வீட்டின் அழைப்பு மணி ஓசைக் கேட்க, சர்வா குளித்து முடித்து உடைகள் அணிந்துக் கொண்டிருந்தான்.
நிரஞ்சி, சமையல் முடிக்கும் தருவாயில் இருந்தாள்.
யுவியோ, எதுக்கு கிளாஸ்க்கு போறாங்க, எதுக்கு வெளியில் வராங்கனு தெரியாத ஆறுப்பேர் திடீரென்று கலர் கலர் ரேஞ்சரா மாறி, எதிரில் வரும் ஹோஸ்ட்களை பந்தாடும் பவர் ரேஞ்சரிஸில் மூழ்கி இருந்தான்.
பிருந்தா பொழுதுப் போக அங்கு கிடந்த ஹிண்டு பேப்பரை புரட்டியப்படி இருக்கும் போது தான், அழைப்பு மணி ஓசைக் கேட்டது.
“யுவி! சவுண்ட் கம்மி பண்ணு” என்று கூறியப் படி, கதவைத் திறப்பதற்கு எழுந்துச் சென்றாள்.
அதற்குள் அடுத்த அழைப்பு மணி ஓசை நிற்காமல் வந்தது.
“எஸ்! கமிங்..” என்று வேகமாக சென்று திறந்தாள்.
திறந்ததும் எதிரில் நின்ற பரத்தை கண்டவள், புருவத்தை சுருக்கி’இவனா! இங்க எங்க வந்தான்.? வீடு மாறி வந்திருப்பான் போல’ என்று எண்ணி, திறந்தக் கதவை மூடி விட்டாள்.
ஆனால் பிருந்தாவை கண்டவன் மெய்மறந்து முழிக்க, அதற்குள் கதவை சாத்தியவளை நினைத்து’அடிப்பாவி! நான் நிற்பதை பார்த்தும் சாத்திட்டுப் போறா! ஆமா! இவ எப்படி இங்க.?’ என்று யோசித்தவனை, மனமோ’ம்ம்ம்! அவளோட அண்ணன் வீடு இது, அவ சரியா தான் வந்திருக்கா, நீ எந்த உரிமையில் வந்த?’ என்றது.
பரத் தன் மனம் பேசியதைக் கேட்டு நொந்தான்.
மறுபடியும் அழைப்பு மணியை அடிக்க சென்றவன், அதை விடுத்து சர்வாவின் ஃபோனுக்கு அழைத்தான்.
“ஹலோ! பரத் வந்தாச்சா.? செகண்ட் ப்ளோர் தான் வந்துடு. அல்ரெடி அட்ரஸ் அனுப்பினேன்ல.”
“மாமா! நான் உங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்குறேன். காலிங் பெல் அடிச்சேன், கதவும் திறந்தது, ஆனால் நான் வருவதற்குள் மூடப்பட்டது”
“என்ன சொல்ற.?” என்று கேட்டப்படி வெளியில் வந்தான்.
“ம்ம்ம்! உங்க தங்கச்சி தான்.”
“ஓ! வெயிட்” என்று ஃபோனை வைத்தவன், ஹாலில் மீண்டும் பேப்பரில் மூழ்கியிருந்த பிருந்தாவைப் பார்த்துக் கொண்டே கதவு திறக்க சென்றான்.
கதவைத் திறந்தவன்”வா பரத்!” என்றழைக்க, அவனும் உள்ளே வந்தான்.
பிருந்தா கண்டுகொள்ள வில்லை. யுவி யார் என்று பார்க்க, சர்வா”உட்காரு பரத்” எனக் கூற, பரத் தலையை அசைத்து விட்டு, யுவியிடம் சென்று, “ஹாய் யுவி! எப்படி இருக்கீங்க.?” என்று தூக்கினான்.
அவனும்”ஓ! நான் நல்லா இருக்கேன் அங்கிள்.”
யுவியை தூக்கிய பரத், பிருந்தாவின் எதிர் ஷோபாவில் அமர்ந்தான்.
“அப்பா! இவங்க தான் நீங்க சொன்ன ஹெஸ்டா.?”
“ஆமா யுவி! நம்ம ரிலேசன் தான்.”
பிருந்தா தன் அண்ணனை நிமிர்ந்து முறைத்தாள், “அண்ணா! ரிலேசனு இன்ட்ரோ கொடுக்காதீங்க, ஹெஸ்ட் அவ்ளோ தான்” எனச் சற்றுக் கடுப்பாக கூறினாள்.
நிரஞ்சி அப்போது தான் வெளியில் அவசரமாக வந்து, “வாங்க! வாங்க! சாதம் வடிச்சுட்டு இருந்தேன் அதான் உடனே வர முடியலை, தப்பா நினைக்காதீங்க” என்றாள் படப்படவென்று.
பரத் யார் என்று தெரியாமல் முழித்தப் படி சர்வாவைப் பார்த்தான்.
“பரத்! இவங்க பேரு நிரஞ்சனி, என் ப்ரண்டு திரவியோட மச்சான் வைய்ப், நம்ம காலேஜில் படிக்கிறாங்க ஃபர்ஸ்ட் இயர், அவங்க ஹஸ்பேண்ட் யு எஸ்ஸில் இருக்காரு, இப்ப யுவிக்கு தமிழ் டியூசன் எடுத்துட்டு அவனை பாத்துக்க இங்கயே தங்கி இருக்காங்க.” என்று விளக்கினான்.
“ஓ! ஹாய் நிரஞ்சனி” என்று தலை அசைத்தான் பரத்.
“அங்கிள்! அவங்க எனக்கு அம்லு, அப்படி தான் கூப்புடுவேன். நீங்களும் அப்படி கூப்புடுங்க” என்றான் யுவி.
“நிரஞ்சி! அவன் சரியா தான் கூப்புடுறான், பொதுவா ஹெஸ்ட்டா லேடிஸ் வந்தா ஆன்டினும், ஜென்ஸ் வந்தா அங்கிளுனு கூப்புடுறது தானே வழக்கம்” என்றாள் பிருந்தா.
“அது எப்படி பிருந்தா.? பரத் அண்ணா உங்க சொந்தகாரர் தானே, அப்ப மாமானு கூப்புட்டா என்ன தப்பு.?” என்றாள் நிரஞ்சி.
சர்வாவும், பரத்தும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“சொந்தமா! அது எல்லாம் அறுந்துப் போச்சு நிரஞ்சி, உங்களுக்கு எதும் தெரியாது விடுங்க”
“பிருந்தா! எனக்கு எல்லாம் தெரியும், அதுக்காக மாமா உறவு மாறிடுமா.? எங்க ஊருப் பக்கட்டும் மாமன், மச்சான் அடிச்சுகிட்டு மண்டை உடைஞ்சு இரத்தமே வழியும், போலிஸ் கேஸுனு அலைவாங்க, ஆனா அவங்க பிள்ளைங்களை பாத்தா ஒன்னா சுத்துவானுங்க, அப்படி எல்லாம் அறுந்துப் போயிடாது மாமா, மச்சான் மாப்பிள்ளை உறவு எல்லாம்” எனக் கடகடவென்று கூறினாள்.
யுவி முழிக்க, பரத் பிருந்தாவைப் பார்த்து நக்கலா சிரித்தான்.
சர்வாவோ நிரஞ்சியைப் பார்த்து அசந்துப் போனான்.
பிருந்தா”உங்களுக்கு எப்படி தெரியும்.?” என்று நிரஞ்சியிடம் கேட்டு, சர்வாவை பார்த்தாள்.
‘அய்யோ கடவுளே! அடியேய் உளரிட்டீயா.? போச்சு மாட்டுன.’ என்று பயந்தாள் அம்லு.
சர்வா மனதில்’அதானே! நீயாவது உளராமல் இருப்பதா.?’ என்றெண்ணி, அவளை பார்த்தவாறே”பிருந்தா! திரவி தான் சொல்லி இருக்கான், எனக்குமே காலையில் தான் தெரியும், அவனை மார்கெட்டில் பார்த்தேன் அப்ப தான் சொன்னான்.” என்றான்.
சர்வாவின் மனமோ’அடேய்! அவ உளருனானு நீ உளரிட்ட, திரவியை மார்கெட்டில் பார்த்தேனு’ என்றது.
‘ஆமால!’ என்று முழித்தவன், பிறகு சுதாகரித்து”இப்ப அதுவா முக்கியம், பிருந்தா!” என்று ஆரம்பித்தவன், யுவியை பார்க்க,
யுவி சரியாக சர்வாவிடம்”அப்பா! இவரு எப்படி நமக்கு சொந்தம்.?” என்று கேட்டான்.
“யுவி! பிருந்தா உனக்கு அத்தை வேணுமுல, அப்ப அவளை கல்யாணம் செய்யப் போறவரு உனக்கு மாமா தானே வேணும்.” என சர்வா விசயத்தைப் போட்டு விட்டான்.
“ஓ!”
“அண்ணா!” என்றாள் பிருந்தா.
“வெயிட்!” என்ற சர்வா, “யுவி! அப்பா ரூமில் போய் பவர் ரேஞ்சர்ஸ் பாரு, சாப்பிடக் கூப்பிடும் போது வா” என்றான்.
“ஓ! ஓகே அப்பா! பை மாமா” என டிவிப் பார்க்கும் ஆர்வத்தில் சிறுவன் ஓடினான்.
“யுவி! பாத்துப்போ” என்று கத்தினாள் நிரஞ்சி.
பரத்திற்கு ஆச்சரியமாக, ‘இவங்க யுவி மேல் எவ்வளவு அன்பா இருக்காங்க, ஆனா பெத்தவளோ வேண்டாமுனு தூக்கிப் போட்டு போயிட்டாளே’ என வருந்தினான்.
உடனே தன்னிலை அடைந்தவன், “நிரஞ்சி ஏன் நிக்குறீங்க.? உட்காருங்க” என்றான்.
“ஆமா அண்ணா! அடுப்படியில் நின்னது கால் வலிக்குது” என்று சர்வா அமர்ந்திருந்த ஷோபாவில் மறுமுனையில் அமர்ந்தாள்.
பரத்துக்கு அது தப்பாக தெரியவில்லை, அதுவே இன்னேரம் பிரபா இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.
“அண்ணா! உங்க மனசுல இருப்பதற்கு எனக்கு சம்மதம் இல்லை”
“பிருந்தா! இது ஒன்னும் புதுசா முடிவுப் பண்ணியதில்ல, நீங்க இருவருமே விரும்பியவர்கள் தானே.”
“அது எல்லாம் முடிஞ்சுட்டு, என் மனசுல இப்ப யாரும் இல்லை.” என்றாள் கோபமாக பிருந்தா.
பரத் சட்டென்று”ஆனா மாமா என் மனசுல இன்னும் இவ தான் இருக்கா” என்றான் அவளை பார்த்தவாறு.
“இப்படி எல்லாம் பேசினா மயங்க நான் ஒன்னும் பழைய பிருந்தா இல்லை அண்ணா! இவரை முதலில் இங்கிருந்து போக சொல்லுங்க.” என்றாள் வேகமாக.
“அய்யோ பிருந்தா! நான் கஷ்டப்பட்டு சமைச்சு இருக்கேன். சாப்புட்டுப் போகட்டும்” என நிரஞ்சி அதிர்ச்சியாக கூறினாள்.
“ஆமா, இவங்க ரெண்டுப் பேரையும் வரசொன்னது நீ சமைச்சதை சாப்பிட தான் பாரு, கொஞ்சம் அமைதியா இரு” என்று அதட்டினான் சர்வா.
நிரஞ்சி அமைதியானாள்.
“பிருந்தா! நான் சொன்னா நீ கேப்பனு நம்பி தான் அப்பா, சித்தி கிட்ட சொல்லி இருக்கேன். பரத் தான் உனக்கு கல்யாணம் செய்ய நான் பார்த்த மாப்புள்ள, என்ன சொல்ற.?”
“ஓ! இது அவங்க வேலை தானா.? அண்ணா இவங்க எல்லாருமே ஏமாத்துகாரவங்க, உங்களை, உங்க வாழ்க்கையை கெடுத்துவங்க. இவரும் அதே குடும்பம் தானே. இவரும் நாளைக்கு என்னைய கல்யாணம் பண்ணிட்டு வேற யாரையாவது விரும்பினதா சொன்னா என்ன செய்றது.?”
“பிருந்தா! பாத்துப் பேசு, என்னோட அக்கா செஞ்சது தப்பு தான், நான் இப்ப வரை அதை சரினு சொல்லலை, அது மட்டுமில்ல அந்த வீட்டுக்கே நான் மாசத்துக்கு ஒரு வாட்டி தான் போறேன். அதும் கடமைக்காக. புரிஞ்சுக்கோ, அவ அப்படி பண்ணா நானும் அப்படி தான் இருப்பேனு நினைப்பது என்ன நியாயம்.?” என்றான் பாவமாக பரத்.
“யாரை ஏமாத்துறீங்க.? அண்ணா! இவரு சொல்றதை எல்லாம் நம்பாதீங்க. ஓடிப் போனாங்களே இவரு அக்கா, இப்ப எங்க இருக்காங்கனு கேளுங்க. இவங்க வீட்டில் தான், ஆமாவ, இல்லையானு கேளுங்க.” என்றாள் கோபமாக.
சர்வா, பரத்தை திரும்பிப் பார்த்தான்.
“மாமா! அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல, அதுக்காக தான் நான் வெளியில் தங்கி இருக்கேன். அவ கன்சீவ்வா இருக்கா, அவன் பக்கம் யாருமே சேர்த்துக்கல, எப்படி சேத்துப்பாங்க இவ யாரு.? ஒரு பிள்ளைக்கு அம்மா அதை காட்டி ஒதுக்கிட்டாங்க, இவ கன்சீவ் ஆனதும் உடம்பு முடியாம போயிட்டு, இந்த குழந்தை பிறக்குறது அவளுக்கு மறுஜென்மமுனு சொல்லிட்டாங்க, என் அம்மாக்கு தெரிஞ்சதும் கூட்டிட்டு வந்துட்டாங்க, நான் கேட்டதுக்கு அவ டைவர்ஸ் வாங்கிட்டு முறையா தானே வாழுறா அப்படினு சப்பக்கட்டு கட்டுறாங்க, எல்லாருமே ஒன்னா ஆகிட்டாங்க, இப்ப நான் தனியாகிட்டேன்” என்றான் விரிவாக.
சர்வாக்கு பரத்தை பற்றி நன்கு தெரியும். இவன் மட்டுமே அந்த வீட்டில் வித்தியாசமானவென்று.
“பிருந்தா! அவங்களை எல்லாம் விடு, அது முடிஞ்சுப் போன உறவு, ஆனா உனக்கும் பரத்துக்கும் புது உறவு இது.”
“முடியாது அண்ணா, அவங்க எல்லாம் கெட்டவங்களாம் இவரு மட்டும் நல்லவராம், நம்புற மாதிரியா இருக்கு” என்று முறைத்தாள் பிருந்தா.
“பிருந்தா! நீ நம்பலைனாலும் இதான் உண்மை, என் மனசாட்சிக்கு தெரியும் நான் எப்படினு. அதே மாதிரி என் மனசில் இருப்பது நீ மட்டும் தான் நம்பு.” என்றான் பரத்.
“ஹலோ! இந்த கதை எல்லாம் அண்ணன் கிட்ட சொல்லுங்க, உங்க குடும்பத்துக்கே உள்ள குணம் மாறாது. ச்சே! யுவி யாரு.? அவனை கூட நினைக்கல அவ, அவ ரத்தம் உங்க ரத்தம் ஒன்னு தானே.” என்றாள் பிருந்தா வெறுத்தவாறு.
நிரஞ்சி”பிருந்தா! நான் ஒன்னு கேக்கவா.?” என்றாள்.
“என்ன நீ செஞ்ச மீன் குழம்பு ஆறுதா.?” என்று கேட்டான் சர்வா, அவர்களின் உரையாடலில் ஏற்கனவே டென்சன் ஆகி இருந்தவன்.
“சார்! ஆமா அதுவும் தான். ஆனா இருங்க நான் கேக்க வந்தது வேற…” என்ற நிரஞ்சி,
“பிருந்தா, பரத் அண்ணா குடும்பமே தப்பானவங்கனு அவரையும் சேர்த்து வெறுக்குறீங்க, அப்ப உங்க அம்மா யாரு.? அவங்களும் அந்த வீட்டு ரத்தம் தானே, சொல்லப் போனா யுவி அம்மாவை சார்க்கு பாத்து கட்டி வச்சது உங்க அம்மா தானே, இப்ப கூட அவங்க தங்கச்சியை கல்யாணம் பண்ண நினைப்பதும் உங்க அம்மா தானே, இவ்வளவு ஏன் உங்க கல்யாணம் நடக்க சாரை கல்யாணம் செய்ய சொல்றாங்க உங்க அம்மா, இப்ப சொல்லுங்க அப்ப நீங்களும் ஏமாத்துற பொண்ணா.?” என்று கேட்டாள் பொறுமையாக.
“ஆ!” என்று மற்ற மூவரும் வாயைப் பிளந்துப் பார்த்தனர்.
சர்வா ஒரு படி மேல போய்’இது நிரஞ்சியா.?’ என்று அவளையே பார்த்தான்.
பிருந்தாக்கு ‘பளார்’ என்று அறைந்தது போல் இருந்தது.