“என்ன நிரஞ்சி மேடம் முகம் முழுசும் ஒரே சந்தோஷமா இருக்கு, காலையிலே அத்தான் ஃபோன் பண்ணிட்டாரோ.?” என்று நக்கல் அடித்தாள் சந்தி.
“இல்ல சந்தி! வீட்டுல விசேஷம், அதான் ஒரே சந்தோஷமா இருக்கு”
“வீட்டுல விசேஷமா.? இது ரீசன்டா வந்த படத்தோட டைட்டில் மாதிரில இருக்கு” என்றான் ஹாசன்.
“அய்யோ ஹாசன்! இது நிஜத்தில் நடக்கப் போற விசேஷம்”
“என்னடி உளரிட்டு இருக்க.? நீயே உன் வீட்டில் இல்லை, அப்புறம் யாரு வீட்டுல விசேஷம், திரவி சார் வீட்டிலா.?” என்று கேட்டாள் ஹேமா.
நிரஞ்சிக்கு சட்டென்று ஏதோ ஒரு மாதிரி ஆகியது, ஆனால் சமாளித்து”இல்ல! இல்ல! யுவி அத்தை அதான் சர்வா சார் தங்கச்சி பிருந்தா இருக்காங்கள அவங்களுக்கு கல்யாணம் செய்யப் போறாங்க, அதை தான் சொன்னேன்.” என்றாள்.
“ஓ! அப்ப சரி, சர்வா சார் வீட்டிலா! அப்ப உனக்கு என்ஜாய் தான், இப்ப நீயும் அவங்க வீட்டில் ஒருத்தி தானே.” என்றான் ஸ்ரீ.
நிரஞ்சிக்கு, தன்னையும் அந்த வீட்டில் ஒரு ஆளாக நினைத்து, சேர்த்து பேசியதால் மனம் நிறைந்தது.
“ம்ம்ம்! ஜாலி தான் நிரஞ்சி உனக்கு, எப்ப கல்யாணம்.? எங்களை எல்லாம் சார் கூப்புடுவாங்களா.?” என்று கேட்டாள் சந்தி.
“கண்டிப்பா! நான் எதுக்கு இருக்கேன், சார்க்கு நான் ஒரு லிஸ்டே கொடுத்துட மாட்டேன் யாரை எல்லாம் கூப்புடனுமுனு.” என்று கூறிச் சிரித்தாள்.
“பாருடா அம்லுவை, சார் என்னமோ இவளுக்கு அடிமை மாதிரி பேசுறா” என்றான் ஸ்ரீ.
“பின்ன நிரஞ்சி கூட யாரு பேசினாலும் அடிமை ஆக வேண்டியது தான், இந்தா நம்ம எல்லாம் அடிப்பணிந்து நிக்கல, இந்தா இது ரெண்டும் சொன்னா நம்ம ஏதாவது செய்வோமா.? அதுவே நிரஞ்சி சொன்னா உடனே செஞ்சுட்டு தான் அடுத்த வேலை பாப்போம்.” என்றான் ஹாசன்.
“அடேய்! இது எல்லாம் ஓவரடா, ஆனாலும் நிரஞ்சிங்கிறதால நாங்களும் கண்டுக்கல” என்ற சந்தி, “அப்புறம் நிரஞ்சி! கல்யாணத்தில் உனக்கு புடிச்சது எது.? சாரி கட்டுவீயா, உனக்கு தான் நிறைய இருக்குமே.” என்று கேட்டாள்.
“ஆ! கல்யாணத்தில் எனக்கு புடிச்சதே சாப்பாடு தான் சந்தி, சூப்பரா இருக்கும்.” என்றாள்.
“அடிப்பாவி! எத சொல்றா பாரு” என்று சிரித்தாள் ஹேமா.
“பின்ன அதுவும் உண்மை தானே.?” என்றான் ஸ்ரீ.
அனைவரும் சிரித்தனர்.
சந்தி”யாருடி மாப்பிள்ளை.?”
“அத மறந்துட்டேன் பாரு, பிருந்தாக்கு மாமா பையன்” என்றாள் சுருக்கமாக, இன்னொரு உறவு முறையை விட்டுவிட்டாள், அதை சொல்ல அவளுக்குமே சங்கடமாக இருந்தது , என்ன இருந்தாலும் அது யுவி, சர்வா தொடர்புடையது, நல்ல விஷயமும் இல்லை எனத் தோன்றியதால் சந்திராவைப் பற்றியே வாய் திறக்கவில்லை நிரஞ்சி.
“சூப்பர்!” என்றனர்.
“என்ன அஞ்சல கேங் ஒரே ஜாலியான மூடில் இருக்கு.” என்று கேட்டப்படி அன்பு அங்கு வந்தான்.
“வாங்க அன்பு சீனியர்! பிருந்தா கல்யாணத்தை தான் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள் நிரஞ்சி.
“ஓ! நிரஞ்சி! நீ அன்புனே கூப்புடு அதான் பெஸ்ட்.” என்றான்.
“அப்ப நாங்க.?” என்று கேட்டான் ஹாசன்.
“ம்ம்ம்! சீனியருனு…” என்று அன்பு முறைக்க, சந்தி சிரித்தாள்.
ஆனால் ஹேமா முறைத்தாள், அதை கண்டுக்கொள்ளாத அன்பு, அவளைப் பார்த்து ஒரு மாதிரி சிரித்தான் யாரும் அறியா வண்ணம்.
“ஏன்! அன்பு நீங்க சண்டே வீட்டிற்கு சாப்பிட வரல, சார் வர சொல்லி இருந்தாங்கள.?” என்று கேட்டாள் நிரஞ்சி.
“அதுவா! மேட்ச் விளையாடப் போனேன் அங்க ரொம்ப லேட் ஆச்சு, அதுக்கு அப்புறம் வந்தா என் அண்ணன் சட்டி இல்லாமயே வறுத்து எடுத்துடுவார், அதான் ஃப்ரை ஆகாம தப்பிக்க, வராம எஸ்கேப் ஆகிட்டேன். பட் நீ கொடுத்து விட்ட எல்லா அயிட்டமும் சூப்பர், செம நிரஞ்சி” என்றான் மனதார.
“தேங்க்ஸ்!”
“என்ன அயிட்டங்கள் நிரஞ்சி.?” என்று கேட்டான் ஸ்ரீ.
“அதுவா நண்டு, இறால், மீன்” என்று வரிசைப் படுத்தினான் அன்பு.
“வாவ்! வாவ்! நிரஞ்சி ஒரே அபார்ட்மென்டில் இருந்துட்டு இப்டி கூப்புடாம போயிட்டீயே.? நீ எல்லாம் ஒரு ப்ரண்டா.?” என்று முறைத்தான் ஸ்ரீ.
“ஜூனியர் நீங்க வெஜ் புள்ளை இல்லையா.?” என்று கேட்டான் அன்பு.
“ஆமா சீனியர்! ஆனா நானோ நான் வெஜ் தான்” என்று சிரித்தான்.
“அடப்பாவி ஸ்ரீ! இரு மாமா கிட்ட சொல்றேன்” என்றாள் ஹேமா.
“ம்ம்ம்! சொல்லு, நானும் அத்தை கிட்ட சொல்றேன்”
“நான் ஒன்னும் உன்னைய மாதிரி ஏமாத்தல, நான் சாப்பிடுவேனு மாமாக்கே தெரியும்.”
“அதே மாதிரி நானும் சாப்பிடுவேனு அத்தைக்கு தெரியும்.” என்றான் ஸ்ரீ.
“ஓ! இருக்கட்டும்” என்றாள் ஹேமா அவனை அடித்தவாறு.
“ஹலோ! ஹலோ! ஒன் மினிட், யாரு மாமா, அத்தை.” என்று கேட்டான் அன்பு.
“வாட்! நம்ம ஊரில் முறையில் கல்யாணம் செய்வாங்களே அந்த அத்தை, மாமா பசங்களா.?” என்று கேட்டான் அதிர்ச்சியாக.
“ஹலோ! நாங்க ஒன்னும் அப்படியில்ல, ப்ரண்ட்ஸ் தான், ஏன் மாமா பையன், அத்தை பொண்ணுனா கல்யாணம் பண்ணியே ஆகனுமா.?” என்றாள் கோபமாக ஹேமா.
“ச்சே! ச்சே! அப்டி அவசியமில்ல அண்ணன், தங்கச்சியா இருக்காலமே!” என்றான் அன்பு நக்கலாக.
“ம்ம்ம்! எனக்கு இவன் அண்ணாவும் இல்லை, அண்ணனும் இல்லை போதுமா.?” என்றாள் ஹேமா மறுபடியும் அவனை எதிர்த்துப் பேச நினைத்து.
ஆனால் அன்புக்கு சிரிப்பு வந்தது, அவனோ மாமா, அத்தை பிள்ளைங்க சொன்னதும் ஜர்க் ஆகிவிட்டான்.
அவனுக்கு ஹேமா மீது ஒரு தனி ஃபீல் இருந்தது அது காதலா எனத் தெரியவில்லை, ஆனால் அவளை பார்க்கும் போது வேண்டுமென்றே சீண்டினான், வெறுப்பேற்றினான், சில நேரங்களில் அந்தக் கண்களை ரசித்தான்…
அது தான் ஹேமாக்கு வித்தியாசத்தைக் கொடுத்தது…
“ஆமா! உனக்கு அண்ணா ஆகுறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா! போடி” என்றான் ஸ்ரீ.
“அப்புறம் ஜூனியர் வாங்க நம்ம அப்டியே போய் பசங்க கூடவும் பேசிட்டு வருவோம்” என்ற அன்பு, ஹேமாவைப் பார்த்தவாறு, ஸ்ரீ மற்றும் ஹாசனை இழுத்துட்டு சென்றான்.
“என்னடி ஹேமா.? நம்ம சீனியர் பார்வை சரியில்லையே, அதுவும் குறிப்பா உன்னைப் பார்க்கும் போது” என்று இழுத்தாள் சந்தி.
“அப்டி எல்லாம் ஒன்னும் தெரியல, நீயா ஏதாவது கற்பனை பண்ணாத” என்றாள் அவள்.
“யார பத்தி பேசுறீங்க, அன்பு பற்றியா.?” என்று கேட்டாள் நிரஞ்சி.
“ஆமா நிரஞ்சி! நீ பாத்தீல, சீனியர் இவளை ஒரு மாதிரி லுக் விட்டாருல.?” என்று ஆர்வமாக கேட்டாள் சந்தி.
“அப்டியா.? எனக்கு ஒன்னும் தெரியலையே! எப்பையும் போல தான் பேசிட்டு போறார்”
ஹேமா சிரிக்க, “உன் கிட்ட போய் கேட்டேன் பாரு, என்னைய சொல்லனும், நீயே ஒரு குழந்தை பிள்ளை உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டானுங்க” என்று நொந்தாள்.
“போடி! நான் ஒன்னும் குழந்தை இல்லை, எனக்கும் தெரியும்…”
“என்ன கிஸ் பண்ணா குழந்தைப் பொறுக்கும் அதானே.?”
“இல்ல! இல்ல! ரூமுக்குள்ள தனியா போய்…” என்று நிரஞ்சி ஆரம்பிக்க…
ஹேமா, சந்தி ஒரு சேர”ஹேய்! சொல்லு விவரமா இருக்கடி…” என்றனர்.
“அப்டி தான் டிவியில் காட்டுவாங்க, அதுக்கு மேல தெரியாது, ஆனா நீங்க தான் சொல்லிக் கொடுத்தீங்களே ஒரு தடவை, ஏததோ… ஓரளவு புரியுது, அதனால முத்தம் மட்டும் கொடுத்தா குழந்தை பொறக்காதுனு தெரியும்.” என்றாள் நிரஞ்சி தலையை ஆட்டி தெரிந்ததை.
“ஹப்பாடா! இந்தளவு புரிஞ்சா சரி, ஆமா விருந்து பலமோ, யாருக்கு.?” என இருவரும் மாறி மாறி கேட்டனர்.
“பிருந்தா மாமா பையன் பரத் அண்ணனுக்கு தான், அவங்களுக்கு ஏதோ சண்டையாம் சார் அவங்கள கூப்புட்டு விருந்து வச்சு சமாதானம் செஞ்சார், வெளியில் தான் ஆர்டர் பண்றேனு சொன்னாங்க நான் தான் சமைச்சேன்…”
“ஓ! சூப்பர்டி, சமாதானம் ஆகிட்டாங்களா…?” என்று கேட்டாள் சந்தி.
“ஆமா! அமெரிக்காவில் இருந்து சோத்துக்கு ஏமாந்து தான் வரார் பாரு.” என்றாள் கடுப்பாக சந்தி.
“பாவம் அங்க நம்ம ஊரு சாப்பாடு கிடைக்காதுனு திரவி அண்ணன் சொல்லி இருக்காருடி.”
“ஆமா! ஆளப்பாரு அதுவா முக்கியம் வந்ததும் ஒரு லிப்ட் டு லிப்ட் கிஸ் கொடுக்க மாட்டீயா.?” என்றாள் சந்தி.
“என்னது.? ச்சீ! போடி!” என்றாள் நிரஞ்சி.
“சுத்தம், இவளுக்கு சைவ முத்தமே கஷ்டம் இதில் அசைவ முத்தம் வேற, ஏன்டி சந்தி நீ.?” என்றாள் ஹேமா.
“அத சொல்லு…”
நிரஞ்சி சட்டென்று”ஆமா! பிருந்தா, பரத் அண்ணனும் முத்தம் கொடுத்து தான் சமாதானம் ஆகி இருப்பாங்களா.? அன்னைக்கு…” என்றாள் முக்கிய கேள்வியாக.
“ஹப்பாடா! ஒரு வழியா கண்டுப்பிடிச்சுட்டா, கடவுளே! ஆனாலும் நீ இவளுக்கு இவ்வளவு அறிவை வச்சு இருக்க கூடாது” என்றனர் நட்புகள்.
“ச்சீ! அட கடவுளே! நான் ஒரு லூசு…” என்றாள் நிரஞ்சி தனக்கு தானே.
“என்னடி ஆச்சு.?”
“இல்ல இதை போயா சர்வா சார் கிட்ட கேட்டேன். என்னைய என்ன நினைச்சு இருப்பார்.”
“ம்ம்ம்! இந்த காலத்தில் இப்டி ஒரு ஔவையார் பொண்ணானு தான்.” என்றாள் ஹேமா.
“போடி!”
சந்தி”பேசாம நிரஞ்சி! நீ சினிமா பாருடி.”
“எதுக்கு.?”
ஹேமா”லவ் ஃபீல் எப்டி வருமுனு புரிஞ்சுப்ப.”
“அப்டியா.? எதுக்கு அது.?”
“ம்ம்ம்! மனுசனா பொறந்தா அந்த ஃபீல் வரனுமுடி, ஆண்களுக்கு பெண்கள் மீது, பெண்களுக்கு ஆண்கள் மீதும். அது பத்தி உனக்கு சுத்தமா அறிவே இல்லை, அம்மா, மாடு, பக்கத்து வீட்டுப் பிள்ளைங்கனு வளர்ந்துட்ட நீ, சோ ஸ்வீட் அமுலு பேபியா.” என்றாள் சந்தி அவளின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி…
“ம்ம்ம்! அப்ப எனக்கு காதல் வராத.?”
“யாரு சொன்னா அது சூப்பரா வரும், உன் ஃபோனை கொடு.” என்ற ஹேமா, அலைபாயுதே, சம்திங் சம்திங் இந்த மாதிரி லவ் மூவியா டவுன்லோடு பண்ணிக் கொடுத்தாள்.
“இதில் இருக்கும் படத்தை எல்லாம் பாருடி, உனக்கு காதல் பத்தி புரியும். ஒரு ஃபீல் கிடைக்கும்” என்றனர்.
“உண்மையாவா?”
“ஆமா!”
“சரி! நான் பாக்குறேன்.”
“கண்டிப்பா பாக்குற.” என்று ஆர்டர் போட்டனர்.
இரவு…
யுவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு சாப்பாடு கொடுக்கவும் அவன் சீக்கிரமே தூங்கி விட்டான்.
தன் அறை பெட்டில் படுக்க வைத்தாள் நிரஞ்சி.
அன்று சர்வா ஒன்பது மணிக்கு தான் வந்தான், வந்ததும் ரெப்பெரஷ் ஆகிவிட்டு, ஹாலிற்கு வந்தான்.
ஹாலில் நிரஞ்சி அமர்ந்து அப்பொழுது தான் தோழிகள் ஏற்றிய படங்களை வரிசைப்படுத்தி முதலில் அலைபாயுதே படத்தை எடுத்தாள்.
ஆன் செய்ய சத்தம் வெளியில் கேட்டது, உடனே க்ளோஸ் செய்ய, சர்வா வரவும் சரியாக இருந்தது.
“அதான் சொன்னேன்ல ஒரு பார்ட்டினு டின்னர் முடிஞ்சுட்டு.”
“என்ன சாப்பாடு சார், நல்லா இருந்துச்சா.? நான் வேணா தோசை ஊத்தி தரவா.?”
“நோ! நோ! ஃபுல் ஆச்சு. யுவி எங்க.? டிவி பாக்குறானா.?”
“இல்ல சார் தூங்கிட்டான்.”
“ஓ!”
“அங்கயே தூங்கட்டும் சார்.”
“ஏன்! நீ ஃபோன் பேசுவ, டிஸ்டர்ப் ஆகும்.”
“இல்ல சார், அத்தான் டெய்லியா கூப்புடுறார், இனி கூப்புட மாட்டார். நான் படம் பாக்கப் போறேன். ஹெட் செட் வச்சு இருக்கீங்களா.? ” என்று தன் ஃபோனை காட்டினாள்.
“படமா! புது படமா இல்ல பைரஸிலா.”
“அப்படினா.?”
“திருட்டு தனமா பாக்குறது புது படத்தை…”
“ச்சே! ச்சே! அப்படியில்லை சார், இது எல்லாம் லவ் மூவிஸ்”
சர்வா ஆச்சரியமாக”வாட்!” என்றான்.
“ஆமா சார்! என் ப்ரண்ட்ஸ் தான் இதை எல்லாம் டவுன்லோட் பண்ணிக் கொடுத்து பாக்க சொன்னாங்க.”
“ஓ!” என்றவனுக்கு ஏதோ புரிய. மெதுவாக கேட்டான்.
“எதுக்கு நிரஞ்சி திடீருனு.?”
“அதுவா சார், நான் பிருந்தா, பரத் அண்ணா எப்படி சமாதானம் ஆனாங்கனு தெரியலனு சொன்னேன், உடனே என் ப்ரண்ட்ஸ்…” என்று ஆரம்பித்தவளுக்கு அந்த முத்தம் நினைவு வர, ‘அச்சசோ! உளரிட்டு இருக்கமேனு’ எனப் பேசுவதை நிறுத்தி சர்வாவை பார்த்து முழித்தாள்.
சர்வாக்கு அவள் சொன்னதில் இருந்தே விஷயம் புரிந்தது.
“ம்ம்ம்! சொல்லு”
“இல்ல சார்! நான் அம்மா, மாடு, பக்கத்து வீட்டுப் பிள்ளைங்கனு வளர்ந்துட்டேனு, இந்த மாதிரி படங்கள் பாத்தா நிறைய புரியுமுனு சொன்னாங்க” என்றாள் மெல்ல முழுங்கி குனிந்தாள்.
“ம்ம்ம்! ஏன் மென்னு முழுங்குற.? ஸீ நிரஞ்சி! உன் ப்ரண்ட்ஸ் தப்பான விஷயங்களை சொல்லி தரல, ஆனா அது தேவையா இல்லையானு நீ தான் முடிவுப் பண்ணனும்.”
அவனை நிமிர்ந்து பார்த்தவள்”புரியல சார்!”
“இந்த மாதிரி லவ் மூவிஸ் பாத்தா குட் ஃபீல் கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனா அதை நீயா பாக்கனும். மத்தவங்க சொல்லி உன் மனதில் உணர்வுகளை வர வைக்கக் கூடாது, உணர்வுகள் என்பது தானா வரனும், அதாவது படமோ, பாட்டோ நீயா கேக்கனும், பாக்கனும், சரி! இப்ப உனக்கு படம் பார்க்க தோணுதா.?”
“ம்ம்ம்! இல்ல தான், ஆனா நாளைக்கு அவங்க கேட்டா.?”
அவன் மெல்ல சிரித்தான், “அதுக்காக படம் பார்த்துட்டு ஒப்பிக்கப் போறீயா.?”
“ஆமால!”
“என்ன ஆமால, உனக்கா தோணும் போது பாரு நிரஞ்சி, நீ ஒன்னும் உணர்ச்சியற்ற சிலை இல்லை, உனக்கும் எல்லாம் தெரியும், காதல், ஃபீல், பாசம் இது எல்லாம் தானா வரும் உன் மனசுக்கு பிடிக்கும் போது, தோணும் போது, அப்ப நீயா உணர்வ, அந்த உணர்வு நிலையானதா இருக்கும் உனக்கு புரியும் இது தான் காதலனு…” என்றான் பொறுமையாக.
“ம்ம்ம்! இதுவும் ஒரு சப்ஜெட் தான் சைக்லாஜி பத்தி பேசுவது. சரி நீ போய் தூங்கு.”
“ம்ம்ம்!” என்று எழுந்தவள், “சார்! நீங்க இந்த படம் எல்லாம் பாத்துட்டீங்களா.?”
அவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வர, “ம்ம்ம்! பாத்துட்டேன், நல்லா இருக்கும்”
“அப்ப சரி, நானும் பாக்குறேன் ஒரு நாள் ப்ரீயா” என்று எழுந்து சென்றாள்.
அவர்கள் மனதில் எதுவும் இல்லை, உண்மையாக தெளிவாக பேசிக் கொண்டனர்.
நிரஞ்சிக்கு சர்வா எல்லாமுமாக மாறிப் போனான்.
எதில் சந்தேகம் என்றாலும் சர்வாவிடம் கேட்பதற்கு அவளுக்கு தயக்கம் வரவே இல்லை, அது பாடமோ.? வாழ்க்கையோ.? காலேஜில் பசங்க பேசுவதையும் வந்து அவனிடம் சொல்வாள்.
தேவையானதை அழகாக அவளுக்கு புரிய வைப்பான்.
சர்வாக்கு நிரஞ்சி முழுமையானவள் ஆனாள். யுவிப் போல் அவளும் அவனுக்கு முக்கியமாக தோன்றினாள்.
ஒவ்வொரு விஷயமும் சொல்லிக் கொடுத்தான்.
யாரோ என்ற உணர்வு இருவருக்கும் வரவில்லை.
சர்வா அவன் லிமிட்டில் இருந்தான், நிரஞ்சி அதே வெகுளியான பெண்ணாக வலம் வந்தாள்.
ஆனால் நிரஞ்சியை முழுமையாக படித்திருந்தான் சர்வா.
அவளின் மனம் எப்போது எப்படி யோசிக்கும் என அறிய தொடங்கியிருந்தான்.
நிரஞ்சிக்கோ தனக்கு ஏதோ தேவை என்றதும் முதலில் போய் நிற்பது சர்வா! என பழகினாள் அவளை அறியாமலே…
அவள் கேட்கும் முன்னே சர்வா அனைத்தையும் நிறைவேற்றுவதில் யுவிக்கு சமமாக யோசித்தான்.
இந்த உறவுக்கு பெயர் இதுவரை இருவரும் வைக்கவில்லை. சார் என்றழைக்கும் நிரஞ்சியும், நிரஞ்சி என்றழைக்கும் சர்வா அவ்ளோ தான்.
பிருந்தா- பரத் நிச்சயத்தார்த்தம் முதலில் முடிவாகியது…
மிஸஸ் மயிலாஞ்சி அடுத்து…
(ஹாய் ப்ரண்ட்ஸ்..
மயிலாஞ்சிக்கு ஆதரவு வருமுனு நம்புறேன். நானும் இந்த கதையின் ஒவ்வொரு பதிவையும் ரசித்து ரசித்து தான் எழுதுறேன். இவங்க சேருவது உடனே நடக்காது ஏனா சமூகத்தின் பார்வையில் போகனும்… ஆனா சரியான சந்தர்ப்பம், சரியான காரணம், அவர்கள் மனநிலை எப்படி யோசிக்கும் என அனைத்தையும் தாண்டி தான் கதை நகரும். இன்னும் இருக்கு சர்வா, நிரஞ்சி கடக்க வேண்டியது… 😊😊😊 பொறுமையா படிங்க.