“அப்படி எல்லாம் இல்ல, எனக்கும் காமன் சென்ஸ் இருக்கு”
“அப்பனா! இன்னேரம் இவளை தூக்கி கொஞ்ச வேணாமா?”
“மீரா! உங்க எல்லாரையும் மாதிரி சட்டுனு என்னால மாற முடியாது, எனக்கும் டைம் வேணும், போன நிமிஷம் வரை வெறுத்த ஒருத்திய திடீருனு பாசமழையா பொழிஞ்து உருக சொன்னா எப்டி.?”
“ஓ! அப்படியா.?” என்ற மீரா, அட்சுவிடம் “குட்டிமா! அதோ ஒரு பாப்பா விளையாடுறாங்கள, அவங்க கூட போய் பால் விளையாடுங்க” என அட்சுவை பக்கத்திலே விளையாட அனுப்பினாள்.
“என்ன சொன்னீங்க, வெறுத்த ஒருத்தியை சட்டுனு பாசமழையா உருக முடியலைனா… அப்ப அர்ச்சனா மேடமையும் நீங்க வெறுத்தீங்கள எப்டி சட்னு பாச ப்ரண்டா மாறி பேச முடிஞ்சது… அதுவே உங்க அக்கா, அக்கா மக கிட்ட வரல.?” என நறுக்கென்றுக் கேட்டாள்.
“மீரா!” என அதட்டினான்.
“என்ன மீரானு சவுண்ட் குடுக்குறீங்க.? எனக்கு அங்கயே கோபம் வந்துச்சு தான், ஆனா உங்கள அந்த இடத்துல எதுவும் சொல்ல வேணானு அமைதியாகிட்டேன். ரெண்டுப் பேருக்குமே தகுதி இல்லைனு சொல்லிட்டு, அது என்ன ஒருத்தரை மட்டும் உரிமையா மன்னிச்சு ஏத்துக்கிட்டீங்க.
இன்னொருத்தரை மன்னிக்க முடியாதுனு ஒதுக்குறீங்க.? இதுக்குப் பேரு என்ன.? இல்ல! அர்ச்சனா மேல இருக்க பாசம் இன்னும் போகலையா.?” எனக் கோபம் வர கேட்டாள்.
“மீரா! ரொம்ப பேசுற, அர்ச்சனா பாவம் அவளயும், என்னையும் தப்பா க்ரீயேட் பண்ணாத, நீ எல்லாமே தெரிஞ்சு எங்க ப்ரண்ட்ஷிப் புரிஞ்சுகிட்டேனு நான் நம்பினேன், ஆனா நீ.?”
“என்னங்க பேசுறீங்க.? நீங்க உங்களோட அக்காவ ஏத்துகுறது உங்க விருப்பம், ஆனா அர்ச்சனாவ தூக்கி வச்சுப் பேசினா நான் எப்டி சாதரணமா எடுத்துக்க முடியும்.? அவங்களும் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம என்னதுக்கு நம்ம குடும்பத்துக்குள்ள மூக்கு நுழைக்குறாங்க.?
சரி! மாமாக்கு உடம்பு முடியல பாக்க வந்தாங்க, பாத்துட்டுப் போக வேண்டியது தானே, உங்க அக்கா வந்தா என்ன.? பேசினா அவங்களுக்கு என்ன.? என்ன வேணா நடக்கட்டும் உங்கக் கூட பொறந்தது சௌந்தர்யானு ஒருத்தவங்க இல்லைனு ஆகிடுமா.? இல்ல உங்க அப்பா, அம்மாக்கு தான் பொண்ணு இல்லைனு மாத்திட முடியுமா.?
இவங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க தான், அதுக்காக.?” என அழுத்தமாக கேட்டாள்.
“மீரா! இப்ப வேணா அர்ச்சனாவுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கலாம், ஆனா அவளும் இவ போனதால பாதிக்கப்பட்டவ தானே…”
“ஆமாங்க! அதையே சொல்றீங்களே, அவங்களும் சுயநலமா அப்பா, அம்மா தான் முக்கியம்னு போனாங்க”
“ஏய் லூசாடி நீ! அவ அப்டி முடிவு எடுக்க என்னடி காரணம்.?”
மீரா அமைதியானாள்.
“சரி! உங்க அக்கா தான் காரணம், அர்ச்சனா பாவம் தான்… அவங்க லைஃப்ம் இப்ப அலோனா ஆச்சு… பட்! ஒரு விசயத்தை நீங்க யோசிக்கலையா சௌந்தர்”
“என்ன.?”
“அர்ச்சனா மேடம் சொன்னாங்க சௌந்தர்யா மேடமை பாக்கும் போது என்னைய அறியாமல் கோபம் வந்துப் பேசிடுறேனு, அதே மாதிரி அர்ச்சனா மேடமை பாக்கும் போது எனக்கும் தோணாதா.? என்ன ஆனாலும் நீங்க ரெண்டுப் பேரும் பழகினவங்க, அதுவும் அக்கா, அர்ச்சனானு வரும் போது அர்ச்சனா தான் முக்கியம் மாதிரி நீங்கப் பேசும் போது எனக்கு அர்ச்சனா மேல எப்டிபட்ட அபிப்பிராயம் வரும்…
நான் ஒன்னும் அவ்ளோ பரந்த மனப்பான்மை கொண்டவ இல்லங்க, நீங்கக் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னப்ப எனக்கு பெருசா தெரியல, ஆனா இப்ப உங்கள மனசுல நெனச்சதுக்கு அப்புறமும் ப்ரண்டா கூட விட்டுக் கொடுக்க மனசு வரல… நல்லாவே புரியுது அவங்க நல்லவங்கனு ஆனாலும் அவங்க மேல நீங்கக் காட்டுற அக்கறை அது…” என நிறுத்தி ஆதங்கத்துடன் கூறினாள்.
சௌந்தர் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு, “சரி மீரா! உன் மனசுல இருந்தத சொல்லிட்ட, என் மனசுல இருப்பதையும் சொல்லிடுறேன். எனக்கு அர்ச்சனா மேல எந்த வித ஈர்ப்பும் இல்ல, அத உன்னால புரிஞ்சுக்க முடியல, ஏத்துக்க முடியலனா அது உன் மனசு சம்பந்தப்பட்டது.
நம்ம ரெண்டுப் பேருக்கும் நடுவுல இன்னும் புரிதல் பத்தலனு தோணுது. அர்ச்சனா விசயத்துல உன்னால என்னைய முழுசா நம்ப முடியல, அது தப்பு இல்ல, பிகாஸ் என் பாஸ்ட் அப்படி.
பட்! உன் கிட்ட ஒரு க்வெஸ்டின் அர்ச்சனா சிங்கிள் மதரா இருக்குறதால தானே உன்னால ஈஸியா ப்ளேம் பண்ண முடியுது.? அதுவே அவ ஹஸ்பண்ட் குழந்தைனு இருந்திருந்தா யூ ஷட் அப்ல… அதே சிங்கிள் மதர் கான்செப்ட் தான் அவ மேல எனக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்திட்டு, அவ யாரோ ஒருத்தினா நமக்கு என்னனு போய் இருப்பேன்.
அவ நான் பேசி, பழகியவ வாழ்க்கையில முக்கியமான உறவான துணை இல்லாம இருக்கா, ஏதோ என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன். அப்பாக்கு முடியலனு பாக்க வந்தா, அங்க சில விசயங்கள் நடந்துட்டு. நல்லா யோசி மீரா மொத்த கதையிலும் எல்லாருமே பாதிக்கப்பட்டு இருந்தாலும் இப்ப ஒரு ஸ்டாங்கான பொசிஷனில் இல்லாதவ அர்ச்சனா மட்டும் தான், அவ மேல எனக்கு இப்ப இருக்குறது அனுதாபம் மட்டுமே, அது காதல் இல்ல.
என் அக்கா சுயநலமா செஞ்ச ஒரு விசயம், என்னையும், என் குடும்பத்தையும் தான் பாதிக்கனும். ஆனா அர்ச்சனா.?”
“கடவுளே! உங்க அக்கா எனக்கு விசயமே இல்ல, நீங்கப் பேசலைனா நானும் பேச மாட்டேன். ஆனா அர்ச்சனா மேடம் கூடவும் நீங்கப் பேசுறதால நான் பேச மாட்டேன். பிகாஸ் பெர்சனலா எனக்கு உங்க மேல பொஷசிவ் இருக்கு போல… அதனால அவங்கள ஏத்துக்க முடியல.”
“மீரா! நீ மெச்சூர்டு நெனச்சேன், ஆனா! நம்ம விசயத்துல… இட்ஸ் ஓகே! அது உன் விருப்பம். உனக்காக எல்லாம் நான் அர்ச்சனா கிட்ட பேசுறது ஸ்டாப் பண்ண மாட்டேன்.” என எழுந்தான்.
“அப்ப உங்க அக்கா.?”
“அதான் அவ நெனச்சது நடக்குதே, அப்பா, அம்மா அன்பு கெடைச்சுட்டு…”
“நீங்க…”
“நான் அந்த வீட்டுல தனி தான், அவங்க பொண்ணோட சேந்தா எனக்கு என்ன.?”
“அப்ப நான்…”
“அது உன் விருப்பம்”
“ம்ம்ம்! என் புருசனே பேசல, நான் எதுக்குப்பேச போறேன். பட்! இந்தச் சின்னப் பொண்ணுக் கூட பேசுவேன்.”
“ம்ம்ம்! நீ புருசனுக்காக யோசிக்கிறனு சொல்ற, ஆனா புருசனோட மனசு புரியல…”
“அந்த மனசு எனக்கு மட்டும் யோசிக்கனும்… ஏற்கனவே ஒரு அடி கணக்கு தீரல, அதுக்குள்ள அடுத்த கணக்கு ஆரம்பிச்சுட்டுட்டா… அத விடுங்க, ஒன்னே ஒன்னு கேப்பேன்”
“ஆமா! எல்லா கணக்குலயும் கடன்காரன் நான் தானே, சரி! என்ன.?”
மீராவும் எழுந்து”அட்சு கூட பேசுங்களே, சின்னப்புள்ள அதுக்கு இந்தக் கதை எதுவுமே தெரியாது சௌந், ப்ளீஸ் எனக்காக…”
“அது எப்டி முட்டகோஸ்! இவ்ளோ ஆர்க்யூ பண்ணிட்டு, என் மேல நம்பிக்கையே வைக்காம பேசினதுக்கு அப்புறமும், என் கிட்ட ப்ளீஸ், எனக்காகனு கேக்குற.?”
“அது அப்டி தான், நீங்க என்ற புருசனுங்கோ, என் மனசுல சௌந்தர் மட்டும் தான் இருக்கார், வேற எந்த சர்வா, வேதா, அணன் எல்லாம் இல்ல, சோ! ஈஸியா கேக்குறேன்… நான் சொல்றத செய்யுங்க ப்ளீஸ்…”
அவளை முறைத்தவன், தலையைக் குலுக்கிவிட்டு, அருகே விளையாடிய அட்சுவை சென்று தூக்கினான்.
மீரா அவன் அருகே செல்ல, இருவரும் நடந்தனர்.
அட்சு புரியாமல் முழிக்க, “குட்டிமா! பயப்புடாதீங்க, மாமா ஒன்னும் செய்ய மாட்டார்…” எனச் சிரித்தாள் மீரா.
“ஆமா! உன் அத்த தான் கடிச்சு வச்சுடுவா, பக்கத்துல போயிடாத அட்சு…” என்றவன் முகத்தையே பார்த்தது அட்சு.
அவனையே பார்த்த பிஞ்சு மனம் என்ன நினைத்ததோ, “மாமா!” என்றழைத்து, அவன் கன்னத்தில் முத்தம் வைத்தது.
அப்படியே நின்றான்…
மீராவும் அவர்களை காண, சௌந்தருக்கு ஒரு மாதிரி உணர்வு தோன்றிட, அட்சு கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“உனக்கு யாரு என் பேரு சொல்லி குடுத்தா.?” எனக் கேட்டான்.
“அவரு திட்டு வாங்குறது உனக்கு சந்தோஷமா, சுந்தர் மாமா தான் உன் கூட ஃபர்ஸ்ட் பேசினது, இவரு இப்ப தான் பேச ஆரம்பிச்சு இருக்கார் அட்சு… சோ! சுந்தர் மாமா தான் பெஸ்ட் மாமா, சரியா” என்றாள் வேண்டுமென்றே.
“நோ! சௌந் மாமா தான் பெஸ்து” என மீண்டும் சௌந்தருக்கு முத்தம் வைத்தாள்.
“அடியேய்! இது எல்லாம் போங்கு, உன் கிட்ட சிரிச்சுக் கூட பேச தெரியாத இந்த மாமா பெஸ்தா” என அட்சுவை முறைத்தாள்.
“ம்ம்ம்! மாமா சிரி” என சௌந்தர் வாயைப் பிடித்து இழுத்தாள்.
சௌந்தரும் அவளின் இழுப்பிற்கு சிரிக்க, “லவ்வுயூ மாமா!” என அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்தாள்.
சௌந்தர் மெல்ல திரும்பி மீராவை நோக்க, அவளோ புருவத்தைச் சுருக்கி இதழ்களைச் சுளித்தாள்.
“ஏய்! சின்னப்புள்ள மேல போய் பொறாமை படாதடி” எனச் சீண்டினான் அவளை.
“ம்ம்ம்! லவ்வுயூ மாமாவாம், பெரிய மாமா, இந்த முசுடுமூஞ்சிய போய் லவ்வுயூனு சொல்லுது இந்த வாண்டு…” என பழித்தாள்.
“அத்த! மாமா முசுனாட்டாமூச்சி இல்ல, குட் மூஞ்சி” எனக் கூறி மேலும் கொஞ்சினாள்.
“அப்டி சொல்லு அட்சு!” என அவள் தலையை முட்டியவாறு நடந்தான் சௌந்தர்.
“போதும்டிமா! முடியல, நீங்கப் போங்க நான் பின்னாடி வரேன்…” என அப்படியே நின்று கையைக் கட்டிக் கொண்டாள் மீரா.
முன்னே சென்றவன் பின்னால் வந்து, “சின்னப்புள்ள கிட்ட போய் போட்டிப் போடுறா பாரு, வாடி லூசு” என அவளின் கையைப்பிடித்து அழைத்துச் சென்றான்.