“ஜிமிக்கி! இன்னைக்கு சைட்டில் பேசிக்கிட்டாங்க, அந்த இடம் சீக்கிரம் ரெஜிஸ்டர் ஆகப்போகுதாம், உன் மாமனுங்க உன்னைக் கூப்புட வாய்ப்பிருக்கு, அப்படி அழைப்பு வந்தா போய் மறுப்பேச்சே இல்லாம கையெழுத்துப் போட்டுட்டு வந்துடு”
“ம்ம்ம்! ஓகே ஜனா”
மருத்துவமனை வாயில் ஓரமாக நிறுத்திமிடத்தில் இருசக்கர வாகனத்தை பத்திரப்படுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
மங்கை உணவு மற்றும் மருந்துக் கொடுக்கப்பட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
ஜமுனா அங்கிருந்த சிறிய கட்டிலில் அமர்ந்தப் படியே கண்களை மூடியப்படி இருக்க, இவர்கள் நுழையும் அரவரம் கேட்டு முழித்தாள் .
“வாங்க! வாங்க தம்பி! அத்தான் நல்லா இருக்காரா..?” என ஜனாவிடம் வரவேற்ற அடுத்த நொடியேக் கேட்டாள்.
“மாமா நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா போதும் சரியாகிடுவாரு, காலையில் வந்துடுவாங்க” என்றான்.
விஜி சென்று மங்கையின் அருகில் சென்று அமர்ந்து, தாயின் தலையை வருடிவிட்டாள்.
“ஜிமிக்கி! நம்ம ரெண்டுப் பேரும் கணவன், மனைவி சோ! கஷ்டமோ, நஷ்டமோ ஷேர் பண்ணிப்போம். அது மட்டும் தான் பைசா செலவில்லாமல் உண்மையா கிடைக்கும். இது நம்ம சூழ்நிலை, ஓகேவா…” என்றான்.
அவனையே ஆழ்ந்துப் பார்த்தவள், “ஒரு வேளை அன்னைக்கு மாமாவுக்கு பயந்துட்டு உங்களை புடிக்கலைனு சொல்லி இருந்தா, இன்னேரம் இந்த தங்க பையனை மிஸ் பண்ணி இருப்பேன்ல… நன்றி கடவுளே!” என்று கண் சிமிட்டும் நொடியில் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து நிமிர்ந்தாள்.
எதிர்பாரா முத்தத்தில் கன்னத்தைத் தடவியவன்”இதை எதிர்பார்க்கலையே மை வைய்ப், ரிட்டன் வேணுமா….?” என பைக்கில் இருந்து எக்கினான்.
“பிச்சு! பிச்சு! கிளம்புங்க ப்ளீஸ்… என் தங்க பையன்ல” எனக் கெஞ்சிக் கொஞ்சினாள்.
“ம்ம்ம்! இது போங்காட்டம், எனிவே காமன் பிளேஸ் என்பதால் கிளம்புறேன். பட்! வட்டியோடு தந்துடுவேன். ஒரு நாளைக்கு பத்து கிஸ் வட்டி ஏறும்…”
“ஹலோ! வட்டிக் கணக்கு நான் போடனும்”
“சோ வாட்! பெனிஃபிட் யாருக்கோ அவங்க தானே வட்டிப் போடனும். அப்ப என் கணக்கு சரியா இருக்கும், பாரு ஜிமிக்கி… பை!” என பைக்கை கிளப்பினான்.
“ப்ராடு!” என்றாள் வாய்விட்டே.
அவளை கண்ணாடியில் பார்த்தவாறே மெல்ல சென்றான்.
அவளும் சிரிப்பினுடே கையை ஆட்டினாள்.
அதே மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்குள் திரும்பி நடந்த விஜியிடம் வரவேற்பில் இருந்த பெண் ஒருவர்”ஹலோ மேடம்!” என அழைத்தாள்.
“எஸ்! சொல்லுங்க”
“சார் பேர் தெரியும் ஜனா, உங்கப் பேரு…?”
“விஜி!”
“உங்க அப்பா ஹெல்த் ஓகேவா..?”
விஜி அமைதியாகி பிறகு”ம்ம்ம்! ஓகே தான்” என்றாள்.
“நான் தான் முதலில் பார்த்தேன் மேடம், பாவம் மயங்கி விழுந்துட்டார். இப்ப நார்மலா இருக்காரா..? சரியா தூங்கலைனு சொன்னார்”
“ம்ம்ம்! இப்ப நல்லா இருக்கார்.”
“சரிங்க மேடம்! வயசானவங்க நைட் ஸ்டே பண்ணாம அனுப்பி விட்டதே நல்லது. கவனமா இருங்க, எதுக்கும் அப்பாக்கு ஒரு ஹெல்த் செக் அப் போடுங்க, காலையில் வந்தா ஃபுல் செக் அப் பேக்கேஜ் சொல்றேன்” என்றாள் அப்பெண்.
“ஓகே! காலையில் ஹஸ்பேண்டை வரச் சொல்றேன்” என விடைப்பெற்று சென்றாள்.
விஜியின் மனதில் ஏதோ ஒரு வலி உருவானது, என்னாச்சு…? எதும் ஹெல்த் இஷ்யூ இருக்குமோ என யோசனையில் ஆழ்ந்தாள்.
அறைக்குள் செல்லாமல் வாயிலில் அமர்ந்திருந்தவள் ஃபோனில் மெசேஜ் வந்தது.
ஜனா ரீச் ஆகிவிட்டேன் என மெசேஜ் செய்திருந்தான்.
உடனே ஜனாவை ஃபோனில் அழைத்தாள், ஃபோனை அட்டென்ட் செய்யாதவன் சிறிது இடைவெளியில் அவனே மீண்டும் அழைத்தான்.
“சொல்லு ஜிமிக்கி!”
“சாரி ஜனா! பிஸியா..?”
“இல்ல! நான் ஹாலில் படுத்திருந்தேன். அதான் வெளியில் வந்து உனக்கு கூப்புடுறேன்”
“ஓ! ஏன் ரூமுல தூங்க வேண்டியது தானே”
“மாமா அங்கப் படுத்து இருக்கார்”
“ஓகே! ஓகே!”
“சும்மா தானே ஃபோன் பண்ண…?”
எப்படி கேட்பது என தடுமாறியவள், “ஜனா! நான் உள்ள வரும் போது ரிசப்சன் பொண்ணு ஒன்னு சொன்னாங்க..”
“ம்ம்ம்! நல்லா இருக்கிறாருனு சொல்லிட்டீயா..? அந்தப் பொண்ணு பாத்து தான் சொன்னது. நல்லப் பொண்ணு..”
“சொல்லிட்டேன், பட் எனக்கு அது தெரியாதுல..”
“ம்ம்ம்! நவ் ஓகே விஜி” எனப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.
“அந்தப் பொண்ணு ஃபுல் செக் அப் பண்ணி பாத்துடுங்க, வயசாகதுலனு சொன்னாங்க. நான் காலையில் உங்களை வந்துப் பாக்க சொல்றேனு சொன்னேன்.”
ஜனாவிற்குப் புரிந்தது விஜியின் மனநிலை. அதைப் பற்றிக் கேட்டால் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடுவாள் என உணர்ந்தவன், “சரி விஜி! நாளைக்கு நான் என்னனு பாத்துக்கிறேன், நீ போய் தூங்கு, குட் நைட்”
“ம்ம்ம்! குட் நைட்” என வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
மங்கையும், ஜமுனாவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்க வேண்டியது என யோசித்தாள். ஜமுனாவையே ஆழ்ந்துப் பார்த்த விஜியின் மனம் சித்தியின் வயதை யோசித்தது.
‘அவ்வளவு அதிக வயதில்லை ஆனால் இது என்ன வாழ்க்கை…?’ என மனம் கேட்டது.
‘அவங்களா தேர்ந்தெடுத்த வாழ்க்கை’ என மனதிடம் கூறினாள்.
‘அந்த வயதில் அவங்க அப்படி யோசிச்சது தப்பில்லையே! அப்படி யோசிச்சு இப்ப ஒன்னும் சந்தோஷமா வாழ்ந்திடலையே..?’ என மனம் வாதிட்டது.
‘பொதுவா இவங்களுக்காக மத்தவங்க தான் பேசுவாங்க, இன்னைக்கு என்ன நீயே பேசுற…? ஐ வில் கில் யூ.. ஷட் அப்’ என அந்தச் சிறிய அமரும் கட்டில் படுக்கையில் போய் சாய்ந்தாள்.
மனம் அப்படியே அடங்கியது.
***
இன்னும் விடியல் வரவில்லை, விஜி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“ஏங்க! என் புருசனை அழைச்சுட்டுப் போனவளே!” என்ற குரல் கேட்டு தான் இருவரும் கண் முழித்தனர்.
“என்னக்கா!” எனப் பதறி எழுந்த ஜமுனா, அவர் அருகில் நின்றாள்.
விஜி”என்ன வேணும்மா..?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தாள்.
“ஆமா! நீங்க யாரு…?” என்ற மங்கையிடம் ஜனா, “நான் உங்கப் பொண்ணுக்குப் புருசன். அது எப்டி என்னைய மட்டும் மறக்குறீங்க அத்தை, உங்க தங்கச்சியை மறக்கல…” எனக் கேட்டான் வேண்டுமென்றே.
“அவ மூஞ்சிய மறக்குமா…? என் அம்மா மூஞ்சி அப்டியே இருக்கும். ஏய்! அம்மா எங்க காணும்…?” எனக் கேட்டவரை சமாளிக்க படாதப் பாடுபட்டாள் ஜமுனா.
விஜி”இந்தக் கேள்வி தேவையா ஜனா..?” எனக் கணவனை முறைத்தாள்.
“எனக்கு என்ன தெரியும். சரி வா நம்ம போகலாம்..”
“தம்பி! அத்தான் எங்க காணும்..? கூட கூட்டிட்டு வந்தேனு சொன்னீங்க”
“மாமா ஏதோ வாங்கனுமுனு இடையில் இறங்கிட்டாரு, வந்துடுவார். விஜி! நீ வா போகலாம்” என்றவன் திரும்பி ஜமுனாவிடம்”டிபன் இங்க பாத்துக்கோங்க. மதியம் அம்மா, அப்பா வரேனு சொன்னாங்க, சாப்பாடு கொண்டு வருவாங்க.” என்றுக் கூறினான்.
“சரி தம்பி!”
“அம்மா! சாப்புட்டு தூங்கு, ரொம்ப தொல்லை பண்ண டாக்டர் கிட்ட சொல்லி இன்னும் பத்து நாளு தங்க வச்சுடுவேன்” எனத் தாயை மிரட்டினாள் விஜி.
“வேணாம் விஜி, எனக்கு எப்படா நம்ம வீட்டுக்குப் போவமோனு இருக்கு. நீ டாக்டர் கிட்ட எதுவும் சொல்லாத, நான் வேணா பேசவே இல்லை” என வாயில் விரல் வைத்தார் மங்கை.
சிரித்த விஜி”ரொம்ப நடிக்காத, இதை ஜெய் வேணா நம்புவான். நான் நம்ப மாட்டேன். அமைதியா இரு யாரையும் தொல்லை பண்ணாமல்” எனத் தாயிடம் கண்டிப்புடன் கூறிவிட்டு வெளியேறினாள்.
“ஏன் அவங்களைத் திட்டுற விஜி, என்ன பேசுறாங்கனு அவங்களுக்கே தெரியாது.”
“பாரு! அம்மா பொண்ணை மிரட்டுற காலம் போய் இப்ப பொண்ணு அம்மாவை மிரட்டுற நிலை வந்துட்டு” எனச் சிரித்தான்.
“போதும் வாங்க!” என எதிரில் முத்தையா வருகிறாரா என மனம் தேடியதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
***
ஜனா ஆபிஸ் விட்டு மருத்துவமனைக்கு செல்ல, ரிசப்ஷன் பெண்ணிடம் விசாரித்துவிட்டு முத்தையாவிடம் விசயத்தைக் கூறினான்.
அவரோ”அய்யே! மாப்புள்ள இது எல்லாம் பகல் கொள்ளை, நல்லா இருக்க உடம்பை அது இதுனு சொல்லி காசுப் புடுங்க பாக்குறாங்க, நீங்களும் அதைப் போய் நம்பிட்டு, தூக்கம் பத்தாம தான் மயக்கம் வந்துட்டு, பாருங்க இப்ப நல்லா இருக்கேன். இன்னைக்கு புள்ளையை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க தூங்க” என்றார் முத்தையா.
ஜனா அவ்வளவுக் கேட்டும் மறுத்துவிட்டார்.
“சரி மாமா! அப்ப நைட் வீட்டுக்குப் போயிடுங்க, விஜி வந்து தங்கிப்பா..”
“இல்லல்ல! புள்ளைக்கு ஒத்து வராது. அது வீட்டுல தூங்கட்டும். நேத்தே நீங்க சொன்னீங்கனு போனேன். இன்னைக்கு நான் நல்லா இருக்கேன்.” என இரவு விஜி தங்குவதையும் மறுத்தார்.
ஜனா வீட்டிற்கு சென்றான். விஜி கிச்சனில் நிற்க, வசந்தா அருகில் இருந்த கோவிலிற்குச் சென்றிருந்தார்.
விஜி இரவு மருத்துவமனைக்குப் போய் கொள்ளலாம் என பகலில் செல்லவில்லை.
ஹாலில் அப்பு மற்றும் ஜெய்யுடன் பேசிக் கொண்டே அமர்ந்தவன், விஜி டீ வேண்டுமா எனக் கேட்க சரி என்றான்.
சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து அறைக்குள் சென்றவனிற்கு அதிர்ச்சி.
“விஜி!” என அழைக்க, பின்னால் டீ எடுத்து வந்தவள்,
“என்ன….?” எனக் கேட்டு அறைக்குள் நுழைந்தாள்.
“இது எப்டி…? யாரு கொண்டு வந்தா..”
“ம்ம்ம்! உங்க மாமனாரு வேலை தான் இது. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் மாமா கேக்கவே இல்லை. அவர் ஆசையைத் தடுக்க கூடாதாம்..” எனப் புலம்பிக் கொண்டே, ஆபிஸ் செல்ல உடையை எடுத்துக் கொண்டு இருந்தாள்.
“பாருடா! பொண்ணு தரையில் படுக்கக் கூடாதுனு, கட்டில் வாங்கிப் போட்டுட்டார் அதுவும் இந்த சைஸை எங்கப் புடிச்சார்…?” என அமர்ந்து ஆராய்ந்தான்.
அவனைத் திரும்பி முறைத்தவளைப் புரிந்துக் கொண்டவன், “அவரு என்ன நினைச்சுட்டு இருக்கார்..? என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தர மாட்டானா..? அவரு யாரு..? இரு அவர் கிட்ட நேரில் பேசிக்கிறேன். இந்தக் கட்டிலுக்கு எவ்வளவு பணமோ அதைக் கொடுத்துடுறேன்..” என வாயில் வந்ததை அடித்துவிட்டான்.
“ஜனா! ஆக்ஷன் போதும். இந்த வீட்டு அட்ரெஸ் உங்க மூலமா தான் போய் இருக்கு, நான் இருக்கும் போது தான் கட்டில் வந்தது, இன்னைக்கு நான் ஹாஸ்பிடல் போகல” என லுக் விட்டாள்.
‘மாட்டிட்டேனா!’ என முழித்தவன், “ஜிமிக்கி! என் செல்லப் பொண்டாட்டில காலையில் மாமா ரொம்ப கெஞ்சிக் கேட்டார், உனக்காக இதையாச்சும் வாங்கி தரதா அதான் நானே கடையில் இறக்கி விட்டு வந்தேன். அந்தக் கடை திறக்கும் வரை வெயிட் பண்ணி ஆர்டர் குடுத்துட்டு வந்தார்.” என அவள் முன் சென்றுக் கெஞ்சினான்.
“இருக்க கிடைத்த இடத்தில் கோபத்திற்கு எல்லாம் வழியில்லை ஜனா…”
“இப்படியே நம்ம நிலை இருந்திடாது ஜிமிக்கி. மாறும்..”
“உங்கக் கூட இருந்தாலே போதும். எங்க இருந்தா என்ன…?” எனக் கூறி அவன் மார்பில் சாய்ந்தாள்.
“தேங்க்ஸ்! எங்க சண்டைப் போடுவீயோனு நினைச்சேன்.”
“அந்த மூட் இல்லை ஜனா, சரி! நைட் நான் அப்படியே ஹாஸ்பிடல் போயிடுறேன்”
“இல்ல! மாமாவே தங்கிறேனு சொன்னார்.”
“எனக்கும் என் அம்மா கூட இருக்கனும் என ஆசையிருக்கு ஜனா, அவரை வீட்டுக்கு வந்துட்டு காலையில் போக சொல்லுங்க” என அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினாள்.
ஜனா மொத்தத்தில் குழம்பினான்.
‘இது அம்மா மேல் உள்ள பாசமா..? இல்லை அப்பா உடல் மேல் உள்ள அக்கறையா…? புரியலையே’ என யோசிக்க முடியாமல், முத்தையாவைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
விஜியும், முத்தையாவும் நேருக்கு நேர் பார்த்து இரண்டு தினங்கள் ஆனது.