“ம்ம்ம்! ஆர்டர் பண்ணிக்கலாம். வெயிட் வரேன்.” என்று தன் ஃபோனை தேடினான்.
யுவி அதற்குள் ஓடிப் போய் அம்லுவிடம் செய்தியை வாசித்தான்.
“வெளியிலா, நல்லா இருக்குமா.? நான் வேணா ஏதாவது செய்யட்டுமா!” என முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கேட்டான்.
“எதுமே இல்லாம எப்படி சமைப்ப.? எதும் மேஜிக் பண்ணப் போறீயா என்ன.?” என்றுக் கேட்டப் படி சர்வா வந்தான்.
“இல்ல சார், பேசாம சாப்பாட்டுக்கு பதிலா சாமான்கள் ஆர்டர் பண்ணுங்க சமைச்சிடலாம்” என யோசனை வந்தவள் போல் கூறினான்.
“ம்ம்ம்! நான் ஆர்டர் பண்ணி, அது வந்து நீ எப்ப சமைப்ப.? பொதுவா சாப்பாடு ஆர்டர் பண்ணா வேலை மிச்சமுனு நினைப்பாங்க, நீ என்னனா ஆப்போஸிட்டாக திங் பண்ற.? ஏன் ஹோட்டல் சாப்பாடு புடிக்காத.?”
“அப்பிடி இல்லை சார், ஹோட்டல் சாப்பாடுனா எனக்கு நிறைய சாப்பிட முடியாது, கொஞ்சமா சாப்பிடுவேன் அப்புறம் நைட் பசிக்குமுல. அதான்” என்றாள் வருத்தமாக.
சர்வாக்குச் சிரிப்பு வர, ஆனால் யுவி சிரித்தே விட்டான்.
“அய்யே அம்லு! நீ அதான் அமுல் பேபி மாதிரி இருக்கியா.?” என்றுக் கிண்டல் செய்தான் யுவி.
“ஆமா! அப்புறம் உன்னைய மாதிரி பல்லி மாதிரி இருக்க சொல்றீயா.? நான் எல்லாம் நல்லா சாப்பிடுவேன்.” எனத் தலையை ஆட்டிக் கொண்டே கூறினாள்.
“அதான் எங்களுக்குத் தெரியுமே, கொண்டு வந்துட்டோம்” என்று நான்கு நண்பர்களும் ஆளுக்கொரு உணவு வகைகளைத் தங்கள் வீட்டில் செய்ய சொல்லி எடுத்து வந்தனர்.
“ஏய்! என்னதுப்பா இது.?” என்று அவர்களை வரவேற்றாள் அம்லு.
சர்வா லேசாக சிரித்து விட்டு, “ம்ம்ம்! இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே அதனால நான் அலோ பண்றேன். பட் இனிமே இப்டி சாப்பாடுக் கொண்டு வரக் கூடாது, நீங்க வேணா வாங்க நிரஞ்சிக் கூட பேசிட்டுப் போங்க, ஆனா இப்டி ஃபுட் டிரான்ஸ்பர் நடக்க கூடாது, ஆல் ரைட்.” எனச் சற்று மிரட்டும் குரலில் கூறினான்.
“ஓகே சார்!” என அவர்களும் பயத்துடன் தலை ஆட்டினர்.
யுவி”ஐ! இது எனக்குப் புடிச்சது, ஆமா அம்லுவைக் கூப்புடுற மாதிரி உங்களை எப்டி கூப்புடுறது, உங்க நிக் நேம் சொல்லுங்க.” என்றான்.
“யுவி! நீ நிரஞ்சியே பேரு சொல்லிக் கூப்புட கூடாதுனு சொல்றேன், அவங்களையும் அப்படி கூப்புடப் போறீயா.? கால் வித் ரெஸ்பெட்.”
“ஓகே டாட்! ஆனா அம்லுவை மட்டும் இப்டி தான் கூப்புடுவேன்.” என்றவன், “சந்தி ஆன்டி.” என்றழைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
“தம்பி! நான் ஆன்டி இல்லை அக்கானு சொல்லு போதும்.” என்றுப் பயந்து அலறினாள் சந்தி.
சர்வா”நீங்கச் சாப்புட்டுப் பேசிட்டு போங்க, எனக்கு வேலை இருக்கு, நிரஞ்சி, நான் சாப்புட லேட் ஆகும். நீ யுவிக்குச் சாப்பாடுப் போட்டு நீயும் சாப்புட்டு தூங்கு.” எனக் கூறிவிட்டுத் தன் அறைக்குள் சென்று விட்டான்.
நண்பர்கள் அரட்டை அடிக்க, யுவிக்கு தான் டைம் பாஸ் ஆனது.
“சார்! ரொம்ப ஸ்ரிட், ஆனா கொஞ்சம் ஸ்மைல் பண்றாரு, நல்லவரு தான் போல ஸ்ரீ” என்றான் ஹாசன்.
நான்கு அயிட்டங்களும் நான்கு வீட்டில் இருந்து வந்திருந்தது.
“ஆமா! உங்க அப்பா, அம்மா எல்லாம் வரலையா.? கூட்டி வந்து இருக்கலாமுல.” என்றுக் கேட்டாள் நிரஞ்சி.
“இங்கத் தானே இருக்க போற, மீட் பண்ணலாம். சரி லேட் ஆச்சு சார் வந்தா திட்டுவாரு நாங்க கிளம்புறோம். காலையில் பஸ் ஏழே முக்கால் மணிக்கு வரும் நிரஞ்சி, ரெடியாகிடு.” என்றாள் சந்தி.
“ஓ! அவ்ளோ சீக்கிரமா வருமா, சரி சரி கிளம்பிடுறேன்.”
“ம்ம்ம்! உன் மாமியார் வீட்டுக் கிட்ட இன்னும் சீக்கிரம் வரும்.”
அவள் அசையவில்லை, சற்று வேகமாக அழைக்க, அரக்க பறக்க கண்களை முழித்து சுற்றிப் பார்த்தாள்.
“நிரஞ்சி! ரிலாக்ஸ் நான் தான்.”
“சார்! என்ன ஆச்சு.?”
“ஒன்றுமில்ல, உனக்கு அந்த ரூம் தான், நாளைக்கு உன் திங்க்ஸ் எடுத்து வச்சுக்கோ, அங்கப் போய் தூங்கு.”
“ம்ம்ம்!” என்று யுவியை தூக்கப் போனாள்.
“அவனை எதுக்குத் தூக்குற.? நான் சாப்புட்டு தூக்கிட்டுப் போறேன் நீ போய் தூங்கு”
“இல்ல சார்! என் கூடவே தூங்கட்டுமே.”
“பரவாயில்ல, நீ ஃபோன் பேசுவில உன் ஹஸ்பேண்ட் கிட்ட, ஃப்ரீயா பேசு. யுவி என் கூட தூங்கட்டும்.”
“அத்தான் கூடவா! ரொம்ப நேரம் எல்லாம் பேச மாட்டேன் சார். மணி என்ன.? பத்து ஆச்சா அப்ப இனி கூப்புட மாட்டார் நாளைக்கு தான். சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் பேசுவார் அவ்ளோ தான். அதுக்காக என்ன! யுவி என் கூடவே தூங்கட்டும்.” என்றாள் கடகடவென்று.
சர்வா அவள் கூறியதைக் கேட்டு சற்று ஆச்சி.ரியமாக, “ம்ம்ம்!” என்றான்.
நிரஞ்சி முதலில் சென்று அறையைப் பார்த்து விட்டு படுக்கையை சரிப் பண்ணிட்டு வந்தவள், யுவியை தூக்கிக் கொண்டுச் சென்றாள்.
சர்வா சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்தான்.
பெட்டில் படுத்தவனுக்கு நிரஞ்சி கணவன் மீது ஏனோ நல்ல அபிப்ராயம் வரவில்லை.
ஆனால் ரேவதி தம்பி, திரவி மச்சான் என்ற முறையில் தவறாக நினைக்க முடியவில்லை.
‘ஓகே அவங்க வாழ்க்கை’ எனத் தூங்க ஆரம்பித்தான்.
காலையில் முதலில் முழித்தது நிரஞ்சனி தான். என்ன செய்வதென்றுப் புரியாமல் வெளிக்கதவை சும்மா திறந்துப் பார்த்தாள்.
பால் பாக்கெட் தொங்கியது கதவில், ‘ஐ! டீ போடலாம்’ என்று அவசரமாக அதை எடுத்தவளிற்குச் சர்க்கரை, தூள் இல்லை என்றுத் தோன்றவும் முகம் வாடியது.
பாலை மட்டும் எடுத்துக் கொண்டு, கீழ கிடந்த பேப்பரை எடுத்தவள், பாலை டேபிளில் வைத்து விட்டு பேப்பரை ஹாலில் அமர்ந்து திருப்பினாள்.
அதுவோ ஆங்கில நாளிதழ். படத்தைத் தவிர ஒன்றும் விளங்கவில்லை.
சர்வா எழுந்து வெளியில் வர, நிரஞ்சி பேப்பருடன் எழுந்து நின்றாள்.
“உட்காரு, இனி டெய்லி பாக்கனும் எழுந்து நின்னுட்டே இருப்பியா.? காலேஜில் மட்டும் மரியாதைக் கொடு போதும். அதுக்காக சர்வானு பேரு சொல்லி கூப்புடுறாத.” என்றுக் கூறிவிட்டு அமர்ந்தான்.
“சார்! அப்டி எல்லாம் கூப்புட மாட்டேன், இந்தாங்க பேப்பர்.” என்று நீட்டினாள்.
“படிச்சுட்டுக் கொடு, நோ ப்ராப்ளம.”
“அய்யோ சார்! இது இங்கிலிஷ் பேப்பர். எனக்கு ஒன்னும் புரியல, நீங்களே படிங்க. ஆமா! பால் இருக்கு, ஆனா சர்க்கரை, தூள் இல்லை எப்படி டீ போடுவது, காலைச் சாப்பாடு எப்படி சமைப்பது.?” என்றாள் முக்கிய கேள்வியாக.
“ம்ம்ம்! தெரியும், அதான் செக்யூரிட்டியிடம் ஃபோனில் சொல்லி இருக்கேன், வாங்கிட்டு வருவாரு, நீ இப்ப உட்காந்தி இந்த பேப்பரை படி.” என அவளை முறைத்தப்படி கூறினான்.
அப்படியே அமர்ந்தவள்”சார்! சத்தியமா எனக்கு ஒன்னும் புரியாது.” என்றாள் பாவமாக.
“நிரஞ்சி! நீ படிப்பது இஞ்சினியரிங் சரியா.? அதுல நீ எக்சாம் எல்லாம் இங்கிலிஷில் தான் எழுதனும். இந்த நியூஸ் பேப்பர் படிக்கவே பயந்தா எப்படி.?”
“ம்ம்ம்! எனக்குப் படிக்க புடிக்கும் சார். இதுவே தமிழ் பேப்பர்னா ஒரு வார்த்தை விடாம படிப்பேன் ஆனா இங்கிலிஷ்…” என்று இழுத்தாள்.
“நீ இங்கிலிஷ் பாடத்தில் எத்தனை மார்க்.?”
“ம்ம்ம்! எழுபத்து அஞ்சுக்கு கொஞ்சம் கூட சார். முதல் பேப்பர் நல்ல மார்க் மனப்பாடம் பண்ணி எழுதிட்டேன். ஆனா இரண்டாவது பேப்பர் சொந்தமா எழுதனுமுல அதான் குறைஞ்சுட்டு.”
“ம்ம்ம்! சரி, நான் இந்த பேப்பரை எப்படி படிப்பதுனு சொல்லி தரேன் நீ டெய்லி நியூஸ் பேப்பர் படி. கொஞ்சம் கொஞ்சமா கான்பிடென்ட் வரும், காலேஜில் உன் ப்ரண்ட்ஸ் கிட்ட இங்கிலிஷில் பேச ட்ரை பண்ணு.”
“சரி சார்.” என்றாள் ஆர்வமாக.
“இங்கப் பாரு இது தன் முதல் பக்கம். நியூஸ் பேப்பரில் ஃபர்ஸ்ட் ஹெட் நியூஸ் தான் பாக்கனும். இந்த ஹெட் நியூஸ் படி” என்றான்.
“திக்கி, திக்கி, தெரிந்த வோர்ட்ஸை தெளிவாகவும் தெரியாததை முழுங்கியும் படித்தாள்.”
அதுக்கு அர்த்ததை சொன்னவன், அவள் திக்கிய வார்த்தைகளைத் தெளிவாக சொல்ல சொன்னான். அதற்கு அர்த்ததையும் கூறினான்.
“இப்ப அடுத்த ஹெட் நியூஸ் படி.” என்றான்.
“சார்! இந்த முழுச் செய்தியும் படிக்க வேண்டாமா.? அப்ப தானே ஜி எஸ்டி வரி எது எதுக்கு போட்டு இருக்காங்கனு தெரியும்.” என்றாள் தெரிந்தவளாக.
“நீ ஃபுல் நியூஸையும் படிச்சா இன்னைக்கு ஒரு பக்கம் தாண்ட மாட்ட, முதலில் ஹெட் நியூஸ் மட்டும் படிக்க கத்துக்கோ நிரஞ்சி, அப்புறம் ஃப்ரீயா இருக்கும் போது உள்ள இருக்க கண்டென்ட் படிக்கலாம். தினமும் இந்த நேரத்துக்கு ஹெட் நியூஸ் படி நான் அர்த்தம் சொல்லி தரேன். ஈவ்னிங் காலேஜ் சப்ஜெக்ட் படிச்சுட்டுத் தூங்கப் போகும் போது நீயே டிஸ்னெரியை எடுத்து வச்சுட்டு, இதில் இருக்க கண்டென்டை படிச்சு மீனிங் பாரு, அப்படியே படிக்க ஈஸியா வந்துடும்.”
“ஓ! இப்படி தான் படிக்கனுமா சார், அப்ப காலேஜ் புத்தகத்தை எப்படி படிப்பது.?”
“அதுக்கும் இது தான் வழி, டிஸ்னெரி வச்சுக்கோ ஓரளவு புரியும். உன் ப்ரண்ட்ஸ் இங்கிலிஷ் மீடியம் தானே அவங்கக் கூட குரூப் ஸ்டெடி பண்ணு எக்சாமுக்கு எல்லாம், ஈஸியா வந்துடும் முதலில் இரண்டு செம் கஷ்டமா இருக்கும், அப்புறம் எப்டி படிக்கனுமுனு பழகிடும். அதே மாதிரி டிவியில் என்ன பாப்ப.?”
“டிவியில் விஜய் டிவி சீரியல்ஸ், அப்புறம் ஜீ தமிழ் சீரியல்ஸ் சூப்பரா இருக்கும்.”
“இப்படி பாத்தா எப்டி படிக்க முடியும்.? பிபிசி நியூஸ், டுவென்டி போர் செவன் இங்கிலிஷ் நியூஸ் சேனல் பாரு, அதுல நிறைய வெக்காபெலரி ரீசென்ட் யூஸ்டு வோர்ட்ஸ் வரும். யுவி பாப்பான் அவன் கூட சேர்ந்துப் பாரு.” என்றான்.
“ம்ம்ம்!” என்றுத் தலையை ஆட்டினாள்.
“ஈவ்னிங் ஆறு மணி முதல் ஏழு மணி வரை யுவிக்கு சொல்லிக் கொடுத்தா போதும்.”
“ம்ம்ம்!” என்றுத் தலையை ஆட்ட, காலிங் பெல் சத்தம் கேட்டது.
செக்யூரிட்டு பொருட்களோடு வந்தார்.
நிரஞ்சி மூச்சை நிம்மதியாக விட்டாள்.
‘ஹப்பாடா! அம்லு நீ செத்த, நல்லா மாட்டிட்ட, சர்வா சார் கிட்ட மாட்டிட்டீயேடி. என்னது இங்கிலிஷ் நியூஸ் பேப்பர்! நியூஸ் சேனல், டிஸ்னெரி ஆ! தலையே சுத்துதே. அப்ப சீரியல் பாக்க முடியாத.?’ என்று நொந்துக் கொண்டே பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளின் முகப்பாவனைகளை நோட்டம் விட்ட சர்வாக்குப் புரிந்தது அவளின் கஷ்டம் பற்றி, ஆனாலும் அவனுக்கு ஏனோ நிரஞ்சியை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்றுத் தோன்றியது. கிராமத்து பெண்ணாக இருந்தாலும் அவளைச் சிறந்த மாணவியாக ஆங்கில பேசும் மாடர்ன் யுகதியா மாற்ற நினைத்தான்.
அவளின் அம்மாவின் வருத்தம் அவன் மனதில் பதிந்தது. ஒரு வேளை ஜெகன் சரியில்லாதவனாக இருந்தால் நிரஞ்சி தானாக தனித்து வாழப் பழக வேண்டும் என எண்ணினான்.
அதற்காக தான் இத்தனையும் சொன்னது. ஆனால் அது எந்தளவு சாத்தியம் என்று நிரஞ்சியின் முயற்சியில் தான் இருக்கிறது.
காலை உணவை முடித்து விட்டு நிரஞ்சி பஸ்ஸில் செல்ல, சர்வா சிறிது நேரம் கழித்து யுவியை ஸ்கூலில் விட்டு காலேஜிற்கு சென்றான்.