“இவனை தான் விரும்புறேனு இப்ப சொல்றவ என்னதுக்கு சுந்தரை கட்டிக்க சம்மதம் சொன்ன..?” என்ற கேள்வி வேகமாக வந்தது ஒரு பெண்ணிடம் இருந்து, அது வேறு யாருமில்லை, தர்மாவின் மனைவி சாந்தியே தான்.
விஜி”மாமி!” என தடுமாறினாள்.
“என்ன மாமி..? நான் அப்பவே இந்த மனுசன் கிட்ட சொன்னேன், படிக்க வச்சதோட நிறுத்துங்க, இந்த வேலைக்கு அனுப்புற சங்கதி எல்லாம் வேணானு, எங்க அக்கா பொண்ணை படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பி இருக்குமோனு ஊரு மெச்சிக்க எல்லாம் கூத்தடிச்சுதுங்க, இந்தா எவனையோ புடிச்சு இருக்குனு ஊரு முன்னாடியே சொல்லிட்டாளா” என்றார் அவர் மீண்டும்.
“நல்லா கேளுங்கக்கா, இன்னுமே உரைக்குற மாதிரி கேளுங்க” என ஏத்தி விட்டாள் விஜயா, ராமுவின் மனைவி.
“விஜி! அவங்க கேக்குறதும் நியாயம் தானே, சுந்தரை கட்டிக்கிறேனு சொல்லிட்டு இப்ப இவனை கைக்காட்டுற..? பதில் சொல்லு” என ராமு சீறினார் அக்கா மகளிடம்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் தவித்தாள், அவள் சம்மதம் சொல்லும் போது ஜனாவின் காதல் நனவாக அமையுமென்று நினைக்கவே இல்லையே!
“மாமா சார்! அவ கிட்ட கேட்டா முடிவுப் பண்ணீங்க இந்த கல்யாணத்தை, முடிவுப் பண்ணிட்டு தானே கேட்டீங்களே! இப்ப வந்து பதில் சொல்லுனு கேட்டால் என்னனு சொல்லுவா, உங்களுக்கு எல்லாம் அவள் அடிமைப்பெண் போல, நீங்க என்ன சொன்னாலும் கேப்பானு தைரியம், அதானே…?” என இடையில் புகுந்தாள் ரெனி.
“ரெனி!” என விஜி தடுமாறினாள்.
ஜனா பேச எண்ண, விஜி ஏற்கனவே பார்த்த பார்வையில் அமைதிக் காத்தான்.
“நீ சும்மா இருடி, போன் பண்ணி உன் அம்மாச்சி கல்யாணம் முடிவுப் பண்ணி இருக்காங்கனு சொன்னாங்க, நீயும் மறுப்பே இல்லாம தலை ஆட்டின, ஆமா சார்! அப்ப இவங்க காதல் பற்றி அவங்களே அறியல, இப்ப மனசு விட்டு சொல்லிட்டாங்கள, புரிஞ்சு ஒதுங்கிகோங்க” என மீண்டும் விஜிக்கு பதிலாக பேசினாள் ரெனி.
“ஓ! நாங்க ஒதுங்கனுமா..?” எனக் கேட்டார் தர்மா கண்கள் சிவக்க.
விஜி உடனே”மாமா! அவ ஏதோ தெரியாமல் பேசுறா, ப்ளீஸ் நீங்க தப்பா நினைக்காதீங்க, அது வந்து…” என ஆரம்பித்தவளிடம்,
சாந்தி”என்னதுக்கு இப்ப நீ இழுத்து நாடகம் போடுற விஜி, இப்ப முடிவா சொல்லு சுந்தரை கட்டிப்பீயா மாட்டீயா…?” எனக் கேட்டார் ஒரே முடிவாக.
முத்தையா மனதில் தன் மகளை நிற்க வைத்து மற்றவர்கள் கேள்விக் கேட்குற நிலை வர தானே காரணம் என நொந்தார்.
அதனால் கோபம் வர, “அவ மனசுல இருப்பதை தான் சொல்லிட்டாள மறுபடியும் கேட்டு ஏன் கஷ்டப்படுத்துறீங்க…?” என்றார் வேகமாக.
“ஓ! நாங்க கஷ்டப்படுத்துறோம், நீங்க அப்படியே தங்க தட்டில் தாங்கினீங்க பாருங்க உங்க பொண்ணை, அன்னைக்கு பொண்டாட்டி, புள்ளையை விட்டுப் போனதால் தான் இவங்க பொறுப்பு வீட்டுக்கு வாழ வந்த எங்க தலையிலும் விழுந்துச்சு, இப்ப எந்த முகத்தை வச்சுட்டுப் பேச வரீங்க..?” என முத்தையாவை சாடினாள் விஜயா.
பெரியவர் ஒருவர் தர்மா ஊர்க்காரர் “ஏம்மா! சும்மா அந்த மனுசனையே கொற சொல்லாதீங்க, இந்த பொண்ணு காதுக் குத்து, வயசு வந்தது, சடங்குனு எல்லாத்துக்கும் வந்தவனை உன் புருசனும், இந்த தர்மாவும் மகளை பாக்க விடாமல் அக்கா கூட சேந்து துரத்தி விட்டாங்க, இப்ப ஒரேதா பாரத்தை சுமந்தோமுனு சொல்லுறீய, இது சரியில்லை” என்றார்.
“தர்மா! இப்படி அடாவடியா பேசாத, நியாயமுனு ஓன்னு இருக்குல, ஆயிரமாகாட்டும் அவர் தான் அப்பா” என்றார் ஒருவர்.
“அதான் அந்த பொண்ணு சொல்லிட்டுல இந்த தம்பியை விரும்புறேனு தர்மா, அடுத்து என்னனு பேசலாம்..” என்றார் மற்றொருவர்.
“இது என் வீடு, நான் வச்சது தான் சட்டம், என் தம்பியை தான் என் அக்கா பொண்ணு கட்டுவாள், புடிக்குதோ புடிக்கலையோ எவன் வந்தாலும் வெட்டிப்போடுவேன்” எனக் கத்தினார் தர்மா கோபத்தில் அனைவரையும் சாடியவாறு.
விஜி விக்கித்துப் போய் நின்றாள், எதிர்க்கவும் முடியாமல், விலகவும் முடியாமல்.
“எங்க வெட்டுடா பாப்போம், நானும் போனா போது, ஒரு தடவை ஆத்திரப்பட்டு தான் காலம்பூராவும் அடங்கிப் போற சூழ்நிலை வந்துட்டுனு பொறுமையா போனால் நீ ரொம்ப ஆட்டம் போடுற..?” என முத்தையா அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி எறிந்தார் தர்மா மேல்.
கடைசியாக விஜி சடங்கிற்கு வந்தவரை மங்கை தகாத வார்த்தை எல்லாம் சொல்லி பேச, கூடவே தம்பிகளும் எகிறிக் குதித்தனர், அதனால் பொறுமையாக போனார் பெண்ணை பார்க்க கூட முடியாமல்.
ஆனால் இன்று மகளை தாய்மாமனே ஆனாலும் இப்படி கட்டாயப்படுத்துவதை காணும் போது உள்ளுக்குள் அமைதி காத்த மனம் வெகுண்டது.
மங்கையும் சரியான மனநிலையில் இல்லை, விஜியின் அப்பா ஸ்தானத்தில் அவளை பாதுகாக்க நினைத்தார் முத்தையா.
தர்மா நாற்காலி படவும் பதிலிற்கு அவரும் சீறிக் கொண்டு வந்தார்.
முத்தையா தைரியமாக நின்றார்”வாடா!” என்று கூறிக்கொண்டு, தர்மா ஓடிவந்து ஒரு கையை ஓங்கவும் அதை அப்படியே மடக்கி சுற்றி விட்டு தரையில் தள்ளினார் ஒற்றை அடியில்.
சுந்தரும், ராமுவும் அடுத்து வர, அவர்களை அடித்த அடியில் ஆளுக்கொருப் பக்கம் தரையில் படுக்க வைத்தார்.
வேற எவரும் அவர்களுக்காக இடையில் நுழையவில்லை, தர்மா பேசியது அப்படி. தானே ராஜா தானே மந்திரி என்பது போல் பேசியதை எவரும் விரும்பவில்லை.
“இப்ப என்னடா ஊருல உலகத்தில் இல்லாத ஒன்னை நான் செய்யல, என் பொண்டாட்டி என்னோட வரேனு சொல்றா, அவளை என்னோட அனுப்புடானு சொன்னா அதிகாரம் பண்ணுற , இவ என் பொண்ணு, எனக்கும் இவளுக்கும் ஆயிரம் இருக்கும், அதுக்காக அவ வாழ்க்கையில் நீ முடிவு எடுப்பீயா…? அதுவும் அவளுக்கு புடிக்காத ஒரு வாழ்க்கையை, தொலைச்சுப் புடுவேன் இவன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா..?” என எட்டி உதைத்தார் சுந்தரை.
அவரின் கோபம் அந்த ஐயனாரின் ஆவேசத்துடன் கலந்து காட்சியளித்தது.
சாந்தியும், விஜயாவும் கணவர்களை எழுப்பி விட்டனர்.
விஜி மனம் பொங்கியது உடனே அவர் முன் வந்து”நீங்க செய்றது சரியில்லை, அவங்க தான் என்னைய வளர்த்தது, சாப்பாடு போட்டது, நீங்க யாரு..? எதுக்கு இங்க வந்து நின்று பேசிட்டு இருக்கீங்க…?” என்றாள் வேகமாக வெறுத்தவாறு.
அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் முத்தையா.
“நான் உன்னை வளர்க்கவில்லை தான், அதுக்காக நான் உன் அப்பன் இல்லைனு ஆகுமா..? நான் யாருனு சுயபுத்தி மாறினாலும் உன் அம்மாக்கு தெரியுது. ஏன் உனக்கு தெரியாதா..? நான் தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக என்னைய கையாலாகாதவனு நெனச்சுட்டீயா..?
என்னமோ உன் பேருல இடம் இருக்குனு உன் மாமன் வசனம் பேசினானே அது யாரு சம்பாரிச்சு வாங்கினது, நான்.. நான் சம்பாரிச்சது அதில் பங்குப் போட இவனுங்க யாரு..? தம்பிக்கு கட்டி வைக்குறானாமே, அடி செருப்பாலே. டேய்! அன்னைக்கு உன் தங்கச்சி தான்டா என் கூட வர ஆசைப்பட்டா நானா அவளை கட்டாயப்படுத்தி அழைச்சுட்டுப் போகல, ஆனா நீ என் பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவீயா..?
தாய்மாமன்கள் தானே சண்டைப் போட்டாலும் புள்ளை, பொண்டாட்டி பாதுகாப்பா இருக்காங்கனு ஒரு நம்பிக்கை இருந்தது, ஆனா நீங்க பொண்டாட்டியை பேச விட்டு வேடிக்கைப் பாக்குறீங்க, நான் தான் கூட்டிட்டுப் போறேனு பலமுறை கெஞ்சினேன்டா எப்ப பாரு தப்பு பண்ணிட்டேனு சொல்லியே அடக்கி வச்சீங்க பேச முடியாமல், நானும் தப்பை சரிப் பண்ண எவ்வளோ முயற்சி செய்தேன் ஆனால் உங்களுக்கு என்னைய பழிவாங்கனும் அதானே, போதுமுடா பல வருசமா பழிவாங்கிட்டீங்க,
இப்ப என்ன நீங்க சோறுப் போட்டு, வளர்த்தீங்க அதானே அதுக்கு அந்த இடத்தை வச்சுகோங்க, என் பொண்ணு, பொண்டாட்டியை நான் கூட்டிட்டுப் போறேன், பாவிகளா..” என ஆதங்கத்தோடு முடித்தார்.
விஜி”நான் வர முடியாது, உங்க கூட வரமாட்டேன்” என்றாள் கன்னத்தில் கைவைத்தவாறு அவரை முறைத்துக் கொண்டே.
“ஏய்! போதுமுடி நீயும், உன் அப்பனும், ஆத்தாளும் ஆடும் நாடகம் எல்லாம். மரியாதையா போயிடுங்க இந்த வீட்டில் இருந்து, அந்த ஆளு என் புருசனை போட்டு அடிக்குறார் எவ்வளவு தைரியம், இது எங்களுக்கு உரிமையான வீடு, உன் அம்மா அப்பவே புருசன் கூட போய் வாழ்ந்திருந்தால் கண்ட நாயும் இப்ப கை வைக்குமா…..?” என்றார் சாந்தி.
“உன் அம்மா பைத்தியக்காரி அவளை நாங்க பாத்துக்கனுமுனு தலை எழுத்தா…? அந்த கெழவி இருந்தவரை ஏதோ ஓட்டுனுச்சு, இனியும் இந்த வீட்டில் உரிமைக் கொண்டாட முடியாது வெளியில் போங்கடி” என மங்கையை இழுத்துட்டு வந்து முத்தையா நின்ற இடத்தில் தள்ளி விட்டாள் விஜயா.
மங்கையை விழாமல் பிடித்தனர் முத்தையா ஒரு பக்கமும், விஜி மறுப்பக்கமும்.
“மாமி! ஏன் இப்படி பண்றீங்க..? அம்மா உடம்பு முடியாதவங்க” எனக் கேட்டாள் தாங்க முடியாமல் விஜி.
“எங்களுக்கு அதை பத்தி கவலையில்லை, இனி இந்த வீட்டில் இடமில்லை உங்களுக்கு” என்றார் சாந்தி.
“என்ன இருந்தாலும் நான் இந்த வீட்டில் வளர்ந்தவள் அந்த நன்றிக் கடனுக்காக தான் அமைதியா இருக்கேன் மாமி” என கண்களை துடைத்தாள்.
அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்த தாத்தா சிதம்பரம், விஜியிடம்”ஆயா! நீ போ, உன் அம்மாவ கூட்டிட்டுப் போ, உன் அம்மாச்சி இல்லாத இந்த வீட்டில் இனி உங்களுக்கு மரியாதை கிடைக்காது, நல்லவரோ, கெட்டவரோ அவரோட போய் வாழுங்க” என கூறிவிட்டு துண்டை வாயில் வைத்தவாறு ஓரமாக அமர்ந்தார், மனைவி இறந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தவர்.
அவர்கள் எல்லாம் வீட்டிற்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டனர்.
ஒருவர்”அப்புறம் என்ன முத்தையா, உன் பொண்ணு, பொண்டாட்டியை கூப்புட்டு போ!” என்றார்.
விஜி மனமோ அவர் கூட மறுத்தது.
“இல்ல, நான் வேலைப் பாக்குறேன் அம்மாவை நான் பாத்துப்பேன், யார் கூடவும் நாங்க போகல!” என்றாள்.
ஜனா அவள் அருகே வந்து”விஜி! அப்பா கூட போக விருப்பமில்லைனா, என் கூட வா, நான் பாத்துக்குறேன் உன்னையும் அம்மாவையும்” என்றான்.
அமர்”அடேய்! அவ அப்பா ராஜ்கிரண் ஸ்டைலில் அடிச்சதை பார்த்துமா இந்த கேள்வியை கேக்குற” என புலம்பினான் ரெனி அருகே நின்று.
உடனே முத்தையா நண்பர்”தம்பி! இந்த வீடு தாய்மாமன் வீடு இவங்க இருந்தாங்க, அதுக்காக அடுத்தவங்க வீட்டிற்கு எல்லாம் அனுப்ப முடியுமா..?”
என்றார்.
“இல்லங்க! இவ எப்படி தனியா அம்மாவோடு தங்க முடியும்..? என் வீட்டில் அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் இருக்காங்க, நல்லா பாத்துப்பாங்க” என்றான் அவளை தனியா விடுவதற்கு மனமே இல்லாமல்.
“ஏன்பா! உன்னைய கல்யாணம் பண்ணா தான் அந்த புள்ளை உரிமையா வர முடியும், சும்மா! விவஸ்தை இல்லாத புள்ளையா இருக்கீயே நீ” என்று சிரித்தார் மற்றொருவர்.
“அப்பனா கல்யாணம் பண்ணிக் கொடுங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றான் ஜனா விஜியை கூட்டிட்டு போகும் ஆர்வத்தில்.
முத்தையா முறைக்கவும், ஜனா ‘அப்படி என்ன தப்பா கேட்டோம்’ என முழிக்கச் செய்தான்.
“ஏன்பா! முத்தையா அதான் உன் பொண்ணுக்கு உன் கூட வர விருப்பமில்லையே, பேசாம ஒரு தாலியைக் கட்ட சொல்லி அந்த புள்ளையோடு அனுப்பிட்டு, உன் பொண்டாட்டியை நீ கூட்டிட்டுப் போ, ஊரறிய ரெண்டுப் பேரும் விரும்புறோமுனு சொல்லிட்டாங்க, இனி போய் புதுசாவ மாப்பிள்ளை பாக்கப் போற. இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்க வீட்டுக் கதை முடியாமயே போயிட்டு இருப்பது.” என்றார் உறவினர்.
விஜி”இல்ல! இல்ல! அம்மாவை தனியா அனுப்ப முடியாது, அய்யோ! ஜனா தயவு செய்து நீங்க கிளம்புங்க, நீங்க இதுவரை செஞ்சதே போதும். எனக்கு தெரியும் என்னைய மேனெஜ் பண்ணிக்க” என சீறினாள் ஜனாவிடம்.
முத்தையா”தம்பி! உங்க பேரு என்ன…?” என்றார்.
“ஜனகவேல்! சார்”
“ம்ம்ம்! உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க”
ஜனா கூறவும், அமர்”உங்களை தெரியுமுங்க இவன் அப்பாக்கு” என வெளிநாட்டு வேலைப் பற்றி கூறினான்.
“ஓ! மாரிமுத்து பையனா நீங்க..?” என்றார்.
“ம்ம்ம்!”
“சரி!” என்றவர், ஜமுனாவை அழைத்தார்.
அவர் வர, “உன் தாலியைக் கொடு” என்றார் மெல்ல அவருக்கு மட்டுமே கேட்கும் வண்ணம்.
அவரும் சற்றும் யோசிக்காமல் கழட்டிக் கொடுத்தார்.
“இந்தா தம்பி! இதை என் பொண்ணு கழுத்தில் போட்டு கூட்டிட்டுப் போங்க” என்றார்.
“சார்!” என தடுமாறினான்.
“உண்மை தான் தம்பி! மாரிமுத்து பத்தி தெரியும், அவரோட பையன் நீங்கனா எனக்கு சந்தேகமே தேவையில்லை, ஊரறிய உங்களை புடிக்குதுனு சொல்லிட்டா அதுக்கு பொண்டாட்டியா உரிமையா கூட்டிட்டுப் போங்க, என் கூட வர தான் அவளுக்கு விருப்பமில்லை, புடிச்சவனோடு போகட்டும், இவனுங்க மறுபடியும் சீண்டாம இருக்கனுமுனா உங்க பாதுகாப்பு இருந்தால் நல்லது, அது புருசனாவே இருக்கட்டுமே”
விஜி”ஜனா! வேணாம், அதும் இவங்க தாலி..? இதுவே என் அம்மா இடம்.. நோ! எனக்கு யாருமே வேணாம்.. வா அம்மா” என மங்கையின் கையைப் பிடித்து இழுத்தாள்.
மங்கை”ஏய் விஜி, இந்த தாலி வேணாமுனா இந்தா என் தாலி” என சட்டென்று கழட்டியவர் ஜனா கையில் கொடுத்தார் என்னனே தெரியாமல்.
“அம்மா!” என பதறியவள் கையில் இருந்த தாலியை அவர் கழுத்தில் போட போனாள்.
“இல்லடி! இது எதுக்கு இனிமே, நான் அப்பா கூட தானே இருக்கேன், இங்க பாரு” என முத்தையா கையைப் பிடித்துச் சிரித்தார் மங்கை.
விஜிக்கு தலையே சுற்றியது, “அய்யோ கடவுளே!” என அழுதாள்.
ஜனா அவளின் கையில் இருந்த தாலியை வாங்கி அவளின் கழுத்தில் போட்டுவிட்டு,
“சாரி விஜி! வேற வழி தெரியல, சார்! இனி விஜி என் பொறுப்பு.. அவ அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க” என அவளை வேகமாக அழைத்துச் சென்றான் காரை நோக்கி.
“ஜனா! என்ன பண்றீங்க..? அம்மா! அம்மாவை விட்டு….” என விஜி புரியாமல் கையை உதறினாள்.
“விஜி! உன் அம்மா சரியான இடத்தில் தான் இருக்காங்க, நீ வா, உன் அப்பா பாத்துப்பார்.” என கார் கதவை திறந்தவன் உள்ளே தள்ளிவிட்டு அவனும் அமர்ந்தான்.
அமர், ரெனி கூடவே வந்ததால் அவர்களும் காரில் ஏறினர்.
“அமர்! நீ கிளம்பு” என்றான் நண்பனிடம்.
“ஜனா! என்னைய விடுங்க, ப்ளீஸ்..”
என கார் கதவைத் திறந்தாள்.
“ப்ளீஸ் விஜி! நான் உன்னைய சந்தோஷமா பாத்துக்குறேன், நீ அமைதியா இரு, அம்மாவும் நல்லா இருப்பாங்க, பாத்தீல உன் அப்பா பக்கத்தில் அவங்க சந்தோஷமா நிக்குறாங்க” என சமாதானம் செய்தான்.
கார் வேகமாக சென்றது.
“டேய்! என்னடா பண்ணிட்டு இருக்க..? என்னைய ஏன் இப்படி படுத்துற..? நான் உன்னைய புடிச்சு இருக்குனு சொன்னது ஒரு தப்பா..? இல்ல! உன்னைய புடிக்கவே இல்லை, சத்தியமா புடிக்கலைடா..” என அவனை அடி வெளுத்து வாங்கினாள் கோபம் அடங்காமல், ஜனா தடுத்தது எல்லாம் காற்றில் தான் போனது.