ஞாயிறு வரை எல்லாம் காத்திருக்க முடியாது என்று எண்ணிய நிரஞ்சி தினம் ஒரு வீடு என நண்பர்களின் வீட்டிற்கு யுவியுடன் மாலை வேளையில் படையெடுத்தாள்.
சர்வா வருவதற்கு நேரமாகினால் இருவரின் படையெடுப்பும் வசதியாக இருக்கும், இல்லை என்றால் விளையாடுவதற்குப் பூங்கா போகிறோம் என சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.
ஆனால் யுவிக்கு முன் நிரஞ்சியே உளரி விடுவாள், ‘சார்! சந்தி வீட்டுக்குப் போனோம், ஸ்ரீ வீட்டுக்குப் போனோமுனு’ சொல்லிவிட்டு, அவன் முறைப்பதை பரிசாக வாங்குவர்.
இத்தனைக்கும் யுவி சொல்லிக் கொடுத்துக் கூட்டி வருவான்’அம்லு! அப்பா கிட்ட போனதும் சொல்லிடாத மெதுவா நான் சொல்றேன்’ என்று, ஆனால் அவளின் ஓட்டை வாய் சும்மா இருக்குமா.?
நான்கு நாட்கள் கடந்தது, சர்வா”இனி ஈவ்னிங் வெளியில் போக கூடாது” என்றான்.
“சார்! இனி எதுக்கு போகப் போறோம் அதான் என் நாலு ப்ரண்ட்ஸ் வீட்டுக்கும் போய் அவங்க வீட்டில் உள்ளவங்களை பாத்துட்டு வந்துட்டோமே.” என்றாள் கேஷ்வலாக..
யுவி”அப்பா! அம்லு வேலை முடிஞ்சுட்டு” எனக் கூறி சிரித்தான்.
“ஆமா! பெரிய வேலை, வீடு வீடா சுத்துற வேலை. நிரஞ்சி உனக்கு இன்டர்னெல் எக்சாம் வருது, கவனமா படி சொல்லிட்டேன்” என்று மிரட்டினான்.
“சார்! அது எல்லாம் நான் பாத்துக்கிறேன் அதான் நீங்க இருக்கீங்கள.”
சர்வா முழித்தப்படி, “ஹேய்! நான் இருக்கேன், ஆனா நீ தானே எக்சாம் எழுதனும்.” என்றான்.
“ஆமா சார்! நீங்க என் தலையில பல குட்டு குட்டியாவது சொல்லி தந்துடுவீங்கள.”
“டேய்! அப்டி இல்லடா, சார் நான் ஒழுங்கா படிக்கலைனு தானே குட்டுறாங்க, அத சொல்றேன்”
“ம்ம்ம்! அது எல்லாம் இருக்கட்டும். நாளைக்கு சண்டே. பிருந்தாவையும், பரத்தையும் வர சொல்லி இருக்கேன். அவங்க வரது ரெண்டுப் பேருக்குமே தெரியாது, மதியம் லன்ஞ் வெளியில் ஆர்டர் செய்யலாமா.?”
“யாருப்பா பரத்.?” என்று கேட்டான் யுவி.
பிரபாவின் அண்ணன் அசோகன் குடும்பம் சர்வா பழைய வீட்டிற்கு வருவதில்லை.
பிரபாக்கு ஃபோன் தொடர்பு மட்டுமே.
யுவிக்கு பரத் யார் எனத் தெரியாது.
“பரத் நமக்கு ரிலேசன் யுவி”
“ஓ! ஏன் அத்தைக்குத் தெரியாது அவரு வரது.?”
“அத்தைக்கு சர்ப்ரைஸ், நீயும் சொல்லிடாத.”
“என்ன ஆர்டர் செய்யலாம் நிரஞ்சி, மெனு சொல்லு.”
“சார்! சண்டே தானே, நானே சமைக்குறேன் ப்ளீஸ் சார்.”
சற்றுக் கடுமையாக”நோ! உனக்கு யுவியைப் பாத்துக்குற வேலை மட்டும் தான் நிரஞ்சி, அவனுக்கு தேவையானதை செய் போதும். இப்டி வீட்டு வேலைச் செய்யும் பொண்ணா மாறாத.”
கெஞ்சுதலோடு”சார்! இது ஒன்னும் பெரிய வேலை இல்லை. எங்க ஊரு பக்கம் எல்லாம் விருந்தாளி வந்தா வீட்டில் தான் சமைப்போம்.”
“ஸீ! நீ இந்த வீட்டில் இருக்க பொஸிஸனை உணரு முதலில். யுவிக்கு டீச்சர், அவனோட தேவைக்கு மட்டுமே நீ வேலை செய்யனும். புரியுதா.?” என்று கோபமா சொல்லிவிட்டுப் போயிட்டான்.
“ஆமா தானே யுவி, நான் என்ன உங்கச் சொந்தமா பந்தமா யாரோ தானே, சரி விடு. நீயே போய் உன் அப்பா கிட்ட எதை வேணா ஆர்டர் செய்ய சொல்லு, எனக்கு எதும் வேணாம். எனக்கு நானே செஞ்சுப்பேன்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றாள், அவள் கோபமாக போகிறாள் என நினைத்த யுவி தன் தந்தையிடம் சென்றான்.
“யாரு.? அம்லுக்கு கோபம் வந்தது. அதை நான் நம்பனும், இரு…” என்று எழுந்து வந்தவன்,
“நிரஞ்சி!” என்றழைத்தான்.
வேகமாக வந்தவள்”சார்! சொல்லுங்க நான் படிச்சுட்டுத் தான் இருந்தேன். பாருங்க புத்தகத்தோடு வந்துட்டேன், யுவி நீ என்ன செய்ற.?”
“அப்ப நீ கோச்சுகிட்டுப் போகலையா.?”
“எதுக்கு கோபம்.?”
“நாளைக்கு அப்பா சமைக்க வேணாமுனு சொன்னதால.”
“ச்சே! அதுக்கு எல்லாம் யாரு கோச்சுப்பா”
சர்வா சிரித்தான், “யுவி! இதான் உன் அம்லு, கத்துக்கோ, உன்ன மாதிரி ஆங்கிரி எல்லாம் வராது”
“எஸ் அப்பா, பட் நாளைக்கு அம்லுவே சமைக்கட்டும், ப்ளீஸ்!”
“ஓகே! நிரஞ்சி மட்டும் சமைக்க வேண்டாம், நம்ம எல்லாருமே சேர்ந்து சமைக்கலாம்.”
“ஓ! சூப்பர் ஐடியா, நான் ரெடி, அம்லு நீ.?”
“ம்ம்ம்! நானும் ரெடி! ரெடி!”
*
ஞாயிறு…
சர்வா, காலையில் நேரத்திலே மார்க்கெட்டில் தேவையானவற்றை வாங்க சென்றான்.
நிரஞ்சி, என்னென்ன வேண்டுமென்று எழுதிக் கொடுத்து அனுப்பினாள்.
சர்வாக்கு பொதுவாக இப்படி சமையலிற்கு வாங்கி பழக்கமில்லை.
ஆனாலும் பேப்பரில் இருப்பதை பார்த்து பார்த்து வாங்கினான்.
“என்னடா நண்பா! இந்த பக்கம் இது உன் ஏரியா இல்லையே.?” என்று கேட்டுக் கொண்டே திரவி வந்தான்.
திரும்பி பார்த்த சர்வா”நீ தானா! அதை ஏன் கேக்குற.? எல்லாம் உன் தங்கச்சியும், யுவியும் படுத்துறது தான்.” என்று பிருந்தா, பரத் வருகை, மதிய சமையல் பற்றிக் கூறினான்.
“டேய்! அவ என்ன சமையல்காரியா எங்க வீட்டில் வரவங்களுக்கு சமைச்சுப் போட, எனக்கு இப்ப கூட மனசு ஒத்துக்கல. ஆனா என்ன செய்ய, ரெண்டுப் பேரும் சேர்ந்து கேட்கும் போது நோ சொல்ல தோணலை.”
“ஓகேடா! அம்லு அதை எல்லாம் யோசிக்க மாட்டா, ஹேப்பியா இருடா யுவியோட சந்தோஷத்தை தானே நீ எதிர்பார்த்த, அது நிறைவேறிட்டுல அப்புறம் என்ன.?”
“நிறைவேறிட்டா! நீ வேறடா அதிகமாக ஆகாம இருந்தா சரி, டெய்லியும் ப்ரண்ட்ஸ் வீட்டுக்குப் போறதுக்கு ரெண்டுப் பேரும் கிளம்பிடுறாங்க, வரும் போது யுவி நிரஞ்சியை வார்ன் பண்ணி கூட்டிட்டு வரது ஆனா உன் தங்கச்சி தான் ஓட்டவாய் ஆச்சே அப்புறம் யுவி முறைப்பது, இது தான் நடந்தது. ரெண்டும் வீட்டுக்கு முன்னாடி நின்னு தான் பிளான் பண்றது, லென்ஸ் வழியாப் பாத்தா நல்லா கேட்கும். எனக்கு தெரியுமுனு தெரியாமயே போச்சு அவங்களுக்கு.”
“ஹஹஹஹ! பாரு என் தங்கச்சிக்கு தப்பைக் கூட தப்பா தான் செய்ய தெரியுது”
“யுவி கூட கூட்டணி வச்சா எப்படி மூளை முதிர்ச்சியா யோசிக்கும், சரி வா! நீ வந்ததும் நல்லதாப் போச்சு, நான் வெஜ் வாங்க ஹெல்ப் பண்ணுடா.”
“ம்ம்ம்! வா” என்று இருவரும் அசைவம் வாங்கும் மார்க்கெட்டுக்குள் சென்றனர்.
சர்வா வீட்டில் ராகு தான் எல்லாம் வாங்குவது, அதனால் அவனுக்கு இந்த வேலையே இல்லை.
சந்திராவோடு வாழ்ந்த அந்த குறுகியக் காலத்திலும் பிரபா தான் சமையல் செய்வது, அண்ணன் பெண்ணை பதுசா பாத்துக்கிட்டார்.
மீன், நண்டு, இறால் என வாங்கினான்.
இது சர்வா மெனு இல்லை, நிரஞ்சி போட்ட மெனு.
அதன்படியே வாங்கினான். சொல்லப் போனால் சர்வாக்கு நண்டு எல்லாம் சாப்பிடக் கூடத் தெரியாது.
மீன், இறால் ஓரளவும், மட்டன், சிக்கன் தான் அதிகமாக சாப்பிடுவது.
சின்ன வயசில் நண்டு சாப்பிடும் போது ஓடு மாட்டித் தொண்டையில் சிக்க அதில் இருந்து அதை சாப்பிடுவதையே விட்டுவிட்டான்.
வீட்டில் சமைத்தாலும் அவனுக்கு வைக்க மாட்டார்கள்.
நொந்தப்படி சர்வா”ஹப்பா! என்ன ஸ்மெல்டா இங்க, நான் வேற குளிச்சுட்டு எல்லாம் வந்தேன். இப்ப மறுபடியும் போய் குளிக்கனும்”
“மார்க்கெட் அதுவும் மீன் மார்க்கெட்டுக்கு எவனாவது குளிச்சுட்டு வருவானா.? நீ வந்திருக்க, சரி! இனி கத்துக்கோ நான் கிளம்புறேன்.” என்று கூறி, திரவிக் கிளம்பினான்.
“சர்வா! ஒரு நிமிஷம். வீட்டுல போய் அம்லு கிட்ட என்னைய பாத்தேனு சொல்லாத.”
“ஏன்டா!”
“இல்ல! என் பொண்டாட்டி கிட்ட போட்டுக் கொடுத்துடுவா.”
“என்னடா உளருற.?
“ஆமாடா! இது என் வீட்டுக்கு இல்லை, என் வீட்டுக்கு இன்னைக்கு வெஜிடேரியன் தான், இது பக்கத்து வீட்டு பொண்ணு சொன்னுச்சுனு வாங்கிட்டுப் போறேன், ரேவதிக்கு தெரியாது. ஹிஹிஹி! தெரிஞ்சா அவ்ளோதான.”
“உனக்கு வெட்கமா இல்லை, பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு நீ ஏன் வாங்கி கொடுக்குற.?”
“டேய்! நீயும் ரே மாதிரி சந்தேகப்படாதடா அந்த பொண்ணோட புருசன் வெளிநாட்டில் இருக்கான். ஹெல்ப் கேட்டுச்சு அதான்டா ஆனா ரே தெரிஞ்சா குதிப்பா.”
“ம்ம்ம்! என்னமோ பண்ணி தொலை. ஆனா அம்லு சொன்னாலும் நீ நான்வெஜ் வாங்கினது ரேவதிக்கு எப்படி தெரியப் போகுது.?”
“அவ புத்திசாலிடா, நீங்க ஏன் மீன் மார்கெட் பக்கம் போனீங்க, காய்கறி இருக்க மார்க்கெட் வேற இடம் தானேனு கேப்பாடா.”
சர்வா”ஏன் இந்த ஸ்மெல் காட்டி குடுக்காதா.?” முறைக்க, “வண்டியில் சென்ட் இருக்குடா” என்றான் திரவி.
“இது தேவையா, போடா இவனே!” என்று கடுப்பானான் சர்வா.
“டேய்! அம்லு புருசன் வெளிநாட்டில் இருக்கான், அம்லு இப்ப உன் வீட்டில் இருக்கா, அதுக்காக ஜெகன் சந்தேகப்படுறானா, எல்லாம் நம்பிக்கை தான்டா.”
“ம்ம்ம்! எனக்குமே உன் மச்சான் மேல் சந்தேகம் இருக்குடா.”
“என்னடா சொல்ற.?”
“இல்ல! நீ ரேவதியை ஜெகனோடு ப்ரண்ட் வீட்டில் தங்கி வேலைப் பார்க்க அலோ பண்ணுவீயா.?”
“மாட்டேன்.”
“அப்புறம்.”
“இல்லடா, அவன் முதலில் ஒத்துக்கல அப்புறம் நான் அப்பனா நீ அம்லுவை கூட்டிட்டுப் போனு சொன்னதும் தான், சரி உங்க ப்ரண்ட் வீட்டில் இருக்கட்டுமுனு சொன்னான். எனக்குமே சந்தேகம் தான், ஆனா என்ன செய்றது இந்த செமஸ்டர் லீவ் வரட்டும் அம்லுவை விசிட் விசாவில் அனுப்பி வைப்போம்.”
“ம்ம்ம்! ஆனா அம்லு ஃபோனில் எல்லாம் ரொம்ப நேரம் பேசினா… ஆமா! அன்னைக்கு அவ கிட்ட நீயா பேசின.”
“என்னைக்கு, உன் அப்பா, சித்தி வந்தனைக்கா.?” என்று உளரி பின் நாக்கை கடித்தான்.
“டேய்!”
“ஆமாட! ஆமாட! என் கிட்ட தான் பேசினா…”
“அவளும் இல்லைனு சொல்லி உளரினா, நீ சொல்லு என்னனு.?”
“ஒன்னுமில்லடா, சந்திரா கதைப் பத்தி கேட்டா, பரத் யாருனு.? ஏன் டைவர்ஸ் பண்ணாங்க.? அதை எல்லாம் சொன்னேன்.”
“ஓ! ஆனா சர்ப்ரைஸ்! நிரஞ்சி அதை பத்தி மறந்துக் கூட உளரவில்லைடா.?”
“ம்ம்ம்! யுவிக்காக இருக்கும்.”
“ஓ!”
“அவ ரொம்ப நல்லவடா, ஆனா ஜெகன் பற்றி எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியலை. இவளும் கல்யாண வாழ்க்கையில் ஒரு தெளிவு இல்லாம இருக்கா. அதான் ரெண்டுப் பேரும் ஒன்னா இருந்தா ஒரு புரிந்துணர்வு வருமுல.”
“ம்ம்ம்! நிரஞ்சிக்கு தெளிவு இல்லனு சொல்ல முடியாது, அவளை பாதிக்குற விஷயங்களை பத்தி யோசிக்க மாட்டேனுங்குறா. ஆனா அடுத்தவங்களை பாதிக்குற விஷயமுனா நிதானமா இருக்கா, பாரு உன் கிட்ட கேட்டதைச் சொன்னா யுவி பாதிப்பானு சரியா யோசிக்குறாள”
“இப்ப இதை எல்லாம் சுத்தம் செய்யனும்.” என்று தனி தனியாகப் பாத்திரத்தில் போட்டாள்.
“நான் குளிச்சுட்டு வந்துட்டேன் நிரஞ்சி, வேணுனா ஹெல்ப் பண்றேன் விடுங்க” என்று நிரஞ்சி அருகில் சென்றாள் பிருந்தா.
“அய்யோ இருங்க, போங்க நீங்க இதை எல்லாம் செய்ய வேண்டாம். நான் பாத்துக்குறேன்.” என்று சர்வாவிடம், “சார்! யாரோ உங்க ரிலேசன் வராத சொன்னீங்கள, பிருந்தா சுத்தம் இல்லாம நிக்க முடியுமா. ட்ரஸ் கூட மாத்த முடியாது. என் ட்ரஸ் எல்லாம் பத்தாது, ஹிஹிஹிஹி லூசாக இருக்கும்.” என்றாள்.
சர்வாக்கும் பரத் வரது தோன்ற”பிருந்தா வேணா நீ யுவிக் கூட நில்லு” என்றான்.
“யாரு அண்ணா அந்த ரிலேசன் நானும் வந்ததில் இருந்து யுவி சொல்றான்.”
“உனக்கு பாத்தா தெரியும்.”
பிருந்தாக்கு பரத் தான் என்று துளி அளவுக் கூடத் தோன்றவில்லை.
சர்வா வீட்டில் எப்படி அவனை நினைப்பாள்.
ஒரு வேளை அண்ணன் தனக்கு மாப்பிள்ளை எதும் பார்த்து இருக்காரோ.? என்ற சந்தேகம் தான் வந்தது.
“ஓகே! எப்படி சுத்தம் செய்யனும் சொல்லு, அல்ரெடி நான் மார்கெட் போய் நாறிட்டேன்.”
“சார்! நீங்க போங்க…”
“அட சொல்லு நிரஞ்சி! நீயே க்ளீன் பண்ணி சமைச்சா டைம் ஆகிடும்.”
“ம்ம்ம்! அதுவும் சரி தான், இந்த இறாலை கிள்ளுங்க.”
“என்னது இறாலை கிள்ளவா.?”
“ஆமா! கிள்ளினா தானே சுத்தமாகும்.”
“இப்படி கிள்ளினா சுத்தமாகிடுமா.?” என்று இறாலை கிள்ளினான்.
நிரஞ்சி அவனை முறைத்தாள்.
“ஹேய்! எதுக்கு முறைக்குற.? நான் தான் உனக்கு ப்ரோப்சர்.”
“அது காலேஜில், இது வீடு. அதும் கிச்சன் என் ஏரியா. இப்ப உங்கள கிள்ளினா சுத்தமாகிடுவீங்களா.?” என்று அவனை கிள்ளினாள் நறுக்கென்று.
“ஆ!” என்று அவன் அலறினான்.
யுவி, பிருந்தா சிரித்தனர்.
“அண்ணா! நிரஞ்சி பாஷையில் கிள்ளனும் என்றால் க்ளினீங் போல.”
“ஓ! அது சரி, சரிங்க மேடம் எப்டி கிள்ளனும்.?”
“இதோ இப்படி தான்” என்று ஒரு இறாலை எடுத்து கிள்ளிக் காட்டினாள்.
அவனும் ஒரு இறாலை எடுத்து அதே மாதிரி செய்தான்.
ஸ்பீடு தான் ஆமை வேகத்தில் இருந்தது.
யுவி, பிருந்தாவும் அங்கு சமையல் மேடை மீது விளையாடிவாறு அமர்ந்தனர்.
“ஏன் நிரஞ்சி! இதுக்கு ஆர்டர் பண்ணி இருக்கலாமுல.?”
மீனை சுத்தம் செய்தவள், “சார்! டேஸ்ட்டா சாப்பிடனும் என்றால் கொஞ்சம் கஷ்டப்படனும் தான். “
“யாரு டேஸ்ட்டா சாப்பிட நிரஞ்சி” என்றான் பாவமாக ஆனால் நக்கலாக.
பிருந்தா அதை கேட்டுச் சிரித்து, “வேற யாரு நிரஞ்சி, நிரஞ்சீ! நிரஞ்சீசீசீ!” என்று இழுத்தாள்.
“ஏன், என் சைஸ் பாத்து சொல்றீங்களா.? இன்னைக்கு சாப்பிட்டு அடுத்த தடவை நீங்களே என் கிட்ட கேக்குறீங்களா இல்லையானு பாருங்க அண்ணனும், தங்கச்சியும்”
“ம்ம்ம்! முதலில் இன்னைக்கு பாப்போம்” என்று இறாலை ஆப்ரேசன் செய்தான்.
ஒரு வழியா முடிக்க…
“அவ்ளோ தானே” என்றான் சர்வா.
நிரஞ்சி மீனை சுத்தம் செய்து, அதை ஒரு பக்கம் வறுக்க, மற்றொரு பக்கம் குழம்பாக ரெடி செய்தாள்.
“இன்னும் நண்டு மட்டும் உடைக்கனும் அது முடிஞ்சா அவ்ளோ தான் சார்.”
“ம்ம்ம்! அதானே, இரு” என்று நண்டை எடுத்து உடைத்துப் போட்டான்.
பிருந்தா, யுவியோடு தெறித்து இறங்கினாள்.
“சார்! சார்! என்ன செய்றீங்க.?”
“நண்டு உடைத்தேன்.”
“அய்யோ சார், இப்படி” என்று அதை சுத்தம் செய்து காட்டினாள்.
“ஓ! இது ஈஸியா இருக்கே. இப்ப பாரு எவ்ளோ ஃபாஸ்டா செய்றேனு.” என்று நண்டை உடைக்க வேகமாக, கால்களின் நீட்டியப் பகுதி அவன் கையை பதம் பார்க்க, ரத்தம் வழிந்தது.
“ஆ!” என்றான் சத்தமாக.
“சார்!” என்று நிரஞ்சி ஓடிவர, “என்ன ஆச்சுனா.?” என்று பிருந்தாவும் வந்தாள் யுவியோடு.
நிரஞ்சி உடனே, ஒரு ஈரத் துணியால் கட்டிவிட்டாள்.
“ஓகே! ஓகே! நோ ப்ராப்ளம்.”
“சார்! நான் பாத்துக்குறேன் நீங்க போங்க. சாரி சார்! ஆர்டர் பண்ணி இருக்கலாமோ.? நான் தான் தப்பு பண்ணிட்டேன்.” என்று பதறி வருந்தினாள்.
சர்வா இத்தனை நேரம் அவளின் சமையல் வாசனையை நுகர்ந்துக் கொண்டு தான் நின்றான். உண்மையில் வாசனை தூக்குதலாக இருந்தது.
“அப்படியில்ல நிரஞ்சி! இது புதுசா செஞ்சதால வந்தது. நோ ப்ராப்ளம் நீ பாரு.” என்று நண்டை மறுபடியும் தொடப் போனான்.
“சார்! பேசாம போங்க, நான் பாத்துக்குறேன். நீங்க போய் குளிச்சு ரெடி ஆகுங்க, ரிலேசன் வந்தா இப்படியேவா நிப்பீங்க, போங்க சார்”
சர்வாவும் தலையை ஆட்டிவிட்டு, குளியலறை நோக்கிச் சென்றான்.
சர்வாக்கு குளியலறையில் கை வலி எடுக்க, நிரஞ்சியின் நினைவு வந்தது.
தன்னை நினைத்து சிரித்தான், இதுவரை பார்க்காத வேலைகளை ஒரே நாளில் பார்த்தான் எதுக்கு, யாருக்காக.?
நிரஞ்சி என்ன மாதிரியான பொண்ணு, கூட இருந்தால் நம்மளை மறந்துடுவோம் போல என்ற எண்ணம் மண்டையில் வந்தது.
ஆனால் ஆணி அடித்ததுப் போல் அவள் திருமணம் ஆனவள் என்பது தோன்ற, சிரித்தான், அவள் கூட இருக்கப் போகின்ற ஜெகன் கொடுத்து வச்சவன் என்று நினைத்து சந்தோஷப்பட்டான் சற்றே பொறாமையும் கொண்டான்.