் கொண்டு வரவேண்டும்.
காலையில் இருந்து மீரா கல்லூரிக்குப் போகும் சந்தோஷத்தில் புரியாமல் திரிந்தாள்.
காலையில் எழுந்ததுமே குளித்து முடித்து வெளியில் வந்தவள், தலைமுடிகளை உதறி விடுகின்றேன் என்ற பெயரில் சௌந்தர் முகத்தில் நீர்குமிழிகளை தெளித்திட, யாரோ தண்ணீர் தெளித்த உணர்வில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தமர்ந்தான்.
அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாமல்”க… க… கல்லூரிச் சாலை…” என முணுமுணுத்துக் கொண்டே தலையைத் துவட்டிக் கொண்டு இருந்தாள்.
“ஹேய்! லூசு, லூசு… ஏன் தூங்குறவனை டென்சன் பண்ற.?” எனக் கத்தினான்.
“ஹலோ! உங்களை நான் என்ன பண்ணனேன். நான் பாட்டுக்கும் குளிச்சுட்டு தலை காய வச்சுட்டு இருக்கேன்” என மீண்டும் உதறினாள்.
நீர்குமிழ்கள் மீண்டும் மேல் தெறிக்க, “மீரா!” என்றான் கோபமாக…
“என்ன.?” என்றாள் அப்பொழுதும் அவளின் செயல் புரியாமல்…
பற்களைக் கடித்தபடியே சௌந்தர்,”உன் தலைமுடி தண்ணீ என் மேல தெறிக்குது, கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா உனக்கு.?” எனக் கேட்டான்.
அப்பொழுது தான் அதை உணர்ந்தவள், “அச்சோ! சாரி, சாரிங்க, நான் கவனிக்கல” என்றாள்.
இது தான் மீராவின் குணம் என, இந்த ஒரு மாதக் காலத்தில் உணர்ந்திருந்தான் சௌந்தர்.
மீரா அவனின் செயலுக்கு ஏற்பவே பதில் அளிப்பாள், அவளிடம் தவறு என்றால் சிறிதும் யோசிக்காமல் மன்னிப்புக் கேட்டு விடுவாள், அதுவே அவளின் சுயமரியாதை, அப்பா வீடு என சௌந்தர் பேசினால், பொங்கி விடுவாள்.
அவள் மன்னிப்புக் கேட்டதும், தூக்கமும் களைந்திட எழுந்து பாத் ரூம் போய்விட்டு வந்தான்.
அதுவரை கண்ணாடி முன் நின்று தன் முடிகளை காய வைத்தவள், அவன் வரும் வேளையில் திரும்ப, அவனின் மார்பின் முன் மோதிட “ஷ்ஷ்ஷ்! அச்சோ சாரி! சாரி!” எனக் கூறியவாறு கண்களை மூடித்திறந்தாள்.
அவளை தன் நெருக்கத்தில் பார்த்தவன், “காலையிலே உனக்கு ஒன்னும் புரியல முட்டகோஸ்! என்ன காலேஜ் போற குஷியா.?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்!” எனத் தலையை மேலும், கீழுமாக வேகமாக அசைத்தாள்.
“என்னமோ போ! இன்னையில் இருந்து நான் தப்பிச்சேன், ப்பா! வீட்டுக்குள்ளயே இருந்து எனக்கு கடுப்பாகிட்டு, இனிமே நிம்மதியா வெளியில் போயிட்டு வரலாம்” எனக் கூறி தலையை கோதிக் கொண்டான்.
“ஆமா! ஆமா! நாம ரெண்டுப் பேருமே அதிகமா பாத்துக்க தேவையே இருக்காது, நைட் தூங்கும் போது ஒரு குட் நைட், காலையில் இப்டி ஒரு குட் மார்னிங்” என நெற்றியில் ஒரு பக்கம் கைவைத்து சல்யூட் போல்”குட் மார்னிங்!” என்றாள்.
“அது கூட தேவையில்லமா, நீ என்னைய இரிடேட் பண்ணாம இருந்தாலே போதும்” எனத் தலையைக் குலுக்கியவாறு நகரப் போனவனிடம்,
“தேங்க்ஸ்!” என்றாள்.
அப்படியே நின்றவன்”இது எதுக்கு.?” எனக் கேட்டான்.
“எனக்கு படிப்பு ரொம்ப புடிச்ச விசயம், இதுவரை என்னோட படிப்புல நான் நிறைய ஸ்கோர் வச்சு, என்னோடத நானே பீட் பண்ணிட்டு போயிட்டு இருந்தப்ப தான், இடி மாதிரி அப்பா படிப்பை நிறுத்திட்டாரு. அதுக்கு அப்புறம் வாய்ப்பே இல்லைனு மனசு சொன்னாலும், மூளை நீ எப்படியாச்சும் படினு சொல்லிட்டே இருக்கும், அது இன்னைக்கு மறுபடியும் தொடர போறேன், உங்களுக்காக சுயநலமா யோசிச்சாலும் இதுக்கு நீங்களும் ஒரு காரணம் தானே, அதுக்கு தான் தேங்க்ஸ்!”
“ம்ம்ம்! எப்டி சொல்றது.? இப்ப ஸ்கூல், காலேஜ் லீவ் விட்டா ஜாலியா தானே ஃபீல் பண்ணுவாங்க, ஆனா எனக்கு சேடா இருக்கும், அப்புறம் எக்சாம் எழுத அவ்ளோ ஆர்வமா இருப்பேன், கிளாஸ்ல ஸ்டாப்ஸ் நடத்தும் போது அவங்களோட டீச்சிங் மெத்ட மிஸ் பண்ணாம ரசிச்சுப் பாப்பேன், டவுட்ஸ் நிறைய வரும் அத கேட்டு க்ளியர் பண்ணிட்டு தான் விடுவேன், அதனாலயே என்னைய காலேஜ்ல எல்லா ஸ்டாப்புக்கும் புடிக்கும். ஒரு சேப்டர் எடுத்தா படிக்காம வைக்கவே தோணாது, ஓவர் ஆலா ஐ லைக் ஸ்டெடியிங்…”
“இந்தளவு பைத்தியமா நீ.?” என மெல்ல கேட்டுச் சிரித்தான்.
“அப்கோர்ஸ்! இத நிறைய பேர் சொல்லி இருக்காங்க, அதனால நீங்க சொல்லும் போது கோபமே வரல” என அவளும் சிரித்தாள்.
“சரி! இவ்ளோ புடிச்சுப் படிக்குறீயே, படிச்சு முடிச்சு என்ன செய்யப் போற.? ஐ மீன் கோல் என்ன.?”
“உங்களுக்கு மட்டும் ஒரு சீக்ரெட் சொல்லவா!”
“என்ன.?” எனக் கேட்டான் ஒரு மாதியாக நோக்கி…
“அது… நான் நல்ல ஸ்கோர் வச்சு இருக்கதால எம் என் சி கம்பெனிஸ் ரெக்குயர்மென்ட் வரும் போது செகண்ட் இயர்ல லாஸ்ட் செம் முன்னாடி ஃபைனல் இயர், தேடு இயர் பசங்களோடு என்னையும் அட்டென்ட் பண்ண சொன்னாங்க, நானும் ஒரு எக்ஸ்பீரியன்ஸாக அட்டென்ட் பண்ணேன். பட்! சர்ப்ரைஸ்லி ஐ காட் செலக்ட்டெடு ஃபைனல் ரவுண்ட், அன்ட் காட் ஆஃபர் லெட்டர் ஆல்சோ.”
“வாட்! செகண்ட் இயர்லவா.?”
“ம்ம்ம்! எங்க பேட்ஜ்லயே நான் மட்டும் தான் அட்டென்ட். ஜஸ்ட் அட்டென்ட் பண்ணி பாக்க சொன்னாங்க”
“அது எப்டி பாசிபிள்.? உன்னோட சப்ஜெட்ஸ்யே நீ பாதி தானே கிராஸ் பண்ணி இருப்ப.?”
“ம்ம்ம்! என்னோட ஸ்கோர் அன்ட் ஸ்டாப்ஸ் ரெக்கமென்டசேன். நான் டவுட்ஸ் நிறைய கேப்பேன், அத எக்ஸ்ப்ளைன் பண்ணியே அவங்க நிறைய விசயங்கள் சொல்வாங்க, சோ!” என நிறுத்தினாள்.
“சரி! இது நல்ல விசயம் தானே, ஏன் யார்கிட்டயும் சொல்லல.?”
“எங்க வீட்டுல படிப்பு ஜஸ்ட் மேரெஜ் இன்விடேசன் பர்போஸ்க்குனு அப்பா முன்னாடியே சொல்லிட்டாரு, படிப்புக்குப் பெருசா அப்ரிஷேசன் கெடைக்காது, அதான் வேலையும் கெடைச்சி இருக்குனு சொன்னா அப்பா எப்டி எடுத்துப்பாருனு தெரியல, அதான் யார்கிட்டையும் சொல்லாம மறைச்சுட்டேன். காலேஜ்லயும் நான் வெளியில தெரிய வேண்டாம்னு மேனெஜ்மென்ட் கிட்ட கேட்டுக்கிட்டேன், அதனால அவங்களும் அவுட் பண்ணல, நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணது எல்லாம் தெரியும் ப்ரண்ட்ஸ்க்கு ஆனா செலக்ட் ஆனது தெரியாது.”
“ம்ம்ம்! சம்திங் டிப்ரெண்ட் தான் நீ, ஏன் என் கிட்ட மட்டும் சொன்ன.?”
“நீங்க தானே என் கிட்ட கோல் என்னனு கேட்டீங்க, அதான் சொல்ல தோணுச்சு”
“இது உனக்கு கிடைச்ச அப்ரிஷேசன் மாதிரி தான், கோல்னா இது பண்ணனும், இப்டி ஆகனும்னு நினைக்கிறது, அப்டி என்ன ஆசை வச்சு இருக்க.?”
“சொன்னா சிரிக்க கூடாது”
“சொல்லு! சிரிப்பு வராம இருக்குதானு பாக்குறேன்”
“அப்பனா போங்க, சொல்ல மாட்டேன்.” எனத் திரும்பியவள் கையைப் பிடித்தவன், “ஏய் முட்டகோஸ்! சொல்லிட்டு போ!” என்றான்.
“ம்ம்ம்! நான் என்னோட லைன்ல வேலைக்குப் போகனும், அங்கப் போய் நிறைய கத்துக்கிட்டு என்னைய டெவெல்ப் பண்ணனும், இதுக்கு இடையில் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி, ஒன், டு, த்ரீனு மூணுக் குழந்தைங்க பெத்துக்கணும்” என விரல் விட்டு எண்ணினாள்.
“குழந்தைங்களை கொஞ்ச ஏஜ் வரை செல்ஃபா வளர்த்துட்டே என் வேலையில் இன்னோவேட்டிய கத்துக்கிட்டு, அப்புறம் சொந்தமா நானே சிஇஓ ஆகி ஒரு கம்பேனியை ரன் பண்ணனும், ஒரு பக்கா பிஸ்னெஸ்வுமனா வளர்ந்துட்டே வித் மதர்குட் என்ஜாய் பண்ணனும்.” எனக் காட்சிகளை சைகையால் விரிவாக்கினாள்.
சௌந்தர் அவளின் காட்சிக் கற்பனையில் எதையோ தேடிவிட்டு, அது கண்ணில் படாததால்”ஹலோ முட்டகோஸ்! அது சரி, எங்க உன் இமேஜினேசனில் உன் புருசன், உன் குழந்தைகளோட அப்பாவைக் காணும்” எனக் கேட்டான்.
“ஆ! இது என்னோட இமேஜினேசன் ஆப் கோல், அந்த இடத்தில் யாரையும் முகம் தெரியுற மாதிரி அப்பாயிண்மென்ட் பண்ணல, அதான் உங்களுக்கு தெரியல போல” என்றாள் வாயில் கை வைத்துச் சிரித்தவாறு.
“ஓ!”
“ஏன்! அந்த போஸ்டிங் இன்னும் காலியா தான் இருக்கா.”
“மே பி!” எனத் தோள்களை குலுக்கி விட்டு, நகரப் போனவளை மீண்டும் பிடித்து தன் முன்னே இழுக்க, அவன் மார்பில் வந்து விழுந்து நிமிர்ந்தாள்.
“எதுக்கு இழுக்குறீங்க.?” என இதழ்களைச் சுளித்தவாறு முறைத்தாள்.
“ம்ம்ம்!” என அவளின் இடையில் கைப்போட்டு மேலும் தன்னோடு இறுக்கிட, மீரா விழிகள் ஒரு மாதிரி பயத்தில் அலைமோதியது.
“அல்ரெடி அந்த இடம் ஃபில் ஆச்சு, இந்த மே பி எல்லாம் என் கிட்ட வேணாம், நான் தான் சொல்லிட்டேன்ல, நமக்குள்ள என்ன வேணா நடக்கட்டும், ஆனா நோ செப்ரேட், நோ டைவர்ஸ். இந்த லைஃப்ல வீர் ஆர் ஒன்லி ஹஸ்பண்ட் அன்ட் வைய்ப், புரியுதா.?” என இடையை அழுத்தி அழுத்தமாக கூறினான்.
அவனின் அழுத்தத்தில் தலையை மட்டுமே ‘சரி!’ என ஆட்டினாள்.
அவளின் மிரட்சியான விழிகளை நோக்கியவன், ஏனோ தோன்ற அவளின் நெற்றியில் முட்டியவாறு லேசாக சிரித்தப்படி”நீ எல்லாம் கம்பேனி சிஇஓ ஆனா…” என நக்கலாக மேலும் சிரித்தான்.
முகத்தைச் சுருக்கி”ஏன் நான் ஆக மாட்டனா.?” எனத் தலையை இடமிருந்து வலம் ஆட்டிக் கேட்டாள்.
“ஏன் மாட்ட, உனக்கு அந்த குவாலிபிகேசன் இருக்கு, ஆனா இந்த முகம், இந்த முழி… நீ சரியான முட்டகோஸ் வாய்டி, எப்டி சமாளிப்ப.” எனக் கேட்டுச் சிரித்தான்.
“ம்ம்ம்! அது எல்லாம் சமாளிப்பேன், உங்க மாதிரி ஆள் கூட இருக்கப் போறேன், பழகிடாதா” என நக்கலாக சிரித்தாள்.
“ஓ! பாக்க தானே போறேன்…” என அவனும் நக்கலாக சிரித்து மீராவை விலக்கினான், ஆனால் கையை விடவில்லை.
“பாருங்க!” என்றாள் அவளும்.
கையை விட போன சௌந்தர்”ஆமா! அது உண்மையா.?” என்றான்.
“எது.?”
“அதான் மூணுப் புள்ளைங்க…” எனக் கேலியாக கேட்டான்.
“ம்ம்ம்! அப்கோர்ஸ், வேணுல”
“அது என்ன கணக்கு.?”
“இல்ல! நாலுக் கூட போகலாம், பட்! இன்கேஸ் ஆப்ரேசனா மூணு தான் அலோவ்டு. சோ! ஒன்லி த்ரீ. புள்ளங்க இருந்தா தானே ஜாலியா இருக்கும்” எனக் கூறி மகிழ்ந்தாள்.
அவளை வித்தியாசமாக பார்த்தவனிற்கு இவ்வளவு நேரம் எப்படி இவளுடன் உரிமையாக உரையாடினோம் எனச் சந்தேகம் வந்தது.
ஒரு மாதிரி குழம்பிய நிலையில் இருந்தான். அவளுடைய குணங்கள், தோற்றங்கள் அவனை ஏதோ செய்தது.
“நான் போய் கீழ அட்டென்ஸ் போடுறேன், சீக்கிரமா காலேஜ் போகனும்ல…” என மீரா வேகமாக வெளியில் ஓடினாள்.
சௌந்தர் அவள் சென்றும் அவளின் அவளுக்கே உரிய வாசத்தை அறையினுள் உணர்ந்தான். கிட்ட தட்ட ஒரு மாதக் காலமும் இந்த அறைக்குள் பெரும்பான்மை நேரம் இருவரின் மூச்சுக் காற்றே கலந்திருந்தது, அதன் தாக்கமோ என்ற முடிவிற்கு வந்தவன், தலையைக் குலுக்கிவிட்டு அடுத்த வேலையைத் தொடர நகர்ந்தான்.