“நிரஞ்சி! நீ சில நேரத்துல யுவியை விட சின்னப் பிள்ளையா பேசுற, சில நேரத்துல யுவிக்கு பாட்டி மாதிரி பேசுற, புரிஞ்சுகவே முடியல.” என்று நக்கலாக பார்த்தான் சர்வா.
“சார்! யுவிக்கு பாட்டி மாதிரியா.? அப்ப முடி எதுவும் நரைச்சு இருக்கா.?” என்று தன் முடிகளை முன் இழுத்து ஆராய்ந்தாள்.
பிருந்தா, பரத் இருவருமே சிரித்தனர். சர்வா முறைத்து”ஆமா! போய் டை அடி சரி ஆயிடும்.” என்றான்.
“போங்க சார், அது எல்லாம் எனக்கு புடிக்காது, இது இளநரையா இருக்கும், நாளையில் இருந்து கறிவேப்பிலை சாறு குடிக்கனும்” என்றாள் அசால்டாக.
“நிரஞ்சி! போதும் முடியல, நீங்க பேசுன பாயிண்டை தான் மாமா அப்படி சொல்றாங்க, உங்களுக்கு வயசு ஆகல, இளநரையும் இல்ல, அந்தக் கறிவேப்பிலையை பத்திரமா வைங்க, வேணுனா மாமாக்கு கொடுங்க அவருக்கு தான் அங்கங்க தெரியுது இளநரை” என்றான் பரத்.
“ஓ!” என்று நிரஞ்சி வாயைப் பிளந்தாள்.
“யாருக்கு இளநரை.? என் அண்ணனுக்கு வந்த மனகவலை தான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது, யாரு காரணம் உங்க அக்கா தானே.?” என்றாள் பிருந்தா மறுபடியும்.
“ஆமா! யாரு இல்லைனா.? அதுக்கு பரிகாரமா தான் உன்னைய கல்யாணம் பண்ணி நல்லா பாத்துக்கிறேனு மாமா கிட்ட சொல்ல வந்தேன், போதுமா!” என்றான் பரத்.
“பிருந்தா!” என்று நிரஞ்சி ஆரம்பிக்க,
“அய்யோ நிரஞ்சி போதும்! நீங்க இதுக்கு முன்னாடி கேட்டதே எனக்கு செருப்படி வாங்கின மாதிரி இருந்தது. என் அம்மாவும் இவங்க வீட்டு இரத்தம் தானே அதை நான் யோசிக்கல, அப்ப நானும் அதே வழி தானே.? ஆனாலும் இவங்க அக்கா செஞ்சத என்னால ஒத்துக்கவே முடியல, நீங்க கேட்டதும் சரியான கேள்வி தான், எனக்கு அவங்க யாரையும் பாக்க விருப்பமில்ல அப்பிடியிருக்க இவரை கல்யாணம் பண்ணா அவங்க எல்லாம் என் கண் முன்னாடியே இருப்பாங்கள நிரஞ்சி, அது என்னைய சந்தோஷமா வாழ விடுமா.?” என்றாள் உண்மையான வருத்ததுடன்.
“ஓ! நீங்க அப்டி யோசிக்குறீங்களா.?” என்று நெற்றி ஓரத்தில் ஒற்றை விரலை வைத்து யோசித்தவளை, மற்றவர்கள் ஏதோ பெரிய ஞானி பதில் சொல்ல போவது போல் ஆவலாகப் பார்த்தனர்.
சர்வா கூட நெற்றியை சுருக்கி உன்னிப்பாக அவளை கவனித்தான்.
“ஆ! ஆனா பிருந்தா உங்களுக்கு தான் பரத் அண்ணனை புடிக்குமுல, அப்புறம் எதுக்கு அவங்களை பத்தி யோசிக்குறீங்க.? அண்ணன் முகத்தை மட்டும் பாருங்க” என்றாள் பெரிய வழி கண்டறிந்தவள் போல.
ஆனால் அந்த வழி பரத் மனதை ஓசைமணி அடித்ததுப் போல் எழுப்பியது, பிருந்தா இதுக்கு என்ன பதில் சொல்கிறாள் என ஆர்வமாக அவளையே பார்த்தான்.
சர்வாக்கு கூட அதே எண்ணம் தான், பிருந்தாவை திரும்பி பார்த்தான்.
பிருந்தா நிரஞ்சியின் பதிலில் சற்று அடங்கி தான் போனாள், பரத்தை பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வாள், சிறு வயதில் இருந்தே விரும்பியவன், அவன் சி ஏ படிக்கிறான் என அவளும் அதையே படித்தாள.
அவனையே முன்னோடியாக பார்த்து வளர்ந்தவள்.
சந்திரா செய்த தவறால், அவனையும் அடியோடு வெறுத்து ஒதுக்கினாள்.
“அண்ணா! நான் கிளம்புறேன், எனக்கு கல்யாணமே வேணாம், அதுல எனக்கு நம்பிக்கை இல்லை” என்று எழுந்தாள்.
“அச்சச்சோ! நான் சமைச்சதை யாரு சாப்புடுறது, அது எல்லாம் சாப்புடாம போக கூடாது, உட்காருங்க” என்று ஓடிப் போய் நிரஞ்சி, பிருந்தா எழுந்த வேகத்தில் அதே இடத்தில் உட்கார வைத்தாள்.
“உன் கவலை உனக்கு, அவங்களை நான் எதுக்கு வர சொன்னேன், நீ சாப்பாட்டிலே கவனமா இருக்க நிரஞ்சி.” என்று கூறி பார்வையால் முறைத்தான் சர்வா.
“அட என்ன சார் நீங்க.? என் அம்மா எல்லாம் என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீயானா இப்படி விருந்து வச்சு கேட்டுச்சு, உனக்கு அடுத்த வாரம் கல்யாணமுனு சொன்னுச்சு அது பாட்டுக்கும் முடிஞ்சுட்டு, அதான் இவங்க ரெண்டுப் பேரும் விரும்பி இருக்காங்க நீங்க கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க, அடுத்த விருந்தை புது ஜோடியா வந்து சாப்பிடட்டும் இப்ப இந்த விருந்தை சாப்புடட்டும்”
“ஏய் நிரஞ்சி! நீங்களும் உங்க ஹஸ்பேண்டும் லவ் மேரெஜா.? அதான் உங்க அம்மா சொன்னதும் உடனே ஒத்துக்கிட்டீங்களா.?” என்று கேட்டாள் பிருந்தா.
“அய்யே இல்ல! அத்தானை நான் கல்யாணத்தப்ப தான் பாத்தேன். திரவி அண்ணனும், ரேவதி அண்ணியும் பொண்ணு பாக்க வந்தாங்க.”
“அப்ப எப்படி ஒத்துக்கிட்டீங்க, எனக்கு பரத்தை முன்னாடியே தெரிஞ்சாலும் இப்ப ஒத்துக்க யோசிக்குறேன்?”
“அம்மா சொன்னாங்கள பிருந்தா, அப்புறம் நான் எதுக்கு மறுக்கனும். அவங்களுக்கு தெரியாததா! அதான்.” என்று சிரித்தாள்.
“அப்போ ஆப்டர் மேரெஜ் லவ் பண்றீங்க.?” என்று கூறி சிரித்தான் பரத்.
“ஆமா! அவரு யு எஸ் லையும், இவங்க இங்க அண்ணன் வீட்டுலையும் இருந்துகிட்டா.?” என்றாள் பிருந்தா பரத்தை பார்த்து முறைத்தவாறு.
“காதலுக்கு தூரமில்லை, கண்ணில்லை உனக்கு தெரியாத.?” என்று சிரித்தான் நக்கலாக.
சர்வா உடனே”ஏன் காதில்லை, உயிரே இல்லைனு சொல்லு.” என பரத்தை பார்த்து நக்கலடித்தான்.
“”அப்படி கேளுங்கண்ணா…”
“மாமா! ஏதோ ப்லோவில் வருதேனு சொன்னா நீங்க வேற பிரேக் போடுறீங்க, சரி நிரஞ்சி நீங்க சொல்லுங்க, உங்க அத்தானை ஆப்டர் மேரெஜ் புடிச்சுட்டா! ஹேப்பியா.?”
“அதான் கல்யாணம் ஆகிட்டே, இனிமே அவர் தான் எனக்கு எல்லாமுனு அம்மா சொல்லி இருக்கு அண்ணே! அதனால புடிக்காம போகாதுல, எனக்கு பிருந்தா மாதிரி புடிக்காதவங்க எல்லாம் இல்ல, எல்லாரு கூடவும் பேசுவேன்” என்று தலையை ஆட்டினாள்.
பரத்துக்கு நிரஞ்சியின் பதிலை விட, அவளின் அந்த குணம் ஈர்த்தது.
“கண்டிப்பா நிரஞ்சி! உங்களை புடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க, ஏனா நீங்க அப்படிப்பட்ட கேரக்டர், ரேர் மேனுபேக்ஜர். ரியலி ஐ ஆம் ஹேப்பி டு கெட் அஸ் சிஸ்டர் லைக் யு.” என்றான் மனதார.
“ஐ! இப்ப நீங்க சொன்னது எனக்கு புரிஞ்சுட்டு. சார் நீங்க சொன்ன மாதிரி பேப்பர் படிச்சா ஈஸியா இருக்குமோ.? இனிமே உங்க கிட்ட குட்டு வாங்காம படிக்குறேன்.” என முக்கிய விஷயத்தை சொன்னாள்.
“பார்க்கலாம்!” என்ற சர்வா, “பிருந்தா! நீ முடிவா என்ன சொல்ற.? நீயும், பரத்தும் விரும்பியது எங்க எல்லாருக்குமே தெரியும், என்னோட வாழ்க்கையில் நடந்ததை வச்சு அவனையும் நீ ஒதுக்கினா அது எனக்கு தான் மன வருத்தம், என்னால உன்னோட வாழ்க்கையும் வீணாகிட்டுனு” என்றான் வருத்தமாக.
“அய்யே சார்! இன்னுமா நீங்க கேட்டுட்டு இருக்கீங்க, பிருந்தாக்கு சரினு சொல்ல முடியல போல, ஆமா தானே பிருந்தா.?” என்று நிரஞ்சி கிளப்பி விட்டாள்.
“எனக்கு ஏன் சொல்ல முடியாது நிரஞ்சி, அண்ணா! நீங்க எந்த தப்பும் செய்யாதவர், இது என் வாழ்க்கை நான் தெளிவா யோசிக்கனும். அண்ணா! பரத்தை நான் கல்யாணம் பண்ண ஒரு கண்டிசன் இருக்கு” என்றாள் பிருந்தா.
“என்ன.?”
“நாங்க தனியா தான் இருக்கனும் அவங்க வீட்டுக்கு நான் போக மாட்டேன். பேச மாட்டேன், அவங்களும் வரக்கூடாது இவரும் பேசக் கூடாது”
சர்வா”பிருந்தா! என்ன இருந்தாலும் அவங்க அவனுக்குப் பெத்தவங்க, இப்படி எல்லாம் கண்டிசன்ஸ் போட்டா அது எப்படி லைஃப் லாங் சாத்தியமாகும்.?” என்றான்.
“அது அவங்க விதி, நான் ஒன்னும் செய்ய முடியாது. ஓகேனா! பேசுங்க இல்லைனா விடுங்க இதப் பத்தி பேசாதீங்க” என்று எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
சர்வா பரத்தைப் பார்த்தான்.
நிரஞ்சி இடையில் புகுந்து”சார்! இப்படி தான் பேசுவாங்க. நாளைக்கே குழந்தை பிறந்து தாத்தா, பாட்டி வந்தா பாக்க வேணாமுனு சொல்ல முடியுமா.? சும்மா இப்ப சரினு சொல்லுங்க, எங்கப் பக்கம் ஓடிப் போய் கல்யாணம் பண்றவங்க இப்படி தான் சேருவாங்க” என்றாள் ரகசியம் பேசுவது போல்…
“இவங்க என்ன இப்ப ஓடிப்போய் கல்யாணம் செய்யப் போறாங்களா.?” என்றான் சர்வா..
“பிருந்தா சொல்ற மாதிரி எல்லாம் நடக்குமா சார், அவங்க அப்பா, அம்மா எப்படி பேசாம இருப்பாங்க.?”
“அது தெரியுது, ஆனா பிருந்தா கண்டிசனுக்கு ஒத்துக்காம எப்படி அவ சம்மதிப்பா.?”
“மாமா! நான் பாத்துக்கிறேன், இடையில் நான் சமாளிக்குறேன், எனக்கு பிருந்தா தான் பொண்டாட்டியா வரனும் அது போதும்” என்றான் பரத்.
நிரஞ்சி சிரித்தாள், “அண்ணே! மாட்டப் போறீங்க, எங்க ஊருல ஒரு மாமா இப்படி தான்…” என்று அவள் ஆரம்பிக்க,
“உங்க ஊருக் கதை எல்லாம் விடு, உன் கதையே இப்படி தானே நிரஞ்சி, உன் மாமியாருக்கும், உனக்கும் நடுவில் ஜெகன் சமாளிக்குறாரானு தெரியல. எனக்கு தெரிஞ்சு எஸ்கேப் தான் ஆகி இருக்கார். அதே மாதிரி பிருந்தாவை பரத் விட்டுட்டா அப்புறம் யாரு பொறுப்பு.?” என்றான் சர்வா.
“அய்யோ மாமா! அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் பிருந்தாவை தான் விரும்புறேனு அம்மா, அப்பாக்கு தெரியும் அவங்க பிரச்சனை செய்ய மாட்டாங்க, நான் தனியா தானே இருக்கேன், கல்யாணம் பண்ணினாலும் அவ ஆசைப்படி இப்படியே இருந்துடுறேன். எப்பயோ ஒரு நாள் விசேஷ நாட்களில் போயிட்டு வந்துக்குறோம். அதுக்கு நான் பொறுப்பு.”
“அப்புறம் என்ன சார், வாங்க போய் சாப்பிடுவோம் எனக்கு பசிக்குது.” என்றாள் நிரஞ்சி.
“மாமா! இதுக்கு மேல தாங்காது போல நிரஞ்சி சார்ஜ்.”
“சரி! நான் போய் பிருந்தாவை அழைச்சுட்டு வரேன்”என்று கிளம்பிய நிரஞ்சியை தடுத்தான் சர்வா.
“ம்ம்ம்! நீயே போய் பிருந்தா கிட்ட பேசி அழைச்சுட்டு வா, நாங்க டேபிளில் வெயிட் பண்றோம்” என்று பரத்தை அனுப்பி வைத்தான்.
“ம்ம்ம்! அவங்க ரெண்டுப் பேரும் சண்டைப் போட்டு சமாதானம் ஆகி வருவாங்க, நீ போய் சாப்பாடு எடுத்து வை”
“என்னது சண்டைப் போட்டு சமாதானம் ஆவாங்களா.? எதுக்கு.? வாங்க சார் நம்ம போய் சண்டை வராம பேசிக் கூப்புட்டு வருவோம்.” என்று நகர்ந்தவளை,
“ஏய்! நில்லு” என்று அவசரமாக கையைப் பிடித்தவன், “சாரி” என்று கையை எடுத்து, “அவங்க தனியா பேசட்டும் நிரஞ்சி, அப்ப தான் கோபம் எல்லாம் போய் நார்மல் ஆவா பிருந்தா, பரத்தை வெறுத்து ஒதுக்க என்னோட வாழ்க்கை தான் காரணம் அவன் தப்பு செய்யவில்லை, அது புரிஞ்சாலே போதும்.”‘என்றான்.
“அது சரி சார், அதுக்கு ஏன் அவங்களை தனியா விடுறீங்க.? நம்மளும் போவோம் அப்ப தானே தெரியும் என்ன பேசுறாங்கனு.”
“நிரஞ்சி! உனக்கு கல்யாணம் ஆகிட்டுனு சத்தியமா நம்ப முடியலை, பாட்டி மாதிரி கருத்து சொல்ற, ஆனா டீன் ஏஜ் பொண்ணு மாதிரி கொஞ்சம் யோசி, காதல், விருப்பம், அன்பு இப்படி பல பரிமாற்றங்கள் தனிமையில் அனுபவிக்கனும், உனக்கு நான் இதை எல்லாம் கிளாஸ் எடுக்க முடியாது, உன் வயசுக்கு தானா தெரியனும் ஆனா நீ இன்னும் பிரிமெச்சுர் பொண்ணா இருக்க, அப்பப்ப உன் வயசு விஷயங்களை ரசி அப்ப தான் வாழ்க்கை அழகா இருக்கும்.” என்று யுவியை அழைக்க சென்றான்.
நிரஞ்சி அப்படியே நின்றாள்.
‘இதையே தான் சந்தி, ஹேமா சொன்னாங்க, சாரும் சொல்றாரு, நம்ம எப்படி இருக்கோம். புரியவே இல்லை, சரி முதலில் பசிக்குது போய் சாப்பிடுவோம்.’ என்று அடுப்படியை நோக்கி நடந்தாள்.
பரத் அறை வாயிலில் கதவு அருகே சாய்ந்து நின்று அவளையே பார்த்தான்.
ஏதோ தோன்ற திரும்பிய பிருந்தா அவனைப் பார்த்து விட்டு, திரும்பிக் கொண்டாள்.
எதுவும் சொல்லாமல் திரும்பியதால், அவள் அனுமதி கொடுத்தது தெரிய, பரத் உள்ளே வந்தான்.
“பிருந்தா!”
பதில் இல்லை…
“சரி! உன்னோட கோபம் நியாயம் தான், ஆனா அதுல என் தப்பு என்ன இருக்கு.? நானும் அவளை மாதிரி இருக்க மாட்டேன் அப்படி இருந்திருந்தா நீ ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்தி அனுப்பும் போதும் மறுபடியும் உன் முன்னாடி வந்து நிப்பேனா சொல்லு, இதுவரை பேசாத மாமா இன்னைக்கு அழைத்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.? அதான் உடனே வந்துட்டேன். நானா அவர் முகத்தை பார்க்க தகுதி இல்லாமல் இருந்தேன். தப்பு பண்ண அவ சந்தோஷமா வாழுறா. ஆனா நான் அதுக்காக என்னோட காதலை பலியாக்கனுமா.?” என்று கூறி அமைதியா நின்றான்.
பிருந்தா அமைதியா இருந்தாள்.
“நான் இதுக்கு மேல உன் கிட்ட புரிய வைக்க முடியாது, அவளுக்காக நம்ம பிரியனுமுனு ஆசைப்பட்டா பிரிஞ்சுடலாம், ஏனா அப்பா, அம்மாவ என்னால சுத்தமா ஒதுக்க முடியாது அது பெரிய பாவம் பிருந்தா, என்ன இருந்தாலும் அவங்க என்னைய பெத்தவங்க. நீ சொல்ற மாதிரி ஒரேதா தூக்கிப் போட முடியாது. ஆனா என் மனசுல நீ மட்டும் தான் இருப்ப, நான் போறேன்.” என்று வெளியே நடந்தான்.
“நான் அவங்க கூட பேச மாட்டேன், நீ வேணா பேசிக்கோ, இதுக்கு ஓகேவா” என்றாள் மெதுவாக ஆனால் அவன் செல்லும் முன்னே…
பரத் நின்று திரும்பினான்.
பிருந்தா வேகமாக எழுந்து வந்து அவன் மார்பில் சாய்ந்தாள்.
பரத்திற்கு சந்தோஷம் தாங்காமல் அவளை அணைக்க, அவளை நிமிர்த்தி கன்னங்களில் முத்தத்தை வைத்தான்.
“ஆனாலும் என்னைய இப்படி அலைய விடக்கூடாதுடி நீ” என்று அவளை கட்டி இறுக்கினான்.
“ஆமா! உங்க எல்லாரையும் பாத்தா என் அண்ணனுக்கு உங்க அக்கா செஞ்ச துரோகம் தான் ஞாபகம் வருது, என்ன செய்ய.? உங்களை மறக்கல ஆனா வெறுத்தேன் பரத், ஆனா இப்ப அண்ணனே பேசும் போது மனசு கஷ்டமா இருக்கு, அவருக்கு நான் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டேன்.” என்றாள் அவன் மார்பில் இருந்தவாறே.
“அத விட்டு என்னைய யோசி பிருந்தா, சரி விடு, மாமாக்கு ஒரு பொண்ணு பாத்து நம்மளே கல்யாணம் பண்ணி வைக்கலாம்.”
“யாரு உங்க தங்கச்சி லேகாவ.?” என்று நிமிர்ந்தாள்.
“இல்ல, அது அம்மா, அத்தை கணக்கு எனக்கு அந்த எண்ணமில்ல, நல்ல பொண்ணா யுவிக்கு அம்மா, மாமாக்கு அன்பான மனைவியா இருக்க மாதிரி அப்படி மட்டும் ஒரு பொண்ணு கிடைச்சா நான் மாமா கையில் காலில் விழுந்தாவது கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்.”
“உண்மையா சொல்றீங்களா பரத்.?”
“ஆமா பிருந்தா! அதான் என் குடும்பம் மாமாக்கு பண்ண பாவத்துக்கு பரிகாரம்”
“அப்பா! என்னோட பொம்மை பிளேட்டை காணும்.? அம்லு” என்று யுவி கத்தினான்.
“இரு நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்று சர்வா எழுந்து கிச்சன் சென்றான்.
அங்கு கைகளை ஆட்டிக் கொண்டே தீவிர சிந்தனையில் இருந்த நிரஞ்சி சர்வா கண்ணுக்கு வித்தியாசமாக தெரிந்தாள்.
“நிரஞ்சி!” என்றான் அருகில் சென்று…
அவளோ அதி தீவிர யோசனையில் இருந்தாள்.
அவள் முன்னே சுண்டியவன்”ஹலோ! மேடம்.?” என்றான்.
சட்டென்று நினைவுக்கு வந்தவள்”சார்! இதோ மீன் குழம்பு எடுத்துட்டு வரேன் போங்க” என்று கைத்துணியை தேடினாள்.
“உனக்கு அப்டி என்ன திங்கிங், அதுவும் காத்துல படம் வரையும் அளவுக்கு, நான் கூட நண்டு, மீன், இறால் என அனைத்தையும் ஒரே நேரத்தில் சமைத்ததால் அதுங்களோட ஆத்மாக்கள் உன்னைய புடிச்சுட்டுனு நினைச்சேன்.” என்றான் நக்கலாக.
“சார்! இது எல்லாம் சர்வசாதரணம் நான் உயிரோடு இருக்க மீன்களை அடிச்சுக் கொன்று சமைச்சு இருக்கேன்.”
“ம்ம்ம்! கில்லாடி தான், என்ன யோசனை.?”
“சார்! பிருந்தா அவ்வளவு கோபமா போனாங்க எப்டி சமாதானம் ஆகி வந்தாங்க.?” என்றாள் மெதுவாக யுவி பிளேட்டை கழுவியவாறு.
“ம்ம்ம்! அதான் காதல் நிரஞ்சி, இது சொன்னால் எல்லாம் புரியாது, நீயும் காதலிச்சுப் பார் புரியும். உன் வாழ்க்கையில் நடக்கும் போது, அந்த அறைக்குள்ள என்ன நடந்திருக்குமுனு தெரியும்.” என்று யுவி பிளேட்டை வாங்கிவிட்டு நடந்தவனிடம்,
“அப்ப உங்க வாழ்க்கையில் காதல் வந்துச்சா சார்.? அதான் சரியா சொல்றீங்களா.?” எனச் சட்டென்றுக் கேட்டாள்.
மெதுவாக சிரித்த சர்வா”என் வாழ்க்கையில் அது இருந்திருந்தா இப்ப நான் ஏன் யுவியோட தனியா இருக்கப் போறேன் நிரஞ்சி, சீக்கிரம் வா சாப்பிடலாம், பசிக்குதுனு சொன்னீல.” என்று சர்வா வெளியில் சென்றான்.
நிரஞ்சி மனதில்’அப்ப எனக்கு கல்யாணம் ஆகிட்டு அப்ப காதல் யார் மேல் வரனும் அத்தான் மேல் தானே, எப்டி வர வைக்கனும், இப்ப அத்தான் என்ன பண்ணிட்டு இருப்பார்.?’ என்று யோசித்தாள்.
* அமெரிக்கா நடு இரவு…
மதுவின் சுவை தொண்டை எரிய எரிய போதையில் மூழ்கி இருந்தான் ஜெகன்.
“அப்ப உன் பொண்டாட்டி.?”
“அவ பேருக்கு தான் பொண்டாட்டி. என் மனசுல நீ மட்டும் தான், உனக்கு மட்டும் தான் இடம்..”
*
நிரஞ்சிக்கு எது காதல் என்று எல்லாம் புரியவில்லை, ஆனா இப்பொழுது சர்வா அவளோட பசி அறிந்து சாப்பிட அழைத்ததால் அவள் மனதில் நலம் விரும்பியாக மாறி அமர்ந்தான்.
டைனிங் டேபிள் சென்றவள், அனைவருக்கும் இலையில் பரிமாறினாள்.
யுவி மட்டும் பிளேட்டில் சாப்பிட்டான்.
வரிசையாக நண்டு, இறால், மீன் வறுவல், தயிர் வெங்காயம், முட்டை என வைத்தாள்.
பிறகு சாதத்தைப் போட்டு மீன் குழம்பு ஊற்றினாள்.
நிரஞ்சியும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சர்வா நண்டை மட்டும் தொடாமல் சாப்பிட்டான்.
நிரஞ்சி யுவிக்கு அருகில் அமர்ந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்து தானும் சாப்பிட்டாள்.
“செம டேஸ்ட் நிரஞ்சி, அப்டியே பிருந்தாக்கு சொல்லிக் கொடுத்துடுங்க, அப்ப தான் எனக்கும் இப்படி டேஸ்ட்டான ஃபுட் கிடைக்கும்” என்றான் பரத்.
“ம்ம்ம்! நல்ல ஆசை தான் ஆனா அது நடக்காது, நிரஞ்சி ஒன்னு பண்ணுங்க சண்டே சண்டே பரத் இங்க வரட்டும் நீங்க சமைக்க கத்துக் கொடுங்க.” என்றாள் பிருந்தா.
“ஓ! அப்ப ஜாலி, ஸ்கூல் லீவ் போடலாம் என் ப்ரண்ட் அவன் சித்தி கல்யாணத்திற்கு ஒன் வீக் லீவ் போட்டான்.”
“அடேய்! உன் ப்ரண்ட் ஒன் வீக் லீவ் போட்டு அவன் சித்திக் கூட ஹானிமூனுக்கு கூடத் துணைக்கு போனான.” என்று நக்கல் அடித்தான் பரத்.
“பரத்!” என்றனர் சர்வா, பிருந்தா.
“ஓ! சாரி” என்றான் பரத்.
“ஹனிமூனா அப்டினா என்ன.?” என்று கேட்டது நிரஞ்சியே தான்.
“ம்ம்ம்! அது பரத், பிருந்தா போகும் போது தெரியும் இப்ப நீ சாப்பிடு” என்றான் சர்வா.
பிருந்தா சிரித்தாலும் மனதில் நிரஞ்சி பற்றி ஏதோ தோன்றியது.
“சார்! நீங்க நண்டு சாப்பிடுங்க.”
“எனக்கு சாப்பிட தெரியாது, புடிக்காது, நீ வைக்கும் போதே வேணாமுனு சொல்ல நினைச்சேன் வச்சுட்ட, பராவாயில்ல யுவிக்கு எடுத்து ஊட்டி விடு.”
“ஓ!” என்றவள் அதை கரண்டியால் எடுத்தாள்.
தான் எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்தவள்.
நண்டின் நடுப்பகுதியை பிரித்து சதைப் பகுதியை தனியாக எடுத்து சர்வா இலையில் வைத்தாள்.
“சார்! மொதல இதை சாப்பிடுங்க, டேஸ்ட் பாத்துட்டு சொல்லுங்க” என்றாள்.
“நீ சாப்பிடாம எதுக்கு இப்ப இந்த தேவையில்லாத வேலை பாக்குற.?”
“அண்ணா! சாப்பிட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கு, யுவிக் கூட சாப்பிடுறான்.” என்றாள் பிருந்தா.
சர்வா கொஞ்சமாக எடுத்து வாயில் வைத்தான்.
மீன் சதைப் போல் ஒரு மாதிரி டேஸ்ட்டா வாயில் வைத்ததும் மெல்ல எளிதாக கரைந்தது.
“ம்ம்ம்! நல்லா இருக்கு, பட் போதும் நிரஞ்சி, நான் ட்ரை பண்றேன் நீ சாப்பிடு.”
“இருங்க சார் நான் எடுத்து வச்சுட்டு ஒரேதா சாப்பிட உட்காருறேன்.” என்று கால்களை உடைத்து பிரித்து வைத்தாள்.
பிறகு சென்று சாப்பிட ஆரம்பித்தாள்.
மற்றவர்கள் நிரஞ்சி சாப்பிடுவதையே வேடிக்கைப் பார்த்தனர்.
அனைத்தையும் ஒவ்வொன்றாக முடித்து, மீன் குழம்பு, ரசம், மோர் என வந்தாள்.
இலையில் வைத்த சைடு டிஸ்களை முடித்து கடைசியாக மீன் குழம்பு மாங்காயை மோர் சாதத்திற்கு வைத்து முடித்தாள்.
அவள் சாப்பிடுவதை பார்த்த பிருந்தா “வாவ்! சாப்பிடுறதில் இவ்ளோ அழகு இருக்குனு இன்னைக்கு தான் பாத்து இருக்கேன் நிரஞ்சி, சான்ஸே இல்ல எப்டி நீங்க இலையில் இருப்பதை சுத்தமா சாப்பிட்டீங்க.?” என்றாள்.
“ம்ம்ம்! சாப்பாடு தான் நம்ம உயிர் நாடியான விஷயம் பிருந்தா, அதை ரசிச்சு சாப்பிடனும் அப்டி சாப்பிட்டா தான் எனக்கு புடிக்கும், பாருங்க நான் எப்டி இருக்கேன் உங்களை மாதிரி ஒல்லியா பென்சில் மாதிரி இல்லாம” என்றாள் நிரஞ்சி.
“நான் ஒன்னும் பென்சில் இல்லை ஆனாலும் உங்களை விட கம்மி தான். பட் நீங்க இப்டி இருந்தா தான் அழகு நிரஞ்சி, அந்த கொழு கொழு கன்னம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி, இது எல்லாம் ஒல்லியா இருந்தா பாக்க கிடைக்காது” என்று கூறி சிரித்தாள் பிருந்தா.
“ஆமா! இப்டியே சாப்பிட்டா அப்புறம் கொலஸ்ட்ரால், சுகர் தான் வரும். ஹெல்த் கான்சியஸ் வேணும், எல்லாம் ஒரு அளவு தான்.” என்றான் சர்வா வேண்டுமென்றே.
“சார்! அது எல்லாம் வந்தா பாத்துக்கலாம். இந்த பிறப்பு தான் ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும். சாப்புட்டு இலை காய்ஞ்சா அப்புறம் செரிக்காது” என்று அவசரமாக யுவியை அழைத்துக் கொண்டு எழுந்தாள்.
“ஆமா அண்ணா! இவங்க ஹனிமூனுனா என்னனு கேக்குறாங்க.? இந்த காலத்தில் அதிசயமா இருக்கு.”
“தெரியல பிருந்தா, திரவி ப்ரதர் இன் லா இவளை புடிச்சு இருக்குனு விரும்பி தான் கல்யாணம் பண்ணி இருக்கான் ஆனா இவ இன்னோசென்ட் யூஸ் பண்ணிட்டானோனு தோணுது. புடிச்சு கல்யாணம் பண்ணவன் படிக்க வச்சுட்டு ஃபாரின் போயிட்டான். திரவி சொல்லி இருக்கான் செமஸ்டர் லீவில் அங்க கூட்டிட்டுப் போக சொல்லி, பாப்போம். நம்ம என்ன செய்ய முடியும். அவளோட லைஃப் அவ தான் தெளிவா இருக்கனும். ஆனா சில நேரத்தில் பாட்டி மாதிரி அறிவா பேசுறா.”
“ம்ம்ம்!”என்றனர்.
“அச்சசோ! எழுந்திரிங்க” என்று கூறியப் படி வந்தவளை கண்டு எழுந்தனர் மூவரும்.
“அண்ணா! ஒரு ஸ்டூடென்ட்டுக்கு நீங்க பயப்புடுற நிலை வருமுனு நினைச்சி இருப்பீங்க.?” என்று நக்கலாக கேட்டாள் பிருந்தா.
“கனவில் கூட நினைக்கவில்லை” என்று சர்வா சிரித்தப்படி சென்றான்.