“எவ்வளவு நேரம் வெயிட்டிங் தெரியுமா.? சீக்கிரம் வாங்க அண்ணா, உள்ள அந்த குரூப்போட நிக்க முடியாம வெளியில் வந்துட்டேன்” என்று யுவியைத் தூக்கினாள் பிருந்தா.
“வாங்க மாமா! நிரஞ்சி, யுவி வெல்கம்” என்று வரவேற்றான் பரத்.
“சாரி பிருந்தா! இன்னைக்கு ஈவ்னிங் ட்ராபிக், அதுவும் செக்கிங் ஓவர் லைசென்ஸ், ஆர் சி அப்டினு ப்ராப்பர் செக்கிங் முடிச்சு தான் அனுப்புறாங்க, சோ செம டிராபிக்” என்றான் சர்வா.
“ஆமா மாமா! ரூல்ஸ் போட்ட ரெண்டு நாளிலே நாற்பது லட்சம் கலெக்சனாம் அப்பனா பாருங்க எந்தளவு அந்த ரூல்ஸ் டிரைவிங் இருந்திருக்குனு”
“நாற்பது லட்சமா! அவ்வளவா ஃபைன் போடுவாங்க, அடக்கடவுளே! எங்க ஊருல நிதியரசு பெரியப்பா வேற லைசென்ஸே இல்லாம பைக் ஓட்டிட்டு இருக்காரே. அவரு இனி எப்டி லைசென்ஸ் வாங்க முடியும், வயசே அறுபத்ததைஞ்சு ஆச்சே சார்”
“ஹலோ மேடம்! கொஞ்சம் வெயிட், இந்த ரூல்ஸ் இப்ப சென்னைக்கு மட்டும் தான். நீ ஃபோன் பண்ணி சீக்கிரம் உன் பெரியப்பாவை லைசென்ஸ் எடுக்க சொல்லிடு” என்றான் சர்வா நக்கலாக.
“இருங்க சார் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று ஃபோனை டயல் செய்ய போனவளிடம், “அய்யோ நிரஞ்சி! இன்னைக்கு ஞாயிறு நீங்க சொன்னாலும் டுடே நாட் பாசிபிள், வாங்க புடவை எடுக்கப் போகலாம்” என்றாள் பிருந்தா பதறியபடி.
சர்வா, பரத் சிரித்தனர்…
“அம்லு! உனக்கு டைட்டானிக் கதையை அப்புறம் கண்டினீவ் பண்றேன்” என்றான் யுவி.
“ஓகே தங்கம்!” என்றாள் அவள்.
“அண்ணா! தெரியாம ஏன் லேட்னு கேட்டுடேன் அதுக்காக இப்டி நிரஞ்சியை வச்சு பழிவாங்காதீங்க, அங்க நான் இல்லாமயே புடவை செலக்ட் பண்ணிடப் போகுதுங்க.”
“நீ இல்லாம செலக்ட் பண்ணினாலும் நீ அப்டியே அதை எடுக்க விட்டுட்டு தான் அடுத்த வேலை பாப்ப பாரு, ஏன் இந்த சீன்.?” என்றான் பரத்.
“தெரியுதுல, போய் உங்க குடும்பத்தை அமைதியா நிக்க சொல்லுங்க, சும்மா நொய் நொய்னு ஃபோன் பண்ணாம” என்று சொல்லும் போதே பரத் ஃபோன் அடித்தது, அவனின் அம்மா தான்.
பிருந்தா அப்பா ராகு, பரத் அப்பா அசோகன் வரவில்லை.
பிரபா, சந்திரா, லேகா, பரத் அம்மா ரசியா கடையின் உள்ளே நின்றனர்.
“ஓகே! வாங்க போகலாம்” என்ற பரத் பிருந்தாவை அழைச்சுட்டு முன்னே நடந்தான்.
பிருந்தாவிடம் தான் யுவி இருந்தான்.
சர்வாவும், நிரஞ்சியும் ஒன்றாக கடைக்குள் நுழைந்தனர்.
“சார்! பெரியக் கடையா இருக்கு, இந்த மாதிரி கடைக்கு எல்லாம் நான் வந்ததே இல்லை.”
“ஆமா நிரஞ்சி! இந்தக் கடையில் எல்லா விதமான டிரஸ்களும் இருக்கும், கீழே சின்ன பசங்க டிரஸ், ஃபர்ஸ்ட் ப்ளோர் டீன் ஏஜ் மாடர்ன் டிரஸ், சுடி, சர்ட்ஸ், செகண்ட் ப்ளோர் கல்யாண புடவை, வேஷ்டிகள் இருக்கும்.”
“ஓ!” என்று வாயை பிளந்தவள் வந்து நின்றது எக்லேட்டர் முன்…
பேசியப்படியே சர்வா பின்னால் நடந்து வந்தாள்.
“அய்யோ சார்! இதுல எல்லாம் எனக்கு ஏற தெரியாது, மாடிப்படி இருந்தா சொல்லுங்க அதுல போகலாம்”
“அது சரி! மேடம் அமெரிக்கா வரை போகப் போறீங்க, இதுல ஏற பயந்தா எப்டி, வா அதான் நான் வரேன்ல” என்று அவளின் கையைப் பிடித்து நொடியில் ஏற்றி விட்டான்.
அவர்கள் முன் சென்ற யுவி”ஐ! அம்லு” என்று கை காட்டினான்.
“ஆத்தாடி!” என்று சர்வா எக்ஸ்லேட்டரில் ஏற்றிய நொடியில் கத்தினாள்.
அதை எல்லாம் அவள் காதில் வாங்கவில்லை, “சார்! நல்லா தான் இருக்கு.” என்று யுவிக்கு கையை, படிகளில் முன்னே நடந்தவாறு காட்டினாள்.
இறங்கும் இடம் வர, பயந்தவள் சர்வா இருக்கும் படிக்கே திரும்பினாள்.
“சார்! எப்டி இறங்குறது, பயமா இருக்கே.”
“ம்ம்ம்! அதுக்காக திரும்பி நடக்கப் போறீயா.?”
“ஆமா!”
“நிரஞ்சி! நீ ரிவெஸில் நடந்தா மேல தான் வருவ, இது மேல மூவ் ஆகுற ஸ்டெப்ஸ், ஸீ நல்லா, அந்தப் பக்கம் உள்ள ஸ்டெப்ஸ் கீழே மூவ் ஆகுறது”
“அப்ப அந்த பக்கம் தாவிடட்டுமா.?”
“ஆக மொத்தம் இன்னைக்கு இந்தக் கடையில் நீ பெமிலியர் ஆகாம போக மாட்ட.?” என்றவன், சட்டென்று “வா!” என்று வெளியில் கையைப் பிடித்து இறக்கி விட்டான்.
“ஐ! வந்துட்டேன்”
“ஆமா! ஜி பூம்பா… யுவி கூட பயம் இல்லாம வந்தான் ஃபர்ஸ்ட் டைம் நிரஞ்சி.”
“போங்க சார்! மாடிப்படிகளில் ஏற சொன்னா பத்து ப்ளோர்கள் கூட ஏறிடுவேன். இது என்னவோ! ஆமா எல்லாரும் கரண்ட் போனா என்ன பண்ணுவாங்க, இல்லனா ரிப்பேர் ஆயிட்டா “
“ஸ்டெப்ஸ் இருக்கும் நிரஞ்சி, லிப்ட் தனியா இருக்கும். இங்க ஜென்ரேட்டர் வச்சு இருப்பாங்க, சோ அந்தளவு எல்லாம் யோசிக்காத.”
“ம்ம்ம்!” என்று உள்ளே நடந்தவளிடம்,
“எங்க போற.?”
“புடவை பார்க்க.”
“அடுத்த ப்ளோர் வா” என்று மறுபடியும் எக்ஸ்லேட்டரில் நடக்க,
“அய்யோ! ஆத்தி! அம்மா! மறுபடியுமா.?”
“நான் தான் வரேன்ல, வா” என்று பேசியப்படியே இழுத்து நிற்க வைத்தான்.
“சார்! ஃபர்ஸ்ட் பயமா இருந்துச்சு இப்ப ஓகே தான், நானே இறங்குறேன் பாருங்க இப்ப” என்று செகண்ட் ப்ளோர் வந்ததும் அலார்ட்டா இருந்து, சாதரணமாக கால் வைத்து இறங்காமல் அம்லு ஜம் பண்ண, எக்ஜ்லேட்டரில் இருந்து வெளியில் போயிட்டாள் தான், ஆனா விழுந்தது என்னவோ தரையில்…
“ஆ!” என்று கத்தியப்படி அப்படியே அமர்ந்தப்படி விழுந்தாள்.
அங்கிருந்த அனைவரும் பார்க்க, சர்வா அவளை முறைத்தான்.
“ஒழுங்கா இறங்காம எதுக்கு இந்த சர்க்கஸ் வேலை எல்லாம், எழுந்திரி” என்று கையை நீட்டினான்.
“சார்! அடிப்பட்ட பிள்ளையை திட்டாதீங்க, பாவம் நான்…” என்று கையை கொடுத்து எழுந்தாள்.
உள்ளே இருந்த பெண்கள் இதை பார்த்தவாறு நின்றனர்.
“இந்த அம்லுக்கு வேற வேலையே இல்லை” என்று யுவி சிரித்தான்.
அவளை கவனித்துக் கொண்டே வந்ததால் பரத், பிருந்தாவும் சிரித்தனர்.
“யாரு பிரபா இது.?” என்று கேட்டார் ரசியா.
“அதான் சொன்னேன்ல யுவியை பார்த்துக்க ஒரு பொண்ணு வந்து இருக்கானு, சர்வா ப்ரண்ட் திரவியோட மச்சான் பொண்டாட்டி அவன் காலேஜில் தான் படிக்குறா”
“ஓ! சொன்னல மறந்துட்டேன். கல்யாணம் ஆனவ தான், ஆனாலும் கவனமா இரு, என் பொண்ணு லேகா தான் உன் மருமக, அத மனசில் வச்சுக்கோ, கல்யாணம் ஆனாலும் இப்ப எவளையும் நம்ப முடியாது” என்றார் ரசியா.
“ஆமா! ஆமா! ஏன் உங்க பொண்ணு போகல.?” எனப் பட்டென்று கூறினார்.
“அத்த! என்ன குத்தி காமிக்குறீங்களா.? உங்க ஆசைக்கு எல்லாம் வாழ முடியாது” என்றாள் சந்திரா படாரென்று.
“ஆமா! இப்ப என்னத்த வாழுற, மாச சம்பளம் வாங்குறவன் கூட அஞ்சுக்கும் பத்துக்கும் குப்பைக் கொட்டுற. அதுவே இவன் கூட ஒழுங்கா இருந்திருந்தா இன்னைக்கு அவன் கூட ராணி மாதிரி கை கோர்த்து வந்திருக்கலாம். என் பொண்ணும் உன்னைய நாத்தனாருனு மதிச்சு இருப்பா, நான் அடிச்சுகிட்டேன் எங்க கேட்ட.?”
“இப்ப நீ சொல்லி என்ன ஆகப் போது அவ விதி அவ்ளோ தான், ஆனா லேகாவை நீ நினைச்ச மாதிரி வாழ வை பிரபா” என்றார் ரசியா.
“ம்ம்ம்! சரி அண்ணி, என் விதி மாதிரியே அவளுக்கும் ரெண்டாந்தாரமுனு இருக்கு, என்ன செய்ய.? ஆனா இவ மனசில் யாருமில்லையே.?”
“அத்த! என் மனசுல மாமா மட்டும் தான் இருக்கார். இவளுக்கு புடிக்கலனா என்ன நான் கட்டிக்குறேனு அப்பவே சொன்னேன். இவங்க தான் கேக்கல.” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் லேகா.
“ம்ம்ம்! அந்தப் பொண்ணு நிரஞ்சிக்கு விவரம் கம்மி தான் அண்ணி, நீங்க நினைக்குற அளவுக்கு எல்லாம் பத்தாது.” என்றார் பிரபா.
“என்னம்மா பார்க்க ஆரம்பிச்சாச்சா.?” என்று கேட்டுக் கொண்டே பரத் வர, மற்றவர்களும் வந்தனர்.
சர்வா அவர்கள் பக்கமே திரும்பவில்லை, யுவியை பிருந்தாவிடம் இருந்து வாங்கியவன்”நீ போய் பாரு பிருந்தா” என்று சற்று தள்ளி சந்திரா பார்வையில் இருந்து யுவியை விலக்கி வைத்து நின்றான்.
சந்திராவின் பார்வை சர்வா, யுவியை ஒரு முறை வரும் போது பார்த்ததோடு சரி, அதன் பிறகு திரும்பவே இல்லை.
நிரஞ்சியை பிரபா மட்டுமே வரவேற்றார்.
ஆனால் நிரஞ்சிக்கு க்யூரியாசிட்டி தாங்க முடியாமல் பிருந்தா அருகில் சென்று மெதுவாக”பிருந்தா! யாரு இதில் யுவி அம்மா.?” என்று கேட்டாள்.
‘சர்வா சாரை வேணா புடிக்காம பார்க்காம இருக்கலாம் ஆனா யுவியை எப்டி வெறுக்க முடியுது இவங்களால், நினைச்சுப் பார்க்கவே முடியலையே’ என்று புலம்பியவள், சர்வாவின் முன்னாள் மனைவியாய் சந்திரா சாதரணமாக தெரிந்தாள், ஆனால் யுவியின் தாயாய் வினோதமான பெண்ணாக நிரஞ்சியின் மனதில் பதிந்தாள், அதன் பிறகு அவளை பார்க்கவே நிரஞ்சிக்கு தோன்றவில்லை.
‘என்ன பொண்ணு இவ.? இல்ல யுவிக்கு இப்டி ஒரு அம்மா தேவையில்ல, நானே பாத்துப்பேன்’ என்றது அவள் மனம்.
‘நீயே எப்டி பாக்க முடியும்.? யுவிக் கூட நீ எத்தனை நாட்கள் இருக்கப் போறேனு உனக்கே தெரியாதே.?’ என்றது மற்றொரு சந்தேகத்தை அவளே மனமிடம் கேட்டாள்.
‘எப்டியோ, நான் இல்லனா சார் இருக்காரு நல்லா பாத்துப்பாரு, நீ கவலைப்படாத’ என்றது மனம்.
ஏதோ தோன்ற சர்வா, யுவியை திரும்பி பார்த்தாள் நிரஞ்சி.
இருவருமே அந்த நேரம் நிரஞ்சியை பார்க்க, நிரஞ்சி சிரித்து யுவியை”வா” என கை காட்டினாள்.
யுவி”அப்பா! அம்லு கிட்ட போகவா.?”
சர்வா மனம்’இவனை ஏன் நான் மறைக்கனும் அவ கிட்ட இருந்து, என்னோட மகன் இவன்.’ என்று எண்ண, இறக்கி விட்டான் அம்லுவிடம்.
ஓடி வந்த யுவியை தூக்கி அந்த மேடை மீது அமர வைத்தவள்.
பிருந்தா காட்டிய ஒவ்வொரு சாரியையும் பார்த்து விமர்சனம் செய்தாள்.
“வாவ்! நிரஞ்சி இவ்வளவு சூப்பரா தெரிஞ்சு வச்சு இருக்கீங்க, செம போங்க” என பிருந்தா பாராட்டினாள்.
பரத் கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு சர்வா கூட சென்று கம்பேனி கொடுத்தான்.
“மாமா! அவங்க எடுக்க நேரம் ஆகும்.” என்று கூறி சிரிக்க, சந்திராவின் கணவன் கோகுல் அங்கு வந்தான்.
அவனை கண்ட சர்வா கண்டுக் கொள்ளாமல் தன் ஃபோனை பார்த்தப்படி நின்றான்.
பரத்தும் திரும்பிக் கொண்டு நிற்க, ரசியா வரவேற்றார். கூடவே பிரபாவும் தலையை மட்டுமே சர்வா இருந்ததால் ஆட்டினார்.
அவனோ சந்திரா அருகில் வந்து நின்றுக் கொண்டான்.
“ஏங்க! டயர்டா இருக்கு, ஒரு ஜூஸ் வாங்கிட்டு வாங்க” என்றாள் சந்திரா.
நாற்காலியில் தான் அமர்ந்திருந்தாள்…
சென்றவன் சந்திராக்கு மட்டுமே ஒரு ஜூஸ் வாங்கி கொண்டு வந்து தந்தான்.
நிரஞ்சி அதைப் பார்த்து’ச்சே! என்ன மனுசன் இவன். சின்ன புள்ளை இருக்கானு ஒரு நெனப்புக் கூட இல்லை.’ என்று தோன்ற, பட்டென்று சர்வாவிடம் சென்றவள், “சார்! யுவிக்கு போய் ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்கிட்டு வாங்க” என்றாள் உரிமையாக.
சர்வாக்கு சிரிப்பு வந்தது, “ஏன் நிரஞ்சி, இன்னும் கொஞ்ச நேரத்தில் டின்னரே சாப்பிடப் போறோம்.”
“சார்! நான் சொல்றேன்ல போங்க.”
“மாமா! நிரஞ்சிக்கு கோபம் வரதுக்குள்ள போயிடுங்க, இல்லனா அடுத்து சம்பவம் ஆகிடும் இந்தக் கடையே நம்மளை தான் வேடிக்கைப் பார்க்கும்.”
“ஆமா பரத்! சரி வா” என்று அவர்கள் சென்றனர்.
“நிரஞ்சி! இது எப்படி இருக்கு.?” என்று பிருந்தா ஒரு புடவையை காட்டினாள்.
“சூப்பர்!”
ஆளாளுக்கு ஒரு புடவையை கொடுக்க, பிருந்தா வச்சுப் பார்த்தாள்.
“ஏன்மா! உன் பையன் சர்வாவை போய் இறங்கிய இடத்தில் இருந்து அழைச்சுட்டு வரான். என் புருசனை ஒரு வார்த்தைக் கூட வாங்கனு சொல்லலை பாரு, அவன் மட்டுமா.? உனக்கு மருமகளா வரப்போறவ கூட என் கிட்ட ஒரு வார்த்தை பேசல அந்தா வந்தவ கிட்ட என்னமோ உரிமையா பேசுறா.?” என்று குற்றம் சொன்னாள் சந்திரா ரசியாவிடம்.
“ஏய்! அவன் அந்த இடத்தில் இன்னும் மரியாதையா இருக்கான் நீ செஞ்சது சாதரண காரியமா.? அப்புறம் நீ உரிமையை விட்டுக் கொடுத்த அவ உன்னைய மதிக்கல, சும்மா இரு பேசாம, நானே பிரபா கிட்ட ஏததோ சொல்லி சர்வா மூலமா பிருந்தாவை கல்யாணத்திற்கு ஒத்துக்க வச்சு இருக்கேன். நீ சும்மா இரு அதான் உன் புருசனுக்கு நான் மரியாதை செய்றேன்ல போதும்.” என்றார் மெதுவாக.
கோகுலோ அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் நின்றான், ஃபோனை நோண்டியவாறு.
அவன் சந்திராவின் எடுப்புடி அவ்ளோதான். அவளின் அழகுக்காக காலில் விழுந்து கிடப்பவன். காதல் இருப்பினும் அது எந்த வகையென அவர்களுக்கே வெளிச்சம், சுயநலமான ஒன்று எப்படி உண்மை காதலாகும்.
சர்வாவும், பரத்ம் ஜூஸ் கவர்களோடு வந்தனர். ஆளுக்கொன்று என இருந்தது அதில், கோகுல், சந்திராவும் அதில் அடங்கிருந்தனர்.
பரத் கூட அவர்களுக்கு எதுக்கு.? என்றான். ஆனால் சர்வா, பரத் இது பொதுவான பண்பு நாம அதை கடைப்பிடிக்கனும் என்றான்.
நிரஞ்சியும் அதையே கேட்டு விட்டாள் சர்வாவிடம்,
“எதுக்கு சார் அவங்களுக்கு.? யுவியை கூட அந்தாளு கணக்கில் சேர்க்கல.”
“நிரஞ்சி! யுவி என் பையன், நான் இருக்கேன். நீ போய் புடவையை சூஸ் பண்ணு, தெம்பா ஜூஸ் குடிச்சுட்டு போ, சரியா!” என்று சிரித்தான்.
“போங்க சார்!” என்று ஜூஸை ஒரே மடக்காக குடித்து முடித்தவள், டஸ்பின் தேடி போட்டு வந்தாள்.
“அகெயின் வேணுமா மேடம்.?”
“இருந்தா நல்லா இருக்கும் தான் ஆனா நைட் சாப்பிடனுமே, வேணாம்” என்று புடவைகளை பார்க்க சென்றாள்.
ஆளாளுக்கு எடுக்க ஒரு முடிவே இல்லாமல் போனது.
பிருந்தா சந்திரா, லேகா எடுப்பதை பிடிக்கலைனு சொல்ல, அவள் எடுப்பதை அவர்கள் ஒதுக்கினர்.
பரத் பொறுமை இழந்து ஓகே, எல்லாரும் ஆளுக்கு ஒன்னு எடுத்து வைங்க, சர்வா மாமா ஃபைனல் பண்ணுவார் என பிருந்தாவை சமாளிக்க அவளின் அண்ணனால் மட்டுமே முடியும் என நினைத்து கூறினான்.
சர்வா பார்த்து ப்ளீஸ் மாமா! என்றான் கண்களால் கெஞ்சியவாறு…
அனைவருமே ஒன்றை எடுத்தனர், நிரஞ்சியும் அதில் சேர்த்தி, சர்வாக்கு எது யார் யாரு எடுத்தப் புடவைகளுனு தெரியாது.
ஃபைனலாக அருகில் வந்தான்.
யுவி”அம்லு! வா நான் உனக்கு டைட்டானிக் கதை ஸ்டார்ட் பண்றேன், அப்புறம் ரோஸ் ஓடி வந்துச்சா.” என்று நிரஞ்சியை ஓரமாக அழைத்து வைத்து ஆரம்பித்தான்.
சர்வாவும் அதை கேட்டவாறு தான் பிருந்தா அருகில் சென்றது.
ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவன், ஒரு புடவையை எடுத்து தனியாக வைத்தான்.
கடைக்கார பெண்”சார்! இதை பில் போடவா.?”
சந்திராக்கு பெருமைத் தாங்கவில்லை, தான் எடுத்த புடவையென, பிருந்தாக்கு கடுப்பாகியது.
“நோ! நோ! இந்தப் புடவை செலக்சனிலே இல்லை, டேக் இட்! ஐ மீன் அந்த பக்கம் வைங்க, ஐ டோன்ட் லைக் திஸ் கலர் ஆல்வேஸ்”
பிருந்தா நக்கலாக சந்திராவை பார்த்தாள்…
“ம்ம்ம்! திஸ் இஸ் ஓகே பிருந்தா, எதுக்கும் நீயே பாரு உனக்கு ஓகேவானு” என்று ஒரு புடவையை தேர்வு செய்தான்.
மயில் பச்சை சிங்கிள் லைன் பார்டர் போட்டு, ரோஸ் கலரில் பட்டோடு, கோல்டர் வொரிங்கிங் புல்லா முந்தி வரை இருந்தது.
“ஐ! சூப்பர், செம அண்ணா, எனக்கு அப்பவே புடிச்சது” என்று கையில் தூக்கியவள்,
“நிரஞ்சி! ஸீ யுவர் செலக்சன் ஓகே ஆச்சு.” என்று காட்டினாள்.
“ஐ!” என்று யுவிக்கு ஹை பை கொடுத்தாள் அம்லு.
*
அனைவரும் வெளியில் வந்தனர் அவரவர் கிளம்ப சர்வா, யுவி, நிரஞ்சி மட்டுமே காரில் வீட்டிற்கு கிளம்பினர்.
“சார்! எப்டி நான் எடுத்த புடவையை சூஸ் பண்ணீங்க, நான் நினைக்கவே இல்லை.”
“உனக்கு புடிச்ச கலர் தானே அது…”
“ஆமா! உங்களுக்கு எப்படி தெரியும்.?”
“நீ தானே சொன்ன.”
“எப்ப சொன்னேன்.”
“ம்ம்ம்! நம்ம காரில் போகும் போது, நல்லா யோசி.”
காரில் கடைக்குப் போகும் போது யுவி நிரஞ்சிக்கு டைட்டானிக் கதை சொல்வதாக சொன்னான்.
ஹீரோ ஜாக், ஹீரோயின் ரோஸ் என்றதும்.
நிரஞ்சி “ரொஸா.? அப்டி ஒரு பேரா.?”
“ஆமா!” என்றான் யுவி.
“நிரஞ்சி! ஏன் நம்ம எல்லாம் ரோசா, ரோஜா அப்டினு பேரு வைக்குறதில்லையா அப்டி தான் அவங்க இங்கிலிஷ் காரங்கள.” என்றான் சர்வா.
“ஆமா தானே, எனக்கும் ரோஸ் கலர் தான் சார் புடிக்கும், ரோஜா பூவை பார்த்தாலே போதும் எனக்கு, வச்சுக்க கூட மாட்டேன்.” என்றாள்.
இப்போது நினைவு வர “ஆமா நான் தான் சொன்னேன்.”
“எஸ்! மோர் ஓவர் உன்னோட அந்த செலக்சனும் நல்லா இருந்தது. அதான் அது மட்டுமில்ல, உன்னோட செலக்சனை எடுத்துட்டா பிருந்தா அசெப்ட் பண்ணிப்பா, மனசு கஷ்டப்படாதுல, மத்தது யாரு எடுத்ததுனு தெரியாம சொன்னா அப்புறம் ஃபீல் பண்ணுவா”
“அப்ப முதலில் வேணாமுனு ஒதுக்கியது உண்மையில் புடிக்காமயா.? ஏனா! அது எடுத்தது பரத் அண்ணா அக்கா.”
“ம்ம்ம்! தெரிஞ்சு தான், என்ன இருந்தாலும் ஒரே வீட்டில் வாழ்ந்த அனுபவம் இருக்குல நிரஞ்சி.” என்றான் சலித்தவாறு.
நிரஞ்சிக்கு புரிந்தது…
யுவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் நிரஞ்சியின் மார்பில்…