மகளின் காலில் விழப் போன முத்தையாவை நொடியில் பிடித்த ஜனா
“மாமா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க…? வாங்க முதலில்” என இழுத்து நாற்காலியில் அமர வைத்தான்.
அதே நேரத்தில் விலகிய விஜி, அப்படியே பின்னால் நகர்ந்து சுவரோடு சாய்ந்து நின்றாள்.
“இல்ல மாப்பிள! என் மேல தான் தப்பு, என் ஜிமிக்கி இப்படி எல்லாம் பேசுறவ இல்ல, நான் பண்ண பாவம் அவளை இந்தளவு என்னைய வெறுக்க வச்சிருக்கு. அப்ப அவ காலுல விழுந்து மன்னிப்புக் கேட்டா தான் இந்த ஜென்மத்துக்கு என்னால உயிரை விட முடியும்..” என மனம் நொந்து புலம்பினார்.
விஜி எதுவுமே பேசவில்லை, சுவரில் சாய்ந்திருந்தவள் அப்படியே சரிந்து தரையோடு அமர்ந்தாள்.
ஜனா”இது எல்லாம் இப்ப பேச வேண்டிய பேச்சே இல்ல மாமா” என்றவன் விஜியிடம் திரும்பி”இங்க பாரு விஜி! உனக்கு எப்டி உன் அம்மா மேல ரைட்ஸ் இருக்கோ, அதே மாதிரி இவருக்கும் இருக்கு, சோ! அவரு இங்கிருந்து போக தேவையில்ல, இது ஹாஸ்பெட்டல் அமைதியா பிகேவ் பண்ணு” என்றான் சற்று வேகமான அழுத்தத்துடன்.
விஜி தன் கணவனைத் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக தன் முட்டியில் தலை கவிழ்ந்தாள்.
அவரவர் அமைதியாக அமர, நேரம் கடந்தது.
டாக்டர் வெளியில் வருகிறார் என கதவு திறக்கும் சத்தத்தில் உணர்ந்த அனைவருமே எழுந்து நின்றனர்.
“டாக்டர்! எப்டி இருக்காங்க இப்ப…?” என ஜனா தான் முதலில் கேட்டது.
“நீங்க…?”
“என் பேரு ஜனா, அவங்க சன் இன் லா”
“ஓகே ஜனா! அவங்களுக்கு சுகர் லெவெல் ஹை ஆகி மயக்கம் வந்திருக்கு இன்னும் அன்காசியஸ் ஸ்டேஜ் தான், நாங்க அப்சர்வேசனில் வச்சு இருக்கோம், மெடிசன்ஸ் கொடுத்திருக்கு இதோட ரிசல்ட் தெரிய ஒரு நாள் ஆகும், அதுவரை க்ரிட்டிகல் ஸ்டேஜ் தான், கடவுள் கிட்ட ப்ரே பண்ணுங்க, என்னோட முழு ஒத்துழைப்பும் கொடுத்துருக்கேன். வில் சீ, ஸ்டே ஸ்டாங், பாசிட்டிவ் ரிசல்டுக்கு வாய்ப்பிருக்கு, அவங்களை இப்ப பாக்க முடியாது நாளைக்குப் பாக்கலாம்” என பொதுவாக கூறிவிட்டுச் சென்றார்.
விஜி ஒரு பக்கம் அழுவதற்கு தொடங்கினாள், ஜமுனா, ஜெய் என மறுபக்கம் அழ தொடங்க, முத்தையா வாயில் துண்டை வைத்துக் கொண்டு கண் கலங்கி அமர்ந்தார்.
ஜனாவிற்கு யாரை சமாதானம் செய்வதென்று தெரியவில்லை.
“இப்ப எதுக்கு நெகட்டிவா திங் பண்றீங்க..? டாக்டர் பாசிட்டிவ் ஆக வாய்ப்பிருக்குனு சொல்லிட்டுப் போனாருல அப்ப பாசிட்டிவா யோசிங்க, கடவுள் கிட்ட வேண்டுங்க, அத விட்டுட்டு இப்படி அழுது வடிஞ்சா எப்டி..?” என அதட்டினான்.
“மாமா! தைரியமா இருங்க, ஜெய் சின்ன பையன், ஆறுதல் சொல்லுங்க” என கூறவும், ஜெய்”மாமா! பெரியம்மாக்கு ஒன்னும் ஆகாதுல.. நான் இனிமே பத்தரமா பாத்துக்குறேன்” என்றான் மனதார.
விஜி அவனின் முகத்தையே அப்போது தான் திரும்பி பார்த்தாள்.
ஜனா”ஜெய்! ஒன்னும் ஆகாது, நீ பயப்புடாம அம்மா, அப்பாக்கு தைரியம் சொல்லு” எனத் தேற்றினான் அந்த சிறுவனை.
நேரம் கடந்தது… விஜி மட்டும் கண்களில் தண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.
விஜி முன் மண்டியிட்டு அமர்ந்த ஜனா அவளின் கையைப் பிடித்து
“விஜி! நீ வா என் கூட, வெளியில் நின்னுட்டு வரலாம்” என அழைத்தான், அவளை சமாதானம் செய்யும் எண்ணத்துடன்.
“நான் எங்கயும் வரல… நீங்க போங்க” என அவன் கையைத் தள்ளி விட்டாள்.
“ஹேய் ஜிமிக்கி! ப்ளீஸ்டி.. வானு சொல்றேன்ல…” என மெல்ல மீண்டும் கையைப் பிடித்தான்.
மற்றவர்கள் முன் ஜனாவை விலக்க தோன்றாமல் எழுந்து வேகமாக நடந்தாள்.
ஜனா”மாமா! எதாச்சுனா ஃபோன் பண்ணுங்க, அவளை கேண்டின் அழைச்சுட்டுப் போயிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு மனைவி பின்னால் ஓடினான்.
“ம்ம்ம்! என் புள்ள ஜிமிக்கி புகுந்த வீட்டுலயாச்சும் சந்தோஷமா இருக்கட்டும் ஜமுனா, இந்த பையன் அவ மனசுக்கேத்த மாதிரி பேசி சமாளிக்குறான். நம்ம தேடினாலும் இப்டிப்பட்ட மாப்பிள்ளையை புடிச்சி இருக்க முடியாது.” எனப் பெருமைப் பட்டார் முத்தையா, ஜனாவை எண்ணியவாறு.
****
விஜி மருத்துவமனை வாயிலில் சென்று நின்றாள்.
அவளை பின் தொடர்ந்து வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
இருவர் மனதிலும் ஏததோ எண்ணங்கள்…
ஜனா மனதில் ‘அத்தைக்கு எதுவும் ஆகிடக் கூடாது, இவளை எப்டி சமாதானம் செய்வது, இப்டி அழுதுட்டு இருக்காளே!’ என எண்ணங்கள் ஓடியது.
விஜி மனதில்’எனக்கு யாருமே இல்லை, ஜனாவும் அந்தாளுக்கு சப்போர்ட் செய்றார், அம்மா நீ நல்லபடியா வந்துடு’ என தாயை அழைத்துக் கொண்டு இருந்தாள்.
வெளியில் மழை மெல்ல தொடங்கி பின் அடித்து ஊற்றத் தொடங்கியிருந்தது.
ஜனா, பத்து நிமிடம் மேல் அவள் அருகில் நின்றாலும் எதுவுமே பேசவில்லை.
மழையை பார்த்தப்படி நின்ற இருவரும் இடி இடித்ததில் தங்கள் உணர்விற்கு மீண்டனர்.
இருவருமே ஒருவர் ஒருவரை திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.
ஜனா அவளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கேண்டின் பக்கம் நடந்தான்.
நடு இரவு என்பதால் பெரிதாக கூட்டமில்லை. ஆங்காங்கே படுத்துக் கொண்டும், அமர்ந்துக் கொண்டும் நித்திரையில் இருந்தனர்.
அவளை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, சென்று இரு டீ கப்களோடு வந்தான்.
அவள் எதிரில் அமர போனவன், தலையை குலுக்கிவிட்டு அருகில் சென்று நெருங்கி அமர்ந்தான்.
“இந்தா இதை குடி!” என அவள் முன் ஒரு கப்பை வைக்க, “எனக்கு வேணாம்!” என்றாள் பட்டென்று.
“விஜி! குடி, கோபம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்”
“எனக்கு என்ன கோபம்..? அது எல்லாம் இல்ல, நான் யாரு உங்க மேல கோபப்படுவதற்கு..? என் அம்மா பொழச்சி வருவாங்களானு தெரியாம எனக்கு எதையும் யோசிக்க முடியல.. எனக்காக இருக்க ஒரே உறவு அவங்க தான். மத்தவங்க எல்லாம் எனக்காக யோசிக்க மாட்டாங்க, எனக்காக யாரும் இல்ல” என கண்ணீர் வடித்தாள் அவனின் மறுபக்கம் திரும்பியவாறு.
“இங்க திரும்பு”
அவள் கண்களில் கண்ணீர் வழிய திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.
“ஜிமிக்கி! ப்ளீஸ்” என்றான் மெதுவாக.
ஆனால் விஜி திரும்பாமல், கணவன் முத்தையாவிற்கு சப்போர்ட் பண்ணியதன் தாக்கத்தில் இருந்தாள்.
அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.
“உனக்காக நான் இருக்கேன், இப்ப எதுக்கு இப்டி அழுது உடம்பைக் கெடுத்துக்குற…?”
“யாரு நீங்களா.? மாமா, மாமானு உறவாடுற அவருக்குப் போய் சப்போர்ட் பண்றீங்க. என் அம்மாவுக்கு எதாச்சினா எனக்கு மட்டும் தான் பாதிப்பு, அவருக்கு பொண்டாட்டி, புள்ளை இருக்காங்க. சந்தோஷமா தான் இருப்பார்” என்றாள் அழுகையுடன் ஆத்திரமாக.
“ஹேய்! லூசாடி நீ…? அவரு எப்டி எனக்கு மாமா ஆவார்…? அவரு என்ன என் அம்மா உடன்பிறப்பா மாமானு சொல்ல… உன் மூலமா வந்த உறவு தான்டி அவரு. உன்னைய ஒதுக்கிட்டு அவரை சப்போர்ட் பண்ண நான் என்ன பைத்தியமா..? இல்ல உன் கூட எனக்கு எதுவும் சண்டையா..? அப்டியே சண்டையே போட்டாலும் உன் பக்கத்தில் இருந்து போடுவேனு தவிர விலகி எல்லாம் போக மாட்டேன்.
ஜிமிக்கி! உன் அம்மாவுக்கு அவர் கூடப் போக விருப்பம், போயிட்டாங்க. இன்னும் அவங்க சட்டரீதியான கணவன், மனைவி. முதல அவரை நீ உன் சித்தியோட புருசனா பாக்காத, உன் அம்மாவோட ஹஸ்பண்ட், உனக்கும் அப்பானு பாரு.”
“இல்ல! அவரு வேறொருத்தங்க புருசன் தான்… என் அம்மாக்கு நான் மட்டும் தான்.”
“சரி! அந்த பையன் எதுக்கு உன் அம்மாக்காக அழுதுட்டு இருக்கான், பழகிய இந்த கொஞ்ச நாட்களிலே.. அதை யோசி. உனக்கு புடிக்கலைனாலும் உன் அப்பாக்கு அவங்க மனைவியை நெனச்சு கவலை இருக்கும் ஜிமிக்கி. இங்க உன்னோட மனசை மட்டும் யோசிக்காத, அவங்க ரெண்டுப் பேருமே உன்னையும் உன் அம்மாவையும் ஒதுக்கிட்டு போகாம இன்னும் நீங்க வேணுமுனு நிக்குறாங்க”
“ஜனா! நீங்க என்ன சொன்னாலும் சரி, எனக்கு அவரை புடிக்கலை.. எப்பவும் புடிக்காது” என அழுதாள்.
அவளை ஒரு பக்கமாக அணைத்துக் கொண்டு, முகத்தை நிமிர்த்தி கண்களில் வழிந்த கண்ணீரை அழுத்தி துடைத்தவன்.
“முதல இப்டி சின்னப் புள்ள மாதிரி கண்ணீர் வடிப்பதை நிறுத்து பொண்டாட்டி.” எனச் சிரித்தவன், அவள் நெற்றியில் மெல்லிய இதழ் பதித்தான்.
தன்னோட கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு, அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன்”ஜிமிக்கி! அவங்க மூணுப் பேர் கூடவும் நான் மனிதாபிமான அடிப்படையில் பழகுறேன் அவ்ளோ தான். அதுக்காக உனக்கு ஆப்போஸிட் ஆகிட்டனு அர்த்தமில்லை.
ஓகே அசெப்ட்டு! நடந்த மொத்த விசயத்திலும் பாதிக்கப்பட்டது நீ தான், நீ மட்டும் தான். ஆனா இன்னும் எத்தனை வருசத்துக்கு அதையே சொல்லிட்டு இருக்க முடியும்….? எப்டி இளமையில் நீ இழந்த உன்னோட அப்பா-மகள் வாழ்க்கை கெடைக்காதோ அதே மாதிரி நடந்ததை மாற்ற முடியாது.
அவங்க எல்லாருமே வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு வந்துட்டாங்க, அட்லீஸ்ட்! கடைசி காலத்தில் உன் மன்னிப்புக் கிடைக்கலைனாலும் வெறுப்பு இல்லாமல் பாக்கலாமுல.. இது என் சஜஸன் தான்.
ஆனா உனக்காக நான் இருக்கேன். அவங்களா..? நீயானு..? கேட்டால் ஆப்சனே இல்லை. எனக்கு என் பொண்டாட்டி மட்டும் தான் முக்கியம், சரியா..?” என்றான் முடிவில் சிரித்தவாறு.
“போடா!” என அவன் தோளில் சாய்ந்தப் படி மார்பில் அடித்தாள் மெல்லிய புன்னகை வர.
“சப்போர்ட் பண்ணாலும் அடிக்குறாளே!” என வருத்தமாக கூறுவதுப் போல் நடித்தான்.
“அம்மாக்கு சரியாகிடுமுல… எனக்கு பயமா இருக்கு ஜனா..” என அவன் கைகளை அழுத்தியவாறு நிமிர்ந்தாள்.
“நீ வேணா பாரு நாளைக்கு இன்னேரம் எல்லாம் உன் அம்மா உன்னோட பேசிட்டு இருப்பாங்க.. கவலைப் படாத ஜிமிக்கி”
“ம்ம்ம்!”
“என்ன சோகமா ம்ம்ம்..? ஸ்டாங்கா சொல்லு…”
“நீங்க என் கூட இருக்கவரை நான் ஸ்டாங்கா இருப்பேன் ஜனா.”
“நான் உன் கூட இல்லாம எங்கப் போக போறேன், கூடவே இருக்கேன். டீயை குடி..” என எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அதை வாங்கிப் பருகினாள். இருவரும் அமைதியாக டீயை அருந்தினர்.
சிறிது நேரம் கழித்து ஜனா சொன்ன நேரத்தில் வந்த ஒரு பையன்”சார்! மூணு டீ ரெடி..” என்றான்.
“எடுத்துட்டு வாப்பா, எவ்வளவு…?”
அந்தப் பையன் சொல்லிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டான்.
டீ கப்களை கொண்டு வந்து அந்தப் பையன் வைத்துச் செல்லவும், எழுந்த விஜி”ஜனா! நான் ரோசக்காரி தான் அதுக்காக கொடுமைக்காரி இல்ல, எடுத்துட்டு வாங்கப் போகலாம்” என்றாள்.
“ப்பா! என்ன டயலாக் பொண்டாட்டி இது. அதானே பார்த்தேன் என் பொண்டாட்டி தங்கமாச்சேனு…” என நக்கல் அடித்தான்.
“மிஸ்டர் கோல்ட்… அந்தப் பட்டத்தை நீங்களே வச்சுக்கோங்க.. எனக்கு வேணாம். நான் எப்பவும் உங்களுக்கு மட்டும் ஜிமிக்கி..” எனக் கூறியவாறு அவனுடன் நடந்தாள்.
“எனக்கு மட்டுமா..?”
“ஆமா!”
“உன் ஃபேன்ஸ் எல்லாம் அதை தான் சொல்றாங்க மேடம்..”
“யா! அப்கோர்ஸ்.. பட் நான் தான் ஜிமிக்கினு தெரியாம சொல்றாங்க. சோ! என்னைய தெரிஞ்ச உங்களுக்கு மட்டும் தான் நான் ஜிமிக்கி…”
“அப்ப உன் அப்பா கூப்புட்டாரே, அது..?”
அவனைத் திரும்பி முறைத்தாள்.
“ஓகே! ஓகே! ஒரு டவுட்மா.. உடனே ஃபேஸ் மாறிடுதே..”
“அப்படி எல்லாம் இல்ல, எனக்கு அவரு வச்சப் பேரு தான் அது, அப்ப எனக்கு மட்டும் அப்பாவா இருந்தாரு. இப்ப…?”
“இப்பவும் தான்.. “
“இப்ப அவருக்கு பையன் இருக்கான் ஜனா”
“விஜி! நடந்த எதிலுமே சம்பந்தம் இல்லாமல் உனக்கு அப்புறம் மாட்டி முழிப்பவன் ஜெய். பாவம்டி… எனக்கு அவன் நம்ம அப்பு மாதிரி தெரியுறான்..”
“ம்ம்ம்!”
அதற்குள் மங்கை இருந்த ஐசியூவ் வர, இருவரும் அமைதியாகினர்.
விஜி சென்று ஒரமாக அமர்ந்துக் கொண்டாள்.
ஜனா அவர்களிடம் டீ கப்களை நீட்டினான்.
முத்தையா மறுக்கவும், “மாமா! நாங்க குடிச்சாச்சு.. எடுத்துக்கோங்க” என பிடிவாதப்படுத்தியதும் எடுத்துக் கொண்டனர்.
அதிகாலைப் பொழுது விடிந்ததும் ஜனா முதல் வேலையாக தன் அம்மாவிற்கு ஃபோன் செய்தான். அந்த நேரத்தில் வசந்தா எழுந்திருப்பார் என அறிந்தமையால்.
மற்றவர்கள் தூக்கத்தில் இருந்தனர்.
வசந்தாவும் எழுந்து வெளியில் வந்து அப்புவுடன் ஜனாவை காணாமல் தேடிப் பிறகு அவர்கள் அறைக்குள் தூங்கிருப்பான் போல என கண்டுக் கொள்ளாமல் வாசலிற்கு சென்றவர், அவனின் பைக் இல்லாததைக் கண்டு பயந்து, அப்புவை எழுப்பிக் கேட்க. சென்றார்.