ஜனாவிற்கு சற்றுக் கோபம் வர, அதை அவளிடம் காட்டுவதற்கு மனமில்லாமல் திரும்பி பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாக சென்றான், சட்டென்று பைக் வேகமாக செல்லவும் விஜி பிடிமானத்திற்காக ஜனாவின் தோளினைப் பிடித்தாள்.
அவளின் கை தோளில் படவும் நிதானத்திற்கு வந்தவன் பைக்கின் வேகத்தை குறைத்தான்.
விஜி கையின் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்து மெதுவாக அவனின் தோளில் இருந்து எடுத்தாள்.
அவள், ஒவ்வொரு விரல்களாக பிரித்து கையை எடுத்தப் போது ஜனாவிற்கு ஏதோ சில உணர்வலைகள் தாக்கியது, தான் எதையோ இழந்துக் கொண்டிருக்கோம் என தோன்றவும் தன் மனதையே வெறுத்தான்.
வீட்டிற்கு சென்றதும் விஜி பகலில் படுத்து தூங்கிய கட்டிலின் அதே பக்கம் சென்று படுத்துக் கொண்டாள்.
இதே அறையில் இன்று இப்படி ஒரே கட்டிலில் இருவரும் படுத்து உறங்குவார்கள் என அவன் கற்பனையிலும் நினைத்ததில்லை….
ஆனால் அது நடந்துவிட்டது. ஜனா அதை எண்ணியவாறு நித்திரைக்குச் சென்றான்.
அடுத்து வந்த ஒரு வாரமும் இருவரும் பார்த்துக் கொள்வதே அரிதாக இருந்தது.
விஜி காலையில் சென்றால் நள்ளிரவில் தான் வருவது. காலையில் ஜனா சென்ற பின் தான் எழுவாள், எழுந்து கிளம்பி நேராக ஆபிஸ் சென்றதும் மதியம் தான் சாப்பிடுவாள், மாலை ஒரு டீ குடிப்பதோடு சரி.. இரவு தேவை என்றால் சப்பாத்தி ஆபிஸ் கேண்டினில், இல்லை என்றால் எம்டி ஸ்டொமக் தான்.
ஜனா மெசேஜில் எது பேசினாலும் பதில் இருக்காது. ஜனாவை பிக்அப் செய்ய வரவேண்டாம் என முதல் நாள் ஒரு மெசேஜ் போட்டதோடு சரி.
ஜனா ரெனியிடம் கேட்டு தான் அவளை பற்றி எதையும் தெரிந்துக் கொள்வது.
இதற்கிடையில் விஜி தன் தாயுடன் பேச வேண்டுமென்று தோன்றியதால், ரெனி மூலமாக முத்தையா ஃபோனிற்கு தொடர்புக் கொள்ள செய்தாள்.
அவரின் ஃபோன் நம்பர் கூட, இப்பொழுது தான் ஊரில் ஒருவர் மூலமாக வாங்கினாள்.
ரெனி முத்தையாவிடம் பேசி மங்கையை பேச சொல்ல, அவர் வந்ததும் விஜியே பேசினாள்.
“அம்மா! எப்படி இருக்க..?”
“விஜிம்மா, இங்க உன்னைய மாதிரியே ஜெய் இருக்கான் தெரியுமா..? உன் அப்பாக்கு தெரியாம எனக்கு சாக்லேட் தரான் விஜி, எப்ப பாரு பெரியம்மானு என் கூடவே சுத்துறான். நீயும் வா நம்ம சேந்து விளையாடலாம். ஆமா நீ எப்ப வர..?” என்றார் அவர் மொழியில்.
“ம்ம்ம்! நீ அதிகமா சாக்லேட் சாப்புடாதம்மா, மாத்திரை சாப்பிடுறீயா..?”
“ம்ம்ம்! அது எல்லாம் உன் அப்பாவை அழைச்சுட்டுப் போனவ தரா தான். எனக்கு இங்க அவளை மட்டும் தான் புடிக்கல விஜிம்மா, நீ வரும் போது எனக்கும் ஜெய்யுக்கும் மட்டும் ஐஸ் க்ரீம், சாக்லேட் வாங்கிட்டு வா, அவளுக்கு எல்லாம் வேணாம்..”
“சரிம்மா! நான் ஃபோனை வைக்கிறேன் பத்தரமா இரு” என ஃபோனை கட் பண்ணினாள்.
அவள் கண்களில் நீர் வழிந்தது. ரெனி”என்னடி ஆச்சு…?” என்றாள்.
“ஒன்னுமில்ல! அம்மா அங்க போய் எப்படி இருக்காங்களோனு ரொம்ப கவலையா இருந்துச்சு, ஆனா ஸி இஸ் ஹேப்பிடி. எனக்கு புரியவே இல்ல, எப்படினு..”
“ஹேய்! எப்படினா..? இது என்ன கேள்வி..? அவங்க ஆழ்மனசுல உன் அப்பா கூட சேந்துடனுமுனு ஆசை இருந்திருக்கு ஆனா ஒரு கட்டத்திற்கு மேல் உன் மாமானுங்களை எதிர்க்க முடியல அதான் சைலண்டா மனசுக்குள்ளே போட்டு புதைச்சுட்டாங்க, அது இந்த நிலையில் அவங்களை மீறி வெளிவருதுடி, விடு அவங்களாச்சும் ஹேப்பியா இருக்கட்டும்” என ஒரு இக் வைத்தாள் இறுதியில்.
அவளை ஒரு கோபப் பார்வை பார்த்தாள் விஜி.
“சும்மா என்னைய முறைக்காத, அதான் உண்மை, அங்க உன் அம்மா ஹேப்பி, ஆனா இங்க, நீயும் ஹேப்பி இல்லை, ஜனாவும் ஹேப்பி இல்லை, ஆக மொத்தக் குடும்பமும் நோ ஹேப்பி மூமென்ட்..”
“அதுக்கு நான் காரணம் இல்லை ரெனி”
“ஆமா! நீ காரணம் இல்லை தான், ஆனா ஜனா யாருக்காக இதை எல்லாம் செய்தார், ரோட்டுல போற எவளோ ஒருத்திக்காக இல்லை. அதை புரிஞ்சுக்கோ. சரி! நீ இப்படி ஒரு வேளை மட்டுமே சாப்புட்டு யாரை பழிவாங்குற, ஜனாவையா..? அது சரியா தான் நடக்குது, அமர் போன் பண்ணினார்.
ஜனா முன்னாடி மாதிரியில்லை ரொம்ப வெக்ஸ் ஆகிட்டான். வொர்கில் நோ கான்சென்ரேசன், கொஞ்சம் விஜி கிட்ட பேசுனு சொன்னார், என் ப்ரண்டுக்கு ஏதாச்சு ஆனா நான் அப்புறம் சும்மா இருக்க மாட்டேனு சொல்லி வைனு என்னைய மிரட்டுறார், ஏனா நீ அமர், ஜனா நம்பரில் ஃபோன் வந்தால் எடுப்பதே இல்லையாம்.
விஜி! திஸ் இஸ் எ லிமிட். பாத்துக்கொ, அப்புறம் எல்லாம் கை விட்டு போனதுக்கு அப்புறம் நீ நினைச்சி ஏங்கினாலும் இந்த வாழ்க்கை கிடைக்காது, மைண்ட் இட்.” என முடித்த தோழி விலகிச் சென்றாள்.
விஜி தன் இருக்கையில் அப்படியே அமர்ந்தப் படி கண்களை மூடினாள்.
ஜனாவின் முகம் கண் முன்னே வந்து நின்றது.
அவனோ பாவமாக ப்ளீஸ் ஜிமிக்கி எனக் கெஞ்சுவது போல் தோன்றவும், சட்டென்று கண்களை முழித்தாள், எதிரில் யாருமே இல்லை.
‘ச்சே! கனவில் கூட கெஞ்சிட்டு இருக்கான்.. ஏன்டா படுத்துற..?’ என எழுந்து வாஷ் ரூம் சென்றாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் விஜி சில ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணிட்டு இருந்தாள், ரெனி அவளிடம் பேசிவிட்டு சென்றதோடு இப்பொழுது தான் நுழைந்தாள் விஜி அறைக்குள்.
முத்தையா மறுபடியும் ரெனியின் எண்ணிற்கு அழைத்து, ஜனாவின் நம்பரை வாங்கிக் கொண்டார்.
அவன் எண்ணிற்கு அழைக்க, அவன் சாதரணமாக நலம் விசாரித்தான் அனைவரையும் கேட்டு.. முத்தையாவும் மகளை பற்றி விசாரித்துவிட்டு, முத்துவை பார்க்க வருவதாக கூறினார், ஆனால் ஜனா, விஜியோட கோபம் இன்னும் அப்படியே இருக்கு, நீங்க கொஞ்சம் லேட்டாக வரலாம் என கூறினான், மனதில் அம்மாவும் இன்னும் சரியான மூடில் இல்லை என்ற எண்ணம் வேறு அவனை அப்படி பேச வைத்தது.
முத்தையாவும் புரிந்துக் கொண்டு ஃபோனை வைத்தார்.
“வாடி! ஷோ ஸ்டார்ட் பண்ணலாமா..?” எனக் கேட்டாள் விஜி.
“ம்ம்ம்!” என அவளோட பணிகளைத் தொடங்கினாள்.
“வணக்கம்! நீங்கள் கேட்டுக் கொண்டு இருப்பது குயின் FM ***** நான் உங்கள் நிசியுடன் ஜிமிக்கி பேசுறேன்..” என விஜி பேசுவதற்கு ஆரம்பிக்க….
ஷோ முடியவும் விஜி, ரெனி இருவருமே கிளம்பி வெளியில் வந்தனர்.
அங்கு ஜனா இவளிற்காக காத்துக் கொண்டு இருந்தான்.
விஜி கேள்வியாக ரெனியைப் பார்க்க,
“நான் சொல்லிட்டேன் வராதீங்க, வந்தாலும் நோ யூஸ்னு. பட் ஜனாக்கு நாளைக்கு லீவ் தானாம் சோ அவரே அழைக்க வரதா சொன்னார். வேணுனா போ இல்லையா உன் விருப்பப்படி கிளம்பு, ஆனா நீ ஜனா கூட போகலைனா என் கிட்ட பேசாதடி..” என ஜனா முன் சென்ற ரெனி,
“ஹாய் ஜனா..” என அவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, நகர்ந்தாள்.
விஜி தலையை குலுக்கியவாறு, ஜனா பைக் முன்னால் சென்றாள்.
“இந்த மாதிரி இன்னொரு தடவை வந்து சீன் க்ரியேட் பண்ணாதீங்க” என பின்னால் சென்று ஏறினாள் பைக்கில்.
அவள் இறங்கவும், ஜனா இறங்கி சென்று இரண்டு பிளேட் இட்டி ஆர்டர் செய்துவிட்டு காசை நீட்டினான்.
அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இரண்டு பிளேட்டுகளை இட்லி, சட்னி, சாம்பார் வைத்துக் கொடுத்தனர்.
ஜனா கையில் வாங்கியவாறு வந்து விஜி கையில் ஒன்றை கொடுத்தான்.
அவளோ அவனை முறைக்க, “புடி விஜி! என்னைய எவ்ளோ வேணா முறைச்சிக்கோ நோ ப்ராப்ளம். சாப்புட்டு தெம்பா கோபப்படு..” என அவளின் கையில் திணித்தான்.
பிளேட்டை வாங்கியவள் மெதுவாக பைக்கில் சாய்ந்தவாறு சாப்பிடத் தொடங்கினாள், விஜிக்கு ஏனோ ஆத்திரமும் கோபமும் ஆதங்கமும் போட்டிப் போட்டு வந்தது, இரவு உணவையே வெறுத்து ஒதுக்கியிருந்தாள்.
இன்று சாப்பிடவும் அது உள்ளே செல்லவே மறுத்து தொண்டையை அடைத்தது.
புரையேறி இருமல் வர, ஜனா பைக்கில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பருகினாள். பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்து பிளேட்டை போட்டு கை கழுவினர்.
விஜி கடைக்காரரிடம் இட்லி பிளேட் விலை பற்றி விசாரித்துக் கொண்டாள்.
வீட்டிற்கு சென்றதும், ஜனா அவனிடம் உள்ள சாவியை போட்டு கதவைத் திறந்தான்.
பொதுவாக விஜி வரும்வரை ஜனா ஹாலிலே படுத்திருப்பான், கதவு திறந்திருக்கும் அவள் வந்ததும் அவனே பூட்டிவிட்டு அவர்கள் அறைக்கு செல்வான்.
இன்று சேர்ந்து வருவதாக அப்பாவிடம் கூறி இருந்தமையால் அவர்கள் பூட்டிவிட்டுப் படுத்துவிட்டனர்.
அறைக்குள் சென்றதும், ஜனா சாக்ஸை கழட்டிப் போட்டு நிமிரவும், விஜி அந்த ட்ரஸிங் டேபிளில் பணத்தை வைக்கவும் சரியாக இருந்தது.
ஜனா புரியாமல் பார்க்க”இட்லி பிளேட்டுக்கான காசு இது.” எனக் கூறிவிட்டு திரும்பினாள்.
“விஜி!” என்றழைத்தான்.
திரும்பாமல் அப்படியே நின்றாள்.
எழுந்தவன்”திரும்பு விஜி!” என்றான் அழுத்தமாக.
விஜி திரும்பி அவனை நேராக நோக்கினாள்.
“நானும் ஒரு வாரமா பாக்குறேன், நீ ஒதுங்கிப் போறது சரி, ஆனா சாப்பாடு கூட சரியா சாப்பிடாம யாரை பழிவாங்குற..? என்னையா..? சரி! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பழிவாங்குவ..? எத்தனை நாளைக்கு கோபத்தை காட்டுவ விஜி…?
எனக்கு ஒன்னுமே புரியல விஜி, எல்லா பக்கமும் என்னைய நெருக்குறீங்க, நான் என்ன பண்ணினேன்..?” எனக் கேட்டு அப்படியே நிறுத்தினான்.
“சரி! உன் கழுத்தில் இந்த தாலியை உன்னோட பர்மிசன் இல்லாமல் மாட்டியது தப்பு தான், மிகப்பெரிய தப்பு தான், ஆனா அந்த தப்பை பண்ற தைரியம் எனக்கு எப்படி வந்தது விஜி. உன் மனசுல நான் இருக்கேனு அந்த கூட்டத்து மத்தியில் சொன்னதால் வந்த தைரியம்.
நீ ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது, அதுவும் என்னைய விரும்புறேனு ஊர் பொதுவில் சொன்னவளை நான் எப்படி தனியா விட்டு வருவேன். கூடவே கூப்புட்டு வர ஒரு உரிமை தேவைப்பட்டது அதுக்கு தான் இந்த தாலி, மத்தப்படி என் மனசுல உன்னை ஹேப்பியா வச்சுக்கனும் அது மட்டும் தான் இருந்துச்சு.
ஆனா….?” என நிறுத்தியவனை விடாமல் நோக்கினாள் அவள்.
“ஆனா உன் மனசுல நான் இல்ல போல ஜிமிக்கி, அதான் நீ வெறுத்து ஒதுங்கிப் போற, என்னால முடியல, நானும் யோசிக்கவே இல்லை இவ்வளவு வேகமாக ஒரு காதல் வரும், அந்த காதலுக்காக நான் தாலிக் கட்டி ஒருத்தியை கூட்டிட்டு வருவேனு.
சத்தியமா! நானும் கற்பனைக் கூட பண்ணல, அப்ப இது என் அம்மாவுக்கும் அதிர்ச்சி தான், அவங்க ஒரு பக்கம், நீ மறுபக்கம் நான் என்ன செய்ய முடியும்..?
அம்மா கிட்ட போய் நான் என்னோட மனசை காட்டி ஆதங்கமா, கோபமா எதையும் பேச முடியல, ஏனா! நான் தப்பு செஞ்சவன். அதே உன் கிட்டைட்யும் எதையும் நான் காட்ட முடியலை, ஏனா நான் தப்பு செஞ்சவன்..
நான் மட்டும் தான் தப்பு செஞ்சவன், சரி! எல்லாரும் இப்படியே இருங்க, நான் உயிர் இருந்தும் ஜடமா இருக்கேன். நீ என் பொண்டாட்டி அது இந்த ஜென்மத்தில் மாறாது ஜிமிக்கி, இனிமே சாப்பாடு, டீக்கு காசை கொடுத்து என் கிட்ட இருக்க ஒரே உயிரை எடுத்துடாத ப்ளீஸ் ஜிமிக்கி.
அம்மா, நீ, இந்த குடும்பம் எல்லாமே எனக்கு முக்கியம் தான், யாருக்காவும் மற்றவரை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
உன்னைய நான் ரொம்ப காதலிக்குறேன், காதலிப்பதால் தான் விட்டுக் கொடுக்கிறேன், போதும் உன்னோட விசயத்தில் இனி நான் தலையிடவில்லை, நீ சுதந்திரமான பறவை, எப்படி வேணாலும் பறக்கலாம். ஆனால் இந்த குடும்பத்தில் நீயும் ஒருத்தி எப்பயும் அதை மறந்துடாத.
நீ கூட்டுக்குள் இறுகிடாம வெளியில் ப்ரீயா இரு, உன்னை இங்க கூட்டிட்டு வந்தது சந்தோஷமா இருக்க தான் இப்படி உடலை வருத்திப்பதற்கு இல்லை. உனக்கு எங்க கூட இருப்பது பிடிக்கலைனா ரெனிக் கூட போய் தங்கிக்க, நான் அப்பா கிட்ட பேசுறேன், ப்ளீஸ் என்னைய மன்னிக்க வில்லைனாலும் நீ ஹேப்பியா இருக்கனும் அவ்ளோ தான், நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன், அந்த குணமும் எனக்கு இல்லை, ஐ லவ் யு ஜிமிக்கி” என கண்களில் நீர் கோர்க்க அவள் முன் நெருங்கி சென்றவன், அவளின் முகத்தை தாங்க கைகளை கொண்டு சென்றான்.
விஜி அவன் பேசியதால் மனம் உருகி, வார்த்தைகள் வெளிவராமல் நின்றாள்.
ஜனா அவளை தொடாமல்”உனக்கு தான் நான் புடிக்காதவன் ஆச்சே ஜிமிக்கி, உன்னைய தொட்டா புடிக்காதுல, சாரி!” என கண்களை மூடித் திறந்தான், விழிகளை மீறி இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் சிதறி வெளிவந்தது.
அதற்கு மேல் அங்கு நிற்காமல், அருகில் இருந்த மொட்டை மாடிற்கு சென்றான்.
நிலவின் பிறையை பார்த்தவாறு நின்றவனிற்கு மனம் பாரமாக இருந்தது.
ஆழ்ந்த மூச்சினை இழுத்து வெளியிட்டு தலையை நிமிர்த்தியவனிற்கு வானத்தைப் பார்த்து கத்த தோன்றியது, ஆனால் முடியவில்லை, கீழே அப்பா, அம்மா, தம்பி நித்திரையில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் வர தன்னையே நொந்து வானத்தை நோக்கி வெறித்தவன் முன்னால் கைகள் வந்து இறுக்கியது.
அவன் பின்னால் முதுகில் அவனவள் வந்து சாய்ந்துக் கொண்டு இருந்தாள்.
அதை உணர்ந்தவனிற்கு அது நிஜமா…? இல்லை கற்பனையா..? என புரியாமல் தன் இடுப்பை நோக்கி குனிந்தான்.
விஜியின் கைகள் தான் அது, அவன் முகுது ஈரத்தை உணர்ந்தது.
“ஜிமிக்கி!” என்றழைத்தான் மெல்ல.
“சாரி கோல்ட்! வெரி சாரி! நான் புரிஞ்சுகாம நடந்துக்கிட்டேன், நீங்க பண்ணினது, இப்ப பண்றது எல்லாமே எனக்காக தான், நீங்க உண்மையில் தங்க பையன் தான், நான் தான் உங்க மனசை புரிஞ்சுக்கல… சாரி! சாரி! எனக்கு கோபம் அதான் உங்களை புரிஞ்சுக்க மறுத்துட்டேன், ஆனா உங்க நிலை..? நானும் வேற படுத்திட்டேன்.. சாரிடா கோல்ட்” என அவன் முதுகில் சாய்ந்தவாறு அழுத்தி இறுக்கினாள், கண்களில் அருவியாய் தண்ணீர் பெருகியது.
அவனுக்கும் கண்களில் அதுவரை அடக்கிய கண்ணீர் வழிந்தது, அவளின் கைகளை நனைக்கவும், இருவருமே ஒரே நேரத்தில் நேருக்கு நேர் இழுத்து அணைத்துக் கொண்டனர்.
ஜனா விஜியின் நெற்றியில் அடுத்தடுத்து முத்தத்தை வைத்தான்.
“தேங்க்ஸ்டி! தேங்க்ஸ் சோ மச்.. எங்க நீ இப்படியே இருந்துடுவீயோனு பயந்துட்டேன்” என அவளை இறுக்கினான்.
அவளும் அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தத்தை வாரி வழங்கி”எப்படி முடியும்..? நீங்க இவ்ளோ நல்ல தங்க பையனா இருந்தால்.” என சிரித்தாள் கண்ணீருடன்.
அவனும் சிரித்து மறுபடியும் இறுக்கினான் காற்று புகாத இடைவெளியில். பிறை நிலா அதன் மிதமான ஒளியை அனுப்பி அவர்களை ஆசிர்வதித்தது….