இரவில் பேசியது இரவோடு முடிந்தது போல், காலையில் அவரவர் வேலையை தொடர்ந்தனர் நளன்- தமயந்தி.
வழக்கம் போல் நளன் தமயந்தியை ஹாஸ்பெட்டலில் இறக்கி விட்டான். பொதுவாக எப்பொழுதும் போல் பேசிக் கொண்டர்.
தமயாவிற்கு டியூட்டி ஜென்ரெல் வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தது, அவளிற்கு அது ஒன்றும் அதிர்ச்சியான விஷயமில்லை, ஏற்கனவே அறிந்தது என்பதால் அவளின் பணியை தொடர்ந்தாள்.
நதியா பகலில் வந்திருந்தாள் இரவில் வரமுடியவில்லை என்பதால் ஏற்கனவே தங்கம் மூலம் நேற்று நடந்ததை அறிந்து கொண்டவள், மாலை தமயாவிடம் பேசிக் கொள்ளலாம் என டியூட்டியை பார்த்தாள்.
மாலை தங்கம் சீக்கிரமே வந்து விட்டாள்.
தமயா அவள் வேலை முடியவும் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
நதியாவிற்கு மாலை தொடர்ச்சியாக நைட் டியூட்டி இருந்ததால், தமயாவை காண வந்தாள், தங்கத்தோடு.
வேற வேற ப்ளோர் அவர்கள் பணி.
“தமயா! அவனுக்கு என்னடி பிரச்சனை எப்ப பாரு உன்னையே வம்புக்கு இழுக்குறான்”என்றாள் நதியா.
“விடுடி! அவனை எல்லாம் நான் கணக்கில் சேக்குறதே இல்ல”
“ஆனாலும் உனக்கு வேற டியூட்டி கொடுக்க வச்சுட்டானே”என வருத்தப்பட்டாள் தங்கம்.
“ம்ம்ம்! எல்லாம் ஒன்னு தான் எனக்கு, இதுல என்ன இருக்கு”
“ம்ம்ம்!”என மூவரும் சிறிது நேரம் பேசிட்டு இருந்தனர்.
நளன் கீழே வந்து ஃபோன் செய்யவும் தமயா வருவதாக கூறினாள்.
“நேத்து குணா பேசியதில் என் தொரை தான் ரொம்ப கடுப்பாகிட்டார்”என சிரித்தாள்.
“ஏன்டி! உன்னைய வேலைக்கே போக வேண்டாமுனு சொல்லிட்டார..?”என பதறிக் கேட்டாள் நதியா.
“நீ வேற, என்னைய டாக்டர் படினு சொல்றார்”
“அப்புறம்!”என்றாள் தங்கம்.
“அப்புறம் என்ன விடிஞ்சு தெளிஞ்சு அவங்கவங்க வேலையை பாக்க வந்துட்டோம்” என சிரித்தாள்.
“அது என்னவோ முடியாத ஒன்னு தான், ஆனா தமயா அப்பிடி கேக்க அவருக்கு தோணி இருக்கே, அதுவே பெரிய விஷயம் தான்”என்றாள் தங்கம்.
“ம்ம்ம்! சரிங்கடி நான் கிளம்புறேன்”என தமயா வேகமாக கீழிறங்கினாள்.
ஒரு வாரம் ஒன்றும் புதிதாக நடக்கவில்லை, அதே வேலை, வீடு, இருவரின் காதல் ஸ்பரிசங்கள் என நகர்ந்தது, தமயா, நளன் டாக்டர் படிக்க சொல்லி கேட்டதையே மறந்தாள்.
***
அன்று காலை வேலைகளை முடித்து விட்டு தமயா அறைக்குள் வந்தாள், அவளும் பணிக்காக கிளம்ப, நளனும் கிளம்பிக் கொண்டிருந்தான், “இங்கரே! சாயங்காலம் எத்தன மணிக்கு வேலை முடியும் உனக்கு..?”
“அஞ்சு மணிக்கு முடிஞ்சுடும் தொரை”
“ம்ம்ம்! அப்ப நான் சொல்ற இடத்துக்கு நடந்து வந்துடுறீயா, உனக்கு பக்கம் தான்”
“ஆ! எந்த இடமுனு சொல்லுங்க..?”
“பசங்க ஐஸ் ஸ்கூல் இருக்குல, அது பக்கத்துல கார் ஸ்டாண்ட் இருக்கும் அதுல இருந்து மூனாவது வீடு”
“யாரு வீடு அது…? தெரிஞ்சவங்களை பாக்கப் போறோமா…?”
“இல்ல! அது வாத்தியார் வீடு, உனக்காக தான் சொல்லி இருக்கேன், என் கஸ்டமர் அந்த வாத்தியார், டாக்டருக்கு பரீட்சை எழுத சொல்லி தரறார் பிள்ளைகளுக்கு, உன்னைய நெதமும் ஒரு மணி நேரம் வர சொல்லி இருக்கார். நைட்டி டியூட்டினா முன்னாடி போயிட்டு ஹாஸ்பெட்டல் போயிடலாம்”என்று சட்டையை எடுத்து மாட்டினான்.
கண்ணாடியை பார்த்து கிளம்பிக் கொண்டு இருந்தவள், திரும்பி அவனிடம்”என்ன
விளையாடுறீங்களா தொரை..? எதாச்சும் நடக்குற விஷயமா நீங்க சொல்றது.?” என கோபமாக கேட்டாள்.
“ஏன் நடக்காத விஷயமுனு நினைக்குற..?”
“பின்ன, டாக்டர் படிக்க அஞ்சு வருசம் ஆகும். இது தேவையா…? ஏற்கனவே உங்க வயசு, அத விடுங்க எனக்கும் வயசு ஏறுது, நான் அம்மா ஆகனும் அது எனக்கு ரொம்ப முக்கியம், அதனால நீங்க நினைக்குறதை தூக்கிப் போடுங்க, எனக்கு உங்க கூட சந்தோஷமா இருக்கனும், ம்ம்ம்! பொண்ணோ, பையனோ ரெண்டுப் பிள்ளைங்க பெத்துக்கனும், நிம்மதியா நம்ம குடும்பத்தோடு இருக்கனும், ஏதோஅந்த லூசு குணா சொன்னானு நீங்க ஏன் நடக்காத ஒன்றை பத்தி யோசிக்குறீங்க..? எனக்கு டாக்டர் ஆசை இருந்துச்சு இல்லனு சொல்லல, ஆனா இப்ப என் மனசு முழுசும் நீங்க, நான், நம்ம எதிர்க்காலம் மட்டும் தான் இருக்கு தொரை, புரிஞ்சுக்கோங்க”என்றாள் விரிவாக மற்றும் தெளிவாக.
அவளையே பார்த்தப்படி இருந்தவன், சட்டை பட்டன்களைப் போட்டு முடித்து பின் அவள் அருகில் சென்றான்.
அவளை திருப்பி கண்ணாடி முன் நிற்க வைத்தப்படி, பின்னால் இருந்து அணைத்தவன்”இங்கரே! என் வயசை யோசிக்காம, என்ன பாத்தா எவ்வளவு வயசு மதிப்புடுவ தமயா..?”
அவனை கண்ணாடி வழியாக பார்த்தவள், “ம்ம்ம்! உண்மையை சொல்லனுமுனா நாற்பது தெரியல தொரை”என சிரித்து நிமிர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“உனக்கும் அப்பிடி ஒன்னும் வயசு தெரியல தான், இப்ப சொல்லு வயசுக்கும் உடலுக்கும் சம்பந்தம் எப்ப வருது.? இருபது ஆனா காலேஜ் போனும், இருப்பத்தைந்து ஆனா வேலைக்குப் போகனும், முப்பது ஆனா கல்யாணம் பண்ணனும், முப்பதைந்து ஆனா பிள்ளை வளர ஆரம்பிக்கனும், நாற்பதுக்குள் வாரிசு எண்ணிக்கை, சேமிப்பு, ஐம்பது ஆனா பிள்ளைங்க மேற்படிப்பு, அறுபதுக்குள்ள பிள்ளைங்க கல்யாணம்.. இதானே நம்ம வாழ்க்கை இப்ப நான் சொன்னது ஆம்பளைக்கு, உங்களுக்கு பதினெட்டில் ஆரம்பித்து நாற்பதில் எல்லாமே முடிஞ்சுடும், சரி! என்னைய, உன்னைய மாதிரி ஆளுக்கு எல்லாம் ஏன் இந்த வாழ்க்கை அமையல தமயா..?”
“அது நம்ம பிறப்பு, விதி தொரை”
“சரி! அதுவும் உண்மை தான், ஆனா இழந்த வாழ்க்கையை திருப்ப விதி மூலமா ஒரு வாய்ப்புக் கிடைச்சா..?”
“புரியல தொரை”அவன் அணைப்பில் நின்றவாரே.
“இங்கரே! நீ டாக்டர் படினு ஒரு வேகத்தில் சொன்னேன் தான், ஆனா அதப்பத்தி விசாரிச்சப்ப எனக்கு நிறைய விஷயங்கள் கிடைச்சது, அந்த வாத்தியார் என் கிட்ட கேட்ட மொத கேள்வி இது தான், நீ என்ன பந்தாவுக்காக பொண்டாட்டியை படிக்க வைக்கப் போறீயா..? இல்ல உன் பொண்டாட்டி மேல உள்ள மயக்கத்தில் பேசுறீயானு..”
தமயா அவனையே பார்த்தாள்.
“எனக்கு அவர் கேட்டதில் கொஞ்சம் அசிங்கமா தான் போச்சு, அப்புறம் நடந்ததை சொன்னேன். உனக்கு இருக்கும் திறமை, ஆசையை பத்தி, அப்ப தான் அவரு எனக்கு புரிய வச்சார்.”
“என்னனு புரிய வச்சார் தொரை?”
“இங்கரே! டாக்டருக்கு இன்னைக்கே பரீட்சை எழுதி நாளைக்குப் போக முடியாதுனு தான், நீட் பரீட்சைக்கு தயார் செய்யனும், அதுல கிடைக்குற காலேஜ் போனா அதுவும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போனா தான் செலவு கம்மினு”
“ம்ம்ம்! ஆமா”
“ஏன் தமயா, அவரு சொன்னதும் எனக்கு புரியுது இப்ப நமக்கு அது ரொம்ப பெரிய விஷயமுனு, நான் ஒன்னு சொல்லவா.?”
“சொல்லுங்க!”
“உனக்கு வாய்ப்பே கிடைக்கலைனு தானே கவலைப்பட்ட, இப்ப அந்த வாய்ப்பை நான் தரேன், அந்த வாத்தியார் கிட்ட கிளாஸ் போ, அந்த பரீட்சைக்கு இன்னும் மாசக்கணக்கு இருக்காம், நீ படி, அந்த பரீட்சையை எழுது, உன் திறமைக்கு என்ன தான் நடக்குதுனு பாப்போம்.”
தமயா அமைதியாக இருந்தாள்.
“இங்கரே! கண்டிப்பா என்னால மேனெஜ்மென்ட்ல காசு கட்டிப் படிக்க வைக்க முடியாது தான், ஆனா நீ ப்ரீ சீட் வாங்கினா அதுக்கு ஆகுற செலவை நான் பாத்துப்பேன், அது எளிது.”
“ஆனா!”என ஆரம்பித்தவளை..
“இங்கரே! மொதல உனக்கு திறமை இருக்கா, உன்னால அந்த பரீட்சையில் பாஸ் பண்ணி சீட் வாங்க முடியுமானு பாரு, ஒரு வேளை உன்னால முடியலனாலும் முயற்சி பண்ணி தோத்த சந்தோஷம் கிடைக்குமுல, நீ சொல்வீயே பணத்துக்கும், பதவிக்கும், தான் மரியாதைனு. திறமையும், படிப்பும் அது ரெண்டையும் தானா கொண்டு வரும், சீட் கிடைச்சா அப்புறம் அதப்பத்தி யோசிப்போம், ஐம்பத்தைந்து வயதில் ஒரு வாத்தியார் அந்த பரீட்சை எழுதி தன்னை சோதித்து வெற்றியும் வந்தது ஆனா அந்த சீட்டை வருங்கால இளைஞருக்கு விட்டுக் கொடுக்குறேனு சொன்னராம்(இது உண்மை நிகழ்வு), அந்த மாதிரி உன்னால முடியுமானு பாரு மொதல”
தமயா யோசித்தாள், அவன் சொல்கின்ற மாதிரி தன் திறமையை சோதிப்பதற்கு அவளுக்கும் ஆர்வமாக இருந்தது.
“ஆனா வீட்டுல தெரிஞ்சா எல்லாரும் என்ன சொல்வாங்க..?”என தயங்கினாள்.
“எனக்கு தெரிஞ்சா போதும், நீ நான் சொல்றதை மட்டும் செய், புரியுதா.?”
“ம்ம்ம்!”என்றாள் இருமனதாக..
“என்ன ஒரு தெளிவே இல்ல..?”
“நமக்கு குழந்தை, குடும்ப வாழ்க்கைப் பத்தி..”என முழித்தாள்.
“அது பத்தி என்ன யோசனை உனக்கு, அதுல ஒன்னும் மாற்றமில்லை, நம்ம வாழ்க்கையை வாழாம இருக்க முடியுமா…? அது பாட்டுக்கும் நடக்கும்” என அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன்..
“வயசை மனசுல ஏத்தாத, இன்னும் ஒரு இருபத்தைந்து வருசம் இருக்க மாட்டோமா என்ன..?”
“கேரண்டி இல்ல தான், ஆனா உங்க அன்பு, காதலோடு நீங்களும், நானும் சேர்ந்து இருந்தா கண்டிப்பா முப்பது வருசங்கள் தாண்ட வாய்ப்பு இருக்கு”
“காதலா…? அது எனக்கு வராதுங்க டீச்சர்..”
“யாரு சொன்னா..? டாப் ஹியரில் போறீங்க தொரை, ரோஸ், ரொமான்ஸ், யூத் டயலாக், செல்லம், புஜ்ஜி, டார்லிங், தனிக்குடித்தன வாழ்க்கை, சினிமா, பீச் இப்பிடி நிறைய காதலுக்கு மத்தியில் உங்க காதல் மழலையா இருந்தாலும் எனக்கு பொக்கிஷமானது தொரை” என திரும்பி அவன் மார்பில் ஒட்டி, இடுப்போடு அணைத்தாள்.
கீழே வந்த தமயா காலை உணவை சாப்பிட்டு கைக்கழுவினாள். லலிதா புதுப் புடவை கட்டிக்கொண்டு தயாராகி வந்தாள்.
“என்னத்த சந்தோஷம் தமயா, இந்த நாள் மனசளவில் நிம்மதியானது இல்ல”
“ஏன் அக்கா..?”
“எங்க கல்யாணம் எப்பிடி நடந்துச்சுனு தெரியுமுல, அப்பா வீடும் இல்லாம, இங்கயும் பல திட்டுகளை வாங்கி, அந்த ஒத்த வீட்டுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா..? ஏதோ இத்தன வருசம் ஓட்டிட்டேன், இப்பவும் அந்த வயசுல தெரியாம தப்பு பண்ணிட்டேனு நினைக்காத நாளில்லை”என கண்கள் கலங்கினாள்.
“கவலைப்படாதீங்க அக்கா, இப்ப தான் பிள்ளைங்க வளர்ந்துட்டாங்கள”
“ம்ம்ம்! ஆனா உன் கொழுந்தனார் இன்னும் மாறவே இல்லையே, கல்யாண நாளுக்கு கோயிலுக்கு போக கேட்டேன் இந்தா கிளம்பிட்டு இருக்கார், ஒரு பூ கூட வாங்கி தர மாட்டார், நானா கேட்டு வாங்கனும், நளன் மாமா கிட்ட போய் நான் பூ வாங்கி தாங்கனு சொல்ல முடியுமா..? நீயே சொல்லு”என மனதில் உள்ளதைக் கொட்டினாள் லலிதா தமயா கிடைத்ததும்.
“சரிக்கா! விடுங்க எல்லாம் மாறும்.”
“எங்க மாறப் போது, நான் செத்தா தான் மாறும், ஏதோ நீ எனக்கு ஆறுதலா கிடைச்ச, இல்லனா நான் பைத்தியமா ஆகிருப்பன், உன் குணம் தெரியாம நானும் புத்திக் கெட்டு பேசினேன் தான் முன்னாடி, எல்லாம் என் இயலாமை தான், எங்க நீ வந்ததும் நான் ஒதுக்கப் பட்டு போயிடுவேனு பயம் தான் இருந்துச்சு”
“அக்கா! பழசை பேசி நேரத்தை வீணடிக்காம போங்க மொதல இல்லனா என் கொழுந்தன் கல்யாண நாளையே மறந்துட்டுப் போயிடுவார்”என சிரித்தாள்.
“அதுவும் சரி தான், நான் கிளம்புறேன்!” என வேகமாக சென்றாள்.
சரசு”எங்க புதுப்பொண்ணு போல கிளம்பிட்ட..?”
“இல்லத்த! கல்யாண நாள் அதான் கோயிலுக்கு போகலாமுனு கிளம்புறோம்”என்றாள் லலிதா சலித்தவாறு.
“ம்ம்ம்ம்! எது நீ ஓடி வந்த நாளா.?” என்றார் நக்கலாக.
“அத்த! என்ன பேசிட்டு இருக்கீங்க..? ஏதோ பெரியவங்கனு நானும் அமைதியா இருக்கேன், அவங்களா தான் ஓடி வந்தாங்களா..? ஏன் உங்க புள்ள அழைச்சுட்டு வந்தாரு..? தைரியம் கொடுத்து தானே கூட்டிட்டு வந்தாரு, சரி, அது நடந்து எத்தன வருசம் ஆகுது, இப்ப உங்க பேரப்பிள்ளைங்களே வளர்ந்து வந்துட்டாங்க இன்னுமா அத சொல்லி காட்டனும், முடிஞ்சா ஆசிர்வாதம் பண்ணுங்க, இல்லையா அமைதியா இருங்க”என்றாள் தமயா வேகமாக.
“அதானே பாத்தேன், புதுசா வந்தவ வாயை தொறக்கலையேனு, என்ன நளனா உன் பொண்டாட்டி பேச விட்டு வேடிக்கைப் பாக்குறீயா..?
“அண்ணே, இப்ப எல்லாம் அண்ணி பேசினா அமைதியாகிவாரு”என்றான் சாமி நக்கலாக.
“ஆமா! ஆமா! அது சரி நீ என்ன இப்ப எல்லாம் அண்ணிக்கு வக்காலத்து வாங்குற..? ஏன் அவங்க எதும் புடவை, காசு தந்தாங்களா..? இல்ல அவங்களை நைஸ் பண்ணா தான் இந்த வீட்டுல இருக்க முடியுமுனா?”
“டேய்! அதிகமாக பேசாம கெளம்பு, அம்மா! அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு, நீ எப்ப பாரு பழசையே பேசாத. இங்கரே! நீ கெளம்பு நேரமாகுது” என்று புல்லட்டை எடுக்க சென்றான்.
லலிதாவை கண் காட்டிய தமயா அவளை போகுமாறு சொல்லிவிட்டு, அவளும் நடந்தாள்.
***
மருத்துவமனையில் தமயா தன் தோழிகளிடம் அனைத்தும் சொல்லி முடித்தப் போது, அவர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
“என்னது நீட் பரீட்சைக்கு படிக்கப் போறீயா..? கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருக்குடி”என்றாள் தங்கம்.
“ஆமாடி! ஆனாலும் பரவாயில்லை நைட் சுகத்துக்காக பொண்டாட்டி கிட்ட பல வாக்குறுதிகளை கொடுத்துட்டு காலையில் கையை தொடைச்சுட்டு போற புருசனுங்க மத்தியில் நளன் அண்ணா வித்தியாசம் தான்” என்றாள் நதியா.
“சரியா சொன்ன, அவரு சொன்ன மாதிரி எழுதி தான் பாரே, என்ன தான் நடக்குதுனு பாப்போம்.”என்றாள் தங்கம்.
“ம்ம்ம்! எனக்கும் அதான் தோணுது.”
மதிய உணவை முடித்தனர்.
தமயா தன் ஃபோனில் உள்ள போட்டோக்களை சிஸ்டத்தில் போட்டு ஏதோ தேடிக்கொண்டு இருந்தாள்.
தங்கம் வர, தமயா அருகில் அமர்ந்து சிஸ்டத்தை பார்த்தாள்.
“இவனா…?”என கேட்டாள் தங்கம், ஸ்கீரினில் தெரிந்த சாமியை கண்டு.
“ஏன்டி! இவரை உனக்கு தெரியுமா..?”
“ம்ம்ம்! இவன் பொண்டாட்டி வட்டிக்கு பணம் கொடுத்துட்டு இருக்கா”
‘என்னது லலிதா அக்காவ..?’என எண்ணி, “என்னடி சொல்ற..?”என்ற வேகத்தில் அழுத்தியதில் அவள் ரெடிப் பண்ணி வைத்திருந்த போட்டோ வந்தது.
“ஆமான்டி!”என தங்கம் அந்த போட்டோவை பார்க்க, “இந்த பொண்ணு யாருடி..?”
“என்னடி உளருற..? இவர் தொரையோட தம்பி, அவங்க அவரோட வைய்ப், நீ வேற யாரையோ சொல்றீயா..?”
“அடியேய்! இந்த ஆளு தான்டி. நாங்க நாத்தனாருக்காக கடன் வாங்கினோமுல அந்த கடனை அடைக்க, சொந்த வீட்டை மேலயும், கீழயும் வாடகைக்கு விட்டுட்டு, இப்ப ஒரு ரூம் மட்டுமே இருக்க வீடு பாத்து தங்கி இருக்கோமுனு சொன்னேன்ல, அந்த வீட்டுக்கு மேல தான் இவரு பொண்டாட்டி இருக்கு, ஒரு பையன் கூட இருக்கான்டி ஏழு வயசு இருக்கும், உன் கொழுந்தனு சொல்றீயே இவரு அங்க ராத்திரிக்கு வருவார், பகலிலும் இருப்பார். நான் பேசியதில்லை, அங்க ஆறு வீடு இருக்கு, அதுல இருக்கவங்க சொன்னாங்க அந்த பொம்பளை வட்டித் தொழில் பாக்குதுனு. நான் வட்டியானு அந்த பக்கமே திரும்புறதில்லை”
தமயாவிற்கு அதை கேட்டதும் அதிர்ச்சியானது.
மாலை வாத்தியாரை பார்த்துவிட்டு, அடுத்த நாளில் இருந்து கிளாஸிற்கு வருவதாக சொல்லிவிட்டு புல்லட்டில் கிளம்பினர் இருவரும்.
நளன் பேசியதற்கு அவளும் பதில் சொல்லிக் கொண்டே வந்தாள். ஆனால் சாமி பற்றிக் கூறவில்லை.
இரவு வீட்டில் ரொம்ப நேரம் யோசித்த பிறகு, படுக்கப் போகும் போது அனைத்தையும் நளனிடம் கூறினாள்.
அவனுக்கு அதிர்ச்சியை தாண்டி நம்பவும் முடியவில்லை.
“தொரை! இது தங்கம் சொன்னது, எதுக்கும் நீங்க விசாரிங்க மொதலில் எந்தளவு உண்மைனு, அவருக்கு தெரியாம”
நளனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
சங்கர், ஜோதி பற்றி யோசித்தான்.
அடுத்த நாள் விசாரிப்பதற்கு சென்றான் முதல் வேலையாக. தமயாவை கூட கிளாஸ் முடித்து பஸ்ஸில் போகுமாறு சொல்லிவிட்டான்.
இரவு நேரம் கழித்து வந்த தொரை, ரொம்ப அசதியாக இருந்தான்.
தமயா அவர்கள் அறையில் சாமி பற்றி கேட்க, “இங்கரே! அவன் அவனுக்கே தெரியாம பெரியப் பிரச்சனையில் மாட்டி இருக்கான்”
“புரியல!”
“அந்த பிள்ளை இவனுக்கு பொறந்தது இல்ல, ஆனா இவனை காசுக்காக அந்த பொண்ணு, அவ அண்ணன் ஏமாத்தி வச்சு இருக்காங்க”
“இவர் கிட்ட ஏது காசு..?”
“பரதேசி நாய் வட்டிக்கு பணம் நிறைய வருமுனு ஆசைப்பட்டு நண்பர்கள் மூலமா அங்க கொடுத்துட்டு, அந்த பொண்ணு கிட்ட போயிட்டு வரான், எனக்கு இப்பிடி ஒரு தம்பி”