அவன் இழுத்து அணைத்த வேகத்தில் ஜனாவின் மார்பில் தஞ்சமானவள், அவனின் அணைப்பில் அடைக்கலம் புகுந்திட மறுத்து, “விடுங்க ஜனா! ஐ ஃபீல் அலோன்… நோபடி வித் மீ” எனக் கண்ணீர் வழிந்தோட கூறியவாறு, விலகிச் செல்ல முயற்சித்தாள்.
அவள் விலகிடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், “சாரிடி! கொஞ்சம் பொறுமையா இரு” என சமாதானம் செய்ய முற்பட்டான்.
“நான் நிறையவே பொறுமையா தான் இருக்கேன், லீவ் மீ ஜனா” என விலகிட முண்டினாள்.
“உனக்கு ரொம்ப கோபம் வருது விஜி”
“ஆமா! அப்படி தான் கோபம் வரும், உங்களுக்கு புடிக்கலைனா போயிடுங்க, எனக்கு யாரும் வேணாம்…” எனக் கத்தப் போனவளைத் தடுத்தவன்,
“ஹேய்! இப்ப எதுக்குடி கத்துற…?” எனக் கேட்டு அவள் வாயினை தன் கரத்தினால் மூடினான்.
மூடியப் பிறகும் முண்டியவளைச் சமாளிக்க வழியின்றி, தன் கரத்தை விலக்கியவன், அந்த நொடியில் விஜியை தன்னோடு இறுக்கி அணைத்து அவள் இதழில் இதழ் பதித்தான்.
இதழ் பதித்த நொடியில் அவளின் ஒரு கரத்தைப் பற்றிக் கொண்ட ஜனா, மற்றொரு கரம் தூக்கப்படாமல் இருக்க வெளியில் வராமல் அணைத்திருந்தான்.
விஜியின் விழிகள் அவனையே பார்த்தப் படி நிலைக்குத்தி நின்றன. ஜனாவிற்கு அவளை முத்தமிட வேண்டும் என்ற எண்ணமே இல்லை கடந்து சென்ற நிமிடம் வரை, அவளை சமாதானம் செய்கிறேன் என்று ஏதோ நொடியில் வந்த சிந்தனையில் இதழோடு இதழ் பதித்தான்.
ஆனால் இதழ் தடத்தில் தன்னவளின் ஸ்பரிசம் பட்டு மெய் மறந்து முத்தத்தில் அவளை இடையோடு இறுக்கி ஆழ்ந்த நிலையை அடைய செய்தான்.
முதலில் மல்லுக்கட்டிய விஜி, அவளின் இடையை இறுக்கிய கணவனின் கரங்களில் அமைதியாக, இதழைச் சிறைப் பிடித்தவனை வெறித்துப் பார்த்து மெல்ல அவனின் சிறையில் அடங்கத் தொடங்கினாள்.
ஜனா அணைப்பில் விஜி தன் சித்தம் மறந்து உருகிடுவாள் என்பது அவளும் உணர்ந்த ஒன்று தான், அதுவும் அவள் இருந்த மனநிலையில் ஜனாவின் நெருக்கத்தில் உணர்வுகள் படையெடுக்க, கண்களை மெல்ல மூடி, அவன் பிடித்திருந்த கரத்தினை விலக்கினாள். ஜனா அவளின் மூடிய விழிகளைக் கண்டு கரத்தினை விடுவித்தான்.
விடுவித்த வேகத்தில் அவன் முதுகில் கட்டி அணைக்கப் போக, அவளின் மறுகையை விடுவிடுத்தவன் விழிகளால் சிரிப்பினை சிந்தினான்.
இரு கரங்களாலும் அவனை இறுக்கி அணைத்தவளை கண்டவன், இதழ் தடத்தில் இருந்து இதழினைப் பிரித்து அவளின் தோளில் தலைச் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
இருவருமே காற்றுக்கு வழியில்லை என அடைத்த நேரத்தில், ஜனாவின் மார்பில் ஈரம் பட்ட உணர்வில் மீண்டான்.
அவளை விலக்கவில்லை”என்னடா ஆச்சு ஜிமிக்கிமா..?” எனக் கேட்டான்.
“சாரி! ஜனா…”
“எதுக்கு…?”
“எதுக்கோ”
“ம்ம்ம்! ஆர் யு ஓகே ஜிமிக்கி…?”
“ம்ம்ம்!”
இருவருக்கும் அந்த நிலையை இழக்க மனம் இல்லாமல், ஒருவரின் அணைப்பில் மற்றொருவர் என இறுக்கி அணைத்தப்படியே நின்றனர்.
“ஜிமிக்கி!”
“ம்ம்ம்!”
“இப்டியே நின்னா விடிஞ்சுடும்..”
“பரவாயில்ல!”
“காலையில் நகர முடியாது, இப்டியே ஒட்டிகிட்டா…” எனக் கூறி நக்கலாக சிரித்தான்.
“எனக்கு இன்னுமே ஹேப்பி தான். உங்களைப் பிரியவே தேவையில்லல கோல்ட்….”
“ஓ! இந்த கோல்ட் கேக்கவே சூப்பர் ஃபீல் தான். ஆனா அம்மணிக்கு தான் அப்பப்ப கோபம் வந்துடுது.. பட் அதுவும் கூட நல்லது தான்…”
“என்ன நல்லது…?”
“ம்ம்ம்! சமாதானம் செய்ய புது தடம் அதான் இதழ் தடத்தை கண்டுப்பிடிச்சிட்டேன்ல, சோ! ஜிமிக்கி நீ நிறைய கோபப்படு” எனச் சிரித்தான்.
“போடா!” என நிமிர்ந்து அவனை அடிக்கத் தொடங்கினாள்.
“ஹேய்! உண்மையை தான் சொல்றேன். எனக்கு ஜாலியா இருக்கு…” என அவள் கைகளைப் பிடித்தப்படி கூறினான்.
“எது நான் அழுதுட்டு ஃபீல் பண்றதா..?”
“அது கஷ்டமா தான் இருக்கு ஆனா அதுக்கு அப்புறம்…” என நிறுத்தி அவளை தன் அருகில் இழுத்தவன், விஜியின் முகத்தை தன் விரல்களால் வருடியவாறு,
“இப்ப ஓகேவா!” எனப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“ஜிமிக்கி! இனிமே உனக்காக யாருமில்ல, நான் தனியா இருக்கேன். நான் மாமாக்கு சப்போர்ட் பண்றேன் இப்டி எல்லாம் யோசிக்காத. திஸ் இஸ் லாஸ்ட். ஐ ஆம் வித் யு.
அது மட்டுமில்ல, இனி யார் தப்பு, யார் சரினு நான் பேசல, எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம். அவளுக்குப் பிடிக்காத எந்த விசயத்தையும் நான் பேசவே மாட்டேன்.
லூசாடி நீ! உன்னைய தான் எனக்கு முதலில் தெரியும். நான் காதலிச்சது உன்னைய, காதலிச்சதால தான் அந்த ரணகளத்துலையும் பொண்டாட்டி ஆக்கி என் குடும்பத்துக்குள்ள கூட்டிட்டு வந்தேன்.
உன் மூலமா தான் உன் அப்பா, சித்தி, ஜெய், மாமாக்கள் எல்லாருமே தெரியும். அப்படி இருக்கும் போது உன்னைய விட்டுட்டு அவங்க பக்கம் பேசுவேனா… கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டீயா.? ஏதோ அந்த நேரத்தில் தோன்றியதை யோசிக்காமல் கேட்டுட்டேன்.
அப்புறம் உன் மனநிலை எனக்கு புரிஞ்சுட்டு. சோ! எனக்கு முக்கியம் என் ஜிமிக்கி பொண்டாட்டி தான். மத்த அவ சொந்தம் எல்லாம் ஆன் தி வே டீலிங் ஒன்லி… ஓகேவா மேடம்..” என அவளின் கன்னங்களைப் பிடித்து இருப்பக்கமும் ஆட்டினான்.
“ம்ம்ம்!” என அவளும் அவனின் கன்னங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டே சிரித்தாள்.
“பாரு! இப்ப எவ்ளோ க்யூட்டா இருக்கனு. திஸ் இஸ் மை ஜிமிக்கி, சரி! வா தூங்கலாம்” எனக் கையை எடுத்து விலகினான்.
“ஜன்னலை மூடிட்டு வரவா ஜனா..”
“ஏன்…?”
“இல்ல! எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கும்..”
“டெய்லி அப்டி தான் தூங்கிறீயா..?”
“ம்ம்ம்!”
“லைட் ஆப் பண்ணிட்டா ஒன்னும் தெரியாது. கொஞ்சம் அவுட்சைடு ஏர் வருமுல ஜிமிக்கி. இரு” என்றவன் விளக்கினை அணைத்துவிட்டு வந்தான்.
“படு!” என பாயில் தலையணையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன், நின்றுக் கொண்டே இருந்தவளைக் கண்டு”என்ன..?” எனக் கேட்டான்.
“இல்ல! பூச்சி எதுவும் வராதா..? சேஃப்டியா..? யாராவது எட்டிப் பாக்க மாட்டாங்களா…?” எனக் கேள்விகளை அடுக்கினாள்.
“ம்ம்ம்! உன் கேள்விக்கு எல்லாம் நூறு சதவீதம் கேரண்ட்டி குடுக்க முடியாது தான். ஆனா இன்னைக்கு நீ நிம்மதியா தூங்கலாம், பிகாஸ் நான் கூட தானே இருக்கேன். சோ! டைம் ஆகுது வந்து படுடி.. காலையில் எழுந்திரிக்கனும்..” என அவள் கையை இழுத்த வேகத்தில் அவன் மேல் தடுமாறி விழுந்தாள்.
“ஆ! ஜனா!” என அவனை முறைத்துக் கொண்டு, நகரப் போனவளைப் பிடித்தவன், “நான் படுக்க தான் இழுத்தேன். பட் பாரு கடவுள் எனக்கு எப்டி எல்லாம் ஹெல்ப் பண்றாருனு… சோ! சூப்பர்ல…” எனச் சிரித்தவன் கையில் அடித்தவள், அவன் அருகே தள்ளிப் படுத்துக் கொண்டாள்.
இருவருமே மேலே விட்டத்தைப் பார்த்தவாறு ஒரு அடி வித்தியாசத்தில் தள்ளிப் படுத்திருந்தனர்.
“ஜிமிக்கி!”
“ம்ம்ம்!”
“தூங்கலையா..?”
“தூக்கம் வரணுமுல மை கோல்ட்..” எனத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
“ம்ம்ம்! என் முகம் தெரியுதா உனக்கு…?” என்று அவள் பக்கம் திரும்பிக் கேட்டான்.
“ம்ம்ம்!”
“எனக்கும் உன் முகம் தெரியுது… ஆனா பாரு ஜிமிக்கி….” எனக் கூறியவாறு ஒரு பக்கம் சாய்த்து அவள் புறமாக திரும்பியவன், “நீ இந்த ஜன்னல் வழியாக தெரியும் நிலா வெளிச்சத்தில் ரொம்ப அழகியா தெரியுறீயே.. நான் அப்படி தெரியுறனா…?” எனக் கேட்டவனை முறைத்தவள்,
“ம்ம்ம்! எனக்கு நீங்க எப்பவும் போல தான் தெரிறீங்க கோல்ட்…”
“அதானே! இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் மனசாட்சியே இல்லை. பசங்களை பேருக்காக கூட பாராட்டுறதுக்கு மனசு வராது. கோல்ட்னு சொல்றமே அட்லீஸ்ட் கோல்ட் மாதிரி பிரகாசமா இருக்கீங்கனு சொன்னா தான் என்ன..? டு பேட்..” என மறுபடியும் விட்டத்தைப் பார்த்து படுத்துக் கொண்டான்.
மனதில் சிரித்த விஜி”ரொம்ப தான் ஆசை மிஸ்டர் கோல்ட்… கண்ணை மூடிட்டு தூங்குங்க… குட் நைட்” என மறுபக்கம் அவனிற்கு முதுகைக் காட்டி படுத்துக் கொண்டாள்.
“இப்டி அடி கணக்கில் தள்ளி படுத்தா எப்டி தூக்கம் வரும்..”
“வரும், தூங்குங்க”
“ஜிமிக்கி! அவ்ளோ தானா..?”
“ஏன்! என்ன எதிர்பார்த்தீங்க….?” எனத் திரும்பாமலே கேட்டாள்.
“நாட் எக்ஸ்பெக்ட் மோர், பட் ஒரு ஹக் வித் ஸ்லீப்… இப்டி….” என இழுத்தான்.
“அதான் பொண்ணுங்களுக்கே மனசாட்சி இல்லைனு சொல்லிட்டீங்களே, ஆம்பளைங்க உங்களுக்கு தான் நிறைய மனசாட்சி இருக்கே. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே” எனச் சிரிப்பினுடே கூறினாள்.
அதன் அர்த்தம் புரியாதவன்,
“ஆமா! எங்க மனசாட்சியை வச்சு மாங்காய் கூட வாங்க முடியாது போல….”
“கண்டிப்பா! உங்க மனசாட்சி வச்சா அது இப்ப கிடைக்காது போல… தத்தி கோல்ட்… நல்லா தூங்குங்க” என கால்களை மடக்கி கடுப்புடன் கண்களை மூடினாள்.
ஐந்து நிமிடங்கள் போய் இருக்கும், மனதில்”லூசு… மரமண்டை… புண்ணாக்கு…மனசே இல்ல இதுல மனசாட்சியாம்….” என வாய்விட்டே மெல்லப் புலம்பினாள்.
அவள் காதோரத்தில் முடிகள் பட்டு சிலிர்க்க, கண்களைத் திறந்துப் பார்த்தவள் அவனின் சிரிப்பில் புருவத்தைச் சுளித்தாள்.
அவளின் முதுகோடு நெருங்கிப் படுத்தவாறு ஹஸ்கி வாய்சில்”புரிஞ்சுட்டுடி! அதுக்காக இப்டியா திட்டுவ, நான் பாவமல…” என அவளின் இடையில் கைவைத்து அவனுள் இறுக்கினான்.
“என்ன பாவம்…? ம்ம்ம்! லேட் பிக் அப் நீங்க கோல்ட்..”
“என்ன பண்றது, முன் அனுபவம் இல்லையே..”
“அப்ப எனக்கு மட்டும் இருக்கா என்ன..?”
“ச்சே! நீ ஏன்டி அப்டி போற…? நீ என் ஜிமிக்கி… பிரைட்டா யோசிக்கிற. ஆனா நான் தான் கொஞ்சம் பிக் அப் கம்மி போல…”
“நம்பிட்டேன்!”
“ஏன் ஜிமிக்கி, நீ நம்பிட்டேனு சொன்னதே நம்பலைனு தெரியுதே..”
“கொஞ்சம் முன்னாடி சமாதானம் செஞ்சது யாரு..?”
“நானே! நானே! அது அப்பப்ப கோல்ட் ஸ்பார்க் அடிக்கும். இப்ப கொஞ்சம் டல் ஆச்சு… பட்! பிக் அப் ஆகிடும் டோன்ட் வொரி…” என அவளின் காது மடலில் முத்தத்தை வைத்தான்.
அவளிற்கு கூச்சம் ஏற்பட, தலையை அசைத்து நெளிந்தாள்.
“இந்த மூமென்ட் எதிர்பார்க்கல ஜிமிக்கி”
“ம்ம்ம்!”
“சரி தூங்கு!” என அவளை தன்னுள் இறுக்கி கொண்டான்.
அவன் பக்கம் திரும்பியவள், “ஜனா! இதுக்கு மேல எதிர்பார்க்கிறீங்களா..? அப்டினா எனக்கு ஓகே தான்..”
“ஆமாடி! அந்த மண்டகசாயம் சுஜா மேடம் மேல ஏதோ சந்தேகப்பட்டு பிரச்சனை பண்றனாம்.. சோ! ஃபேமிலி இஷ்யூ..”
“ஓ! சுஜா மேடம் மேல என்ன சந்தேகம்..?”
“அவங்களுக்கு வேற அஃபேர்…”
“ஹேய்! தப்பா பேசாதடி” என தோழியை நிறுத்தினாள்.
“அவங்க இஷ்யூ இதான்டி, சுஜா மேடம் அஃபேர் பெர்சன் யாருனு முதற்கொண்டு நியூஸ் வந்துட்டு. ஹி இஸ் ஓகே கம்பேர்டு டு திஸ் மண்டகசாயம்…” என கேஷ்வலாக கூறினாள் ரெனி.
“அது உண்மையானு தெரியல ரெனி. ஒரு வேளை உண்மைனா அது தப்பு தான். அவங்களுக்கு பசங்க இருக்காங்க. அத ரெண்டுப் பேருமே யோசிக்கனும். அவ்ளோ தான். லீவ் தேயர் டாபிக்” என விஜி அடுத்த வேலையைப் பார்க்க சென்றாள்.
இரவு….
ஜனா தான் விஜியை அழைக்க வந்திருந்தான்.
இருவரும் பைக்கில் சென்றுக் கொண்டிருக்க, விஜி மெல்ல ரெனி கூறியதைப் பற்றிச் சொன்னாள்.
“ஓ! அவனோட தப்பு வெளியில் தெரியல.. சோ! அவன் நல்லவனா ஃபோகஸ் ஆகுறானா..?”
“மே பீ!”
“ரெனிக்குத் தெரியுமா அன்னைக்கு நடந்ததுப் பத்தி”
“நான் சொல்லல ஜனா”
“ஏன்..? ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் தானே.”
“இல்ல! சொல்ல தோணல, அதைச் சொல்லி அவன் கெட்டவனு நான் ஃப்ரூப் பண்ணி என்ன ஆகப்போகுது. அவன் பண்ண தப்புக்கு நீங்களே சரியான பதிலடிக் குடுத்துட்டீங்க. கணக்கு சரியாப் போச்சு. மறுபடியும் போய் மீ டு னு ஜாயின் ஆக எனக்கு விருப்பமில்லை. ஏற்கனவே அது உங்களுக்கு தெரிஞ்சு முடிந்தக் கதை. நம்ம பெர்சனலை எதுக்கு ப்ரண்டா இருந்தாலும் சொல்லனுமுனு தோணுச்சு. என்லார்ஜ் பண்ண விருப்பமில்லை அது எனக்கு அசிங்கமா படுது. மத்தபடி ரெனி கிட்ட மறைக்க பெருசா காரணமில்லை.
யூ நியூ தட்.. அவ்ளோ தான்..” எனக் கூறினாள்.
“நீ சரியா தான் யோசிக்குறனு தோணுது ஜிமிக்கி… பட்! அவன் வைய்ப் மட்டுமே தப்பு செஞ்சவங்கனு ஃபோகஸ் ஆகுதே…”
“அதுவே அவனுக்குத் தண்டனை தான் ஜனா. இவன் புடிக்காதப் பொண்ணைக் கட்டாயப்படுத்தினான். அவனோட. வைய்ப் பண்ணது உண்மைனா, அவங்க புடிச்சு இருந்திருக்காங்க… அது அவனுக்கு இன்னும் தண்டனை தான்.. அவங்க லைஃப் பர்ஸ்ட் ஆச்சு…”