“அண்ணே! உங்கக் கிட்ட பேசனும், வீட்டுல பேச சந்தர்ப்பம் அமையல…”
“என்ன.?” என நிமிர்ந்து அவனை நோக்கினான்.
“நேத்து உங்கள அர்ச்சனா கூட பாத்தேன், நான் மட்டுமில்ல அண்ணியும் தான்.”
“தெரியும்!”
“ஓ! அண்ணி சொன்னாங்களா.?”
“ம்ம்ம்! அண்ணினு கூப்புட்ட நீ இப்ப அர்ச்சனானு சொல்ற…” என மீண்டும் லேப் டாப்யே நோக்கினான்.
“அத தான் உங்களுக்கு ஞாபகப்படுத்துறேன், அவங்க எனக்கு அண்ணி இல்ல, அந்த இடத்துக்கு வேற ஒருத்தர் வந்துட்டாங்கனு நான் புரிஞ்சுகிட்டேன், நீங்களும் புரிஞ்சுட்டு ஒதுங்கி இருங்க” என முறைத்தப்படி பார்த்தான்.
“எக்ஸ் க்யூஸ் மீ! மே ஐ கம் இன்” என்ற குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர்.
“வாடா!” என்றான் சௌந்தர்.
“என்ன! அண்ணனும் தம்பியும் எதும் பெர்சனல் பேசிட்டு இருக்கும் போது நடுவுல டிஸ்டர்ப் பண்ணிட்டனா.” எனக் கேட்டவாறு சுந்தர் அருகில் அமர்ந்தான் சம்பத்.
“சுந்தர்!” என சௌந்தர் அதட்டிட, சுந்தர் “சம்பத் அண்ணா நீங்களே சொல்லுங்க…” என நேற்று நடந்ததை அவனிடம் கூறினான் சுந்தர்.
“டேய்! என்னடா இது எல்லாம்.? ஏதோ ஆக்ஸிடென்ட் அன்னைக்கு பாத்த, அதோட விட வேண்டியது தானே, என்னத்துக்கு தனியா மீட்டிங், வேலைக்கு ரெக்கமென்டேசன் எல்லாம்” என நண்பனைத் திட்டினான்.
“ரெண்டுப் பேரும் மாத்தி மாத்தி பேசுறத நிறுத்தினா தான் நான் சொல்றது புரியும்”
“நீங்க என்ன வேணா சொல்லுங்க, அண்ணி பாவம் அவங்க அமைதியா இருக்காங்கனு நீங்க என்ன பண்ணாலும் சரினு சொல்லாதீங்க”
‘யாரு அவ சின்னப்பொண்ணு, அமைதியானவ, எல்லாம் என் நேரம்… இவனுங்க கிட்ட பேசுறது வேஸ்ட்’ என எண்ணி, மீரா எப்படிபட்டவள் என்பதை பற்றி கூறாமல்,
“எனக்கு நீங்க ரெண்டுப் பேரும் அட்வைஸ் பண்ண வேணாம், மீராவுக்கு நான் சொல்லி புரிய வச்சுட்டேன். அவ புரிஞ்சுகிட்டா நீங்கப் போய் உங்க வேலையைப் பாருங்க” எனக் கோபமாக கூறினான்.
“அண்ணே!”
“சௌந்தர்!” என இருவரும் மாறி மாறி அழைக்க,
“அதான் சொல்றேன்ல, என்னோட லிமிட் எனக்குத் தெரியும், யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்ல…”
சுந்தர் எழுந்துக் கோபமாக வெளியேறினான்.
சம்பத்”டேய்! என்ன இருந்தாலும் மீரா எனக்கு தங்கச்சி, ஒழுங்கா இருந்துக்கோ, அப்புறம் ப்ரண்ட்னு பாக்க மாட்டேன்” என எச்சரித்துவிட்டு சென்றான்.
சௌந்தர் மனதில்’அடியேய் முட்டகோஸ்! உனக்கு சப்போர்ட் பண்ண இவனுங்க க்யூவில் நிக்கிறாங்க, ஏனா நீ ரொம்ப அமைதியாம், சின்னப்பொண்ணாம்… ஆனா எனக்கு தானே தெரியும் நீ எவ்ளோ பெரிய அப்பாடக்கர்னு… நீ ம்ம்ம்! னு சொன்னா போதும் போல அடியாளுங்க ரெடியா இருக்கானுங்க’ எனச் சிரித்துக் கொண்டான்.
மீரா நண்பர்களுடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தாள், அதில் ஆண், பெண் நண்பர்கள் இருவருமே இருந்தனர்.
சௌந்தர் காரையும், அவனையும் நோக்கியவள்”ஓகே ப்ரண்ட்ஸ்! நாளைக்கு பாக்கலாம்” எனக் கூறிவிட்டு விலகினாள்.
“இவ குடுத்து வச்சவடி, சீக்கிரமே கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்க… ஜாலியா புருசனே வந்து ட்ராப் அன்ட் பிக் அப் பண்றார்… செமயா இருக்குல, ரொமான்ஸ் லைஃப்” என்றாள் தோழி ஒருத்தி.
“ஹேய்! அவளுக்கு என்ன கஷ்டமோ அது தெரியாம, ஜாலி அது இதுனு… அவளே படிப்பை நிறுத்திட்டு மறுபடியும் எப்டியோ படிக்க வந்து இருக்கா. நீ வா போகலாம்” என்றாள் மற்றொருத்தி.
“எப்டியோ மீரா ஹஸ்பன்ட் ஹேன்சமா இருக்காருல…” என்றவளை மற்றவர்கள் முறைத்தனர்.
“உனக்கு வேலையே இல்லையா, யார பாத்தாலும் ஹேண்ட்சம்னு… சரியான காஜிடி நீ” எனக் கிண்டல் செய்தனர்.
“போங்கடி! அழகா இருந்தா அத சொல்லனும்… அவரு அழகா இருக்கார்னு சொன்னா அதுக்குப் பேரு காஜியா… சரி! அப்டியே இருந்துட்டுப் போறேன், நாளைக்குப் போய் அவர் கிட்ட ஒரு ஹாய் சொல்லனும்” எனச் சிரித்தவளை, கேவலமாக ஓட்டினர் ஆண்கள், பெண்கள் என அனைவரும்.
மீரா சென்று காரின் முன்பக்கம் ஏறி அமர்ந்துக் கொண்டே”சாரி! ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா.?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! இல்ல”
“அப்டினா!”
“வந்து ரொம்ப நேரம் ஆச்சு தான், ஆனா வெயிட் பண்ணி போர் அடிக்கல… பிகாஸ்! வெரைட்டியா போற உங்க காலேஜ் கேர்ள்ஸ் பாத்துட்டு இருந்தேன்.” எனச் சிரித்தான்.
“ஓ! அப்ப நாளையில் இருந்து, நான் காலேஜ் பஸ்லயே வந்துடுவா…”
“ஏன், உனக்கு பொறாமையா.?”
“இல்ல! டெய்லியும் இப்டி வெரைட்டியா பாக்குறேனு நீங்கப் பாட்டுக்கும் பாத்துட்டு இருந்தா போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணிட போறாங்க, அப்புறம் நம்ம குடும்ப மானம் என்ன ஆகுறது, அது மட்டுமா மாமா என் படிப்பை நிறுத்திடுவார்… எதுக்கு இது எல்லாம், அதான் நான் காலேஜ் பஸ்ல வரவானு கேட்டேன்…” என மூச்சு விடாமல் பேசினாள்.
அவள் பக்கம் திரும்பியவன், “இதுக்கு நீ நேராவே சொல்லி இருக்கலாம் முட்டகோஸ், வெரைட்டியா பாக்காதீங்க என்னைய மட்டும் பாருங்கனு…” என நக்கலாக கூறினான்.
“ஹலோ! நான் ஒன்னும் அப்டி நெனக்கல…”
“நம்பிட்டேன்! உனக்காக ரெண்டு ஜீவனுங்க என் கிட்ட ஃபைட் பண்ணாங்க…”
“யாரு.?”
“அதான் உன் கொழுந்தனும், அண்ணனும்”
“ஓ! சம்பத் அண்ணா, சுந்தருமா… எதுக்கு ஃபைட் பண்ணாங்க.? நீங்க என்ன பண்ணீங்க.?”
“ம்ம்ம்!” என நடந்ததைக் கூறினான்.
“ஹஹஹ!” எனச் சிரித்தாள்.
கார் காலேஜ் வாசலில் இருந்து யூ டர்ன் போட காத்திருந்தது. அங்கு மாணவ, மாணவியர் கூட்டம் அதிகமாக இருந்ததால் மெதுவாக தான் காரை நகர்த்தினான்.
அவள் சிரிப்பதை ரசித்தப்படி இருந்தான்.
“ஆ! சொல்ல மறந்துட்டேன் பாருங்க, உங்க எக்… சாரி! எங்க டிபார்ட்மென்டுக்கு ரெண்டு மேடம் புதுசா வந்து இருக்காங்க. அதுல ஒருத்தவங்க அர்ச்சனா மேடம்”
“ஓ! ஜாயிண்ட் பண்ணியாச்சா.”
“ஏன் உங்களுக்குத் தெரியாதா?”
“நேத்து தான் வேலைக் கிடைச்சுட்டு சொன்னா, ஆனா ஜாயினிங் கேக்கல, இன்னைக்குனு தெரியாது”
“இப்ப தெரிஞ்சுட்டுல”
“அதுக்கு என்ன.? சரி! உன் கிளாஸ் அர்ச்சுக்கு குடுத்து இருக்காங்களா.?”
“இல்ல! எனக்கு வேற ஒரு மேடம் புதுசா வந்தாங்கள, அவங்க தான் வராங்க”
“நல்ல வேளை அர்ச்சு தப்பிச்சா…” என நக்கலாக கூறிச் சிரித்தான்.
“ரொம்ப தான்” என சாலையை நோக்கியவள், “ஏங்க! இவங்க தான் எனக்கு புதுசா வந்தவங்க” என கையைக் காட்டினாள்.
“மீரா! கையை நீட்டி பேசாத, இது என்ன பழக்கம்.?” எனத் திட்டிக் கொண்டே அவள் காட்டிய திசையை நோக்கியவன், அதிர்ச்சியானாலும், சாலை தெளிந்திட காரை வேகமாக ஓட்டினான்.
“சூப்பர் மேடம் தெரியுமா, அவங்க பேரு கூட சௌந்தர்யா விருமாண்டி… பாருங்களே மாமா பேரு பின்னாடி வச்சு இருக்காங்க, அவங்க ஹஸ்பண்ட் நேமா இருக்குமோ” என மீரா தானாக பேசிக் கொண்டே வர,
“ஏய் லூசு! பின்னாடி புருசன் பேரு தான் இருக்குமா? ஏன் நீ மீரா சௌந்தராஜன் தான் வச்சு இருக்கீயா.?”
“இல்லங்க! அவங்க பெரியவங்கள அதான் சொன்னேன்…”
“தெரியாம எதையும் பேசாத”
“நீங்க ஏன் டென்சன் ஆகுறீங்க.? அப்படியே இருந்தாலும் அது அவங்க அப்பா பேருனு உங்களுக்கு எப்டி தெரியும்.?” எனக் கேட்டாள், அதுவரை கூட புரியாமல், யோசிக்க தோன்றாமல்…
“ம்ம்ம்! எனக்கும் அவளுக்கும் ஒரே அப்பானு சொன்னா நம்புவீயா.” என்றான் பட்டென்று…
“உங்க வைய்ப் தான் ஃபேமஸ் ஸ்டுடென்ட் ஆச்சே, மீரா யாருனு கேட்டாலே ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் தெரியுது… நல்ல வேளை அவங்கள படிக்க அலோ பண்ணிட்டீங்க சௌந்தர்… இல்லனா ஒரு பெஸ்ட் ஸ்டுடென்டை காலேஜ் மிஸ் பண்ணி இருக்கும்.” எனச் சிரித்தாள் அர்ச்சனா.
“ம்ம்ம்! ஐ நோ ஷி இஸ் க்ளெவெர் கேர்ள்” எனப் பேசியபடி மனைவியை நோக்கினான்.
மீரா புருவத்தைச் சுளித்து கடுப்பாக பார்த்தாள்.
“சௌந்தர்! நான் ஜாப்புக்கு போக நாட் அலோவ்டு சொன்ன உங்க ஃபேமிலி இப்ப எப்டி மீராவ படிக்க அனுப்பினாங்க…”
“நான் அப்பா கிட்ட பேசினேன்!”
“ஓ!” என்ற அர்ச்சனாக்கு மனதிற்குள் சுருக்கென்றது.
அன்று வேலைக்கு செல்வது அப்பாவோட முடிவு என்று சௌந்தர் ஒதுங்கிவிட்டான், இன்று மீராவிற்காக பேசியதாக கூறவும், அவளால் அதை ஏற்க முடியவில்லை என்றாலும் மூச்சினை இழுத்து விட்டப்படி,
“ஓகே! நான் வைக்கிறேன் சௌந்தர்” என்றாள்.
“ஓகே! பை” என ஃபோனை கட் செய்தான்.
மீரா”எனக்கு கூட எக்ஸ் இருக்காங்க, நான் காலேஜ் விட்டு வரும் போது கூடவே வந்த குரூப்ல ஒருத்தன் தான்… ரொம்ப நாள் கழிச்சுப் பேசிட்டு வந்தோம்” என்றாள்.
“ஓ! யாரு அந்த ப்ளூ சர்டா…”
“ஹேய்! எப்டி கண்டுப்புடிச்சீங்க.?”
“அவனை தானே பாத்துட்டு இருந்தேன், எல்லாரும் பேசிட்டே வரீங்க ஆனா அவன் பார்வை உன்னைய விட்டு நகரவே இல்லையே, நீ வந்து கார்ல ஏறுற வரையிலும்…”
“ஆமா! அக்கா லவ் மேட்டர் தெரியுறதுக்கு முன்னாடி தான் ப்ரோபஸ் பண்ணான், ஆனா நான் எதுவுமே சொல்லல, புடிக்கலனு சொல்ல காரணம் இல்ல ஆனா புடிக்குதுனு சொல்ல வரல யோசனையா இருந்துச்சு, பாத்தா அக்கா லவ் மேட்டர் தெரிஞ்சு அப்பா தாண்டவம் ஆடினதுல நான் கப்சிப் ஆகிட்டேன். அப்புறம் அவன் கிட்ட முக்கியம்னா பேசுவேன், பட்! நாட் மோர் டாக்கிங்… விருப்பம் இல்லனு நேராவே சொல்லிட்டேன்… எனக்கு மேரெஜ்னு சொன்னதும் ரொம்ப ஃபீல் பண்ணதா மத்த ப்ரண்ட்ஸ் சொன்னாங்க, நான் அவனும் என் ப்ரண்ட் தானு சொல்லி ஆறுதல் சொல்ல சொல்லிட்டேன்.” எனக் கூறி முடித்தாள்.
“நீங்க வேலை வாங்கி குடுத்தீங்கனு தெரிஞ்சுடுமா.?” என முறைத்தாள்.
“அதான் சுந்தர் கிட்ட அர்ச்சனாக்கு நான் வேலைக்கு ரெக்மென்ட் பண்ணேனு சொல்லிட்டீயே, நீ அம்மா கிட்ட சொல்லாதடி… சும்மா கேள்வி கேக்காம”
“ம்ம்ம்! சரி கையை விடுங்க, அர்ச்சு, புர்ஜு பத்தி நான் ஏன் பேச போறேன்…”
“லூசு! அதான் அர்ச்சனானு மாத்திட்டேன்ல… நீயும் மாத்திக்கோ” என அவள் கையை விட்டவன், “ரொம்ப பொறாமை தெரியுது முட்டகோஸ், பாத்து… ஐ ஆம் யுவர் ப்ராப்ர்டி ஒன்லி…” என்க…
மீரா இறங்கினாள், சௌந்தர்”எனக்கு வேலை இருக்கு, நைட் தான் வருவேன், அம்மாட்ட சொல்லிடு” எனக் காரைத் திருப்பிக் கொண்டு கிளம்பினான்.
மீரா தலையில் லேசாக தட்டிக் கொண்டு, ‘எனக்கு ஏன் பொறாமை வருது!’ என யோசித்தப்படி சென்றாள்.
கார் மிரர் வழியாக அவளின் செய்கைகளை கண்டு ரசித்தான் சௌந்தர்.