“மிஸஸ் மயிலாஞ்சி” இது எனது அடுத்த தொடர்கதை, தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
விமர்சனங்களில் கருத்துகளை மறக்காமல் சொல்லிடுங்க.. கதையானது என்ன மாதிரியான பயணம்..? சொல்கின்றேன்… கதைக்கு வாங்கப் போகலாம்.. 😄😃😀
…. ❤சங்கீதா ராஜா❤…
அதிகாலையின் கோழிக் கூவும் நேரம் என்று சொல்ல ஆசை தான் ஆனால் உண்மை, இப்பொழுது எல்லாம் கோழிக் கூவும் நேரம் அதிகாலை என்று சொல்ல முடியாது.
அட ஆமாங்க! நடுராத்திரி ஒரு மணிப்பொழுதில் கூட கூவுது.. கூறுக்கெட்ட கோழி..
அதை கேட்டு எழுந்தால் எவ்வளோ பெரிய பாவம்..😄😃😀
அனுபவமே தான்..
ஆனால் நம்ம நாயகி அந்த வீட்டில் ஒரிஜினல் கோழிக் கூவலிற்கு பதிலாக அலாரத்தில் செட் செய்து சரியாக ஐந்து மணியளவில் கூவுமாறு பதிவுச் செய்திருந்தாள்.
அலாரம் கூவிட, சிரமபட்டு கண்களை திறந்தவள், அதை ஆப் செய்து திரும்பி படுத்தாள்.
‘அடியேய்! எழுந்திரி காலேஜ் போகனும், இன்னைக்கு தான் முதல் நாள், என் அமுல் பேபில…’ என்று எழுப்பியது அவ மனசாட்சி தான்.
சட்டென்று கண்களை திறக்கவில்லை ‘ஏய்! காலங்காத்தால என்கிட்ட வாங்கி கட்டாம ஓடிப்போயிடு,
நான் எலும்பு மறைய சதையோடு இருக்கேன், அது உனக்கு அமுல் பேபியா? இரு உன்னை’ என கண்களைத் திறந்து
சுற்றித் தேடினாள் தன் மனசாட்சியை, பிறகு”ஓடிப்போயிட்டீயா…?” என்று சிரித்தப்படி எழுந்தாள் அவள்.
வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டவளிடம்,
“என்ன பேத்திப்பொண்ணு, காலையில் சீக்கிரம் எழுந்திரிச்சுட்ட போல…?” என்று கேட்டார் பக்கத்தில் கடை வைத்திருக்கும் டீ கடைக்காரர் தாத்தா ராமு.
“தாத்தா! இன்னைக்கு எனக்கு முதல் நாள் காலேஜ்…”
“அப்படியா.. எங்க உன் வீட்டில் யாரும் எழுந்திரிக்கலையா…?”
“பாவம் தூங்கட்டும், வயசானவங்கள அதான் நான் இருக்கேன்ல தாத்தா” என கடைசிக் கோட்டை இழுத்தவள், “தாத்தா!
நேத்து அந்த வீட்டில் எவ்வளோ பிரச்சனை தெரியுமா, பாவம் அந்த மூத்த அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துட்டு, என்ன ஆகப் போதோ…” என்றாள் நிமிர்ந்தவாறு.
“அடுத்து என்ன ஹாஸ்பெட்டல், ஆப்ரேசன் தான்” என்றார் அவரும் சாதரணமாக..
“பாவம் தானே தாத்தா”
“ராமு! யாருக்கு முடியலை..?” என்று கேட்டார் டீக்கடையில் நின்றவர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்…”
அவளையும், அவரையும் மாறி மாறி பார்த்தவர், காலையில் பேச வேண்டிய கதை தான் எனக் கூறிவிட்டு, டீ கிளாஸை வைத்துவிட்டுப் போனார்.
“சரி தாத்தா! நான் போறேன், நீங்க வேலையை பாருங்க” என்று வீட்டிற்குள் ஓடினாள்.
பதினெட்டு முடிந்து பதினொன்பதில் இருக்கும் பருவ மங்கை.
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து ஒரு வருடம் வீட்டில் இருந்து இப்பொழுது தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்.
காலை உணவை சமைத்து முடித்தவள், மதியத்திற்கு தனக்குத் தேவையான சாப்பாட்டினை செய்துவிட்டு, டீ போட்டு எடுத்துக் கொண்டு ஹாலிற்கு சென்றாள்.
ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த வேலாயுதம், அவளை கண்டு”டீ ரெடியா” என்று கேட்டப்படி வாங்கினார்.
“ஆமா மாமா, எங்க அத்தை…?”
“அவ எழுந்திரிச்சுட்டா வருவாம்மா” என்ற அடுத்த நொடி, “என்ன இன்னைக்கு காலையயிலே வீடே ரணகளமா இருக்கு…?” என்று வந்தார் விமலா.
“இன்னைக்கு நம்ம அமுலுக்கு காலேஜ்ல விமலா…”
“ம்ம்ம்! என்னமோ கூத்து அடிங்க, ஆமா இவ காலேஜ் போய் இப்ப என்ன கிழிக்கப் போறா….?”
“விமலா! போதும் எல்லாம் பேசி முடிச்சாச்சு..” என்றவர்,”நீ போம்மா, போய் ரெடியாகு காலேஜ் பஸ் வந்துடும்..” என்றார்.
அவளும் சென்று குளித்து, நேற்று ரேவதி வாங்கிக் கொடுத்த சுடிதாரைப் போட்டுக் கொண்டாள்.
வெளியில் விமலா புலம்பியது காதில் விழுந்தது.
“எல்லாம் அந்த ரேவதியும் அவ புருசனும் செய்ற வேலை…”
****
சரியாக ஏழு மணிக்கு ரெடியாகியவள் பையுடன் வெளியில் வர, “அத்தை! காலைக்கு இட்லி பண்ணி இருக்கேன், மதியத்திற்கு குழம்பு வச்சு இருக்கேன், சாதம் மட்டும் நீங்க வச்சுக்கோங்க…” என்றாள்.
“ம்ம்ம்!” என்று அழுத்தினார் அவர்.
வேலு”செலவுக்கு இதை வச்சுக்கம்மா” என்று நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.
“ஏன் அம்பது ரூபாய் போதாத, இங்க கொண்டாங்க” என்று புடுங்கிய விமலா அவரிடம் இருந்த ஐம்பது ரூபாயை மாற்றிக் கொடுத்தார்.
அதை வாங்கியவள் கிளம்ப, “நில்லு!” என்றார் விமலா.
“இது என்ன கழுத்தைச் சுத்தி அந்த துணியைப் போட்டுட்டு போற. நல்லா அந்த தாலி தெரியுற மாறி போட்டுட்டு போ” என்றார் அழுத்தமாக.
அவளும் ஷாலை நகர்த்தி தன் கழுத்தில் கிடக்கும் தாலியைப் பார்ப்பவர்களுக்கு தெரியும் படிப் போட்டுக் கொண்டாள்.
வேலு”அத்தான் போன் செஞ்சானா…?” என்றார்.
“ம்ம்ம்!”
“சரி! நீ போ, நான் வரேன் பஸ் ஸ்டாப் வரை” என்று எழுந்து சென்றார் கூடவே வேலு.
விமலா கண்டுக்கொள்ளவில்லை…
அவள் மாமனார் துணையுடன் முதல் நாள் பஸ் ஏறும் இடத்திற்கு சென்றாள்.
அது சென்னையில் நடுத்தர மக்கள் குடியிருக்கும் பகுதி, கலப்பான கலாச்சாரங்கள் மிகுந்தது.
*** ***
பேருந்தில் ஏறியவளிடம்”விச் டிப்பார்ட்மென்ட்…?” என்று கேட்டார் ஒருவர்.
“நான் ஐடி முதல் வருசம்” என்றாள் அவள்.
“வேர் இஸ் யுவர் ஐடி கார்டு.?”
அவள் எடுத்து நீட்ட, “திஸ் இஸ் நாட் ஃபார் ஹோல்டு இன் யுவர் ஹேன்ட். புட் யுவர் நெக்..” என்று கடுப்படித்தார் அந்த லேடி ஸ்டாப்.
பின்ன அவள் படித்தது எல்லாம் மூங்கில்காடு பக்கம் ஒரு அரசுப்பள்ளி. அங்கு ஆங்கிலத்தை இஸ், ஆர், வாஸ் என விடாமல் மனப்பாடம் செய்ததோடு சரி அவள் ஆங்கில அறிவின் பேச்சுவழக்கு.
இப்பொழுது இங்குப் பேசப்படும் இஸ், ஆர், வாஸ் எல்லாம் ஏதோ புதிய டிஸ்னெரி வார்த்தைகள் போல தெரிந்தது.
அவள் சென்று காலியா இருந்த ஓர் இடத்தில் அமர்ந்தாள்.
“ஹேய்! வாட்ஸ் யுவர் நேம்…?” என்றாள் ஒருத்தி..
“என் பேரு நிரஞ்சனி பா”
“வாட்! பாவ.. ஸ்பீக் இன் இங்கிலிஷ்..”
நிரஞ்சி தலையை ஆட்டியவாறு, மனதில்
‘நான் எல்லாம் இங்கிலிஷ் பேசினா நீங்க தாங்க மாட்டீங்க’ என்று சிரித்தாள்.
“விச் டிபாரட்மென்ட்…?”
“ஐடி”
“ஓ! ஹேய் யுவர் ஜூனியர்..” என்று அருகில் உள்ளவளிடம் நக்கலடித்தாள் கேட்டவள்.
பசங்க எல்லாரும் பின் பக்கம் கத்தினர்.
“ஓ! ஐடி கேர்ள்…” என்று.
அமைதியாக அமர்ந்திருந்தாள் நிரஞ்சி.
“ம்ம்ம்! லுக்கிங் பப்ளி” என்று சீண்டிய மற்றொருத்தி, “ஹவ் மெனி டைம்ஸ் ஈட் இன் எ டே..?” எனக் கேட்டாள்.
சத்தியமாக புரியாத நிரஞ்சி, ஈட் மட்டும் விளங்க, “ஓ! சாப்புட்டனே”என்றாள் சட்டென்று.
அனைவரும் சிரிக்க..
“ம்ம்ம்! ஸீ ஹெர் நெக், ஸி இஸ் மேரிடு கேர்ள்…” என்ற ஒரு சீனியர்,
“ஒய்! வாட் இஸ் யுவர் ஹஸ்பேண்ட் நேம்…?”
“ஆ! அத்தான் பேரா, ஜெகன்..”
“ஓ!” என்று கத்தினர் பசங்க அதற்கும்.
“ஹேய் ஸட் அப்! ஸி இஸ் மேரிட்” என்று சிரித்தாள் ஒருத்தி.
“லூசா நீ! அவங்க நீ ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி சாப்பிடுவனு கேக்குறாங்க…?” என்றாள் அதுவரை அமைதியாக இருந்த நிரஞ்சி டிபார்மென்ட் ஃபர்ஸ்ட் இயர் சந்தியா.
நிரஞ்சி அப்பொழுது கூட அதை தவறாக எடுத்துக் கொள்ளாமல், “மூணு வாட்டி தான், ஆனா பசிச்சா இடையில் சாப்பிடுவேன் அக்கா..” என்றாள்.
“ஹேய்! கால் மீ சீனியர்.”
சந்தியா”சீனியர், அவளுக்கு புரியல விடுங்க பாவம் முதல் நாள்ல…” என்றாள்.
“ம்ம்ம்! பட் டீச் ஹெர் அபௌவட் ஹவ் டு ஸ்பீக்…” என்று சீனியர் மற்றவர்களிடம் பேச போய்விட்டாள்.
“ஹாய் நான் சந்தியா. உன் பேரு…?”
“ஐ! தமிழ்ல பேசுறீங்க, என் பேரு நிரஞ்சனி…”
“நைஸ் நேம்.. கல்யாணம் ஆகிட்டா…?”
“ஆமா!”
“எப்ப…?”
“இப்ப தான் கொஞ்ச நாள் ஆகுது…”
“ஹேப்பி மேரிட் லைஃப்.. ஹஸ்பேண்ட் என்ன பண்றார்…?”
“அத்தான், அமெரிக்கா போயிட்டார்…”
“அமெரிக்கா..? அப்ப நீ கூட போகலையா…? காலேஜ் சேர்ந்துட்ட”
“இல்ல! நான் அத்தை, மாமா கூட இருக்கேன், அத்தான் லீவ் போட முடியாதுனு போயிட்டார் அவசரமா..”
“சரி! நம்ம ப்ரண்ட்ஸ்.. ஓகே” என்று கையை நீட்டியவள், சந்தியானு கூப்புடு என்றாள்.
சிறிது நேரத்தில் பஸ் காலேஜ் வளாகத்தில் நின்றிட, அனைவரும் இறங்கினர்.
சீனியர்ஸ் தனியாக நடந்து செல்ல, அதில் ஒருத்தி தடுக்கிவிழப் போக”அம்மா!” என்றவாறு அருகில் இருந்தவளைப் பிடித்தாள்.
நிரஞ்சி உடனே சந்தியாவிடம்”சந்தியா! அய்யோ அந்த அக்கா இங்கிலிஷ்ல பேச மறந்துட்டு அம்மானு கத்துறாங்க, நான் போய் சொல்லிட்டு வரவா அது மம்மினு” என்றதுடன்,
சந்தியா அவள் கையைப் பிடித்து வேகமாக தூரக் கூட்டிட்டுப் போய், அடக்க முடியாமல் சிரித்தாள்.
“ஹேய்! நீ தெரிஞ்சுப் பேசுறீயா இல்ல வேணுமுனே பேசுறீயா”
“இல்ல! அந்த அக்கா தானே இங்கிலிஷில பேச சொன்னாங்க…”
“ஆமா! அதுக்காக…”
“இல்ல, இங்கிலிஷ் பேச சொல்லிட்டு அம்மானு தமிழில் சொல்றாங்களேனு”
என்று இழுத்தாள்..
“நீ சரியான ஆள் தான்”
“நான் படிச்சது கவர்மென்ட் ஸ்கூல் சந்தியா அங்க இங்கிலிஷ் எல்லாம் பேசினதே இல்லை, பாடமா மனப்பாடம் பண்ணி எழுதி பாஸ் பண்ணியாச்சு.. இங்க என்னனா சாதரணமா பேசுறதே இங்கிலிஷ் தான் போல… போ! என் பொழப்பு என்ன ஆகப் போகுதோ இங்க.. ஆமா, குட் மார்னிங், தேங்க்யூ எல்லாம் இங்கிலிஷ் தானே. எங்க ஸ்கூல இங்கிலிஷ் டீச்சர் அத மட்டும் தான் சொல்லும்.”
“பயப்புடாத, எல்லாம் போக போக புரியும்..”
“என்னத்த புரியப் போது, அப்ப படிச்ச மாதிரி மக்கர் பண்ணி எழுத வேண்டியது தான், அத சிறப்பா பண்ணிடுவேன். ஆமா! தமிழ் பாடமே இருக்காதமே.. அது தான் எனக்கு நல்லா வரும்…”
“இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இஞ்சினியர் எடுத்த…? பேசாம பி ஏ தமிழ் லிட்டச்சர் படிக்கலாமே…”
“ஆமா எங்க என் அண்ணி, அதான் அத்தானோட அக்கா அவங்க தான் இத படிக்க சொன்னது.. அப்ப தான் அத்தான் கூட போகும் போது அங்க வேலைக்குப் போக தோதுவா இருக்குமாம்.”
“ம்ம்ம்! சரி விடு, நான் இருக்கேன்ல ஹெல்ப் பண்றேன்…”
நிரஞ்சி மக்கு இல்லை ஆனால் இங்கிலிஷில் இருந்தால் அதை அப்படியே படித்து வாமிட் பண்ணிடும் திறமைசாலி.
மனசில் சோகமே இருக்காது, பட்டாம்பூச்சியாய் மனதை பறக்க விடுபவள்.
கல்யாணம் என்ற கூண்டில் அடைப்பட, இப்பொழுது தான் காலேஜ் பக்கம் எட்டிப் பார்க்கின்றாள்.
நாயகியாக இனி நிரஞ்சனி…
*** ****
“காலேஜ் டைம் ஆச்சு, நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க கிளம்பமா…?” என்றார் தந்தை ராகவேந்திரா.
“ரெடி டாட்!” என்று டைனிங்கில் அமர்ந்தான் அன்பானந்தன்.
“காலேஜ் நம்மளோடதா இருக்கலாம், அதுக்காக நீ கண்ட நேரத்துக்குப் போக கூடாது, சொல்லிட்டேன். ஏதாவது கம்ப்ளைன்ட் வந்தது நான் பொறுப்பில்லை…”
“ஏன் கரிச்சுக் கொட்டுறீங்க…?” என்று டிபனை எடுத்து வைத்தார் பிரபாவதி.
“ம்ம்ம்! அவன் இன்னும் ஸ்கூல் படிக்கல காலேஜ் போயிட்டான் பிரபா.”
“தெரியுது..”
“அம்மா! இந்த இட்லியை மாத்துங்க, அட்லீஸ்ட் ஸ்டப்டு இட்லி செய்யுங்க” என்றான் அன்பு.
“தாத்தா! எனக்கு இன்னும் இட்லி வைக்கல…” என்றான் ஆறு வயது அச்சிறுவன் யுவானந்தன்.
“ஓ! உனக்கு வைக்கலையா இன்னும்” என்று மனைவியை முறைத்தார் அவர்.
“உனக்கு யாரு சின்னப்பிள்ளைனு தெரியல பிரபா, வளர்ந்த மாட்டுக்கு ஊட்டுற, பச்சப் பிள்ளைக்கு இன்னும் தட்டில் வைக்கல…” என்றார்.
“சும்மா என்னைய குறை சொல்லாதீங்க, ஏன் நீங்களும் இங்க தானே இருக்கீங்க வைக்க வேண்டியது தானே..” என்ற பிரபா, மாடிப்படிகளில் நடந்து வரும் காலடிகள் சத்தம் கேட்க…
“யுவி! தங்கம் இந்தா இட்லி, நல்லா சாப்பிடனுப்பா” என்று கொஞ்சியப் படி இட்லியை எடுத்து வைத்தார்.
“சரி பாட்டி!” என்று மழலை அவன் மெல்ல பிய்த்து சட்னியில் வச்சு வாயில் போட்டான்.
வேகமாக இறங்கியவன் நேராக வந்து டைனிங்கில் நடுச் சேரில் அமர்ந்தான்.
“யுவி! ஏன் லேட்டா சாப்பிடுற…?”
“நான் எய்ட் ஒர் கிளாக்கே வந்துட்டேன் டாட்…” என்றது சிறுசு.
நிமிர்ந்துப் பார்த்தவன், “டைமுக்கு அவனுக்கு சாப்பாடு வைக்கனும், முடியலனா சொல்லனும்” என்றான்.
“தம்பி! இன்னைக்கு சர்வென்ட் வரலை அதான் கொஞ்சம் லேட் ஆச்சு. இந்த பிருந்தா வேற உதவிக்கே வரலை…” என்றார் பிரபா.
“நீ என்ன புரோப்ஸர்களுக்கு அட்டென்ஸ் எடுக்கப் போறீயா…?”
“இல்லண்ணா! இதோ ரெடியாகிட்டேன்” என்று அவசரமாக இட்லிகளை பிய்த்துப் போட்டு கிளம்பினான் அன்பு.
பிரபா மனதில்’பேச்சிலே மிரட்டி வச்சு இருக்கான், எம் புள்ளை அவசரமா சாப்புட்டு ஓடுது…’ என்று கணவனை முறைத்தார்.
“டாட்! ஃபினிஸ்டு…”
“வெரி குட்”
பிரபா கண்களை அசைக்க, ராகவேந்திரா தலையை அசைத்து, “தம்பி! நிறைய ஜாதகம் வருது, ஏதாவது ஒன்னை தேர்வு செஞ்சா இந்த சின்னப்பிள்ளைக்காவது ஆகுமுல ஒரு ஸ்தானம்..”
“ஏன்! நீங்க எனக்காகனு சொல்லி அடுத்ததை பண்ணி அனுபவிக்கிறது போதாது.. யுவி என் மகன் அவனுக்கு நான் இருக்கேன் அப்பா, அம்மா ரெண்டுமா.. உங்களுக்கு அவனை பாக்குறது கஷ்டமுனா, நான் ஆள் ஏற்பாடு பண்ணிக்கிறேன்..”
“அய்யோ தம்பி! அப்படியில்லை, யுவி யாரு, எங்களுக்குப் பேரன். கஷ்டமா இருக்குமா பாத்துக்கிறது. என்ன இருந்தாலும் அம்மா மாதிரி வருமா…?” என்றவரை அவன் பார்த்த பார்வையில், பேச்சு நின்றது..
“யுவி! கெட் ரெடி, ஸ்கூலில் விட்டுப் போறேன்..”
எழுந்து கைகழுவியவன் பின்னே யுவியும் ஓடி பேக்கை மாட்டிக் கொண்டு நின்றான்.
அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அவன், “சர்வானந்தன்”
“ஏன் நான் பண்ணினது பத்தாத..? அத தான் அவன் சொல்லிட்டுப் போறான்..”
“அப்ப என்னைய கொடுமைக்காரினு சொல்றீங்களா…? நான் சித்திக் கொடுமை பண்றேனா…?”
பிரபா பேச ஆரம்பித்ததும் எழுந்து சென்றார் ராகவேந்திரா.
சர்வா, யுவியை ஸ்கூலில் விட்டு நேராக வேகத்தைக் கூட்டினான் காலேஜ் நோக்கி.
காலேஜிற்குள் கார் நுழைய கதவைத் திறந்த செக்யூரிட்டி சல்யூட் அடித்தான்.
“SARVA ENGINEERING COLLEGE” என்ற பெயர் பலகை பெரிதாக தெரிய, கார் வேகமாக சென்றது உள்பக்கம்.
இறங்கியவன் தன் அறையை நோக்கிச் சென்றான்..
நம் நாயகனான சர்வானந்தன்….
சர்வா அரோகென்ட், மான்ஸ்டர் எல்லாம் இல்லை.
எளிமையாக பழகக் கூடியவன் தான், ஆனால் வாழ்க்கையில் விழுந்த அடி அப்படி.
அதன் மூலமாக தன்னை கூண்டுக்குள் இறுக்கிக் கொண்டான். தேவையான நேரத்தில் தேவையானவற்றை மட்டுமே பேசுவான்.
யுவிக்கு நல்ல அப்பா, அவனோடு விளையாடும் சிறந்த நண்பன்.
ஆனால் வீட்டில் மற்றவர்களிடம் தேவைக்கேற்ப மட்டுமே பேசுபவன்.
அன்புக்கு, அண்ணன் என்ற பயம் இருக்கும். ஆனால் பிருந்தாவிற்கு சர்வா மேல் பயம் எல்லாம் இல்லை மாறாக பாசம் இருக்கும்.. ஆனால் கோபக்காரி.
சர்வா தன் அறையில் முதல் நாள், முதல் வருடப் பிள்ளைகளுக்கு இன்ட்ரோ மீட்டிங்காக ரெடியாகினான்..
மிஸஸ் மயிலாஞ்சி அடுத்து…
(நிரஞ்சனி வாழ்க்கைப் பயணம் கல்யாண வாழ்க்கையின் ஆரம்பம்.. சர்வாவின் வாழ்க்கைப் பயணம் கல்யாணம், குழந்தை என செல்கிறது. ஆனால் இனி பயணம் எப்படிப் போகிறது என்பது தான் இத்தொடர்கதை..
கல்யாணம்… தாலி கட்டிட்டா எல்லாமே மாறிடுமா…? மாறும், இரு மனங்களும் இணைந்தால் மட்டுமே.. ஆனால் இணையும் மனங்கள் இங்கு யார் யாரோ….?
உங்களை நம்பி இத்தொடர்கதையை ஆரம்பிக்குறேன்..
சமூகப்பார்வையோடு தான்.. காதல், குடும்பம், கல்யாணம் எவர் கூட அமைந்தால் சந்தோஷமுனு தெரியாது, ஆனால் அது கொடுப்பினை, கிடைக்கும் போது மறுக்காம அனுப்பவிக்கனும்.. மனசுக்குப் பிடித்தவாறு… அதையும் மீறி ஒரு மனம் மட்டுமே இணைந்தால் அது வெற்றி இல்லா வாழ்க்கை.. அதில் இருந்து விடுப்படுவதில் தவறில்லை. சூழ்நிலைப் பொறுத்தே இங்கு மனங்களும் மாறும், அது மாற்று மணத்தை புரியுமா…? தொடர்ந்து பார்ப்போம்..
கருத்துக்களை விமர்சனங்களில் சொல்லுங்க நண்பர்களே..
உங்கள் விமர்சனங்கள் தான் ஊக்கம் என் எழுத்திற்கு எப்பொழும், எதிர்பார்ப்புடன்…