அது பல அடுக்குமாடி வீடுகளைக் கொண்டா கட்டிடம். அவரவர் வசதிக்கேற்ப தங்குவதற்காக வீடுகள் பிரித்து ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
மூன்று அறைகள், இரு அறைகள், ஒரு அறை, ஸ்டூடியோ பிளாட் என விலைக்கு ஏற்ப அடங்கிய வீடுகள் அங்கு உண்டு.
சர்வா பார்த்திருந்தது மூன்று அறைகள் கொண்ட வீடு.
காலையில் வீட்டிற்குப் பொருட்கள் வந்திறங்கியது, அதை அடுக்கவும் ஆட்கள் வந்தனர்.
அங்குப் புதிதாக குடி வந்தால் பலருக்குக் கண்டிப்பாக தெரிந்துவிடும், அதுவும் ஞாயிறு என்பதால் அபார்ட்மென்ட் ரொம்ப ஆக்டிவாக இருந்தது.
காலையில் மட்டன் வாங்க போன ஹாசன் திரும்பும் போது, பொருட்கள் ஏத்தி வந்த வண்டி ரிவெர்ஸ் ஆகியது.
செக்யூரிட்டியிடம் ஹாசன்”என்ன அங்கிள்! புதுசா குடி வராங்களா.?” என்றுக் கேட்டான்.
“ஆமா தம்பி! ஏ பிளாக்.”
“ஓ! அப்ப வசதியான பார்ட்டி போல, தமிழ் ஃபேமிலியா.?”
“தமிழ் தான் தம்பி, சர்வா காலேஜ் ஓனர் இருக்காருல அவரு தான் வராரு.” என்றார் சாதரணமாக.
“சர்வா காலேஜா, நாங்க படிக்குற காலேஜ் தான் அங்கிள். சர்வா சார் வராரோ” என்றுக் கேட்டவன், உடனே தன் நட்பு வட்டத்தைத் தேடிச் சென்றான்.
ஹாசன் சி பிளாக்கில் இருப்பவன், சந்தி, ஸ்ரீ பி பிளாக்கில், ஹேமா டி பிளாக்கில் இருப்பவள்.
ஃபோனில் மெசேஜ் அனுப்ப நான்கு நண்பர்களும் ஒன்றுக் கூடினர்.
“சர்வா சார் நம்ம அபார்ட்மென்ட் வரார், வாவ் சூப்பர்!” என்றாள் சந்தி.
“ஆமாடி!” என்றாள் ஹேமா.
“சார் வந்துட்டாரா ஹாசன்? நம்ம போய் பாத்துட்டு ஒரு அட்டென்ஸ் போட்டு வராலாமா!” எனக் கேட்டான் ஸ்ரீ.
“இன்னும் வரல போலடா, செக்யூரிட்டி கிட்ட கேட்டா சொல்வாரு.” என்றுக் கூறியதும், அவரிடம் சென்று விசாரித்தனர்.
“தம்பி! திங்க்ஸ் எல்லாம் வந்துட்டு, ஆனா ஆளுங்க மாலை தான் வீட்டிற்கு வராங்க.” என்றார் அவர்.
அனைவரும் அருகில் இருந்த பூங்காவிற்குள் நுழைந்தார்கள்.
“யாராவது புதுசா குடி வரவங்க சாயந்திரம் வந்து பால் காய்ச்சுவாங்களா.?” எனக் கேட்டாள் சந்தி.
“சாருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாம இருக்கும் போல நமக்கு என்ன. ஹேய்! ஈவ்னிங் எல்லாரும் வாங்க, சார் வந்ததும் போய் பார்க்கலாம்” என்றான் ஸ்ரீ.
“ஓ! நாங்க ரெடி.” என்றாள் ஹேமா.
நான்கு பேரும் சிறிது நேரம் பேசிவிட்டு, மைல்டா வெல்கம் கொடுக்கப் பிளான் போட்டுச் சென்றனர்.
அவர்கள் அஞ்சல குரூப்பின் தலைவி வரப்போகிறாள் என அறியாமல் இருந்தார்கள் நண்பர்கள்.
அவளுக்கும் இங்கத் தான் வரப் போகிறமென்று தெரியாது.
இதுவரை நிரஞ்சி, திரவியின் வீட்டில் அவன் பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்தாள். கல்லூரி, வீடு, இது மட்டுமே கடந்த வாரம் முழுவதும் பொழுதுப்போக்கு.
ஜெகன் வழக்கம் போல் கடமைக்காக அழைப்பான், இரு நிமிடம் உரையாடல் அவ்வளவே.
நிரஞ்சியிடம் திரவி, ‘யுவியோடு தங்கப் போகிறாய்’ என்று மட்டுமே சொல்லி இருந்தான். எப்போ, எங்கு என சொல்லவில்லை, வேறு யாரிடமும் இப்ப சொல்ல வேண்டாமென்று சொல்லிவிட்டான் திரவி. அதனால் இதுவரை அம்லு நண்பர்களிடம் உளரவில்லை ஒரு வேளை சொல்லி இருந்தால் நண்பர்கள் முன்பே அறிந்திருப்பர்.
*
நேற்று மதிய வேளை…
“அம்லு! உன் ட்ரஸை எல்லாம் எடுத்து வச்சுட்டு கிளம்பு, நாளைக்கு ஈவ்னிங் போகனும்” என்றாள் ரேவதி.
“எங்க அண்ணி.?”
“யுவி கூட தானே தங்கப் போற, அதுக்கு தான் சர்வா அண்ணா புது வீடு பாத்துட்டார், நாளைக்கே அங்க போகலாமுனு சொன்னார் அதான் நீ கிளம்ப தயார் ஆகு” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அம்லுக்கு திடீர் என்று சொன்னதும் ஒன்றும் புரியவில்லை.
திரவியிடம் சென்றவள்”அண்ணே! அண்ணி இப்ப தான் சொன்னாங்க யுவிக் கூட தங்கப் போறேனு. ஆனா அம்மா கிட்ட சொல்லனுமே.”
“அது எல்லாம் நான் சொல்லிட்டேன். அம்மா வந்துட்டு இருக்காங்க அம்லு, அவங்க நேரில் வந்து பாத்து தான் உன்னைய சர்வா வீட்டில் விடுவாங்களாம். நீ ஜெகன் கிட்ட மட்டும் சொல்லிடு” என்றான்.
“சரி அண்ணே!” என்று ஜெகனுக்கு போன் செய்தாள்.
எதிரில் ஃபோனை எடுத்தவன்”சொல்லு அம்லு.”
“அத்தான்! ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல யுவிக்கு கிளாஸ் எடுக்க கூடவே இருந்துப் பாத்துக்கனு, அங்க நாளைக்கே போகனுமாம் இப்ப தான் அண்ணி சொன்னாங்க.”
“ம்ம்ம்! தெரியும் மாமா சொன்னாரு. அங்கப் போய் பையனை கவனமா பாத்துக்க, ஏதாச்சு பையனுக்கு பிரச்சனை ஆனா, மாமாக்கு தான் கெட்டப் பெயர் சொல்லிட்டேன். ஏற்கனவே அந்தப் பையனுக்கு அம்மா உயிரோடு இருந்தும் கூட இருக்க கொடுத்து வைக்கலை. நீ விளையாட்டுதனமா இருந்திடாத அப்புறம் நீ உன் அம்மா வீட்டில் தான் இருக்கனும் நான் வர வரைக்கும்.”
“ம்ம்ம்! சரி அத்தான், ஆமா யுவிக்கு அம்மா உயிரோடு இருக்காங்களா.?”
“ஆமா இருக்காங்க”
“எங்க இருக்காங்க.?”
“அது எல்லாம் தெரியாது, அக்கா தான் சொன்னுச்சு ஏதோ அவங்களுக்குள் பிரச்சனை டைவர்ஸ் வாங்கிட்டாங்கனு. சர்வா நல்லவர், அதனால நீ தங்குவதில் பிரச்சனை இருக்காதுனு மட்டும் தெரியும்”
“ஓ! சரி சரி, அம்மா நாளைக்கு இங்க வருதாம்.”
“எதுக்கு.?”
“சர்வா சார் வீட்டில் தங்கப் போறேன்ல, அங்கப் போய் நேரில் பாக்கனுமாம். அப்படினு திரவி அண்ணன் கிட்ட சொன்னுச்சாம் நான் இன்னும் பேசலை அத்தான்.”
“ம்ம்ம்! உங்க அம்மா நேரில் பார்த்து தான் பர்மிசன் தருவாங்களா.? அப்ப நீ இங்க வரனுமுனா இங்கையும் நேரில் வருவாங்களா.?” என்று நக்கல் அடித்தான்.
“அதான் அங்க நேசன் அண்ணண் இருக்கே அம்மாக்கு அந்தத் தைரியம் இருக்கும் அத்தான்” என்றாள் அவனின் நக்கல் புரியாமல்.
“ஓ! நேசன் இப்ப என் கூட இல்லை, அவன் வேறு இடத்தில் இருக்கான். அது இருக்கட்டும் நீ என் அம்மா கிட்ட சொல்லிட்டுப்போ இல்லனா அதுக்கும் என்னைய போட்டு வறுத்து எடுப்பாங்க. வை.” என்று ஃபோனை கட் செய்தான்.
*
இன்று மாலை வேளை…
சர்வா, யுவியுடன் புது வீட்டிற்குப் பிருந்தா, அன்பு மட்டுமே கூட வந்தனர்.
பிரபா, ராகு அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிலே இருந்துக் கொண்டனர்.
பிரபா மனதில் சர்வா தனியாக செல்வதால் எதும் வருவாய் இழப்பு வருமென்ற பயமே இருந்தது. ஆனால் சர்வா தெளிவாக அதை பற்றிய கவலை வேண்டாமென்று தெளிய வைத்ததால், அவனின் புது முடிவைப் பற்றிக் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்.
ராகு, தானும் மகன் புதுவீடு மாறுதலிற்குப் போனால் பிரபா தாம் தூம் என குதிப்பாள், ஆகவே பெற்ற உடன்பிறப்புகளை மட்டும் அனுப்பி வைத்தார். அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையட்டும் என்ற ஆசிர்வாதம் மட்டுமே அளித்தார்.
அம்லுடன் திரவி, ரேவதி, மீனாட்சி வந்தனர்.
அனைவரும் போகின்ற வழியில் விமலா, வேலுவை காணச் சென்றனர்.
ஆனால் விமலா சரியான முறையில் அம்லு, மீனாட்சியைப் பார்த்து பேசாததால், மீனாட்சிக்கு மனதிற்குள் ஆதங்கம் வந்தது.
வேலு, மனதார மருமகளை ஆசிர்வதித்து அனுப்பினார்.
ரேவதி”அம்லு! உன் ட்ரெஸ் எதும் இங்க இருந்தா எடுத்துக்கோ, டெய்லி காலேஜ் போக யூஸ் ஆகுமுல.” என்றாள்.
“இல்ல அண்ணி! இங்கக் கொஞ்சம் இருக்கட்டும், இங்க வந்தா வேணுமுல.” என்றாள்.
“இனிமே எதுக்கு இங்க வர.? உன் புருசன் வந்தா வா, அதானே உங்க திட்டம். ஆத்தாளும், மகளும் அதுக்கு தானே என் மருமகனையே எனக்கு எதிரா மாத்தி விட்டு இருக்கீங்க.?” என்றார் விமலா.
“அத்தை! அப்படியில்ல. நான் எதுமே அண்ணே கிட்ட சொல்லல, அவரா தான் இந்த முடிவு எடுத்தது. இப்ப கூடப் பிரச்சனையில்ல, நான் இங்கயே தங்குறேன்.” என்றாள் அம்லு.
“நீ இங்க தங்கனுமுனா காலேஜ் படிப்பு எல்லாம் கூடாது. சரியா.?”
“என்ன சம்பந்தி இப்படி பேசுறீங்க.? நானா என் பொண்ணை படிக்க அனுப்பினேன்.? உங்க மகன் தான் காலேஜில் சேர்த்தது. அவரு கூட கூட்டிட்டுப் போக சொன்னா படிக்க வச்சுட்டுப் போயிட்டார். இப்ப கூட நான் திரவி தம்பி கிட்ட எம் பொண்ணைப் புருசன் வர வரைக்கும் என் கூட வச்சுக்குறேனு தான் சொன்னேன். இப்படி எல்லாரு வாயிலையும் இடிப்படாம இருப்பாள.” என்றார் இருப்பொருள் பட.
“இப்ப யாரு கிட்ட இடிப்படுறா உங்க பொண்ணு.? அதான் என்னத்தையோ சொல்லி நல்லவங்க மாதிரி நிறைய வேலை பாத்துட்டிங்களே. அப்புறம் என்ன.? கூட்டிட்டுப் போய் எங்கயோ விட்டுப் போங்க. என்ன வேலைக்காரியா தானே போறா, என்னமோ ஆபிசர் வேலைக்குப் போற மாதிரி பட்டம் பரிவட்டம் கட்டிக் கொண்ட விடப் போறீங்களா, ஒன்னும் இல்லாமயே இந்த திமிரு.” என்று வார்த்தைப் பலமாக விழுந்தது.
“இங்கப் பாருங்க என் பொண்ணை உங்கப் பையனுக்குக் கட்டிக் கொடுக்க நான் வந்துக் கெஞ்சல. உங்கப் பையன் தான் ஆசைப்பட்டுக் கேட்டது அதுக்கு இதோ உங்கப் பொண்ணு., மாப்பிள்ளையும் சாட்சி. ஒன்னும் இல்லைனாலும் மானம், ரோசம், பாசம் எல்லாம் இருக்கு, அடுத்தவங்க மனசு நோகாம பேசுறப் புத்தி இருக்கு” என்றார் மீனாட்சி.
“அம்மா! சும்மா இரு” என திரவியின் முறைப்பில் ரேவதி அதட்டினாள்.
வேலு”மாப்பிள்ளை! முதலில் நீங்க கிளம்புங்க, எதுக்கு இங்க வந்து இவ வாயில் விழுந்துட்டுப் போகனும்! அம்லு மனசுக்கு அவ நல்லா இருப்பா. நான் ஜெகன் கிட்ட பேசி கல்லூரி லீவுக்கு அம்லுவை விசிட் விசாவில் அழைச்சுட்டுப் போக சொல்றேன் சம்பந்தி, நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க” என்றார்.
நிரஞ்சிக்கு என்ன செய்வதென்றுத் தெரியாமல், “போயிட்டு வரேன் அத்தை” என்று கிளம்பினாள்.
*
ஸ்கை அபார்ட்மென்ட்.
சர்வா முதலில் வந்திறங்க, பின்னே சற்று நேரம் கழித்து திரவியும் அனைவருடனும் வந்தான்.
வீடு ஏற்கனவே ஒழுங்குப்படுத்தப்பட்டு இருந்தது.
சர்வா தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டான்.
திரவி மற்றவர்களோடு வீட்டிற்குள் நுழைந்தான்.
மீனாட்சிக்குச் சர்வா குடும்பமும் புதிது. திரவி அறிமுகம் செய்து வைத்தான்.
“வணக்கம் அம்மா!” என்று சர்வா வரவேற்றான்.
யுவி, அம்லுவைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்துத் தாவினான்.
அம்லுவும் தூக்கி முத்திமிட்டாள். அனைவரும் அமர்ந்து பொதுவாக பேசினர்.
“ரேவதி! என் நிலம உனக்கு வர வேண்டாம், அது தான் நான் சொல்வேன். என் பொண்ணுக்கு அப்பா இல்லை ஆனா நான் தங்கமா வளர்த்து இருக்கேன். அவ மனசுக்கு நல்லா இருப்பா.” என்றுக் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.
சர்வா எதேச்சையாக திரும்ப மீனாட்சி கண்ணீர் அவன் கண்ணில் பட்டது.
அம்லுவைத் திரும்பி பார்க்க, அவளோ பிருந்தா, அன்பு, யுவியோடு விளையாடி சிரித்துக் கொண்டிருந்தாள்.
திரவியைத் திரும்பி கண்களால் மீனாட்சியைக் காட்டினான் சர்வா.
“சர்வா! என் மாமியார் தான்.” என்று நடந்ததை கூறினான் திரவி.
“ஓ! பாவம் இவங்கப் பொண்ணை தூரத்தில் விட்டு கஷ்டப்படுறாங்க. ஜெகன் சீக்கிரம் நிரஞ்சனியை கூட்டிட்டுப் போறது தான் நல்லதுடா.” என்றான் சர்வா.
“ம்ம்ம்! அட்லீஸ்ட் இந்த செம் லீவில் விசிட் விசாவில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யனுமுடா. அப்ப தான் ஒரு அன்டர்சேண்டிங் வரும்.” என்றான் திரவி.
“ம்ம்ம்!”
காலிங் பெல் அடிக்க, சர்வா சென்றுத் திறந்தான்.
சந்தி, ஹேமா, ஹாசன், ஸ்ரீ நின்றனர்.
சர்வா புரியாமல் அவர்களைப் பார்த்தான்.
“குட் ஈவ்னிங் சார், நாங்க உங்க காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ஸ், புதுசா குடி வந்து இருக்கீங்கனு செக்யூரிட்டி அங்கிள் சொன்னாங்க, அது நீங்கனு தெரிஞ்சதும் ஒரு ஹாய் சொல்ல வந்தோம்.” என்றாள் சந்தி.
சர்வா சிரித்து”வெல்கம்! பரவாயில்லையே காலேஜ் டீன் வராரனு பயபுடாம இன்ட்ரோ ஆக வந்து இருக்கீங்க, கம் இன்.” என்றுக் கூறி வரவேற்றான்.
நான்கு பேரும் உள்ளே நுழைய, அம்லு அவர்களைப் பார்த்ததும் ஆச்சரியமாக ஓடி வந்தாள்.
“ஏய்! சந்தி, ஸ்ரீ, ஹேமா, ஹாசன்.” என்று ஆசையாக அழைத்தப்படி வந்தவளை, அவர்களும் ஆச்சரியம் அதிர்ச்சியாக நோக்கினர்.
பின்னர் விஷயம் அறிந்து அனைவரும் மகிழ, அம்லு தன் நண்பர்களை அம்மாக்கு அறிமுகம் செய்தாள்.
அவரும் அனைவரிடமும் நன்குப் பேசினார். நேரம் ஓடியது, மீனாட்சி”சரி திரவி தம்பி! நான் கிளம்புறேன் இப்ப போனா தான் காலையில் போய் சேர முடியும்.” என்றார்.
“இல்லப்பா! மாடு, ஆடு எல்லாம் இருக்கு. எனக்குத் திரவி தம்பி இந்த மாதிரி சொன்னதும் மனசு கேக்கலை, யாரு என்னனு தெரியாம எப்படினு தான் ஓடி வந்தேன். ஆனா நீங்க நல்ல மனுசனா தெரியுறீங்க, இந்தா உங்க மகனும் அன்பா இருக்கான். கூடவே இந்த பிள்ளைங்க எல்லாம் இங்க தான் குடி இருக்காங்க இப்ப தான் நிம்மதியா இருக்கு எனக்கு. அம்லு விவரம் பத்தாதவ யாரு நல்லவங்க, கெட்டவங்கனு பாக்காம ஒரே மாதிரி பழகுவா. அவ மனசை புரிஞ்சுக்க யோசிக்கிறாங்க அவ மாமியார். அதுக்கு நாங்க ஏழையா பிறந்தது தான் முக்கிய காரணம். என்ன செய்ய.? நான் கிளம்புறேன் தம்பி, அம்லு உங்கப் பையனை நல்லா பாத்துப்பா கவலைப் படாதீங்க. ஏனா அவளுக்கு சின்னப் பிள்ளைங்கனா உசுரு. எங்க வீட்டில் இவ இருந்தா ஊர் பிள்ளைங்க அத்தனையும் அங்க தான் கெடக்கும் ” என்றுச் சிரித்தார் மெல்ல.
சர்வாக்கு அவங்க உணர்வுப் புரிந்தது. மனதின் ஓரத்தில் நிரஞ்சனி வாழ்க்கையில் இவங்க அவசர முடிவு எடுத்துட்டாங்களோ எனத் தோன்றியது.
இனி என்ன செய்ய முடியும்.? என்று யோசித்தவன், “சரிம்மா! போயிட்டு வாங்க” என்றான் பொதுவாக.
“ஆன்டி! அம்லுவைப் பத்தி கவலைப்படாதீங்க நாங்க எல்லாம் இருக்கோம் பாத்துப்போம்.” என்றாள் சந்தி. கூடவே ஹேமா, ஸ்ரீ, ஹாசன் என அனைவரும் தைரியம் கூறினர்.
அவர்களின் நட்பு தூய்மையாகத் தெரிந்தது.
ரேவதிக்குமே அது ஆச்சரியமாக ‘எப்படி அம்லு வந்த கொஞ்ச நாளில் இப்படி நட்புகளை பிடித்தாள்’ என்று மனம் சந்தோஷம் கொண்டது.
ஆனால் அம்லு ஏனோ அம்மா கிளம்பியதும் அழுக ஆரம்பித்தாள்.
“அம்மா! நானும் உன் கூட வந்துடவா.?” என்று கேட்டப்படி கண்ணீர் வடித்தாள்.
“என்ன பேசுற.? உன்னைய நம்பி அந்தப் பையனை பாத்துக்க இந்த வீட்டைப் பார்த்து இருக்காங்க தம்பி, என் கூட வந்து அங்க மாட்டு சாணி தானே அள்ள போற. அதுக்கு இங்க இருந்து படி அம்லு, இந்தா நல்ல கூட்டாளிங்க. துணைக்குச் சின்னப் பையன். காலேஜில் வேலைப் பார்க்கும் வாத்தியார் திரவி தம்பி, இந்த தம்பி, நீ படி. எனக்கே இப்ப தான் தோணுது உன்னையப் படிக்க வைக்காம கல்யாணம் பண்ணி வச்சது தப்புனு. இப்ப கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி படி. உம் புருசனுக்கு சமமா நீயும் படி அதான் நல்லது. பணத்தில் இல்லைனாலும் படிப்பில் பொருந்தட்டும்.” என்று அறிவுரை வழங்கினார்.
அம்லு அழுது முகம் எல்லாம் வீங்கியது. நண்பர்கள், யுவி கிண்டல் செய்ய சிரிக்க ஆரம்பித்தாள்.
மீனாட்சி, திரவி, ரேவதி, பிருந்தா, அன்பு, என அனைவரும் கிளம்பினர.