சௌந்தரும் மீராவும் விருமாவின் அறைக்குள் நுழைய, உள்ளுக்குள் சௌந்தர்யாவும், பிரேமாவும் மட்டுமே இருந்தனர்.
“வாப்பா!” என விருமா அழைத்திட, சௌந்தர்யா அப்பாவிடம்”அப்பா! நான் வெளியில இருக்கேன்” எனக் கூறி வெளியேறினாள்.
பிரேமா மருமகளுடன் உரையாட தொடங்கிருந்தார்.
சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, விருமா”தம்பி! உனக்கு நான் பாப்பா கூட பேசுறதுல வருத்தம் இருக்குனு தெரியும், அதுக்காக அப்பாவ ஒதுக்கி வச்சுடாத” என்றார்.
“என்னப்பா திடீருனு இப்டி பேசுறீங்க.?”
“இல்ல! நேத்தையில இருந்து நீ இந்தப் பக்கட்டு ஆளையே காணுமே, அதான் மனசுக்கு சரியா படல” என வருந்திக் கூறினார்.
“அப்பா! உங்கப் பொண்ணுக் கூட பேசுறதுல எனக்கு விருப்பம் இல்ல தான், ஆனா அதுக்காக உங்கள ஒதுக்குவேனா.? ஆஃபிசில கொஞ்சம் வேலை அதான் வர முடியல…”
“என்னப்பா வேலை அதும் எனக்குத் தெரியாம.?”
சௌந்தர் மீராவையும், தாயையும் பார்த்துவிட்டு பிறகு மெல்ல நடநந்ததை மேலோட்டமாக கூறி, தற்பொழுது எந்தப் பிரச்சனையும் இல்லை எனத் தெளிவுப் படுத்தினான்.
“என்னப்பா சொல்ற.?” என அதிர்ச்சியானவர் கையைப் பிடித்து, “அப்பா! ஒன்னும் பிரச்சனையில்ல, எல்லாமே சால்வ்டு… யாருக்கும் எதுவும் ஆகல, மத்தப்படி பேப்பர்ஸ் தான் பாத்துக்கலாம்…” என ஆறுதல் கூறினான்.
“ஓ! நான் கூட உன்ன தப்பா நெனச்சுட்டேன்யா, என்னைய மன்னிச்சுடு” என்றார்.
“நான் தான் சொன்னேன்ல, புள்ள அப்படி நெனக்க மாட்டேனு ஆனா நீங்க கேட்டீங்களா.? நேத்து வெள்ளனே நீ வந்துப் பாத்துட்டுப் போனதுல இருந்து இதே புலம்பல் தான் தம்பி…” என்றார் தாய்.
“அப்ப நிலவரம் உனக்கு முன்னே தெரியுமா பிரேமா.?”
“தெரியும்! ஆனா புள்ள தான் சொல்ல கூடாதுனு சொல்லிட்டான்.”
“சரிப்பா தம்பி! அடுத்து என்ன பண்ணனும்.? இந்த மாதிரி நேரத்துல புள்ளைங்கள தனியா விட்டு வந்து இங்க நான் படுத்துக் கிடக்குறேன் பாரு…” என வருத்தமாக கூறினார் விருமா.
“ஒன்னும் பிரச்சனையில்லப்பா, நான், சுந்தர், சம்பத் பத்தாததுக்கு அசோக் அண்ணா எல்லாரும் இருந்தாங்க” எனப் பெருமையாக கூறினான் சௌந்தர்.
“அட்சு அப்பாவும் தான் துணைக்கு நின்னாங்க மாமா” என்றாள் மீரா.
விருமா தலையை ஆட்டிக் கொண்டார்.
“தம்பி! நீ இப்ப ஆஃபிஸ் போறீயா.?” எனக் கேட்டார் தாய்.
“ஆமாம்மா!”
“கண்ணு நீ.?”
“நான் இங்க தான்மா உங்கக் கூட இருக்கப் போறேன்”
“அப்பனா நீ மாமா கூட இருக்கீயா.? நான் போய் பவுன பாத்துட்டு வரேன்” என்றார்.
“ஏன்மா என்ன ஆச்சு.?” எனக் கேட்டாள் மீரா. சௌந்தரும் தாயை நோக்கினான்.
“காய்ச்சல், வாந்தியாம், டாக்டர் கிட்ட காட்டுனதுக்கு சீசனுக்கு வரது தானு சொல்லி மருந்துக் குடுத்து இருக்காங்க. அதான் பாப்பா பவுன தூக்கிட்டு வரல, அவ அப்பா கூட இருக்குதாம். இப்ப பாப்பா கூட போய் நான் பாத்துட்டு வந்துடுறேன்” என்றார்.
“ம்ம்ம்! அவனும் எத்தனைய தான் தாங்குறது, அம்மாவாச்சும் வயசாச்சுனு வை, பொண்டாட்டி பாவம்… அவன் வாழ்ந்ததே கொஞ்சம் தான், ஒரு சீக்காளி பொண்ணைப் புடிச்சுக் கட்டி வச்சு ஏமாத்திட்டாங்க, அவனுக்குப் புள்ளையும் இல்ல” என்றார்.
“ம்ம்ம்! உங்கப்புள்ள சொன்னாரு மாமா”
நேரம் கடக்க, பிரேமா ஃபோன் போட்டார்.
“மீரா! நீ கொஞ்சம் மாமா கூட இரும்மா, பாப்பாவும், மாப்புள்ளையும் ஒரு முக்கிய சாவு வீட்டுக்குப் போயிட்டாங்க, வந்ததும் வந்துடுறேன்” என்றார்.
மீராவிற்கு மதன் சார் வீடாக இருக்குமோ எனத் தோன்றிட, “இறந்தது மதன் சார் அம்மாவம்மா.?” எனக் கேட்டாள்.
“ஆமாம்மா! உனக்கு எப்டி தெரியும்? ஓ! அவனும் உன் காலேஜ் தானே… அங்க தானு பாப்பா சொன்னுச்சு, எனக்கும் தூரத்து உறவு தான், ஆனா நான் எங்கப் போறது… பாப்பா ஒன்னா வேலைப் பாக்குறதால போயிட்டு வரேனு போச்சு, மாப்புள்ளைக்கும் ப்ரண்ட் போல” என்றார்.
“எனக்கும் தெரியும்மா! நானும் அவரும் நீங்க வந்ததும் போயிட்டு வரலாம்னு இருந்தோம், மாமா கூட எங்கள போயிட்டு வரச் சொன்னாங்க”
“அப்படியா! அப்ப இரு சுந்தர வர சொல்றேன், நீயும் பெரிய தம்பியும் போயிட்டு வாங்க” என்றார்.
“சரிம்மா! அட்சு எப்டி இருக்கு.?”
“ம்ம்ம் பரவாயில்ல, புள்ள சோந்துப் போச்சு, மருந்து குடுத்துட்டுதான் இருக்கு பாப்பா…”
இருவரும் ஃபோனை வைக்க, விசயத்தை மாமனாரிடம் கூறினார்.
“ஓ! பிரேமா சொன்ன மாதிரி சுந்தர் வந்ததும் நீ போம்மா…”
“ம்ம்ம்!”
*
சௌந்தரும், மீராவும் இறப்பு வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு சபரி தான் மதனுடன் கூடவே நின்றான்.
சௌந்தர் மதனிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு, இறந்தவர் மீது மாலையைப் போட்டு, ஆண்கள் பகுதியில் சென்று அமர்ந்தான்.
மீராவும் பெண்கள் பகுதியில் சென்று அமர, சௌந்தர்யா மதன் வீட்டு உறவுப் பெண்களுடன் இணைந்து தேவையானதைப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் மீரா காலேஜ் ஸ்டாப்ஸ் எல்லாம் ஒன்றாக வந்தார்கள்.
விசயத்தை அறிந்து அனைவரும் சேர்ந்து ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர்.
அதில் அர்ச்சனாவும் அடங்குவாள்.
பெண்கள், ஆண்கள் எனப் பிரிந்து அமர்ந்திட, சௌந்தர்யா தான் பெண் பேராசிரியைகளிடம் துக்கம் விசாரிக்க துணையாக நின்றாள்.
அர்ச்சனா சென்று அமர, அங்கு மீராவும் அமர்ந்திருக்க, “வா மீரா! எப்ப வந்த?” எனக் கேட்டாள் அர்ச்சனா.
“கொஞ்சம் முன்னாடி தான் மேம்!”
“ம்ம்ம்! யார் கூட வந்த.? மாமா நல்லா இருக்காங்களா.?”
“ம்ம்ம்! நல்லா இருக்காங்க, அவரு கூட தான் வந்தேன், அதோ உட்காந்து இருக்கார்” என சௌந்தரைக் காட்டினாள்.
“ஓ! சார் என் மாமியாருக்குத் தூரத்து ரிலேசன் மேம், நாங்க அவங்க அம்மாவ ஹாஸ்பிடல் பாத்தோம், பாவம் ரொம்ப க்ரிடிக்கலா இருந்தாங்க.”
“அப்படியா!” என அங்கு நடக்கும் சடங்குகளை கவனித்தனர்.
“மீரா! மதன் சார்க்கு பேமிலில வேற யாரும் இல்லையா.?”
“இல்ல மேம்!” என மதன் பற்றிக் கூறினாள்.
“ஓ! சரி, சரி, இருந்த ஒரு ஆதரவும் போச்சு போல…”
“ம்ம்ம்!
“துணை இல்லாம வாழுறது பொண்ணுங்கள விட ஆம்பளைங்களுக்கு தான் ரொம்ப கஷ்டம், அதுவும் அம்மாவும் இல்லைனா இன்னுமே கஷ்டமான விசயம் மீரா.” என சலித்தவாறு வருத்தமாக கூறினாள் அர்ச்சனா.
“கண்டிப்பா மேம்! சார் பாவம் தான், இனிமே தான் அவருக்கு தனிமை ரொம்ப பாதிக்கப் போது…”
இருவரும் பேசிக் கொண்டு இருக்க, மதனின் அம்மாவிற்கு சடங்குகள் தொடங்கியது.
ஒவ்வொன்றாக நடைப்பெற, இறந்தவரின் மகனோ, மகளோ தம்பதிகளாக சுற்றி வந்து செய்யக் கூடிய நிகழ்விற்கு உறவுகளில் நீ செய், அவன் செய் என மாறி கை காட்டிக் கொண்டு இருந்தனர்.
மதன் எதுவும் சொல்ல முடியாமல் நிற்க, சபரி பெரியவர் ஒருவரிடம்”இது யார் வேணாலும் தம்பதியா செய்யலாமாங்க.?” எனக் கேட்டான்.
“செய்யலாம் தம்பி, இது செய்றவங்க காரியம் முடியும் வரை இங்க வந்து நிக்கனுமேனு மாத்தி மாத்தி கை காட்டுறானுங்க, சும்மாவா கொஞ்சமாச்சும் வர போற செலவும் வரும்ல…” என்றார் அவர்.
சபரி”இங்கப் பாருங்க, நீங்க யாரும் செய்ய வேணாம், இவங்க எனக்கும் அம்மா மாதிரி தான், நானும் என் பொண்டாட்டியும் செய்றோம்” என சௌந்தர்யாவிடம் கண் காட்ட, அவளும் உடனே கணவன் அருகில் வந்து நின்றாள்.
அதன்பிறகு நடந்தது அனைத்தையும் சௌந்தர், மீரா, அர்ச்சனா என அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.
இந்த இடத்தில் சபரி உண்மையிலுமே சௌந்தர் மனதில்’நல்லவன்’ என இடம் பிடித்திருந்தான்.
மீரா மனதில்’நல்ல ப்ரண்ட்ஷிப்’ எனப் பதிந்தது.
அர்ச்சனா மனதில்’இந்த இடத்துல என் அண்ணன் இருந்து இருந்தா எனக்கு என்னனு போய் இருப்பான்’ என யோசித்தாள்.
இருவரும் தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டு ஈரத்துடனே அனைத்தும் செய்து முடித்தனர்.
சுடுகாட்டை நோக்கி இறந்தவரை தூக்கிட, முன்னால் மதன் கொள்ளிச்சட்டியுடன் நடக்க, கூடவே சபரியும் நடந்தான்.
சௌந்தர் என்ன நினைத்தானோ எழுந்து மீராவிடம் கைகளால் சைகை செய்துவிட்டு, சுடுகாட்டிற்கு அவர்களுடன் நடந்தான்.
சௌந்தர்யா மட்டும் வீட்டை ஒதுங்க வைக்க, உறவுகளில் பலர் மெல்ல கழன்டுக் கொண்டு நழுவினர்.
சௌந்தர்யா மற்றும் சிலர் வேலைகளைப் பகிர்ந்து செய்ய தொடங்க, மீராவும் சென்று உதவினாள்.
பிணம் வீட்டை விட்டு சென்றதும் வீட்டையே தண்ணீர் விட்டு அலசுவர்.
ஆளாளுக்கு காரணம் சொல்லி ஒதுங்கிட தொடங்க, மீராவும் அர்ச்சனாவும் தான் சௌந்தர்யாவிற்கு உதவினர்.
அர்ச்சனாவுடன் வந்த பேராசிரியர்கள் கிளம்புவதாக கூற அவளோ”நீங்கப் போங்க, நான் பஸ்ல வரேன்” என்றாள்.
ஏனோ தன்னால் ஆன உதவியைச் செய்துவிட்டுப் போகலாம் என வேலையைத் தொடர்ந்தாள்.
அது மீராவிற்குப் புரிய”நீங்க தனியா போகனும்ல மேடம், கிளம்புங்க” என்றாள்.
“பரவாயில்ல மீரா! மதன் சார் வீட்டுல எடுத்துச் செய்ய யாருமில்லனு தெரியுது, அட்லீஸ்ட் நம்ம முடிஞ்சத செஞ்சுட்டுப் போவோம், பஸ்ல போயிக்கிறேன்” என்றாள் அர்ச்சனா.
பிறகு மூவரும் அதிகம் பேசிக் கொள்ளாமலே வேலைக்களை முடித்தனர்.
இரவு உணவானது உறவுகளில் எவரேனும் பொறுப்பு எடுத்து அனைவருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் மதனுக்கு உறவுகளை விட நண்பர்கள், பழக்கப்பட்டவர்கள் என மட்டுமே இருந்திட, அது எவருக்கும் புத்தியில் ஏறவில்லை.
அதை முதலில் கேட்டது ஒரு வயதான பாட்டி தான், “ராத்திரி ஆச்சே ஏதாச்சும் சாப்பாடு செய்யனுமே பொண்ணுகளா” என்றார் சௌந்தர்யாவிடம்.
சௌந்தர்யா திரும்பி மீரா, அர்ச்சனாவை நோக்க, மீரா உடனே”பாட்டி! நான் ஏற்பாடு பண்றேன்” என்றாள்.
அத்தோடு நிற்காமல் உடனே சௌந்தர் எண்ணிற்கு அடித்து, அதை ஆர்டர் செய்ய கூறிட, அவனும் இரவு உணவுக்காக டிபன் ஏற்பாடு செய்தான்.
சுடுகாட்டில் இறுதிக் காரியங்கள் முடித்து மதனிற்கு தலைமுடியை எடுத்துத் திரும்பினர்.
அவர்கள் வரவும் தான் இரவு டிபன் வந்திருந்தது. சௌந்தரே அவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் எனக் கூறி அனைத்தையும் அடுக்கி வைத்தப்பின், எவ்வளவு எனக் கேட்டுவிட்டு ஃபோனில் பணத்தை அனுப்பி வைத்தான்.
சபரயிடம் சௌந்தர்யா உணவு ஏற்பாடு செய்தது சௌந்தர் என விசயத்தைக் கூறினாள். மதனுக்கும் அப்பொழுது தான் தெரியும்.
சௌந்தர் வந்து அவர்கள் அருகில் அமர, “தேங்க்ஸ் சௌந்தர்! இந்தளவு உங்க உதவி எல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்ல” என்றான் மதன்.
“பரவாயில்ல மதன்! இந்த மாதிரி நேரத்துல உதவனும், அதான் மனுச தன்மை… நீங்க போய் சாப்புடுங்க” என்றான்.
“இல்ல! நீங்க எல்லாம் போங்க, நான் லேட்டா சாப்புட்டுக்கிறேன்” என்றான் மதன்.
“ச்சே! ச்சே! உங்கள விட்டு நாங்க மட்டுமா.? நீங்க வாங்க” என சௌந்தர் கைப்பிடித்து அழைத்தான்.
மதன் சபரியையும் கூப்பிட, மூவரும் ஒன்றாக அமர்ந்து, இன்னும் சிலரும் சேர்ந்து உண்டனர்.
அர்ச்சனா, சௌந்தர்யா, மீரா என மூவருமே அனைவருக்கும் பரிமாறினர்.
மதன் அப்பொழுது தான் மீரா, அர்ச்சனாவை கவனித்தான்.
சௌந்தர்யா வரும் போது”மீரா, அர்ச்சனா எப்டி இங்க…” என இழுத்தான்.
“இல்லண்ணா! நான் மட்டும் தனியா வேலைச் செய்றேனு அவங்க ஹெல்ப்புக்கு வந்தாங்க, மீரா தான் சௌந்தர் கிட்ட சொல்லி ஏற்பாடு சாப்பாடு பண்ணினா…” என்றாள்.
“ம்ம்ம்!” என அனைவரும் உண்டனர்.
அதே போல் பெண்களும் அமர்ந்து சேர்ந்து சாப்பிட்டனர்.
அர்ச்சனாவின் மனம் எடுத்த முடிவு இது, இனி சௌந்தர், மீரா இடையே எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அதே சௌந்தர்யா, சௌந்தர் பற்றிப் பேசவும் கூடாது என்ற கட்டுப்பாடு தான் அது…
அர்ச்சனாவோட நல்ல நேரம் பேருந்தும் வர, அதில் ஏறி அமர்ந்துப் பயணித்தாள்.
மற்றவர்கள் அவரவர் பாதையில் கடந்தனர்.
சௌந்தருக்கு அர்ச்சனாவின் செயல் புரியாமல் இல்லை ஆனால் இந்த நேரத்தில் இந்த வீம்பு தேவையா எனக் கோபம் வந்தது.
“அர்ச்சனாவுக்கு எதுக்கு இந்த வீம்பு, அதும் இந்த நேரத்துல தனியா போகனும்னு…”
“அது தான் எனக்கும் தோணுது…”
“அவ நமக்கு இடையில வரக்கூடாதுனு முடிவுப் பண்ணி இருக்கா போல”
“ம்ம்ம்!”
“எப்டியோ போகட்டும்!”
“உங்க மனசுல என் மேல கோபம் வரலையா.?”
“எதுக்கு.?”
“என்னால தான் அவங்க ஒதுங்கிப் போறாங்கனு, ஃபீல் ஆகலையா.”
“அவ ஒதுங்கிப் போறதால எனக்கு ஏன் ஃபீல் ஆகப்போது மீரா, இந்த நேரத்துல தனியா போறாளே இந்த வீம்பு தேவை இல்லாததுனு தோணுது, அதுக்கு மேல அவ விருப்பம். நான் கட்டாயப்படுத்த முடியுமா.? அதே நீயும் வாங்கனு தானே கூப்புட்ட, பின்ன உன் மேல என்னதுக்கு கோபப்படனும்” என்றான் சாதரணமாக.
“உண்மையா அவங்க தனியா போக நானும் காரணமா இருப்பேனு உங்களுக்கு கோபம் வரலையா.?”
“உன்னோட செல்ஃப் அனாலிசியஸ்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா?”
“சரி! அர்ச்சனா மேடம் போனாங்க கம்பெல் பண்ணாம விட்டீங்க, அதுவே நானும் வீம்பா போய் இருந்தா போனு விட்டுட்டுப் போயிடுவீங்களா.?”
“ஆனாலும் இந்தப் பொம்பளைங்களுக்கு எங்க இருந்துதான் இப்டி எல்லாம் கேள்வி வருதோ, இப்பவும் சொல்றேன் அர்ச்சனா வேற, நீ வேற… அர்ச்சனாவ கம்பெல் செய்ய முடியாது, ஆனா உன்னைய அப்டி விடமுடியுமா.? கட்டிப்புடிச்சு இழுத்துட்டு வந்துடுவேன் போதுமா.?”
“ம்ம்ம்! இதை தான் நான் சொன்னேன், நான் சொன்னப்ப என் மனசுல அவ இருக்கா போலனு உனக்கு சந்தேகம்… இப்ப நீயே சொல்ற, அப்ப உன் மனசுல நான் இல்லாம ஏன் அவ இருக்கா முட்டகோஸ்… ஆம்பளைனா ஒரு நியாயம்… பொம்பளைனா ஒரு நியாயமா… நான் சொல்லும் போது பாஸ்ட் எப்டி ப்ரண்ட் ஆகலாம்னு கேள்வி, பொண்ணுங்க பாஸ்ட் கூட பேசினா ஒத்துப்பீங்களானு கொடிப்புடிக்க வேண்டியது…
என் வாழ்க்கையில நடந்ததுக்கு தான் நான் பதில் சொல்ல முடியும், எனக்கு அர்ச்சனா பாஸ்ட் லைஃப், அவள மறந்துட்டேன்… அவ்ளோ தான்… இதுக்கு மேல நான் என்ன செய்ய.? நானா போய் கூப்புட்டுப் பேசினா தான் தப்பு… இப்டி சூழ்நிலையான சந்திப்புக்கு ஒன்னும் பண்ண முடியாது.
அப்புறம் இன்னொரு விசயம், இப்ப நீயே பாவம்னு சொல்ற, இதுவே நான் அர்ச்சனாவ இப்ப கம்பெல் பண்ணி கூப்புட்டு வந்து இருந்தா நீ என்ன சொல்லுவ, அப்ப அவ மேல டேஷ் இருக்கு அதான் விட்டுக்குடுக்க முடியலனு கேப்ப… உன்னோட பொசசிஸ்வ் தலைத்தூக்கும்…
ஒவ்வொரு தடவையும் நான் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது, சோ! நான் இந்த முட்டகோஸ் புருசனா மட்டுமே இருந்துப் போயிடுறேன்.
“ஏங்க! இப்ப லாஸ்டா சொன்னீங்களே, இது சரியா இருக்கும்னு தோணுது…”
“என்ன சொல்ற.?”
“அர்ச்சனா மேடமுக்கு ஏன் ரீ மேரெஜ் பண்ணி வைக்கக் கூடாது.?”
“அது அவ தான் முடிவுப் பண்ணனும், வேணுனா நம்ம சஜஸன் குடுக்கலாம்”
“ம்ம்ம்! நம்ம ஒத்துக்க வைக்கனும்ங்க”
“அது எப்டி முடியும்.? கம்பெல் பண்ண முடியாதுல”
“சில நல்ல விசயம் நடக்க கம்பெல் பண்ணி தான் ஆகனும், ஏன் நம்ம லைஃப் கம்பெல்சன்ல தானே ஆரம்பிச்சது…”
“நம்ம கதையே வேற, சரி கம்பெல் பண்ண மொதல மாப்புள்ள பாக்கனும் மீரா.”
“பாப்போம்!”
“ம்ம்ம்! தேடு”
“என்னைய கேட்டா ஆப்போசிட் கூட செகண்ட் லைஃப் தேடுறவங்க தான் சரினு தோணுது, இல்லனா அண்டர்சென்டிங் இருக்காது”
“ம்ம்ம்! செர்ச் பண்ணனும் மீரா, அவளுக்கு ஃபர்ஸ்ட் லைஃப் மாதிரி அமைஞ்சுட கூடாது… நமக்கு தெரிஞ்ச நல்ல மனுசனா இருக்கனும்… அப்ப தான் ரெண்டுப் பக்கமும் பேச முடியும்.”
“ம்ம்ம்…” என யோசித்தவளிற்கு மதன் வராமல் இருக்க முடியுமா.? வந்தான்.
“ஏங்க! மதன் சார்… இருக்காரே” என்றாள் பட்டென்று.
“என்ன சொல்ற.?”
“ஆமாங்க! அவரும் தனியா இருக்கிறார், நல்ல ஜாப், ரெண்டுப் பேருமே ஒரே ப்ரொப்ஸனல்… செகண்ட் லைஃப் எவ்ளோ மேட்ச் ஆகுது…”
“ம்ம்ம்! இத நான் யோசிக்கவே இல்லையே! உனக்கு மூளை தான் முட்டகோஸ்”
“ஆமா! ஆமா! அப்பப்ப யூஸ் பண்ணிக்கோங்க… மதன் சார், அர்ச்சனா மேம் கல்யாணம் நல்லபடியா முடிய நம்ம அணுக வேண்டியது சபரி, சௌந்தர்யா தம்பதியை…” எனக் கணவனை நோக்கினாள்.
அவனோ திரும்பி அவளை ஒரு மாதிரி பார்க்க, “எஸ்! அப்கோர்ஸ் முட்டகோஸ் புருசா!” என்றாள் கூலாக…