காலையில் எழுந்ததும் வழக்கம் போல தன் காலை கடன்களை முடித்து வெளியில் வந்த நிரஞ்சிக்கு, முதலில் அது தன் மாமியார் வீடு என்ற உணர்வில்லை.
பிறகு தான் அதை உணர்ந்தாள், ‘ஓ! இது சர்வா சார் வீடு இல்லையா.?’ என்று ஹாலிற்கு வந்தாள்.
விமலா இன்னும் எழவில்லை, வேலு மட்டும் எழுந்து வெளியில் போய் இருப்பார் போல, அதற்கான அறிகுறியாக வாசல் கதவு தாழ் விலகி இருந்தது.
நிரஞ்சி வாசலிற்கு சென்று, முன் பக்கம் இருந்த பைப்பில் ஒரு சட்டியில் நீர் பிடித்து, வாசலில் தெளித்தாள்.
நீண்ட நாள்களுக்கு பிறகு கோலம் போட வாய்ப்புக் கிடைத்ததால் அமர்ந்து இஷ்டத்திற்கு இழுத்தாள்.
சர்வா அப்பார்ட்மென்டில் வெளியில் கோலம் போடுவதற்கு அனுமதிக்கவில்லை.
‘நீ போய் அங்க டைம் வேஸ்ட் பண்ணாம நியூஸ் பேப்பரை படி’ என்பான்.
நிரஞ்சியும் அவனை எதிர்த்து கோலம் போட முடியாமல், சாமி அறையில் மட்டும் தினமும் சிறியதாக போடுவாள்.
அதும் நிரஞ்சியாக ஏற்பாடு செய்தது தான், ஹாலில் ஷோகேட்ஸ் போல் இருந்த ஒரு கப்போர்டை சுத்தம் செய்து, அதை சாமி அறையாக மாற்றினாள்.
சர்வா எதுவும் சொல்லவில்லை, அவளின் விருப்பதிற்கே விட்டுவிட்டான், ஸ்ரீ அம்மா கிட்ட சாமி போட்டோக்கள் வாங்கி கேட்டு அடுக்கினாள்.
ஸ்ரீ அம்மா நிறைய போட்டோக்கள் புதிதாக வைத்திருப்பதாக கூறி இருந்தார். ஒவ்வொரு நவராத்திரிப் பூஜைக்கும் அவருக்கு சாமி சிலைகளோ, போட்டோக்களோ கிடைக்கும் அதை தனியாக சேகரித்திருந்தார்.
ஒரு தடவை நிரஞ்சி”ஸ்ரீம்மா, எனக்கு சாமி போட்டோக்கள் வாங்கி தாங்க வீட்டில் வைக்க, சாருக்கு அது எல்லாம் தெரியாது” என்று கேட்டிருந்தாள்.
அவரும் வீட்டில் பரிசாக வந்ததை எடுத்துக்கொடுத்தார்.
பொதுவாக அவ்வளவு எளிதில் வீட்டில் இருக்கும் சாமி பொருள்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும் பிறருக்கு கொடுக்க யோசிப்பார்கள்.
ஆனால் ஸ்ரீயின் அம்மாவிற்கு நிரஞ்சி என்றால் அவ்வளோ இஷ்டம் அவள் கேட்டதும், ‘என் கிட்டயே இருக்குடி குழந்த எடுத்துக்கோ’ எனக் கொடுத்தார், அதை தான் வரிசையாக அடுக்கி அழகான சாமி அறையை உருவாக்கி, அதன் கீழே ஒரு கோலமிடுவாள்.
இன்று அதை எண்ணியவாறே கோலமிட்டு முடித்தாள்.
“என்ன அம்லு! எப்ப வந்த.?” எனப் பக்கத்து டீக்கடை தாத்தா ராமு கேட்டார்.
“தாத்தா! நல்லா இருக்கிங்களா.? நான் நேத்து தான் வந்தேன். அத்தைக்கு கண் ஆப்ரேசன் பண்ணி இருக்குல அதான், பாத்துட்டு கூடவே கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாமுனு” என்று பேசிக் கொண்டே அவர் அருகில் சென்றாள்.
“அப்டியா! நானும் கேள்விப்பட்டேன் உன் மாமானார் சொல்லிட்டு இருந்தார். ஆமா லீவ் போட்டு வந்து இருக்கியா.?”
“ஆமா தாத்தா! இப்ப தான் பரீட்சை முடிஞ்சது, நாலு நாள் தான் லீவ் பிரச்சனையில்ல”
“ம்ம்ம்! நீ போனது தான் நல்லது இல்ல உன் மாமியார் கூட இருக்க முடியுமா.? உன் கிட்ட ஒன்னு சொல்லனும் அம்லு” என்று சுற்றிலும் பார்த்தார்.
“என்ன தாத்தா.?”
“எங்க உன் மாமியார்.?”
“தூங்குறாங்க, மாத்திரை சாப்பிடுறாங்கள.”
“வேலு எங்க.?”
“மாமா வாக்கிங் போய் இருப்பார் போல.”
“ம்ம்ம்! உன் ஃபோன் நம்பர் தெரியல, உன் புருசன் ஃபோன் பண்ணினனா.?”
“அத்தான் பேசுவாங்க தாத்தா, நேத்து காலையில் பேசினாங்க.”
“உன் கூட நல்லா சந்தோஷமா பேசுறானா.?”
“பேசுவாரு தாத்தா, ஏன் கேக்குறீங்க.?”
“எனக்கு எப்டி சொல்றதுனு தெரியல, ஆனா சொல்லாம இருக்க முடியல. உன் புருசன் குணம் சரியில்லை, பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ.” என்றார்.
“என் கடைக்கு வர ஒருத்தர் எனக்கு நல்ல பழக்கம், அவரு வீட்டு விசேஷத்துக்குப் போய் இருந்தேன். அப்ப அவரு பையன் வெளிநாட்டில் இருக்கானு நிறைய போட்டாவை காட்டினாரு. அதுல உன் புருசன் போட்டா பாத்தேன். எனக்கு தான் உன் புருசனை நல்லா தெரியுமே.”
“சரி தாத்தா! போட்டோ தானே பாத்தீங்க.?”
“கேளு மேல, போன வாரம் அந்தப் பையன் லீவுக்கு வந்திருந்தான், அவன் அப்பாக்கு ரொம்ப முடியலனு பாக்குறதுக்காக, அப்ப நானும் போய் இருந்தேன். அப்ப ரெண்டுப் பேரும் பேசிட்டு இருந்தோம். நான் ஜெகன் பெயரை சொல்லி விசாரித்தேன். அவனும் தெரியுமுனு சொன்னான் ஆனா வேற வேற பிரிவாம் வேலை செய்றது, அது ஏதோ ஒரு பார்ட்டியில் எடுத்த போட்டோவாம். நான் சொன்னேன் உன்னை பத்தி ரொம்ப நல்லப் பொண்ணு அவனுக்கு விசா கிடைக்கலைனு இங்கயே இருக்கு, நீயாவது சொல்லி கூட்டிட்டுப் போக சொல்லுப்பானு.
அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சி ஆகிட்டுடா அம்லு, தாத்தா நீங்க அந்த பொண்ணு நல்லப் பொண்ணுனு சொன்னதால சொல்றேன் அவன் அந்த பொண்ணை ஏமாத்திட்டு இருக்கான், அதுக்கு மேல நான் எதும் சொல்ல முடியாது, முடிஞ்சா அந்தப் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்திக்க சொல்லுங்கனு சொன்னான். நானும் என்னனு கேட்டதுக்கு அவன் அதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது, அவங்க குடும்ப பிரச்சனைனு சொல்லி அமைதியாகிட்டான், நானும் போன இடத்தில் ரொம்ப கேக்க முடியலனு வந்துட்டேன் அம்லு.
எனக்கு புரியல, நீ தான் உஷாரா இருக்கனும் அம்லு, சொல்லிட்டேன். இதை நான் வேற யாருகிட்ட சொன்னாலும் பிரச்சனை எனக்கு தான், நீயும் என்னைய இதில் மாட்டி விட்டுடாத உன் நல்லதுக்கு தான் சொன்னேன்” என்று அவர் வேலையைத் தொடர்ந்தார்.
“தாத்தா! எனக்கு புரியல, அத்தான் சிகரெட், தண்ணி குடுப்பாரா.? அதை சொல்றாங்களா.?” என்றாள் புரியாமல்…
“அட மக்குப்பொண்ணே! அவன் சொன்னதை வச்சு பாத்தா, அங்க எவ கூடவோ தொடர்பில் இருக்கான் போல. அதை தான் அவன் அப்டி சூசகமா சொன்னான், யாரு.? என்னனு.? எனக்கு கேக்க தான் தோணுச்சு ஆனா அவன் அதுக்கு மேல இதபத்தி பேசல, அவனும் எப்டி சொல்வான்.?”
“தாத்தா!”
“ஆமான்டா அம்லு! நீ உன் அம்மா கிட்ட பேசு, அவங்க தான் சரியான ஆளு.” என்றார் தாத்தா.
“சரி தாத்தா!” என்று வீட்டிற்குள் சென்றாள்.
நிரஞ்சிக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை, அவளுக்கு எப்படினு யோசிக்கவும் தெரியவில்லை…
“அத்தான் என்னைய ஏமாத்துறாரா? எதுக்கு, நான் என்ன தப்பு செஞ்சேன்.? இல்ல இல்ல தாத்தா வேற யாரையோ பத்தி தப்பா கேட்டு இருப்பார், அத்தான் அப்டி எல்லாம் செய்ய மாட்டார்” என்று தோன்ற, உடனே ஓடிப்போய் தன் ஃபோனை எடுத்து ஜெகனை அழைத்தாள்.
அவளோட நேரம் அவன் எடுத்துப் பேசினான்.
“சொல்லு அம்லு!”
“அத்தான்!” என்று ஆரம்பித்தவள், “நான் வீட்டுக்கு வந்துட்டேன், அதுக்கு தான் ராத்திரி ஃபோன் பண்ணினேன் நீங்க வேலையா இருந்தீங்களா.?”
“இல்ல! இனிமே தான் சாப்புட்டு தூங்கனும். இன்னைக்கு ஆபிஸில் மீட்டிங் முடிய லேட் ஆச்சு, இனிமே தான் போய் சமைச்சு சாப்புடனும், இப்பவே டயர்டு ஆச்சு.”
“ஓ! பேசாம, ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்புடுங்க அத்தான், உங்களுக்கு தான் முடியலையே.?”
“அம்லு! முன்னேறிட்ட, ஆர்டர் பண்ணி எல்லாம் சாப்புட சொல்ற, அது என்னவோ கொலை குத்தம் மாதிரி பில்டப் கொடுப்ப.?”
“இல்ல அத்தான், யுவி, சர்வா சார் எனக்கு எக்சாம் நடந்ததால் ஆர்டர் பண்ணி தான் சாப்பிட்டாங்க நைட்டுக்கு எல்லாம், அதை வச்சு தான் சொல்றேன், முடியலனு சொன்னீங்கள.”
“ம்ம்ம்! அது ஒன்னும் பிரச்சனையில்ல அம்மாவை பாத்துக்கோ, அவங்க கூட எதும் வாய் கொடுத்துடாத”
ஜெகனுக்கு இந்தக் கேள்வி அம்லு கிட்ட இருந்து புதிது…
“என்ன திடீருனு கேக்குற.? ஏன் என்ன விஷயம்.?”
“இல்ல அத்தான்!” என்று நிரஞ்சி டீக்கடை தாத்தா சொன்னதை அப்படியே ஒப்பித்தாள்.
சில நேரங்களில் விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்பது அனுபவசாலிக்கே தெரிவதில்லை, இவளோ சாதரணமாக யோசிக்கும் சிறுப்பெண் மூளை வளர்ச்சியே…
ஜெகனுக்கு பொறடியில் ஓங்கி அடித்ததுப் போல் இருந்தது.
“கண்டவன் சொல்றானு நீ அதை எல்லாம் கேக்காத, முதலில் இந்த மாதிரி டீக்கடை, மளிகை கடை ஆளுங்க கிட்ட எல்லாம் பேசாத அம்லு. இங்க தமிழ் பசங்க எல்லாம் நான் பெருசா பழகவில்லை, எவனாவது தேவையில்லாத கதை சொல்வான் அதை நம்பிட்டு நீ போய் அப்பா, அம்மா கிட்ட எல்லாம் உளரி வைக்காத அம்லு, உனக்கு செமஸ்டர் லீவ் வரும் போது நான் உன்னை இங்க கூப்புடுறேன். விசிட் விசாவில் வந்துட்டுப் போகலாம் சரியா.?” என்றான் சமாதானமாக…
“ம்ம்ம்! சரி அத்தான், அந்த ஆளு ஏன் உங்களை பத்தி தப்பா சொல்லி இருக்கான், இருங்க அந்த தாத்தா கிட்ட போய் திட்டிட்டு வரேன்.”
“அவன் யாரு.?” என்று யோசித்தவன், “ஆ! இப்ப ஊருக்கு போனது அவன் தான், அவனுக்கும் எனக்கும் ஒரு ப்ராஜெட் இஷ்யூ இருக்கு அம்லு, அதான் சும்மா கதை விட்டு இருக்கான்”
“இப்டி எல்லாம் கூட செய்வாங்களா அத்தான்”
“அவன் கொஞ்சம் மூளைகெட்டவன் அம்லு, பாரு! அப்பாவ பாக்கவே போகல ஏதோ எமெர்ஜென்ஸி சொல்லி மெசேஜ் வந்து தான் போனான். அது மட்டுமில்ல அவன் பேமிலி இங்க தான் இருக்காங்க, அவன் மட்டும் தான் போய் இருக்கான், நீ எல்லாம் அப்டி இருப்பீயா.? அம்மாக்கு உடம்பு முடியலனு உடனே வந்துட்ட பாத்தீயா. ஆனா அவன் பொண்டாட்டியை விட்டுட்டு தனியா போய் இருக்கான் அவன் சொல்றானு நீ போய் நம்பிட்டு இருக்க.?”
“அடப்பாவமே! அவன் போய் உங்களை தப்பா சொல்லி இருக்கான் பாருங்க, அதையும் இந்த தாத்தா நம்பிட்டு வந்து சொல்றாரு, நல்ல வேளை அத்தை, மாமா கிட்ட சொல்லல அத்தான்”
“ம்ம்ம்! நீ போய் கேட்டு எதுக்கு வெளியில் தெரியனும். அப்புறம் அம்மா சும்மா விடாது அந்த டீ கடைக்காரரை. நீ அவர் கிட்ட பேசாத. எப்ப போற சர்வா வீட்டுக்கு.?”
“சனிக்கிழமை”
“சரி அதுவரை நீ அவர் கிட்ட பேசாத, அவர் சொன்னதை யார் கிட்டையும் போய் சொல்லாத, நான் பாத்துக்குறேன். நீ எக்சாம் முடிச்சுட்டு இங்க வரலாம்” என்றான்.
“ம்ம்ம்! நான் போய் காலை வேலை பாக்குறேன் அத்தான்” என்று ஃபோனை வைத்தான்.
ஜெகனுக்கு நிரஞ்சியை சமாளிப்பது பெரிய காரியமாக இல்லை.
ஆனால் மனதில் குறித்துக் கொண்டான், அந்தப் பையனிடம் இது பற்றி பேசி வார்ன் செய்ய வேண்டும் என, அதை உடனேவும் செய்தான்.
அதன் எதிரொலி ராமு தாத்தாவிற்கு வந்தது, அவரும் ‘தான் ஏதோ நல்லது நினைத்து சொன்னோம் ஆனா அது தனக்கே தப்பாக முடிந்துடும் போல’ என ஒதுங்கினார்.
ஒரு பெரிய போர்களமாக மாற வேண்டிய ஒரு வழியைக் காட்டினார் கடவுள் நிரஞ்சிக்கு அவள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள, ஆனால் புரியாமல் சாதரணமாக நழுவ விட்டாள் நிரஞ்சி.
அவ்ளோ தான் அவளின் மனம். இது ஜெகனின் மீது வைத்திருக்கும் மூட நம்பிக்கை இல்லை, மனிதர்களின் பல பக்கங்களை பற்றி அறியாதவள் நிரஞ்சி, அது அறியும் போது தான் யார் பேசுவது சரி.? தவறு.? என்பதை உணர்வாள்.
அதுவரை அவளுக்கு புருசன், திரவி குடும்பம், அம்மா, யுவி, சர்வா இவர்கள் தான் நலம் விரும்பிகள்.
ஜெகனிடம் பேசிவிட்டு அன்றைய வேலைகளை தொடங்கினாள்.
அவளின் மனதில் ஜெகனைப்பற்றி எந்த தவறான எண்ணமும் பதியவில்லை. மாறாக மனதில் சந்தோஷம் வந்தது, தன்னை அமெரிக்கா அழைக்கப் போகின்றான் என்று…
மதிய ஓய்வில் தன் அம்மாவிடம் ஃபோன் பேசினாள்.
விமலா கண் ஆப்ரேசன் பற்றி கூறினாள்.
“இப்ப நல்லா இருக்காங்களா அம்லு.?”
“நல்லா இருக்காங்கம்மா”
“சரி! சரி! நான் சனிக்கிழமை வரேன் பாக்க”
“அம்மா! அன்னைக்கு தான் சர்வா சார் வீட்டுக்குப் போறேன்”