சர்வா, திரவி இருவரும் யுவி மற்றும் நிரஞ்சியின் பேச்சைக் கேட்டு ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.
சர்வாவிற்குக் கோபம் வர, “நிரஞ்சனி! யுவி அதைச் சொல்றானா அவன் சின்ன பையன், ஆனா நீ அப்படியில்ல காலேஜ் படிக்கிற பொண்ணு, அதும் கல்யாணம் ஆனவள் அப்படியிருக்க எதையும் யோசித்துப் பேசனும்.” என்றான்.
“சார்! நான் நிஜமா தான் சொல்றேன். அதுவும் ஹாஸ்டலில் தங்குறது மாதிரி தானே! ஆனா என்ன ஒன்னு யுவிக் கூட இருக்க போறேன். அவ்ளோ தான், என்ன யுவி!” என்று அவனைக் கொஞ்சினாள்.
“என்ன பேசுற நீ.? உன் மாமியார் உன்னைய காலேஜ் போகவே கூடாதுனு சொன்னதால் தான் இப்ப ஹாஸ்டல் வரை வந்திருக்க, அதுக்குக் காரணம் உன் ப்ரண்ட் லிஸ்டிஸில் பசங்க இருக்காங்கனு, எங்கக் கூட தங்கினா அது எப்படி வெளியில் தெரியுமுனு யோசிக்க மாட்டீயா.? எனக்கு மனைவி இல்லை, யுவிக்கு அம்மா இல்லை, நீயோ புருசனை விட்டுத் தனியா இருக்க, இது எல்லாம் சமூகப் பார்வையில் தப்பா ஆகும். அது உனக்கு முதலில் புரியனும்.” எனச் சற்று அழுத்தமாக சர்வா கூறினான்.
“டேய்! அமைதியா பேசுடா, ஏன் கோபமாகுற.?” என்றான் திரவி.
“பின்ன என்னடா, யுவி சின்னப் புள்ளையா பேசுறான் ஆனா நிரஞ்சனி ஒன்னும் குட்டி பாப்பா இல்ல, அவங்களைச் சுற்றி நடப்பது புரியனும். அது மட்டுமில்ல, கூட இருக்கவங்களோட மனநிலை, தனக்கு என்ன பொறுப்பு, தான் இருக்கும் சூழ்நிலை இவை எல்லாம் மனசுல ஏத்திக் கொஞ்சம் மெச்சூரிட்டியா பிகேவ் பண்ணனும். இப்படி வெகுளியா இருந்தா சமூகம் புரட்டிப் போட்டுட்டு போயிடும்.” என்றான் கோபமாக.
நிரஞ்சனி நம்ம என்ன சொல்லிவிட்டோம் என்று சர்வாவின் கோபத்தைக் கண்டு பயந்து, யுவியுடன் திரவியின் கையைப் பிடித்தாள்.
“சர்வா! இப்ப அம்லு என்ன சொல்லிட்டானு இப்படி திட்டுற.? சொல்ல போனா நம்ம தான்டா அளவுக்கு மீறி யோசிக்கிறோம், ஆனா அவ எது தேவையோ அத அளவா யோசிக்கிறா. இப்ப அவளைப் பொறுத்தவரை யுவிக்கு சப்போர்ட்டா இருக்கனும் அது மட்டுமே யோசிச்சு பேசுறா. ஆனா நம்ம அதுக்கு மேல யோசிச்சு, யாரு என்ன சொல்வானு பாக்கிறோம். அப்ப யாரு மேல தப்புடா.?” என்றான் திரவி.
“நீ நிரஞ்சனிக்கு சப்போர்ட் பண்றேனு எதையோ பேசாத, அவங்களைக் கொஞ்சம் மெச்சூர்டா பிகேவ் பண்ண சொல்லு, இது சென்னை சிட்டிடா. இவங்க இப்படி இருந்தா பிழைக்க முடியாது.”
“சார்! சென்னையா இருந்தாலும் நான் நிரஞ்சனி தானே அதுக்காக பேரு மாத்த முடியாதே, யுவி சின்ன புள்ளை சார், பாருங்க என்னைய பாத்ததும் ஆசையா ஒட்டிகிறான், எங்க ஊரிலும் சின்னப் புள்ளைங்க எல்லாம் என் வீட்டில் தான் கெடப்பாங்க என் அம்மா கூட திட்டிட்டே இருக்கும்” என்றாள் அவள்.
“உனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்களா அம்லு.?” என்றுக் கேட்டான் யுவி.
“ஆமா யுவி! என் ஊருக்கு வா, எல்லாரையும் அறிமுகம் செய்றேன்.”
“நீ என் கூடவே இரு அம்லு” என சிறுவன் ஆசையாக கூறினான்.
சர்வா யுவியை நிரஞ்சனியிடம் இருந்து வாங்கி, “யுவி! நீ இப்படி எல்லாம் பிகேவ் செய்ய கூடாது, அவங்களுக்குனு தனி வீடு இருக்கு, அவங்க உன் கூடத் தங்க முடியாது” எனப் பொறுமையாக கூறினான்.
“சார்! நான் ஹாஸ்டலில் தான் தங்கப் போறேன். எங்க வீட்டில் இல்லை” என முக்கியமான விளக்கமாக கூறினாள் அம்லு.
சர்வா முறைக்க, திரவிக்குச் சிரிப்பு தான் வந்தது.
“சர்வா! நோ ப்ராப்ளம், நீ ஏன் டென்சன் ஆகுற.? எனக்கும் அம்லு யுவியுடன் தங்கினா என்னனு தோணுது.” என்றான் திரவி சாதரணமாக.
“உனக்கு உன் மாமியாரை ஞாபகம் இருக்கா இல்லையா.? காலேஜ் போகவே அவங்க இப்ப வரைக்கும் அகெயின்ஸ்ட். இதில் யுவி கூடத் தங்க வைக்க யோசிக்கிற.? ஏன்டா! உனக்கு மூளை வேலை செய்யலையா.?” என்றான் காட்டமாக.
“எனக்கு மூளை வேலை செய்யுது, சமூகத்தைப் பத்தி நீ பேசாத , நீ எல்லாம் சமூகத்துக்கு பயப்புடும் ஆள் இல்லை. நீயே கொஞ்சம் யோசி, நீ தேடுற மாதிரி ஆள் கிடைக்கிறது கஷ்டம். ஆனா அம்லு யுவியைப் பார்த்துக் கொண்டு அவனுக்குப் பாடமும் சொல்லி தந்திடுவா, தட்ஸ் ஆல்! அவளும் சேஃபான இடத்தில் தங்கின நிம்மதி எனக்கிருக்கும். பட்! நீ ஏற்கனவே சொன்ன மாதிரி தனி வீடுப் பாத்து போகனும். ஏனா! உன் சித்திக் கூட இங்க அம்லு தங்குறதுக்கு என் மாமியார் கூடவே தங்க வச்சிடுவேன்”
அம்லு மனதில்’சித்தியா!’ என்று ஆச்சரியமாக யோசித்தாள். பிரபா சர்வாவின் அப்பாவிற்கு இரண்டாம் மனைவி என்பது நிரஞ்சனி அறியாதது, அவன் குடும்பத்தைப் பற்றியே அறியாதவள்.
“என்ன பேசிட்டு இருக்க திரவி நீ.? எனக்குச் சுத்தமா புரியல, நடக்குறதைப் பற்றி பேசு”
“டேய் நண்பா! நான் பாத்துக்கிறேன். நீ முதலில் தனியா ஒரு வீட்டைப் பாரு, பெட்டர் அப்பார்ட்மென்ட் டைப்பில் பாரு, அம்லு அங்க வந்து யுவியைப் பாத்துக்கட்டும். எங்க வீட்டில் நான் பேசிக்கிறேன். இப்ப நாங்க கிளம்புறோம், அம்லு வா போகலாம்” என்றுக் கிளம்ப தயாரானான் திரவி.
“அதான் நீ என் கூடவே தங்கப் போறீயே அம்லு, தினமும் சுட்டு தா, இப்ப பை.” என்றான் சந்தோஷமாக அவன்.
அவர்கள் கிளம்பினர்.
‘இது சரி வருமா…?’ என்ற யோசனையுடன் சர்வா பாத் ரூம் சென்றான்.
*
கார் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருக்க, திரவியின் ஃபோன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.
“போன் ஆப் ஆகிட்டு, உன் அண்ணி போன் பண்ணாம இருப்பா எஸ்கேப் ஆகிட்டேன்” என்றுச் சிரித்திட நிரஞ்சியின் போன் அடித்தது.
அதைப் பார்த்தவள் “அண்ணி தான் கூப்புடுறாங்க அண்ணா” எனச் சிரிப்புடனே நீட்டினாள்.
“பாரு, எப்படி புடிச்சா என்னைய ஃபோன் ஆப் ஆனாலும், இந்த விடாது கருப்புனு சொல்வாங்களா, அந்த மாதிரி தான் என் பொண்டாட்டி” என்று ஃபோனை வாங்கியவன் சடர்ன் பிரேக் போட்டான்.
“அம்லு! ஃபோனை ஆன் பண்ணிட்டீயா.?” என்று மெதுவாகக் கேட்டுக் கொண்டே காதில் வைத்தான்.
“நான் விடாது கருப்பா, ஏன் சொல்ல மாட்டீங்க.? எப்ப வந்து சேருவீங்க.? லேட் ஆச்சுல.”
அவன் ரொம்ப அவளைச் சமாதானம் செய்ய வதி எனச் செல்லமாக அழைப்பான்.
அவளோ ஃபோனை வேகமாக ஆஃப் செய்தாள்.
திரவி அம்லுவைப் பார்க்க, “அண்ணே! நீங்க வண்டி ஓட்டிகிட்டு இருக்கீங்கனு, சிரமம் இல்லாம ஃபோனை ஆன் பண்ணிக் கொடுத்தேன்” எனச் சாதரணமாக கூறினாள் .
“நீ நல்ல தங்கச்சிதான், சரி இந்தா ஃபோன்” என்று அதை நீட்டியவனுக்கு ஏதோ நினைவு வர, சர்வா கொடுத்த ஃபைலை எடுத்துப் பார்த்தான். பிறகு அந்த ஆபிஸிற்கு ஃபோன் செய்ய காரின் சார்ஜரில் தன் ஃபோனை ஆன் செய்து நம்பர் எடுத்து, அம்லு ஃபோனில் இருந்து கால் பண்ணி பேசிவிட்டு, காலையில் சீக்கிரம் வருவதாக கூறி வைத்தான்.
திரவி அம்லுவின் ஃபோனை கட் செய்ய, வாட்ஸ் ஆப் பார்வோடு மெசேஜ் வர அது தானாக ஓபன் ஆனது.
அதை க்ளோஸ் செய்யப் போனவன், பார்வையில் ஜெகன் மெசேஜ் பட்டது.
அதை ஒரு க்யூரியாசிட்டியில் அழுத்தினான். பிறகு மூளைத் தப்பென்று சொல்லவும், திரும்ப அழுத்த சென்றவன் அப்படியே இருந்தான்.
அப்படி எதும் சென்சார் மெசேஜ் இல்லாமல், புது மண தம்பதிக்களுக்கான அறிகுறிகள் அற்று காணப்பட்டது.
சந்தி அனுப்பிய ஐ லவ் யு மெசேஜ்க்கு கூட ரிப்ளே இல்லை. திரவிக்கு மனதில் ஏதோ தப்பாக தெரிந்தது.
“எதுக்கு நேத்து நடந்ததுக்கா? உன் மேல என்ன தப்பு இருக்கு, மருதாணி வச்சது தானே!”
“இல்ல” என்றுச் சந்தி அனுப்பிய மெசேஜ் பற்றிக் கூறினாள்.
“ஓ!” என்று மட்டுமே சொன்னவன், “நீயும் ஜெகனும் ஒரு நாளைக்கு எத்தனைத் தடவை பேசுவீங்க, மெசேஜ் பண்ணுவீங்க”
“ம்ம்ம்! நைட் தான் அத்தான் கால் பண்ணுவார், ரெண்டு நிமிஷம் நல்லா இருக்கியா, சாப்பிட்டீயா, அத்தை மாமா என்ன பண்றாங்கனு கேட்டு வச்சிடுவார். மெசேஜ் எல்லாம் தேவைனா மட்டும் தான் .” என்றாள் சாதரணமாக.
திரவிக்கு ‘ஒரு வேளை மெசேஜ் பண்ணி டெலீட் பண்ணி இருப்பாங்களோனு நப்பாசையில்’ கேட்டான். ஆனால் அவள் சொல்வதில் இருந்து விஷயம் புரிந்தது.
“அம்லு! உனக்கு ஜெகனைப் புடிக்குமா.?”
“ம்ம்ம்! புடிக்கும் அண்ணே”
“அப்ப அவன் கூட போகனுமுனு உனக்கு ஆசை இல்லையா.?”
“அதான் அத்தானுக்கு இப்ப முடியாதே நான் லேட்டா போயிக்கிறேன்.”
“ம்ம்ம்! தெரியல அண்ணே, ஆனா இப்ப எனக்கு மனசுல யுவி தான் இருக்கான், பாவம் சின்ன பையன், அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டமா இருக்கும்.” என்றாள் வருத்தமாக.
நம்ம என்ன கேட்கிறோம், இவள் என்ன பேசுறா.? என்று எண்ணியவன், “உனக்கு என்னைய, ரேவதி மாதிரி எல்லாம் வாழ ஆசை இல்லையா.? ஒன்னா ஒரே வீட்டில் நீயும், ஜெகனும் வாழனுமுனு.” என்று நேரடியாகவே கேட்டான்.
அவளோ முழித்தாள்.
“என்ன முழிக்குற.? சாதரணமா கணவனும், மனைவிக்குமான ஆசை தானே இது அம்லு.”
“ம்ம்ம்! ஆனா அத்தான் கூட இருந்தாலும் நாங்க பேசுறதே கொஞ்சம் தானே, உங்கள மாறி எல்லாம் பேச மாட்டாங்க, அதனால தனியா இருப்பதில் பிரச்சனை இல்லை அண்ணே” என்றாள் யதார்த்தமாக.
திரவி உடனே”ஏன் அம்லு, அவன் லவ் பண்ணி தானே கல்யாணம் செஞ்சான், அப்புறம் ஏன் பேச மாட்டேனுங்கிறான்” என்றான் கோபமாக.
“அச்சோ அண்ணே! அத்தான் ரொம்ப நல்லவரு, என்னையப் படிக்க சொன்னாரு, எனக்கு சின்ன வயசு தானாம் அதனால மத்த புருசன், பொண்டாட்டி மாதிரி இருக்க வேண்டாமுனு முதல் நாளே சொன்னாங்க” என ஜெகனுக்கு பரிந்து பேசியவாறு கூறினாள்.
“ம்ம்ம்! சந்தோஷமா இருந்தா சரி.” என்று காரை ஓட்டினான்.
*
இரவு…
திரவி வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று ஜெகனுக்கு ஃபோன் செய்தான்.
“சொல்லுங்க மாமா, நல்லா இருக்கீங்களா.?”
“நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க.?”
“ம்ம்ம்! குட், என்ன ஆச்சு அம்லு ஹாஸ்டல் விஷயம்.”
“அது!” என்று ஆரம்பித்து விடுதியில் இடம் இல்லை என்றுக் கூறினான்.
“என்ன மாமா ஹாஸ்டலில் ஒரு ஆளு எக்ஸ்ட்ரா வந்தா இடம் இருக்காத.?”
“அப்படியில்லை ஜெகன், முதல் வருட பிள்ளைகளுக்கு சரியா பிரிச்சு இருப்பாங்க, சீனியர்ஸ் கூடப் போட மாட்டாங்க, கிடைக்கலாம்! ஷேரிங் கேக்கனும்”
“ம்ம்ம்!”
“ஆமா! உன் கிட்ட ஒன்று கேக்கனும்.?”
“என்ன மாமா.?”
“நீ அம்லுவை காதலிச்சு தானே கல்யாணம் செஞ்ச, ஆனா ஒரு அன்யோன்யம் இல்லாத மாறியே தெரியுது.”
ஜெகனுக்கு மண்டையில் யாரோ தட்டியதுப் போல் திரவியின் கேள்வி இருந்தது.
“ஏன் மாமா, என்ன ஆச்சு.?” என்றான் சாதரணமாக.
அம்லு ஃபோனை பார்த்தேன் என்று சொன்னால் அது அநாகரிகம் ஆகிவிடும், “இல்ல, அம்லு கிட்ட பேசினேன் அவ சொன்னதை வச்சு ஒரு சந்தேகம் நீங்க சந்தோஷமா இருக்கிங்களானு.” என்றான் பொதுவாக.
“அம்லு சின்னப் பொண்ணு மாமா, அதான் அவளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமுனு, அதோடு படிக்கட்டும் மற்றது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.” என்று ஒரு சேர மென்று முழுங்கினான்.
“சரி, சரி, உன்னோட விருப்பம் ஆனா அம்லுக்கு நான் இருக்கேன் அதை மறந்துடாத, அவளை மாறி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும். இன்னேரம் மத்த பொண்ணுங்களா இருந்திருந்தா புருசன் கூட இல்லாதப்ப அவனோட போக தான் நினைச்சி இருப்பாங்க, இல்ல அம்மா வீட்டிலே இருந்துடுவாங்க. ஆனா அம்லு உங்க வீட்டில் வேலைக்காரி மாதிரி இருந்தா.”
“தெரியும் மாமா, அதான் வெளியில் வந்துட்டாளே. இனி அந்தப் பிரச்சனை இருக்காது.”
“ம்ம்ம்! ஆனா என் வீட்டில் ரொம்ப நாள் கஷ்டம். உன் கிட்ட ஒரு விஷயம் பேசனும்.”
“சொல்லுங்க மாமா!”
“என் ப்ரண்ட் சர்வா தெரியுமுல.”
“தெரியும், உங்க காலேஜ் ஓனர் தானே.”
“அவனுக்கு ஒரு பையன் இருக்கான். சின்ன வயசு தான், தமிழ் சொல்லிக் கொடுத்து, கூடவே இருந்து பாத்துக்க ஒரு டீச்சர் கம் நானி மாதிரி தேடுறான், எனக்கு நம்ம அம்லுவை ஏன் அனுப்பக் கூடாதுனு தோணுச்சு. நீ என்ன சொல்ற.? அம்லுவும் பாதுகாப்பா இருப்பா.”
ஜெகன் யோசித்தான். “இல்ல மாமா, அம்மா ஏதாவது சொல்வாங்க…” என இழுத்தான்.
“அவங்க சொல்வாங்க தான், அப்ப நீ அம்லுவைக் கூட்டிட்டு போயிடு, பிரச்சனையே இல்லை. என்ன நீ வொர்கிங் விசா தானே பேமிலி விசா கேட்டுப் பாரு, இல்லையா இங்க வா நானே ஜாப் வாங்கி தரேன் என் ப்ரண்ட்ஸ் இருக்காங்க. அம்லுக்கு ஒரு வழி கிடைக்கனும், நீயும் அவ கூட இருக்க மாதிரி சூழ்நிலை அமையும், அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கலாமுல” என்றான் திரவி தீர்க்கமாக.
ஜெகனுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது, “மாமா! ஏன் அவசரப்படுறீங்க.? நான் அம்மா கிட்ட பேசுறேன், அம்லுவுக்கு உங்க ப்ரண்ட் வீடு சேஃப்னா தங்க வைக்கலாம்” என்றான் பட்டென்று.
திரவிக்கு இந்த முறை ஜெகன் மீது சந்தேகம் அதிகமானது.
‘பொதுவாக யாரும் இப்டி ஒத்துக்க மாட்டாங்க, ஹாஸ்டல் வேறு, சர்வா வீட்டில் தங்குவது வேறு, ஆனால் ஜெகன் அம்லுவை அழைச்சுட்டு போகாமல், அவனும் வராமல் இருக்க, சர்வா வீட்டில் அவளைத் தங்க வைக்க சம்மதம் கொடுத்துட்டான்’ எனச் சந்தேகம் அதிகமானது.
அதையும் மீறி திரவி நினைத்தது நடக்கவிருப்பதால், சில பொதுவான விஷயங்களை பேசி ஃபோனை வைத்தனர்.
திரவி, ரேவதியிடம் விசயத்தைச் சொல்ல அவள் மறுத்தாள், அது எப்படி சாத்தியம்.? முதலில் அம்லு அம்மா சம்மதிக்க மாட்டாங்க, என் அம்மா சொல்லவே வேண்டாம் பத்ரகாளி தான் என்றாள்.
ஜெகன் ஓகே! சொல்லிவிட்டான் எனக் கூறி சமாதானம் செய்து, பிறரிடமும் சம்மதம் வாங்கினான் திரவி.
யுவியை கருவியாக பயன்படுத்தி சம்மதிக்க வைத்தான் மற்றவர்களிடம்.
இதில் மகிழ்ந்தது நிரஞ்சனி மற்றும் யுவி மட்டுமே.
சர்வாக்கு நிரஞ்சனி கணவன் பர்மிசன் கொடுத்துவிட்டான் என்பதில் சந்தேகம் கலந்த ஆச்சரியம்.
ஜெகன் அப்பா ஒன்றும் சொல்லமாட்டார் என்பது அறிந்தது தான், ஆனால் மாமியார் மறுப்பு சொல்லவில்லை என்பது திரவிக்கு அதைவிட ஆச்சிரியம்.
ரேவதி, விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்ல “ஆமா! என்ன வேலைக்காரியா தானே போறா, அதுல என்ன இருக்கு, அவளுக்கு ஏத்த வேலை தான், அது அவ படிப்புக்கு செலவு ஆகுமுல, மாப்பிள்ளை கிட்ட சொல்லி மாச மாசம் சம்பளம் கொடுக்க சொல்லு ரேவதி” என்றார் நக்கலாக.
திரவிக்குப் புரிய, “உன் அம்மாக்கு இவ்வளவு இளக்காரம் ஆகாது, அப்படி பாத்தா நீ கூட தான் பாடம் சொல்லி தர அப்ப அதுக்கு என்ன பேரு.? அம்லு படிப்பும் சொல்லிக் கொடுத்துப் பிள்ளை மாதிரி அந்தப் பையனை பாத்துக்கப் போறா. அதுக்கு பேரு வைக்கிறாங்களா.? இதுக்கு எல்லாம் சேர்த்து இருக்கு ஒரு நாளைக்கு உன் அம்மாக்கு” என்றுக் கடுப்பானான்.
“ஏங்க, நான் என்ன ஆயா வேலையா பாக்குறேன். நான் டீச்சர், அம்லு என்ன டீச்சரா.? சும்மா என் அம்மாவைப் பத்தி பேசாதீங்க, அடுத்து ஆகுற வேலையைப் பாருங்க” என்றாள் ரேவதி, என்ன இருந்தாலும் அம்மாவைக் கணவனிடம் விட்டுக் கொடுக்க முடியாதவள், எதனையோ கூறிச் சமாளித்தாள்.
*
விமலா கிண்டலாக சொன்னாலும், சர்வா, அம்லுவைச் சம்பளம் வாங்கும் நிலையான வேலையில் தான் யுவிக்கு பாதுக்காப்பாக நியமித்தான்.
திரவிக்கும் அதில் பிரச்சனையில்லை, அம்லுக்கு அந்தப் பணம் பயன் ஆகட்டும் என ஓகே சொல்லிவிட்டான்.
சர்வா வீட்டில் அம்லுவை யுவிக்குத் துணையாக வேலையில் அமர்த்தியது எதிர்ப்பை உண்டாக்கியது, ஆனால் அதற்கு வழிக் கொடுக்காமல் சர்வா புது வீட்டை ஓர் அப்பார்ட்மென்டில் பார்த்து விட்டான்.
அம்லுவின் அதிர்ஷ்டம் அந்த அப்பார்ட்மென்ட் அவளின் நண்பர்களான சந்தி, ஹேமா, ஸ்ரீ, ஹாசன் இருக்கும் அப்பார்ட்மென்ட்.
இது அம்லுக்கு தெரியாத சர்ப்ரைஸ்.
நிரஞ்சனியின் வாழ்க்கைப் பாதை மாற போகின்ற களம் தான் அந்த ஸ்கை அப்பார்ட்மென்ட்.