ஷியாமளன் ஷோரூமில் இருந்தான். முழுக்க தெளியா விட்டாலும் ஓரளவு தெளிந்துவிட்டான். அவன் மேசை மீது அவன் கண் படும் இடத்தில் அவன் அன்னை ஜானகியின் படம் வீற்றிருந்தது.
அவரை காணும்போதெல்லாம் ‘அன்னை போல நானும் ஏமாறக்கூடாது’ என்ற எண்ணம் தலைத்தூக்க, அவன் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு பிரதி கொண்டு வந்து வைத்துவிட்டான்.
கண்ணாடி கதவு தட்டப்பட, நிமிர்ந்தும் பாராமல் ‘வாங்க’ என்றவன் முன்னே,
“சார்… சேல்ஸ் மேளா’ நாளையோட முடியுது! எக்ஸ்டென்ட் பண்றதை பத்தி கேக்குறாங்க” என்று வந்து நின்றான் ஒருவன்.
“மாமா’கிட்ட கேளுங்க”
“அவர் தான் உங்ககிட்ட கேட்க சொன்னாரு சார்!” என்றதும் அலுப்பாய் போனது அவனுக்கு.
அவன் மனதை திசை திருப்புகிறேன் பேர்விழி என ஒட்டுமொத்த வேலையையும் அவன் தலையில் கட்டிவிட்டு ஜாலியாக வீட்டில் இருக்கிறார் மார்த்தாண்டம்.
“என்ன சார் சொல்றது?” அவன் மீண்டும் கேட்க, “இன்னும் ரெண்டு நாள் நீட்டிக்க சொல்லுங்க!” என்றான்.
சற்று நேரத்தில் அவன் கேபின் கதவு மீண்டும் தட்டப்பட, “ப்ச்… வாங்க” என்றான் நிமிராமல்.
உள்ளே வந்த அரவம் தெரிந்தும் சப்தம் வராமல் போக நிமிர்ந்தவன், எதிரே நிற்ப்பவளை கண்டு அதிர்ந்தான்.
எல்லாம் ஒரு நிமிடத்திற்கு தான்! பின் அதிர்ச்சி எல்லாம் அப்பால் போய் எரிச்சல் தான் வந்தது.
முகத்தில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய, அப்படியே அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘ஷியாமளனுக்கு இவ்வளவு சப்தமாய் பேசக்கூட வருமா?’ என்று அவள் ஆராய்ச்சியில் இறங்க, பதறிக்கொண்டு உள்ளே நுழைந்த சுந்தர் என்ற ஊழியனிடம்,
“என் பர்மிஷன் கேட்காம யார் வந்தாலும் உள்ளே விட்டுடுவீங்களா?” என்றான் காட்டமாய்.
வந்தவனுக்கோ, ‘அன்று அவர்கள் நெருக்கமாய் பேசிக்கொண்டதும், அவள் தந்தை காலில் இவன் விழுந்ததும் படமாய் விரிந்தது’
மிகவும் நெருங்கியவர் என்ற எண்ணத்தில் தான் உள்ளே வந்தவளை யாரும் தடுக்கவில்லை. இத்தனை நாளும் அவள் வருகையில் இதான் நடந்தது. இப்போது திடீரென இவன் கோபப்படவும் அவன் மலங்க மலங்க விழிக்க,
“இனி என் பர்மிஷன் இல்லாம என்னை பார்க்க யாரையும் உள்ளே விட கூடாது! வண்டி வாங்கனும்ன்னு வரவங்களுக்கு மட்டும் தான் இங்க வேலை. பொழுது போக்க வரவங்களுக்கு வேற இடம் நிறைய இருக்கு! புரியுதா?” அழுத்தி அவன் கேட்டது சுந்தரிடம் தான் என்றாலும், அது தனக்கு தான் என ஜனனிக்கு நன்றாக புரிந்தது.
“போக சொல்லு!” என்றவனின் குரலில் அதுவரை இருந்த கடினம் இல்லை. சொல்லப்போனால் கடிந்து சொல்ல வரவில்லை.
அன்னையின் படத்தில் பார்வையை ஒட்டவைத்து நின்றுக்கொண்டான்.
“மேடம்! வாங்க!” சுந்தர் வெளியே அழைக்க, மிகவும் சங்கடமான அந்த சூழலில் இருந்து வேறு வழியின்றி வெளியேறினாள் ஜனனி.
அவள் போனதும் மூச்சை இழுத்துவிட்டு முகத்தை மூடி அமர்ந்துவிட்டான்.
‘என்னாவாம் அவளுக்கு? எல்லாம் முடிச்சுது தானே? இன்னும் என்ன இருக்குன்னு வந்து நிக்குறா!?’ கேள்வி எழ, மீண்டும் தெளிந்த மனம், குழம்ப ஆரம்பித்து விட்டது.
‘இல்ல! நான் தெளிவா இருக்கேன்! திரும்ப போய் எதுலையும் சிக்கி ஏமாற மாட்டேன்!’ திண்ணமாய் சொல்லிக்கொண்டவன், அன்னையின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, சற்று வெளியே சென்று வரலாம் என்றெண்ணி வண்டி எடுக்க பார்க்கிங் சென்றான்.
ஷோரூமின் பின்பக்கம், ஊழியர்களுக்கான பார்க்கிங்’கில் இவன் பைக்கும் நின்றுக்கொண்டிருந்தது. குழப்பத்தில் ஏதேதோ சிந்தித்துக்கொண்டே பைக்கை நெருங்கியவன் அப்போது தான் அங்கே அவளை கண்டான்.
இவனை பார்த்ததும் வேகமாய் எழுந்து வந்தாள்.
“உங்கக்கிட்ட பேசனும்ன்னு தான் எப்படியும் வெளில வருவீங்கன்னு இங்க வெயிட் பண்றேன்! போய்டாதீங்க ஷியாம்! ப்ளீஸ்! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்!” கெஞ்சலாய் அவள் கேட்க, அவள் கெஞ்சலில் மனம் சரிந்தது அவனுக்கு.
‘இப்படி பேசி பேசிதான் ஏமாத்துனா! இன்னும் என்ன மிச்சம் வச்சுருக்கா?’ என்ற நினைப்பு வர,
“பேச ஒன்னும் இல்ல” என்றான் அவன் இறுக்கமாய்.
“எனக்கு இருக்கு ஷியாம்! நான் பேசணும்!”
“எனக்கு கேட்க விருப்பம் இல்லை!”
ஆயாசமாய் அவனை பார்த்தவள், “உங்களுக்கு இப்படியெல்லாம் பேச தெரியும்ன்னே இன்னைக்கு தான் தெரிஞ்சுது எனக்கு!” என்றாள்.
லேசாக இளகிய மனதை கட்டிவைத்தவன், “இப்படியே இருந்துருந்தா நான் இளிச்சவாயனாகிருக்க மாட்டேன்! உனக்கும் உன் தீசிஸ்’க்கு வேற ஆள் கிடைச்சுருப்பான்!” சுருக்கென அவன் சொல்ல,
“இல்ல! அப்பவும் நான் உங்க பின்னாடி தான் சுத்திருப்பேன்! எனக்கு இப்படி ஒரு சிடுமூஞ்சி தான் தேவைப்பட்டுச்சு! அது கிடைக்கலைன்னதும் தான் டாபிக் கொஞ்சம் சேஞ் பண்ணேன்!” என்றாள் அத்தனை இலகுவாய்.
அவள் இப்படி சாதாரணமாய் சொல்வதே அவனுக்கு பெரும் சீற்றத்தை உள்ளே கொடுத்தது. அவள் செய்த ஒரு காரியம் தன்னை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதை கூடவா இவள் அறியவில்லை என்று அவன் வெறித்து பார்க்க, அவள் முகம் அப்படியே மாறிப்போனது.
அவன் கண்களை பார்த்துக்கொண்டிருந்தவள், பார்வையை தழைத்துக்கொண்டாள்.
“எனக்கு புரியுது ஷியாம்! நீங்க மனசுல நினைக்கிறது! இவளுக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லையா? இப்படி வந்து பேசிட்டு இருக்காளேன்னு தோணுதுல?” என்றவள்,
நிமிர்ந்து அவன் கண்களை பார்த்து, “ஐ லவ் யூ ஷியாம்!” என்றாள்.
அவள் கண்களில் நீர் திரள ஆரம்பித்திருந்தது. உதடுகள் மெலிதாய் நடுங்க அவன் முகத்தை பார்ப்பவளிடம் ஒன்றுமே சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.
அவசரப்பட்டு சுடுசொற்களை வீசக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். யாராகினும் மனதை காயப்படுத்துவது தவறென்பது அவன் எண்ணம்!
“ஷியாம்? அன்னைக்கு நீங்க லவ் சொன்னப்போ நான் சரின்னு சொல்லிருந்தா என்ன செஞ்ச்சுருப்பீங்க? லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு பிறகு நான் உண்மையை சொல்லிருந்தா? கோவப்பட்டுருப்பீங்களே தவிர என்னை வேண்டாம்ன்னு சொல்லிருப்பீங்களா நீங்க? நல்லா யோசிச்சு பாருங்க!” என்றாள்.
“தெரியாம செஞ்சேன்னு எல்லாம் சொல்லமாட்டேன்! தெரிஞ்சே தான் செஞ்சேன்! ஆனா எல்லா தப்புக்கும் மன்னிப்புன்னு ஒன்னு இருக்குல?” என்று கேட்டதும் சட்டென திரும்பியவன் பார்வை அவளை துளைத்தது.
“என்ன ஷியாம்?” தயக்கமாய் கேட்டாள்.
“உன் தீசிஸ்’க்கு பலியாடு நான் ஒருத்தன் தானா? இல்ல ஒரே நேரத்துல நாலஞ்சு பேரை ஆராய்ச்சி செஞ்சியா?” என்றான்.
பேச்சே எழவில்லை அவளுக்கு. திகைத்துப்போனாள்.
“இது உன்னோட எத்தனாவது தீசிஸ்? ஏன் கேட்குறேன்னா… எத்தனை பேரு உன்கிட்ட சிக்கிருக்காங்கன்னு தெரியனும்ல? அதான்!” அலுங்காமல் அவன் கேட்க, விக்கித்து நின்றாள்.
அவளை காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவனுக்கு பொறுமை பறந்ததில் வார்த்தைகள் அவன் வகுத்திருந்த எல்லை கோட்டை தாண்டிவிட்டது.
“இன்னொரு முறை என் கண்ணு முன்ன வராத! இதை விட மோசமா ஏதாவது பேசுனாலும் பேசிடுவேன்! கிளம்பு!” என்றான்.
வருத்தத்தை விழுங்கியவள், அவனை நேராய் பார்த்து, “எனக்கு புரியுது ஷியாம்… ரொம்ப ஹர்ட் ஆகிட்டீங்க! அந்த காயம் சரியாகுற வரை என்னை இப்படி ஏதாவது சொல்ல தான் சொல்லும் மனசு!” என்றவளோ,
“யூ வோன்ட் பிலீவ்! உங்களை காயப்படுத்துன நானே தான் உங்க காயத்துக்கும் மருந்தா இருப்பேன்! என்னை இப்படி திட்ட திட்ட உங்க MANASUA மனசுல என் மேல இருக்க கோபம் கொஞ்சகொஞ்சமா குறைஞ்சுடும்! நான் அதுவரைக்கும் பொறுமையா வெயிட் பண்றேன்!” மனோதத்துன ஞானி போல அவள் பேசுவதே அவனுக்கு எரிச்சல் ஆனது.
“என்ன காரியம் செஞ்சு வச்சுருக்க? நம்ம என்ன ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில படிக்குறோம்ன்னு நினைப்பா? படிப்புக்காக செஞ்சாலாமாம்! எவனாது அறிவிருக்கவன் இப்படி செய்வானா?” என்று அதட்டியதில் அழுதே விட்டாள் ஜனனி.
அவளை தேற்ற கூட தோன்றவில்லை யாருக்கும்.
தெரியாமல் செய்ததென்றால் ‘விடு, பாத்துக்கலாம்’ என்று ஆறுதல் சொல்லலாம்! தெரிந்தே செய்ததற்கு என்ன சொல்ல முடியும்!?
ஆனாலும் அவள் அழுதே பார்த்திறாதவர்களுக்கு அவள் கண்ணீர் துயர் கொடுக்க, “கண்ணை துடை! அழுதா ஆச்சா?” என்றாள் சௌமி.
“என்ன தான் செய்யப்போற இப்போ?” மெர்லின் கேட்டதும், “ஷியாம் என்னை மன்னிக்கணும்!” என்றாள் கண்ணை துடைத்துக்கொண்டே.
“ஓ! மன்னிச்சு?”
“மன்னிச்சு… என்னை அக்சப்ட் பண்ணிக்கணும்!”
“நடக்கும்ன்னு நினைக்குறியா?” மெர்லின் குரலில் நம்பிக்கையே இல்லை.
“ஏன்? நடக்காதா?”
“நீ எப்பவும் சொல்ற ‘சப்பை மேட்டர்’ இல்ல இது! பசங்க தப்பு செஞ்சுட்டு கால்ல விழுந்ததும் பொண்ணுங்க நம்ம தான் இரக்கப்பட்டு மன்னிப்போம்! அதே பொண்ணுங்க தப்பு செஞ்சுட்டு வந்து மன்னிப்பு கேட்டா பசங்க இன்னும் தான் பத்து மாடி ஏறி நிப்பாங்க!” என்றுவிட,
“இப்ப என்ன பண்றது?” என்றாள் கலக்கத்துடன்.
“என்ன பண்ண முடியும்? அவர் கைல கால்ல விழுந்தாவது சமாதானப்படுத்த வேண்டியது தான்” என்றாள் சௌமி.
ஜனனியை சந்தேகக்கண்ணோடே பார்த்த மெர்லின், “நிஜமாவே லவ் பண்றியா?” என்று கேட்டுவிட, “நீ கூட நம்பலையா என்ன?” சோர்ந்துப்போனவளாய் கேட்டாள் ஜனனி.
“என்ன செய்யுறது? உன் எஸ்.டி.டி அப்படி! எல்லாத்தையும் டேக் இட் ஈஸி’ன்னு போறவ! இந்த விஷயத்துலயாவது எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவு பண்ணாம நல்லா யோசிச்சு எதுன்னாலும் பண்ணு! பிகாஸ் இட்ஸ் அ ஃலைப் மேட்டர்” பொறுப்பான தோழியாய் பேசினாள் மெர்லின்.
“நான் ரொம்ப தெளிவா இருக்கேன் மெர்லின். ஐ லவ் ஷியாம்! அண்ட் ஐ நீட் ஹிம்! ஆனா, எப்படி சமாதானப்படுத்தப்போறேன்னு தான் தெரியல! ரொம்ப கோவமா இருக்காரு”
“கோவமா இல்லன்னா தான் ஆச்சர்யம்!” என்ற சௌமி,
“காயம்பட்ட புலி கடிச்சு கொதராமா உன்னை சும்மா விடாது!” என்றாள் பில்டப்பாய்.
“அவ கடக்குறா! இங்க பாரு ஜனனி! நீ தப்பு செஞ்சுட்ட… அதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும்! யூ ஷுட் பீ ஸ்ட்ராங் மெண்டலி… அவர் எவ்ளோ ஹர்ட் பண்ணாலும் தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும்! எல்லாத்துக்கும் மனசை தயார் படுத்திக்கோ! அதுக்கு பிறகு ஆரம்பி உன் வெள்ளைக்கொடி போராட்டத்தை!”
மெர்லின் சொல்ல, “ம்ம்ம்!” என்றாள் மனதுக்குள் தன்னை திடப்படுத்திக்கொண்டு!
ஆனாலும் மெல்லிய சஞ்சலம் தலைத்தூக்க, “ஏத்துப்பார் தானே?” என்று கேட்க,
“உன் காதல் உண்மைன்னா கண்டிப்பா அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும் பாரு” என்றாள் சௌமி.
ஜனனியும் மெர்லினும் ஒருசேர அவளை பார்க்க, “ஹிஹி! அவசரத்துக்கு ஒன்னும் தோணல! அதான், பழசா இருந்தாலும் பரவாலன்னு உருட்டிட்டேன்!” என்றாள் சௌமி அசடு வழிய.
“அவ சொல்றதும் கரெக்ட் தான்… நீ நிஜமா அவரை லவ் பண்றன்னா, அந்த லவ்வை அவர் உணரும்போது தன்னால உன்னை ஏத்துப்பாரு! கவலைப்படாத!” என்றாள் மெர்லின்.
ஜனனிக்கு புது தைரியம் வந்து அமர்ந்தது. அடுத்து என்ன செய்து அவன் மனதை கரைக்கலாம் என்ற யோசனையில் அவள் இறங்க,
“ஏதாவது காரணம் யோசி! அதை வச்சே அவரை போய் பார்த்து பேசு!” என்றாள் சௌமி உளறுவாயாக.
சட்டென பொறித்தட்ட, “நீ போன மாசம் ஸ்கூட்டி வாங்கனும்ன்னு சொன்னல்ல?” என்றாள் ஜனனி.
“நான் எப்போ சொன்னேன்!?”
“சொன்ன டி! மறந்துட்ட போல!”
“நான் ஏன்டி சொல்லப்போறேன்? என்கிட்ட தான் ஸ்கூட்டி இருக்கே!”