“உன் அப்பா பத்தி புதுசா நினைக்க என்ன இருக்கு, அவரோட அலப்பறை தெரிஞ்சது தானே சோ! லூஸ்ல விட்டேன்…”
“ம்ம்ம்!”
“அதிசயம்! இன்னேரம் தாம் தூம்னு குதிச்சு இருப்ப, அப்பா பத்தி பேசிட்டேனு…”
“உண்மைய தானே சொன்னீங்க, அதே மாமாவ பாராட்டினத கேட்டு சந்தோஷப்பட்டேன், இட்ஸ் ஓகே! அப்பா இனிமே உங்க விசயத்துல, நம்ம குடும்ப விசயத்துல தேவையில்லாம தலையிட மாட்டார்.”
“ஓ! பொண்ணோட தாக்கம் அப்டி போல , உன் அப்பா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்…” எனச் சிரித்தான்.
“ரொம்ப பேசாதீங்க, அவரு என் அப்பா நான் திட்டுறது எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டார்.”
“இது முட்டகோஸ்!” என்றவன், “என்னைய தவிர எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போல” என சமையல் மேடை மீது ஏறி அமர்ந்தான்.
அவன் எதிரே கோபமாக சென்று முறைத்தவாறு”ஓ! அப்ப உங்க அக்கா நல்லா சமைப்பாங்கனு சொல்றீங்களா.?” எனக் கேட்டாள்.
“அப்கோர்ஸ்! அதான் உண்மை.”
“எப்டி.? முன்னாடியே கத்துக்கிட்டாங்களா.?”
“ம்ம்ம்! அப்பாவோட ரூல்ஸ் படி, அம்மா கத்துக் குடுத்துட்டாங்க”
“அப்ப ஏன் உங்களுக்கு கத்துக் குடுக்கல.?”
“ஏனா! தெரியாது கத்துக் குடுக்கல, நான் இந்தப் பக்கமே ரொம்ப வர மாட்டேன், வெரி ரேரர்”
“ஆம்பள புள்ளைனு சலுகை அதானே! ஆனாலும் உங்கப்பா சரியான பழமைவாதி தான், ஆம்பள புள்ள, பொம்பள புள்ளனு பாரப்பட்சம்…”
“அது என் அப்பத்தா குணம், என்ன செய்றது.? சரி! உன் வீட்டுல சேராக்கு சமையல் தெரியுமா?”
“தெரியாது!”
“நீங்கத் தான் புதுமைவாதி ஆச்சே, எல்லாரும் சரிசமமா கத்து இருக்க வேண்டாமா.?” என நக்கலாக கேட்டான்.
“ம்ம்ம்! நாங்க எல்லாம் சின்னப் புள்ளைங்க, நான் ஸ்டில் ஸ்டுடென்ட்…” என்றவள், தன் ஃபோனில் எதையோ ஆராய்ந்துக் கொண்டு இருந்தாள்.
“ஆமா! ஆமா! உலக புகழ் கெழவியாட்டம் வாய் மட்டும் இருக்கு, ஆனா உள்ளூர் பச்சப்புள்ளனு கத விடுறது… ஃபோன்ல என்ன பாக்குற.?”
“சாம்பார் எப்டி வைக்கிறதுனு தான்…”
“ஓ!” என எதிரில் நிற்கும் அவளையே வேடிக்கைப் பார்த்தான்.
சிவப்பும், அடர் ரோஜா நிறமும் கலந்த சாப்ட் க்ரேப் புடவையில் மின்னினாள். மீராவோட நிறத்திற்கு பளீச் என்று இருந்தது.
அவளின் குண்டுக் கன்னங்கள் சிவந்திருக்க, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வகிட்டில் குங்குமம், அவனின் ஆயுதமான அவர்களுக்கே உரிய வாசமான மல்லிகையை தலை நிறைய வைத்திருந்தாள்.
மல்லிகைப் பூவானது ஃப்ரிஜில் சேர்ந்திருக்க, அதை எடுத்தவள் எப்பொழுதும் விட அப்படியே குறைக்காமல் சற்றுக் கூடுதலாக வைத்துக் கொண்டாள்.
அவளோ முக்கியமாக ஃபோனில் குறிப்புகளை மெம்மரி செய்துக் கொண்டு இருக்க, சௌந்தர் தன்னவளை தலை முதல் கால் வரை அளவெடுத்துக் கொண்டு இருந்தான்.
ஏனோ! அன்று மிக அழகாக காட்சியளித்தாள்.
கழுத்தில் மஞ்சள் கயிறுக்கு புதிதாக மஞ்சள் உறைத்துப் போட்டு இருந்தமையால் அது கழுத்திற்கே பொலிவைக் கொடுத்தது.
அது பைரவியின் அறிவுறுத்தல் ஆகும், தாலிப்பிரித்துக் கோர்க்கும் வரை மஞ்சள் போட்டு பத்திரமாக பார்த்துக் கொள் என அதட்டுதலாக கூறி இருந்தார்.
‘என்ன இன்னைக்கு முட்டகோஸ் செம அழகியா தெரியுறா…’ என யோசித்தவாறு ரசித்துக் கொண்டு இருந்தான்.
“ம்ம்ம்! கொஞ்சமா புரியுது!” எனக் கூறியவள், சாமான்கள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தாள்.
எதையோ தேடியவள், மூன்று டப்பாக்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொண்டு சௌந்தர் அருகே வைத்தாள்.
“என்னது இது.?”
“அதாங்க எனக்கும் தெரியல, தூர் தால் போட்டு இருக்கு, ஆனா இது மூணும் ஒரே மாதிரி இருக்கே, உங்களுக்குத் தெரியுமா.?” எனக் குழப்பமாக கேட்டாள்.
“ஏன் மீரா, நீ தண்ணீ குடிக்க கூட கிச்சன் பக்கம் ஒதுங்குனது இல்லையா.?”
“இல்லனு சொன்னா நம்புவீங்களா.? தண்ணீ குடிக்க எல்லாம் போவேன்தான், உள்ள போனாலே அம்மா எதாச்சும் எடுபுடி வேலை சொல்வாங்கனு நைசா போயிட்டு சத்தமே இல்லாம ஓடி வந்துடுவோம், இல்லனா எங்களுக்குனே கடைசியா பொறந்த அடிமை என் தம்பியை அனுப்புவோம், அப்பா எனக்கும், அக்காவுக்கும் தான் சப்போர்ட்…” எனப் பெருமையாக கூறினாள்.
“ஓ!”
“சரி சொல்லுங்க”
“என்ன.?”
“இதுல எது தூர் தால்னு…”
“நான் தண்ணீக்குடிக்க கூட ஒதுங்கலனு சொன்னா நம்பிடுவ தானே, எஸ்!” என்றான் ஹாயாக.
“ச்சே! உங்கக் கிட்ட கேட்டதுக்கு பிக்சரே போட்டு பாத்துடலாம்…” என அதை செய்தாள்.
“ஆமா! அம்மா கூட இங்க நின்னீயே… அப்ப பாத்தது இல்லையா.?”
“ம்ம்ம்! அம்மா எனக்கு குடுக்குற அதிகப்பட்ச வேலையே காய்கறிகளைப் பிரிச்சு வைக்கிறது, பாத்திரம் தேவைனா கழுவிப் போடுவேன்,”
“அவ்ளோ தானா! இதுக்கு ஏன் முட்டகோஸ் அவ்ளோ நேரம் நின்னுட்டு ரூமுக்கு வருவ…”
“அது அம்மாக்கு, நான் தானே டைம் பாஸ்… அந்தக் கதை இந்தக் கதைனு நிறைய சீரியல்ஸ் ப்ரோமொ சொல்லுவேன், ஃபோன்ல சேந்து தான் பாப்போம்…”
“சரி! பருப்பைக் கண்டுப்புடி…”
“எப்டி.? இருங்க” என அதையும் ஃபோனில் தூர் தால் பிக்சர் எனப் போட்டாள்.
திரையில் வர, மூன்றையும் வைத்து அடையாளம் தேடினாள்.
சௌந்தரும் ஆராய, இருவருமே கடலைப் பருப்பு, துவரம் பருப்பிற்கு குழம்பி வெற்றிப் பெற்று கண்டறிந்தார்கள்.
“இதான்!” என மீரா எடுத்து வைக்க, “ம்ம்ம்! எவ்ளோ மெசர்மென்ட்…” என அதையும் ஆராய்ந்தாள்.
“மீரா! வேணுனா ஆர்டர் போடவா”
“என்ன ஆர்டர்.?”
“அதான் ஃபுட் ஆர்டர் பண்ணிச் சாப்புடுவோம்…”
“நோ! நோ! நான் இன்னைக்கு சமைச்சே ஆவேன்…”
மேடையில் இருந்து இறங்கியவன், “ஆனது ஆகட்டும், அந்த ஃபோனை குடு நானே பாத்து சொல்றேன், நீ ஒன்னு ஒன்னா எடு…” என ஃபோனை வாங்கி தேவையான பொருள்களைப் பார்த்தான்.
கடுகு, மிளகு எல்லாம் கூட தெரிந்து வைத்திருந்தாள், அந்த சீரகம், பெருஞ்சீரகம் கன்பியூஸ் ஆக, சௌந்தர் “சரி! ரெண்டையும் சமமா போடு…” என்றான்.
“நோ! நோ! பிக்சர் போங்க” என்றாள்.
அவனும் நொந்தவாறு பிக்சர் போட்டுக் காட்டினான்.
“ஹப்பா! ஒரு வழியா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். இப்ப பருப்பு வேக வைக்கனும்…”
“வை!”
“குக்கர்ல எப்டி வைக்கனும் தெரியாதே.”
“அதையும் ஃபோன்ல பாக்கனுமா.?”
“ம்ம்ம்!”
“இப்டி சமைச்சா நைட்டே வந்துடும் முட்டகோஸ்.”
“ப்ளீஸ்! நான் சமைக்கிறேன், நீங்க ஹெல்ப் பண்ணுங்க” எனக் கெஞ்சினாள் அவள், ஆனால் அவனுக்கோ அது கொஞ்சலாக தெரிந்தது.
அதில் மயங்காமல் இருக்க முடியுமா என்ன.? அதும் அவனோட முட்டகோஸ் ஒரு விசயம் கேட்டு…
“சரி! இரு…” என ஒவ்வொன்றாக ஃபோனில் போட்டு, இறுதியாக சாம்பார் வைக்கும் வீடியோவை ஆன் செய்து வைத்தான்.
பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் அதிகமாக வைத்துவிட, அது விசில் வரும்போதே பொங்கி ஊற்றியது.
“அச்சச்சோ! நீங்க ஒழுங்காவே பாத்து சொல்லல” என சௌந்தரைத் திட்டினாள்.
“ஏய்! நான் சரியா தான் சொன்னேன்…” என அவன் மீண்டும் வீடியோவை காண, “சாரிடி முட்டகோஸ்! அது குக்கர் அளவு மென்சன் பண்ணி இருக்கு…” என மீண்டும் அதை மாற்றினார்கள்.
அடுப்பை சுத்தம் செய்ய போனவளிடம் இருந்து அதை வாங்கியவன் அவனே சுத்தம் செய்யத் தொடங்கினான்.
“நீ போய் வெஜிடபிள்ஸ் கட் பண்ணு.” என அதை துடைக்கச் சென்றான்.
ஒரு நிமிடம் ஆக, “மீரா! காய்கறி கட் பண்ண தெரியுமா.?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்!” என கட்டரை எடுத்து வைத்து, முதலில் தக்காளியை கட் பண்ணி வைத்தாள்.
அடுத்து வெங்காயத்தை எடுத்தவள், உரித்த முதல் நிலையிலே கண்களில் நீர் வடிய அதை ஓரமாக வைத்துவிட்டு கேரட் சீவிட எடுத்தாள்.
அதை பீலர் இல்லாமல் கத்தியை வைத்துக் கொண்டே தோல் சீவிட முயற்சிக்க, கத்தி விரலைப் பதம் பார்த்தது.
“ஆ!” எனக் கத்தியவளை, முறைத்தவாறே அருகே சென்றான்.
“அப்பவே கேட்டன்ல… அறிவிருக்கா..” என அவளோட கையைப்பிடித்து தண்ணீரில் காட்டி, பேண்ட்ய்டு போட்டு விட்டான்.
வலியில் முனகியபடி”உங்களுக்கு மட்டும் கட் பண்ண தெரியுமா.?” எனக் கடுப்புடன் கேட்டாள்.
“இந்த வாயிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… கத்தி கைக்கு பதிலா வாயில் வெட்டி இருக்கனும்” என அவளை நகர சொல்லிவிட்டு காய்கறிகளை வெட்ட தொடங்கினான்.
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள், “எப்டி தெரியலைனாலும் நல்லா கட் பண்றீங்க.?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! சமையல் மாஸ்டர் கிட்ட கத்துட்டு வந்தேன்…”
“ஹிஹிஹி!” எனச் சிரித்தாள்.
“தெரியுதுல! அமைதியா உட்காரு, நீ ஃபோனை பாத்து சொல்லு நானே சமைக்கிறேன்” என்றான்.
“எங்க உட்கார, இப்டியே நின்னுட்டே சொல்றேன்…”
“இரு!” என கையை கழுவியவன், அவளை இடையோடு சேர்த்து அணைத்து தூக்கி சமையல் மேடை மீது அமர வைத்தான்.
சௌந்தரின் கை வெற்று இடையில் பட, நெளிந்தவள் அவன் கழுத்தை இறுகப் பற்றினாள்.
இருவரின் விழிகளும் நோக்கிட, சௌந்தர் அப்பொழுது தான் அவளின் அருகாமையை உணர்ந்தான்.
அவன் கை அவளின் இடுப்பில் ஊறிட, மிக அருகே சென்று,
மீராவின் முன் அவள் நகர முடியாமல் அணைக் கட்டியவன், விழிகளால் கேள்வியாக அவனையே பார்த்தவளை நோக்கி புருவத்தை உயர்த்தினான்.
‘ஒன்னுமில்ல!’ என அவள் இடமிருந்து வலம் தலையை அசைத்திட, மெல்ல சிரித்தான்.
அவன் கரமானது தன்னவளின் இடையில் ஊறிட, அதன் அவஸ்தையை சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தவளோ சௌந்தரின் கழுத்தில் இருந்த தன் கைளை அப்பொழுது தான் கவனித்தாள்.
‘கையை எடுப்பதா வேணாமா’ என யோசித்தவளை நோக்கியவன்”என்ன முட்டகோஸ் பேசாம ஃபுட் ஆர்டர் போடலாமா.?” எனக் கேட்டான்.
“அச்சச்சோ! பாதி ரெடி பண்ணியாச்சு, இப்ப போய் ஆர்டரா, நோ வே நான் சமைச்சே ஆகனும்” என கீழ் இறங்கப் போனாள்.
அவளை இறங்கவிடாமல் தடுத்தவன், “நீ சமைக்கப் போறேனு மொதலயே ரத்தப்பலி குடுத்துட்ட, அதுவே போதும் மேடம் மறுபடியும் கைக்கு பேண்டேஜ் போட வச்சுடாத, இருமா நானே வெட்டி தரேன் நீ மெத்தெடு மட்டும் சொல்லு” என்றான்.
“அப்ப சரி! போங்க” என அதிகாரமாக கூறினாள்.
“ஏன் சொல்ல மாட்ட, போறேன்மா” என விலகப் போனவனை நக்கலாக பார்த்தாள்.
அவளின் நக்கலைப் புரிந்து கொண்டவன், இடையில் இருந்த கையை எடுக்காமல் அப்படியே அழுத்தமாக பிடித்து கிள்ளிவிட்டு வேகமாக விலகினான்.
“ஆ!” என அலறியவள், “அய்யோ வலிக்குது” என அவனை முறைத்தாள்.
“ம்ம்ம்! பெரிய சமையல் செஃப் மாதிரி சீன் போட்டுட்டு நக்கல் வேறயா” என காய்கறிகளை வெட்ட தொடங்கினான்.
“ஆமா! மறுபடியும் பக்கத்துல வாங்க அப்ப இருக்கு” என இதழ்களைச் சுளித்தவள், ஃபோனை ஆராய்ந்தாள்.
“நீங்க அன்னைக்கு உருளைக் கிழங்கு ப்ரை கேட்டீங்களே, அது பண்ணலாமா?”
“ம்ம்ம்!”
சிறிது நேரத்தில்”ஒரே நிமிஷம் பாருங்க, இதுல எந்த மெத்டு வேணும்.?”
அதை நோக்கியவன், “இதான் அம்மா செய்வாங்க மீரா” என வேகவைத்து ப்ரை செய்யும் முறையை காட்டினான்.
“ஓகே! நான் சொல்றதை செய்யங்க”
“இதுக்கே ப்ரை வேணானு சொல்லி இருக்கலாம்” என முனகினான்.
“என்ன சொல்றீங்க.? அத சத்தமா சொல்லுங்க”
“நல்ல வேளை நீ வெஜ் சமைக்க ட்ரை பண்ண, இல்லனா என் நிலை இன்னேரம் நாறி இருக்கும்” எனத் தலையைக் குலுக்கினான்.
“நான் ஃபர்ஸ்ட் டைம் செய்றதால வெஜ், அதுவும் மாமா ஹாஸ்பிடல இருக்கும் போது நம்ம வெஜ் செய்ய வேணாம், இன்னைக்கு கோயில இருந்து வேற வந்தாங்கள அதான்…”
“நீ மொத மொத சமைக்கிறீயா.? நான் தான் மொத மொத சமைக்கிறேன் முட்டகோஸ்…”
“யாரு சொன்னா.? நான் தான் இன்ஸ்ரெக்ட் குடுத்துட்டு இருக்கேன். சோ! யூ ஆர் ஒன்லி டு எக்ஸ்க்யூட் சார்…”
“ஓ! அதுக்கு நீ டீச்சரா இருக்கனும் மேடம். நீயும் சரி, நானும் சரி நம்ம ஸ்டுடென்ட்மா… அதுவும் ஒரே க்ளாஸ்” என வெட்டும் வேலையை சிறப்பாக செய்தான்.
“ஒரே க்ளாஸா இருந்தாலும், பிரைட் ஸ்டுடென்ட் மக்கு ஸ்டுடென்ட்டுக்கு சொல்லி தருவாங்க…”
அவளை திரும்பி பார்த்தவன், “ரொம்ப பேசின இந்த வெங்காயத்தை கட் பண்ண விட்ருவேன்” எனக் கண்களில் நீர் வழியக் கூறினான்.
“ஓ! அந்த செக்ஷன் வந்தாச்சா.?” என எட்டிப் பார்த்தாள்.
ஏன்னென்றால் முதலில் எடுத்த வெங்காயத்தை ஓரம் கட்டிவிட்டு தான் தக்காளியை எடுத்து, அடுத்தாக கேரட்டை தூக்கினாள்.
“ஏன், நீ பிளான் பண்ணி விட்டுப் போன செக்ஷனா.?”
“எஸ்! நோ!” என உளரினாள்.
சௌந்தர் ஒரு வழியாக அனைத்தையும் முடித்து, கேஸ் அருகில் எடுத்து வைத்தான்.
மீரா, தானாக குதித்து இறங்கினாள்.
“ஏய்! சரியாச்சா.?”
“ஓகே தான் பரவாயில்ல! இனிமே நான் பண்றேன்” என அடுப்பு முன் நின்றாள்.
“ஷ்யர்!”
“ம்ம்ம்!”
“எதும் எண்ணெய் எடுத்து கவுத்துக்க மாட்டீயே.?”
“ஓ! அப்டி ஒன்னு இருக்கோ, அப்ப நீங்கப் பக்கத்துலயே நின்னுங்க… அந்த மாதிரி ஏரியா எல்லாம் நீங்களே ஹேண்டில் பண்ணுங்க, இந்த கிண்டுறது, உப்பு பாக்குறது எல்லாம் நான் பண்றேன்…”
அவளை ஒரு மாதிரி லுக் விட்டவன், “நீ சமைக்கிற, நான் எடுப்புடி அதானே… நீ செஃப் நான் லேனர்…” எனக் கேட்டு முறைத்தான்.
“அப்கோர்ஸ்!” என வேலையைத் தொடர்ந்தாள்.
சாம்பார் வைக்க காய்களை எல்லாம் எடுத்து வேகவைத்திட, அது வெந்து வர பருப்பு போட்டு… அடுத்தடுத்து மீராவின் ஒப்புவித்தலுக்கு ஏற்ப சௌந்தரே செய்தான்.
மீரா, ஜஸ்ட் கரண்டியைப் பிடித்தவாறு போஸ் மட்டுமே கொடுத்தாள்.
சாம்பார் ஒரு பக்கம், உருளை ஒரு பக்கம் என அடுப்பில் தயாராகியது.
அரிசியை நேரடியாக தண்ணிரீல் போட்டு எலக்ட்ரிகல் ஸ்டவில் சௌந்தரே தூக்கி வைத்தான்.
உருளையை அவ்வபோது கிண்டிக் கொண்டு இருந்தாள்.
சௌந்தர் அனைத்தும் முடிந்த பின் பாத்திரங்களை எடுத்து ஓரமாக வைத்துக் கொண்டு இருக்க அவன் ஃபோன் அடித்தது.
அதை பேசியவாறு வெளியில் சென்றவன், பேசி முடித்தப்படி உள்ளே நுழைந்தான்.
வியர்வைத் துளிகள் கழுத்து, தோள் பட்டை, இடுப்பில் என வியர்த்து ஒழுகிட அதை பார்த்தவன், ஃபோனை வைத்துவிட்டு அவள் பின்னால் சென்று அணைத்து, வெற்றிடையில் ஒற்றை கையை வைத்து, மறு கையால் கரண்டியுடன் கூடிய கையைப் பிடித்து கிண்ட தொடங்கினான்.
“என்ன பண்றீங்க.?” என அவனை அப்படி எதிர்பாராதவள் கேட்க,
“ம்ம்ம்! தெரியலையா, செஃப் கிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்…” என இடுப்பில் இருந்த கரமானது மெல்ல முன்னேறியது.
“சௌந்த்!” என்றாள் மெல்ல…
“எஸ்! மீ தான்…”
“ஒரு மாதிரி இருக்கு”
“செஃப் சொல்லிக் குடுக்கும் போது, ஒழுங்கா சொல்லிக் குடுக்கனும்.” என்றவன், அவள் தோளுடன் கூடிய வெற்று கழுத்தில் முகத்தைப் பதித்தான்.
அவளுக்கோ வியர்வையின் அளவு அதிகரிக்க, நெற்றி வகிட்டில் இருந்து குங்குமம் சிவப்பு நிறம் வழிந்தது.
இடுப்பை இறுக்கியவன், கழுத்தில் பதித்த முகத்தை மெல்ல கன்னங்கள் நோக்கி உரசிக் கொண்டே சென்றான்.
மறுகையில் கரண்டியை விடாமல் மீரா கிண்டிக் கொண்டு இருந்தாள்.
அவனின் ஸ்பரிசம் பல விதமான உணர்வுகளை கொடுத்திட, அதை தாங்கிக் கொண்டு அவனை விலக்க தோன்றாமல் நின்றாள்.
ஏன் விலக்க வேண்டும்.? அவளின் மனதிற்கு இனியவன் தன்னை ஸ்பரிசம் செய்திட அனுபவிக்க மட்டுமே மனம் தூண்டியது.
கன்னங்களை உரசி முடித்து, கன்னத்தோடு கன்னம் வைத்தவன், கரரண்டியை பிடித்திருந்த அவன் கையை மட்டும் எடுத்து அவளை முழுமையாக தன் அணைப்பில் இறுக்கி, “இன்னைக்கு நீ ரொம்ப அழகா தெரியுற முட்டகோஸ்” என்றான்.
சௌந்தரின் ஒற்றை கையானது வெற்றிடையில் இறுக்கியும், மறு கையான புடவையின் மேற்பக்கம் கோர்த்தவாறு இறுக்கவும், அவன் பேச தொடங்கியதும் தன் உணர்வுகளை மீட்டவள்,
உருளைக் கிழங்கை கிண்டியவாறு, “ஏன் நான் இத்தன நாளா அழகா இல்லையா.?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! ஒரு வேளை இத்தன நாளா சரியா கவனிக்கலயோ முட்டகோஸ்”
“அப்டி எல்லாம் முடியாதுங்க சார்…” என வெட்கப்பட்டாள்.
“அப்ப நானே எடுத்துக்குறேன்”
“புரியல!” எனத் திரும்பியவளின் இதழில் பட்டென்று இதழ் பதித்தான்.
அவளின் விழிகள் படபடவென்று அடித்திட, அவனோ அவளை மேலும் தன்னோட இறுக்கி, இதழ் தேன் பருகதொடங்கினான்.
மீராவிற்கு கால்கள் தடுமாற, அவளின் கையில் இருந்த கரண்டியைப் பிடுங்கிப் போட்டவன், அவளை பின்னால் நகர்த்திக் கொண்டு சுவரோடு ஒன்ற வைத்தான்.
இதழ்தடம் நீண்டுக் கொண்டே போக, மீராவிற்கும் கண்கள் சொருகி தன்னவனின் முத்தம், தன்னவனின் அருகாமை, தன்னவனோட இந்த நிமிடம் என அதை மட்டுமே மனதில் ஏற்றி அவனின் முத்தத்தை அனுபவிக்க தொடங்கியதற்கு ஆதாரமாக அவனின் தலைப்பிடரியை கைகளால் பிடித்துக் கொண்டாள்.
நேரம் கடக்க அங்கு வந்த வாசனையில் மீராவின் மூளை அலாரம் அடித்தது. சட்டென்று கண்களை விரித்தவள், அவனை தள்ளிவிட முயற்சித்து விலக்கியவாறு சென்று கேஸ் ஸ்டவை ஆஃப் செய்தாள்.
உருளைக் கிழங்கு கருகிப் போய் இருந்தது.
அவனைத் திரும்பி முறைத்தவள், “எல்லாம் உங்களால தான்” என்றாள்.
அவள் அருகே வந்து அவளை அணைத்தவாறு நின்றவன், “விடு முட்டகோஸ்! சைடு டிஷ் இல்லைனா என்ன, அதான் மெயின் டிஷ் இருக்கே” என சாம்பாரை காண, அது சுண்டிப்போய் அடியில் பிடித்த ஸ்மெல் வர காத்திருந்தது.
“அச்சச்சோ!” என இருவருமே அதை ஆஃப் செய்ய, மீரா அவன் தோளில் அடித்தாள்.
“போச்சா! இதுவும் போச்சா…” என அதை கரண்டியால் கிண்ட அடிப் பிடித்த ஸ்மெல் நல்லாவே வெளிவந்தது.
“சாரிடி! சாதத்தை மட்டும் தயிர் போட்டு சாப்புடுவோம்” என அங்குக் காண அதுவோ, அடுப்பு பற்ற வைக்கபடாமல் அரிசி ஊறிக் கொண்டு இருந்தது.
அவ்வளவு தான் மீரா பத்ரகாளியாக மாறிட, “நீங்க ஸ்டவ் ஆன் பண்ணவே இல்லையா.?” என அவனை தாறுமாறாக அடிக்கத் தொடங்கினாள்.
பாவம் சௌந்தர் அரிசியும், தண்ணீரையும் வைத்து தனியாக இருந்த எலக்ட்ரிக்ஸ்டவை ஆன் செய்யவே மறந்திருந்தான்.
“ஏய்! சாரிடி…” என அவள் அடிகளைத் தடுக்க தொடங்கிட, மீரா விடாமல் அவனை வெளுத்து வாங்கினாள்.
ஒரு கட்டத்தில் மீராவை இழுத்து எதிர்பக்கமாக தன்னுள் அடக்கியவன், “சாரி மீரா!” என்றான்.
“போடா! எல்லாமே வேஸ்ட் போச்சு” என அவன் மார்பில் அடித்தாள்.
“எனக்கு என்னடி தெரியும், ஏதோ ஒரு ஆர்வத்துல கிஸ் பண்ணிட்டேன், அதுக்காக இப்டி பட்டினியா ஆவோம்னு பிரிவென்சனா பண்ணேன்…”
“ம்ம்ம்! சமைக்கும் போது என்னத்துக்கு ரொமான்ஸ் மூட்… மொதல உங்களுக்கு எதுக்கு ரொமான்ஸ் மூட் வந்துச்சு… உங்களுக்கு நான் முக்கியமே கிடையாதே…” என அப்பொழுது அவனை திட்ட வேண்டும் என்பதற்காக காரணங்களை சரியாக தேடி அடுக்கினாள்.
“நீ முக்கியம் இல்லனு நான் சொன்னதே இல்ல, அத விடு நீ ஏன் புடவைக் கட்டி அப்புறம் என்னோட ட்ரேட்மார்க் மல்லிகைப் பூவை வச்சுட்டு இப்டி ரொமான்டிக்கா நின்ன, அதான் ரொமான்ஸ் மூட் வந்துட்டு… தப்பு உன்மேல தான்”
“ம்ம்ம்! அம்மா தான் புடவைக் கட்ட சொன்னது, மல்லிகைப் பூ நிறைய சேந்துட்டு அதான் வச்சேன்… இது எல்லாம் ஒன்னும் உங்களுக்காக பண்ணல… இப்ப இதை எல்லாம் க்ளீன் பண்ணனும்”
“சரி விடுங்க! நானே க்ளீன் பண்ணி வச்சுட்டு வரேன். டைம் ஆச்சு நீங்கப் போய் கிளம்புங்க, ஹாஸ்பிடல் போற வழியில் சாப்புட்டுப்போகலாம்…”
“இல்ல! நீ போ நான் க்ளீன் பண்ணி வைக்கிறேன்… உனக்கு கை வேற அடிப்பட்டிருக்கு… நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா” என்றான்.
“ம்ம்ம்!” என மீரா விலகி சென்றாள்.
மீரா சென்றதும், சௌந்தர் சாதத்தை ஆன் செய்து விட்டான். பிறகு க்ளீன் செய்துக் கொண்டே தன் ஃபோனில் ரசம் வைக்க வேகமாக பார்த்து அதை செய்து முடித்தான். ஃப்ரிட்ஜில் அப்பளம் தேடி அதைப் பொரித்து எடுத்து முடித்து அவனும் கிளம்ப சென்றான்.
அவர்கள் வர, சாதம் வெந்து தயாராக இருந்தது. சௌந்தர் மட்டும் உள்ளே வந்து அதை வடிக்க தெரியாமல் சல்லடைப் பாத்திரத்தில் கொட்டி விட்டான்.
மீரா வரும் போது ஆச்சரியமாக பார்த்தாள்.
“ஹை! ரசம், அப்பளம், சாதம்… எப்ப பண்ணீங்க.?”
“எல்லாம் இப்ப தான், நீ வா… ஒரு முத்தத்தைக் குடுத்துக்காக எனக்கு இது பெரிய தண்டனை முட்டகோஸ்… வா! வா!” என அழைத்துக் கொண்டு டேபிலுக்குச் சென்றான்.
தட்டில் இருவருக்கும் சாதத்தை வைத்து ரசத்தை ஊற்றினான்.
“ஹப்பா! இப்ப தான் ரிலாக்ஸா இருக்கு, சாப்புடு” என்றான்.
கை கழுவி வந்த மீரா, தட்டைப் பார்த்துவிட்டு அவன் பக்கம் சென்று பின்னால் இருந்து அவனை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தப்படி”ஐ லவ் யூ சௌந்த்” என்றாள்.
“அய்யோ! மறுபடியுமா.?” என அதிர்ச்சியாவது போல் நடித்து, அவளை இழுத்து தன் முன் அமர வைத்து, அவனே ஊட்டி விட்டான்.
அவளும் கண்கள் கலங்க”எனக்கு ஒரு மாதிரி எமோஷனலா இருக்குங்க, நீங்க தானா இதுனு…” எனக் கூறினாள்.
“ம்ம்ம்! நானே தான், சாப்புடு எப்டி இருக்கு மை ப்ரிப்ரேசன்…”
“ம்ம்ம்! சூப்பர்” எனச் சிரித்தாள்.
“ஒத்துக்கோ முட்டகோஸ்! இன்னைக்கு நான் தான் செஃப்…”
“ம்ம்ம்! ஆமா இந்த முட்டகோஸ் புருசன்தான் செஃப்…” என அவன் கன்னத்தை இரண்டுப் பக்கமும் கிள்ளினாள்.
“போதும்! சீக்கிரம் கிளம்பு, டைம் ஆச்சு”
இருவருமே மாறி ஊட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு, மருத்துவமனை நோக்கிச் சென்றார்கள்.