சங்கவை மூச்சே விடவில்லை. தானாக எதுவும் சொல்லி என்ன பேசுவானோ என்றிருந்தது.
அதுவும் இப்போது கல்லூரி விஷயமான பணிகள் வேறு அவனை உறக்கமிழக்க செய்திருக்க தான் செய்துவைத்தது வேறு அவனுக்கு எப்படி இருக்குமோ என மௌனமாகி பார்த்தார்.
“என்ன திடீர்ன்னு பொண்ணு தேடற படலம்? யார் ஆரம்பிச்சது? அதுவும் என்னை கேட்காம?…” என்றான் திருமொழி கோமகளிடம்.
“அது வந்து திரு…” என அவர் எச்சிலை விழுங்கியபடி சங்கவையை பார்க்க அவர் மகனை பார்த்துக்கொண்டிருந்தார்.
————————————————————————-
அந்த நேரம் எனக்குமே படபடன்னு வந்திருச்சு. என்னடா இவங்க கேட்டு வந்திருக்காங்களேன்னு. இல்லைன்னா நீ பேசினதுக்கு உன் வாயிலேயே நாலு போடு போட்டிருப்பேன்…” என்றார் மகளை கண்டிக்கும் பாவனையில்.
“தர்ஷி அங்க என்ன பன்ற?…” என்ற கணேசனின் சத்தத்தில் கையில் வைத்திருந்த தண்ணீரை ஒரே மடக்கில் சரித்தாள் நிதர்சனா.
சட்டென புரையேறிவிட குடித்த நீரில் பாதி உடையில் சிதறி அவளை நனைத்தது.
“போ போ. வாய்ஸ் சாதாரணமா தான் இருக்கு. அவரா கேட்கட்டும். எதையாச்சும் நீயா சொல்லி வைக்காத…” என எச்சரித்து மகளை அனுப்பினார் சரஸ்வதி.
நிதர்ஷனா வெளியே வந்ததும் தோளில் இருந்த டவலில் முகத்தை துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் மகளை பார்த்தார்.
“என்ன பாப்பா இது?…” என தன்னருகே அவள் அமர்ந்ததும்,
“பார்த்து தண்ணி குடிக்கமாட்டியா?…” என்று சொல்லி மகளின் முகத்தை துடைத்துவிட்டார்.
அதில் இன்னுமே நிதர்ஷனாவிற்கு அச்சம் கூடியது. ‘இவர் சாதாரணமாவே இருக்கலாம்’ என படபடப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
——————————————————————————————————–
“நிதர்ஷனா…” என்றழைக்கவும் திருமொழியின் இமைகள் மட்டும் உயர்ந்தது அந்த பெயரில்.
வெகுநாட்கள் கழித்து அந்த பெயரை கேட்டதும் புருவமுயர்த்தி நிமிர்ந்தவன் பார்வையில் எதிரிருந்த கண்ணாடி அலமாரியில் வெளியே நின்றிருந்தவள் பிம்பம் தென்பட்டது.
“உள்ள வா நிதர்ஷனா…” என்றார் நளினா மீண்டும்.
வாசலில் நின்றவளும் தன் கையிலிருந்த சிறிய கவரை பார்த்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்னகையுடன் உள்ளே நுழைவதையும் கண்டவன் செவியில் அவளின் மெல்லிய கொலுசு சத்தம்.
சுடிதாரில் வந்தவளின் ஒருபக்க தோளில் முல்லைச்சரம் விழுந்திருக்க வந்தவள் ரத்னாவை பார்த்து வணக்கம் வைத்த பின்னர் தான் திருமொழியையும் கவனித்தாள்.
அவனும் இமையை மட்டும் உயர்த்தி நிதர்ஷனாவை பார்க்க அவன் பார்த்ததும் சிறு திகைப்பு அவளிடம்.
ஒரு நொடியில் அந்த அதிர்வும் மறைந்து உடனே வந்தமர்ந்தது பயம் கலந்த மரியாதையான பார்வை.
“குட்மார்னிங் ஸார்…” என்றவளுக்கு,
“மார்னிங்…” என்று மட்டும் வாயசைத்தவன் மீண்டும் கையிலிருந்த தொகுப்பில் தன் விழியை சாய்க்க ரத்னாவின் முகத்தில் சிறு புன்னகை.
‘எவ்வளவு தைரியமிருந்தா நான் பாரின்லையே யாரையோ கல்யாணம் பண்ணியிருப்பேன். என்னை பிடிச்சு அவ தலையில கட்ட பார்க்கறாங்கன்னு பேசியிருப்பா அந்த பொண்ணு? எல்லாம் உங்க தங்கச்சியால’ என்று அன்று அவன் இரைந்தது இப்போது நினைத்தவருக்கு சிரிப்பாய் இருந்தது.