அந்த இடத்தில் ஒரே சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டது, அதன் பக்கமாக போகிறவர்கள் திரும்பி பார்த்துச் சென்றனர்.
“ஏ புள்ளைகளா! நான் சொல்றது உங்களுக்கு இவ்ளோ இழிப்பா இருக்கா.? அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்” என்று விரலை நீட்டி எச்சரித்தாள் நிரஞ்சி.
“ஓகே! ஓகே! ஆனாலும் மண்டையில இருந்த கொண்டையை மறந்துட்டீயே அம்லு” என்று கிண்டலடித்தான் ஸ்ரீ.
சட்டென்று மாறிய நிரஞ்சி”என்ன ஸ்ரீ சொல்ற.? நான் கொண்டையே போடுவதில்லை.” என்றாள் முழித்தவாறு.
“ஏய் லூசு! அவன் சொல்றது அதில்லை, யுவிக்கு நீ வாத்தியாரா போன ஆனா யுவியோட அப்பா உனக்கு வாத்தியார் என்பதை மறந்துட்டீயேனு சொல்றான்” என்றாள் ஹேமா.
“ஆமா ஹேமா, அதும் அந்த நியூஸ் பேப்பரை பாத்ததும் தலையே சுத்திட்டு தெரியுமா, சத்தியமா அதில் இருக்க படத்தை தவிர ஒரு இழவும் புரியல. இதில் நான் தினமும் படிக்கனுமாம், இதுக்கு சார் என்னைய சாப்புடாம இருக்க சொன்னா கூட ஒரு வேளை கஷ்டப்பட்டு இருந்துடுவேன் அதுவும் பொட்டுகடலைச் சாப்பிட்டுகிட்டே.” என்றாள் சோகமாக.
“சாப்புடாம பொட்டுகடலை சைடு டிஷ்ஷாடி. உன்னைய” என்று நாலு அடி போட்டாள் நிரஞ்சி முதுகில் சந்தி.
“அவ என்ன பண்ணுவா சந்தி, தமிழ் மீடியம் சோ இங்கிலிஷ் டான்ஸ் ஆடுது” என்றான் ஹாசன்.
“ஆமா! ஆமா! இடுப்பு கூட வளையாம ஆடுது நிரஞ்சி இங்கிலிஷ்” என்று சிரித்தாள் ஹேமா.
அதை கேட்டு மற்றவர்கள் சிரித்தாலும், சந்தி”சரி! சரி! ஜோக்ஸ் அப்பார்ட், நிரஞ்சி! நம்ம கிளாஸில் நீ மட்டும் தமிழ் மீடியம் இல்லை. இன்னும் சிலர் இருக்காங்க, அவங்களும் கஷ்டப்படுறாங்க தான். நீங்க எல்லாம் டுவெல்த்தில் நல்ல மார்க் வச்சு இருக்கீங்க. ஏன் உன் மார்க் கூட என்னோட பெர்சன்ட்டேஜ் பக்கம் தான். இந்தா கான்வென்டில் படித்த ஸ்ரீயை விட நீ அதிகம். ஆனா அவனுக்கு உடான்ஸை கூட இங்கிலிஷில் எழுதிடுவான் உனக்கு தெரிந்த பதிலை கூட இங்கிலிஷில் எழுத வாரது. இது சின்ன விஷயம்.
சார் சொன்ன மாதிரி, பிராக்டிஸ் பண்ணு உனக்கு கிடைச்ச மாதிரி யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது, நீ யூஸ் பண்ணிக்கோ. சர்வா சார் நமக்கு கிளாஸ் எடுக்கலனாலும் அவருக்கு நம்ம சப்ஜெட் நாலேஜ் இருக்கு. எதுனாலும் கேட்டுப் படிச்சுக்கோடி.” என்று அட்வைஸ் செய்தாள்.
“ம்ம்ம்! நீ வாயால சொல்லிட்ட ஆனால் எப்டி ஓட்டப் போறனோ தெரியலயே. பேசாம என் அம்மா கூட போயிடலாமுனு பாத்தா அது என்னனா படி அது தான் முக்கியமுனு சொல்லிட்டுப் போயிட்டு.” என்று புலம்பினாள்.
“நம்ம உலகநாயகன் சொல்ற மாதிரி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது சர்வா சார் இஸ் வாட்ஜிங் யு.” என்று சிரித்தான் ஸ்ரீ.
“ம்ம்ம்! சிரிச்சுட்டோம் போதும் உன் மொக்கையை நிறுத்து” என்ற ஹேமா,
“நிரஞ்சி! ஃபர்ஸ்ட் நீ இப்டி புலம்புறதை நிறுத்து, உனக்கு மீனிங் தானே தெரியாது இங்கிலிஷ் வோர்ட்ஸ், இப்ப நான் ஏதாவது வோர்ட் சொன்னா அதை எழுதிடுவீயா.? ஸ்பெலிங் பிரொன்வசேஷன் வச்சு, இப்ப எப்டி சொல்றது சரி. என் பேரு ஹேமா இங்கிலிஷ் ஸ்பெல் சொல்லு.”
“ஹெச் ஈ எம் ஏ. இது கூடவா தெரியாது.? பெரிய வார்த்தை அப்புறம் கோர்வையா பேச தெரியாது ஹேமா.” என்றாள் நிரஞ்சி.
“ஹேமா சொல்ல வரது அதில்லை நிரஞ்சி, வோர்ட்ஸ் எழுத தெரிஞ்சா போதும் மீனிங் போறப் போக்கில் படிச்சுக்கலாம். முதலில் கிளாஸில் ஸ்டாப் சொல்ற நோட்ஸை நீ காதில் வாங்கி எழுத ஆரம்பிடி, ஸ்பெலிங் யோசிக்காத உனக்கு அந்த நேரத்தில் என்ன வருதோ அதை போடு, நைட் வீட்டில் வந்து நாங்க கரெக்ட் பண்றோம் இல்லை இந்த நேரத்தில் பண்ணிக்கலாம்.” என்றாள் சந்தி.
“ம்ம்ம்! நீங்க சொல்றது வெளங்குது.”
“அதுக்கு முன்னாடி, நம்ம பேசும் போது நீயும் சின்ன சின்ன வார்த்தை எல்லாம் இங்கிலிஷில் பேசு நிரஞ்சி” என்றான் ஹாசன்.
“ம்ம்ம்! சரி, இல்ல ஓகே” என்று சிரித்தாள்.
“ஹப்பாபபா, முடியலை சர்வா சார் பாவம் தான் இவ கிட்ட நல்லா மாட்டப் போறார், நியூஸ் பேப்பரே படிக்க வெறுத்துடுவார்” என்று சிரித்தாள் ஹேமா.
மற்றவர்களும் சிரித்தனர்…
“என்ன சிரிப்பு சத்தம் ரொம்ப நேரமாக கேக்குது.” என்று கேட்டவாறு அன்பு வந்தான்.
“குட் ஆப்டர்நூன் சீனியர்” என்றான் ஸ்ரீ.
“ஒன்னுமில்ல சீனியர் சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றான் நக்கல் பாணியில் ஹாசன்.
“டேய்! நான் உனக்கு சீனியர். இந்த வடிவேலு காமெடி எல்லாம் பலவிதம் கேட்டாச்சு, கேட்டாச்சு…” என்று கூறியவாறு ஹேமாவைப் பார்த்தான்.
“ஆமா! நீ ஏன் என்னைய முறைச்சுட்டே இருக்க, நேத்தும் பத்தேன் இப்பயும் அப்பிடியே இருக்க.?” என்றான் அன்பு ஹேமாவிடம்.
ஹேமா’நம்ம எப்போ இவனை முறைத்தோம்’ என்று புருவத்தை சுளித்தாள்.
“அய்யோ சீனியர்! அவ பார்வையே அப்டி தான், உம்னாமூஞ்சி கண்ணு சிரிக்கவே சிரிக்காது எப்ப பாரு முறைச்சுட்டே இருக்கும்.” என்று கலாய்த்தான் ஸ்ரீ.
ஹேமா இப்பொழுது உண்மையிலே ஸ்ரீயை முறைத்தாள்.
“மிஸ்டர் ஜூனியர் நான் அந்தப் பொண்ணு கிட்ட பேசினா நீங்கப் பதில் சொல்ல கூடாது. ஓகேவா.? ஷட் யுவர் மவுத் அன்ட் ஸி ஹெர் ஐஸ், ஹவ் இட்ஸ் லுக்கிங் ஹார்ட்லி.” என்றான் அன்பு கடுப்பாக.
“அய்யோ! அன்பு சீனியர் ஹேமா பாவம், அவ முறைக்க எல்லாம் மாட்டா நல்ல பிள்ளை” என்று வக்காலத்து வாங்கினாள் நிரஞ்சி.
“நிரஞ்சி! எல்லாரும் உன்னைய மாதிரி வெகுளியா இருக்க மாட்டாங்க. சரி விடு! யுவி நல்லா இருக்கானா.?”
“ம்ம்ம்! நல்லா இருக்கான், ஸ்கூலுக்கு போயிட்டான்”
“ஓகே! இந்த கிரேயான்ஸை அவன் கிட்ட குடுத்திடு நிரஞ்சி, நேத்து மறந்துட்டேனு சொன்னான், அக்கா கொடுக்க சொன்னா. நான் சனி, ஞாயிறு வரேனு சொல்லு.” என்று அதை நீட்டினான்.
“ஓகே சீனியர், ஆமா! உங்க அண்ணன் கிட்ட கொடுக்க வேண்டியது தானே.”
“நீ வேற நிரஞ்சி, அவர் முன்னாடி இந்த காலேஜ் கேம்பஸில் போகவே மாட்டேன். மனுசன் பார்வையாலே பதற வைப்பார். அதான் நீ இருக்கியே போதும் யுவியை பத்தி கேட்டுக்குறேன்.” என்று கிளம்பினான்.
ஹேமா புரியாமல்’நம்ம எப்ப முறைத்தோம்’ என்ற யோசனையில் செல்லும் அவனையே பார்க்க, அவன் சட்டென்றுத் திரும்பினான். சட்டென்று பிறர் யாரும் பார்க்காத போது அன்பு ஹேமாவைப் பார்த்து, ஒற்றை கண்ணை அடித்து விட்டு வேகமாக சென்று விட்டான்.
ஹேமாக்கு பக்கென்று இருந்தது. அதுவும் நொடிப் பொழுதே, உணர்வுக்குள் வந்தவள், என்ன நடந்ததென்று அவள் உணர அன்பு அங்கில்லை. அவன் கண் அடித்தது உண்மையா.? என்ற சந்தேகம் வந்தது.
நண்பர்கள் பேச்சினில் தன்னிலை மீட்டாள்.
“ஆமா! உங்க அப்பா, அம்மா யாரையுமே நான் இன்னும் பாக்கலையே எப்ப காட்டுவீங்க எல்லாரும்.” என்று கேட்டாள் நிரஞ்சி.
“அதுக்கு என்ன பாத்துட்டா போது, அதுக்கு முன்னாடி எங்க எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்கோ அப்ப தான் எங்க வீடுகளின் அறிமுகம் ஈஸியா இருக்கும்.” என்றான் ஸ்ரீ.
“என்னது! சொல்லவே இல்லை.” என்று ஆச்சரியமானாள் நிரஞ்சி.
“சொல்ல நேரம் இப்ப தான் வந்திருக்கு.” என்றான் ஸ்ரீ.
“ஓ! அப்ப ஸ்ரீ உனக்கு அத்தானா! முறைப் பையனா.?”
“முறைப் பையனும் இல்லை முறைக்குற பையனும் இல்லை. நல்ல ப்ரண்ட் நிரஞ்சி” என்றாள் ஹேமா.
ஸ்ரீ”ஆமா நிரஞ்சி, நாங்க பிராமின் என் அப்பா கூட பிறந்த தங்கச்சி தான் ஹேமா அம்மா என் அத்தை, ஆனா ஹேமா அப்பா பிராமின் இல்லை இந்து மதம், லவ் மேரஜ்.” என்றான்.
“ஓ!”
“என் அப்பா, அம்மா ஒரே காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணி வீட்டை எதிர்த்து மேரெஜ் பண்ணிட்டாங்க. அப்பா இ பி ஆபிஸில் ஏ இ ஆ இருந்தாரு, எதிர்பாராத ஆக்ஸிடென்டில் அப்பா இறந்துட்டாரு” என்று நிறுத்தினாள்.
நிரஞ்சி அவள் கையை ஆறுதலாக பிடித்தாள்.
“அப்பா வேலையை அம்மாவும் படித்து இருந்ததால் தந்தாங்க, நானும் அம்மா மட்டும் தான், நம்ம அப்பார்ட்மென்டில் ஸ்டூடியோ பிளாட்டில் இருக்கோம். மாமா முதலில் ஏத்துக்கல அப்புறம் அம்மா நிலை கண்டு ஏத்துக்கிட்டாங்க. அம்மாவையும், என்னையும் அவங்க பக்கத்துல வச்சுக்க தான் இங்கயே தங்கிட்டோம். ஆனா அம்மா மாமா வீட்டை எதிர்பார்க்க கூடாதுனு எனக்காக பணம் சேர்க்குறாங்க. மாமா சப்போர்ட் பண்ணாலும் விட மாட்டாங்க. அத்தை நல்லவங்க, அதான் ஸ்ரீ அம்மா சொல்ல போனா அவங்க தான் எங்களை முதலில் பார்க்க வந்தது. அதனால அம்மா அவங்க பாசத்தை நீடிக்க செய்ய விலகியே இருக்காங்க. மத்தப்படி நானும் ஸ்ரீயும் நல்ல ப்ரண்ட்ஸ். அவன் தங்கச்சி தான் என் தங்கச்சி.” என்று சிரித்தாள்.
“ம்ம்ம்! உன் அம்மா பாவம் ஹேமா. அவங்க பேரு என்ன.?”
“காமாட்சி”
“ஸ்ரீ உன் அப்பா, அம்மா பேரு, தங்கச்சி என்ன செய்றா..?”
“குட் நேம்” என்று தடுமாறி சொல்லி சிரித்தாள் நிரஞ்சி.
“கலக்குங்க மேடம்.” என்ற ஹாசன்,
“நிரஞ்சி! என் வீடுபத்தி சொல்லிடுறேன். நான் பிறக்கும் போது ஹாசனானு தெரியாது ஆனா இப்ப ஹாசன். ஆமா! நான் தத்துப் பிள்ளை.”
“ஏய் என்னடா சொல்ற.?” என்றாள் நிரஞ்சி.
“பதறாத, சுனாமி வந்தப்போ நாகப்பட்டினத்தில் என்னைய பெத்தவங்க கடலுக்கு இரையாகிட்டாங்க, என்னைய வளர்க்குறவங்க பையனும் அதே மாதிரி போயிட்டான். அதனால என்னைய முறையா தத்து எடுத்து அவங்க பிள்ளையாவே வளர்க்குறாங்க என் அப்பா அப்துல்லா, சூப்பர் மார்கெட் வச்சு இருக்கார். அம்மா ஷீபா பேகம்.”
“அய்யோ உங்க கதை எல்லாம் கேட்டா நான் சந்தோஷமா வாழ்ந்து இருக்கேனு தோணுது.” என்று கலங்கினாள் நிரஞ்சி.
“ஹேய் நிரஞ்சி! நானும் சூப்பர் ஹேப்பியா வாழுறேன். அப்பா, அம்மாக்கு நான் தான் உலகம்.” என்றான் ஹாசன்.
“ம்ம்ம்!” என்று சிரித்தாள் நிரஞ்சி.
“ஃபைனலி என் கதை, அப்பா டாக்டர் பரசுராம், அம்மா டாக்டர் சுதாராம், அப்புறம் என்னோட ட்வின் சிஸ்டர் விந்தியா டாக்டர் படிக்குறா.” என்றாள் சந்தி.
“ஏய்! டாக்டர் குடும்பமா.? நீ மட்டும் ஏன் டாக்டர் படிக்கலை.?”
“ம்ம்ம்! நம்ம கூட குப்பை கொட்ட தான்” என்றாள் ஹேமா.
“ச்சே! ச்சே! எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை நிரஞ்சி. அப்பா, அம்மா கம்பெல் பண்ணல.”
“அப்ப உன்னோட தங்கச்சி உன்னைய மாதிரி இருப்பாங்களா.?”
“இல்லை! அவ ஒரு டெரர் மூஞ்சி. சிரிப்புனா எந்த மெடிக்கலில் கிடைக்குமுனு கேப்பா. சரியான புத்தகப் புளு. படிப்பு மட்டும் தான். சந்திக்கு ஆப்போஸிட் எங்க கூட தான் ஸ்கூல் படிச்சா.” என்றான் கடுப்பாக ஸ்ரீ.
“ஏன்டா! அவளை மட்டம் தட்டலனா உனக்கு தூக்கம் வராதே. அவ ரொம்ப அமைதி நிரஞ்சி.” என்றாள் ஹேமா.
“அதுக்கு என்ன சனி, ஞாயிறு எல்லாரையும் பாத்துடலாம். ஏனா அப்ப தான் எல்லாரும் வீட்டில் இருப்பாங்க.” என்றான் ஸ்ரீ.
“ம்ம்ம்! ஓகே ஓகே.”
“அது சரி நிரஞ்சி! எனக்கு ஒரு டவுட்.” என்றாள் ஹேமா.
“என்ன ஹேமா.?”
“நீயோ மேரிட் பொண்ணு. சர்வா சார் வைய்ப் இல்லாதவரு, அவரு வீட்டில் உன்னைய எப்டி ஸ்டே பண்ண, உன் மாமியார் வீட்டில் அலோ பண்ணாங்க.?”
“ம்ம்ம்! திரவி அண்ணன் தான் தங்க சொன்னாங்க. யுவிக்காக தானே அதான் யாரும் எதுவும் சொல்லலை போல. அது மட்டும் இல்லை, எனக்கு மாத மாதம் சம்பளம் உண்டு ஹேமா” என்றாள் மண்டையை ஆட்டியவாறு.
“உன் அத்தான் கூட எதும் சொல்லலையா நிரஞ்சி, உன் அம்மா ஃபீல் பண்ணிட்டு தான் போனாங்க. ஆனா உன் அத்தான் இப்டி உன்னைய எங்கயோ தங்க வைக்கறதுக்கு கூடவே கூட்டிட்டுப் போயிடலாமுல. நியூ கப்புல் ரொமான்ஸ் பண்ணாம என்ன வாழ்க்கையோ போ.” என்றாள் சந்தி.
“லூசா நீ! திரவி சார் தெரியாமயா தங்க வைப்பார். சர்வா சார் அவரும் ப்ரண்ட்ல. அதான் நிரஞ்சியை தங்க விட்டு இருப்பாங்க.” என்றான் ஸ்ரீ.
“ஆமா! இருக்கும்” என்றான் ஹாசன்.
“சரி வாங்க போகலாம்.” என்று எழுந்தனர் அனைவரும்.
ஆனால் நிரஞ்சிக்கு மண்டையில் மணி அடித்தது. ‘அத்தான் நம்ம கிட்ட சார் வீட்டில் தங்குறது பத்தி கேக்கவே இல்லையே.? அத்த கிட்ட சொல்லிட்டு போக சொன்னாரு. எப்டி ஒத்துக்கிட்டார்.? அத்தான் கிட்ட கேக்கலாமா, இங்க தங்குறதில் அத்தானுக்கு ஓகேவானு’ என்ற யோசனையில் நடந்தாள்.
***
இரவு…
யுவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
இரவு உணவுக்கு எதையோ பண்ணி வைத்து விட்டு, தன் அறைக்குள் சென்றாள்.
சர்வா ஹாலில் தான் அமர்ந்திருந்தான்.
யுவி, நிரஞ்சி பின்னாலே அலைந்தான்.
நிரஞ்சி ஃபோன் அடித்தது, அவள் தான் ஜெகனுக்கு மிஸ்டு கால் கொடுத்திருந்தாள்.
அவளுக்கு இங்கு தங்குவதை பற்றி கேட்க தோன்றியது.
“ஐ! அத்தான் யுவி, இரு பேசிட்டு வரேன்” என்றாள்.
“ம்ம்ம்!” என்று வெளியில் ஓடி வந்து சர்வா அருகில் அமர்ந்தான்.
“ஹோம் வொர்க் முடிச்சாச்சா.?”
“எஸ் அப்பா” என்றான்.
“என்ன அப்பானு சொல்ற. டாட் போயிட்டா” என்று சிரித்தான் சர்வா.
சர்வா இல்லை என சொன்னால் அடுத்து என்ன கேட்பான் என்று உணராமல், “ஆகிட்டு” என்றான்.
“அப்ப உங்க வைய்ப் யாரு.?”
சர்வாக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
“உன்னோட அம்மா தான் வைய்பா இருந்தாங்க இப்ப இல்லை, ஸி இஸ் நாட் நோ மோர். சோ நம்ம ரெண்டுப் பேரு மட்டும் தான்.” என்றான்.
“ஓ! அப்ப அம்லுக்கு என்னைய மாதிரி பையன் இல்லையா.?”
“இல்லை யுவி, இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்க கூடாது, நீ சின்ன பையன். உனக்கு சில விஷயங்கள் சொன்னாலும் புரியாது ஓகேவா.” என்று மெதுவாக எடுத்துச் சொன்னான்.
“சரி அப்பா.” என்று தலையை ஆட்டினான்.
சர்வாக்கு மகனின் கேள்விகளால் மூச்சு முட்டியது.
மனதில் நிரஞ்சியை’நீ உன் அத்தான் கிட்ட பேச போய், இவன் கேள்விகளை தாக்குறான்’ என்று புலம்பியவாறு திட்டினான்.
‘இன்னும் என்ன எல்லாம் கேட்க போறானோ…?’ என்ற பயமும் வந்தது.